சஞ்சு சாம்சனின் துரதிஷ்டவசமான சாதனை
டெல்லி
அணி நிர்ணயித்த 189 ஓட்ட இலக்கினை துரத்திய
ராஜஸ்தான் அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கி விளையாடிய சஞ்சு சாம்சன் 19 பந்துகளில்
இரண்டு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 31 ஓட்டங்கள் எடுத்து அதிரடி காட்டியிருந்த
வேளையில் ரிட்டயர்டு ஹர்ட் மூலம் மைதானத்திலிருந்து வெளியேறிந்தார். பின்னர் அவர் மீண்டும்
பேட்டிங் செய்யவே வரவில்லை.
போட்டியின் ஆறாவது ஓவரை விப்ராஜ் நிகம் வீசும்போது
அவருக்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக கடுமையான வலி ஏற்பட்டது.
இதனால் அவதிப்பட்ட அவர் தொடர்ச்சியாக விளையாட
முடியாமல் பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
18 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் எந்தவொரு ராஜஸ்தான் வீரரும் ரிட்டயர்டு ஹர்ட்டாகி வெளியேறியதில்லை. எனவே ராஜஸ்தான் அணி சார்பாக ரிட்டயர்டு ஹர்ட் மூலம் வெளியேறிய முதல் வீரர் என்கிற சாதனை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் கப்டனாக ரிட்டயர்டு ஹர்ட் மூலம் வெளியேறும் இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக க்ருனால் பாண்டியா கப்டனாக இருந்தபோது ரிட்டயர்டு ஹர்ட்டாகி வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சூப்பர்
ஓவரில் டெல்லி சாதனை
டெல்லி
அணி 188 ஓட்டங்களைக் குவிக்க இரண்டாவதாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ்
அணியும் சரியாக 188 ஓட்டங்கள் எடுத்தது. இதன் காரணமாக போட்டி டை-யில் முடிவடைந்ததால் சூப்பர்
ஓவர்வரை சென்றது. அப்படி நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ்
அணி 4 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 11
ஓட்டங்கள் எடுத்தது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 பந்துகளில் 13 ஓட்டங்கள் குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் டெல்லி அணி மாபெரும் சாதனை ஒன்றினை
நிகழ்த்தியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை சூப்பர் ஓவர் வரை சென்று அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணியாக முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை டெல்லி அணி பின்னுக்கு தள்ளியுள்ளது. பஞ்சாப் அணி இதுவரை நான்கு போட்டிகளில் சூப்பர் ஓவருக்கு சென்று அதில் மூன்று வெற்றிகளை பெற்றிருந்தது. டெல்லி அணி தங்களது ஐந்தாவது சூப்பர் ஓவர் போட்டியில் விளையாடி நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளதது. இதன் காரணமாக சூப்பர் ஓவருக்கு சென்று அதிக வெற்றிகளை குவித்த அணியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலிடத்திற்கு சென்றுள்ளது.
கப்டனாக
ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்திய அசத்தல் சாதனை
ஷ்ரேயாஸ்
ஐயர் தலைமையில் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ்
இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 6 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்று புள்ளி
பட்டியல் நான்காவது இடத்தில் மிக வலுவான நிலையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதோடு ஏப்ரல் 15ஆம்திகதி சண்டிகார் நகரில் நடைபெற்ற
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப்
அணி 112 ஓட்டங்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தி
ஓட்டங்களுக்கு சுருட்டி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றிருந்தது. பஞ்சாப் அணி பெற்ற சிறப்பான வெற்றியின் மூலம் தற்போது
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கப்டனாக ரோகித் சர்மா, டோனி ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது
கப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு மிகச் சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பஞ்சாப்
அணியின் கப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் பெற்ற இந்த கொல்கத்தா அணிக்கெதிரான வெற்றியோடு சேர்த்து
இதுவரை 76 ஐபிஎல் போட்டிகளில் 44-வது வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல்
வரலாற்றில் முதல் 76 போட்டிகளின் முடிவில் அதிக வெற்றிகளை பெற்ற கப்டன் என்ற வரிசையில்
அவர் மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளார்.
இந்த வரிசையில் ரோகித் சர்மா 46 வெற்றிகளுடனும், டோனி 45 வெற்றிகளுடனும் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு கீழ் கம்பீர் (43 வெற்றிகள்), விராட் கோலி (38 வெற்றிகள்), டேவிட் வார்னர் (37 வெற்றிகள் ) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்
No comments:
Post a Comment