Thursday, October 19, 2023

தவறை ஒப்புக்கொண்ட குர்பாஸை எச்சரித்த ஐ.சி.சி

இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்தது. முன்னதாக அப்போட்டியில்  அதிரடியாக விளையாடிய ரஹமன்னுல்லா குர்பாஸ் 80 (57) ஓட்டங்களில் சிறப்பாக விளையாடிய போது எதிர்ப்புறம் இருந்த கப்டன் ஷாஹிதியின் தவறான அழைப்பால் ரன் அவுட்டாகி சென்றார்.

 அந்த ஏமாற்றத்தில் டைவ் அடித்ததும் எழுந்து தரையில் தம்முடைய பேட்டால் அடித்த அவர் பெவிலியனுக்கு திரும்புவதற்கு முன்பாக பவுண்டரி எல்லையையும் அங்கிருந்த நாற்காலியையும் துடுப்பால் அடித்து சேதப்படுத்தினார்.   குர்பாஸ் மைதான பொருட்களை சேதப்படுத்தியதற்காக அப்போட்டியின் நடுவர்கள் ஐசிசியுடம் புகார் தெரிவித்தனர்.  அதை ஏற்றுக் கொண்ட ஐசிசி ரஹமனுல்லா குருபாஸ்க்கு அதிகாரப்பூர்வமான எச்சரிக்கையும் 1 கேரியர் கறுப்பு புள்ளியையும் தண்டனையாக அறிவித்தது.

விதிமுறையை மீறியுள்ளதால் 50% போட்டி சம்பளத்திலிருந்து அபராதமும் ஒரு கறுப்பு புள்ளியும் தண்டனையாக கொடுக்கப்படும் என்று ஐசிசி கூறியுள்ளது. ஆனால் கடந்த 24 மாதங்களில் குர்பாஸ் முதல் முறையாக இப்போது தான் விதிமுறையை மீறியுள்ளதால் அபராதம் தவிர்க்கப்பட்டு எச்சரிக்கை மற்றும் ஒரு கறுப்பு புள்ளி தண்டனையாக கொடுக்கப்படுவதாக ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த தவறுகளை ஒப்புக்கொண்ட குர்பாஸ் தண்டனையை ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படாது என்றும் ஐசிசி கூறியுள்ளது. இருப்பினும் அடுத்த 24 மாதங்களில் இந்த கறுப்பு புள்ளிகளின் எண்ணிக்கை நான்கை தொடும் பட்சத்தில் ஐசிசி விதிமுறைப்படி குர்பாஸ்க்கு ஒரு சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான தடை தாமாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: