Tuesday, March 17, 2009

திரைக்குவராதசங்கதி 3


நடிகர் திலகத்தில் கால் ஷீட்களை கவனித்துவந்தவர் அவரது தம்பி சண்முகம். படத்தைப் பற்றி யாராவது கதைக்க வந்தால் தம்பியைப் பாருங்க தப்பா என்று கூறிவிட்டுஇருந்து விடுவார். சகல காரியங்களையும்சண்முகம் முடித்து விட்டு படப்பிடிப்புக்குப்போகும் நாளை நடிகர் திலகத்திடம் கூறுவார்.நடிகர் திலகத்தின் ஆஸ்தான இயக்குனர்களில்ஒருவர் சி.வி. ராஜேந்திரன். சி.வி. ராஜேந்திரன் சிவாஜியை வைத்து இயக்கும்படங்கள் தோல்வியடைவது குறைவு. சண்முகமும், சி.வி. ராஜேந்திரனும் ஒருநாள்நடிகர் திலகத்திடம் சென்று ""இந்த நடிகரைப்பாருங்கள். உங்களுடைய அடுத்த படத்தில்அறிமுகமாகப் போகும் புதுமுகம் இவர்தான்'' என்றனர்.அந்தப் புதுமுக நடிகரைப் பார்த்த நடிகர்திலகம் ஆச்சரியப்பட்டார். அவர் நடிப்பாரா என்று சந்தேகப்பட்டார். ஆனால் அந்தநடிகரோ நடிப்பதற்கு தயாராக இருந்தõர்.
நடிகர் திலகத்துடன் அறிமுகமான அந்தநடிகர் வேறு யாருமல்ல அவர்தான் நடிகர்திலகத்தின் மகன் பிரபு. நடிகர் திலகமும்மூத்த மகன் ராம்குமாரும் இணைந்து அறுவடைஎன்றொரு படத்தில் நடித்தனர். படம்
வெற்றிபெறவில்லை. அத்துடன் நடிப்புக்குமுழுக்குப் போட்டு விட்டார் ராம்குமார்.இந்த நிலையில் இரண்டாவது மகனான பிரபு நடிக்க வந்ததை அறிந்த நடிகர் திலகம்கொஞ்சம் யோசித்தார். இறுதியில் பிரபு
நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.1982 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுதினத்தன்று நடிகர் திலகமும், பிரபுவும்இணைந்து நடித்த "சங்கிலி' வெளியானது.ஹிந்தியில் வெளியான "காளிச்சரன்' என்ற படத்தின் கதையே சங்கிலி.
பிரபு பொலிஸ் அதிகாரியாக வர வேண்டுமென்றே தகப்பன் விரும்பினார். விதிஅவரை நடிகனாக்கியது.சந்திப்பு, வெள்ளை ரோஜா, மிருதங்கசக்கரவர்த்தி ஆகிய படங்களில் தகப்பனும் மகனும் இணைந்து நடித்தனர். சின்னத்
தம்பி பிரபுவை உச்சாணிக் கொப்பில் ஏற்றியது.

இலட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றவர்எஸ். எஸ். ராஜேந்திரன். இவரை எஸ்.எஸ். ஆர். என்று அன்புடன் அழைப்பார்கள். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும்அருமையானது. நடிகர் திலகத்துக்குஇணையாக வசனம் பேசி நடிக்கும் திறமை உள்ளவர் எஸ். எஸ். ஆர்.எஸ். எஸ். ஆரும் எம்.ஜி. ஆரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். திராவிடமுன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய மக்கள் திலகம் அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம் என்ற அரசியல்
கட்சியை ஆரம்பித்த போது அவருடன்இணைந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபட்டதுடன்அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் சட்டசபைத் தேர்தலில்நின்று வெற்றிபெற்றவர்.
லேனா செட்டியார் என்பவர் "ராஜா தேசிங்கு' என்ற படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும் நாட்டியப் பேரொளி பத்மினி கதாநாயகியாகவும் நடிப்பது என்றுமுடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரின் நண்பனாக என்.டி. ராமராவும் அவரது ஜோடியாக பானுமதியும் நடிப்பது எனவும் தயாரிப்பாளர் திட்டமிட்டார்."ராஜா தேசிங்கு' படத்துக்கு கவியரசுகண்ணதாசன் வசனம் எழுதினார். கவிய
ரசு கண்ணதாசனின் வசனங்களைப்படித்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்வாய்விட்டுச் சிரித்தார். அரச படமான "ராஜா தேசிங்தில்' கலைவாணர்வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய வசனம்என்ன இருக்கும் என்று தயாரிப்பாளர்யோசித்தார்.கவியரசரின் இந்த அழகானதமிழ் வசனத்தை என்.டி. ராமராவ்பேசினால் அலங்கோலமாகிவிடும். எஸ். எஸ். ஆர். நடித்தால்சிறப்பாக இருக்கும் என்று கலைவாணர் கூறினார். தயாரிப்பாளர்எஸ். எஸ். ஆரை அழைத்து எம்.
எம். ஜி.ஆரின் படைத் தளபதியும், நண்பனுமான மகமத்கான் வேடத்தில் நடிக்க சம்மதமா எனக்கேட்டார். எம்.ஜி. ஆருடன்நடிக்க யாருக்குத்தான் விருப்பம்இருக்காது. எஸ். எஸ். ஆர். உடனே சம்மதம் தெரிவித்து விட்டார்.எம்.ஜி. ஆருடன்நடிக்க பலரும் போட்டிபோடும் அதேவேளைபானுமதியுடன்இணைந்து நடிக்க எம்.ஜி.ஆர். விருப்பப்படமாட்டார். எம்.ஜி.ஆர்., பானுமதி, எஸ். எஸ். ஆர்., பத்மினி என இருக்கட்டும்என்று எம்.ஜி.ஆர் யோசனை கூறினார்.படப்பிடிப்புத் தளத்துக்குவந்த பானுமதிதனது ஜோடி எஸ்.எஸ்.ஆர். என அறிந்ததும் சத்தம் போட்டார்."ரங்கூன் ராதா' என்றபடம் வெளியாகி மிகப் பரபரப்பாகஓடிக்கொண்டிருந்த நேரமது. அதில் கதாநாயகனாக நடிகர் திலகம் நடித்தார். நடிகர்திலகத்தின் ஜோடியாக பானுமதி நடித்தார். பானுமதியின் மகனாக எஸ். எஸ்.ஆர். நடித்திருந்தார். கலைஞர் கருணாநிதிதயாரித்த அப்படம் பெரு வெற்றிபெற்றது."ரங்கூன்ராதா' படத்தில் எனக்கு மகனாகநடித்த எஸ். எஸ். ஆருக்கு ஜோடியாக நடிக்க முடியாதென பானுமதி மறுத்துவிட்டார்.
பானுமதியின் கோபத்தைப் பற்றி படஉலகம் நன்கு அறிந்திருந்தது. தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் அனைவரும்அவரை எதிர்த்து பேசத் தயங்குவார்கள்.எஸ். எஸ்.ஆருடன் ஜோடியாக நடிக்கமுடியாது என்று பானுமதி சத்தமாகப்
பேசினார். நிலைமையை உணர்ந்த எஸ்.எஸ்.ஆர். தயாரிப்பாளரிடம் சென்றுஎம்.ஜி.ஆரின் ஜோடியாக பானுமதி நடிக்கட்டும் என்றார். என்.எஸ்.கிருஷ்ணனுக்குஇப்பிரச்சினையைப் பற்றி தயாரிப்பாளர்அறிவித்தார். என். எஸ். கிருஷ்ணன் ஸ்டூடியோவுக்குச் சென்று எல்லோரையும்சமாதானம் செய்தார். அதன் பின்னர்படப்பிடிப்பு ஆரம்பமானது.கலைஞரின் "காஞ்சித் தலைவன்' படத்தில்எம்.ஜி.ஆரும் பானுமதியும் ஜோடிசேர்ந்தார்கள். எம். ஜி.ஆரின் தங்கையானவிஜயகுமாரியை காதலிக்கும் பாத்திரத்தில்எஸ். எஸ். ஆரை நடிக்க வைக்கவிரும்பியதால் எம்.ஜி. ஆரின் மூலம்தூதுவிட்டார் கலைஞர்."காஞ்சித் தலைவன்' படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் இடையில் இணைப்புப் பாலமாகஎஸ். எஸ். ஆர் செயற்பட்டார்.

ரமணி

4 comments:

Anonymous said...

I think "ARUVADAI NAAL" was made much later than "SANGILI" in which Prabhu made his first appearance. Your article suggests the other way around. Pl correct.

Anonymous said...

அறுவடை நாளுக்குப் பின்னர் தான் சங்கிலி வெளியானது.
வர்மா

Anonymous said...

அறுவடை நாள் சங்கிலிக்குப் பின்னர் தான் வெளிவந்தது.

நன்றி
வர்மா

butterfly Surya said...

அருமை.

எனது மனம் கவர்ந்த இயக்குநர் சி.வி. ஸ்ரீதர் பற்றி தகவல்கள் இருப்பின் பதிவிடவும்.

நன்றி.