Tuesday, April 29, 2025

மூத்த தலைவர்களால் தலை குனியும் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகுந்த கவனத்துடன் ஆட்சியை நடத்துகிறார்.ஸ்டாலினை வீழ்த்த  எதிர்க் கட்சிகள்  சந்தர்ப்பத்தை எதிர் பார்க்கின்றன. கூட்டணிக் கட்சிகள் குடைச்சல் கொடுக்கின்றன. அவரது கட்சியின்  மூத்த தலைவர்கள் ஸ்டாலினைப் பொருட்படுத்தாமல் தமக்குத் தெரிந்த வித்தைகளை ஆங்காங்கே அரங்கேற்றுகின்றனர். காலையில் கண்விழிக்கும்போது என்ன பிரச்சனை முன்னுக்கு வரும் எனத் தெரியாமல் ஸ்டாலின் திகைத்து நிற்கிறார்.
 ஸ்டாலினின் அமைச்சரவை  உறுப்பினர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி,துரை முருகன் ஆகியோரைப்பற்றி வெளிவ்ரும் தகவல்கள்
 ஸ்டாலினுக்கு தலையிடியைக் கொடுக்கின்றன. அமைச்சர் பதவி வேண்டுமா? பிணி வேண்டுமா? என செந்தில் பாலாஜியிடம் நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சைவம் ,
 வைணவம்  ஆகியவற்றாஇத் தரக்குறைவாகப் பேசிய அமைச்சர்  பொன்முடிக்கு எதிர்ர்க வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.  பெண்களை இழிவு படுத்திப் பேசியதால் அவர் மீது பெண்கள்  போர்க்கொடி தொடுத்துள்ளனர். கனிமொழியும் கண்டனம்  தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனையும், ,
 அவரது குடும்பத்தினரையும்  விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம்  இரத்துச் செய்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு
 பிணை வழங்கி தவறு செய்துவிட்டோம்”.. உச்ச நீதிமன்றம் கடும் கோபம் கொண்டுள்ளது. ஆகையால் அவரது அமைச்சுப் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது.
2011- 2015 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023
 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர்.   பிணை கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் பல முறை நிராகரிக்கப்பட்டன. சிறையிலேயே அவருகு  இதய அறுவை சிக்கிச்சை செய்யப்பட்டது.\நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த 2024 செப்டம்பர் 26 ஆம்  திக‌தி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம்  பிணை  வழங்கியது. அடுத்த  இரண்டு  நாட்களில் அவர் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார்.
  செந்தில் பாலாஜி அமைச்சரானதால் அவரது பிணையை இரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 'தற்போது அமைச்சராக இல்லை என்று கூறி   பிணை பெற்ற செந்தில் பாலாஜி,  பிணை  கிடைத்த ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகி உள்ளார். இதனால், அவருக்கு எதிராக சாட்சி அளிக்க யாரும் முன்வரமாட்டார்கள் என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட  பிணையை இரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தார்.
செந்தில் பாலாஜி
 அமைச்சராக  இல்லை என்பதால்தான் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. அவர் அமைச்சராவதற்காக பிணை வழங்கப்பட‌வில்லை என நீதிபதிகள்  கோபமாக் கூறினர்.
சாட்சியங்களைக் கலைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கருத வாய்ப்பு உள்ளதால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று
 செந்தில் பாலாஜியின் தரப்பில் ஆஜரனவர்கள் கோரிக்கை வைத்தனர்.  நீதிபதிகள் அதற்கு இணங்கவில்லை.
அமைச்சரா பிணையா என்பதைத்
 தீர்மானிக்கும்  பொறுப்பு  செந்தில் பாலஜியிடம் விடப்பட்டுள்ளது. 28 ஆம் திகதி  வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 



சைவம் , வைணவம் ஆகியவற்றைப் பற்றி  சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் முதலமைச்சர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. திராவிடர் கழகம் சார்பில் கடந்த 8 ஆம்  திக‌தி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, சைவம் , வைணவம் , பெண்களைப் பற்றியும்  சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதற்கு பல
 எதிர்ப்புகளும்,கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.   பொம்னுடிக்கு எதிராக போராட்டங்கள் நடை பெற்றன.  கட்சி பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம் செய்யப்பட்டார். இது போன்ற அறிவிப்புகளை கட்சியின் செயலாளஎ துரைமுருகனே வழமையாக வெலியிடுவார். ஆனால்,  முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை  வெளியிட்டதால் இதன் முக்கியதுவம் வெளிப்பட்டது.
இந்நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்கக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

 இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், வழக்குக்கு தொடர்பில்லாத முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதை மனுதாரர் ஜெகன்நாத் ஏற்றுக் கொண்டதை அடுத்து, அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டிய பகுதிகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக ஜூன் 5 ஆம் திக‌திக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 19 ஆம் திக‌திக்கு தள்ளி வைத்தனர்.
 
வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனையும்,
 அவரது குடும்பத்தினரையும் விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. திமுகவின் மூத்த தலைவராக இருப்பவர் துரைமுருகன். இவர் திமுகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த 1996-2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடந்தது. அப்போது முதல்வராக கருணாநிதி இருந்தார். அந்த சமயத்தில் கருணாநிதி அமைச்சரவையில் துரைமுருகன் இடம்பெற்றிருந்தார். கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக இலஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2002 ல் வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து வேலூர் நீதிமன்றம் 2007ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 2013ல் அதிமுக ஆட்சியில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். இலஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகைகளை விளக்கி வாதிடப்பட்டது.

துரைமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவும், அவரது குடும்பத்தினர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களின் தனிப்பட்ட தொழில், குடும்ப வருமானத்தை அமைச்சர் துரைமுருகன் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்டியுள்ளதாக, குற்றம் சாட்டினர். மேலும், வழக்கு சம்பந்தப்பட்ட காலத்துக்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரின் குடும்பத்தினரை, அமைச்சரின் பினாமி என குறிப்பிட எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தனித்தனியாக, முறையாக வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். அவற்றை லஞ்ச ஒழிப்புத் துறையும் ஏற்றுக் கொண்டுள்ளது
 என வாதிட்டனர்.
காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்து அதிகாரி விசாரிக்க வேண்டிய வழக்கை, அதிகார வரம்பு இல்லாத ஆய்வாளர் இந்த வழக்கை புலன் விசாரணை செய்துள்ளார். வழக்கு தொடர்வதற்கு, சட்டப்படி அனுமதி பெறப்படவில்லை. இதை எல்லாம் கருத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்தது. அந்த உத்தரவை எதிர்த்த மறு ஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், இந்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை
 திக‌தி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை மறு ஆய்வு மனுவை ஏற்று, அமைச்சர் துரைமுருகனையும்,  குடும்பத்தினரையும் விடுவித்த உத்தரவை இரத்து செய்து உத்தரவிட்டார்.
வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்து, சாட்சி விசாரணையை துவங்க, வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி வேல் முருகன், 1996-2001 ம் ஆண்டு காலத்தில் சொத்து சேர்த்த வழக்கு என்பதால், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இது துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திஉள்ளது.
செந்தில் பாலாஜி அமைசர் பதவியை இழப்பது கிட்டத்தட்ட
 உறுதியாகி உள்ளது. பொன்முடியின்  அமைச்சுப் பதவியும் அந்தரத்தில் உள்ளது. துரை முருகனின் வழக்கு என்ன ஆகுமோ தெரியாது.
இவை எல்லாம் ஸ்டாலினை எதிர்ப்பவர்களுக்கு பேசு பொருளாகும் என்பதில் சந்தேகம்
 இல்லை

ரமணி.
 

27/4/25

சூறாவளியாகச் சுழன்றடித்த சூர்யவன்ஷி


 

 கிறிக்கெற் உலகில் சாதனை படைத்த 14 வயதுப் பாலகனைப் பற்றியே விளையாட்டுலகம் இப்போது பேசுகிறது.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்சியின் அபார சதத்தால் ராஜஸ்தான் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெற்களை இழந்து 209 ஓட்டங்கள் குவித்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 80 ஓட்டங்களும் பட்லர் 50 ஓட்டங்களும் எடுத்தனர் .

கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் வைபவ் சூர்யவன்சி, யஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் ராஜஸ்தான் அணிக்கு அதிரடியான தொடக்கம் தந்தனர். 14 வயது சிறுவனான வைபப் சூரியவன்சி சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினார். ஒரு பக்கம் இவர் அடித்து ஆட மறுமுனையில் ஜெய்ஸ்வால் நிதானமாக ஓட்டங்களை சேர்த்து வந்தார். சூர்யவன்சி 17 பந்துகளில் தனது அரை சதத்தை கடக்க இந்த சீசனில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் எனோட்டங்ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையும் ஐ பி எல் வரலாற்றில் சூர்யவன்சி படைத்தார். தொடர்ந்து இருவரும் தங்களது அதிரையை தொடர ராஜஸ்தான் ராயல் அணி எட்டாவது ஓவரிலேயே 100 ஓட்டங்களை கடந்தது.

அதிரடியாக விளையாடிய சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் சூரியவன்சி தனதாக்கினார்.

38 பந்துகளில் 103 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேற மறுமுனையில் ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ஓட்டங்கள் எடுத்தது.

ல் ராஜஸ்தான் ராயல் 15.3 ஓவர்களில் 210 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.

ஜெய்ஸ்வால் 70 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலும் கப்டன் ரியான் பராக் 32 ஓட்டங்கள் எடுத்து இறுதி வரை களத்தில்

53 பந்துகளில் சதம் அடித்த சூர்யவ்வன்ஷி   3 உலக சாதனையுடன்  6 ஐபிஎல் வரலாற்று சாதனைகளைப் படைத்துள்ளார்.  11 சிக்ஸர்கள்  7 பவுண்டரிகள் அடித்து குஜராத் பந்து வீச்சாள‌ர்களை திணறடித்தார்.

14 வருடம் 32 வயதில் 100 ஓட்டங்களைத் தொட்ட சூர்யவன்ஷி  ரி20 கிறிக்கெட்ற்ல் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக மும்பைக்கு எதிராக 2013ஆம் ஆண்டு உள்ளூர் தொடரில் மகாராஷ்டிராவின் விஜய் ஜோல் 18 வருடம் 118 நாட்களில் சதத்தை அடித்தார்.


ரி20 கிறிக்கெற்றில்  மிகவும் இளம் வயதில் அரை சதத்தை அடித்த வீரர் என்று உலக சாதனையும் அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் ஆப்கானிஸ்தான் வீரர்  முகமது நபியின்  மகன் ஹசன் ஐசக்கில் 2022ஆம் ஆண்டு 15 வருடம் 360 நாளில் அரை சதத்தை அடித்ததே முந்தைய சாதனையாகும்.

 இந்தப் போட்டியில் அடித்த 101  ஓட்டங்களில் 93.06%  ஓட்டங்களை அதாவது 94 ஒட்டங்களை சூர்யவன்ஷி பவுண்டரிகள்   சிக்ஸர்களால் மட்டுமே அடித்துள்ளார்.  ஒரு  ரி20 போட்டியில்  பவுண்டரிகளால் மட்டுமே அதிக சதவீத  ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். 

 2024ஆம் ஆண்டு மேகாலயாவுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா 92.45%  ப்ப்ட்டங்களை  பவுண்டரிகளால் அடித்ததே முந்தைய சாதனை.

. ஐபிஎல் தொடரில் இளம் வயதில் 50 ஓட்டங்களையும் , 100  ஓட்டங்களையும் அடித்த இந்திய வீரர் என்ற இரட்டை வரலாற்று சாதனைகளையும் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.இதற்கு முன்னதாக

  ரியான் பராக்  17 வருடம் 175 நாட்களில் அரை சதம் அடித்தார்.

 மனிஷ் பாண்டே  19 வருடம் 253 நாட்களில் சதம் அடித்தார்.   அந்த இருவரின் சாதனைகளையும் சூர்யவன்ஷி  ஒரு போட்டியிலேயே முறியடித்தார்.

  5. 35 பந்துகளில் சதத்தை அடித்த சூர்யவன்சி ஐபிஎல் வரலாற்றில் வேகமாக சதத்தை அடித்த இந்திய வீரர் சரித்திரத்தையும் படைத்துள்ளார். இதற்கு முன் 2010இல் மும்பைக்கு எதிராக ராஜஸ்தானுக்காக யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் அடித்ததே முந்தைய சாதனையாகும். 

கிறிஸ் கெய்லுக்கு   பின் 2வது வேகமான ஐபிஎல் சதத்தை அடித்த வீரராகவும் சூரியவன்சி சாதனை படைத்துள்ளார்.

க்றிஸ் கெய்ல்ஸ் - 30 பந்துகளிலும்

வைபவ் சூர்யவன்ஷி - 35 பந்துகளிலும்

யூசஃப் பதான் - 37 பந்துகளிலும்

டேவிட் மில்லர் - 38  பந்துகளிலும்

ட்ராவிஸ் ஜெட் - 39 பந்துகளிலும் சதம் அடித்தர்.  

  ஐபிஎல் வரலாற்றில் மிகவும் இளம் வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் முஜீப் உர் ரஹ்மான் 17 வருடம் 39 நாட்களில் ஆட்டநாயகன் விருதை வென்றதே முந்தைய சாதனை.

ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக (11) சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2010இல் ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே  வீரர்  முரளி விஜயையும் 11 சிக்சர்கள் அடித்துள்ளார். இது போக குறைந்த (3) போட்டிகளில் ஐபிஎல் சதத்தை அடித்த இந்திய வீரராகவும் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சேசிங்கில் வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

  

Wednesday, April 23, 2025

அத்து மீறும் ஆளுநர் ரவி அடக்கும் முதல்வர் ஸ்டாலின்


 

  தமிழக அரசுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் ஆளுந்ருக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம் போட்டுள்ளது. இந்திய  அரசியலமைப்பில் உள்ள சட்டத்துக்குப் புறம்பாக ஆளுநர் செயற்படுவதால் தமிழக அரசு சில திட்டங்களை அமுல் படுத்த முடியாத நிலை உள்ளது.

தமிழக அர்சு நிறைவேற்ரிய தீர்மானங்களை கிடப்பில் போட்ட ஆளுநர் ரவி திமிராகப் பதிலளித்தார்.

பொறுத்துப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் உச்ச நீதி  மன்றத்தின் கதவைத்தட்டினார்.ஆளுநரின் பணி இதுதான் இத்ற்கு மேல் போகக்கூடாது என    வரலாற்றுச் சிறபு மிக்க தீர்ப்பை உச்ச நீதிம் ம‌ன்றம் வழங்கியது.

பல்வேறு பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டமசோதாக்கள் உள்ளிட்ட 10 மசோதாக்களை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் வசம் இருந்த பல முக்கிய அதிகாரங்கள் தற்போது தமிழ்நாடு அரசு வசம் வந்துள்ளது. அதேசமயம், தமிழ் பல்கலைக்கழகம் தவிர்த்து பிற பல்கலைக்கழகங்களின் வேந்தராக தொடர்ந்து ஆளுநர் ஆர். என். ரவிதான் நீடித்து வருகிறார்.

இந்த்த்தீர்ப்பு  இந்திய அரசியலில்  பேசு பொருளாகி உள்ளது. பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. டெல்லியும் ஆளுநருக்கு    எதிராக நீதிமன்றத்துக்குச் சென்றது. 

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டியிருந்தார்.

இது வரை காலமும் ஆளுநரின் தலைமையிலேயா துணை வேந்தர்கள்  மாநாடு  நடைபெற்றது. அப்போது ஆளுநர் பேசா மடந்தையாக  இருந்தார். தமிழ்கத்தில் ஏதாவது பிரச்சனை என்றால்  டெல்லிக்கு ஓடுவது ஆளுந‌ர் ரவியின் முக்கிய செயற்பாடு. இப்போதும்  டெல்லிக்குப் பறந்தார். அங்கு அவருக்கு  வரவேற்பளிக்கபப்டவில்லை.

பிரதமர் மோடியையோ  அல்லது அமைச்சர் அமித்ஷாவையோ ரவியால் சந்திக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக்கடுமையாக விமர்சித்தவர்  துணை ஜனதிபதி ஜெகதீப் தங்கர். ஆளுநர் ரவி அவரைச் சந்தித்தபின்  உற்சாகமானார்.

டெல்லியில் இருந்து தமிழகத்துக்குச் சென்ற ஆளுரந் அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு துணை வேந்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக க் கட்சித் தலைவர்கள் அனைவரும் கடுமையாகக் கண்டித்தனர்.

 ஊட்டியில்  இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இது சலசலப்பையும், திமுக கூட்டணியினரின் எதிர்ப்பையும் பெற்றுள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது வரை காலமும் ஆளுநரின் பெயரிலேயே அறிவிப்பு  வெளியாகியது. சட்ட‌ச் சிக்கல் காரணமாக  ஆளுநர் மாளிகை அறிவிப்பை வெளியிட்டது.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் - நிறுவனங்களின் துணை வேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப்ரல் 25 மற்றும் 26 தேதிகளில் ஆளுநர் மாளிகை உதகமண்டலத்தில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து ஏப்ரல் 25 அன்று துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாடு மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் மாநாட்டுக்கு தலைமை தாங்க உள்ளார்.

துணைவேந்தர்கள் மாநாட்டின் நோக்கம் தேசிய கல்விக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்வி சார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை, ஆராய்ச்சி சிறப்பம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் திறன் வளர்ச்சி, மாற்று திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் தொழில் குறித்த விரிவான விவாதங்கள் மற்றும் கலந்தாய்வு அமர்வுகள் இம்மாநாட்டில் நடத்தப்பட உள்ளன.

கல்வித்துறை, அரசு மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் மேற்கண்ட தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள். இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய்குமார் சூத் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநில மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவனங்களின் துணைவேந்தர்களை ஒருங்கிணைத்து பணியாற்றுவதையும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதையும் உயர் கல்விக்கான புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதில் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

ஆளுநர் ஏற்பாஅடு செய்த துணை வேந்தர்கள் மாநாட்டில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  துணை வேந்தரை நியமிக்கு, பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநரிடம்  இருந்து  பறிக்கப்பட்டு  முதல்வரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு முறை ஆளுநரின் மூக்கு உடைக்கப்பட்டுள்ள்து.

