Tuesday, March 25, 2025

ருதுராஜ், ரச்சின் அரைசதம் சென்னை வெற்றி

 சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பைக்யை எதிர்த்து விளையாடிய சென்னை     4 விக்கெற்களால் சென்னை வெற்றி பெற்றது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை கப்டன் ருதுராஜ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

ரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது

  மும்பை அணிக்கு ரோகித் சர்மா  18 ஆவது முறையாக டக் அவுட்டாகி ஏமாற்றினார்.   ரியான் ரிக்கிள்டன் 13, வில் ஜாக்ஸ் 11  ஓட்டங்களில் வெளியேறினர். க‌ப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஜோடி நிதானமாக விளையாடியது. நான்காவது விக்கெட்டுக்கு 51  ஓட்டங்கள்  சேர்த்த போது நுார் அகமது 'சுழலில்' சிக்கிய சூர்யகுமார் 29 ஓட்டங்களுடன் வெளியேறினார்.  தொடர்ந்து அசத்திய நுார் அகமது பந்தில் ராபின் மின்ஸ் 3,, திலக் வர்மா 31,, நமன் திர்  11  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்  மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 155  ஓட்டங்கள் எடுத்தது.  .

156 எனும் எட்டக்கூடிய  இலக்கை சென்னை விரட்டியது.  ராகுல் திரிபாதி 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.   ரச்சின் ரவிந்திரா, கப்டன் ருதுராஜ் ஜோடி கைகொடுத்தது. தீபக் சகார், சான்ட்னர், வில் ஜாக்ஸ் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட ருதுராஜ், 22 பந்துகளில்  அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 67  ஓட்டங்கள் சேர்த்த போது  56 ஓட்டங்கள் எடுத்த‌ ருதுருாஜ்  ஆட்டமிழந்தார்.   'சுழலில்' ஷிவம் துபே (9), தீபக் ஹூடா (3) ஆகிய இருவரும் விக்னேஷின் சுழலில் சிக்கினர்.


  மறுமுனையில் அசத்திய ரச்சின், விக்னேஷ் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்த போது ரவிந்திர ஜடேஜா (17) 'ரன்-அவுட்' ஆனார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 4  ஓட்டங் தேவைப்பட்டது. சான்ட்னர் பந்துவீசினார். முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரச்சின், வெற்றி துவக்கத்தை உறுதி செய்தார்.சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரச்சின் (65*), டோனி (0*) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சென்னையின் நுார் அகமது வென்றார்.

ரோகித் '18'

பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் அதிக முறை 'டக்-அவுட்' ஆன வீரர்கள் வரிசையில் முதலிடத்தை மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் உடன் பகிர்ந்து கொண்டார் ரோகித். மூவரும் தலா 18 முறை 'டக்' அவுட்டாகினர்.

நுார் அசத்தல்

பிரிமியர் லீக் அரங்கில் மும்பைக்கு எதிராக சிறந்த பந்துவீச்சை (4 ஓவர், 18  ஓட்டங், 4 விக்கெட்) பதிவு செய்த சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளரானார் நுார் அகமது. இதற்கு முன், ரவிந்திர ஜடேஜா (4 ஓவர், 20 ஓட்டங்கள் , 3 விக்கெட், 2023, இடம்: மும்பை) இச்சாதனை படைத்திருந்தார்.

  பிரிமியர் லீக் அரங்கில் நுார் அகமதுவின் சிறந்த பந்துவீச்சானது. இதற்கு முன் 2023ல் குஜராத் அணிக்காக விளையாடிய இவர், மும்பைக்கு எதிராக 37/3 (4 ஓவர்) தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருந்தார்.

22 பந்தில்

அபாரமாக ஆடிய சென்னை கப்டன் ருதுராஜ், பிரிமியர் லீக் அரங்கில் தனது அதிவேக (22 பந்து) அரைசதத்தை பதிவு செய்தார். இதற்கு முன், 2023ல் குஜராத் அணிக்கு எதிராக ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.

தொடரும் சோகம்

பிரிமியர் லீக் தொடரில் மும்பை அணி, தனது முதல் போட்டியில் தொடர்ந்து 13வது ஆண்டாக (2013-2025) தோல்வியடைந்தது. கடைசியாக 2012ல் மும்பை அணி, தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

பிரிமியர் போட்டிக்காக சமீபத்தில் சென்னை வந்த 'தல' தோனியின் 'டி-சர்ட்டில்' 'மோர்ஸ் கோடு' ரகசிய மொழியில் 'கடைசியாக ஒரு முறை' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டுடன் ஓய்வு பெறப் போகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.

டோனி 43, கூறுகையில்,''நான் விரும்பும் வரை சென்னை அணிக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விளையாடலாம். இது எனது அணி. நான் 'வீல் சேரில்' அமர்ந்திருந்தாலும், என்னை ரசிகர்கள் இழுத்துச் செல்வர்,'' என்றார்.

 

Monday, March 24, 2025

ஐபிஎல் இல் காணாமல் போன அணிகள்

  ஐபிஎல் திருவிழா ஆரம்பமாகிவிட்டது.  மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் கடந்த 18 சீசன்களில்  விளையடிய சில அணிகள் பங்கேற்று பின்னர் நிரந்தரமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகின.  அந்த அணிகளின் பட்டியல்.

டெக்கான் சார்ஜர்ஸ்:

ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடந்து வகிறது. இந்த அணி கடந்த 2008ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. டெக்கான் கிரானிக்கல் நிறுவனம் இந்த அணியை நிர்வகித்து வந்தது. ஆந்திராவை மையப்படுத்தி இந்த அணி ஆடியது. 2012ம் ஆண்டு வரை மட்டுமே இந்த அணி ஆடியது. கில்கிறிஸ்ட் தலைமையில் 2009ம் ஆண்டு ஐபிஎல் பட்டத்தையும் கைப்பற்றியது.

கொச்சி டஸ்கர்ஸ் கேரளா:

கேரளாவை மையப்படுத்தி இந்த அணி ஆடியது. 2011ம் ஆண்டு மட்டுமே இந்த அணி ஆடியது. மஹேல  ஜெயவர்தன தலைமையில் இந்த அணி ஆடியது. ஆனால், அந்த ஒரே சீசனில் இந்த அணி தொடரில் இருந்து விலகியது. கொச்சி பிரைவேட் கிரிக்கெட் லிமிடெட் இந்த அணியை நிர்வகித்தது.

புனே வாரியர்ஸ் இந்தியா:


சஹாரா இந்தியா பரிவார் நிறுவனம் இந்த அணியை நிர்வகித்தது. 2011ம் ஆண்டு கொச்சி அணியுடன் இந்த அணியும் ஐபிஎல் தொடரில் களமிறங்கியது. புனேவை மையமாக கொண்டு ஆடிய இந்த அணிக்கு கங்குலி கப்டனாக ஆடினார். 2011ம் ஆண்டு 9வது இடத்தையும், 2012ம் ஆண்டு கடைசி இடத்தையும், 2013ம் ஆண்டு கடைசி இடத்தையும் பிடித்தது. 2013ம் ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து இந்த அணி விலகியது.

ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ்:


சூதாட்ட குற்றச்சாட்டு காரணமாக சென்னை , ராஜஸ்தான் அணிகள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில், 2016ம் ஆண்டு உருவானது ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட். டோனி தலைமையில் களமிறங்கிய முதல் சீசனில் மோசமான தோல்வி அடைந்து வெளியேறியது. பின்னர், அடுத்த ஆண்டு ஸ்மித் கப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த அணியின் உரிமையாளர் கோயங்கா தற்போது லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியை நிர்வகித்து வருகிறார். இந்த அணி இரண்டு சீசன்கள் மட்டுமே ஆடியது.

குஜராத் லயன்ஸ்:


2016ம் ஆண்டு சென்னை, ராஜஸ்தான் அணிக்கு பதிலாக களமிறங்கிய அணிகளில் புனேவுடன் இணைந்து களமிறங்கிய அணி குஜராத் அணி ஆகும். இந்த அணியும் 2 சீசன்கள் மட்டுமே ஆடியது. குஜராத் அணிக்கு கப்டனாக சுரேஷ் ரெய்னா ஆடினார். இன்டெக்ஸ் டெக்னாலாஜிஸ் இந்த அணியை நிர்வகித்தது.

இந்த அணிகளில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி மட்டுமே சம்பியன் பட்டம் பெற்றது. மற்ற அணிகள் சம்பியன் பட்டம் பெற முடியவில்லை.

 

   

 

ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளர்கள்

கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் தொடரின்  அணிகளுக்கும் அதன் வீரர்களுக்கும் பலத்த ஆதரவை ரசிகர்கள் வழங்கி வருகிறார்கள்.  சில  அணிகளின் பயிற்சியாளர்களுக்கும் ரசிகர் கூட்டம்  உள்ளது. ஐபிஎல் அணிகலின் பயிற்சியாள‌ர்களைப்  பற்றிய தொகுப்பு 

சென்னை சூப்பர் கிங்ஸ் - ஸ்டீபன் ப்ளெமிங்:


ஐபிஎல் தொடரில் 5 முறை சம்பியன் பட்டம் பெற்ற அணியாக திகழும் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங். முன்னாள் சென்னை அணியின் வீரரும், நியூசிலாந்து அணியின் முன்னாள் கப்டனாகவும் இருந்தவர். நியூசிலாந்து அணிக்காக சம்பியன்ஸ் டிராபி பட்டம் பெற்று தந்தவர். இவரது பயிற்சியின் கீழே சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 51 வயதான ப்ளெமிங் டெஸ்டில் 7172 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 8 ஆயிரத்து 37ஓட்டங்களும் எடுத்துள்ளார்.


டெல்லி கேபிடல்ஸ் - ஹேமங் பதானி:

அக்ஷர் படேல் தலைமையில் களமிறங்கும் டெல்லி அணிக்கு பயிற்சியாளராக ஹேமங் பதானி களமிறங்கியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹேமங் பதானி இந்திய அணிக்காக 4 டெஸ்ட்டில் 94 ஓட்டங்களும், 40 ஒருநாள் போட்டிகளில் 867 ஓட்டங்களும்எடுத்துள்ளார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஜாப்னா கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் - ஆஷிஷ் நெஹ்ரா:


முதல் சீசனிலே ஐபிஎல் பட்டத்தை பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா உள்ளார். இந்திய அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்த இவர்  17 டெஸ்ட் போட்டியில் 44 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 157 விக்கெட்டுகளையும், ரி20யில் 34 விக்கெட்டுகளையும், 88 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 106 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக நெஹ்ரா திகழ்ந்தார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சந்திரகாந்த் பண்டிட்:


ரஹானே தலைமையில் களமிறங்கும் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக திகழ்பவர் சந்திரகாந்த் பண்டிட். கடந்த சீசனிலும் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக திகழ்ந்தவர் இவரே ஆவார். இந்திய அணியின் முன்னாள் வீரரான இவர் 36 ஒருநாள் போட்டிகளில் ஆடி 290 ஓட்டங்களும், 5 டெஸ்டில் ஆடி 171 ஓட்டங்களும் எடுத்துள்ளார். மும்பை அணிக்காக அடுத்தடுத்து இரண்டு முறை ரஞ்சி டிராபியை பயிற்சியாளராக வென்று தந்துள்ளார்.


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஜஸ்டின் லாங்கர்:

முதல்முறை கோப்பையை வெல்ல போராடும் லக்னோ அணிக்காக பயிற்சியாளராக இருப்பவர் ஜஸ்டின் லாங்கர். அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இவர் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆவார். 54 வயதான ஜஸ்டின் லாங்கர் டெஸ்ட் போட்டிகளில் 7 ஆயிரத்து 696 ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர்

மும்பை இந்தியன்ஸ் - ஜயவர்தன:


5 முறை சம்பியன் பட்டம் பெற்ற மும்பை அணிக்கு அந்த அணியின் முன்னாள் வீரரும், இலங்கை அணியின் முன்னாள் கேப்டனுமாகிய மஹேல‌ ஜயவர்தன பயிற்சியாளராக உள்ளார். ஜயவர்தன டெஸ்டில் 11 ஆயிரத்து 814 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரத்து 650 ஓட்டங்களும்  எடுத்துள்ளார். மும்பை அணிக்காக 6வது முறையாக கோப்பையை வென்று தர வேண்டும் என்று இவர் களமிறங்கியுள்ளார். 

பஞ்சாப் கிங்ஸ் - ரிக்கி பொண்டிங்:


ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இந்த முறை பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் களமிறங்கியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் கப்டனாக களமிறங்கியுள்ளார். 2000ம் காலகட்டத்தில் கிரிக்கெட்டையே கட்டி ஆண்டவராக உலா வந்தவர் ரிக்கி பொண்டிங். இவர் அவுஸ்திரேலிய அணிக்காக 2 முறை 50 ஓவர் உலகக்கோப்பை வாங்கித் தந்துள்ளார். டெஸ்ட்டில் 13 ஆயிரத்து 378 ஓட்டங்களும், ஒருநாள் போட்டியில் 13 ஆயிரத்து 704 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் - ராகுல் ட்ராவிட்:


ஐபிஎல் தொடரின் முதல் மகுடத்தை கைப்பற்றிய ராஜஸ்தான் அணிக்கு ராகுல் ட்ராவிட் பயிற்சியாளராக உள்ளார். இந்திய அணியின் தூணாக திகழ்ந்த ராகுல் ட்ராவிட் இந்திய அணிக்காக ரி20 உலகக்கோப்பையை தனது பயிற்சியாராக திகழ்ந்தவர். ராகுல் டிராவிட் டெஸ்ட்டில் 13 ஆயிரத்து 288 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரத்து 889 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதரபாத் - டேனியல் வெட்டோரி:


பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதரபாத் அணிக்கு டேனியல் வெட்டோரி பயிற்சியாளராக உள்ளார். இவரது பயிற்சியின் கீழ் கடந்த சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஐதராபாத். நியூசிலாந்து அணியின் முன்னாள் கப்டனாகிய இவர் டெஸ்ட்டில் 4 ஆயிரத்து 531  ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 2 ஆயிரத்து 253 ஓட்டங்களும்எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 362 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 305 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஆன்டி ப்ளவர்:


18வது சீசனில் தங்களது முதல் கோப்பை கனவுடன் களமிறங்கியுள்ள ஆர்சிபி அணிக்கு பயிற்சியாளராக ஆன்டி ப்ளவர் உள்ளார். ரஜத் படிதார் தலைமையில் களமிறங்கும் பெங்களூர் அணி பயிற்சியாளர் ஆன்டி ப்ளவர் ஸிம்பாப்வே அணியின் முன்னாள் கப்டன். இவர் டெஸ்டில் 4 ஆயிரத்து 794 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரத்து 786  ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

ஐபிஎல்25,ஏகன் மீடியா,ஏகன்,ரி20,விளையாட்டு,கிறிக்கெற்

 

Sunday, March 23, 2025

உலக சாதனையுடன் வென்றது ஹைதராபாத்

      ஹைதராபாத்தில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான  போட்டியில் வரலாற்றுச் சாதனையுடன் சன் ரைசஸ் ஹைதராபாத்.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஹைதராபாத்  முதலில் துடுபெடுத்தாடி  6 விக்கெற்களை இழந்து 286 ஓட்டங்கள் எடுத்தது.

287 எனும் இமாலய  இகக்குடன் களம்  இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவர்கலில்விக்கெற்களை இழந்து 242 ஓட்டங்கள் எடுத்தது.ஹைதராபாத் 44  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

  ஹைதராபாத் அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே இஷான் கிசான் சதத்தை அடித்தார்.  47 பந்துகளில் ஆட்டமிழக்காது  106*  ஓட்டங்கள்   அடித்தார்டிராவிஸ் ஹெட்  31 பந்துகளில் 67 ஓட்டங்களும், ஹென்றிச் க்ளாஸென்  14 பந்துகளில் 34 ஓட்டங்களும்,   நிதிஷ் ரெட்டி   15 பந்துகளில் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.

4 ஓவர்களில் 76 ஓட்டங்களிக் கொடுத்து  ஆச்சார் வெறுப்பேற்றினார்.

   தேஷ்பாண்டே, 3, தீக்சனா 2 விக்கெற்களை எடுத்தனர்ராஜஸ்தானுக்கு  வீரர்களான ஜெய்ஸ்வால் 1, கப்டன் ரியான் பராக் 4   நிதீஷ் ராணா 11  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.   சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரேல் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டினார்மூன்றாவது விக்கெட்டுக்கு 11   ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

  சாம்சன்  66 (37)    ஜுரேல் 70 ஓட்டங்கள் எடுத்தனர்.    சிம்ரோன் ஹெட்மயர் முடிந்தளவுக்கு அதிரடியாக போராடி 42 , சுபம் துபே 34* (11)  ஓட்டங்கள்  எடுத்தனர்.   20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்த ராஜஸ்தான் 242 ஓட்டங்கள் எடுத்தது.

இந்தப் போட்டியையும் சேர்த்து  ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்  4 முறை 250க்கும் மேற்பட்ட  குவித்து சாதனை படைத்தது. (287/3, 286/6, 277/3, 266/7) குவித்துள்ளது. இதன் வாயிலாக ரி20 கிரிக்கெட்டில் அதிக முறை 250  ஓட்டங்கள் அடித்த அணி என்ற உலக சாதனையை ஹைதராபாத் படைத்துள்ளது. இதற்கு முன் இந்திய அணி,இங்கிலாந்தின் கவுண்டி அணியான சர்ரே ஆகியன தலா 3 முறை 250+ ஓட்டங் கள் அடித்ததே முந்தைய சாதனை. இஷான் கிஷான்  ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

  

முதல் போட்டியில் வென்றது பெங்களூர்


 கொல்கதாவில் நடைபெற்ற முதலாவது ஐபிஎல் போட்டியில் 7 விக்கெற்றால் பெங்களூர் வென்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற பெங்களூர் பந்து வீசத்தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 174 ஓட்டங்கள் எடுத்தது.16.2 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்த பெங்களூர் 177 ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட்ட வீரரான டீ கொக் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சுனில் நரேனுடன், கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 103 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது.

10 ஓவர்களில் 1 விக்கெற்றைஇழந்த கொல்கத்தாவின் எனைய வீரர்கள் தடுமாறினார்கள். நரேன் 44 , ரகானே 56 , வெங்கடேஷ் ஐயரை 6 , ரிங்கு சிங் 4 , அண்ட்ரே ரசல் 4 , ரகுவன்சி 30 ஓட்டங்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்த கொல்கத்தா 174 ஓட்டங்கள் எடுத்தது.

ஜோஸ் ஹேசல்வுட் 2, கருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்தப் போட்டியில் ரசிக் சலாம் வீசிய 8வது ஓவரின் 4வது பந்தை சுனில் நரேன் எதிர்கொண்டார். அந்தப் பந்து ஒயிடாக வீசப்பட்டதால் அதை அவர் அடிக்கவில்லை. அதைப் பார்த்ததும் களத்தில் இருந்த நடுவர் ஒயிட் கொடுத்தார். அடுத்த நொடியே பந்தை எதிர்கொண்ட வேகத்தில் சுனில் நரேன் பேட் அவரை அறியாமலேயே பின்னே சென்று ஸ்டம்ப்பில் பட்டு பெய்ல்ஸ் கீழே விழுந்தது. அதன் காரணமாக ஹிட் விக்கெட் முறையில் அவர் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த பந்து ஒயிட் என்று சில நொடிகள் முன்பாக நடுவர் அறிவித்து விட்டார். அதனால் அந்த பந்து காலாவதியானதன் காரணமாக சுனில் நரேன் ஹிட் விக்கெட் முறையில் தப்பி தொடர்ந்து விளையாடினார்.

பெங்களூர் அணியின் பில் சாட் 56, படிக்கல்10,ராஜ் படிதார் 34, ஓட்டங்கள் எடுத்தனர். 16.2 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்த பெங்களூர் 177 ஓட்டங்கள் எடுத்தது. விராட் கோலி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்கள் எடுத்தார். கருணால் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார்

Monday, March 17, 2025

கூட்டணிக் கதவைத் திறந்து வைத்திருக்கும் விஜய்


 சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய் அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.  அரசியல்  கட்சி ஒன்றை விஜய் ஆரம்பிக்கப்போகிறார் என்ற போதே பரபரப்புத் தொற்றிக்கொண்டது. தமிழர்  வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி ஆரம்பமாகி ஒரு வருடம் கடந்து விட்டது. சினிமாவில் இருந்த போது விஜய் போகும் இடமெல்ல்லாம் மக்கள்  கூட்டம் அலை  மோதியது போலவே  அரசியல் கட்சிக் கூட்டங்களிலும் மக்கள் வெள்ளம் கரை புரண்டது.  அந்த மக்கள் வெள்ளம் வாக்காக  மாறுமா என்ற சந்தேகமும் தொடர் கதையாக  உள்ளது.

விஜய் எதிர்  பார்த்தது போல்  மற்றை கட்சிகளில் இருந்து யாருமே விஜயின் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. கட்சி  ஆரம்பமான போது  இருந்த  உற்சாகம்  குறைந்து விட்டது.

தனித்துப் போட்டியிட வேண்டும் என  புருஸ்லி ஆனந்த்  சொல்கிறார்.

  ஆனால்,கூட்டனிதான் வேண்டும் என பிரசாந்த் கிஷோரும், ஆதவ் அர்ஜுனாவும் சொல்கிறார்கள்.  ஆலோசகர்கள் அதிகரித்ததால் முடிவெடுக்க முடியாமல் விஜய் திணறுகிறார்.கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் இரகசியமாக நடைபெறுகின்றன.

இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க வேண்டிய கட்டாய ம் ஏற்பட்டுள்ளது.எல்லாக் க‌ட்சிகளிலும் உள்ள  பிரச்சனையை விஜய் இப்போதுதான் எதிர் நோக்குகிறார்.  உள்ளௌக்கு உள்ளவர்களின்  பிரச்சனைகள் காரணமாக மாவட்டச் செலயாளர்களை நியமிக்கும் பணி தாமதமடைகிறது.

  25 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டிய சூழலில், இன்றும் 19 மாவட்டச் செயலாளர்களின் பட்டியலே வெளியாகும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 6 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதில் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது தெரிய வந்துள்ளது.

  நிர்வாகிகளை சந்தித்த தவெக தலைவர் விஜய், நிர்வாக வசதிக்காக மொத்தமாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்பின் ஒவ்வொரு நாளும் 19 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பை வெளியிட்டார். அந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தவெக சார்பாக மொத்தமாக 95 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன்பின் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தவெக சார்பாக விரைவாக பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார். இதனை ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனிடையே 25 மாவட்டச் செயலாளர்களின் நியமனத்தை விரைவாக முடிக்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று தவெக சார்பாக 25 மாவட்டச் செயலாளர்களின் அறிவிப்பு வெளிவரும் என்று பார்க்கப்பட்டது. ஆனால்  தவெக சார்பாக வெறும் 19 மாவட்டச் செயலாளர்களின் நியமனம் தொடர்பான அறிவிப்பு மட்டுமே வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதில் சிக்கல்கள் நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்று சர்ச்சை எழுந்தது. ஒரே தொகுதிகள்  செல்வாக்க்கனவர்கள்  பலரும் இருப்பதால், மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் நிர்வாகிகள் நியமனத்திற்கு பின் மாவட்டச் செயலாளர்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 இதுதொடர்பாக ஏற்கனவே தவெக தலைவர் விஜய்-க்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள், மக்கள் இயக்கத்தில் பணியாற்றியவர்கள், பணபலம் கொண்டவர்கள் என்று பலரும் போட்டியில் இருப்பதால், 6 மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க முடியாமல்விஜய் திணறுகிறார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைப்பதே முதல் வேலை என்றும், திமுகவை தவிர வேறு யாரும் எங்களுக்கு எதிரி அல்ல என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இப்போது கூறி வருகிறார்.

பாஜகவோடு கூட்டணி இல்லை என்று தெரிவித்து வந்தவர்,  இப்போது திமுகவை தவிர யாருமே எங்களுக்கு எதிரி இல்லை என  இறங்கிவந்துள்ளார்.

அதேநேரம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தோடு அதிமுக நடத்திய பேச்சுவார்த்தை முறிவடைந்ததாகச்  சொல்லப்படுகிறது.

பாரதீய ஜனதாவோடு கூட்ட்டணி சேர்ந்தால்  அதிமுகவுக்கு சில சாதகங்கள் இருந்தாலும் பல பாதகங்கள் இருக்கின்றன.

சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என்பது மட்டுமின்றி கடந்த சில மாதங்களாக திமுக கட்டமைத்து வரும் மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில், பாஜகவுக்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கே எதிரி பாஜக என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார். திமுக இதை மிகப்பெரிய பிரச்சார இயக்கமாக முன்னெடுக்கிறது.00

இந்த நிலையில் பாஜகவோடு சேர்ந்தால் அதிமுகவும் தமிழ்நாட்டுக்கு எதிரி என சட்டமன்றத் தேர்தலில், திமுக கடுமையாக பிரச்சாரம் செய்யும். இதன் மூலம் தனது ஆட்சியின் நிர்வாக தோல்விகளை திமுக எளிதில் மூடி மறைக்கும்.

இந்த அடிப்படையில் தான் விஜய் தரப்போடும் தொடர்ந்து பேசி வருகிறது அதிமுக.  ஆனால், விஜய்யின் நிபந்தனைகள் புதிது புதிதாக இருக்கின்றன.

பாஜகவோடு அணிசேர்வதில் அதிமுகவுக்கு இருக்கும் பாதகங்களை தனக்கு சாதகமாக்கி விஜய் தரப்பு இப்படி புதிய நிபந்தனைகளை விதித்து வருகிறது.

அதிமுகவுக்கும் தவெகவுக்கும் இந்த அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையை நடத்தி வருபவர் சமீபத்தில் விஜய் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா தான். அவர் மூலமாகத்தான் இந்த நிபந்தனைகள் எடப்பாடி தரப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக விஜய் தரப்பு வைத்திருக்கும் புதிய நிபந்தனைகளை பற்றி, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை செய்து வருகிறார் எடப்பாடி.

டிசம்பருக்கு பிறகு தான் கூட்டணி விஷயத்தில் விஜய் முக்கிய முடிவெடுப்பார் என பிரசாந்த் கிஷோர் பேட்டிகளில் கூறி வருகிறார். அதேபோல,  ’பாஜக கீஜக எல்லாம் இப்ப கேக்காதீங்க. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமியும் கூறி வருகிறார்.

117  இடங்களை விஜய் கேட்கிறார்.இன்னமும் தேர்தலைச் சந்திக்காத விஜய் தனக்கு 25 சத வீத வாக்கு இருப்பதாகக் கணக்குக் காடுகிறார். அமைச்சரவையில் இடம் கேட்கும் விஜய் முதலமைச்சரிலும் பங்கு கேட்கிறார். இரண்டரை வருடம்  முதலமைச்சர் பதவியையை விஜய் கேட்டுள்ளார்.

சச்சிகலா சிறைக்குப் போகும்போது  நம்பிக்கையானவர் தனது சொல்லைத் தட்டமாட்டார்  அதிமுக தனது கையில் இருக்கும் என நம்பியே எடப்பாடியை முதலமைச்சரக்கினார்.கட்சிக்குள் பலமானதாக இருந்த சசிகலாவையும் ஓபிஎஸ்ஸையும் தூக்கி எறிந்த எடப்பாடிக்கு விஜய் ஒரு பொருட்டல்ல.

விஜயின் கட்சியைப் பற்றிய சர்வேவை எடப்பாடி எடுத்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

எடப்பாடியை அகற்றிவிட்டு அதிமுகவில் இருந்து வெளியேறிய அனைவரையும் ஒன்றாக்க பாரதீய ஜனதா திட்டமிட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில்  பல அதிரடிகள் அரங்கேறும் எனப்து நிச்சயம்.

 

ரமணி

16/3/25 

 

 

16 மில்லியன் லைக்குகளை அள்ளிய புகைப்படம்

சம்பியன்ஸ் கிண்ணத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.  இந்திய அணியின் இந்த வெற்றி இந்திய ரசிகர் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வெற்றியை இந்திய வீரர்கள் மைதானத்தில் பெரிய அளவில் மகிழ்ந்து கொண்டாடினர்.

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா அவரது ஸ்டைலில் இந்த கோப்பையை கொண்டாடினார்.   பிட்ச்சின் மத்தியில் கோப்பையை வைத்து இரு கைகளையும் கோப்பையை நோக்கி காட்டுவது போல அவர் ஸ்டைலாக போஸ் கொடுத்திருந்தார். கடந்த ஆண்டு ரி20 உலக கிண்ணத்தை  வென்ற போதும் இதே போன்ற தனித்துவமான போஸ் கொடுத்திருந்தார்.

அதே மாதிரி இம்முறையும் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.   அவர் பதிவிட்டிருந்த   புகைப்படம் தான் தற்போது இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.  அவர் பதிவிட்ட அந்த புகைப்படமானது வெறும் 6 நிமிடங்களில் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று அதிவேகமாக ஒரு லைக்குகளை பெற்ற இந்தியர் என்ற சாதனையை அவருக்கு பெற்று கொடுத்துள்ளது.

  அந்ப் புகைப்படமானது தற்போது வரை 16 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் அவர் ஒருவேளை ரோஹித் சர்மா ஓய்வு பெற்றால் அடுத்த கப்டனுக்கான ரேஸிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Thursday, March 13, 2025

சம்பியன்ஸ் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்றது இந்தியா

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2025 ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் 4 விக்கெற்களால் நியூசிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா.

நாணயச் சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ஓட்டங்கள் எடுத்தது. டேரில் மிட்செல் அதிகபட்சமாக 63 ஓட்டங்கள் எடுத்தார். வருண் சக்ரவர்த்தி , குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

252 ஓட்டங்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஜோடியான ரோஹித் ஷர்மா , ஷுப்மன் கில் அகியோர் முதல் விக்கெட்டிற்கு 105 ஓட்டங்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.ரோஹித் ஷர்மா 76 ஓட்டங்களுடனும், , , ஷுப்மன் கில் 31 , கோலி இட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.49வது ஓவர் வரை போராடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்று, இந்த பட்டத்தை அதிகமுறை வென்ற அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

83 பந்துகளில் 76 ஓட்டங்கள் எடுத்த ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.263 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெற்களை வீழ்த்திய ரச்சின் ரவீந்ரா தொடர் நாயகன் விருது பெற்றார். காயம் அடைந்த மாட் ஹென்றிக்கு பதில் நாதன் ஸ்மித் இடம் பெற்றார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

நியூசிலாந்து அணிக்கு வில் யங், ரச்சின் ரவிந்திரா  ஆகிய‌ இருவரும் 7 ஆவது ஓவரில்  51 ஓட்டங்கள் அடித்து  நம்பிக்கையளித்தனர்.  8வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி களத்துக்கு வந்ததும் ஆட்டத்தின் போக்கு  மாறியது.   குல்தீபின் பந்தை அடித்த வில்லியம்சன் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். 12. 2 ஓவர்களில் 3 விக்கெற்கலை இழந்த நியூஸிலாந்து  75  ஓட்டங்கள் எடுத்தது. அடுத்த 81 பந்துகள்  இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.  ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.

லதாம் 14,  பிலிப்சை 34  ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.  மிட்சல், 91 பந்தில் தனது மந்தமான அரைசதத்தை எட்டினார். கடைசி கட்டத்தில் பிரேஸ்வெல் அதிரடியாக ஆடினார்.   மிட்சல் 63   ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்  கடைசி 10 ஓவர்களில் 79  ஓட்டங்கள் அடித்தது நியூசிலாந்து.  50 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்த நியூஸிலாந்து  251 ஓட்டங்கள் எடுத்தது. பிரேஸ்வெல்  ஆட்டமிழக்காது 53 ஓட்டங்கள் எடுத்தார்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா  சூறாவளியாக சுழன்றடித்தார். ஏதோ ஒரு முடிவுடன் வந்ததுபோல் அவர் விளையாடினார். 41 பந்துகளில் ரோஹித் அரைசதம் அடித்தார்.   முதல் விக்கெட்டுக்கு 105  ஓட்டங்கள் அடித்த நிலையில் கிளன் பிலிப்ஸ் வழக்கம் போல பறந்து ஒரே கையால் பிடித்து 31 ஓட்டங்களுடன் சுப்மன் கில்லை வெளியேற்றினார்.

பிரெஸ்வெல்லின் பந்தில் ஒரு ஓட்டம் எடுத்த கோலி எல்.பி.டபிள்யுவில் ஆட்டமிழக்க இந்திய ரசிகர்கள் சோகமடைந்தனர். நியூசிலாந்து வீரர்கள் ஆர்ப்பரித்தனர். 'ரிவியு' கேட்டும்   கோலியின் ஆட்டமிழப்பு உருதியானது. சிறிது நேரத்தில் ரோகித்  76 ஓட்டங்களுடன் வெலியேற  பதற்றம் அதிகரித்தது.

ஸ்ரேயாஸ், அக்சர் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஓட்டங்களைச் சேர்த்தது. பிலிப்ஸ் ஓவரில் ஸ்ரேயாஸ் அடித்த பந்து 'லாங்-ஆன்' திசையில் நின்ற ஜேமிசன் கைக்கு நேராகச் சென்றது.  அவர் 'கேட்ச்சை' நழுவவிட்டார். 48 ஓட்டங்கள் அடித்த ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்

அக்ர் படேல் 29, ஹர்திக் பாண்ட்யா 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய லோகேஷ் ராகுல், அணியை கரை சேர்த்தார். ரூர்கே பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரவிந்திர ஜடேஜா, வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து 254 ஓட்டங்கள் எடுத்து  வெற்றி பெற்றது.

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 15வது முறையாக ரோஹித் நாணயச் சுழற்சியில் தோல்வியடைந்தர்.  ஒருநாள் அரங்கில் அதிக முறை 'டாஸ்' வெல்லாத கப்டன் பட்டியலில் முதலிடத்தை  லாரா பகிர்ந்து கொண்டார் ரோஹித்.இருவரும் 12 முறை தோல்வியடைந்தன.

இறுதிப் போட்டியில் நேற்று இந்திய வீரர்கள் நான்கு 'கேட்ச்சை' நழுவவிட்டனர்.ஷமி வீசிய பந்தை  நேராக அடித்தார் ரச்சின். இது ஷமியின் விரலில் பட்டு 'கேட்ச்' நழுவியது. வலியால் அவதிப்பட்ட ஷமிக்கு 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை அளித்தார்.  வருண் சக்ரவர்த்தி பந்தை ரச்சின் துாக்கி அடிக்க, எல்லையில் இருந்து ஓடி வந்த ஸ்ரேயாஸ் 'கேட்ச்சை' கோட்டைவிட்டார்.  ஜடேஜாவின் பந்தில்   பிலிப்ஸ் கொடுத்த 'கேட்ச்சை' எல்லையில் கோட்டைவிட்டார் சுப்மன் கில்.

ஐ.சி.சி., ஒருநாள் தொடரின் 'நாக்-அவுட்' போட்டியில் (உலக கோப்பை அல்லது சம்பியன்ஸ் டிராபி) இரு அணிகளின் துவக்க ஜோடியும் 50 ஒட்டங்களுக்கு  மேல் எடுத்தது 2வது முறையாக அரங்கேறியது.   நியூசிலாந்தின் யங்-ரச்சின் 57  ஓட்டங்கள் அடித்தனர். இந்தியாவின் ரோகித்-சுப்மன் 105  ஓட்டங்கள் எடுத்தனர்.

 இதற்கு முன் இந்தியா-பாக்., மோதிய உலக கோப்பை காலிறுதியில் (1996, மார்ச் 9, பெங்களூரு) துவக்க ஜோடிகள் (சச்சின்-சித்து 90, அன்வர்-சோகைல் 84  ) எடுத்தனர்.

சம்பியன்ஸ் தொடரில்  அதிக ஓட்டங்கள் விட்டுக் கொடுத்த இரண்டாவது இந்திய வீரரானார் ஷமி  ஷமி(9 ஓவர், 1/74). முதலிடத்தில் உமேஷ் யாதவ்(2/75, எதிர், தென் ஆப்ரிக்கா, கார்டிப், 2013) உள்ளார்.

இந்திய 'ஸ்பின்னர்'கள்   37.3 சதவீத பந்துகளை 'ஸ்டம்ப்சை' தாக்கும் வகையில் துல்லியமாக வீசினர். 38 ஓவர்களில் 144 ஓட்டங்கள் மட்டும் மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினர்.

 38 ஓவர் வீசி ஒருநாள் அரங்கில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அதிக ஓவர் வீசியதில், மூன்றாவது இடம்  பிடித்தனர். . முதல் இரு இடங்களில் 41.2 ஓவர் (எதிர், வெ.இ., இந்துார், 2011), 30 ஓவர் (எதிர்,கென்யா, குவாலியர், 1998) உள்ளன.

  சாம்பியன்ஸ் டி கிண்ண  அரங்கில் அதிக ஓவர் 'ஸ்பின்னர்'கள் வீசிய அணிகளின் பட்டியலில் இந்தியா (38 ஓவர்) இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் இலங்கை (39.4 ஓவர், எதிர், ஆஸி., கொழும்பு, 2002, அரையிறுதி) உள்ளது.

நியூசிலாந்து வீரர் வில்லியம்சனின் தொடை தசையில் காயம் ஏற்பட்டது. 'பீல்டிங்' செய்ய வரவில்லை. மாற்று வீரராக மார்க் சாப்மேன் களமிறங்கினார்.


நாதன் ஸ்மித் பந்தில் (5.3வது ஓவர்) ஒரு இமாலய சிக்சர் (92 மீ., துாரம்) அடித்த ரோகித், ஒருநாள் அரங்கில் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் (344 சிக்சர், 273 போட்டி) உள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தானின் அப்ரிதி (351 சிக்சர், 398 போட்டி) உள்ளார்.

  3வது ரன்னை எடுத்த போது நியூசிலாந்துக்கு எதிராக 1000  ஓட்டங்கள் எட்டினார் ரோகித்.* ஒருநாள் அரங்கில் கப்டனாக 2,500 ஓட்டங்கள் கடந்தார் ரோகித்.

நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் ஃபைனலில் வெற்றி பெற்று இந்தியா புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன் 2000 சம்பியன்ஸ் ட்ராபி, 2021 டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்களில்நியூஸிலாந்திடம்  இந்தியா தோல்வியையே சந்தித்தது. 3 சம்பியன்ஸ் ட்ராபிகளை (2002, 2013, 2025*) வென்ற முதல் அணி என்ற மாபெரும் சரித்திர உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது இதற்கு முன் அவுஸ்திரேலியா 2 கோப்பைகளை வென்றதே  முன்னைய  சாதனை. 

Friday, March 7, 2025

இந்தியா நியூஸிலாந்து நேருக்கு நேர் புள்ளி விபரம்


சம்பியன் கிண்ண  இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்தும்  துபாயில் மோத  உள்ளன.   இந்திய அணி நியூசிலாந்து அணியை லீக் போட்டியில் வீழ்த்தி இருந்தாலும் ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து அணியின் கையே ஓங்கி இருக்கிறது.

இந்திய அணி அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக மூன்று முறை சம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியை எட்டிய முதல் அணி என்கிற வரலாறு படைத்தது.  நியூசிலாந்து அணி தங்களது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவும் நியூசிலாந்தும் நான்கு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் நியூசிலாந்து அணி முன்னணியில் உள்ளது. நியூசிலாந்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளும் 2000 சம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும், 2019ஆம் ஆண்டும், 2023  ஆம் ஆண்டு உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியிலும், 2021 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் நேருக்கு நேர் மோதியுள்ளன. 2023 உலகக் கிண்ண  அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை வென்றுள்ளது. இது தான் நியூசிலாந்து அணியை இந்திய அணியை நாக் அவுட்டில் வென்ற ஒரே போட்டியாகும்.

2021 ஆம் ஆண்டு நடந்த உலகடெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப்  போட்டிகளில் இந்தியாவும் நியூசிலாந்தும் இது வரை இரண்டு முறை மோதியுள்ளன.அதில் இரு  அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்திய அணி 2000 ஆம் ஆண்டு நடந்த சம்பியன்ஸ்   இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதியது, இதில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. அதன் பின்னர் தற்போது நடந்த லீக் போட்டியில் இந்திய அணி 44 ஓட்டங்களில்  வெற்றி பெற்றது. 

ஒரு நாள் உலகக்கிண்ணப் போட்டியில்  இரு அணிகளும் 10 முறை மோதின. இதில் நியூசிலாந்து 5 முறையும் இந்திய அணி 4 முறையும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண  அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  அந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் கப்டன் எம்.எஸ் டோனியின் கடைசி ஒரு நாள் போட்டியாக அமைந்தது.

ஐசிசி  ரி20 உலகக் கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து இந்தியாவை ஆதிக்கம் செலுத்தி வருகிறது, இது  இரு அணிகளும் மூன்று முறை மோதியுள்ளன அந்த மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.

    இரு அணிகளும் ஐசிசியின் தொடர்களில் மொத்தம் 16 முறை நேருக்கு மோதியுள்ளன, இதில் நியூசிலாந்து அணி 10 முறையும் இந்திய அணி 5 முறையும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு பெரும் தலைவலியாகவே  இருந்துள்ளது.