Wednesday, October 4, 2023

பிஜேபி கூட்டணியில் இருந்து வெளியேறியது அதிமுக

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்  தமிழக பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையே  நிலவிய கூட்டணிக்குழப்பத்துக்கு  முடிவு கட்டப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து அரசியல்செய்யும் பாரதீய ஜனதாக் கட்சியின்   மாநிலத் தலைவர் அண்ணாமலை, அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா ஆகியோரையும் அண்ணாமலை தரக் குறைவாகப் பேசினார்.  அண்ணாமலையின்  போக்கை டெல்லித் தலைமை கண்டுகொள்ள வில்லை.

 அண்ணாமலையின் பதவியைப் பரிக்கும்படை அண்ணா திராவிட முன்னேற்ரக் கழகம் விடுத்த வேண்டுகோள் அனைத்தும் குப்பைக் கூடைக்குள்  போடப்பட்டன. தலைவர்கள்  பேச்சி வார்த்தை நடத்தின்னர் தொண்டர்கள் குமுறினர். பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லையென  அதிகார  பூர்வமாக அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் அரிவித்துள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை, கூட்டணி தர்மத்தை மீறி விமர்சித்து வருவதாக கூறி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்த நிலையில், அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் கடந்த 18-ம் thikaதி தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்று திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்துக்குப் பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் பின்வருமாறு: தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதிமுக மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.

மேலும், பாஜகவின் மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல் பாஜகவிலிருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. வருகின்ற 2024-ல், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.

 எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான உறுப்பினர்கள், பாஜக கூட்டணியில் இருந்து விலக வலியுறுத்தினர். கே.பி.முனுசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது, கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 தமிழகத்தில் 2019 பொதுத் தேர்தல்,2021 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து சந்தித்தது. 2024 மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று இரு கட்சிகளும் அறிவித்திருந்தன.

பொதுத் தேர்தல்  தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி அவ்வப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி, முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன. அதை எதிர்கொள்ள பாஜகவும் தனது கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அவ்வப்போது அழைத்து பேசி வருகிறது. அவ்வாறு கடந்த 14-ம் திகதி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்து பேசியுள்ளார்.

பாஜக தேசிய தலைமையின் அழைப்பை ஏற்று, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 14-ம் தேதி டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, சுமார் 20 தொகுதிகளில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் அமித் ஷா கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த நிபந்தனைகளை பழனிசாமி ஏற்கவில்லை என்று தெரிகிறது.

 அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் கடந்த 22-ம் தேதி டெல்லி சென்று, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, அண்ணாமலையின் பதவியை பறிக்க வலியுறுத்தியதாகவும், அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

பாரதீய ஜனதாக் கட்சிமெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. என்னதான்  பிரச்சனை என்றாலும் எடப்பாடி  கூட்டனியில் இருப்பார்  என்றே  மோடியும், அமித் ஷாவும்  நம்பிக்கை வைத்திருந்தனர். பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தில்  வெற்றி பெறமுடியாது எனப்தை நன்கு உணர்ந்த எடப்பாடி  காய் நகர்த்தியுள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் அல்லது தேர்தலுக்குப் பின்னர்  இரண்டு கட்சிகளும் கைகோர்த்தால் ஆச்சரியப்பட முடியாது எனாரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளது. அதிமுகவினர் இதை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஒரு கூட்டணியில் இருந்து விலகியதற்காக இப்படி கொண்டாட்டம் நடைபெறுவதை அரசியல் நோக்கர்கள் அதிசயமாகவே பார்க்கின்றனர்.2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன.   கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நாகர்கோவில், நெல்லை ஆகிய தொகுதிகளை கைப்பற்றி, 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்தது பாஜக. அதே நேரத்தில் ஆட்சியை இழந்த அதிமுக எதிர்கட்சித்தலைவர் வரிசையில் அமர்ந்தது. அப்போது பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சரானதை அடுத்து பாஜகவின் புதிய தலைவராக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று விவசாய பணியில் ஈடுபட்ட அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

பாஜக மேலிடம் கூறித்தான் அண்ணாமலை அதிமுகவை விமர்சித்து வருகிறார். அண்ணாமலையின் விமர்சனத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்றவே முடியாது. தேர்தலில் பாஜக தனியாக நின்றால் நோட்டாவை விட குறைந்த வாக்குகளே பெறும் " என கடுமையான விமர்சனங்களை முன்வைக்கப்பட்டன. இதெல்லாம் நாடகம் என்று திமுக உள்ளிட்ட கட்சியினர் கூறி வந்தனர். எதுவுமே சொல்லாமல் அமைதி காத்து வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்தநிலையில்தான் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். கூட்டணி முறிவு பற்றி எதுவும் பேசக்கூடாது என பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. அண்ணாமலையும் இதுவரை எதுவுமே வாய் திறக்கவில்லை. இதுவும் நாடகம்தான் என்றும் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் எதுவும் நடைபெறலாம் என்றும் கூறி வருகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

 

No comments: