இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம், கப்டனாக சூர்யகுமார் யாதவ் மீண்டும் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளார். களத்தில் அவர் எடுத்த அனைத்து முடிவுகளும் எதிர்பார்த்த முடிவுகளை கொடுத்தன. அதேநேரம், துடுப்பாட்டத்தில் இந்த தொடர், சூர்யகுமார் யாதவிற்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. 5 போட்டிகளில் களமிறங்கிய அவர் முறையே, 0,12,14,0,2 என மிக செயற்பாட்டை வெளிப்படுத்தினார். 5 போட்டிகளில் சேர்த்து 28 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்துள்ளார். கடந்த 10 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே விளாசியுள்ளார். இதனால், ஒரு பேட்ஸ்மேன் ஆக சூர்யகுமார் யாதவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
பேட்டிங்கில்
சொதப்பினாலும், கப்டன்ஷியில் அசத்தியதால் சூர்யகுமார் யாதவ் மீதான விமர்சனங்கள் குறைவாக
உள்ளன. இந்நிலையில் தான், இந்தியா,இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, 3 போட்டிகள் கொண்ட
ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.. இதில் இந்திய அணியை கப்டன் ரோகித் சர்மா வழிநடத்த உள்ளார்.
கடந்த சில காலங்களாகவே மோசமான ஃபார்மில் உள்ள ரோகித், இந்த தொடர் மூலம் கம்பேக் தருவாரா
என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உள்ளூரில்
நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், அவுஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர்
கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ,அண்மையில் களமிறங்கிய ரஞ்சிபோட்டியில் கூட ரோகித் சர்மா பெரிதாக
சோபிக்கவில்லை. பேட்ஸ்மேன் ஆக மட்டுமின்றி, கப்டனாக கூட அணியை திறம்பட கையாளவில்லை
என விமர்சனங்கள் குவிகின்றன.
நியூசிலாந்து
,அவுஸ்திரேலிய அணிகளுகு எதிரான இந்தியாவின்
தோல்விகளுக்கு, ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்ம் மிக முக்கிய காரணமாகும். அவரது துடுப்பாட்டத்தை இந்திய அணி எவ்வளவு சார்ந்துள்ளது என்பதையே இது
உணர்த்துகிறது.
சம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அமைந்துள்ளது. இதன் மூலம் வீரராக மட்டுமின்றி கேப்டனாகவும் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா இருக்கிறார். பேட்டிங்கில் சொதப்பினாலும், சூர்யகுமார் யாதவை போன்று கப்டன்ஷியில் அணிக்கு பங்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை தவறினால், இந்திய அணிக்காக ரோகித் சர்மா விளையாடும், கடைசி ஐசிசி தொடராகவும் சம்பியன்ஸ் ட்ராபி இருக்கலாம்.
No comments:
Post a Comment