Thursday, June 7, 2012

திரைக்குவராதசங்கதி38


சூப்பர் ஸ்டார் யாரென்று கேட்டால் எந்தக்குழந்தையும் பதில் சொல்லிவிடும்.அதேபோல் சூப்பர்ஸ்டாரினியாரென்றால்விஜயசாந்தி என்று அனைவரும்கூறுவார்கள். இந்தியாவில் பேசும் படங்கள்தயாரான புதிதில் ஹிந்தியில் நாடியாவும்,தமிழில் கே.டி.ருக்குமணியும் ஆண்களுக்குஇணையாக சண்டைக்காட்சிகளில் தூள்கிளப்பினர்.
ரிவால்வர் ரீட்டா, கன்ஃபைட் காஞ்சனாபோன்ற படங்களின் மூலம்சண்டைக்காட்சிகளில் நடித்து பாராட்டுப்பெற்றவர் ஜோதிலட்சுமி> அவருக்குப்பின்னர் அடி தடிக்காட்சிகளில் தூள் கிளப்பிலேடி ஜேம்ஸ் பொன்ட்> லேடிஅமிதாப்பச்சன் என்று பெயரெடுத்தவர்விஜயசாந்தி. இவர் அறிமுகமானதுபாரதிராஜா மூலம் தமிழ்ப் படத்தில் தான்என்றாலும் இவர் புகழ்தெலுங்குப்படங்களின் மூலமே வெளிவந்தது.
விஜயசாந்தியின் சித்தி விஜயலலிதாதெலுங்கிலும்> தமிழிலும் நடித்தார்.விஜயசாந்தி ஆந்திராவில் பிறந்தார்.எனினும் சென்னையில் வளர்ந்தார்.சிறுவயதில் படப்பிடிப்பைப் பார்ப்பதற்காகசித்தியுடன் ஸ்டூடியோவுக்குச் செல்வார்விஜயசாந்தி. சினிமா பற்றிய பிரமிப்புஅவரிடம் இருந்தது. ஆனாலும் நடிகையாகவேண்டும்என்றஎண்ணம்அவர் மனதில்இருக்கவில்லை.
மருத்துவத்துறையில் படித்துடாக்டராக வேண்டும் என் பதுஅவரது கனவாக இருந்தது.பாரதிராஜாவின் இயக்கத்தில்க‌ல்லுக்குள்ஈரம் என்ற படம் தயாராகிக்கொண்டிருந்தது. கதாநாயகன் பாரதிராஜா>கதாநாயகியாக நடிக்க அருணா ஒப்பந்தம்செய்யப்பட்டார். அருணாவின் தோழியாகபிரதான பாத்திரத்தில் நடிக்க புதுமுகம்ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.ஸ்ரூடியோ ஒன்றில் விஜயசாந்தியின்படத்தைப் பார்த்த பட அதிபர் விஜயன்அதைப்பற்றி பாரதிராஜாவிடம் கூறினார்.படத்தைப் பார்த்த பாரதிராஜா அந்தப்பெண்ணைத் தேடினார்.விஜயசாந்தியின் வீட்டைக் கண்டு பிடித்துபாரதிராஜாவின் விருப்பத்தைக்கூறினார்கள். அப்போது விஜயசாந்திஎட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
சினிமாவில் நடிக்கும் ஆசை இல்லாதவிஜயசாந்தியின் மனதில் சினிமா ஆசைவளரத் தொடங் கியது.பாரதிராஜாவின் படத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைக்காதா என பலரும் ஏங்கிக்கொண் டிருக்கையில் பாரதிராஜாஅனுப்பியவரே வீடு தேடி வந்ததால்விஜயசாந்தி சம்மதம் தெரிவித்தார்.கல்லுக்கு ஈரம் வெற்றிப்படமல்ல; ஆனால்.சிறந்த படமென்று பலராலும் பாராட்டப் பட்டபடம். தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது தெலுங்குப்படங்களிலும் விஜயசாந்தி நடிக்கத் தொடங்கினார். கில்லாடி கிருஷ்ணா என்ற படத்தில்கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தார். அப்படம்மிகப் பெரிய வெற்றிபெற்றதால் விஜயசாந்தியின் மதிப்புஉயர்ந்தது.
1988 ஆம் ஆண்டு வெளியானபிரதிகடனா (எதிர்த்தாக்குதல்) என்றபுரட்சிப்படம் விஜய சாந்தியை உச்சத்தில்கொண்டு போய் நிறுத் தியது. டி. கிருஷ்ணாஇயக்கிய அப்படத்தில் விஜயசாந்தி கதாநாயகியாக நடித்தார். சரண்ராஜ்இப்படத்தின் மூலம் வில்லனாகஅறிமுகமானார்.
பிரதிகடனா என்ற படம் பூ ஒன்று புயலானது என தமிழில் டப் செய்துவெளியிடப் பட்டது. வசனங்ளைஆருர்தாஸ் எழுதினார்.வாலி பாடல்கள் எழுதினார். பூ ஒன்றுபுயலானது என்ற படம் தமிழில் பெருவெற்றி பெற்றது. மொழிமாற்றம்செய்யப்பட்ட அந்தப் படம் நேரடித் தமிழ்ப்படங்களுடன் போட்டிபோட்டுசென்னையில் 100 நாட்களுக்கு மேல்ஓடியது.
விஜயசாந்திக்காகவே அடிதடி சண்டைக்காட்சிகள் உள்ள கதைகள் எழுதப்பட்டன.சண்டைப்படங்களில் துணிச்சலுடன் நடித்துபாராட்டுப் பெற்றார். பெண் பொலிஸ்அதிகாரியான கிரான் பேடியின்வாழ்க்கையைத் தழுவி வைஜந்தி ஐ.பி.எஸ்,பூலான் தேவியின் வாழ்வை மையமாக்கிஅடிமைப் பெண் ஆகிய படங்களில்விஜயசாந்தி நடித்தார். இரண்டும்வெற்றிப்படங்கள் வரிசையில் சேர்ந்தன.முதலமைச்சர் ஜெயந்தி, கவுண்டர்பெண்ணா, கொக்கா,, மறவன் மகள்,பொலிஸ் லாக்கப், லேடி பாஸ், ஸ்ரீட்பைட்டர், ஆட்டோராணி ஆகியனவிஜயசாந்தியின் நடிப்பின் மூலம்வெற்றிபெற்ற படங்கள்.பொலிஸ் லாக்கப் எனும் படத்தில் துடுக்குப்பெண்ணாகவும் அப்பாவிப் பெண்ணாகவும்மாறுபட்ட இரு வேடங்களில் நடித்தார்.
தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டபடங்களுக்கு விஜயசாந்திக்காக நடிகைசரிதா குரல் கொடுத்தார்.மிக நீண்ட நாட்களின் பின்னர் மன்னன்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.விஜயசாந்தி 175 படங்களில் நடித்துள்ளார்.தெலுங்கு 12,, தமிழ் 39, ஹிந்தி 6,கன்னடம்5 , மலையாளம் 4 சிறந்தநடிப்புக்கான தேசிய விருதை ஒரு முறைபெற்றுள்ள விஜயசாந்தி ஆந்திரமாநிலஅரசின் தேசிய விருதை நான்கு முறைபெற்றார்
ரமணி
மித்திரன் 03.12.2006
97

2 comments:

வேல்முருகன் said...

நல்ல பதிவு

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா