உலக கிறிக்கெற்றுக்கு இது ஒரு மைல்கல் ஆண்டாக விளங்குகிறது. இந்திய ஆண்கள் அணி
12 வருட இடைவெளிக்குப் பிறகு சம்பியன்ஸ் டிராபியை வென்றது. தென்னாப்பிரிக்கா இறுதியாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம் ஐசிசி கோப்பையை 27 ஆண்டுக்கு பிறகு வென்றது. இந்தக் கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக, இந்திய மகளிர் அணி தங்களின் முதல் உலகக் கிண்ணத்தை வென்றது.
இந்த வரலாற்று சாதனைகளுடன், கிறிக்கெற் தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பெறச் செய்த பல சர்ச்சைகளும் இந்த ஆண்டு இடம்பெற்றன. 2025 ஆம் ஆண்டை மறக்க முடியாததாக மாற்றிய ஐந்து முக்கிய சர்ச்சைகளைப் பார்ப்போம்.
1. பாகிஸ்தானில் சம்பியன்ஸ் டிராபி
2025 சம்பியன்ஸ் டிராபி முதலில் முழுக்க முழுக்க பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பிசிசிஐயின் எதிர்ப்பு காரணமாக, போட்டிகள் கலந்து நடத்தப்பட்டன. போட்டிகள் பாகிஸ்தானுக்கும் துபாய்க்கும் இடையில் பிரிக்கப்பட்டன. இந்த முடிவு கடுமையான விவாதத்தைத் தூண்டியது. ஆண்டின் மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் ஒன்றாக மாறியது.
18
வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து 2025 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது. சின்னசாமி மைதானத்தில் வீரர்களும் ரசிகர்களும் கூடியதால் கொண்டாட்டங்கள் களை கட்டின . துரதிர்ஷ்டவசமாக, மைதானத்திற்கு அருகில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததால் மகிழ்ச்சி சோகமாக மாறியது. இந்த சம்பவம் வரலாற்று வெற்றியின் மீது ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியதுடன் கிறிக்கெற் வரலாற்றில் இருண்ட தருணங்களில் ஒன்றாக மாறியது.
3.
ஆசிய க் கிண்ணத்தில் இந்தியா-பாகிஸ்தான் கைகுலுக்கல் சர்ச்சை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மைதான உறவுகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, 2025 ஆசிய க் கிண்ணப் போட்டி பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க பலமுறை மறுத்துவிட்டனர். டாஸ் போடும் போது,
கப்டன் சூர்யகுமார் யாதவ் வழக்கமான சைகையைத் தவிர்த்தார். இது மூன்று போட்டிகளில் நடந்தது. கிறிக்கெறில் இதுவரை இல்லாதது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, ஆசிய கிறிக்கெற் தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து சம்பியன் கிண்ணத்தை வாங்க இந்தியா ஏற்க சர்ச்சையை மேலும் தூண்டியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவூஃப்,சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோரின் கொண்டாட்டங்களும் விமர்சனங்களை ஈர்த்தன.
4.
பென் ஸ்டோக்ஸுடன் கைகுலுக்குவதை ஜடேஜாவும் சுந்தரும் மறுத்தனர்
ஓல்ட் டிராஃபோர்டில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நான்காவது டெஸ்டின்போது, சதத்தை நெருங்கி வந்த ரவீந்திர ஜடேஜா
,வாஷிங்டன் சுந்தர் இருவரும் இங்கிலாந்து கப்டன் பென் ஸ்டோக்ஸுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் பெரும் விவாதத்தைத் தூண்டியது. ஆங்கில ஊடகங்களால் பெரிதும் ஆராயப்பட்டது.
5.
இந்தியா பற்றிய தென்னாப்பிரிக்க கோச்சின் வார்த்தை சர்ச்சையானது
கவுகாத்தியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான தனது அணியின் அணுகுமுறையை விவரிக்க "குரோவல்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக தென்னாப்பிரிக்க தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் சர்ச்சையில் சிக்கினார். இந்தக் கருத்தை அனில் கும்ப்ளே ,புஜாரா உள்ளிட்ட முன்னாள் இந்திய கிறிக்கெற் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். அவர்கள் இந்த வார்த்தை எதிர்மறையான அர்த்தங்களைக் கொண்டிருப்பதாக உணர்ந்தனர்.
ரமணி,
4/1/16
தமிழன்,விளையாட்டு,இந்தியா,பாகிஸ்தான்,கிறிக்கெற்,தென் ஆபிரிக்கா,அவுஸ்திரேலியா



No comments:
Post a Comment