Sunday, May 31, 2009

திரைக்குவராதசங்கதி 11


அடிமைப் பெண் படத்தின் கதாநாயகி ஜெயலலிதா பாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அம்மா என்றால் அன்பு எனும் பாடலை மெட்டமைத்து ஒலிநாடாவில் ஜெயலலிதாவிடம் கொடுக்கப்பட்டது. அவர் பாடிப் பயிற்சி பெற்ற பின்னர் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
கே.வி. மகாதேவனின் உதவியாளரான புகழேந்தி, கவியரசு கண்ணதாசனின் பல கவிதைகளை பொருத்தமான இடங்களில் திரைப்படப் பாடலாக்கினார். ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் என்ற கவிதையை வசந்த மாளிகையில் திரைப்படப் பாடலாக்கினார் புகழேந்தி. இரண்டு மனம் வேண்டும் என்ற பாடலின் இடையே வரும் கடவுளைத் தண்டிக்க என்ன வழி என்ற வரியை புகழேந்திதான் கூறினார்.
சங்கராபரணம் படப் பாடல்களுக்காக கே.வி. மகாதேவனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அப்படத்தில் பாடல்களைப் பாடுவதற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தயங்கினார். அவரை ஊக்கப்படுத்தி பாட வைத்தவர் கே.வி. மகாதேவனின் உதவியாளர் புகழேந்தி.
தெலுங்குப் படமான சங்கராபரணத்தின் பாடல்கள் மொழி தெரியாதவர்களையும் ரசிக்க வைத்தது. கிராமியப் பாடல்களை அப்படியே மனதில் பதிய வைத்தவர் கே.வி. மகாதேவன்.
தமிழ்த்திரை உலகை இசை விற்பன்னர்கள் ஆக்கிரமித்திருந்தவேளையில் இசை அறிவு இல்லாத பாமரர்களை கவர்ந்தவர் என்.எஸ். கிருஷ்ணன். தனது நகைச் சுவை நடிப்பாலும் பாட்டினாலும் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் என்.எஸ். கிருஷ்ணன். என்.எஸ். கிருஷ்ணனுக்கு பின்னர் பாமரர்களை தன் பக்கம் திருப்பியவர் ஜே.பி. சந்திர பாபு.
நடிகர், பாடகர், தயாரிப்பாளர் கதாசிரியர், இயக்குநர் என ஒரே நேரத்தில் தனது பரிமாணங்களை வெளிப்படுத்தியவர்.
ஜே.பி. சந்திரபாபுவின் சோக, தத்துவ, நகைச்சுவைப் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதில் சட்டென பதிந்தன. தமிழுடன் ஆங்கிலச் சொல்லையும் கலந்து சந்திரபாபு ஆடிப்பாடிய பாடல்களும் மக்களை பெரிதும் கவர்ந்தன.
தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரரான ஜோசப் ராட்சிக் என்பவரின் மகன் தான் சந்திரபாபு. அவர் பிறந்து சில நாட்களிலேயே விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். குழந்தை தப்புமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. தாயும் தகப்பனும், "ஏசுவே இந்தக் குழந்தை நீர் எமக்குக் கொடுத்த பிச்சை, குழந்தையை உயிர் பிøழக்கச் செய்தருளும், குழந்தைக்குப் பிச்சை எனப் பெயரிடுகிறோம்' என்று முழந்தாளிட்டு இயேசுவிடம் மன்றாடினர். அந்த மன்றாட்டத்தினால் தப்பிப் பிழைத்த குழந்தைக்கு ஜோசப்பிச்சை எனப் பெயரிட்டனர். சந்திர பாபுவுக்கு முன்னால் ஜோசப் பிச்சையின் முதல் எழுத்துக்கள் ஒட்டிக் கொண்டதால் ஜே.பி. சந்திரபாபு ஆனார்.
திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் சினிமா கம்பனிகளில் ஏறி இறங்கிய இளைஞர்களில் ஜே.பி. சந்திரபாபுவும் ஒருவர். ஓர் இடத்தில் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஸ்ரூடியோவை நோக்கிச் சென்று தமது சந்தர்ப்பத்தைத் தேடிக் கொள்ளாமல். விதிவிலக்காக தற்கொலைக்கு முயன்றார் ஜே.பி. சந்திரபாபு.
1947 ஆம் ஆண்டு மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா இயக்கிய தன அமராவதியில் அறிமுகமானார் ஜே.பி. சந்திரபாபு. அந்தப்படத்தில் மாணிக்கம் செட்டியாராக புலிமூட்டை ராம சாமி ரத்தினம் செட்டியாராக ஜே.பி. சந்திரபாபுவும் நடித்தார்கள். ஜே.பி. சந்திரபாபு அறிமுகமான படம் என்பதைத் தவிர வேறு விஷேசம் அந்தப் படத்துக்கில்லை.
ஜெமினி ஸ்ரூடியோ தயாரிக்கும் படத்தில் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி அதிபர் எஸ். எஸ். வாசனிடம் ஜே.பி. சந்திரபாபு வேண்டுகோள் விடுத்தார். சந்திர பாபுவின் வேண்டுகோளை எஸ்.எஸ். வாசன் நிராகரித்ததால் மனம் வெதும்பி யெமினி ஸ்டூடியோ வாசலில் நஞ்சருந்தினார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜே.பி. சந்திரபாபுவை ஜெமினி ஸ்டூடியோவின் உதவியாளராக வேலை செய்த ஜெமினி கணேசன் வைத்தியசாலையில் சேர்த்தார். அவரின் கையில் இருந்த கடிதத்தை ஜெமினி ஸ்üரூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனிடம் சேர்த்தார்.
திருவாசன் அவர்களுக்கு நான் ஒரு சான்ஸ் கேட்டேன். நீங்கள் முடியாதுன்னு சொல்லிவிட்டீர்கள். என்னை மாதிரி நல்லா நடிக்கத் தெரிந்தவனுக்கு நீங்க சான்ஸ் கொடுக்காதது ரொம்ப தப்பு. இத்தனை பெரிய ஸ்டூடியோவிலே எனக்கு சான்ஸ் கிடைக்கல நான் ஒழிந்து போறேன், செத்துப்போறேன்'' என எழுதி இருந்தது.
1947 ஆம் ஆண்டு மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா இயக்கிய அமராவதியில் அறிமுகமானார் ஜே.பி. சந்திரபாபு. அந்தப்படத்தில் மாணிக்கம் செட்டியாராக புளிமூட்டை ராம சாமியும் ரத்தினம் செட்டியாராக ஜே.பி. சந்திரபாபுவும் நடித்தார்கள். ஜே.பி. சந்திரபாபு அறிமுகமான படம் என்பதைத் தவிர வேறு விஷேசம் அந்தப் படத்துக்கில்லை.
ஜெமினி ஸ்ரூடியோ தயாரிக்கும் படத்தில் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி அதிபர் எஸ். எஸ். வாசனிடம் ஜே.பி. சந்திரபாபு வேண்டுகோள் விடுத்தார். சந்திரபாபுவின் வேண்டுகோளை எஸ்.எஸ். வாசன் நிராகரித்ததால் மனம் வெதும்பி ஜெமினி ஸ்டூடியோ வாசலில் நஞ்சருந்தினார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜே.பி. சந்திரபாபுவை ஜெமினி ஸ்டூடியோவின் உதவியாளராக வேலை செய்த ஜெமினி கணேசன் வைத்தியசாலையில் சேர்த்தார். அவரின் கையில் இருந்த கடிதத்தை ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனிடம் சேர்த்தார்.
திரு வாசன் அவர்களுக்கு நான் ஒரு சான்ஸ் கேட்டேன். நீங்கள் முடியாதுன்னு சொல்லிவிட்டீர்கள். என்னை மாதிரி நல்லா நடிக்கத் தெரிந்தவனுக்கு நீங்க சான்ஸ் கொடுக்காதது ரொம்ப தப்பு. இத்தனை பெரிய ஸ்டூடியோவிலே எனக்கு சான்ஸ் கிடைக்கல நான் ஒழிந்து போறேன், செத்துப்போறேன்'' என எழுதி இருந்தது.
சந்திரபாபுவின் கடிதத்தைக் கண்டு கலங்கிய ஏ.வி. மெய்ப்பச் செட்டியார் "ராஜி என் கண்மணி' என்ற படத்தில் நடிப்பதற்கு சந்தர்ப்பம் கொடுத்தார்.
1965ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் போது இந்திய இராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்டுவதற்காக தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் எல்லைப் பகுதிக்குச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தினார்கள்.
சிவாஜி, பத்மினி, சாவித்திரி, ஜெயலலிதா, கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோருடன் சந்திரபாபுவும் சென்றிருந்தார். அவர்கள் சென்னை திரும்பும் வழியில் இந்திய ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர்.
அப்போது ""பிறக்கும்போதும் அழுகின்றான் இறக்கும் போதும் அழுகின்றான்'' என்ற பாடலை சந்திர பாபு பாடினார். அபாடலில் மெய் மறந்த ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ""அடடா என்ன அர்த்தம் என்ன அர்த்தம்'' என்று பாராட்டினார். அவரின் பாராட்டுதலினால் உற்சாகமடைந்த சந்திரபாபு ஜனõதிபதியின் மடியில் உட்கார்ந்து தோளில் கைபோட்டு தாடையைப் பிடித்து ""நீ ரசிகன்டா கண்ணு'' என்று பாராட்டினார்.கவிஞர் கண்ணதாசன் "கவலை இல்லாத மனிதன்' என்ற படத்தைத் தயாரித்தபோது அதில் நாயகனாக நடித்த சந்திரபாபு கொடுத்த தொல்லைகள் அதிகம். அதனை மனதில் வைத்துத்தான் ""புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை'' என்ற பாடலை கவிஞர் எழுதினார் என்ற ஊகம் திரை உலகில் உள்ளது.
கண்ணதாசனின் அந்த பாடலுக்கு ""என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா'' என்ற பாடலை மருதகாசி மூலம் சந்திரபாபு பதிலளித்தார் என்றும் சிலர் கருதுகிறார்கள்.




சில வருடங்களின் பின்னர் ""சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயøலப் பார்க்க சிரிப்பு வருது'' என்ற கண்ணதாசனின் பாடலை ஜே.பி. சந்திரபாபு பாடினார்.
சிவாஜி சந்திரபாபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த படம் "சபாஷ் மீனா'. இப்படத்தில் சந்திரபாபு இரட்டை வேடத்தில் நடித்தார். ரிக்ஷாக்காரனாக சந்திரபாபு மெட்ராஸ் பாஷையில் பேசி ரசிர்களைக் கவர்ந்தார். "சபாஷ் மீனா' படத்துக்காக சந்திரபாபு பாடிய பாடல்தான் ""குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே'' பி.ஆர். பந்துலுவுடன் சந்திரபாபுவுக்கு ஏற்பட்ட பிரச்சிசனை காரணமாக அவருக்குத் தெரியாமலே அப்பாடலை "மரகதம்' படத்தில் பாடிவிட்டார் சந்திரபாபு.
திறமையான கலஞர் சந்திரபாபு அவரது பிடிவாதமும் தலக்கணமும் வாழ்வில் ஏற்பட்ட விரக்தியாலும் மதுவிடம் சரணடைய வைத்தது.


""அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வாராததேனோ'' என்ற காலத்தால் அழியாத பாடலைத் தந்தவர் இசை அமைப்பாளர் டி.ஜி. லிங்கப்பா. தனது 14 வயதில் தமிழ்த்திரை உலகில் நுழைந்த டி.ஜி.லிங்கப்பா அதிக பாடல்களுக்கு இசை அமைக்கவில்லை என்றாலும் அவர் இசை அமைத்த படப் பாடல்களில் அதிகமானவை ரசிகர்களின் மனதை விட்டு நீங்காதவை.
டி.ஜி.லிங்கப்பாவின் தகப்பனின் பெயர் திருச்சி கோவிந்தராஜூலு நாயுடு. திருச்சியிலே இசைக் கருவிகளும் கிரமபோன் ரெக்கார்ட்டுகளும் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தவர். சங்கீத ஞானம் கை வரப் பெற்றவர். அந்தக் காலத்தில் ஸ்பெஷல் நாடங்களுக்கு சிறப்பு ஆர்மோனியம் வாசிப்பதற்கு இவரைப் பலரும் தேடிச் செல்வார்கள்.
கே.பி.சுந்தராம்பாளுக்கு இசை கற்பித்த கோவிந்தராஜூலு நாடகங்களையும் மேடையேற்றினார். இசைக்கருவிகள் விற்பனை செய்யும்கடையையும் நடத்தினார் கடையில் இசைக்கருவிகள் நிறைந்திருந்தமையினால் கோவிந்தராஜூலுவின் இரண்டாவது மகன் டி.ஜி. லிங்கப்பா கிற்றார், மெடலின் போன்ற இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார். தகப்பனின் ஆர்மோனியத்தை கற்றுத் தேர்ந்த லிங்கப்பாவுக்கு கிற்றார், மெடலின் ஆகியவை வாசிப்பது இலகுவானதாக இருந்தது.
நாடகங்கள் மேடை÷யற்றியதால் ஏற்பட்ட நஷ்டமும், வாத்தியக்
கடையின் வியாபார வீழ்ச்சியும் கோவிந்தராஜூலு குடும்பத்தை திருச்சியிலிருந்து சென்னைக்கு மாற்றியது. சென்னைக்குச் சென்றதும் திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் வாய்ப்புத்தேடி அலைந்தார். டி.ஜி. லிங்கப்பா இயக்குநர் சுப்பிரமணியத்தின் சகோதரர் விஸ்வநாதன் காமதேனு என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதை அறிந்து அங்கு சென்றார். டி.ஜி.லிங்கப்பாவுக்கு பாடத் தெரியுமா என்பதை அறிவதற்காக பாடும் படி கேட்டார் விஸ்வநாதன். நடிக்கும் ஆர்வ மேலீட்டினால் தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடிக்காட்டினார் டி.ஜி.லிங்கப்பா. டி.ஜி. லிங்கப்பாவின் பாடல் பிடித்திருந்ததனால் தன்னுடன் இருக்கும் படி கூறினார் விஸ்வநாதன். நான்கு மாதங்கள் கடந்தும் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கான அறிகுறி தென்படவில்லை. இதனால் மனம் வெறுத்த லிங்கப்பா தனக்கு தெரிந்த சங்கீதத்தின் மூலம் முன்னேற முடிவு செய்தார். காமதேனு என்னும் படத்தில் வீணை எஸ்.
பாலச்சுந்தர் நடித்தார். அப்போது அவருக்கு 14வயது. டி.ஜி.லிங்கப்பாவுக்கும் அப்போது 14 வயதுதான்.
கோபால் சர்மா, தாமேஸ் வரசர்மா ஆகிய சகோதரர்கள் சர்மா பிரதர்ஸ் எனும் பெயரில் இசைக்குழு நடத்தி வந்தார்கள். தமிழ், தெலுங்கு திரைப்படங்களுக்கும், கிரமபோன் ரெக்கார்ட்டுகளுக்கும் இவர்கள் இசை வழங்கி வந்தார்கள். டி.ஜி.லிங்கப்பா அந்த இசைக்குழுவில் இணைந்து கிற்றார், மெடலின், ஆர்மோனியம் ஆகியவற்றை வாசித்தார்கள்.
ஜெமினி ஸ்ரூடியோ வனமோகினி என்ற படம் தயாரித்தது. அந்தப்படத்தின் இசை அமைப்புக்கு வாத்தியக் கலைஞர்கள் தேவை என்பதை அறிந்து அங்கு சென்றார் டி.ஜி.லிங்கப்பா. 40 வயதைக் கடந்தவர்கள் இசைக்கருவிகளை வாசிக்கத் தயாராக இருந்தனர். அவர்களில் சிறுவனான ஜி.லிங்கப்பாவை கண்ட இசையமைப்பாளர் சி. இராமச்சந்திராவுக்கு மூக்குக்கு மேல் கோபம் பறந்தது. இந்தக் சின்னப் பையனை யார் கூட்டிவந்தது என்று சத்தம் போட்டார்.
லிங்கப்பாவும் மனம் நொந்தார். சிறுவனான தனது திறமையை மதிக்கவில்லையென்று வருத்தப்பட்டார். டி.ஜி. லிங்கப்பாவின் இசைஞானத்தைக் கேள்விப்பட்ட இசையமைப்பாளர் டி.ஏ. கல்யாணம் தனது இசைக்குழுவில் சேரவரும்படி டி.ஜி.லிங்கப்பாவுக்கு அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பையேற்று சேலத்தில் உள்ள மார்டன் தியேட்டரில் மாதச் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்தார். அவருக்கு அவர் பேசிய மாதச் சம்பளம் 60 ரூபா. மார்டன் தியேட்டர் டி.ஆர்.பார்ப்பா, கே.வி. மகாதேவன் ஆகியோரின் நட்பு லிங்கப்பாவுக்கு கிடைத்தது

Sunday, May 24, 2009

வெற்றிக்கு வழிகாட்டிய முதல்வரைகைவிட்ட சோனியா காந்தி


பலமான கூட்டணி, வாக்கு வங்கி, பிரசாரப் பீரங்கி போன்ற மாயையுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழக வேட்பாளர்கள் பலருக்கு அதிர்ச்சி வைத்தியமளித்துள்ளனர் தமிழக வாக்காளர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியடையும் என்ற எதிர்பார்ப்புக்களை மீறி வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுத்த தமிழக முதல்வர் எதிர்பார்த்த அமைச்சுப் பதவிகளைக் கொடுக்காது தட்டிக் கழித்து விட்டார் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி. இதனால், வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க தி.மு.க. முடிவு செய் துள்ளது.
எதிர்பார்த்ததை விட அதிகளவில் ஆசனங்களுடன் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள் ளது. புதிய அமைச்சரவையில் இடம்பெறப்போகிறவர்கள் பற்றிய விபரங்களை அறிய கட்சித் தொண்டர்கள் ஆவலாக உள்ளனர். தமிழகத்துக்கு எத்தனை மந்திரிப் பதவிகளை சோனியா ஒதுக்குவார், திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு எத்தனை மந்திரிப் பதவி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தில் இருந்து 9 பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். மத்திய மந்திரி பதவியை அலங்கரிக்கும் மணிசங்கர் அய்யர் போன்றவர்கள் தோல்வியடைந்தனர். மந்திரிப் பதவியில் குறி வைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அணி மாறி படுதோல்வியடைந்தது. பா.ம.க. கட்சிக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒதுக்கப் பட்ட அமைச்சுப் பதவிகளில் ஒன்றாவது தனக்குக் கிடைக்கும் என முதல்வர் கருணாநிதி எதிர்பார்த்தார்.தயாநிதி மாறன், டி.ஆர்பாலு, ராசா ஆகியோருக்கு மந்திரிப் பதவி கொடுக்க வேண்டும். முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி, மகள் கனிமொழி ஆகியோரின் பெயரும் அமைச்சுப் பதவிக்கு பலமாக அடிபட்டது. டி.ஆர்.பாலு. ராசா ஆகியோர் அமைச்சராவதை காங்கிரஸ் கட்சியிலுள்ளவர் கள் சிலர் விரும்பவில்லையெனத் தெரிகிறது.
9 அமைச்சர்கள் வேண்டுமென்பதில் தி.மு.க. உறுதியாக இருந்தது. பேச்சுவார்த்தையின் பின்னர் 7அமைச்சர்கள் என்ற நிலைக்கு திராவிட முன்னேற்றக்கழகம் இறங்கி வந்தது. 6 அமைச்சர்கள் தரலாமென்ற காங்கிரஸின் முடிவால் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப் பதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
ரயில்வே, கப்பல்துறை, ஆகியவற்றை தன்னிடம் தர வேண்டுமென்று தி.மு.க. கோரிக்கை விடுத்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ரயில்வே அபிவிருத்திகளை விரைந்து முடிக்கவும் சேது சமுத்திரத் திட்டத்தை தடையின்றி நிறைவேற்றவும் அத்து றைகள் இரண்டையும் தனக்கு ஒதுக்கும்படி டாக்டர் ராமதாஸ் தி.மு.க. வேண்டுகோள் விடுத்தது.
மிகுந்த நெருக்கடிகளின் மத்தியில் தமிழ கத்தில் எதிர்பார்க்காத வெற்றியைத் தேடிக் கொடுத்த தனது கோரிக்கை உதாசீனம் செய் யப்பட்டதால் முதல்வர் கருணாநிதி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி உயர்மட்டத் தலைவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எதிர்பார்க்காத பிரமாண்டமான வெற்றியைப் பெற்றதால் காங்கிரஸ் கட்சி தம்மை உதாசீனம் செய்கி றது என தி.மு.க. கருதுகிறது.
1967ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் கர்ம வீரர் காமராஜரை தோல்வியடையச் செய்து தனது பெயரை அரசியல் அரங்கில் ஆழமாகப் பதித்த விருது நகர் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வைகோவை புறந்தள்ளி மீண்டும் ஒரு முறை தனது பெயரை ஆழமாகிப் பதித்துள்ளது.
விருது நகரில் வைகோ வீழ்ந்த அதேவேளை தமிழகத்தில் அவருடைய கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழகத்தின் கூட்டணியில் போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்கள் நான்கு பேரும் வெற்றி பெற்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் நான்கு பேர் வைகோவின் கட்சியின் சார்பில் போட்டியிட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றார். அவரை கட்சி மாற்றும் முயற்சியை சிலர் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மிக மோசமாக அடிவாங்கிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சியாகும். வன்னிய சமூகத்தின் பலம் என்ற மாயையுடன் திராவிடக் கட்சிகள் இரண்டையும் தனது ஒப்பந்தத்துக்கு இணங்கச் செய்தவர் டாக்டர் ராமதாஸ். கூட்டணியில் இருந்து இறுதி நேரத்தில் இடம்மாறி நினைத்ததைச் சாதித்த டாக்டர் ராமதாஸின் கட்சியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர்.
தனது மகன் அன்பு மணிக்காக தனது கட்சிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ஜெயலலிதாவு டனான ஒப்பந்தத்தில் கோரியி ருந்தார் ராமதாஸ். படுதோல்வியடைந்த கட்சிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை கொடுப்பதற்கு ஜெயலலிதா விரும்பமாட்டார்.
தமிழகத்திலும், மத்தியிலும் ஆட் சியை அமைக்கும் சக்தி மிக்க கட்சி என்ற பெருமையை பாட்டாளி மக்கள் கட்சி இழந்துள்ளது. தான் இழைத்த தவறைத் திருத்துவதற்கு அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோருடன் ஒப்பிடுகையில் விஜயகாந்த் வளர்ச்சியடைந்துள்ளார். 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட அவரின் கட்சி 10 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு 10 சதவீத வாக்கு போதுமானதல்ல. மாநிலத்தில் உள்ள கட்சியுடன் அல்லது மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால்தான் விஜயகாந்தின் கனவு நிஜமாகும். அவர் தனித்து போட்டியிடுவதால் பிரதான கட்சிகளின் வெற்றி விகிதாசாரம் குறையுமே தவிர, அவற்றை தோல்வியடையச் செய்ய அவரால் முடியாது.
வர்மா
வீரகேசரி 24/05/2009

Friday, May 22, 2009

கைவிடுமா காங்கிரஸ்? கலக்கத்தில் தி.மு.க!?



இந்திய நாடாளூமன்றத்தேர்தலின்போது சோனியாகாந்தியின் தமிழகப்பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து தேர்தலுக்கு இரண்டுநாட்கள் முன்பு விகடன் யுத்ஃபுல் தேர்தல்களத்தில் வெளிவந்த எனதுகட்டுரையை காலத்தின் தேவைகருதி பதிவிடுகிறேன்




கைவிடுமா காங்கிரஸ்? கலக்கத்தில் தி.மு.க!?
- சூரன். ஏ.ரவிவர்மா
தமிழக தேர்தல் களத்தில் அ.தி.மு.க. பிரசாரம் மக்களின் மனதில் பட்டென்று ஒட்டிக் கொண்டுள்ளதனால் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் தடுமாறியிருக்கின்றன.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் வருகையை பெரிதும் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் முதல்வர் கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தால் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்தவர்களின் நம்பிக்கையில் முதலில் இடி விழுந்தது.
காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் கருணாநிதி ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர்.
முதல்வர் கருணாநிதியின் உடல் நிலை முன்னரைப் போல் சுறுசுறுப்பாக இல்லாததனால் அவரால் சூறாவளிப் பிரசாரம் எல்லாம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
மிக முக்கியமான தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்வதற்கு முதல்வர் கருணாநிதி திட்டமிட்டிருந்தார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியுடனான பிரசாரத்தின் பின்னர் தமிழகத்தில் எழுச்சி அலை தோன்றும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு சோனியாவின் தமிழக விஜயம் ஒத்திவைக்கப்பட்டது அதிர்ச்சியளித்தது.
பின்னர், சோனியா தமிழகம் வந்து முதல்வருடன் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டார். அதனால், மக்களின் மனநிலையில் எவ்வித மாற்றமும் அடையவில்லை என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது.
இதனிடையே, இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படும் இவ்வேளையில் அங்கு போர் நிறுத்தத்துக்குரிய ஏற்பாடு செய்யாமல் சோனியா தமிழகத்துக்கு வரக் கூடாது என்ற கூறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்த பழ.நெடுமாறன், பாரதிராஜா போன்றவர்கள் கைது செய்யப்பட்டதும் மக்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுடன் தமிழகம் பல விஷயங்களில் முரண்பட்டுள்ளது. பெங்களூரில் தமிழர்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் கடைகளும் தமிழ்ப் படம் ஓடிய பட மாளிகைகள் அடித்து நொருக்கப்பட்டன. அந்த நிலையிலும் ஆந்திர, கர்நாடக அரசியல்வாதிகளும் தமிழகம் வரக் கூடாது என்று யாரும் தடை போடவில்லை.
இந்திய தேசியக் கட்சியின் தலைவி தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள சிலர் எதிர்ப்பது காங்கிரஸ் கட்சித் தலைவி மீது அவர்கள் கொண்டிருக்கும் வெறுப்புணர்வை வெகுவாக வெளிப்படுத்தியது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் காங்கிரஸ் கட்சியின் மீதே பெரும்பாலும் தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தகையோர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தமது எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொண்டனர். அண்மையில் புதுச்சேரியில் நடந்த எதிர்ப்பு பிரசாரத்தில் இயக்குனர் சீமானின் பேச்சு குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவான தமிழ் உணர்வாளர்களின் பிரசாரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு தெம்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவும் வைகோவும் இலங்கைப் பிரச்னையை கையிலெடுத்து தமது பிரசாரத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் தவறு செய்து விட்டன என்ற இவர்களின் குற்றச்சாட்டுகள் வலுவான காரணங்களால் திராணியற்று திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் தடுமாறுகின்றன.
திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை செய்த சாதனைகளையும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் திட்டங்களையும் பட்டியலிடுவதற்கு எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை.
ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன் ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பதிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் அதிக நேரத்தைச் செலவிட்டது.
தோல்விகளின்போது துவண்டு விழாது வீறு கொண்டு எழுந்த முதல்வர் கருணாநிதி தற்போது சக்கர நாற்காலியில் முடங்கி உள்ளார். வீறுகொண்டு எழ வேண்டும் என்று அவரது மனம் நினைத்தாலும் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.
இந்திய நாடாளுமன்றத்துக்கான தமிழகத் தேர்தல் முடிவு திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குப் படு பாதகமாக அமைந்தால், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படும். அந்த விரிசல் சில வேளை தமிழக சட்டமன்றத்தை ஆட்டம் காண வைக்கும் ஏது நிலை உருவாகும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான காங்கிரஸ் தலைவர்களின் கை அப்போது ஓங்கி விடும்.
ஜெயலலிதா கையில் எடுத்துள்ள 'தமிழீழம்' என்ற பிரமாஸ்திரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சலசலப்பின் மூலமே நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாமென ஜெயலலிதா நினைக்கிறார்.
தேர்தல் முடிந்ததும் இந்தப் பிரமாஸ்திரத்தை ஜெயலலிதா வைத்திருப்பாரா? தூக்கி எறிந்து விடுவாரா? என்பதை யாராலும் கணித்துக் கூற முடியாதுள்ளது.
தமிழகத் தேர்தல் களமும் உடல் நிலையும் முதல்வர் கருணாநிதிக்கு சவாலாக உள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் ஜெயிக்கப்போவது யார் என்பது மே 16-ல் தெரிந்துவிடும்.
அப்போது நமது சந்தேகங்கள் எல்லாம் நிவர்த்தியாகிவிடும்.
ஆனால்...
இலங்கைத் தமிழர்களின் நிலை..???
அப்பிரச்னையில் மட்டும் கேள்விக்குறிகள் தொடரும்!

Sunday, May 10, 2009

விகடன் வாசகர்களின் கருத்து

விகடனில் தேர்தல் 2009 பகுதியில் வாசகப்பத்திரிகையாளர் பகுதியில் நான் எழுதிய கட்டுரை வெளியானது.அதற்கு விகடன் வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே பதிகிறேன்.கட்டுரையைப்படிக்காதவர்களுக்காக அதனைமீண்டும் தருகிறேன்


ஜெயலலிதாவின் பிரசாரத்தால் தடுமாறுகிறார் கருணாநிதி!

- சூர‌ன்.ஏ.ர‌விவ‌ர்மா
இலங்கையில் நடைபெறும் போரால் தமிழக தேர்தல் களம் சூடாகியுள்ளது. மத்திய அரசும், தமிழக அரசும் தத்தமது சாதனைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, இலங்கை விவகாரத்தில் தமக்கு எதிராகக் கிளப்பப்பட்டிருக்கும்
குற்றச்சாட்டுக்களுக்கு பதிலைத் தேடுவதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றன.
மத்திய அரசும், தமிழக அரசும் செய்த தவறுகளையும் இடையில் கைவிட்ட திட்டங்களையும் பட்டியலிட வேண்டிய ஜெயலலிதா, இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிரசாரக் களத்தைத் திசை திருப்பியுள்ளார்.
கடந்த 17 வருடங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தியின் கொலையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு படுதோல்வியையும், காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றியையும் பெற்றுக் கொடுத்த இலங்கை விவகாரம், இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சவாலாக உள்ளது.
இலங்கைப் பிரச்னையில் அதிக அக்கறை காட்டாத ஜெயலலிதா, திடீரென இலங்கைத் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதங்கள் இருந்ததுடன், இலங்கைத் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று கூறினார்.
ஜெயலலிதாவின் நடவடிக்கைகளும் உணர்ச்சி மயமான பேச்சும் தமிழக மக்களைக் கவர்ந்துள்ளதால் தமிழக அரசு அதிர்ச்சியடைந்தது.
ஜெயலலிதாவின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் திடீரென உண்ணாவிரதம் இருந்தார், தமிழக முதல்வர் கருணாநிதி. இலங்கைத் தமிழ் மக்களுக்காக தள்ளாத வயதிலும் உண்ணாவிரதம் இருந்தார் என்ற கருத்துடன் அந்த உண்ணாவிரத நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்தில் உள்ள செல்வாக்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு வரவேண்டும் என்ற
இரட்டைத் தோணியில் தமிழக முதல்வர் கால்வைத்துள்ளார். அதனால் அவர் தடுமாறுகிறார்.
வெற்றி என்ற இலக்குடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள ஜெயலலிதா, வெற்றிக்காக தன்னால் செய்ய முடியாதவற்றையும் பட்டியலிடுகிறார். வைகோ, டாக்டர் ராமதாஸ், இடதுசாரித் தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கை, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக உள்ளது. இலங்கையில் போரை நிறுத்தும் வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இலங்கையில் போரை நிறுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களிடம் உள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களின் துயரைத் துடைக்க வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையில் இருந்து இறங்கி வர வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியைத் துறப்பதற்கு முதல்வர் ஏன் தயங்குகிறார்?
திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களில் பலர் காங்கிரஸ் கட்சியின் பிடிவாதத்தை விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி தவறு செய்கிறது எனத் தெரிந்தும் அதனை எதிர்ப்பதற்கு திராணி அற்றவர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசுடன் ஐந்து வருடங்கள் சகல வசதிகளையும் அனுபவித்து விட்டு தேர்தல் வெற்றிக்காக அணி மாறிய டாக்டர் ராமதாஸ் இன்று காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை தூற்றுகிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசு அமைவதற்கு காரணமாக இருந்த இடதுசாரிகள் தமது கொள்கையுடன் காங்கிரஸ் கட்சி ஒத்துப் போகவில்லை என்பதனால் ஆதரவை விலக்கிக் கொண்டன.
டாக்டர் ராமதாஸும் இடதுசாரித் தலைவர்களும் தமிழக அரசையும், மத்திய அரசையும் விமர்சித்து தமது கருத்துகளைக் கூறுகின்றனர். இவர்களின் பிரசாரம் தமிழக மக்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கும் தனது கட்சிக்கும்
எதிரான பிரசாரங்களை முறியடிக்க வழிவகை தெரியாது தடுமாறுகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
தமிழ் மக்களின் உணர்வுகளின் முன்னால் தமிழக அரசின் சாதனைப் பட்டியல் அடங்கிப்போகும் சூழ்நிலை எழுந்துள்ளது. தமிழக அரசின் அல்லது மத்திய அரசின் சாதனைப் பட்டியலைப் பார்க்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை. இலங்கையில் யுத்தம்
நிறுத்தப்பட்டு விட்டதென்ற செய்தியையே தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கும் வாக்காளர்களை இலங்கைப் பிரச்னை வெகுவாகப் பாதித்துள்ளது. தமிழகத் தேர்தல் முடிவு அவர்களின் கையிலேயே தங்கியுள்ளது. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கான சூழ்நிலைக்கு தமிழக முதல்வர் தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய அரசியலில் மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசு தப்பிப்பிழைப்பது கடினம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியிலிருந்து வெளியேறும் வழிகளை தமிழக முதல்வர் ஆராய்கிறார். தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நெருக்கடி கொடுக்கும் திட்டங்களுடன் தேர்தல் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா!


Lakshmikanthan
சொந்த நாட்டிலேயே தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் ராஜபக்சே அரசுக்கு இந்தியா ஆதரவளிப்பதை வரலாறு மன்னிக்காது.40 தமிழக எம்பிக்களின் ஆதரவில் பதவியில் நீடிக்கும் மத்திய அரசு இதை விட மோசமாக தமிழர்களை அவமானப்படுத்த முடியாது.சொந்த நாட்டின் பாதுகாப்பிற்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடாத பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கையில் இனப்படுகொலைக்கு ஆலோசனை வழங்குவதில் இன்பம் காண்கிறார்கள்.புலிகள் பயங்கரவாதிகளானால் சொந்த நாட்டு மக்களை வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் ராஜபக்சே என்ன அமைதி புறாவா?இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுகவிற்கு ஒரு இடம் கிடைத்தால் கூட அதைவிட அவமானகரமான விஷயம் வேறு எதுவுமில்லை.இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை ஏதோ புலிகளுக்கும் அரச பயங்கரவாத படைகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று ஒதுக்கி விட முடியாது.லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உண்ண உணவின்றி கை கால்களையும் சொந்த பந்தங்களையும் இழந்து வாடும் ஒரு மனிதாபிமான பேரவலத்தை கை காட்டி வேடிக்கை பார்ப்பது இந்தியாவிற்கு அழகல்ல.இந்தியன் எக்ஸ்பிரஸ் ஸ்விஸ் வங்கிகளில் ராஜீவ் குடும்பம் பல கோடிகளை பதுக்கி வைத்திருப்பதை ஆதாரங்களோடு வெளியிட்டுருக்கிறது.இப்படிப்பட்டவர்கள் தமிழர்களுக்கு இறையாண்மை குறித்தும் தேசபக்தி குறித்தும் பாடம் எடுப்பது வெட்க கேடு.க்வாட்ரச்சியை விடுவிப்பதற்கு சோனியா எடுத்த முயற்சிகளை ஈழ தமிழர்களை பாதுகாக்க ஏன் எடுக்கவில்லை என்ற ஜெவின் கேள்வி நியாயமானதே.

Deyeskay

காங்கிரசை எதிர்க்கும் துணிவு எப்படி வரும்? நிறைய உப்பைத் தின்றிருக்கிறார்கள்; தண்ணீர் குடித்துத் தானே ஆக வேண்டும்?

Eniyan Ambigapathy

Dear Editor, Vanakkam.Selvi Jayalalitha's announcements hurting all Tamilans Hearts.Kindly refer her past fifteen years statements.She is always aganist the Tamil Eelam and anti to Ltte activities.To occupy the supreme chair she changes her political stands temperorly.Dr Ramdoss.Vaikko.Left paties and othe allaince parties well known her timely stands.But people not depending any political never belive her false informations.NEVER CAST THEIR VOTES.

Jude

சோனியாவின் தமிழ்நாடு விஜயம் ரத்து என்பதில் இருந்தே கருணாநிதியின் தோல்வி பயம் தொடங்கிவிட்டது, காங்கிரஸ் இம்முறை தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் வெல்லமுடியாது bpயின் கருத்து இன்றே பொய்த்துவிட்டது
Gnana Prakash

இன்னும் எத்தனை காலம்தான் இல௯௯௯ங்கை பிரச்சனையை வைத்து இங்கே அரசியல் நடக்குமோ.

srini m

There is no relation to the title and its article. Looks like a DMK reader had written this article.

Venu

த்முக பதவி பெரிதல்ல என்ரு நினைத்து காங்கிரசுக்கு கொடுதுவந்த ஆதரவை வாபஷ் வான்கீருந்தால் இந்த கதி வந்திருக்குமா?

srinivas

அண்ட புழுகு என்பது கருணாநிதிக்கு கைவந்த கலை. ஆனால் தற்பொழுதோ அனைவரும் அதில் டாக்டர் பட்டம் பெற்று விட்டனர். அதனால் அது எடுபடவில்லை. உண்ணா விரதத்தை கேலி கூத்தாக்கி, இலங்கை பிரச்சனையை அப்பளமாக நொறுக்கி விட்டார். மீடியாக்கள் எல்லாம் பல் இளித்து கருணாநிதிக்கு பல்லவி பாடும் போது, ஜெய லலிதா துணிச்சலாக கருணாநிதியின் கடந்த கால வெட்டி பேச்சுகளையும், காவேரி பிரச்சனை, ஒக்கனேகல், தமிழக வளர்ச்சி திட்டம், இலங்கை பிரச்சனை என்று எதிலுமே உருப்படியாக எதுவுமே செய்யாத கருணாநிதி என பிடி பிடி என பிடிக்கிறார். கருணாநிதி போல் இவரும் பொய்யான வாக்குறுதிகளை பொல பொலவென கொட்டினாலும், கருணாநிதியின் உண்மையான முகத்தை உரித்து காட்டுவதால் மக்கள் ரசிக்கிறார்கள். எம்.ஜி.யாரோ, மற்ற எதிர் கட்சிகளோ இது வரை இதுபோல கருணாநிதி உண்மையாக விமர்சித்தது இல்லை.

naga

எல்லாம் அவரவர் சூழல்........

Venkatesan

Dear friend, Do you think that any of this politicians will do anything for any Tamilian. Leave MK and Soniya. We kind of know what they did and what they did not do. What was madam JJ doing until now? Sitting in Otty and enjoying for Ooty weather for 9 months in a year. She comes out only during election If she wins she will in Kotai if not in Kodanadu. Until last month did she make any statement for Tamil Eelam/ Sri Lankan Tamils? Nothing. Now all of a sudden she got lot of sympathy for her fellow tamilians in sri lanka. It is funny. Make a note. In this election if congress becomes a single major party and they agree to dissolve TN government JJ will join them dumping all Tamil Eelam support. What was Dr Ramadoss doing until now? Enjoyed all power for 4 year 9 months? And now blaming the same government? What did communist do? Did any of them take the issues to the public on the street? Did they do any strike to get attention? Did they take it to UN? They did nothing for Sri Lankan Tamils. What is/was the stand of MrVijayakanth? All of them are doing(Acting) now for vote. So DO NOT DECIDE YOUR VOTE based on their current stand on Sri Lankan issue. None of them has any stand on this issue. They all have one stand , that is do what ever it takes to cheat public and get vote. Not even 0.1 % difference. DECIDE and vote BASED ON YOUR CANDIDATE in your area. Please note that I am not saying that what is happening for Sri Lankan Tamils are correct. All I am saying is do not expect this vote beggars to support real humans

bp
இவர் சொல்லும் கட்டுறை நாளை பொய்யாகிவிடும்.

Sindhu
See still many people even educated people are supporting and thinking about Jaya that she will do something for Tamil people in TN and Srilanka. Pathetic. She can't do anything for people. She needs only power. People try to understand.. No vision for her, She is acting for election.... See Ramdoss, hahahahaha worst than any politician in TN.... they are going to do something for Tamils. Ask Ramdoss to spend few days in Jail for Tmails then he will run from politics.. such a great leader!!!! Tamils are still fools, so getting kicks where ever they live.............. see supporting Jaya... then how come?

Ramana
காங்கிரஸ் கட்சி தவறு செய்கிறது எனத் தெரிந்தும் அதனை எதிர்ப்பதற்கு திராணி அற்றவர்களாக மு.க வும் தி. மு.க வும் உள்ளனர்.

Sethu Subramanian
மனதில் சுத்தம் உள்ளவர்களும், எப்போதும் நேர் வழியே செல்பவர்களும் தடுமாறுவதில்லை.

Sriraman
Yes! When family oriented politicians look into the welfare of their kith and kin in their family, they don't have the time to look into the welfare or any act doing good to the public. Teach all the family based political parties a real lesson now and in future.

sekes
என்ன பால்? கள்ளீப்பாலா?

தமிழ்த்தம்பி
கலைஞர் காணாத தோல்வியா..? அப்படியே 40-ம் கவிழ்த்தாலும் நாளையே வீறு கொண்டு எழுவார். அன்றும் சரி.. இன்றும் சரி.. இலங்கைப் பிரச்சினைக்காக அதிகம் பாதிக்கப்பட்ட அரசியல்வாதி என்றால் அது கலைஞராகத்தானிருக்கும்! ஜெயித்துவிட்டதாகவே அலட்டிக்கொள்ளும் அம்மையார் அவர்களையும் பார்க்கத்தானே போகிறோம்.. ஜெயித்தபின் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கண்றாவி காட்சியை! (சசிகலா அம்மையாரை வைத்துக்கொண்டு ஜெ. சாதிப்பார் என்பதெல்லாம் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான்) அப்போது தெரியும் தொங்கும் தோட்டங்களாம்.. ராமதாஸ், வைகோ மற்றும் இடதுசாரிகளின் வெட்டிப்பேச்சு வீரசாகசங்கள்!

aravindan
Guys, To all the Tamilians/Indians who are not aware of the history of srilanka & Eelam.I would like to share some details which i got from my bro. Dont frame me as a pro ltte or anti srilankan...just a tamilian who shed tears(what else i can do) for another tamilian who is being brutally murdered by animals called rajapakshe & bros. FYI : Source BBC 1948 - Ceylon gains full independence. Sinhala nationalism 1949 - Indian Tamil plantation workers disenfranchised and many deprived of citizenship. 1956 - Solomon Bandaranaike elected on wave of Sinhalese nationalism. Sinhala made sole official language and other measures introduced to bolster Sinhalese and Buddhist feeling. More than 100 Tamils killed in widespread violence after Tamil parliamentarians protest at new laws. 1958 - Anti-Tamil riots leave more than 200 people dead. Thousands of Tamils displaced. 1959 - Bandaranaike assassinated by a Buddhist monk. Succeeded by widow, Srimavo, who continues nationalisation programme. 1965 - Opposition United National Party wins elections and attempts to reverse nationalisation measures. 1970 - Srimavo Bandaranaike returns to power and extends nationalisation programme. 1972 - Ceylon changes its name to Sri Lanka and Buddhism given primary place as country's religion, further antagonising Tamil minority. 1976 - Liberation Tigers of Tamil Eelam (LTTE) formed as tensions increase in Tamil-dominated areas of north and east. 1977 - Separatist Tamil United Liberation Front (TULF) party wins all seats in Tamil areas. Anti-Tamil riots leave more than 100 Tamils dead. 1981 Sinhala policemen accused of burning the Jaffna Public Library, causing further resentment in Tamil community. 1983 - 13 soldiers killed in LTTE ambush, sparking anti-Tamil riots leading to the deaths of an estimated several hundred Tamils. Start of what Tigers call "First Eelam War". You can see from the way the srilankan government has systematically put down the rights and aspirations of Tamil which has fueled the rise of many rebels. Which is inevitable ! STOP THE GENOCIDE. Aravind, Coimbatore

thiru
்பொறுப்புள்ள தலைவர்கள் கலைஞர்போல் செயல்படுவார்கள். பித்தலாட்டங்கள் தப்பாட்டம் ஆடலாம் அது தேர்தல். இவர் தேர்தல்களைத் தாண்டி வந்து கொண்டிருப்பவர். தாய் குழந்தைக்குப் பால் தரும்போது அந்த ஒரு கவனம்தான் அவளுக்கு இருக்கும்.

கைவிடுமா காங்கிரஸ்கலக்கத்தில் தி.மு.க


தமிழக தேர்தல் களத்தில் அ.தி.மு.க. தேர்தல் பிரசாரம் மக்களின் மனதில் பட்டென்று ஒட்டிக் கொண்டுள்ளதனால் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அக்கட்சிகள், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் வருகையை பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தன.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் முதல்வர் கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தால் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்தவர்களின் நம்பிக்கையில் இடி விழுந்துள்ளது.
காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் கருணாநிதி ஓய்வு எடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். முதல்வர் கருணாநிதியின் உடல் நிலை முன்னரைப் போல் சுறுசுறுப்பாக இல்லாததனால் அவரால் சூறாவளிப் பிரசாரம் எல்லாம் செய்ய முடியாத நிலை உள்ளது.
மிக முக்கியமான தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்வதற்கு முதல்வர் கருணாநிதி திட்டமிட்டிருந்தார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியுடனான பிரசாரத்தின் பின்னர் தமிழகத்தில் எழுச்சி அலை தோன்றும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு சோனியாவின் தமிழக விஜயம் ரத்தானது அதிர்ச்சியளித்துள்ளது.
பழ. நெடுமாறன், பாரதிராஜா போன்றவர்கள் சோனியாவின் தமிழ்நாட்டு விஜயத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதாக அறிவித்தனர். சோனியாவுக்கு எதிரான கறுப்புக் கொடிப் போராட்டம் நடத்த அவர்கள் அழைப்பு விடுத்தனர். இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படும் இவ்வேளையில் அங்கு போர் நிறுத்தத்துக்குரிய ஏற்பாடு செய்யாமல் சோனியா தமிழகத்துக்கு வரக் கூடாது என்ற கோரிக்கையால் சோனியாவின் தமிழக விஜயம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சோனியாவின் தமிழக விஜயம் ரத்தானதற்கான காரணம் குறித்து பல கருத்துக்கள் வெளி யிடப்பட்டன. சோனியாவின் தமிழக விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் வரும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
தமிழக முதல்வருடன் இணைந்து பிரசாரம் செய்ய முடியாததால் சோனியாவின் விஜயம் ஒத்தி வைக்கப்பட்டதா? சோனியாவுக்கு எதிரான தமிழக உணர்வலைகளினால் சோனியாவின் தமிழக விஜயம் ஒத்தி வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கான விடை தெரியாதுள்ளது.
கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுடன் தமிழகம் பல விஷயங்களில் முரண்பட்டுள்ளது. பெங்களூரில் தமிழர்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் கடைகளும் தமிழ்ப் படம் ஓடிய பட மாளிகைகள் அடித்து நொருக்கப்பட்டன. அந்த நிலையிலும் ஆந்திர, கர்நாடக அரசியல்வாதிகளும் தமிழகம் வரக் கூடாது என்று யாரும் தடை போடவில்லை.
இந்திய தேசியக் கட்சியின் தலைவி தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள சில மக்கள் எதிர்ப்பது காங்கிரஸ் கட்சித் தலைவி மீது அவர்கள் கொண்டிருக்கும் வெறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் காங்கிரஸ் கட்சியின் மீதே தமது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 18 தொகுதிகளிலும் தமது எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். காங்கிரஸ் கட்சி தோல்வியடைய வேண்டும் என்பதே இவர்களது பிரதான நோக்கம்.
தமது நோக்கம் நிறைவேறுவதற்காக அண்ணா திரõவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் இவர்கள் விரும்பவில்லை.
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் யார் வெற்றி பெற வேண்டும் என்று இவர்கள் அடையாளம் காட்டவில்லை.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவான தமிழ் உணர்வாளர்களின் பிரசாரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு தெம்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவும் வைகோவும் இலங்கைப் பிரச்சினையை கையிலெடுத்து தமது பிரசாரத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் தப்புச் செய்து விட்டன என்ற இவர்களின் குற்றச்சாட்டால் வலுவா காரணங்களுடன் திராணியற்ற திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் தடுமாறுகின்றன.
தமிழக முதல்வர் கருணாநிதியும் சோனியாவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யாதது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் இருவரும் இணைந்து ஒரே மேடையில் தோன்ற வேண்டும் என்ற ஆசை இரண்டு கட்சித் தலைவர்களிடமும் உள்ளது. தேர்தலுக்கு இன்னமும் மூன்று நாட்கள் இருக்கும் இவ்வேளையில் அது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை செய்த சாதனைகளையும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் திட்டங்களையும் பட்டியலிடுவதற்கு எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை. ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், தா.பாண்டியன் ஆகியோரின் குற்றச்சாட்டுக ளுக்குப் பதிலளிப்பதிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் அதிக நேரத்தைச் செலவிடுகிறது.
தோல்விகளின்போது துவண்டு விழாது வீறு கொண்டு எழுந்த முதல்வர் கருணாநிதி தற்போது சக்கர நாற்காலியில் முடங்கி உள்ளார். வீறுகொண்டு எழ வேண்டும் என்று அவரது மனம் நினைத்தாலும் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை.
இந்திய நாடாளுமன்றத்துக்கான தமிழகத் தேர்தல் முடிவு திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குப் பாதகமாக அமைந்தால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படும். அந்த விரிசல் சில வேளை தமிழக சட்டமன்றத்தை ஆட்டம் காண வைக்கும் ஏது நிலை உருவாகும். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான காங்கிரஸ் தலைவர்களின் கை அப்போது ஓங்கி விடும்.
சோனியாவின் தமிழக விஜயம் ரத்தானதும் முதல்வர் கருணாநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
ஜெயலலிதா கையில் எடுத்துள்ள "தமிழீழம்' என்ற பிரமாஸ்திரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சலசலப்பின் மூலமே நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாமென ஜெயலலிதா நினைக்கிறார். தேர்தல் முடிந்ததும் இந்தப் பிரமாஸ்திரத்தை ஜெயலலிதா வைத்திருப்பாரா? தூக்கி எறிந்து விடுவாரா? என்பதை யாராலும் கணித்துக் கூற முடியாதுள்ளது.
தமிழகத் தேர்தல் களமும் உடல் நிலையும் முதல்வர் கருணாநிதிக்கு சவாலாக உள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் ஜெயிக்கப்÷பாவது யார் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.
வர்மா
வீரகேசரி வாரவெளீயீடு 10/05/2009

Thursday, May 7, 2009

ரோஹித் சர்மா ஹட்ரிக்; வீழ்ந்தது மும்பை


செஞ்சூரியனில் நடைபெற்ற மும்பை டெக்கான் அணிகளுக்கிடையிலான ஐ.பி.எல்.போட்டியில் ரோஹித் சர்மாவின் ஹட்ரிக்கினால் டெக்கான் அணி 19 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெக்கான் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்கள் எடுத்தது.
டெக்கான் அணியின் ஆரம்ப துடுப்பாட்டம் தொடர்ந்து மூன்றாவது முறையாகக் சறுக்கியது. குல்கர்னியின் பந்தை ஸ்லிப்பில் நின்ற சச்சினிடம் பிடி கொடுத்த கிப்ஸ் ஓட்டம் எதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கில்கிறிஸ்டுடன் சுமன் இணைந்தார். ஹர்பஜனின் பந்தில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்திய சுமன் பிராவோவின் பந்தை ஷாவிடம் பிடி கொடுத்து 20 ஓட்டங்களில் வெளியேறினார். 13 பந்துகளுக்கு முகம் கொடுத்த சுமன் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பௌண்டரி அடங்கலாக 20 ஓட்டங்கள் எடுத்தார்.
அதிரடியின் மூலம் எதிரணிகளை மிரட்டிய கில்கிறிஸ்ட் மும்பை வீரர்களின் பந்தில் அதிரடி காட்டாது தடுமாறினார். 29 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஒரு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 25 ஓட்டங்கள் எடுத்த கில்கிறிஸ்ட் ராஜுவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
10 ஓவர்களில் மூன்று விக்கெட்களை இழந்து 63 ஒட்டங்கள் எடுத்த டெக்கான் அணி அடுத்த 10 ஓவர்களில் விரைவாக ஒட்டங்களைக் குவித்தது. ஸ்மித் 16 ஓட்டங்களில் ஜயசூரியவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஐந்தாவது இணைப்பாட்டத்தில் விளையாடிய ரோஹித் சர்மா, வேணு கோபால் ராவ் ஜோடி கௌரவமான இலக்கை எட்ட உதவியது. ரோஹித் சர்மா 38 ஒட்டங்களில் ஆட்டமிழந்தார். வேணு கோபால் ராவ் 28 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்களில் டெக்கான் அணி ஆறு விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்கள் எடுத்தது. மலிங்க, குல்கர்னி, பிராவோ ராஜு, ஜயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்öகட்டை வீழ்த்தினர்.
146 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஜயசூரிய 5 ஓட்டங்களிலும் சச்சின் டெண்டுல்கர் இரண்டு ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஆர்.பி.சிங் வீசிய முதலாவது ஓவரில் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் மும்பை அணி அதிர்ச்சியடைந்தது.
மும்பை அணி இரண்டு விக்öகட்களை இழந்து ஏழு ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஜோடி சேர்ந்த ஷாவும், டுமினியும் விரைவாக ஓட்டங்களைச் குவித்து நம்பிக்கை ஏற்படுத்தினர். சுமனின் பந்தை ஸ்மித்திடம் பிடிகொடுத்த ஷா 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டில் இந்த ஜோடி 53 ஓட்டங்கள் எடுத்தது. நான்காவது விக்கெட்டில் டுமினியுடன் இணைந்து பிராவோவும் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவினார். பிராவோ 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க களமிறங்கினார் நாயர்.
16 ஆவது ஓவரை வீசுவதற்கு ரோஹித் சர்மாவை அழைத்தார். அணித் தலைவர் இரண்டு அணியும் வெற்றி பெறும் சந்தர்ப்பம் சம அளவில் இருந்த வேளை ரோஹித் சர்மா வீசிய ஓவர் மும்பாயை வீழ்த்தி டெக்கானுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. 15.5 ஆவது ஓவரில் ரோஹித்தின் பந்தில் ஒரு ஓட்டத்துடன் நாயர் ஆட்டமிழந்தார். 15.6 ஆவது பந்தில் ஹர்பஜன் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 17 ஆவது ஓவர் வீசியபோது முதல் பந்தில் டுமினி 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவின் ஹட்ரிக் சாதனையுடன் மும்பை வீழ்ந்தது.
20 ஓவர்களில் எட்டு விக்öகட்களை இழந்து மும்பை 126 ஓட்டங்கள் எடுத்தது.
ரோஹித் சர்மா நான்கு விக்கெட்களையும் ஆர்.பி.சிங், சுமன் ஆகியோர் தலா இரண்டு விக்öகட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட
நாயகனாக ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டார். தென்னாபிரிக்காவில் நடைபெறும் இரண்டாவது ஐ.பி.எல். போட்டியில் இது
வரை இரண்டு வீரர்கள் ஹட்ரிக் சாதனை செய்துள்ளனர். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணித் தலைவர் யுவராஜ் முதலில் ஹட்ரிக் சாதனை செய்தார். டெக்கான் ஐந்தாவது வெற்றியைப் பெற்றது. மும்பை நான்காவது போட்டியில் தோல்வியடைந்தது.
ரமணி

Wednesday, May 6, 2009

டோனி அதிரடி ஜகாதி மிரட்டல்


டோனி அதிரடி ஜகாதி மிரட்டல்
சென்னையிடம் வீழ்ந்தது டொக்கான்

ஈஸ்ட் லண்டனில் டெக்கானுக்கு எதிரான போட்டியில் டோனியின் அதிரடியும் ஜகாதியின் மிரட்டலும் கை கொடுக்க டெக்கான் அணி 78 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான முரளி விஜய், ஹைடன் ஜோடி சென்னை அணிக்கு நல்லதொரு ஆரம்பத்தைக் கொடுத்தது.
ஹைடன் தனது வழமையான அதிரடியில் மிரட்ட விஜய் பந்தைத் தேர்வு செய்து விளையாடினார். 6.5 ஓவர்கள் களத்தில் நின்ற இந்த ஜோடி 61 ஓட்டங்கள் எடுத்தது. 43 ஓட்டங்கள் எடுத்த ஹைடன் பந்தை ஆர்.பி. சிங்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 33 பந்துகளுக்கு முகங் கொடுத்த ஹைடன் மூன்று சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்கள் எடுத்தார்.
ஹைடன் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய டோனி இறுதிவரை களத்தில் நின்று தனது பழைய அதிரடியை வெளிக்காட்டினார். முன்னைய போட்டிகளில் சோபிக்காத டோனி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தனது வழமையான அதிரடியை வெளிக்காட்டினார்.
12.1 ஓவரில் சென்னை அணி 99 ஓட்டங்கள் எடுத்தபோது முரளி விஜய் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 33 பந்துகளுக்கு முகம் கொடுத்த விஜய் ஒரு சிக்ஸர் இரண்டு பெளண்டரிகள் அடங்கலாக 31 ஓட்டங்கள் எடுத்தார்.
அணித் தலைவர் டோனியுடன் ரைனா இணைந்தார். இருவரும் தமது அதிரடியை வெளிக்காட்ட டெக்கான் அணி வீரர்கள் திக்கு முக்காடினர். டெக்கான் அணிக்கு தலையிடியைக் கொடுத்த இந்த ஜோடியை ஆர்.பி. சிங் பிரித்தார். 19 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரைனா இரண்டு சிக்ஸர், ஒரு பௌண்டரி மூலம் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆட்ட நேர முடிவின் போது சென்னை அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை எடுத்தது. மர்கம் நான்கு ஓட்டங்கள் எடுத்தார். 37 பந்துகளுக்கு முகம் கொடுத்த டோனி ஒரு சிக்ஸர் ஆறு பௌண்டரிகள் மூலம் 58 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆர்.பி. சிங், சொஹைப், தமர் ஆகியோர் தலா ஒரு விக்கட்டை வீழ்த்தினர்.
179 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெக்கான் அணிக்கு மொர்கனும் தியாகியும் அதிர்ச்சியளித்தன. மொர்கலின் முதல் பந்தில் அணித் தலைவர் கில்கிறிஸ்ட் ஓட்டமெதுவும் எடுக்காது வெளியேறினார்.
அடுத்து வந்த லக்ஷ்மன் மொர்கலின் பந்தை ஜகாதியிடம் பிடி கொடுத்து ஓட்டமெதுவும் எடுக்காது வெளியேறினார். 2.2 ஓவர்களில் வைற் மூலம் பெறப்பட்ட ஒரே ஒரு ஓட்டத்தைப் பெற்று மூன்று விக்கட்டுகளை இழந்தது டெக்கான். ஆரம்பப் போட்டிகளில் வெற்றியைப் பெற்ற எதிரணிகளை கலக்கிய டெக்கான் சென்னை அணிக்கு முன்னால் தடுமாறியது.
நான்காவது இணைப்பாட்டத்தில் விளையாடிய ரோஹித் சர்மா ஸ்மித் ஜோடி சென்னை வீரர்களுக்கு சவால் விட்டது. ஸ்மித்தின் அதிரடி டெக்கான் அணிக்கு தெம்பை ஏற்படுத்தியது. சென்னை அணிக்கு தொல்லை கொடுத்த ஜோடியை ஜகாதி பிரித்தார். ஜகாதியின் பந்தை பத்திரி நாத்திடம் பிடி கொடுத்த ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 20 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 21 ஓட்டங்கள் எடுத்தார்.
சென்னை அணியை மிரட்டிய ஸ்மித்தை ஜகாதி எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற்றினார்.
23 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஸ்மித் ஐந்து சிக்ஸர் இரண்டு பௌண்டரி அடங்கலாக 49 ஓட்டங்கள் எடுத்தார்.
ஸ்மித்தின் இரண்டு பிடிகளை சென்னை வீரர்கள் தவறவிட்டனர். ஒரு ரன் அவுட்டையும் சென்னை வீரர்கள் கோட்டை விட்டனர். சென்னை வீரர்களின் களத் தடுப்பு மிக மோசமாக இருந்தது. அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை ஓட்டங்களுடன் வெளியேறினர்.
14.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த டெக்கான் 100 ஓட்டங்களை மட்டும் பெற்று பரிதாபமாக தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக டோனி தெரிவு செய்யப்பட்டார். எட்டாவது போட்டியில் விளையாடிய சென்னை நான்காவது வெற்றியைப் பெற்றது. ஏழாவது போட்டியில் விளையாடிய டெக்கான் மூன்றுபோட்டிகளில் தோல்வியடைந்தது.
ரமணி

00000




கொல்கத்தாவின் பரிதாபம் தொடர்கிறது

கொல்கத்தா நைட்ரைடர், டெல்லி டேர் டெவில்ஸ் அணிகளுக்கிடையே டேர்பனில் நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி ஒன்பது விக்கெட்களால் வெற்றி பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா முதலில் துடுப்பெடுத்தாடியது. முன்னைய போட்டிகளில் பிராகாசிக்காத மக்கலம் சிறந்த அடித்தளத்தை அமைத்தார். மக்கலம் வன்விக் 6.6 ஓவர்களில் 58 ஓட்டங்கள் எடுத்து டில்லிக்கு நெருக்கடியையும் கொடுத்தது. சவ்லா வின் பந்தை ஹெராவிடம் பிடிகொடுத்த மக்கலம் 29 பந்துகளில் மூன்று சிக்ஸர் ஒரு பவுண்டரி அடங்கலாக 35 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஹெட்ஜ் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி கொல்கத்தாவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய வன் விக் நெஹ்ராவின் பந்து வீச்சில் 74 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 48 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் 11 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்கள் எடுத்தார். ஹொகுனிஸ் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மூன்று விக்கெட்டுகளை இழந்து 15 ஓட்டங்கள் எடுத்தது.
காயம் காரணமாக ஷேவாக் விளையாடாததனால் கம்பீர் அணித்தலைவராக செயற்பட்டார்.
155 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் 19 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை இழந்து 157 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கம்பீர் டேவிட் வார்னர் ஜோடி 6. 6 ஓவர்களில் 60 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கை ஊட்டியது. 23 பந்துகளுக்கு முகம் கொடுத்த டேவிட் வர்னர் ஒரு சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்தபோது அகர்கரின் பந்தை வன்விக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கம்பீர் டில்ஷான் ஜோடி டெல்லி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. கொல்கத்தாவின் களத்தடுப்பு மிக மோசமாக இருந்தது. கம்பீர் 21 ஒட்டங்கள் எடுத்திருந்தபோது மிக எளிதான பிடியை கொல்கொத்தா வீரர்கள் தவற விட்டனர். கம்பீர் 32 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டிலிருந்து தப்பினார். டில்ஷான் 24 ஓட்டத்தின் போது அவரைஆட்டமிழக்கச் செய்ய இருந்த சந்தர்ப்பத்தை கோடி நழுவவிட்டார்.
19 ஓவர்களில் டெல்லி அணி ஒரு விக்கட்டை இழந்து 15 ஓட்டங்கள் எடுத்தது.
57 பந்துகளுக்கும் முகம் கொடுத்த கம்பீர் ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்கள் அடித்தார்.
23 பந்துகளுக்கு முகம் கொடுத்த டில்ஷான் ஒரு சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆட்டநாயகனாக கம்பீர் தெரிவு செய்யப்பட்டார். டெல்லி அணி ஐந்தாவது வெற்றியைப் பெற்றது. கொல்கத்தா ஏழாவது தோல்வியைச்சந்தித்து புள்ளிப்பட்டி யலில் கடைசியில் உள்ளது.
ரமணி

Tuesday, May 5, 2009

டில்லியை வீழ்த்தியது சென்னை


சென்னை சூப்பர் கிங்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையே ஜோஹன்னஸ்பேர்க்கில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி 18 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டில்லி அணி களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.
முதலில்முகாயம் காரணமாக டில்லி அணித் தலைவர் ஷேவக்விளையாடவில்லை. கம்பீர் அணித் தலைவராகக் கடமையாற்றினார். சென்னை அணியில் பர்தீவ் பட்டேல் நீக்கப்பட்டு விஜய் முரளி ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினார்.
விஜய், ஹைடன் ஜோடி 36 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது நெஹ்ராவின் பந்தை பாத்தியாவிடம் பிடி கொடுத்த விஜய் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடிய ஹைடன் சர்வாவின் பந்தை டிவில்லியஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 19 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஹை டன் ஒரு சிக்ஸர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்கள் எடுத்தõர். மூன்றாவது இணை ப்பாட்டத்தில் விளையாடிய ரைனாபத்திரிநாத் ஜோடி அட்டகாசமாக விளையாடி டெல்லி அணி வீரர்களுக்கு கலக்கத்தைக் கொடுத்தது. இவர்களின் அதிரடிக்கு பாத்தியா முற்றுப்புள்ளிவைத்தார்.12.3 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 112 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை ரைனா ஆட்டமிழந்தார்.
21 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரைனா இரண்டு சிக்ஸர், இரண்டு பௌண்டரி அடங்கலாக 32 ஓட்டங்கள் எடுத்தார். பத்திரிநாத்தையும் பாத்தியா வெளியேற்றியதும் சென்னை அணியின் ஓட்ட வீதம் குறையத் தொடங்கியது. 34 பந்துகளுக்கு முகம் கொடுத்த பத்திரிநாத் இரண்டு சிக்ஸர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 45 ஓட்டங்கள் எடுத்தார். மோர்கல் 6, டோனி 6, ஓரம் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சென்னை அணி கடைசி ஐந்து ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை பறிகொடுத்து 33 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.
நனீஸ், நெஹ்ரா ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளையும் பாத்தியா இரண்டு விக்கட்டுகளையும் சவ்லா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
164 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 145 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான தியாகி டெல்லி அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தினார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கம்பீர் 13 ஓட்டங்களுடன் தியாகியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் ஓட்டமெதுவும் எடுக்காது தியாகியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 13 பந்துகளைச் சந்தித்த டில்ஷான் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
வார்னர், டினேஷ் கார்த்திக் ஆகியோர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடியை தியாகி பிரித்தார். 51 ஓட்டங்கள் எடுத்த வார்னர் தியாகியின் பந்தை டோனியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
31 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் அடித்த டினேஷ் கார்த்திக், தியாகியின் பந்தை முரளியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்த டெல்லி 145ஓடங்கள் எடுத்தது.ஜகாதி நான்கு விக்கட்டுகளையும் தியாகி இரண்டு விக்கட்டுகளையும் மார்சல், முரளி ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஜகாதி தெரிவு செய்யப்பட்டார்.


000

பெங்களூரிடம் வீழ்ந்தது மும்பை

ஜொஹன்னஸ் பேக்கில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் பெங்ளூர் அணி மிக எளிதாக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பாய் 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.
டெண்டுல்கர் 11 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். ஐ.பி.எல் போட்டியில் முதன் முதலாக களமிறங்கிய தென்னாபிரிக்க வீரரான டிலான் பெரஸ் மும்பை அணிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தார். டெண்டுல்கரை வெளியேற்றிய இவர் அடுத்த பந்தில் ரகானேயை வெளியேற்றினார்.
ஒரு ஓட்டத்துடன் டுமினியை யும் டிலன்டி பெரஸ் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். 14.1 ஓவர் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 23 ஓட்டங்கள் எடுத்த போது களத்தில் நின்ற ஜயசூரிய பிரõவோ ஜோடி கௌரவமான இலக்கை எட்ட உதவியது. 43 பந்துகளைச் சந்தித்த ஜயசூரிய ஒரு சிக்ஸர், நான்கு பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் எடுத்த வேளை வன்டிமேரின் பந்தை விஜய்குமாரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். மும்பாய் அணியின் நான்கு விக்கெட்கள் 83 ஓட்டங்களில் வீழ்ந்தது. பிராவோ சுமித் நாயர் ஜோடி இறுதிவரை போராடி 145 ஓட்டங்கள் எடுக்க உதவியது. பிராவோ 50 ஓட்டங்களுடனும், நாயர் 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிலன் பெரஸ் மூன்று விக்கெட்டுக்களையும், வன்டேமெமேன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
150 என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 18.1 ஓவரில் ஒரு விக்கட்டை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜவ்பர் ஏழு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கலிஸ், உத்தப்பா ஜோடி அபாரமாக துடுப்பெடுத்தாடி வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 59 பந்துகளுக்கு முகம்கொடுத்த கலிஸ் இரண்டு சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்களாக 89 ஓட்டங்கள் எடுத்தார். 42 பந்துகளுக்கு முகம் கொடுத்த உத்தப்பா இரண்டு சிக்ஸர் எட்டு பௌண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் எடுத்தார். ஆட்டநாயகனாக கலிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
எட்டாவது போட்டியில் விளையாடிய பெங்களூர் நான்காவது வெற்றியைப் பெற்றது.
ஏழாவது போட்டியில் விளையாடிய மும்பை மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.
வானதி

Sunday, May 3, 2009

ஜெயலலிதாவின் பிரசாரத்தால்தடுமாறுகிறார் தமிழக முதல்வர்


இலங்கையில் நடைபெறும் யுத்தத்தினால் தமிழக தேர்தல் களம் சூடாகி உள்ளது. இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் தமது சாதனைகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு இலங்கை விவகாரத்தில் தமக்கு எதிராக் கிளப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலைத் தேடுவதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றன.
இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் செய்த தவறுகளையும் இடையில் கைவிட்ட திட்டங்களையும் பட்டியலிட வேண்டிய ஜெயலலிதா இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பிரசாரக் களத்தைத் திசை திருப்பி உள்ளார்.
17 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தியின் கொலையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு படுதோல்வியையும் காங்கிரஸ் கட்சிக்கு அமோக வெற்றியையும் பெற்றுக் கொடுத்த இலங்கை விவகாரம், இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சவாலாக உள்ளது.
இலங்கைப் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டாத ஜெயலலிதா திடீரென இலங்கைத் தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதங்கள் இருந்ததுடன் இலங்கைத் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்று கூறினார்.
ஜெயலலிதாவின் நடவடிக்கைகளும் உணர்ச்சி மயமான பேச்சும் தமிழக மக்களைக் கவர்ந்துள்ளதால் தமிழக அரசு அதிர்ச்சியடைந்தது.
ஜெயலலிதாவின் பிரசாரத்தை முறியடிப்பதற்காக இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் திடீரென உண்ணாவிரதம் இருந்தார். தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழ் மக்களுக்காக தள்ளாத வயதிலும் உண்ணாவிரதம் இருந்தார் என்ற கருத்துடன் அந்த உண்ணாவிரத நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்தில் உள்ள செல்வாக்கு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வரவேண்டும் என்ற இரட்டைத் தோணியில் தமிழக முதல்வர் கால்வைத்துள்ளார். அதனால் இவர் தடுமாறுகிறார்.
வெற்றி என்ற இலக்குடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள ஜெயலலிதா வெற்றிக்காக தன்னால் செய்ய முடியாதவற்றையும் பட்டியலிடுகிறார். வைகோ, டாக்டர் ராமதாஸ், இடது சாரித் தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக உள்ளது. இலங்கையில் போரை நிறுத்தும் வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இலங்கையில் போரை நிறுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களிடம் உள்ளது.
கலைஞர் கருணாநிதியின் வசனங்கள் தமிழ்த்திரை உலகை ஒருகாலத்தில் ஆட்டிப்படைத்தன. அதே வசனங்கள் இன்று முதல்வர் கருணாநிதிக்கு எதிராக பிரசார இறுவட்டுக்களாக வலம் வருகின்றன. பராசக்தி, மனோகரா ஆகிய படங்களுக்காக கலைஞர் கருணாநிதி எழுதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேசிய வசனங்கள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரான வசனங்களாக மாற்றப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
அந்த இறுவட்டில் உள்ள காட்சிகளும் வசனங்களும் முதல்வர் கருணாநிதியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளன.
தமிழக அரசுக்கு எதிராக இப்படிப்பட்ட இறுவட்டு தயாரிக்கப்படுவதாக உளவுத்துறை அறிந்திருந்தும் அதனைத் தடுக்க முடியாமல் போயுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களின் துயரைத் துடைக்க வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையில் இருந்து இறங்கி வர வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியைத் துறப்பதற்கு முதல்வர் ஏன் தயங்குகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களில் பலர் காங்கிரஸ் கட்சியின் பிடிவாதத்தை விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி தவறு செய்கிறது எனத் தெரிந்தும் அதனை எதிர்ப்பதற்கு திராணி அற்றவர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசுடன் ஐந்து வருடங்கள் சகல வசதிகளையும் அனுபவித்து விட்டு தேர்தல் வெற்றிக்காக அணி
மாறிய டாக்டர் ராமதாஸ் இன்று காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை தூற்றுகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசு அமைவதற்கு காரணமாக இருந்த இடது சாரிகள் தமது கொள்கையுடன் காங்கிரஸ் கட்சி ஒத்துப் போகவில்லை என்பதனால் ஆதரவை விலக்கிக் கொண்டன.
டாக்டர் ராமதாஸும் இடது சாரித் தலைவர்களும், தமிழக அரசையும், மத்திய அரசையும் விமர்சித்து தமது கருத்துகளைக் கூறுகின்றனர். இவர்களின் பிரசாரம் தமிழக மக்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கும் தனது கட்சிக்கும் எதிரான பிரசாரங்களை முறியடிக்க வழிவகை தெரியாது தடுமாறுகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
தமிழ் மக்களின் உணர்வுகளின் முன்னால் தமிழக அரசின் சாதனைப் பட்டியல் அடங்கிப்போகும் சூழ்நிலை எழுந்துள்ளது. தமிழக அரசின் அல்லது மத்திய அரசின் சாதனைப்பட்டியலைப் பார்க்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை. இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட்டு விட்டதென்ற செய்தியையே தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கும் வாக்காளர்களை இலங்கைப் பிரச்சினை வெகுவாகப் பாதித்துள்ளது. தமிழகத் தேர்தல் முடிவு அவர்களின் கையிலேயே தங்கியுள்ளது. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கான சூழ் நிலைக்கு தமிழக முதல்வர் தள்ளப்பட்டுள் ளார். இந்திய அரசியலில் மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசு தப்பிப்பிழைப்பது கடினம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியிலிருந்து வெளியேறும் வழிகளை தமிழக முதல்வர் ஆராய்கிறார். தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நெருக்கடி கொடுக்கும் திட்டங்களுடன் தேர்தல் பிரசாரம் செய்கிறார் ஜெயலலிதா.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 03/05/2009

Friday, May 1, 2009

திரைக்ககுவராதசங்கதி 10


சினிமாவில் நடிக்கும் ஆர்வத்துடன் முயற்சி செய்த கே.வி மகாதேவன் இசை அமைப்பாளர் ஏஸ்.வி.வெங்கட்ராமனிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் டி.ஆர்.சுப்பராவ், டி.ஏ. கல்யாணம் அகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். அவர் மூலம் மாடன் தியேட்டரில் சேர்ந்தார். கே.வி மகாதேவனின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது மார்டன் தியேட்டர். அங்கு இருந்த டி.ஜி லிங்கப்பா, டி.ஆர் பாப்பா ஆகியோர் அவரின் திறமையை கண்டு முதலாளி டி.ஆர். சுந்தரத்திடம் அவரைப்பற்றி கூறி கே.வி மகாதேவனை இசை அமைப்பாளராக்கினார்கள். கே.வி மகாதேவனின் இசையில் மயங்கிய பி.யூ.சின்னப்பாவும் இதற்கு உடந்தையாக இருந்தார்.
பி.யூ.சின்னப்பா, டி.ஆர் மகாலிங்கம், டி.ஆர் ராஜகுமாரி ஆகியோரின் நடிப்பில் மனோன் மணி என்ற படத்தை மார்டன் தியேட்டர் தயாரித்தது அப்படத்தில் பி.யூ சின்னப்பா பாடிய மோகனாங்கமதினி என்ற பாடலே அவர் முதல் முதல் இசையமைத்த பாடல். முதல் பாடலிலேயே தமிழ் திரை உலக ரசிகர்களைக் கவர்ந்தார்.
சினிமாப்படத்தில் பின்னணி பாடகராக விரும்பிய இளைஞர்கள் பலர் மார்டன் தியேட்டர்சுக்கு படையெடுத்தõர்கள் அவர்களை இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் அனுப்புவார் மாடன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம். குரல் தரமானதாக இருந்தால் பின்னணிபாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
பின்னணிப் பாடகராகும் ஆசையில் கே.வி. மகாதேவனை ஒருவர் சந்தித்தார். அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு வழிச் செலவுக்கு இரண்டு ரூபாவும் ஒரு சட்டையும் கொடுத்தனுப்பினார் இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவன். கே.பி. மகாதேவனால் திருப்பி அனுப்பப்பட்டவர் பின்னர் மெல்லிசை மன்னர் என்ற பட்டப் பெயருடன் கே.வி. மகாதேவனுக்கு இணையாக தமிழ்த்திரை உலகில் வலம் வந்தவர்.
எம்.ஜி.ஆர். நடித்த குமாரி என்ற படத்திற்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்தார். அதன் பின்னர் இருவருக்குமான உறவு இறுக்கமடைந்தது. நால்வர் படத்தில் நாகராஜனுடன் ஏற்பட்ட தொடர்பினால் அவருடைய ஆஸ்தான இசை அமைப்பாளரானார் கே.வி. மகாதேவன். தாய்க்குப்பின் தாரம் என்ற படத்தின் பின்னர் கே.வி. மகாதேவனுக்கு சாண்டோ சின்னப்பா தேவருக்குமான உறவு வலுப்பெற்றது.
சிவாஜி எம். ஜி.ஆர். நடித்த கூண்டுக்கிளி என்ற படத்துக்கு கே.வி. மகாதேவன் இசை அமைத்தார். இந்தப்படத்தில் தான் சிவாஜி கணேசனுக்கும் சௌந்தராஜன் முதன் முதலில் குரல் கொடுத்தார். கொஞ்சம் கிளியான பெண்னே என்ற அப்பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். தனது படத்திலும் ரி.எம். சௌந்தராஜன் பாட வேண்டும் என்று விரும்பினார்.
எம்.ஜி.ஆரின் விருப்பப்படி மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு முதல் முதலில் ரி.எம். சௌந்தரராஜன் பாடினார். அதன் பின்னர் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் பொருத்தமான குரலில் பாடி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார் டி.எம்.சௌந்தராஜன்.
கே.வி. மகாதேவனின் பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. கே.வி. மகாதேவனின் இசை அமைப்பில் வெளியான முதல் வெற்றிப் படம் டவுண் பஸ். எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய சிட்டுக்குருவி சிட்டுக்குருவி, திருச்சிலோக நாதன், ஜெயலஷ்மி பாடிய பொன்னான வாழ்வே ஆகிய பாடல்கள் இன்றும் மனதை வருடுகின்றன.
எம்.ஜி.ஆருக்கு முதன் முதலில் எஸ்.பி. பாலசுப்பிரணியம் பாடிய பாடல் "ஆயிரம் நிலவே வா' அப்பாடல் இடம்பெற்ற அடிமைப் பெண் படத்தின் இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவன்.
(தொடரும்)

அடிமைப் பெண் படத்தின் கதாநாயகி ஜெயலலிதா பாட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார். அம்மா என்றால் அன்பு எனும் பாடலை மெட்டமைத்து ஒலிநாடாவில் ஜெயலலிதாவிடம் கொடுக்கப்பட்டது. அவர் பாடிப் பயிற்சி பெற்ற பின்னர் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
கே.வி. மகாதேவனின் உதவியாளரான புகழேந்தி, கவியரசு கண்ணதாசனின் பல கவிதைகளை பொருத்தமான இடங்களில் திரைப்படப் பாடலாக்கினார். ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் என்ற கவிதையை வசந்த மாளிகையில் திரைப்படப் பாடலாக்கினார் புகழேந்தி. இரண்டு மனம் வேண்டும் என்ற பாடலின் இடையே வரும் கடவுளைத் தண்டிக்க என்ன வழி என்ற வரியை புகழேந்தி தான் கூறினார்.
சங்கராபரணம் படப் பாடல்களுக்காக கே.வி. மகாதேவனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அப்படத்தில் பாடல்களைப் பாடுவதற்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தயங்கினார். அவரே ஊக்கப்படுத்தி பாட வைத்தவர் கே.வி. மகாதேவனின் உதவியாளர் புகழேந்தி.
தெலுங்குப் படமான சங்காரபரணத்தின் பாடல்கள் மொழி தெரியாதவர்களையும் ரசிக்க வைத்தது. கிராமியப் பாடல்களை அப்படியே மனதில் பதிய வைத்தவர் கே.வி. மகாதேவன்.

ரமணி
மித்திரன் 03/05/2009