தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.ஆட்சியைத் தக்க வைக்க ஸ்டாலின் காய் நகர்த்துகிறார். அதிமுக,பாரதீய ஜனதாக் கூட்டணி தமிழகத்தில் சந்தித்த தேர்தல்களில் படுதோல்வியடைந்தது.
அதிமுகவின்
தோல்விக்கு பாரதீய ஜனதா தான் காரணம் என எடப்பாடியும் ஏனைய தலைவர்களும் கூறினார்கள்.
பாரதீய ஜனதாவைத் தூக்கு எறிந்த அதிமுக தனி வழி சென்றது. டெல்லித் தலைமைகள் வேண்டுகோள்
விடுத்தும், கூட்டணிக் கதவு திறந்திருக்கிறத் எனத் தெரிவித்தும் எடப்பாடி மனம் இரங்கவில்லை.ஒருநாள்
திடுதிப்பென எடப்பாடி இரகசியமாக டெல்லிக்குச் சென்று அமித்ஷாவைச் சந்தித்ததால் பிரிந்திருந்த கூட்டணி மீண்டும் அரும்பத் தொடங்கியது.
தமிழ்கத்தில்
பதிரிகையாளர்களைச் சந்தித்த அமித்ஷா கூட்டணி பற்றி பகிரங்கமாகத் தெரிவித்தார் அருகில் எடப்பாடி
அமைதியாக இருந்தார். அங்கு அமித்ஷா மேலும்
தெரிவிக்கையில் , ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில்
பாஜக-அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும்
என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பாஜகவும், அதிமுகவும் இணைந்து தான் தமிழகத்தில்
கூட்டணி ஆட்சியமைக்கப் போகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் தான்
கூட்டணி இருக்கும். அமைச்சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யப்படும். எங்களுடன்
கூட்டணியில் இணைந்ததற்கு அதிமுக எந்தவித கோரிக்கையும், நிபந்தனையும் விதிக்கவில்லை.
மதியில் மோடி அரசமைப்பார் ’’ என்றார்.
அதிமுக
நிபந்தனை விதிக்கவில்லை, தேர்தல் முடிந்த பின்னரமைச்ச்ரவை என அமித்ஷா கூறியதால் அமைச்சரவையில் பாரதீய ஜனதா இருக்குமா என்ற சந்தேகம்
எழுந்துள்ளது. இந்தக் கேள்வியை எடப்பாடியிடம்
கேடபோது அவர் கொதித்தெழுந்து விட்டார். அமைச்சரவையில் பாரதீய ஜனதாவுக்குப் பங்கு
இல்லை என திட்ட வட்டமாகத் தெரிவித்தார்.
ஆனால்,
மற்றைய மாநிலங்களில் கூட்டணிக் கட்சியை பாரதீய
ஜனதா சிதறடித்த வரலாறு உள்ளது. மகாராஸ்திராவில் பலமான சிவசேனாவை பாரதீய ஜனதா முடக்கி
விட்டது. தமிழ்கத்திலும் அதிமுகவை பாரதீய
ஜனதா கபளீகரம் செய்து விடும் என விமர்சகர்கள்
அச்சம் தெரிவிக்கின்றனர்.பாரதீய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என சத்தியம் செய்த ஜெயக்குமார் போன்ற த்லைவர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கின்றனர்.
எடப்பாடியும்
சில அதிமுக தலைவர்கலும் பாரதீய ஜனதாவுடன் கைகோர்த்தாலும் தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா
என்ற கேள்வி பூதாகரமாகதோன்றியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த
கே.எஸ். முகமது கனி, அதிமுவின் சிறுபான்மை
பிரிவு நகரச் செயலாளர் பதவியில் இருந்தும், அதிமுகவில் இருந்து விலகுவதாகப் பரபரப்பு தகவலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அக்கட்சியின்
புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சி. விஜயபாஸ்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
“நான் கடந்த 45 ஆண்டு காலமாக அதிமுகவில் பல பொறுப்புகளிருந்து
பணியாற்றியுள்ளேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிராகப் பாசிச பாஜகவுடன் (பிஜேபி) கூட்டணி
வைத்ததை அடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்து பதவிகளிலிருந்தும்
ராஜினாமா செய்கிறேன். இப்படிக்கு புரட்சித்
தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் உண்மை விசுவாசி” எனத் தெரிவித்துள்ளார்.
இது அதிமுக இதேவேளைஅதிமுக உடனான கூட்டணியில்
எந்த விரிசலும் இல்லை, சில பேச்சுகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறதே தவிர, கூட்டணி
பலமாகவே உள்ளது என்று பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்துள்ளது.
சென்ற
தேர்தலின் போது அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டன. அதனையடுத்து
அதிமுக முன்னாள் தலைவர்களை அண்ணாமலை தரக்குறைவாக பேசியதனால், இனிமேல் பாஜகவுடன் கூட்டணி
என்ற பேச்சிற்கே இடம் கிடையாது என்று திட்டவட்டமாக அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி
பழனிச்சாமி தெரிவித்து வந்தார். அதுமட்டுமின்றி அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி கிடையாது
என்றும் தெரிவித்து வந்தார்.
இதனையடுத்து,
பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, தமிழக பாஜக தலைவராக நயினார் நகேந்திரன்
பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகியது.
இந்தநிலையில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி
தான் நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியதாக செய்தியாளர்கள் அதிமுக பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி
தனித்து தான் ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில்,
நெல்லையில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் நயினார் நாகேந்திரன் என்று போஸ்டர் ஓட்டப்பட்டிருந்தது
அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிமுக பாஜக இடையே விரிசல்
ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இது அதிமுக ,பாஜக தரப்பில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதற்கு பாஜக தேசிய தலைமை விளக்கம் அளித்துள்ளது.
திருநெல்வேலியில்
பல்வேறு இடங்களில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே’ என்று வாழ்த்தி சுவரொட்டிகள்
ஒட்டப்பட்டிருப்பது பேசுபொருளாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவை சேர்ந்த செட்டிக்குளம் ஊராட்சி தலைவர் அம்மா
எஸ்.செல்வகுமார் என்பவர் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று ஒட்டியுள்ள சுவரொட்டியில்,
நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே’ என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். பாஜக
மாநில தலைவராக நியமிக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே ‘வருங்கால முதல்வரே’ என்ற வாசகங்களுடன் சுவரொட்டி
ஒட்டப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
சட்டப்
பேரவை தேர்தலுக்கு அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளதால் கூட்டணி ஆட்சிதான்
அமையும் என்ற கருத்து பரவிய நிலையில், கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச்
செயலர் பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பது குறித்து
மத்திய அமைச்சர் அமித்ஷா முடிவு செய்வார் என்று நயினார்நாகேந்திரன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில்தான் திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே’என்று வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது குறித்து இணையதளங்களில் அதிமுக, பாஜக மற்றும் பிறகட்சிகளை சேர்ந்தவர்களும் விமர்சன கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். ‘மாடு ரெண்டு, பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்’ என்று நெட்டிசன்கள் கிண்டலும் செய்து வருகிறார்கள்.திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே’ என்று வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பேசுபொருளாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரமணி
23/4/25
No comments:
Post a Comment