தேர்தலில்  போட்டியிடத் த்குதி இல்லை எந்த் தீஇர்மானிக்கப்பட்ட ஜெயலலிதாவை   அன்றைய ஆளுநர் பாத்திமா பீபீ முதலமைச்ச்ராக்கினார் நீதிமன்றம் தலையிட்டு இடை நிறுத்தியதால் அவர் இராஜினாமாச் செய்தார்.

இராஜினாமா செய்யும் மன நிலையில் ஆளுரர் ரவி இல்லை. மத்திய அரசு என்ன செய்யப்போகிறது எனப்தை அறிய  இந்திய அரசியல்  எதிர்பார்ப்புடன்  இருக்கிறது.  

டில்லி வெற்றி வீழ்ந்தது லக்னோ

 லக்னோவில் நடைபெற்ற  ஐபிஎல் தொடரில்  லக்னோவை எத்ர்த்து விளையாடிய  டெல்லி 8 விக்கெற்களால் வெற்றி பெற்றது.கடந்த முறை போல, மீண்டும் நாணயச் சுழற்சியில் ' வென்ற டில்லி அணி கப்டன் அக்சர் படேல், வழக்கம் போல துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ  6 விக்கெற்களை இழந்து 156 ஓட்டங்கள் எடுத்தது. 17.5 ஓவர்களில்  2 விக்கெற்களை இழந்த டில்லி 161  ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

லக்னோ அணிக்கு மார்க்ரம், மிட்சல் மார்ஷ் ஜோடி துவக்கம் கொடுத்தது.

லக்னோ அணி 9 ஓவரில்  விக்கெற் இழப்பின்றி 82  ஓட்டங்கள் எடுத்தது.  சமீரா பந்தில் மார்க்ரம் 52, அ பூரன் 9,  அப்துல் சமத் 2 ,  மிட்சல் மார்ஷ் 45  ஓட்டங்கலில் ஆட்டமிழந்தனர்.

 20 வது ஓவரை முகேஷ் குமார் வீசினார். இதன் முதல் மூன்று பந்தில் படோனி 'ஹட்ரிக்' பவுண்டரி அடித்தார். 4வது பந்தில் படோனி 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.   அடுத்து வந்த ரிஷாப்பை, கடைசி பந்தில் 'டக்' அவுட்டானார்.

லக்னோ அணி 20 ஓவர்களில்  6 விக்கெட்டுக்கு 159  ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

மட்டும் எடுத்தது.  டில்லி சார்பில் முகேஷ் குமார்   4 விக்கெற்களை  சாய்த்தார்.

160  வெற்றி இலக்குடன் டெல்லி களம்  இறங்கியது. டில்லி அணிக்கு அபிஷேக் போரல், கருண் நாயர்   ஜோடி துவக்கம் கொடுத்தது. கருண் நாயர் 15  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.     பிஷ்னோய் பந்தை சிக்சருக்கு விரட்டிய அபிஷேக், 34 பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 51 ஓட்டங்கள் எடுத்தபோது  மார்க்ரம் சுழலில் அவுட்டானார்.

ராகுல், அபிஷேக் இணைந்து வேகமான ரன் குவிப்பை வெளிப்படுத்தியது. அக்சர் படேல், பிஷ்னோய் பந்துகளில் மாறி மாறி சிக்சர் அடிக்க, வெற்றியை வேகமாக நெருங்கியது டில்லி அணி. கடைசியில் ராகுல் சிக்சர் அடிக்க, டில்லி அணி 17.5 ஓவர்களி  2 விக்கெற்களை இழந்து 161 ஓட்டங்கள் எடுத்ததுடில்லி  மீண்டும் லக்னோவை வீழ்த்தியது. அரைசதம் அடித்த ராகுல் (57), அக்சர் படேல் (34)  ஆட்டமிழக்காமல்  இருந்தனர்.

கடந்த சீசனில் அணி உரிமையாளருடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக லக்னோ கேப்டன் ராகுல், அணியில் இருந்து வெளியேறினார். ஏலத்தில் டில்லி அணிக்கு சென்றார். விசாகப்பட்டனத்தில் இரு அணிகள் மோதிய போட்டி கடந்த மார்ச் 24ல் நடந்தது. தனிப்பட்ட காரணங்களுக்காக இதில் ராகுல் பங்கேற்கவில்லை. நேற்று முதன் முறையாக, லக்னோ அணியை எதிர்த்து ராகுல் களமிறங்கினார்.

இரண்டாவது 'ஸ்பின்னர்'

நடப்பு பிரிமியர் தொடரில் 'பவர்பிளே' ஓவருக்குள் (முதல் 6), மூன்று ஓவர்கள் பந்து வீசிய இரண்டாவது ஸ்பின்னர் ஆனார் டில்லி அணியின் அக்சர் படேல். இதற்கு முன் ஐதராபாத் அணிக்கு எதிராக தீக்சனா, இதுபோல பந்து வீசி இருந்தார்.

* இதேபோல முதல் 7 ஓவருக்குள் தனது 4 ஓவரை வீசி முடித்த இரண்டாவது ஸ்பின்னர் அக்சர் படேல். இதற்கு முன் 2015ல் ஷாபாஸ் நதீம் 4 ஓவர் வீசி இருந்தார்.

ஆறாவது அரைசதம்

லக்னோ அணி, நேற்று முதல் 6 ஓவர்களில் விக்கெற் இழப்பின்றி 51 ஓட்டங்கள் எடுத்தது. இத்தொடரில் 'பவர் பிளே' ஓவருக்குள் ஆறாவது முறையாக (9 போட்டி) இதுபோல 50 அல்லது அதற்கும் மேல்  ஓட்டங்கள்  எடுத்தது லக்னோ.

5 பந்து, 5  ஓட்டங்கள்

பிரிமியர் தொடரில் சிக்சர் மழை பொழிகிறார் நிக்கோலஸ் பூரன். ஆனால் டில்லி அணியின் மிட்சல் ஸ்டார்க்கிற்கு எதிராக தொடர்ந்து தடுமாறுகிறார். இவரது 5 பந்தில்  ஓட்டங்கள்  மட்டும் எடுத்த பூரன், மூன்று முறை அவுட்டாகியுள்ளார். தவிர 'ரி-20'ல் 6 இன்னிங்சில் 4 முறை பூரனை, ஸ்டார்க் அவுட்டாக்கியுள்ளார்.

113 இன்னிங்சிற்குப் பின்

லக்னோ அணி கப்டன் ரிஷாப் பன்ட், அறிமுக சீசனில் (2016) 2 முறை 7வது வீரராக களமிறங்கினார். அடுத்து 113 இன்னிங்சிற்குப் பின், நேற்று 7வது  வீரராக‌ வந்தார். 

 

 

Tuesday, April 22, 2025

மக்களின் போப் பிரான்ஸிஸ் காலமானார்

போப் பிரான்சிஸ் தனது 88வது வயதில் காலமானதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

ரோம் பிஷப்பாகவும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகவும் இருந்த போப்பாண்டவர், தனது முன்னோடி பெனடிக்ட் XVI ராஜினாமா செய்த பிறகு 2013 இல் போப் ஆனார் .

சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர் உடல்நலக்  குறைவால்  பெப்ரவரி ,மார்ச் மாதங்களில் மருத்துவமனையில் நீண்ட காலம் சிகிச்சை பெற்றார். 

 21 ஆம் திகதி திங்கட்கிழமை   இத்தாலிய நேரம்ப்படி காலை  7:35 மணிக்கு   போப் உயிர் பிரிந்ததாக வாத்திகானின‌ அப்போஸ்தலிக்க சேம்பர் கேமராலங்கோ கார்டினல் கெவின் ஃபாரெல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்."

  போப் அவர்கள் 'பிதாவின் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்' என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார். போப் பிரான்சிஸ் மறைந்த செய்தி உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்கர்களை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், ஆயர் பாப்லோ விர்கிலியோ கார்டினல் டேவிட், நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் போப் மறைவுக்காக துக்க மணி அடித்து, அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அழைப்பு விடுத்தார்

பல்வேறு நாடுகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலும்    போப் பிரான்சிஸ் மறைந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து தொடர்ந்து மணி ஓசை எழுப்பப்பட்டது. வழக்கமாக இல்லாத நேரத்தில் ஒலித்த இந்த மணி ஓசை பலரின் கவனத்தை ஈர்த்தது. 

 பின்னர் செய்தி இணையதளங்கள் , பிற ஆதாரங்களில் போப் பிரான்சிஸ் காலமான செய்தியை அறிந்து கொண்டனர். பலருக்கும் அதிகாரப்பூர்வ செய்தி வருவதற்கு முன்பே, தங்கள் பகுதியின் தேவாலயங்களில் ஒலித்த துக்க மணிகளின் வழியாகவே இந்த சோகச் செய்தி முதலில் தெரிய வந்தது ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது.

 டிஜிட்டல் யுகத்திலும் பாரம்பரியமான மணி ஓசை ஒரு முக்கிய அறிவிப்பு சாதனமாகவும், சமூகத்தின் துக்கத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் இருப்பதைக் காட்டியது. தேவாலய மணிகள் பொதுவாக மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்கும், குறிப்பிட்ட சபையைச் சேர்ந்த யாராவது மரணித்தாலோ, வழிபாட்டு நேரங்களுக்கும் ஒலிக்கும் வழக்கம் கொண்டது. ஆனால், ஒரு முக்கிய ஆன்மீக தலைவர் குறிப்பாக போப் போன்ற தலைவர் காலமாகும் போது ஒலிக்கும் துக்க மணி ஓசை, சமூகத்திற்கு ஒரு சோகமான செய்தியை அறிவித்து, மக்களை பிரார்த்தனைக்கு அழைக்கும் பாரம்பரிய முறையாகும். இது ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கிறது.

. போப் பிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தாலும், மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் விரும்பக் கூடிய ஒரு தலைவராக இருந்தார். அதற்கு அவருடைய எளிமையும் அனைவரையும் பரிவுடன் அவர் அணுகிய முறையுமே காரணம் ஆகும். போப் பிரான்சிஸுக்கு சிறுவயதிலிருந்தே பொது வாழ்க்கையின் மீது நாட்டம் அதிகம். எளிமையான வாழ்க்கை வாழ்வதையே அவர் விரும்பினார் . 2013 ஆம் ஆண்டு 16 வது போப் பெனெட்டிக் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையின் 266 வது திருத்தந்தையாக போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை அசிசியின் பிரான்சிஸின் நினைவாக அவருக்கு பிரான்சிஸ் என பெயர் வழங்கப்பட்டது. தென் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை என்ற பெருமை போப் பிரான்சிஸுக்கு கிடைத்தது. இவர் பதவிவகித்த காலத்தில் உலக அமைதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அனைவரும் சமம் என்ற சமூக நீதிக் கொள்கையை தீவிரமாக பின்பற்றியவர் போப் பிரான்சிஸ்.

ஆடம்பரமாக வாழ்வதற்கான பல்வேறு சலுகைகளும் வாய்ப்புகளும் இருந்தபோதும் அவற்றை எல்லாம் தவிர்த்து விட்டு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். இதனால் அனைவருக்கும் பிடித்த ஒரு தலைவராக திகழ்ந்தார். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் , அகதிகள் மற்றும் புலம்பெயர்வோர்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தவர். போர்களை முடிவுக்கு கொண்டு வந்து உலகில் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.

. போப் பதவியில் இருக்கும் ஒருவர் மரணமடையும்போது வத்திகான் interregnum எனப்படும்இடைக்காலக் காலத்திற்குள் நுழைகிறது.. போப் மரணம் முதல் புதிய போப் தேர்வாகும் வரையிலான காலகட்டத்தை interregnum எனக் குறிப்பிடுவார்கள்.

 போப் மரணத்தை வத்திகான்  நகரின் வருவாய் நிர்வாகி தான் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்வார். அவர் போப் அருகே சென்று அவரை பெயரைச் சொல்லி மூன்று முறை அழைக்க வேண்டும். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றால் போப் மரணமடைந்ததாக அறிவிக்கப்படும். இப்போது மருத்துவ நடைமுறைகள் வந்துவிட்ட போதிலும், இன்னும் இந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. முன்பு போப் நெற்றியில் சிறிய வெள்ளி சுத்தியலைத் தட்டும் நடைமுறையும் இருந்தது. ஆனால், 1963 உடன் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது.

உலகெங்கும் உள்ள தேவாலயங்களுக்கு போப்பி  மரணம் தெரிவிக்கப்படும். இதையடுத்து உலகெங்கும் உள்ள தேவாலயங்கள் துக்கத்தில் தங்கள் மணிகளை ஒலிப்பார்கள்.  வத்திகானில் போப் வாழ்ந்த இல்லம் பூட்டப்படும். அவரது ஆட்சி முடிவுக்கு வந்ததைக் குறிப்பிடும் வகையில் போப் மோதிரம் ,முத்திரை ஆகியவற்றை  அழித்துவிடுவார்கள்.

போப் இறுதி சடங்கு  அவர் உயிரிழந்து 4-6 நாட்களுக்குள் நடக்க வேண்டும். உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பொதுவாக போப் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுவார்.

266வது போப்பாண்டவரான பிரான்சிஸ், உலகளாவிய கத்தோலிக்க மக்கள்தொகையில் அதிகரிப்பையும், கார்டினல்கள் கல்லூரியின் பல்வகைப்படுத்தலையும் மேற்பார்வையிட்டார். இந்த மாற்றங்கள் அவரது வாரிசாக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதைப் பாதிக்கலாம்

போப் பிரான்சிஸ் தனது முன்னோடிகள் பலரைப் போலல்லாமல் ஒரு மரபை விட்டுச் செல்கிறார்.

தனது 12 ஆண்டுகால போப்பாண்டவர் பதவிக் காலத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய போப்பாண்டவர், பலருக்கு பெருகிய முறையில் நவீன, முற்போக்கான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய திருச்சபையின் அடையாளமாகத் திகழ்ந்தார்.

கருக்கலைப்பு முதல் ஓரினச்சேர்க்கை உரிமைகள், காலநிலை மாற்றம் மற்றும் குடியேற்றம் வரை, போப்பாண்டவர் பெரும்பாலும் அரசியல் மற்றும் பிளவுபடுத்தும் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்

பிரான்சிஸ் இறுதிவரை தனது நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டார், சர்வதேச மோதல்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் கைதிகள் குறித்து "கருத்து பரிமாற்றத்தை" அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸுடன் பகிர்ந்து கொண்டார் , அவர் இறப்பதற்கு முந்தைய நாள் வத்திக்கானுக்கு தனது கடைசி விருந்தினராக இருந்தார்.

தனது இறுதி உரையில் கூட, பிரான்சிஸ், புலம்பெயர்ந்தோர் எதிர்ப்புக் கொள்கைகளைக் கொண்ட அரசாங்கங்களை விமர்சிப்பதைக் குறிப்பிட்டார்.

மக்களின் போப் என்று சிலரால் வர்ணிக்கப்படும் போப் பிரான்சிஸ், கத்தோலிக்க நம்பிக்கையால் புறக்கணிக்கப்பட்டவர்களை வரவேற்கும் விருப்பத்தைக் காட்டினார், ஆனால் இதயத்தில் ஒரு சீர்திருத்தவாதியாக, திருச்சபைக்குள் பழமைவாதிகளிடமிருந்து பெரும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.

பாரம்பரியத்திற்கும் தாராளவாதத்திற்கும் இடையிலான மோதல் அவர் விட்டுச் சென்ற மரபிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது .

 ஆர்ஜென்ரீனாவைப் பிறப்பிடமாகக்கொண்ட  அவர் முதல் லத்தீன் அமெரிக்க போப்பாண்டவர்

2013 ஆம் ஆண்டு பொலிவியாவிற்கு விஜயம் செய்தபோது லத்தீன் அமெரிக்காவில் காலனித்துவத்தில் திருச்சபையின் பங்கிற்காகவும், 2022 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள பழங்குடி மக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் உறைவிடப் பள்ளிகளை நடத்துவதில் ஈடுபட்டதற்காகவும் அவர் மன்னிப்பு கேட்டார்.

இந்த நடவடிக்கைகள் திருச்சபையின் சில பிரிவுகளை அந்நியப்படுத்தினாலும், அவை மற்றவர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தன. பிரிட்டிஷ் கத்தோலிக்கர்களிடம் 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் , போப் பிரான்சிஸ் "நல்லதுக்கான" மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக 50% பேர் கூறியுள்ளனர், ஆனால் "மோசமான" மாற்றத்தை அவர் சமிக்ஞை செய்ததாகக் கூறிய 7% பேர் மட்டுமே..

30 வயதுக்குட்பட்ட கத்தோலிக்கர்களிடையே பிரான்சிஸ் இன்னும் உயர்ந்தவராக மதிப்பிடப்பட்டார். 

Saturday, April 19, 2025

பாரதீய ஜனதாவின் வலையில் வசமாகச் சிக்கிய அதிமுக‌


 தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.ஆட்சியைத் தக்க வைக்க ஸ்டாலின் காய் நகர்த்துகிறார். அதிமுக,பாரதீய ஜனதாக் கூட்டணி தமிழகத்தில் சந்தித்த தேர்தல்களில் படுதோல்வியடைந்தது.

அதிமுகவின் தோல்விக்கு பாரதீய ஜனதா தான் காரணம் என எடப்பாடியும் ஏனைய தலைவர்களும் கூறினார்கள். பாரதீய ஜனதாவைத் தூக்கு எறிந்த‌ அதிமுக தனி வழி சென்றது. டெல்லித் தலைமைகள் வேண்டுகோள் விடுத்தும், கூட்டணிக் கதவு திறந்திருக்கிறத் எனத் தெரிவித்தும் எடப்பாடி மனம் இரங்கவில்லை.ஒருநாள் திடுதிப்பென எடப்பாடி இரகசியமாக டெல்லிக்குச் சென்று அமித்ஷாவைச் சந்தித்ததால்  பிரிந்திருந்த கூட்டணி  மீண்டும் அரும்பத் தொடங்கியது.

தமிழ்கத்தில் பதிரிகையாளர்களைச் சந்தித்த அமித்ஷா  கூட்டணி  பற்றி பகிரங்கமாகத் தெரிவித்தார் அருகில் எடப்பாடி அமைதியாக  இருந்தார். அங்கு அமித்ஷா மேலும் தெரிவிக்கையில் ,  ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இணைந்து தான் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியமைக்கப் போகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தான் கூட்டணி இருக்கும். அமைச்சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன் கூட்டணியில் இணைந்ததற்கு அதிமுக எந்தவித கோரிக்கையும், நிபந்தனையும் விதிக்கவில்லை. மதியில் மோடி அரசமைப்பார் ’’ என்றார்.

அதிமுக நிபந்தனை விதிக்கவில்லை, தேர்தல் முடிந்த பின்னரமைச்ச்ரவை என அமித்ஷா கூறியதால்  அமைச்சரவையில் பாரதீய ஜனதா இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தக் கேள்வியை எடப்பாடியிடம்  கேடபோது அவர் கொதித்தெழுந்து விட்டார். அமைச்சரவையில் பாரதீய ஜனதாவுக்குப் பங்கு இல்லை என திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.

ஆனால், மற்றைய மாநிலங்களில்  கூட்டணிக் கட்சியை பாரதீய ஜனதா சிதறடித்த வரலாறு உள்ளது. மகாராஸ்திராவில் பலமான சிவசேனாவை பாரதீய ஜனதா முடக்கி விட்டது.     தமிழ்கத்திலும் அதிமுகவை பாரதீய ஜனதா கபளீகரம் செய்து விடும் என  விமர்சகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.பாரதீய ஜனதாவுடன் கூட்டணி  இல்லை என சத்தியம் செய்த  ஜெயக்குமார் போன்ற த்லைவர்கள்  மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கின்றனர்.

எடப்பாடியும் சில அதிமுக தலைவர்கலும் பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்தாலும் தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி பூதாகரமாகதோன்றியுள்ளது.

  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த கே.எஸ். முகமது கனி,  அதிமுவின் சிறுபான்மை பிரிவு நகரச் செயலாளர் பதவியில் இருந்தும், அதிமுகவில் இருந்து விலகுவதாகப் பரபரப்பு  தகவலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சி. விஜயபாஸ்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

 “நான் கடந்த 45 ஆண்டு காலமாக அதிமுகவில் பல பொறுப்புகளிருந்து பணியாற்றியுள்ளேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிராகப் பாசிச பாஜகவுடன் (பிஜேபி) கூட்டணி வைத்ததை அடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்.  இப்படிக்கு புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் உண்மை விசுவாசி எனத் தெரிவித்துள்ளார். இது அதிமுக   இதேவேளைஅதிமுக உடனான கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை, சில பேச்சுகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறதே தவிர, கூட்டணி பலமாகவே உள்ளது என்று பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்துள்ளது.

சென்ற தேர்தலின் போது அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டன. அதனையடுத்து அதிமுக முன்னாள் தலைவர்களை அண்ணாமலை தரக்குறைவாக பேசியதனால், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடம் கிடையாது என்று திட்டவட்டமாக அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து வந்தார். அதுமட்டுமின்றி அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்து வந்தார்.

இதனையடுத்து, பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, தமிழக பாஜக தலைவராக நயினார் நகேந்திரன் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகியது. இந்தநிலையில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியதாக செய்தியாளர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி தனித்து தான் ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், நெல்லையில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் நயினார் நாகேந்திரன் என்று போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிமுக பாஜக இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இது அதிமுக ,பாஜக தரப்பில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்துள்ளது.

திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே என்று வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பேசுபொருளாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பாஜகவை சேர்ந்த செட்டிக்குளம் ஊராட்சி தலைவர் அம்மா எஸ்.செல்வகுமார் என்பவர் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று ஒட்டியுள்ள சுவரொட்டியில், நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே ‘வருங்கால முதல்வரே என்ற வாசகங்களுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

சட்டப் பேரவை தேர்தலுக்கு அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளதால் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற கருத்து பரவிய நிலையில், கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா முடிவு செய்வார் என்று நயினார்நாகேந்திரன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில்தான் திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரேஎன்று வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது குறித்து இணையதளங்களில் அதிமுக, பாஜக மற்றும் பிறகட்சிகளை சேர்ந்தவர்களும் விமர்சன கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். ‘மாடு ரெண்டு, பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் என்று நெட்டிசன்கள் கிண்டலும் செய்து வருகிறார்கள்.திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே என்று வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பேசுபொருளாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரமணி

23/4/25 

ஐபிஎல் 2025 சாதனைகளும் வேதனைகளும்

                சஞ்சு சாம்சனின் துரதிஷ்டவசமான சாதனை 

டெல்லி அணி நிர்ணயித்த 189 ஓட்ட  இலக்கினை துரத்திய ராஜஸ்தான் அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 31 ஓட்டங்கள் எடுத்து அதிரடி காட்டியிருந்த வேளையில் ரிட்டயர்டு ஹர்ட் மூலம் மைதானத்திலிருந்து வெளியேறிந்தார். பின்னர் அவர் மீண்டும் பேட்டிங் செய்யவே வரவில்லை.

 போட்டியின் ஆறாவது ஓவரை விப்ராஜ் நிகம் வீசும்போது அவருக்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக கடுமையான வலி ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட அவர் தொடர்ச்சியாக விளையாட  முடியாமல் பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். 

 18 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் எந்தவொரு ராஜஸ்தான் வீரரும் ரிட்டயர்டு ஹர்ட்டாகி வெளியேறியதில்லை. எனவே ராஜஸ்தான் அணி சார்பாக ரிட்டயர்டு ஹர்ட் மூலம் வெளியேறிய முதல் வீரர் என்கிற சாதனை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் கப்டனாக ரிட்டயர்டு ஹர்ட் மூலம் வெளியேறும் இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக க்ருனால் பாண்டியா கப்டனாக இருந்தபோது ரிட்டயர்டு ஹர்ட்டாகி வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

                  சூப்பர் ஓவரில் டெல்லி  சாதனை


டெல்லி அணி 188  ஓட்டங்களைக்  குவிக்க இரண்டாவதாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சரியாக 188  ஓட்டங்கள் எடுத்தது.   இதன் காரணமாக போட்டி டை-யில் முடிவடைந்ததால் சூப்பர் ஓவர்வரை சென்றது. அப்படி நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 11  ஓட்டங்கள் எடுத்தது.

 டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 பந்துகளில் 13  ஓட்டங்கள் குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் டெல்லி அணி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை சூப்பர் ஓவர் வரை சென்று அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை டெல்லி அணி பின்னுக்கு தள்ளியுள்ளது.  பஞ்சாப் அணி இதுவரை நான்கு போட்டிகளில் சூப்பர் ஓவருக்கு சென்று அதில் மூன்று வெற்றிகளை பெற்றிருந்தது.   டெல்லி அணி தங்களது ஐந்தாவது சூப்பர் ஓவர் போட்டியில் விளையாடி நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளதது. இதன் காரணமாக சூப்பர் ஓவருக்கு சென்று அதிக வெற்றிகளை குவித்த அணியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலிடத்திற்கு சென்றுள்ளது.

               கப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்திய அசத்தல் சாதனை

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ்   இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 6 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியல் நான்காவது இடத்தில் மிக வலுவான நிலையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.   அதோடு ஏப்ரல் 15‍ஆம்திக‌தி சண்டிகார் நகரில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி 112  ஓட்டங்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தி ஓட்டங்களுக்கு சுருட்டி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றிருந்தது.   பஞ்சாப் அணி பெற்ற சிறப்பான வெற்றியின் மூலம் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கப்டனாக ரோகித் சர்மா, டோனி ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது கப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு மிகச் சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பஞ்சாப் அணியின் கப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் பெற்ற இந்த கொல்கத்தா அணிக்கெதிரான வெற்றியோடு சேர்த்து இதுவரை 76 ஐபிஎல் போட்டிகளில் 44-வது வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் 76 போட்டிகளின் முடிவில் அதிக வெற்றிகளை பெற்ற கப்டன் என்ற வரிசையில் அவர் மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளார்.

இந்த வரிசையில் ரோகித் சர்மா 46 வெற்றிகளுடனும், டோனி 45 வெற்றிகளுடனும் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு கீழ் கம்பீர் (43 வெற்றிகள்), விராட் கோலி (38 வெற்றிகள்), டேவிட் வார்னர் (37 வெற்றிகள் ) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர் 

Thursday, April 17, 2025

ஹைதராபாத்தை வென்றது மும்பை


 

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பை, ஹைதராபாத் அணிகள் மோதினநாணயச் சுழற்சியில்  வென்ற மும்பை அணி கப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங் தேர்வு செய்தார். முன்னாள் கப்டன் ரோகித் சர்மா, களமிறங்கிய 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை.

 மும்பை அணிக்காக 7 ஆண்டு (2018-24) விளையாடிய இஷான் கிஷான், ஐதராபாத  அணிக்காக விளையாடினார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் 5 விக்கெற்களை இழந்து 162 ஓட்டங்கள் எடுத்தது.  18.1 ஓவரில் 6 விக்கெற்களை இழந்த மும்பை 166  ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.

 அபிஷேக் 40,ஹெட் 28,  நிதிஷ் குமார்ர் 19, கிளாசன் 37 , அனிகேத் 18, கம்மின்ஸ் 8 ஓட்டங்கள் எடுத்தனர்.  

163 வெற்றி இலக்குடன்  மும்பை களம்  இறங்கியது. ரிக்கிள்டனுடன், 'இம்பேக்ட்' வீரராக வந்த ரோகித் சர்மா இணைந்தார். ரோகித் 26 ,   ரிக்கிள்டன் 31 ,  சூர்யகுமார்26,, வில் ஜாக்ஸ் 36,  பாண்ட்யா 21  ஓட்டங்கள் எடுத்தனர்.  மும்பை அணி 18.1 ஓவரில்  6 விக்கெற்களை இழந்து 166 ஒடங்கள் எடுத்தது.  திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 21  ஓட்டங்கள் எடுத்தார்.

மும்பை அணி கப்டன் ஹர்திக் பாண்ட்யா. 8வது ஓவரின் 2வது பந்தை வீசினார். அப்போது இடது கணுக்காலில் வலி ஏற்பட, சிக்கல் ஏற்பட்டது. பிசியோதெரபிஸ்ட் சிகிச்சைக்குப் பின், மீண்டும் பந்துவீசிய இவர், முதல் பந்தில் அபிஷேக்கை அவுட்டாக்கி அசத்தினார்.

  இதே போல அபிஷேக் அடித்த பந்தை (2.5 ஓவர்) பிடிக்க முயன்ற கரண் சர்மா, விரலில் காயமடைய, உடனே வெளியேறினார். முன்னணி பவுலரான இவர், பந்துவீச வரவில்லை.

பிரிமியர் தொடரின் முதல் போட்டியில் இஷான் கிஷான் (ஐதராபாத்) 106 ஓட்டங்கள்  விளாசினார். இதன் பின் தொடர்ந்து ஏமாற்றிய இவர், 0, 2, 2, 17, 9 என அவுட்டானார். இந்தப் போடியிலும்  2 ஓடங்களுடன் வெளியேறினார்.கடையாக விளையாடிய‌ 6 போட்டியில் 32  ஓட்டங்கள்  மட்டும் எடுத்துள்ளார்.

பிரிமியர் அரங்கில் குறைந்த பந்தில் 1000  ஓட்டங்கள் என்ற இலக்கை எட்டிய வீரர்களில் டிராவிஸ் ஹெட் (575 பந்து) இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஆன்ட்ரி ரசல் (545) உள்ளார். கிளாசன் (594), சேவக் (604), மேக்ஸ்வெல் (610), கெய்ல் (615), யூசுப் பதான் (617), சுனில் நரைன் (617) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்