Thursday, April 10, 2025

சந்திக்கு வந்த குடும்பச் சண்டை மகனின் பதவியை பறித்த தந்தை


 

 அரசியல் என்றாலே அங்கே வரிசுக்கு தனி மரியாதை இருக்கும் வரிசு அரச்யல் என விமர்சகர்கள்   பெரிதாக கூப்பாடு போட்டாலும். வரிசு அரசியலை அடுத்த கட்ட தலைவர்களும், தொண்டர்களும் சிரமேல் தூக்கிக் கொண்டாடுகிறார்கள்.

வாரிசுக்காக  இரண்டாம் கட்டத் தலைவர்கள் தூக்கி எறியப்பட்ட சம்பவங்களும், நின்று பிடிக்க முடியாமல்  கட்சியை விட்டே  ஓடிஒ போன சம்பவங்களும்  அரசியல் அரங்கில்  நிறையவே உள்ளன. மகனிடம்  இருந்த தலமைப் பதவியைப் பரித்து  தன்னை  மீண்டும் தலைவராக்கிய அதிர்ச்சியான  அரசியல் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணியிடம்  இருந்த தலைமைப் பதவிடை  தகப்பனான‌ டாக்டர் ராமதாஸ்  பிடுங்கி எடுத்துள்ளார்.

பாமக நிறுவனரான நானே இனி கட்சித் தலைவர் பதவியையும் வகிக்கப் போகிறேன். கட்சியின் செயல் தலைவராக டாக்டர் அன்புமணி செயல்படுவார். கெளரவத் தலைவராக ஜி.கே.மணி தொடர்கிறார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது பெரும்  இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒரு கட்சிக்கு மூன்று தலைவர்களா என்ற கேள்வியஒயும் எழுப்பி உள்ளது.

பாமக தலைவராக கடந்த 2022ம் ஆண்டு வரை ஜி.கே.மணி செயல்பட்டு வந்தார். டாக்டர் ராமதாஸும், ஜி.கே.மணியும் இணைந்து பல கூட்டணிகளை உருவாக்கியுள்ளனர். சிறப்பாகவும் செயல்பட்டுள்ளனர். இந்த நிலையில் 2022ம் ஆண்டு பாமக தலைவராக, அதுவரை இளைஞர் அணித் தலைவராக செயல்பட்டு வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். கெளரவத் தலைவராக ஜி.கே.மணி மாற்றப்பட்டார்.

 சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நடந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தின்போது இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் ஆவார். இதற்கு அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். இருவருக்கும் இடையே கடும் வாதமும் மூண்டது. அப்போது இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்க விரும்பாதவர்கள், யாராக இருந்தாலும் வெளியேறி விடுங்கள் என்று கோபமாக கூறினார்.

தகப்பனின்  கோபத்தால் ஒந்தளித்த அன்புமணி தனது அலுவலகம் பனையூரில் இருப்பதாகவும் தன்னை விரும்புவர்கள் அங்கு வந்து சந்திக்கலாம் எனவும் தெரிவித்து விட்டு  வெளியேறிபனார்.   அரசியல் காரணமாக தகப்பனும் மகனும்  பிரிந்திருப்பதை விரும்பாத கட்சியின் மூத்த தலைவர்கள்  இருஅவ்ரையும் சமாதானமாக்கினார்கள்.தகப்பனின் தைலாபுர வீட்டுக்கு அன்புமணி சென்றார். இறுக்கமான முகத்துடன் அன்புமணியை ஏறெடுத்தும் பார்க்காமல் ராமதாஸ். இருந்தார்.  பிரச்சனை முற்றுப் பெற்ரு விட்டதாக அனைவரும் நினைத்தனர். இப்போ அது பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மகனிடம் இருந்த தலைமைப் பதவியைப் பரித்ததற்கு  பல காரணங்கள்  உண்டு அதனைத் தெரிவிப்பேன் என ராமதாஸ் தெரிவித்தார்.

 அன்புமணியின் தலைமையில் கட்சி  பல தோல்விகளைச் சந்தித்தது. வாக்கௌ வங்கி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. பாரதீய ஜனதாவுடன் மிக நெருக்கமாக இருக்கும் அன்புமணி பாரதீய ஜனதாக் கூட்டணியில் தொடர விரும்புகிறார். அரசியலில் மிகவும் அனுபவம் உள்ள ராமதாஸின் பார்வை வேறு விதமாக  உள்ளது. அதிமுகவுடன்  கூட்டணி சேர ராமதாஸ் ஆசைப்படுகிறார். அதிமுகவின் அனுரசணையில் எம்பியாக இருக்கிறார் அன்புமணி. தனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கனவுகண்டு காலத்தைக் க்டத்துகிறார்.  நாடா ளுமன்றத்துக்கு  அன்புமணி செல்வதில்லை என்ற விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழகத்துக்காக நாடாளுமன்றத்தில்  தமிழ் அம்பிக்க குரல் கொடுக்கும்  போது அங்கு  அன்புமணி  தென்படுவதில்லை. மக்களுக்காகச் சேவை செய்யச் சென்ற அவர் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

 வன்னியர் சமூகத்துக்காக‌ வன்னியர் சங்கத்தில் தீவிரமாக களமாடி வந்தவர் டாக்டர் ராமதாஸ். அவரது அயராத உழைப்பு, கடுமையான முயற்சிகள், கிராமம் கிராமமாக சென்று அவர் மேற்கொண்ட திண்ணைப் பிரச்சாரத்தால் அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அளப்பறியது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கே கடும் சவாலாக திகழ்ந்தவர் டாக்டர் ராமதாஸ்.

பின்னாளில், பாட்டாளி மக்கள் கட்சி உருவானது. வட மாவட்டங்களில் மிகப்பெரிய சக்தியாக பாமக ஒரு காலத்தில் திகழ்ந்தது. இப்போதும் வட மாவட்ட முக்கிய அரசியல் சக்தியாக பாமக இருந்தாலும் கூட முக்கியமான வெற்றிகளை பெற அது தவறி வருகிறது. இதற்கு காரணம் பாமகவின் செயல்பாடுகளில் காணப்படும் ஒரு விதமான தொய்வு. பாமகவின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் பல்வேறு தலைவர்களை தனது கட்சியின் தலைமைப் பொறுப்பில் ஈடுபடுத்தி செயல்பட வைத்தார்

 கருணாநிதியும், ஜெயலலிதாவும் ராமதாஸுடன் முதலில் பேசி   தொகுதிகளை அறிவித்த பின்னரே எஆனிய கட்சிகளுடன்  பேச்சு வார்த்தி நடத்துவார்கள்.  அந்த நிலை இப்போது  மாரிவிட்டது. தொடர் தோல்விகள் தொண்டர்களிடையே சலிப்பை ஏறப்ப‌டுத்தியுள்ளது. ஜி.கே.மணி காலம் வரை பாமகவின் செயல்பாடுகள் சற்று சிறப்பாக இருந்தது என்று சொல்ல வேண்டும். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு பாமகவின் புதிய தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். அன்புமணியின் வரவுக்கு பின்னர் பாமகவின் செயல்பாடுகள் அதன் போக்கில் பல மாற்றங்கள் காணமுடிந்தது. ஒரு ஜாதி கட்சியாக மட்டுமே அறியப்பட்ட பாமகவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தீவிரம் காட்டினார். அதற்கு ஏற்ப அவர் செயல்பாடுகளில் முன்னெடுத்தார். வெறும் ஜாதி கட்சியாக மட்டும் இருக்கக் கூடாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. அதற்கு காரணம் அவர் அரசியல் செய்தது டெல்லியில், டாக்டர் ராமதாஸின் அரசியல் தமிழ்நாட்டில். எனவே அவரவர் சூழலுக்கு ஏற்ற அரசியலை அவர்கள் செய்ய முனைந்தனர். இதன் காரணமாக இருவருக்குள்ளும் பல்வேறு முட்டல் மோதல்கள் வெடித்தன.

கூட்டணி கட்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சந்திக்க உள்ள நிலையில், பாமகவில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி கொண்டிருக்கிறது.. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, தன்னை தானே தலைவராக ராமதாஸ் அறிவித்துக் கொண்டுள்ளார்.. இது பாமக தொண்டர்களையும் சேர்த்து குழப்பி வருகிறது.. டாக்டர் ராமதாஸின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? அமித்ஷா வரும்போது இப்படியொரு முடிவை வெளிப்படுத்தும் நோக்கம் என்ன? என்ற கேள்விடும் எழுந்துள்ளது.

கடந்த முறை அதிமுகவுடன் வலிமையாக கூட்டணி வைத்தும்கூட, பாமகவால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. அப்படியிருக்கும்போது, எம்பி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எப்படி வெற்றி பெற முடியும்? என்பதே இந்த அதிருப்தியாளர்களின் சந்தேகமாக எழுந்தது. சாதிவாரி கணக்கெடுப்பை பாமக வலியுறுத்தியபோது, அதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், பாஜக அமைதி காப்பது ஏன்? பாஜகவின் நிலைப்பாடு தெரியாதபட்சத்தில், எப்படி அந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது எனத் தொண்டர்கள்  கேள்வி எழுப்பி உள்ளனர்.

 அதாவது கட்சி சார்ந்த அனைத்து விஷயங்களையும் அன்புமணியும், செளமியா அன்புமணியும் சேர்ந்து எடுக்கிறார்களாம்.. இது தொடர்பாக தன்னை ஆலோசிப்பதில்லை என்றும், இதனால் தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் ராமதாஸ் உணர்ந்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை முக்கிய கட்சியான அதிமுக பலவீனப்பட்டு நிற்கிறது. இந்த நிலையில் பாமகவும் பலவீனப்பட்டால் அல்லது பிளவுபட்டால் அது அக்கட்சிக்கு நல்லதல்ல என்று தொண்டர்கள் கவலைப்படுகிறார்கள். அன்புமணியும், ராமதாஸும் வெளிப்படையாக பேசி தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் பிளவு வரைக்கும் போய் விட்டால் பல வருடங்களாக கடுமையாக உழைத்து செங்கல் செங்கல்லாக பார்த்துப் பார்த்து உருவாக்கிய பாமகவின் கோட்டை தகர்வதை யாராலும் தடுக்க

    

No comments: