Saturday, September 20, 2014

தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் தீர்ப்பு

பெங்களூர் சிறப்புநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெறும் வருமானத்துகு அதிகமாகச் சொத்துச்சேர்த்த வழக்கின் தீர்ப்பு  ஜெயலலிதாவின் தலைவிதியை மட்டுமல்லாது தமிழகத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகிறது. ஜெயலலிதா,அவரின் உடன் பிறவாசகோதரி சசிகலா, இளவரசி,ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகர் ஆகியோருக்கு எதிராக  1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி  சுப்பிரமணியன் சுவாமியால் தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 18 வருடங்களின் பின்னர் அறிவிக்கப்படப்போகிறது.

ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி தெரிவித்தால் ஜெயலலிதாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் லைமைக்கு போட்டி ஏற்படும். அவர் நிரப‌பாராதிஎவிடுவிக்கப்பட்டால் திராவிடமுன்னேற்றக் த்துக்கு பாரியசிக்கல்நிலை உண்டாகும்.
ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு எப்படி இருந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தனக்குச் சார்பாகப் பிரசாரத்தை ஆரம்பித்துவிடும். குற்றவாளி எனத்தீர்ப்பளிக்கப்பட்டால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசியல் பழிவாங்கல் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படும். நிரபராதி என்றால் வெற்றிக்கொண்டாட்டம் விண்ணைத் தொட்டுவிடும்.ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கு சுப்பிரமணியன் சுவாமியால் தாக்கல்செய்யப்பட்டதென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொ ண்டர்களுக்குத் தெரியாது.


 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முலமைச்சராக ஜெயலலிதா வீற்றிருந்தபோது வருமானத்துக்கு அதிக மாக சொத்துச் சேர்த்ததாக சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்தார் . அந்தமனு விஸ்வரூபமெடுத்து மாநிலம்தாண்டிய வழக்காக மாறியது. முதமைச்சராகஇருந்தஜெயலிதா மாதம் ஒரு ரூபா ம்பம் பெற்றார்.1991 ஆம் ஆண்டு 2 கோடியே  ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபா சொத்து இருந்ததாகதெரிவித்தார். 1996 ஆம் ஆண்டு அவருடையசொத்தின் திப்பு 66 கோடியாகஅதிகரித்தது. இன்று அச்சொத்தின் திப்பு 2847 கோடி ரூபா எனதிப்பிடப்பட்டுள்ளது




உடன்பிறவாச் சகோதரி சசிகலா அவரது உறவினர் இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் பலமடங்கு அதிகரித்தனஜெயலலிதாவால் வளர்ப்பு மகனாக சுவீகரிக்கப்பட்ட சுதாகரனுக்கு 100 கோடி ரூபா செலவில் திருமணம் நடைபெற்றது. இவை எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவில் குறிப்பிடப்பட்டன.  18வருடகால இடைவெளியில் இந்திய நாடாளுமன்றத்துக்கு ஐந்துதேர்தல்கள் நடைபெற்றுள்ளன.தமிழக சட்டசபை மூன்று தேர்தல்களைச் சந்தித்த‌து. வலுவான‌ ஆதாரங்களுடன் ஜெயலலிதாவுக்கு எதிராக மனுச்செய்த சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார்.அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது ஜெயலலிதாவின் கொள்கை.

  தமிழகத்திலும் பெங்களூரிலும் நடைபெற்ற இந்த வழக்கை தாமதப்படுத்துவதிலேயே எதிரிகள் முனைப்பாக இருந்தனர். நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் கடுப்படைந்தனர். நீதிபதிகள்எதிரிகளை டுமையாகஎச்சரித்தர். பெங்களூர் சிறப்புநீதி ன்றத்தில் நான்கு நீதிபதிகள் மாறிவிட்டர். அரப்பு க்கறிஞர் வெறுப்படைந்து வெளியேறிவிட்டார். உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் ஆகியற்றின் நீதிபதிகள் மாறிவிட்டர்க்கிலே ம்பந்தப்பட்டஅதிகாரிகள் ஓய்வுபெற்றுவிட்டர். க்கின்தீர்ப்பு வெளியாவற்கு  இப்போதுதான் நாள்குறிக்கப்பட்டுவிட்டது.

இந்தநிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெறும் வழக்கில்  அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.1991 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டுவரை வருமானவரி தாக்கல் செய்யாத வழக்கில் சமாதானமாகப்போக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது   

ஜெயலலிதாவின் ஆதரவாளர்களும் எதிரிகளும் தீர்ப்பின் நாளை  திகிலுடன் எதிர்பார்த்துள்ளனர். நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் பதவி பறிக்கப்படும் சட்டம் அமுலில் உள்ளது.ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் அவரது பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டுவிடும். இது ஜெயலலிதாவுக்கு மட்டுமல்லாது தமிழகத்துக்கே அவமானமாகும். குற்றவளியாக அறிவிக்கப்பட்டதால் லல்லு பிரசாத் உட்பட பல அரசியல் தலைவர்கள் பதவி இழந்தனர்.2001  ஆம் ஆண்டு பிளசன் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டபோது பன்னீர்ச்செல்வத்தை முதலமைச்சராக்கினார்.மேன் முறையீடு செய்தபின்னர் ஜெயலலிதா முதல்வரானார். இப்போதைய சட்டத்தால் அப்படிச்செய்யமுடியாது. மேன்முறையீடு செய்தாலும்  நிரபராதி என தீர்ப்பு வழங்கப்படும் வரை பதவி ஏற்கமுடியாது. 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா  குற்றவாளியாகதீர்ப்பளிக்கப்பட்டபின்னர் மிழமே ற்றி எரிந்தது.ர்மபுரியில் ஸ்ஸுடன் சேர்த்து மூன்று மாணவிகள் கொளுத்தப்பட்டர்.சிட்டி சிவில் கோர்ட் வளாகத்துக்கு மிக பெரிய அளவில் மக்கள் வந்து செல்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, குவாரி முறைகேடு வழக்குக்காக வந்தபோது பத்திரிகையாளர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டதால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டது. 150 பேர் மீது வழக்கு போட்டு சி.பி. விசாரித்து வருகிறது. என்றும் ஜெயலலிதா நீதிபதிக்கு சுட்டிக்காட்டி உள்ளார்.என்றும் ஜெயலலிதா நீதிபதிக்கு சுட்டிக்காட்டி உள்ளார்

20 ஆம்திகதியும் நீதிமன்றமும் ராசியானது இல்லை என ஜெயலலிதா நினைக்கிறார்.ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக.நீதிமன்றத்தைமாற்ற நீதிபதி ம்மதம் தெரிவித்து 27 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 27 ஜெயலலிதாவுக்கு ராசியான இலக்கம். தீர்ப்பு வழங்கப்படும் நாளன்று  எதிரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 தீர்ப்பு வழங்கப்படும் நாள் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களுக்கும் எதிரிகளுக்கும் மிகமுக்கியமான நாளாக அமையப்போகிறது.முதலமைச்சர் கனவில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர்கள் சிலர் மிதக்கின்றனர். ஜெயலலிதா விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்களின் விருப்பம்.


Thursday, September 11, 2014

நான் ரசித்த பாடல்


நான்  ரசித்த‌  பாடல்


படம்; பாரதி கண்ணம்மா
பாடல்;பூங்காற்றே.....
பாடியவர்;கே.ஜே.ஜேசுதாஸ்
இசை;தேவா



காதலர்கள் இறந்து போகலாம் காதல் என்றும் இறந்து போவதில்லை.பூமி சுற்றும் வரை, சூரிய சந்திரன் காயும் வரை காதல் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும். சாதி, மதம்,பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்கள் காதலர்களின் உடலைத்தான் பிரிப்பார்கள். ஆனால், அவர்களின் காதலை பிரிக்க முடியாது. அழிக்கவும் முடியாது.

பூங்காற்றே..பூங்காற்றே பூவிடம் நீ செல்லு.. 
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு 
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது 
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது 

சாதி,ம்,ம் இவை எவையும் நிஜக்காதலுக்குத்தெரியாது.விழியில் விழுந்து இதம் புகுந்து இரு ம் இணைவதே காதல்.இங்கே ஏழைக்காதன்தன்காதலிக்கு பூங்காற்றுமூலமாகத்தூது விடுகிறான். சாதி,தம்பார்க்காமல் இணந்தகாதர்கள் மாண்டுபோய்விட்டர். அதற்குச்சாட்சி ல்லறைகள். ஆனாலும், காதல் வாழ்ந்துகொண்டேஇருக்கிறது. மனச்சாட்சி  இல்லாதனிதர்களின் த்தியில் என்மீது காதல் கொண்டு ங்கித் விக்கிறாயே நீ ங்கினால் நான் தாங்குவேனோ?


வேரும் கோவில் இங்கே ஏன்மா விளக்கேற்றினாய் 
விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய் 
விளையாத மண்ணில் ஏன்மா விதை தூவினாய் 
வெயில் கால கானல் நீரில் வலை வீசினாய் 
அறியாமல் பிழை செய்தாய் 
மணலாலே சிலை செய்தாய் 
அடி பாரதி கண்ணம்மா 
மனம் கலங்குவதேனம்மா
(பூங்காற்றே.....


ஏழை எனக்கும் உனக்கும் ஒத்துப்போகுமா? அப்படி நாம் சேர்ந்தாலும் மூடனிதர்கள் ம்மைச்சேரவிடுவார்களா? சாமியே இல்லாதஆலத்தில் விளக்கேற்றினாய்.எப்படியம்மா சாமி ம்  ரும்.பூங்கொடியே நீ சிலையை உருவாக்கி ம் கேட்கநினைக்கிறாய். நீ ணலால் அல்லவா சிலை செய்யநினைக்கிறாய்.



வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம் 
வலையாடும் கைகள் தொட்டு விளையாடலாம் 
இடைவேளை போலே இந்த பிரிவாகலாம் 
இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம் 
இளம் பூவே வருந்தாதே 
உலகம்தான் திருந்தாதே 
அடி பாரதி கண்ணம்மா 
நீ பாரத பெண்ணம்மா....
இது பாழ் பட்ட மண்ணம்மா

(பூங்காற்றே.....)


இந்த ஜென்மத்தில் எமக்கு காதல் வேண்டாம்  .அடுத்தஜென்மத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், உன் மீது உள்ள நிஜமான காதலால் சொல்கிறேன். அடுத்த ஜென்மத்தில் நீயும் நானும் காதலித்து
அன்பால் வென்று ஒன்று சேர்ந்து வாழ்வோம். அப்போது எமது உண்மைக்காதலை உலகுக்கு உணர்துவோம். இப்போது எமக்கு காதல் வேண்டாம்.


இந்த உலகம் திருந்தாது கண்மணியே. நீ பாரதி கண்ட புதுமைப்பெண்.

ஞா.கவிதா,நெல்லியடி


மெட்ரோ நியூஸ் 04/08/2004