Thursday, November 3, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 9

ஹைதராபாத்தில் உள்ள விபசாரி ஒருத்தி கும்பகோணத்து பிராமணக் குடும்பத்தில் மருமகளாகிறாள். விபசாரத்தை துறந்து அக்ரஹாரத்து பெண்ணாக வாழ விரும்பும் அவளை அனுபவிக்கத் துடிக்கிறார் அந்தக் குடுபத்து ஜோதிடர். ஜோதிடரின் பேச்சைக் @கட்டு அக்குடும்பத்தவர் நடப்பதால் துன்பப்படும் ஒரு பெண்ணின் கதை தான் தனம் என்ற திரைப்படத்தின் ஒரு வரிக் கதை.
ஏழைகளிடம் சுரண்டும் முதலாளிகளிடமும் வறியவர்களிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் பண்ணையாளர்களிடம் உள்ள பணத்தைப் பறித்து ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் கதாநாயகன் பணத்தை பகிர்ந்தளிப்பதும் பெண் விபசாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவதும் தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி.
தனம் படத்தின் நாயகி ச‌ங்கீதா தன் உடம்பை விற்றுக் கிடைக்கும் பணத்தை அந்த சே ரியிலுள்ள சிறுவர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுக்கிறாள். 500 ரூபா இருந்தால் அணுகலாம் இல்லையேல் நடையைக் கட்டலாம் என்று தன்னை தேடிவரும் வாடிக்கையாளர்களிடம் முகத்தில் அடித்ததுபோல் கூறி பேரம் பேசுவார் சங்கீதா. ஹைதராபாத்துக்கு மேற் படிப்பிற்காக செல்லும் பிராமண இளைஞனான பிரேமுக்கு தனத்தின் இரக்க குணமும் சுபாவமும் பிடித்துவிடுகிறது. தன்னை திருமணம் செய்யும்படி தனத்திடம் கேட்கிறார். தான் விபசாரி என்பதை வீட்டில் உள்ளவர்களுக்கு கூறி அவர்கள் ஏற்றுக் கொண்டால் திருமணம் செய்வதாக உறுதியளிக்கிறார் தனம்.
தனத்துடன் கும்பகோணம் செல்கிறார் பி@ரம். பி@ரமின் விருப்பத்திற்கு குடும்பத்தவர்கள் பலமான எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். குடும்ப ஜோதிடரான கோட்டா சீனிவாசன் ராவ் கூறியால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள். சங்கீதா ஒரு தனலக்ஷ்மி அவள் இக்குடும்பத்தின் மருமகளானால் குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும் என்று குடும்ப ஜோசியர் கூறினார். திருமணத்தின் பின்னர் அக்குடும்பம் செல்வச் செழிப்பில் மிதக்கிறது. தனம் குடும்பப் பெண்ணாக வே மாறிவிட்டார். பழையதை மறந்துவிட்டார். விபசாரி எப்பவும் விபசாரி@ய என நினைக்கும் கோட்டா சீனிவாசராவ் அவளை அடைய துடிக்கிறார். பிரேமின்சகோகாதரனும் சீண்டிப் பார்க்கிறான். எல்@லாருக்கும் பதிலடி தருகின்றார் சங்கீதா.

ஹைதராபாத்தில் 500 ரூபாவுடன் சங்கீதாவை அனுபவிக்க முடியாது ஏமாற்றமடைந்த கருணாஸ் சங்கீதாவுக்கு எதிராக செய்யும் செயல்கள் எல்லாம் @தால்வியில் முடிகிறது தனத்தை அனுபவிக்க முடியாது தவித்த @காட்டா சீனிவாசராவ் அவளைப் பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்திருந்தார். தனத்துக்கு பெண் குழந்தை பிறக்கிறது அப்@பாது வியாபாரம் படுக்கிறது. பி@ரமின் பாட்டன் மரணமாகிறார். குழந்தை பிறந்த @நரம் சரியில்லை என்று கோட் டா சீனிவாசராவ் கூறுகின்றார். அவரின் ஆ@லாசனைப்படி குழந்தையை கள்ளிபால் கொடுத்து கொலை செய்கிறார்கள். குழந்தை இறந்ததும் துடிக்கிறாள் சங்கீதா. தன் குழந்தை கொலை செய்யப்பட்டதாக அறிந்த சங்கீதா அந்தக் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிறாள்.
குடும்பத்தவர் அனைவருக்கும் தன் கையால் சமைத்து பரிமாறுகிறாள் தனம். வில்லன் கோட்டா சீனிவாசராவும் விருந்தில் கலந்துக் கொள்கிறார். தனம் கொடுத்தது விருந்து அல்ல விஷம் என்பதை சாப்பிட்ட அனைவரும் தெரிந்துக் கொள்கின்றனர். விஷத்தை சாப்பிட்ட அனைவரும் இறக்கின்றனர். எல்லோரும் இறக்கும்போது சிரித்த சங்கீதா கணவன் இறக்கும் @பாது அழுகிறாள். மீண்டும் ஹைதராபாத் செல்லும் சங்கீதா 500 ரூபாவுக்கு விபசாரியாகிறாள்.
சங்கீதா செய்த கூட்டுக் கொலைப்பற்றி விசாரணை செய்த உயர் பொலிஸ் அதிகாரிகள். சங்கீதா பழி வாங்கியது நியாயம் என்பதால் விசாரணையை கை விடுகின்றனர்.
படத்தின் இறுதிக் காட்சியில் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சங்கீதா. சேŒலை அணிந்து கவர்ச்சியாக நடமாடும் சங்கீதா இறுதி காட்சியில் கலக்கிவிடுகிறார். கிரிஷ் கர்ணட் கோட்டா சீனிவாசன் ராவ் ஆகி@யார் படத்துக்கு மெருகூட்டுகிறார்கள். சிவா இயக்கிய இப்படம் வெற்றிப்படம் அல்ல என்றாலும் பாடல்களும் ஒளிப்பதிவும் மனதைவிட்டு அகலவில்லை.
கண்ணனுக்கு என்ன வேண்டும் என்ற பாடலை என்றைக்குமே மறக்க முடியாது. இப்பாடல் திரைப்படத்துக்காக எழுதப்படவில்லை. கண்ணதாசனின் மகள் வைஷாலியிடம் ஒரு கண்ணன் பாட்டு வேண்டும் என இளையராஜா கேட்டு வாங்கிய பாடலையே தனம் படத்தில் இணைத்தார்.


ரமணி
மித்திரன் 30/10/11



2 comments:

சஞ்சயன் said...

படத்தை நிட்சயம் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

வர்மா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன்
வர்மா