Friday, September 4, 2009

திரைக்குவராதசங்கதி 15


மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்என்ற படத்தின் படப்பிடிப்பு ஜெய்பூரில்உள்ள மாளிகை ஒன்றில் நடந்தது. அப்படத்தை மக்கள் திலகம் இயக்கினார்.அன்று படமாக்க வேண்டிய காட்சி பற்றிகதாநாயகியான லதாவுக்கு விளக்கினார்மக்கள் திலகம்.மக்கள் திலகத்தின் முன்னால் சுமார்இரண்டு அடி தூரத்தில் கதிரையில் அமர்ந்வாறு அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார் லதா. மக்கள் திலகம்காட்சியைப் பற்றி விபரித்துக் கொண்டிருந்த போது படப்பிடிப்புக் குழுவினரும்அதனை அவதானமாக செவிமடுத்தனர்.திடீரென ஏதோ நினைத்தவராய் ""லதாஎன் அருகே வா'' என மக்கள் திலகம்அழைத்தார்.
மக்கள் திலகம் ஏன் அழைக்கிறார்என்று தெரியாத லதா எழுந்து அவரின்அருகே சென்றார். லதா மக்கள் திலகத்துக்குஅருகில் சென்ற அதேவேளை "டமால்' என்ற சத்தம்.அந்த அறையின் அமைதியைக்குலைத்தது. லதா இருந்த இடத்தின்மேலே தொங்கிக் கொண்டிருந்த அலங்கார விளக்கு அறுந்து விழுந்தது. லதாஅந்த இடத்தில் இருந்திருந்தால் அன்றேஅவரின் கதை முடிந்திருக்கும்.மக்கள் திலகம், லதா, படப்பிடிப்புக்குழுவில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதிர்ச்சியில் இருந்துஅவர்கள் விடுபட சில நிமிடங்கள் சென்றது.
மக்கள் திலகத்தின் உள்ளுணர்வு பலவேளைகளில் அவருக்கு கைகொடுத்துள்ளது.அன்றும் அப்படித்தான். உள்ளுணர்வு கூறியதால்தான் லதாவை அழைத்தார். தமிழகத்தின் முன்னாள் உளவுத்துறைஅதிகாரியும் மக்கள் திலகத்துடன்நெருங்கிப் பழகியவருமான எம். மோகன்தாஸ், எம்.ஜி.ஆர். நிழலும், நிஜமும்என்ற புத்தகத்தில் மக்கள் திலகத்தின்உள்ளுணர்வு பற்றி எழுதியுள்ளார். அவர்திடீர் என முடிவு எடுப்பார். அந்த முடிவுஎப்பவும் சரியானதாக இருக்கும் என்றுஎம். மோகன்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.லண்டன், பிரான்ஸ், ரஷ்யா, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் மக்கள் திலகம்நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரையிடப்பட்டது. உலகம் சுற்றும் வாலிபன்திரையிடப்பட்ட நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மக்கள் திலகம், ப.நீலகண்டன், சித்ரா லட்சுமணன், லதாஆகியோர் கலை நிகழ்ச்சியைப் பார்க்கஅங்கு சென்றனர்.வெளிநாடுகளில் இந்திய உணவு வகைகள்கிடைப்பது அதிசயம். ரஷ்யாவில்உள்ள சாப்பாட்டை லதாவால் சாப்பிடமுடியவில்லை. எனக்கு நல்ல சாப்பாடுதாருங்கள் அல்லது என்னை இந்தியாவுக்குஅனுப்பி விடுங்கள் என்று மக்கள்திலகத்திடம் கூறினார் லதாஉன்னை விட எனக்கு ரொம்ப கஸ்டாஇருக்கு நீ வெளியே சொல்லி விட்டாய்நான் யாரிடம் சொல்வது என லதாவுக்குஆறுதல் கூறினார். லண்டனுக்குச் சென்றபோது போதும் போதும் என லதாசொல்லும்படி நல்ல இந்திய உணவுகளை வாங்கிக் கொடுத்தார் மக்கள் தில
கம்.
சுவிட்ஸர்லாந்தில் உள்ள பனிமலையைப் பார்க்கச் சென்றபோது லதா புடவையும் செருப்பும் அணிந்துகொண்டு சென்றார். சிறிது தூரம் சென்ற பின்ன
ர்தான் சப்பாத்து இல்லாமல் பனி மலையை சுற்றிப் பார்க்க முடியாதுஎன்று லதா உணர்ந்தார். குளிர்தாங்க முடியாத லதா நடுங்கினார். மக்கள் திலகம் தான் போட்டிருந்தகோட்டைக் கழற்றிக்கொடுத்தார். அப்படியும் குளிர்லதாவை வாட்டியது. மரப் பலகைஒன்றை எடுத்துப் போட்டு அதில்நடக்கும்படி கூறினார் மக்கள் திலகம்.சிறிது தூரம் நடந்த லதா என்னால் முடியாது என்று கூறிவிட்டார்.இனி என்ன செய்வது என அனைவரும் திகைத்து நின்ற போது லதாவின்அருகில் சென்ற மக்கள் திலகம் அவரை தனது இரு கைகளாலும் தூக்கினார். பனிக் குளிரில் சுமார் அரைமணி நேரம் லதாவைத் தூக்கிச்சென்று காரில் இருத்தினார்.
தமிழக முதல்வரான பின்னர்சுகயீனம் காரணமாக எம்.ஜி.ஆர்.அமெரிக்காவில் சிகிச்சைபெற்றார். அதேவேளை லதாவின்தாயார் சுகயீனம் காரணமாக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவில்இருந்து திரும்பிய முதல்வர் எம்.ஜி.ஆர். வைத்தியசாலைக்குச் சென்று லதாவின்தாயாரின் உடல் நிலை பற்றி விசாரித்தார்.அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததைஎங்கிட்ட ஏன் சொல்லவில்லை என்றுகோபத்துடன் கேட்டார்.நான் யாருக்கும் சொல்லவில்லை எனலதா கூறிய போது "யாருக்கும் சொல்லாவிட்டால் என்ன எனக்குக் சொல்ல வேண்டாமா?' எனப் பாசத்துடன் கேட்டார்.

1 comment:

குப்பன்.யாஹூ said...

These are all boring posts, the reason is you and I can write now anything on MGR Sivaji Gemini ganesan films, becasue they are not here to object our false stories.

Can you please write behind scenes of vettaikaran, endiran, aadhavn, vaaranam 1000.