தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகுந்த கவனத்துடன் ஆட்சியை நடத்துகிறார்.ஸ்டாலினை வீழ்த்த
எதிர்க்
கட்சிகள் சந்தர்ப்பத்தை எதிர் பார்க்கின்றன. கூட்டணிக் கட்சிகள் குடைச்சல்
கொடுக்கின்றன. அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் ஸ்டாலினைப் பொருட்படுத்தாமல்
தமக்குத் தெரிந்த வித்தைகளை ஆங்காங்கே அரங்கேற்றுகின்றனர். காலையில் கண்விழிக்கும்போது
என்ன பிரச்சனை முன்னுக்கு வரும் எனத் தெரியாமல் ஸ்டாலின் திகைத்து நிற்கிறார்.
ஸ்டாலினின்
அமைச்சரவை உறுப்பினர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி,துரை முருகன் ஆகியோரைப்பற்றி
வெளிவ்ரும் தகவல்கள்
ஸ்டாலினுக்கு
தலையிடியைக் கொடுக்கின்றன. அமைச்சர் பதவி வேண்டுமா? பிணி வேண்டுமா? என செந்தில் பாலாஜியிடம்
நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சைவம் , வைணவம் ஆகியவற்றாஇத் தரக்குறைவாகப் பேசிய அமைச்சர்
பொன்முடிக்கு
எதிர்ர்க வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. பெண்களை இழிவு படுத்திப் பேசியதால் அவர் மீது
பெண்கள் போர்க்கொடி தொடுத்துள்ளனர். கனிமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனையும்,
, அவரது
குடும்பத்தினரையும் விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை
உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கி தவறு செய்துவிட்டோம்”.. உச்ச நீதிமன்றம்
கடும் கோபம் கொண்டுள்ளது. ஆகையால் அவரது அமைச்சுப் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது.
2011- 2015 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்
செந்தில் பாலாஜி. அப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண
மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்
கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். பிணை கோரி செந்தில்
பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் பல முறை நிராகரிக்கப்பட்டன. சிறையிலேயே அவருகு இதய அறுவை சிக்கிச்சை
செய்யப்பட்டது.\நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த 2024 செப்டம்பர் 26 ஆம் திகதி செந்தில்
பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. அடுத்த இரண்டு நாட்களில் அவர்
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார்.
செந்தில் பாலாஜி அமைச்சரானதால் அவரது பிணையை இரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர்
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 'தற்போது அமைச்சராக இல்லை என்று கூறி பிணை பெற்ற செந்தில்
பாலாஜி, பிணை கிடைத்த ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகி
உள்ளார். இதனால், அவருக்கு எதிராக சாட்சி அளிக்க யாரும் முன்வரமாட்டார்கள் என்பதால்
அவருக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்பதால்தான் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
அவர் அமைச்சராவதற்காக பிணை வழங்கப்படவில்லை என நீதிபதிகள் கோபமாக் கூறினர்.
சாட்சியங்களைக் கலைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கருத வாய்ப்பு உள்ளதால் வழக்கை வேறு மாநிலத்திற்கு
மாற்ற வேண்டும் என்று செந்தில் பாலாஜியின் தரப்பில் ஆஜரனவர்கள் கோரிக்கை
வைத்தனர். நீதிபதிகள் அதற்கு இணங்கவில்லை.
அமைச்சரா பிணையா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு செந்தில் பாலஜியிடம்
விடப்பட்டுள்ளது. 28 ஆம் திகதி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சைவம் , வைணவம் ஆகியவற்றைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் முதலமைச்சர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. திராவிடர் கழகம் சார்பில் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் , வைணவம் , பெண்களைப் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதற்கு பல எதிர்ப்புகளும்,கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. பொம்னுடிக்கு எதிராக போராட்டங்கள் நடை பெற்றன. கட்சி பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டார். இது போன்ற அறிவிப்புகளை கட்சியின் செயலாளஎ துரைமுருகனே வழமையாக வெலியிடுவார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டதால் இதன் முக்கியதுவம் வெளிப்பட்டது.
இந்நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்கக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், வழக்குக்கு தொடர்பில்லாத முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதை மனுதாரர் ஜெகன்நாத் ஏற்றுக் கொண்டதை அடுத்து, அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய பகுதிகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக ஜூன் 5 ஆம் திகதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 19 ஆம் திகதிக்கு தள்ளி வைத்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனையும், அவரது குடும்பத்தினரையும் விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. திமுகவின் மூத்த தலைவராக இருப்பவர் துரைமுருகன். இவர் திமுகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த 1996-2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடந்தது. அப்போது முதல்வராக கருணாநிதி இருந்தார். அந்த சமயத்தில் கருணாநிதி அமைச்சரவையில் துரைமுருகன் இடம்பெற்றிருந்தார். கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக இலஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2002 ல் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து வேலூர் நீதிமன்றம் 2007ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 2013ல் அதிமுக ஆட்சியில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். இலஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகைகளை விளக்கி வாதிடப்பட்டது.
துரைமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவும், அவரது குடும்பத்தினர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களின் தனிப்பட்ட தொழில், குடும்ப வருமானத்தை அமைச்சர் துரைமுருகன் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்டியுள்ளதாக, குற்றம் சாட்டினர். மேலும், வழக்கு சம்பந்தப்பட்ட காலத்துக்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரின் குடும்பத்தினரை, அமைச்சரின் பினாமி என குறிப்பிட எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தனித்தனியாக, முறையாக வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். அவற்றை லஞ்ச ஒழிப்புத் துறையும் ஏற்றுக் கொண்டுள்ளது என வாதிட்டனர்.
காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்து அதிகாரி விசாரிக்க வேண்டிய வழக்கை, அதிகார வரம்பு இல்லாத ஆய்வாளர் இந்த வழக்கை புலன் விசாரணை செய்துள்ளார். வழக்கு தொடர்வதற்கு, சட்டப்படி அனுமதி பெறப்படவில்லை. இதை எல்லாம் கருத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது. அந்த உத்தரவை எதிர்த்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், இந்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை மறு ஆய்வு மனுவை ஏற்று, அமைச்சர் துரைமுருகனையும், குடும்பத்தினரையும் விடுவித்த உத்தரவை இரத்து செய்து உத்தரவிட்டார்.
வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்து, சாட்சி விசாரணையை துவங்க, வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி வேல் முருகன், 1996-2001 ம் ஆண்டு காலத்தில் சொத்து சேர்த்த வழக்கு என்பதால், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இது துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திஉள்ளது.
செந்தில் பாலாஜி அமைசர் பதவியை இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. பொன்முடியின் அமைச்சுப் பதவியும் அந்தரத்தில் உள்ளது. துரை முருகனின் வழக்கு என்ன ஆகுமோ தெரியாது.
இவை எல்லாம் ஸ்டாலினை எதிர்ப்பவர்களுக்கு பேசு பொருளாகும் என்பதில் சந்தேகம் இல்லை
ரமணி.
27/4/25