Saturday, May 11, 2019

டெல்லியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தெரிவானது சென்னை





சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகியவற்றுக்கிடையே விசாகபட்டணத்தில் நடந்த இரண்டாவது தகுதிச்சுற்றில் ஆறு விக்கெற்றால் வெற்றி பெற்ற சென்னை இறுதிப்போட்டியில் மும்பையை எதிர்த்து விளையாடுகிறது.  சென்னை அணியில் முரளி விஜய் நீக்கப்பட்டு ஷ்ர்துல்  தாகூர் சேர்க்கப்பட்டார். டெல்லி அணியில் மாற்ற்றம் எதுவும் இல்லை. நாணயச்சுழற்சியில் வெற்ரி பெற்ற டோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.  முதலில் துடுப்பெடுத்தாடியடெல்லி ஒன்பது விக்கெற்களை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்னை நான்கு விக்கெற்களை இழந்து 151 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் இறங்கினார்கள். மூன்றாவது ஓவரில் ஐந்து ஓட்டங்கள் எடுத்த பிரித்வி  ஷா  ஆட்டமிழந்தார். நடுவர் ஆட்டமிழப்பை மறுத்தார். டி.ஆர்.எஸ் முறையில் அப்பீல் கேட்ட போது ஆட்டமிழப்பு உறுதியானது. பிரித்விஷா, தொடர்ச்சியாக நான்காவது முறை தீபக் சாகரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து காலின் முன்ரோ களம் கண்டார். 4  ஆவது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கை பந்து வீச டோனி அழைத்தார். அதற்கு அவரது அடுத்த ஓவரிலேயே நல்ல பலன் கிடைத்தது. 6-வது ஓவரின் 2 ஆவது பந்தில் ஷிகர் தவான் (18 ஒட்டங்கள், 14 பந்து, 3 பவுண்டரி) விக்கெட்டை ஹர்பஜன்சிங் கைப்பற்றினார். அவர் விக்கெட் கீப்பர் டோனியிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.
 
இதனை அடுத்து கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், காலின் முன்ரோவுடன் ஜோடி சேர்ந்தார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 41 ஓட்டங்கள் எடுத்தது. 8.5 ஓவர்களில் அணியின் எண்ணிக்கை 57 ஓட்டங்களாக  இருந்த போது ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை அடித்து ஆடிய காலின் முன்ரோ (27 ஓட்டங், 24 பந்து, 4 பவுண்டரி) பவுண்டரி எல்லை அருகில் நின்ற வெய்ன் பிராவோவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்
இதைத்தொடர்ந்து இளம் அதிரடி ஆட்டக்காரர் ரிஷாப் பண்ட் களம் கண்டார். சென்னை அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி எதிரணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிரின் பந்தை தூக்கி அடிக்க ரெய்னா பிடித்தார். . அடுத்து வந்த அக்ஷர் பட்டேல் (3ஓட்டங்கள்) வெய்ன் பிராவோ பந்து வீச்சில் இம்ரான் தாஹிரிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.
 அடுத்து ரூதர்போர்டு, ரிஷாப் பான்டுடன் இணைந்தார். 15.2 ஓவரில் டெல்லி அணி 100 ஓட்டங்களை எட்டியது. ஹர்பஜன்சிங் வீசிய ஓவரில் சிக்சர் தூக்கிய ரூதர்போர்டு (10 ஓட்டங்கள்) அந்த ஓவரிலேயே ஷேன் வாட்சனிடம் பந்தைக்கொடுத்து ஆட்டமிழந்தார்.. அடுத்து கீமோ பால் வந்தார். ரிஷாப் பான்ட் 24  ஓட்டங்கள் இருக்கையில் இம்ரான் தாஹிர் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கினார். அதனை பவுண்டரி எல்லை அருகில் வைத்து பிடித்த தீபக் சாஹர் நிலை தடுமாறி பந்துடன் பவுண்டரி எல்லையை கடந்தார். இதனால் ரிஷாப் பான்ட் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பியதுடன் சிக்சரும் போனது. கீமோ பால் (3 ஓட்டங்கள்) வெய்ன் பிராவோ பந்து வீச்சில் போல்டு ஆனார்
18.4 ஓவர்களில் அணியின் எண்ணிக்கை125  ஓட்டங்களாக இருந்த போது தீபக் சாஹர் பந்தை ரிஷாப் பான்ட் (38 ஓட்டங்கள், 25 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) தூக்கி அடிக்க   வெய்ன் பிராவோ பிடித்ததால் ஆட்டமிழந்தார். டிரென்ட் பவுல்ட் (6 ஓட்டங்கள், 3 பந்துகளில் ஒரு சிக்சருடன்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் விக்கெற்றைப் பறிகொடுத்தார்..
 
20 ஓவர்களில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்ககள் எடுத்தது. அமித் மிஸ்ரா 3 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 6 ஓட்டங்களுடனும், இஷாந்த் ஷர்மா 3 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 10  ஓட்டங்களுடனும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெற்களையும்.கெட்டும், இம்ரான் தாஹிர் ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினார்கள். கடைசி எட்டுப்பந்துகளில் டெல்லி வீரர்கள் 22 ஓட்டங்கள் எடுத்தனர்
  148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் களம் கண்டனர். முதல் ஓவரில் ரன் அவுட்டில் இருந்து இருவரும் தப்பினர். வட்சன் அடித்த பந்தை எடுத்த அக்சர் படேல், முன்ரோவிடம் எறிந்தார். பந்தைப்பிடித்த முன்ரோ அதனை ரிஷாப் பண்டிடம் எறிந்தார். ரிஷாப் பண்ட் பந்தைத்தவறவிட அதற்கிடையில் வட்சனும் டுபிளசிஸும் எங்கே ஓடுவதெனத்தெரியாது இருவரும் ஒரே திசையில் மாறி மாறி ஓடினார்கள். கடைசியில் ஒரு ஓட்டம் எடுத்தனர்.
 
முதல் 2 ஓவர்களில் 4  ஓட்டங்கள் மட்டுமே வந்தது. 3-வது ஓவரில் பாப் டுபிளிஸ்சிஸ் முதல் பவுண்டரியை விரட்டினார். அதன் பிறகு அவர் அதிரடியாக விளையாடினார். அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் சிக்சர் அடித்த  டுபிளிஸ்சிஸ், இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் தொடர்ந்து 3 பவுண்டரி அடித்து கலக்கினார். பவர்பிளேயில் சென்னை அணி விக்கெற் இழக்காமல்  42 ஓட்டங்கள் சேர்த்தது. பவர் பிளேயில் சென்னை 25 விக்கெற்களை இழந்து, அதிக விக்கெற்றை இழந்த  அணியாக உள்ளது.
 
பாப் டுபிளிஸ்சிஸ் 37 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதத்தை எட்டினார். .பி.எல். போட்டியில் அவர் அடித்த 12-வது அரைசதம் இதுவாகும். அடுத்த ஓவரிலேயே பாப் டுபிளிஸ்சிஸ் (50 ஓட்டங்கள், 39 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் கீமோ பாலிடம் பிடிகொடுத்து கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின்  எண்ணிக்கை  10.2 ஓவர்களில் 81  ஓட்டங்கள்
அடுத்து சுரேஷ் ரெய்னா, ஷேன் வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். 11.5 ஓவர்களில் சென்னை அணி 100  ஓட்டங்களைக் கடந்தது. அணியின் எண்ணிக்கை 109  ஓட்டங்களாக இருந்தபோது  போது ஷேன் வாட்சன் (50  ஓட்டங்கள், 32 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) அமித் மிஸ்ரா பந்து வீச்சில் டிரென்ட் பவுல்டிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்
இதைத்தொடர்ந்து அம்பத்தி ராயுடு களம் இறங்கினார். சுரேஷ் ரெய்னா (11 ஓட்டங்கள்) அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதனை அடுத்து கப்டன் டோனி, அம்பத்தி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார். டோனி (9 ஒட்டங்கள்) இஷாந்த் ஷர்மாவின் பந்தை தூக்கி அடித்தபோது கீமோ  போல் பிடிக்க ஆட்டமிழந்தார். வெற்றி ஓட்டத்தை டோனி அடிப்பார் என எதிர்பார்த்த சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்
19 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 3 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை அணி 8-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அம்பத்தி ராயுடு 20 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 20 ஓட்டங்களுடனும் வெய்ன் பிராவோ ஓட்டம்  எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்
இறுதிப்போட்டி ஐதராபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.  

No comments: