Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, August 25, 2024

தேடினேன் கிடைத்தது.

வதிரி பூவற்கரைப் பிள்ளையார் , அம்மன் கோயில் ஆகிய இரண்டு ஆலயங்களின் மீது எனது மாமி செல்வி சூரன் சிவபாக்கியம் ஊஞ்சல் பாட்டு  எழுதியதாக படிக்கும் காலத்தில் அறிந்தேன். அது ஒரு சம்பவம் என நினைத்து காலப் போக்கில் அதனை மறந்து விட்டேன்எனக்குத் தேவையான ஒரு சிலவற்றைப் பற்றித்தேடல் செய்தபோது அவை ஞாபக்த்துக்கு வந்தன.

அது சம்பவம் அல்ல, வரலாறு, ஆவணம் என்பதை உணர்ந்துகொண்டேன். இரண்டு கோயில்களுக்குமான ஊஞ்சல் பாடல்களைப் பற்றி பலரிடம் கேட்டேன்.  தெரியாது எனும் பதில்தான் கிடைத்தது.

புலோலி, துன்னாலை,வல்லிபுரக்குறிச்சி  ஆகிய ஊர்களில் உள்ள ஏதோ ஒரு அம்மன் கோயிலுக்கு மாமி ஊஞ்சல் பட்டு எழுதியதாக ஞாபகம் எந்த ஊர் என்பது சரியாக ஞாபகம்  இல்லை. அந்த அம்மன் கோயில் ஊஞ்சல் பாட்டு எழுதியதைப் பற்றிய சம்பவத்தை மாமி எனக்குச் சொன்னது  பசுமையாக மனதில் உள்ளது.

கோயிலுக்கு எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளது. ஊஞ்சல் பாட்டு கட்டாயம் வேண்டும்என குருக்கள் சொன்னார். அப்போது  அங்கிருந்தவர்கள், அந்தக் காலத்தில்  பிரபலமாக இருந்த பண்டிதர், புலவர் போன்றோரின் பெயரை கூறி அவர்களில் ஒருவரிடம் கேட்கலாம் என்றார்கள்.

கோயிலைக் கும்பிடச்சென்ற மாமிநான் எழுதுகிறேன்என்றார்.

ரீச்சர் உங்களால் முடியாது. வேறை ஆக்களிடம் கொடுக்கலாம்என சிலர் சொன்னார்கள்

அங்கு நின்ற ஒரு சிறுவனிடம் காசைக் கொடுத்த மாமி கொப்பி வாங்கி வரும்படி கூறினார். கோயில் மண்டபதில் இருந்து ஒரு மணித்தியாலத்தில்  ஊஞ்சல் பாட்டை எழுதினார். அதனைப் பார்த்த குருக்கள் பாராட்டினார்.

பொன்னூஞ்சல் பாடல் எழுதியமைக்காக கோயில் கும்பாபிஷேகத்தின் போது  சூரன் புத்திரி சிவபாக்கியத்தைப் பாராட்டி மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டுப் பத்திரம் கொடுத்தார்கள். எமது ஊரில் இருந்து திரு.கமலாகரன், திரு புவனேந்திரன் ஆகிய இருவரும் அந்த விழாவுக்கு சென்றனர். அந்த விழாவைப் பற்றி இருவரும் எனக்குப் பலமுறை சொன்னார்கள்.

அட்சரத்த்தின் ஏற்பாட்டில் புலவரின் பாடல்களை இறுவட்டாக வெளியிடுவதற்காக புலவரைப் பற்றிய  புத்தகங்களைத் தேடினேன். தன்னிடம் சில புத்தகங்கள் இருப்பதாக திரு குலசேகரம் அவர்கள் சொன்னார்கள். உடனே அவருடன் அவரின் வீட்டுக்குச்சென்றேன்.  மாமி எழுதிய ஊஞ்சல் பாடல் பற்றி அவரிடம் வினவினேன். புலோலி மனோன்மணி அம்மனைப் பற்றியது எனச்சொல்லி தன்னிடம் புத்தகம் இருக்கிறது என்றார்.

புதையல் கிடைத்தது போன்ற சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது. வீட்டுக்குள் போய் ஐந்தி நிமிடங்களில் வந்து காணவில்லை. கிடக்கும் தேடித்தருகிறேன் என்றார்.  சிறகடித்த பட்டாம் பூச்சிகள் சிறகிழந்து விழுந்தது போன்ற நிலை ஏற்பட்டது. கோயிலின் பெயர் தெரிந்து விட்டது. அந்தக் கோயிலுக்குப் போனால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்துவிட்டேன்.

ஒருமாதத்தின் பின் இன்று கலையில் வீட்டுக்குவந்து  திருப்பொஞ்னூஞ்சல்புத்தகத்தைத் தந்தார். அம்மன் அருள் கிடைத்ததுபோல் மகிழ்சி ஏற்பட்டது.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து, கங்கை அமரன், போன்றவர்கள் பாடல் எழுதிய கதையைப் படித்து வியக்கும் எனக்கு  அன்று எனக்கு இந்த ஊஞ்சல் பாடலின்கதை வியப்பாகத் தெரியவில்லை.

திருவூஞ்சல் பா  அமைந்த கதை என  அம்பாள் அடியான் திரு . நடராசா அந்தப் புத்தகத்தில் குறுப்பிட்டுள்ளார்.

 

Monday, August 21, 2017

பூவற்கரையில் விநாயகன்

 பூவற்கரையில் விநாயகன்
 வதிரிகாவனம் பூவற்கரையில் கோயில் கொண்டருளும்
 விநாயக விக்னேஸ்வரப் பிள்ளையார் மகத்துவப்
 பிரார்த்தனைப் பிரபந்தம்

பிரபந்தம்
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன் 
ஞானகுரு வாணிபதம் நாடு.

கலித்துறை
அன்று சிவன் பெயர் அண்ணலெனும் பதியாய்த் திகழ்ந்து
இன்று விநாயக தத்துவ மூர்த்தமெழுந்தருளி
தொன்று தொட்டேயிவ் வதிரிப்பதியினைத் தூய்மை செய்ய
நன்னும் பூவற்கரையில் வதிந்த விநாயகனே.

பதிகம்
பரவெளி ஒளியில் ஒலியென் நாதம்
   பண்புடனோங்காரமானது உலகில்
அரனது நோக்கில் பிரணவ மெய்ப்பொருள்
    ஆனை முகத்துடனான முதல்வன்
பரன்பரை விண்கணங்கள் பணிந்து வணங்கியதால்
     பரகணபதியெனத் திருநாமம் பெற்றவர்
வரமருள இந்த வதிரிகா வனந்தனில்
    வதிந்தனர் பூவற்கரையில் விநாயகன் 1
அகர முதலெழுத்தெல்லாம் உயிர்மெய்யாய்

    ஆனசராசரம்  தோற்றமளித்ததில்
பிரணவமாகவே முன்னுக்குத் தோற்றிய
   பிள்ளையா ரேனுந் தெய்வம் முன்னவனே
நரரெனவுதித்த நம் வினையறுக்க
   நாதத்திலிருந்து தோன்றிய  வைங்கரன்
பரமன் பராசக்தி பண்புடனருளிய
   பண்ணவன்  பூவற்கரையில் விநாயகன்  2

 
படைப்புக்கு முதலில் தோற்றிய பிரணவம்
     பண்புடன் ஓங்காரம் திருமுகமாகவும்
உலக அமைப்பையே பெருவயிராகவும்
    ஊணுயிர் காத்தலீர் காலுருவாகவும்
கலைகளை எழுதத் திருக்கரத்திலோர் கொம்பும்
    கையினில் மோதகம் சராசர ஒடுக்கம்
அங்குச பாசங்கையில் ஆணவச் செருக்கை
    அடக்கியாளப் பூவற்கரையில் விநாயகன் 3

முத்தமிழ் வளர்திடக்கிரிதனி லெழுதிய
     மத்தக மததுத லொற்றைக் கொம்புடையவன்
தோத்திரக் கரத்துயர் தும்பி முகத்தவன்
      நேத்திர நுதலுடைய நிர்மல தேவன் 
அம்மையப்பனைச் சுற்றிய ருங்கனி பெற்றவன் 
     ஆறுமுகக் கடம்பன் அண்ணலாயானவன்
புண்ணிய வழிகாட்டிப் பாவத்தைப் போக்கிடப் 
      பூவற்கரைத் தலத்திலுறைந்த விநாயகன் 4

முப்புரமெரித்த சிவன் மூத்த குமாரன்
    இப்புவியோர் ஏற்று முதல் வழிபடு கடவுள்
அயன் முதல் தேவர்கள் அதிதியானவன்
    கயமுகக் கடவுள் கணபதி நாமன்
எத்தலத்திலும் முதல் பூசை ஏற்பவன்
    ஏரம்பனாக விளங்கிய மூர்த்தி
பந்தமறுக்க இந்த வதிரிகா வனத்துறை
    பண்பாளன் பூவற்கரையில் விநாயகன் 5

வாதாபி கணபதி வடபாலராய் விளங்கி 
மேதாவியாகவுலகெங்கும் பிரகாசித்து 
தாதாமல் தேவதத்துவங்களுக்கும் மேல்
பூதாரம் முதற்பல அண்டங்களையும் கடந்தோன் 
வேதாகம புராண இதிகாசங்களையுந்தந்த 
நாதாந்த மெய்ப்பொருளான கடவுள் 
பேதாதண்மை யகற்றிட இவ்வதிரிகாவனத்துறை
போதனன் பூவற்கரையில் விநாயகன் 6

வாரண வதனமும் மனித அவையமும்
      பூரண வயிறும் பூத உடலமைப்பும்
மாரண மற்றவராய் வலிமையுடையவராத்
      தாரகா சுரரைக் கொன்று தாரகமானவர்
தாமரைக் கண்ணன் மருகனென வானவர்
      தம்பி சுப்பிரமணியற்காக வள்ளியை வெருட்டியவர்
தாமத குணமகற்ற வதிரிகா வனந்தனில்
     தரித்தனர் பூவற்கரையில் விநாயகன் 7

 எண்டிசைப் பாலகற்கும் ஏகாதிபனாய் விளங்கி
   ஏறும்பெருச்சாளி சிவனின் மகன்
பண்டிசை கங்கைமைந்தன் பாவலர் களாரம்பிக்கும்
   பாங்கான நூல் முகத்தில் பதியுங் கணேசன்
முத்தமிழுக்கும் நாயகன் முதலெழுத்துமானவன்
   சித்தம் வைத்த தன் பக்தர்களை சிதையாது பாதுகாப்பவன்
பக்தகோடி மக்கட்குப் புரிந்தருட்பார்வை நல்க
   இத்தலமும் பூவற்கரையில் விநாயகன்  8

வேதவியாச முனிவர் பாரதஞ்சொல்ல

    வெற்பா வட மேருவை ரடாகக்கொண்டு
கோடான தன தொரு காம்பாலெழுதிய
   லம்போதரன் தலைவன் களிற்றுவதனன்
பாதாளம் விண்ணுலகம் பரற்தேக மாக நின்று
   பேதாதி பேத வினையெல்லா மகற்றும்
நாதாந்த மெய்ப்பொருள்  ஞான‌  விக்னேஸ்வரன்
   நாடி நடுவன் பூவற்கரையில் விநாயகன்  9

 போதாரன் நம்பிவைத்த நைவேத்திய மெல்லாமுண்டு
    பொல்லாப் பிள்ளையாரென்ற பூனை நாமம் பெற்றவர்
தேவாரம் மூவர் தமிழைத் தேடிக்காணாமையால்
   திருநாரைப் பதியிலிருந்து தில்லையிலென் றருளினார்
மாதா உமையாள் குமரன் பீதாம்பரன் மருமகன்
   மூதாதெயாங்கடவுள் மூலவிக்னேஸ்வரன்
ஆதாரமாய் வதிரி பூவற்கரையில் விநாயகன்  10

வாழி
வானவரந்தணரானிரை மரசசெங்கோல் நிறை
வழுவாது வையகமோங்க - வாழி
தானவர் செந்தமிழ்ப் புலவரோடு புனல் சொரிந்து
தழைத்திட மறை நான்குமே - வாழி
மானமுடனிருந்து வாழ் மக்கள் மதிப்புயர்வு
மலர்ந் திருகவே - வாழி
மாதர்களின் கற்புநிலை திறம்பாது நின்றொழுதி
மனமகிழ்நது வலிவருகவே - வாழி
பேதமையகற்று நம் சைவசமயம் சொல்வழிப்
பெருநீதி வழுவாதுலவவே - வாழி
பெருமை தரு திருநீறைந்தெழுத்தும் பரந்து
பெருகியோங்கிடவே - வாழி
மோதமொளிர் வதிரிகா வனமெங்கும் தங்குபுகழ்
பொங்கி பெருமாண்பு போற்றி - வாழி
பொருந்து பூவற்கரைப் பிள்ளையார் திருவருள்
பொலிந்திறங்கியருள் பூவற்கரையோனே - வாழியவே

திரு.கா.சூரன்
[தேவரையாளி இந்துக் கல்லூரி ஸ்தாபகர் ]
யாழ்ப்பாணம் வடமராச்சியில் உள்ள வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலய பதிகம்  

Saturday, August 12, 2017

எப்பயமும் எனக்கில்லை


ஐந்து கரங்களில் ஒரு கரத்தில்
அங்குசமும் மறு கரத்தில் பாசமும்
அபயக்கரம் காட்டி அருள்
பாலிக்கும். மறுகரத்தில் லட்டும்
தும்பிக்கையில் குடமும் கொண்டு
நம்பிக்கையாய் வந்தவர்க்கு
தும்பிக்கையால் அருள் பாலிப்பவர் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 1

ஈரேழு உலகமும் ஈன்றெடுத்த 
தாய் தந்தையர் என
உலகுக்கு உணர்த்தியவரும் 
அறுகம்புல்லின் புனிதமான வாசனையிலும் 
சந்தனத்தின் மஞ்சளிலும் பால் 
அபிஷேகத்தில் என்றும் உறைபவரும்
ஆனையின் வடிவமானவர் என்
உடனிருக்கு எப்பயமும் எனக்கில்லை. 2

வான் மதியின் முழு ஒளியையும்
தன் கண்களினுள் அடக்கி
ஆகாயம் போன்ற பரந்த மனதைக் கொண்டவரும்
தீ போன்று அசுரருக்கு கனலாயிருப்பவரும்
காற்றைப்போன்று எங்கும் கரைந்திருப்பவரும்
நிலத்தைப்போன்று நீண்டு வியாபித்திருப்பவரும்
நீரைப்போன்று நித்தியமாயிருப்பவரும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 3

எழில் கொஞ்சும் சோலையிலே
வண்டுகள் இடும் ரீங்காரத்தில் பிரணவத்தின்
பொருளாய் திகழ்பவரும்
வள்ளியை மணம் புரிய
முருகனுக்கு உதவிய ஆனை முகத்தவரும்
பார்வதியின் பாசத்திற்குரிய
பிள்ளையாரும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை 4


வியாசருக்கு தன் தந்தத்தை முறித்து
பார் போற்றும் பாரதம் மகாபாரதமாக
உருவெடுக்க உதவிய
வேத நாயகனாகிய விநாயகரும்
பிரம்மனின் மகள்களாகிய
கமலையையும் வல்லியையும் வல்லீஸ்வரர்
அருளால் கரம் பிடித்த கணபதியும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 5

முதற்படை வீடாகிய திருவண்ணாமலையில்
அருணாச்சலேஸ்வரரோடு திகழும்
அல்லல்போம் விநாயகரும்
இரண்டாம் படைவீட்டிற்குரிய விருத்தாச்சல
விருத்தகிரீஸ்வரருடன் உறையும் ஆழத்துப் பிள்ளையாரும்
எமனை ஈஸ்வரன் உøத்த மூன்றாவது படைவீடான
திருக்கடவூரில் உள்ள கள்ளவாரணப் பிள்ளையாரும்என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 6


நான்காவது படைவீடாகிய மதுரை மீனாட்சியம்மனுடன்
உள்ள முக்குறுணி விநாயகரான
சித்தி விநாயகரும் பிள்ளையார் பட்டி காசியை
ஐந்தாவது படைவீடாக கொண்ட
வலம்புரி விநாயகரும் துண்டி விநாயகரும்
ஆறாவது படைவீடான திருநாரையூரில்
அருள் பாலிக்கும் பொல்லாப் பிள்ளையாரும் என்
உடனிருக்க எப்பயமம் எனக்கில்லை. 7

மனிதனைப் போல இரு கரங்களைக்
கொண்ட கற்பக விநாயகரும்
வரங்களை வாரி வழங்கும்
வரதராஜ விநாயகரும்
நம்பியின் மூலம் திருமுறைகளை உலகுக்கு
வெளிப்படுத்திய வலம்புரி விநாயகரும்
தேவர்களுக்கு அமிர்த கலசத்தைக் கொடுத்தவரும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 8

ஈஸ்வரனின் புதல்வனே இன்பமாக
என்னுள் உறையும் ஐந்து கரத்தோனே
லம்போதர சுதனே உமைக்கு
உண்மையாயிருந்த உத்தமனே
முருகனுக்கு மூத்தவனே
மாயவனுக்கு மருமகனே
மூஷிக வாகனனே மோதகப் பிரியனே நீ என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 9

முக்காலமும் ஒரு காலமாய் முற்றாக
உணர்ந்த மூலப் பொருளோனே
எக்காலமும் அடியாருக்கு துணையாக
வருகின்ற சுந்தர விநாயகனே
ஆலமர்ச் செல்வனின் புதல்வனே
பூவற்கரையில் அருள் பாலி¬க்கும்
பூவற்கரைப் பிள்ளையாரே நீ என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை 10

தாட்ஷா வர்மா