Wednesday, April 23, 2025

அத்து மீறும் ஆளுநர் ரவி அடக்கும் முதல்வர் ஸ்டாலின்


 

  தமிழக அரசுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் ஆளுந்ருக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம் போட்டுள்ளது. இந்திய  அரசியலமைப்பில் உள்ள சட்டத்துக்குப் புறம்பாக ஆளுநர் செயற்படுவதால் தமிழக அரசு சில திட்டங்களை அமுல் படுத்த முடியாத நிலை உள்ளது.

தமிழக அர்சு நிறைவேற்ரிய தீர்மானங்களை கிடப்பில் போட்ட ஆளுநர் ரவி திமிராகப் பதிலளித்தார்.

பொறுத்துப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் உச்ச நீதி  மன்றத்தின் கதவைத்தட்டினார்.ஆளுநரின் பணி இதுதான் இத்ற்கு மேல் போகக்கூடாது என    வரலாற்றுச் சிறபு மிக்க தீர்ப்பை உச்ச நீதிம் ம‌ன்றம் வழங்கியது.

பல்வேறு பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டமசோதாக்கள் உள்ளிட்ட 10 மசோதாக்களை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் வசம் இருந்த பல முக்கிய அதிகாரங்கள் தற்போது தமிழ்நாடு அரசு வசம் வந்துள்ளது. அதேசமயம், தமிழ் பல்கலைக்கழகம் தவிர்த்து பிற பல்கலைக்கழகங்களின் வேந்தராக தொடர்ந்து ஆளுநர் ஆர். என். ரவிதான் நீடித்து வருகிறார்.

இந்த்த்தீர்ப்பு  இந்திய அரசியலில்  பேசு பொருளாகி உள்ளது. பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. டெல்லியும் ஆளுநருக்கு    எதிராக நீதிமன்றத்துக்குச் சென்றது. 

உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டியிருந்தார்.

இது வரை காலமும் ஆளுநரின் தலைமையிலேயா துணை வேந்தர்கள்  மாநாடு  நடைபெற்றது. அப்போது ஆளுநர் பேசா மடந்தையாக  இருந்தார். தமிழ்கத்தில் ஏதாவது பிரச்சனை என்றால்  டெல்லிக்கு ஓடுவது ஆளுந‌ர் ரவியின் முக்கிய செயற்பாடு. இப்போதும்  டெல்லிக்குப் பறந்தார். அங்கு அவருக்கு  வரவேற்பளிக்கபப்டவில்லை.

பிரதமர் மோடியையோ  அல்லது அமைச்சர் அமித்ஷாவையோ ரவியால் சந்திக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக்கடுமையாக விமர்சித்தவர்  துணை ஜனதிபதி ஜெகதீப் தங்கர். ஆளுநர் ரவி அவரைச் சந்தித்தபின்  உற்சாகமானார்.

டெல்லியில் இருந்து தமிழகத்துக்குச் சென்ற ஆளுரந் அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு துணை வேந்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக க் கட்சித் தலைவர்கள் அனைவரும் கடுமையாகக் கண்டித்தனர்.

 ஊட்டியில்  இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இது சலசலப்பையும், திமுக கூட்டணியினரின் எதிர்ப்பையும் பெற்றுள்ளது.  இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது வரை காலமும் ஆளுநரின் பெயரிலேயே அறிவிப்பு  வெளியாகியது. சட்ட‌ச் சிக்கல் காரணமாக  ஆளுநர் மாளிகை அறிவிப்பை வெளியிட்டது.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் - நிறுவனங்களின் துணை வேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப்ரல் 25 மற்றும் 26 தேதிகளில் ஆளுநர் மாளிகை உதகமண்டலத்தில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து ஏப்ரல் 25 அன்று துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தமிழ்நாடு மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் மாநாட்டுக்கு தலைமை தாங்க உள்ளார்.

துணைவேந்தர்கள் மாநாட்டின் நோக்கம் தேசிய கல்விக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்வி சார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை, ஆராய்ச்சி சிறப்பம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் திறன் வளர்ச்சி, மாற்று திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் தொழில் குறித்த விரிவான விவாதங்கள் மற்றும் கலந்தாய்வு அமர்வுகள் இம்மாநாட்டில் நடத்தப்பட உள்ளன.

கல்வித்துறை, அரசு மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் மேற்கண்ட தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள். இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய்குமார் சூத் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநில மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவனங்களின் துணைவேந்தர்களை ஒருங்கிணைத்து பணியாற்றுவதையும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதையும் உயர் கல்விக்கான புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதில் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

ஆளுநர் ஏற்பாஅடு செய்த துணை வேந்தர்கள் மாநாட்டில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  துணை வேந்தரை நியமிக்கு, பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநரிடம்  இருந்து  பறிக்கப்பட்டு  முதல்வரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு முறை ஆளுநரின் மூக்கு உடைக்கப்பட்டுள்ள்து.

தேர்தலில்  போட்டியிடத் த்குதி இல்லை எந்த் தீஇர்மானிக்கப்பட்ட ஜெயலலிதாவை   அன்றைய ஆளுநர் பாத்திமா பீபீ முதலமைச்ச்ராக்கினார் நீதிமன்றம் தலையிட்டு இடை நிறுத்தியதால் அவர் இராஜினாமாச் செய்தார்.

இராஜினாமா செய்யும் மன நிலையில் ஆளுரர் ரவி இல்லை. மத்திய அரசு என்ன செய்யப்போகிறது எனப்தை அறிய  இந்திய அரசியல்  எதிர்பார்ப்புடன்  இருக்கிறது.  

No comments: