Showing posts with label பனீர்ச்செல்வம். Show all posts
Showing posts with label பனீர்ச்செல்வம். Show all posts

Tuesday, July 16, 2024

எடப்படிக்கு எதிராக போர்க்கொடி உச்சம் அடைந்த உட்கட்சி மோதல்


 

எடப்பாடிக்கு எதிராக  போர்க்கொடி  உச்சம் அடைந்த உள் கட்சி  மோதல்

 

ஜெயலலிதாவின்  மறைவின்  பின்னர் அண்ணா திராவிட  முன்னேற்றக்  கழகத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்ற  சசிகலா முயன்றார்ஜெயலலிதாவின் விசுவசியான . பன்னீர்ச்செல்வம் தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். அந்தத் தர்மயுத்தம்  இன்று வரை தொடர்கிறது. கழகத் தலைமைப் பதவி கைக்கு எட்டாத தூரத்துக்குச் சென்று விட்டது.

 சந்தர்ப்ப சூழ்நிலையால்   எடப்பாடியை முதல்வராக்கினார் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதால், கட்சியைக்  கையகப்படுத்தினார். தனக்கு இடைஞ்சலாக  பன்னீர் இருப்பார் என நினைத்தஎடப்பாடி அவரையும் கட்சியை விட்டுத் தூக்கினார்.

அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம் எடப்பாடியின் கையில் உள்ளதுதொடர்ச்சியாக 10  தேர்தல்களில் எடப்பாடியின் தலைமையிலான  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்ததுகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தமிழகத்தின் 39  தொகுதிகளிலும்  வெற்றி பெற்றதுபாண்டிச்சேரியிலும்  திமுக கூட்டணியின் கொடி உயர்ந்தது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்   உட்கட்சி மோதல் உச்சம் அடைந்துள்ளதால்  எடப்பாடி கையைவிட்டு  அதிமுக செல்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

 அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திடீரென அரசியல் புரட்சி ஏற்பட தொடங்கி உள்ளது. அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக கட்சியினர் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் எடப்பாடியை சந்தித்து இருக்கிறார்கள்.

 நாடாளுமன்றத்  தேர்தலில் வென்று காட்டுகிறேன் என்று நம்பிக்கையாக இருந்தார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும். திமுக கூட்டணி உடையும் என்று எடப்பாடி நினைத்தார். ஆனால் அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அதிமுக படுதோல்வி அடைந்தது. அதோடு இல்லாமல் எடப்பாடியை 10 தோல்வி பழனிசாமி என்று அழைக்கும் நிலை ஏற்பட்டது.

அதிமுகவில்  முக்கிய  தலைவர்கள் பலரும் அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர்எடப்பாடியுடன்  இருக்கும் நிர்வாகிகளே அவரை எதிர்க்க தொடங்கி உள்ளனர்ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று  முக்கிய தலைவர்கள் அவரிடம் சொல்ல தொடங்கிவிட்டனர். கடந்த  நாடாளுமன்ற்த் தேர்தலில் அதிமுகவில் வேட்பாளர் தேர்வில் குழப்பம்பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்களுக்கே தெரியாதவர்கள் வேட்பாளர்கள் ஆனார்கள்.

எடப்பாடியின் பிரச்சாரம் பெரிதாக எடுபடவில்லை. அவரின் பிரச்சாரம் பெரிதாக கொங்கில் கூட மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அப்படி இருக்க அவருக்கு மாஸ் இமேஜ் இல்லை என்ற விமர்சனங்கள் கட்சிக்குள் வைக்கப்பட்டு வருகிறது. . எடப்பாடி இத்தனை காலம் கட்சியை கட்டுப்படுத்த காரணமாக  தலைவர்களே அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர். அப்படி இருக்க அவர் இனி எப்படி கட்சியை கட்டுப்படுத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளதுதென் மண்லடத்தில் அதிமுக கடுமையான சரிவை சந்தித்து உள்ளது. கட்சி படுமோசமான பின்னடைவை சந்தித்து உள்ளது. அங்கே உட்கட்சி மோதலும் உச்சத்தில் உள்ளது.   பன்னீர்செல்வம், சசிகலா உள்ளே வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டார். எடப்பாடி இல்லாத அதிமுக உருவாக்கி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. கிட்டத்தட்ட தென் மண்டலம், கொங்கு மண்டலம், வடமண்லடம் என்று மூன்று மண்டலங்களை சேர்ந்து 10 தலைவர்கள்,சுமார் 25 எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு இதில் பிரஷர் கொடுக்க தொடங்கி உள்ளனராம்கடந்த 1 வாரமாக எடப்பாடி மட்டுமே பன்னீர்செல்வத்தின் விமர்சனங்களுக்கு பதில் சொல்கிறார். மற்ற நிர்வாகிகள் யாரும் பன்னீர்செல்வத்திற்கு பதில் சொல்லவில்லை. அப்படி இருக்க எடப்பாடி தனித்து விடப்பட்டு விட்டாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர் காலம் பற்றிய செய்தி  வெளிவரும் நிலையில் 2026 தமிழக சட்ட சபைத்  தேர்தலில் பலமான கூட்டணியை அமைக்க எடப்பாடி முயற்சிக்கிறார். பாஜக அல்லாத கூட்டணியை அமைப்போம். மிகவும் வலுவான கூட்டணியை அமைப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சித் தலைவர்களிடம் உறுதிபடக் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலுக்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பே அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் விட்டு விட்டது. பாஜகவை கூட்டணியிலிருந்து விலக்குவதாக அதிமுக அறிவிக்கவே பரபரப்பு கூடியது. மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக மேலிடம் விரும்பினாலும் கூட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை இடையிலான கருத்து மோதலால் இது நடக்காமல் போய் விட்டது.

இரு கட்சிகளும் கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் இணைந்து களம் காணலாம் என்று ஆர்வத்துடன் காத்திருந்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பெரும் குழப்பமடைந்தன. கடைசியில் பாமகவை, பாஜக தன் பக்கம் இழுக்க, தேமுதிகவை அதிமுக கொண்டு போய் விட்டதுஇப்படி பலம் சிதறி போட்டியிட்டன இரு கூட்டணிகளும். விளைவு.. பெரும் தோல்வியை சந்தித்தனர். இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு கூட்டணி சரியில்லாமல் போட்டதே காரணம் என்று அதிமுக தரப்பிலும், பாஜக தரப்பிலும் கருத்துக்கள் கிளம்பின. அதிமுகவிலிருந்துதான் முதல் குரல் கிளம்பியது. இதை பாஜகவிலிருந்து தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கூறினார்கள்.

இந்தக் குரல்கள் தற்போது அடங்கி விட்ட நிலையில் அடுத்து அதிமுகவை இணைக்க வேண்டும் என்ற குரல்கள்  புறப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை சசிகலா, .பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் கையில் எடுத்துள்ளனர். ஆனால் இந்தக் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்து விட்டார். மேலும் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும் அவர் நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தான் பாஜகவுடன் கூட்டணி கிடையாது, வலுவான கூட்டணியுடன் 2026 தேர்தலை சந்திப்போம் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதுதான் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி அமைக்க வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். அப்போதுதான் திமுகவை வீழ்த்த முடியும் என்பதுதான் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் பலரின் கருத்தாக உள்ளது. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் கூட இதே கருத்தில்தான் உள்ளன. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பது பலரையும் குழப்பியுள்ளது.

  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுக 8 சட்டசபைத் தொகுதிகளிலும், தேமுதிக 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தது. பாஜக கூட்டணியில் பாமக மட்டும் 3 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

கூட்டணிக் கட்சிகள் கூட ஒரு சில தொகுதிகளில் முன்னிலை வகித்த நிலையில் கூட்டணிக்குத் தலைமை தாங்கிய பாஜகவால் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்க முடியாமல் போயிருக்கிறது. அப்படிப்பட்ட கட்சி நமக்கு தேவையா அதற்கு பாஜகவின் கூட்டணிக் கட்சிகளை நம் பக்கம் இழுத்தால்தான் நமக்கு லாபம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகவும் சொல்கிறார்கள்.

சசிகலவையும், தினகரனையும் தவிர்த்து பன்னீரை கட்சியில் இணைத்தால் பலமாக  இருக்கும் என எடப்பாடியிடம்  சொல்லப்பட்டிருக்கிறது.

பாஜக கூட்டணியிலிருந்து பாமகவை தன் பக்கம்  இழுக்கஅதிமுக திட்டமிட்டுள்ளதாம். இதனால்தான் விக்கிரவாண்டி தொகுதியில்  போட்டியிடாமல் விட்டுக் கொடுத்து விட்டதாகவும் சொல்கிறார்கள். அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. காரணம், கடந்த தேர்தலை விட இந்த முறை அங்கு வாக்குப் பதிவு சற்று அதிகமாகவே நடந்துள்ளது. எனவே கணிசமான அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களித்திருப்பதாக நம்பப்படுகிறது. எனவே வருகிற சட்டசபைத் தேர்தலில் பாமக கேட்கும் தொகுதிகளைக் கொடுத்து கூட்டணிக்குள் இழுத்து விட்டால் வட மாவட்டங்களில் அதிமுக கூட்டணி வலுப்பெறும் என்பது எடப்பாடியாரின் நம்பிக்கையாகும்.

  நாம் தமிழர் கட்சியையும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தையும் கூட்டணியில் இணைப்பதும் எடப்பாடியாரின் திட்டம்.. இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் நடந்தால் நிச்சயம் அதிமுக கூட்டணி வலுப்பெற்று விடும். விஜய் கூட்டணிக்கு வருவாரா அதுவும் அதிமுக கூட்டணிக்கு வருவாரா என்பது சந்தேகம்தான். ஒரு வேளை வந்தால் அது அதிமுகவுக்கு நல்ல பூஸ்ட்டாக அமையும்  பகுஜன் சமாஜ் கட்சியையும் தனது கூட்டணியில் இணைக்க அதிமுக அக்கறை காட்டும். காரணம், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையால் அந்தக் கட்சி மீதான அனுதாபம் மக்களிடையே உள்ளது. குறிப்பாக வட மாவட்ட தலித் மக்களிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அறுவடை செய்யவும் அதிமுக முயலலாம். எனவே ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கோ அல்லது அவரது குடும்பத்தில் யாருக்கேனுமோ சீட் கொடுத்து கட்சியை கூட்டணியில் இணைக்கவும் அதிமுக முயலலாம்.

இன்னொரு தேர்தலில் எடப்பாடி தோல்வியடைந்தால் அவர் கட்சியில் இருந்து தூக்கி  எறியப்படுவார்.

 

ரமணி

Monday, June 13, 2022

திமுகவை எதிர்க்க போட்டிபோடும் தமிழகக் கட்சிகள்

தமிழக முதல்வராக  ஸ்டாலின்  பொறுப்பேற்று ஒரு வருடம் கடந்துவிட்டது. பொறுப்பான எதிர்க் கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செயற்படாமல்  இருக்கிறது. அந்த இடத்தை பிடிப்பதற்கு அண்ணாமலை மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். 

அரசியல் அதிரடி என்ற பெயரில் அண்ணாமலை தினமும் ஏதாவது ஒரு அறிக்கை  வெளியிட்டு தன்னை முன்னிலைப் படுத்துகிறார். இதனால் பரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் அண்ணாமலையின் மீது மிகுந்த கடுப்பில் இருக்கிறார்கள். தமிழக அர்சின்  ஊழல்களைத் தினமும்  வெளியிடப்போவதாக அண்ணாமலை அறீவித்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.  டெண்டர் விடப்ப்டாத திட்டத்தில் ஊழல் என்ற அண்ணாமலையின் அறிக்கை புஸ்வாணமாகியது.

அண்ணாமலையின் அதகளம் தாங்கமுடியாத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க் கட்சி என்ற வகையில் போராடத் தீர்மானித்துள்ளது.

அதமிழகத்தின் அடுத்த முதல்வர் அன்புமணி என்ற கோஷத்துடன் பாட்டாளை மக்கள் கட்சி களத்தில் இறங்கி உள்ளது. அடுத்த முதல்வர் அன்புமணி என்ற கோஷம்  மிகவும் பழமையனது. அந்த முயற்சி பலிக்காது என்பதை தேர்தல் தோல்விகள் உணர்த்தியதால், மீண்டும் கூட்டணிப் பக்கம் பாட்டளி மக்கள் கட்சி சென்றது. கட்சியின் தலைவராக அன்புமணி கிரீடம் சூட்டப்பட்டதும், எதிர்க் கட்சியின் இடத்தைப் பிடிக்க பாட்டாளி மக்கள் கட்சி முயற்சிக்கிறது.

பத்து ஆண்டுகள் ஆட்சியிலிருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் காழகத்துடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பாட்டளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதக் கட்சி  ஆகியன   அடுத்த தேர்தல் குறித்து வெளிப்படையாகப் பேசுவதால் சட்டமன்றத்துக்கான தேர்தல் அனல் தற்போதே வீசத் தொடங்கிவிட்டது. குறிப்பாக மூன்று கட்சிகளுமே திராவிட முன்னேற்றக் கழக்த்துக்கு  மாற்று நாங்கள்தான் என்று அறைகூவல் விடுவதுதான் கூடுதல் கவனம் பெறுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இல்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சியும், பாரதீய ஜனதாக் கட்சியும் வெற்றி பெற்ருரும்ம முடியாது. இந்த உணமையைத் தெரிந்துகொண்டும் அண்ணா திராவிட முனேற்றக் கழகத்தைப் புறம் தள்ள  இரண்டு கட்சிகளும் துடிக்கின்றன.

இதேவேளை வடக்கு மாவட்டங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கியும் ஒரு காரணம். பாரதீய ஜனதாவால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்த விதமான இலாபமும் இல்லை. 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  தனித்துப் போட்டியிட்டது. பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. அப்போது, ஜெயலலிதா பாரதீய ஜனதாவைக் கடுமையாக விமர்ச்சித்து பிரசாரம் செய்தார். ஆனால், இடைத்தேர்தலில் அதே கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஆட்சியைத் தக்கவைத்தார்.  இந்தக் கூட்டணி 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், 2021-ம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் நீடித்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் கூட்டணியில் முறிவு ஏற்பட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய ஜனத ஆகியன  தனித்துப் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில்,திர்ராவிட முன்னேற்றக் கழகம் பெருவாரியான வாக்குகளைப் பெற்று நகர்ப்புறங்களை முழுமையாகக் கைப்பற்றியது. பாரதிய ஜனதாவும்   சில இடங்களில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதனால், தமிழக பாரதீய ஜனதாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. `சட்டமன்றத்தில் நாங்கள்தான் சரியாக எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறோம்’ என்று பாரதீய ஜனதாவின் உறுப்பினர் ஏ நயினார் நாகேந்திரன் பொது மேடையில் பேசியிருந்தார். அதேபோல,   இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசிவருகின்றனர். இதை  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் ரசிக்கவில்லை.

  2026-ம் ஆண்டு  தமிழகசட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து பாட்டாலி மக்கள் கட்சியும், பாரதீய ஜனதாவும் காய் நகர்த்தி வருகின்றன. 2024 ஆம்  ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்கத்தில் இருந்து 15 எம்பிக்களை பாரதீய ஜனதாக் கட்சி பெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். இவை எல்லாம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளன.

ஸ்டாலினின் "திராவிட மொடல்" எனும் சொற்பதம் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களைக் கடுப்படைய  வைத்துள்ளது. அதற்கெதிரான பிரசாரத்தை டெல்லித் தலைவர்கள் முதல் தமிழகத் தலைவர்கள் வரை முன்னெடுக்கின்றனர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் ஒரு படி மேலே போய் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் " திராவிட மொடல்"ஆட்சியைத் தந்ததாக அறிவிக்கின்றனர்.  இந்த வரிசையில் சசிகலாவும் சேர்ந்துள்ளார். "திராவிட  மொடல்" அடுத்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்கு வங்கியாக மாரிவிடுமோ  என்ற  அச்சம் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்தது. பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம், எதிர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என மாறியது, 1967 ஆம் ஆண்டின்  பின்னர்இந்த நிலை நீடிக்கிறது இதனை மாற்றி திராவிட முன்னேற்றக் கழகம் எதிர் பாரதீய ஜனதாக் கட்சி என மாற்றமடையும் என தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், கடுப்படைந்த  மூத்த தலவரான பொன்னையன்  காட்டமாக விமர்சன ம் செய்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பாரதீய ஜனதா விழுங்கிவிடும் என்ற அவரது சொல்லாடல் தமிழக அரசிய அரங்கில் அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டளி மக்கள் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கிடையே புகைந்துகொண்டிருக்கும் இந்த பிரச்சினை அடுத்த தேர்தல்வரை பரபரப்பாக இருக்கும்  அதிக தொகுதிகளுக்கன பிரச்சார உத்தி இது என்பது  ஒன்றும் ரகசியமானது அல்ல.