Tuesday, February 18, 2025

ரைபகினாவின் முன்னாள் பயிற்சியாளர் வுகோவ் இடைநீக்கம்


 எலெனா ரைபாகினாயின்    முன்னாள் பயிற்சியாளர் ஸ்டெஃபனோ வுகோவ்   நடத்தை விதிகளை மீறியதாக WTA த நிர்வாகக் குழுவின் விசாரணையைத் தொடர்ந்து, அவரைத் தடை செய்ய முடிவு செய்தது.

செவ்வாயன்று, WTA தனது விசாரணையை முடித்துவிட்டதாகக் கூறியது. , அவரது இடைநீக்கம் "அமலில் உள்ளது" என்றும் கூறியது. அவர் எவ்வளவு காலம் தடையில் இருப்பார் என்பதைக் குறிப்பிடவில்லை. தற்காலிக இடைநீக்கத்தின் கீழ் இருந்த குரோஷிய பயிற்சியாளர் வுகோவ் தான் தவறு செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.

2022 விம்பிள்டன் சம்பியனான ரைபகினா, கடந்த மாதம் அவுஸ்திரேலிய ஓபனில், வுகோவ் அவர்கள் இணைந்து பணியாற்றிய ஆண்டுகளில் “என்னை ஒருபோதும் தவறாக நடத்தவில்லை என்றும், தற்காலிக இடைநீக்கத்துடன் தான் உடன்படவில்லை என்றும் கூறினார். 

No comments: