
அர்ஜுனவுக்குப் பின்னர் இலங்கைஅணியை வழி நடத்தி மிக உச்சத்துக்குஅழைத்துச் சென்ற அணித் தலைவர்மஹேல ஜயவர்த்தன திடீரென தனதுதலைமைப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.பல சாதனைகளையும் வெற்றிகளையும்பெற்ற மஹேல தலைமையிலான அணிஅண்மைக் காலத்தில் மிகவும்மோசமாகவிளையாடியது.அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற பலம்வாய்ந்த அணிகளைப் புரட்டி எடுத்தஇலங்கை அணி, சிம்பாப்வே, பங்களாதேஷ் ஆகியவற்றிடம் அடிவாங்கும் வகையில் மோசமாகச் செயற்பட்டது. அண்மையில்

பாகிஸ்தானுடன் நடந்த ஒரு நாள் தொடரில் தட்டுத் தடுமாறி கிண்ணத்தைப்பெற்றது.
2004ஆம் ஆண்டு ஒருநாள் அணிக்கும்2006ஆம் ஆண்டின் டெஸ்ட் அணிக்கும் தலைவரானார் மஹேல. 2007ஆம் ஆண்டுஉலகக் கிண்ண இறுதிப் போட்டிவரைஇலங்கை அணியை வழி நடத்தினார்.2008ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத்தைஇலங்கைக்கு பெற்றுக் கொடுத்தார்.மஹேல தலைமையிலான இலங்கைஅணி 94 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 54 வெற்றிகளையும் 35 தோல்விகளையும் பெற்றது. ஐந்து போட்டிகள் கைவிடப்பட்டன.

26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15வெற்றிகளையும் ஏழு தோல்விகளையும்நான்கு போட்டிகளில் சமநிலையையும்பெற்றது.
100 டெஸ்ட் போட்டிகளில்விளையாடிய மஹேல 7959 ஓட்டங்களைப்பெற்றார். 299 ஒருநாள் போட்டிகளில்விளையாடி 8042 ஓட்டங்கள் பெற்றார்.
மஹேல தலைமையிலான இலங்கை அணிதோல்வியடைந்தபோதுஇவர் விமர்சிக்கப்படவில்லை. அவரிடம்இருந்து தலைமைப் பொறுப்பு பறிக்கப்படும் என
எவரும் கருதவும் இல்லை.இந்திய அணிக்கு எதிரான ரி20 போட்டிக்கு டில்ஷான்தலைவராக நியமிக்கப்பட்டதனால் மஹேலமீது உள்ள நம்பிக்கையை
இலங்கை கிரிக்கெட்இழந்து விட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.அந்தச் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்வதைப்போன்றே மஹேல தலைமைப் பதவியை இராஜினாமா செய்தார்.பாகிஸ்தானுடனான இரண்டு டெஸ்ட்போட்டிகளுக்கு தலைவராகச் செயற்படும்மஹேல அதன் பின்னர் அணியில் தொடர்ந்
தும் விளையாடப் போவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் அடுத்த தலைவர் யார் என்ற ஊகத்தில் பல பெயர்கள் வெளிப்படுகின்றன. உப தலைவரராக உள்ளசங்கக்கார தலைவராகும் வாய்ப்பு அதிகம்உள்ளது. டில்ஷான் தவைராகலாம் என்றஎதிர்பார்ப்பும் உள்ளது.ரி20 மூலம் டில்ஷானின் தலைமைப்பணி பரீட்சிக்கப்பட்டது. முதல் போட்டிஎன்பதனால் அவர் மிகவும் பதற்றமாகஇருந்தார். சனத் ஜயசூரிய அவரை ஆசுவாசப்படுத்தினார்.இலங்கை அணியின் வெற்றிகள் பலவற்றுக்குகாரண கர்த்தாக்களாக விளங்கியமுரளி, வாஸ் ஆகிய இருவரில் ஒருவர்தலைவராக வேண்டும் என்ற விருப்பமும்இலங்கை ரசிகர்களிடம் உள்ளது. அவர்களில் ஒருவரைத் தலைவராக்கும் எண்ணம் இலங்கை கிரிக்கெட்டிடம் இல்லைஎன்பது அனைவரும் அறிந்த உண்மை.
ரமணி
மெட்ரோநியூஸ்
13 02 2009
No comments:
Post a Comment