Showing posts with label ஹமாஸ். Show all posts
Showing posts with label ஹமாஸ். Show all posts

Saturday, December 20, 2025

அவுஸ்திரேலியாவில் குறி வைக்கப்படும் யூதர்கள்

  சிட்னி  போண்டி கடற்கரை அவுஸ்திரேலியாவின் மிகப்பிரபலமானதுகொண்டாட்டமும் கலகலப்பும் நிறைந்த ஒரு இடம்போண்டி கடற்கரை. ஆனால் இது நேற்று சோகக் களமாக மாறிப் போனது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும் வழமைபோல போண்டி கடற்கரை மக்களால் நிரம்பியிருந்தது. யூத சமுதாயத்தினர் பாரம்பரிய ஹனுக்கா பண்டிகையின் தொடக்கம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான யூத மக்கள்  போண்டி கடற்கரையில் குழுமி இருந்தனர்.   கடற்கரை மணலிலும் பூங்காவிலும் சிரிப்பொலிகளும் மகிழ்ச்சியான குரல்களும்  ஓங்கி ஒலித்தன.

  திடீரென்று கேட்ட துப்பாக்கிக்குண்டு மழை அந்த அமைதி குலைந்தது. கறுப்பு நிற உடை அணிந்த இரண்டு பேர்,சரமாரியாகச் சுட்டனர். சிரிப்பும்  கொண்டாட்டமுமாக இருந்த போண்டி கடற்கரை அவலக் குரலால் பீதியடைந்தது. எங்கும் மரண ஓலம். உயிரைப் பாதுகாக்க மக்கள் தலை தெறிக்க  ஓடினார்கள். இரக்கமற்ற  அந்த இருவரும் கண்மண் தெரியாமல் சுட்டுத்தள்ளினர்.

இந்தக் கொடூரத் தாக்குதல் நடைபெற்ற போது கண்ணுக்கெட்டிய தூரத்தில் பொலிஸார் எவரும் இருக்கவில்லை. உயிர்ப் பயத்தில் அனைவரும் ஓடிய போது  ஒரே ஒருவர் மட்ட்டும் கார்களின்  பின்னால் மறைந்து ஓடிப்போய் கொலைகாரனின் துப்பாக்கியைப் பறித்தார்.


  பழக்கடை உரிமையாளரான அகமது அல் அகமது என்பவர், மக்களை காப்பாற்றும் முயற்சியில் துப்பாக்கியால் சுடும் நபரை மடக்கிப் பிடித்து துப்பாக்கியைப் பிடுங்கினார். கையில் ஆயுதம் இல்லாத பயங்கரவாதி ஓட்டம் பிடித்தார் சம்பவ இடத்துக்கு உடனடியகக் களம்  இறங்கிய பொலிஸார்ஒருவரைச் சுட்டுக் கொன்றனர்  மற்றையவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருடன்  பிடிக்கப்பட்டார்.  “உண்மையான ஹீரோஎன்று நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிறிஸ் மின்ஸ்  அகமது அல் அகமதுவைப் பாராட்டியுள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அவரை அவுஸ்திரேலியப் பிரதமர் சென்று பார்வையிட்டார்

 கடற்கரையில் நீச்சலுடையில் இருந்தவர்கள், தங்கள் குழந்தைகளுடன் விளையாடியவர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் அலறிக் கொண்டு ஓடினர். சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் இந்த கோரத் தாக்குதல் நீடித்தது.10 வயது சிறுமி முதல் 87 வயது முதியவர் வரை குறைந்தது 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 42-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சர்வாதிகாரி ஹிட்லரின் முகாமில் இருந்து  உயிர் தப்பிய ஒருவரும் இந்தச் அம்பவத்தில் பலியானார்.

கடும் துப்பாக்கிக் கட்டுப்பாடுகளைக் கொண்ட அவுஸ்திரேலியாவில், கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த மிக மோசமான துயரச் சம்பவம் இதுவாகும். பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்தத் தாக்குதலை பயங்கரவாதச் செயல் என்று வேதனையுடன் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் அவுஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுதுப்பாக்கிதாரிகளில் ஒருவரான, 50 வயதான சஜித் அக்ரம் என்பவரை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். அவரது 24 வயது மகன் நவீத் அக்ரம் காயங்களுடன் உயிருடன் பிடிபட்டார்.

கடும் துப்பாக்கிக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஆஸ்திரேலியாவில், கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த மிக மோசமான துயரச் சம்பவம் இதுவாகும். பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்தத் தாக்குதலை பயங்கரவாதச் செயல் என்று வேதனையுடன் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவுஸ்திரேலிய யூத நிர்வாகக் குழுவின் புதிய புள்ளிவிவரங்களின்படி ,   2023 ஆம் ஆண்டு இஸ்ரேலின் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர்  அவுஸ்திரேலியா யூத எதிர்ப்புத் தாக்குதல்கள்  அதிகரித்துள்ளது  எனத் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு  முகமூடி அணிந்த நபர்கள் மெல்போர்னில் உள்ள அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயத்துக்குத் தீ வைத்தனர். ஏழு மாதங்களுக்குப் பிறகு,   மற்றொரு மெல்போர்ன் ஜெப ஆலயமான கிழக்கு மெல்போர்ன் ஹீப்ரு சபையின் கதவுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டும் சிட்னியில் உள்ள கோஷர்  லூயிஸ் கான்டினென்டல் கிச்சனில் மற்றொரு தீ விபத்து நடத்தப்பட்டது.

அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயம் ,உணவு நிறுவனம் ஆகிய இரண்டின் மீதான தாக்குதல்களும் ஈரானிய புரட்சிகர காவல்படை  இருக்கலாம் என  என்று அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு   தெரிவித்தது.   ஈரானின் தூதர் அஹ்மத் சடேகி  உட்பட மூன்று ஈரானிய தூதர்களை  ஓகஸ்ட் மாதம், பிரதமர் அல்பானீஸ் வெளியேற்றினார், அவுஸ்திரேலிய மண்ணில் ஈரான் யூத எதிர்ப்பு தீவைப்பு தாக்குதல்களை இயக்கியதாக உளவுத்துறை மதிப்பீடு முடிவு செய்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் வரலாற்று ரீதியாக உயர்ந்த மட்டங்களில் இருப்பதாக ECAJ கண்டறிந்துள்ளது ‍  2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி முந்தைய சராசரி ஆண்டு எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகம், இது 2021 மற்றும் 2024 க்கு இடையில் எந்த J7 நாட்டிலும் இல்லாத மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும். J7 என்பது இஸ்ரேலுக்கு வெளியே மிகப்பெரிய யூத சமூகங்களைக் கொண்ட ஏழு நாடுகளைக் குறிக்கிறது, அவை யூத எதிர்ப்புக்கு எதிரான J7 பணிக்குழுவை உருவாக்குகின்றன : அமெரிக்கா, கனடா, யு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஆர்ஜென்ரீனா  அவுஸ்திரேலியா.

அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க, ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்பு J7 பணிக்குழு சிட்னியில் கூடியது.

"இந்தத் தாக்குதல் அவுஸ்திரேலியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள யூத எதிர்ப்பு சம்பவங்களின் ஒரு தொந்தரவான தொடரில் சமீபத்தியது" என்று அவதூறு எதிர்ப்பு லீக்கின் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் உளவுத்துறையின் மூத்த துணைத் தலைவர் ஓரன் செகல் கூறினார்இந்த சம்பவங்கள் பெருகிய முறையில் வன்முறையாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தாக்குதல் நடத்திய தந்தையும் மகனும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தகவல்  வெளியானதுஆனால்   மகன் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர் என்று  அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தார்கள்.தந்தை நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார் என்பதை அவர்கள்  முதலில் உறுதிப்படுத்தவில்லை.

தகப்பன் அவுஸ்திரேலிய குடிமகன் அல்ல என்பதை உள்துறை அமைச்சர் டோனி பர்க், உறுதிப்படுத்தினார், 1998 இல் மாணவர் விஸாவில் அவுஸ்திரேலியாவிற்கு வந்து 2001 இல் கூட்டாளர் விசாவிற்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு அவர் குடியுரிமை திரும்பும் விஸாவில் மூன்று முறை வெளிநாடு சென்றுள்ளார்.

தகப்பன் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் அவர் படிப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்ததாகவும் பின்னர் வதிவிட விஸா பெற்றதகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் தெலுங்கானாவைச் சேர்ந்தவர் என்பதை இந்தியா  உறுதிப் படுத்தியுள்ளது.

அவர்களிடம் ஆறு துப்பாக்கிகள் இருந்தன - அவை சட்டப்பூர்வமாக வாங்கப்பட்டன - மேலும் யூதக் கூட்டத்தை குறிவைக்க ஒரு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தை ஒன்று சேர்த்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 2019 ஆம் ஆண்டில் மகனை விசாரித்து, அவரது தந்தையை நேர்காணல் செய்த அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (ஆசியோ) வெளிப்படுத்திய பின்னர், அவர் அதற்கு ஆதரவாக இருந்தார், ஆனால் அவர் ஒரு அச்சுறுத்தல் இல்லை என்று கருதியது.

"இந்த நபர் யூத சமூகத்தை குறிவைத்து, வன்முறைச் செயலையோ அல்லது யூத-விரோதச் செயலாகக் கருதக்கூடிய எந்தவொரு செயலையோ திட்டமிட்டு, பரிசீலித்து அல்லது ஊக்குவித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அவர்கள் தீர்மானித்தனர்.

இந்தத் தாக்குதலில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 87 வயது நிரம்பிய அலெக்ஸ் கிளெயிட்மேன் பலியாகி உள்ளனர். இவர் 2ம் உலகப்போர் சமயத்தில் ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் இனப்படுகொலையில் இருந்து தப்பியவர் பயங்கரவாத தாக்குதலில் மனைவியை காக்க நினைத்து பலியாகி உள்ளார்

  87 வயது நிரம்பிய அலெக்ஸ் கிளெயிட்மேன் என்பவரைப் பற்றிய   தகவல் வெளியாகி உள்ளது. ஹோலோகாஸ்ட் படுகொலை என்பது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நடந்தது. 1941ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை  ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நாசி படைகள் ஐரோப்பியாவில் வாழும் யூதர்களை குறிவைத்து கொன்றது.மொத்தம் 60 லட்சம் பேரை படுகொலை செய்தது. இதனை ஹோலோகாஸ்ட் படுகொலை என அழைக்கின்றனர்.   இந்த படுகொலையில் இருந்து தான் அலெக்ஸ் கிளெயிட்மேன் தப்பினார். சைபீரியாவில் இருந்த அவர் ஹிட்லரின் நாசி படையால் பிரச்சனையை எதிர்கொண்டார். ஹிட்லரிடம் இருந்து தப்பிய யூதர்கள் பல நாடுகளில் தஞ்சமடைந்தனர். அலெக்ஸ் கிளெயிட்மேன் உக்ரைனில் தஞ்சமடைந்தார். உக்ரைனில் இருந்து அவர் தனது மனைவி லாரிசாவுடன் அவுஸ்திரேலியாவில் குடியேறினார். லாரிசாவும் ஹிட்லரின் ஹோலேகால்த் படுகொலையில் இருந்து தப்பியவர் தான். இந்நிலையில் தான் சம்பவத்தன்று அலெக்ஸ் தனது மனைவி லாரிசா, பேரக்குழந்தைகள் உள்பட பிற குடும்ப உறுப்பினர்களுடன் பாண்டி கடற்கரைக்கு சென்றுஹனுக்கா'திருவிழாவில் பங்கேற்றார். அப்போது தான் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் அவர் பலியானார். துப்பாக்கிச்சூடு நடந்தபோது அவரது குடும்பத்தினர் அனைவரும் தரையில் படுத்தனர். அலெக்ஸ் கிளெயிட்மேனும் தரையில் படுத்தார். ஆனால் அவரை விட்டு மனைவி லாரிசா சிறிது தூரத்தில் படுத்து கிடந்தார். இதனால் மனைவிக்கு ஏதாவது ஆகிவிடும் என்று அவர் அருகே அலெக்ஸ் கிளெயிட்மேன் சென்றபோது குண்டு பாய்ந்து அவர் பலியானார்.   இதுபற்றி மனைவி லாரிசா கூறுகையில், ‛‛என் கணவர் அலெக்ஸ் கிரெயிட்மேன் என்னை பாதுகாக்க நினைத்தபோது துப்பாபக்கி குண்டு பாய்ந்து இறந்துவிட்டார்'' என அழுதார்.

இப் இந்தக் கொரூரத்தின் பின்னணி என்ன.. ஏதேனும் அமைப்புக்காக இதைச் செய்தார்களா, தனிப்பட்ட காரணம் ஏதேனும் உள்ளதா என்பது தெரியவில்லை. விசாரணைக்குப் பின்னரே இது தெரிய வரும்.

 

வர்மா

21/12/25

  

 

Tuesday, February 11, 2025

இடம் பெயர்ந்த காஸா மக்களுக்கு சவால்விடும் குளிர்காலப் புயல்

 காஸா பகுதியில் ஒரு பேரழிவு தரும் குளிர்காலப் புயல் வீசி வருகிறது, இதனால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களின் உயிர்வாழ்வதற்கான போராட்டம் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களை தங்க வைத்திருக்கும் பலவீனமான கூடாரங்கள், புயல், குளிர் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாதவை.  காஸா மக்களுக்கு, புயல் என்பது வெறும் இயற்கையின் செயல் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையைப் பிளந்த பேரழிவுகளின் வரிசையில் ஒரு கூடுதல் சோகம்.

பராக்காவிலிருந்து வெகு தொலைவில் இல்லாத ஓம் அகமது அல்-ரம்லி, புயல் தனது கூடாரத்தை நாசமாக்கிய பிறகு, தனது உடைமைகளைக் காப்பாற்ற தீவிரமாகப் போராடினார்.

 பாலஸ்தீன அரசியல்வாதிகள்  காஸாவை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது பற்றி சண்டையிடுகிறார்கள், ஆனால் இந்தப் போருக்கான இறுதி விலையை செலுத்துவது மக்கள்தான்.நிலம் அடர்ந்த சேற்றின் சேற்றாக மாறுவதால் நிலைமை மோசமடைகிறது, இடம்பெயர்ந்தவர்களை சிக்க வைத்து, தப்பிக்கவோ அல்லது உதவி பெறவோ தடையாகிறது.

இடைவிடாத மழையும், பலத்த காற்றும் முகாம்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன, மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு புகலிடம் இல்லை.எரிபொருள் பற்றாக்குறை அவர்களின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது, குடும்பங்கள் தங்கள் தங்குமிடங்களை சூடாக வைத்திருக்க எந்த வழியையும் இழக்கச் செய்துள்ளது. ஈரப்பதமான மற்றும் குளிரான சூழ்நிலையில் வாழ்வதால், மக்கள் நோய்களுக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளது.

வடக்கு  காஸாவில், நிலைமை அதே அளவுக்கு மோசமாக உள்ளது. ஜனவரியில் ஹமாஸ் , இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையேயான போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஸ்திரத்தன்மையின் சாயல் கிடைக்கும் என்று நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்கள், இடிபாடுகளைத் தவிர வேறு எதையும் காணவில்லை.

வீதிகள், வீடுகள் ,உள்கட்டமைப்புகள் என்பன  அழிக்கப்பட்டுள்ளன, மேலும் உயிர்வாழ்வது அன்றாடப் போராட்டமாகிவிட்டது.

தாங்க முடியாத இந்த துன்பத்தை எதிர்கொள்ளும் நிலையில், இடம்பெயர்ந்த குடும்பங்கள் மனிதாபிமான அமைப்புகளுக்கு அவசர துயர அழைப்புகளை அனுப்பி, இன்னும் உறுதியான கூடாரங்கள், வெப்பமூட்டும் சாதனங்கள் மற்றும் சிறிதளவு நிவாரணத்தை வழங்கக்கூடிய எந்தவொரு உதவியையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மனித உரிமை அமைப்புகள் இந்த அழைப்புகளை எதிரொலித்து, காசாவில் வேகமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து எச்சரித்துள்ளன.சுகாதார சேவைகள் பற்றாக்குறையின் மத்தியில் குளிர் மற்றும் நோய்களுக்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் கடுமையான ஆபத்துகளை அவை எடுத்துக்காட்டுகின்றன.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்படி,  காஸாவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மோதலால் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.அவர்கள் அடைக்கலம் தேடும் முகாம்களில் கண்ணியமான வாழ்க்கை நிலைமைகள் எதுவும் இல்லை. சுத்தமான தண்ணீர், வெப்பமூட்டும் உபகரணங்கள் , அத்தியாவசிய மருந்துகள் என்பன  பற்றாக்குறையாக உள்ளன.

 ஊர்மிளா

Sunday, October 6, 2024

மத்தியகிழக்கில் மினி உலகப்போர்


 

மத்தியகிழக்கில் மினி உலகப்போர்

ஆயுதங்களைப்  பரிசீலுக்கும்

அறிவிக்கப்படாத  உலகப் போர் 

இஸ்ரேல், பாலஸ்தீன   மோதலாக  உருவெடுத்த மத்தியகிழக்கு யுத்தம்  இன்று இஸ்ரேல், ஹமாஸ், இஸ்ரேல் ஹிஸ்புல்லா, இஸ்ரேல் ஹூதி  யுத்தமாக  உருவெடுத்துள்ளாது. இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தும்  ஹிஸ்புல்லா,ஹமாஸ், ஹூதி ஆகியவற்றுக்கு உதவும் லெபனான்,சிரியா,ஏமன் ஆகிய நாடுகளின்  மீது இஸ்ரேல்  போர் தொடுத்துள்ளது.

கடந்த    வருடம் ஒக்டோபர் 7 ஆம் திகதி காஸவில் ஹமாஸ்  அதிரடித்த தாக்குதல் நடத்தி இஸ்ரேலை நிலை குலைய வைத்தது. ஹமாஸைப் பழிவாங்க  இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது. ஹமாஸுக்கு ஆதர்வாக ஹிஸ்புல்லா  இஸ்ரேல் மீத் தாக்குதல் நடத்தியது. லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா  இயங்குவதால் இஸ்ரேலின் பார்வை  லெபனனின் மீதுவிழுந்தது.

ஹிஸ்புல்லாவின் தலைவர்களிக் குறிவைத்து நடத்திய தாக்குதல்கள்  வெற்றியளித்தன. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் உட்பட  ஏழு முக்கிய தலைவர்கள்  இஸ்ரேலின் தாக்குதலில் பலியாகினர்.

 இஸ்ரேலியத்  தரைப்படைகள் லெபனானுக்குள் அணிவகுத்துச் சென்றபோது, ​​அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளின் ஆதரவுடன் பெரிய அளவிலான ஈரானிய ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது.

ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் படுகொலையானது, குழுவை இப்போதைக்கு இழுத்துச் செல்லும் ஒரு தந்திரோபாய சாதனையாகும், மேலும் அது நீண்ட காலத்திற்கு முடக்கப்படலாம், ஆனால் லெபனானுக்குள் இருந்து இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலை அகற்றும் ஒரு மூலோபாய சாதனை

இஸ்ரேல் பல தலைமுறை போராளித் தலைவர்களை குறிவைத்துள்ளது, அவர்களின் அமைப்புகள் படுகொலைகளுக்குப் பிறகு தப்பிப்பிழைத்தன அல்லது உருவாகின. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெஹ்ரானில் கொல்லப்பட்ட நஸ்ரல்லா மற்றும் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே இருவரும் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பின்னர் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். தலைவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஹிஸ்புல்லாஹ் தளபதிகளின் முழுத் தொகுதிகளையும் அகற்றி, குறிப்பாக பரந்த அளவில் இருந்தன. ஆனால் சேதம் அதன் தற்போதைய வடிவத்தில் குழுவிற்கு ஆபத்தானதாக நிரூபித்தாலும், அதன் சரிவு அதிக பாதுகாப்பிற்கான எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது.

1980 களின் முற்பகுதியில் பாலஸ்தீன விடுதலை அமைப்பு லெபனானில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஹிஸ்புல்லா அங்கு பலமானது.. 

தொலைதூர வான்வழித் தாக்குதல்கள், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உளவு போன்றவற்றில் ஹிஸ்புல்லா மற்றும் ஈரானைக் காட்டிலும் இஸ்ரேல்  அதிக நன்மையடைந்துள்ளது.

ஜோர்டான் இஸ்ரேலுடன் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது, இராஜதந்திர உறவுகளை இயல்பாக்கியுள்ளது மற்றும் ஏப்ரலில் ஈரானிய ஏவுகணை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் இராணுவ கூட்டணியில் சேர்ந்தது.

இஸ்ரேல் லெபனானுக்குள் நுழையத் தயாராகும் போது, ​​ஜோர்டானின் வெளியுறவு மந்திரி அய்மன் சஃபாடி, தனது அண்டை நாடு பாதுகாப்பு அல்லது இராணுவ மேலாதிக்கத்தை நாடுகிறதா என்று கேள்வி எழுப்பினார்.  

ஹிஸ்புல்லா,ஹமாஸ்,ஹூதி  ஆகிய குழுக்களுக்கு ஆதரவு கொடுக்கும் நாடுகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. லெபனானை  அச்சப்படுத்திய இஸ்ரேலின்  பார்வை ஈரானின் மீது விழுந்துள்ளது.ஈரானின் அணு உலைகள்  இரானின் குறியாக  இருக்கலாம் என  உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன.அணு உலைகளைத் தாக்க அனுமதிக்கப்போவதில்லை என  அமெரிக்கா கூறியுள்ளது.

இஸ்ரேலுக்கு இராணுவ, பொருளாதார  தளங்கள் உட்பட பல சாத்தியமான இலக்குகள் உள்ளன. ஆனால் அனைத்தும் எச்சரிக்கையுடன் வருகின்றன. ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலிலும்  இஸ்ரேலின் இலக்காக இருக்கலாம்.

ஈரான்   பலவீனமான வான் பாதுகாப்புகளைக் கொண்டுள்ளது  இஸ்ரேலிய ஏவுகணைகள் அல்லது விமானப்படை குண்டுவீச்சைத் தடுக்க  அது போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . பின்னர்,  ஈரானின் முந்தைய ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல்  பதிலளித்து, இராணுவ-தொழில்துறை நகரமான இஸ்பஹானில் ஈரானின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியை சேதப்படுத்தியது, ரஷ்ய S-300. இது இஸ்ரேலின் திறன் என்ன என்பதை ஈரானுக்கு வெளிப்படுத்தும் நோக்கம் கொண்டதாக்குதல்.


ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் செவ்வாயன்று இஸ்ரேல் மீதான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு ஒரு பிரதிபலிப்பாகக் கூறப்படுகிறது , பிடென் இந்த பிரச்சினை வியாழன் விவாதத்தில் இருந்ததைக் குறிக்கிறது. சில மதிப்பீடுகளின்படி, 90% கச்சா எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் எண்ணெய் முனையம்தான் அதிகம் குறிப்பிடப்பட்ட இலக்கு, இதில் பெரும்பாலானவை சீனாவுக்கானவை. மற்ற முக்கிய வசதிகளில் ஈரானின் உள்நாட்டு எண்ணெய் தேவைகளில் கணிசமான விகிதத்தை கையாளும் ஈராக் எல்லைக்கு அருகில் உள்ள அபாடான் சுத்திகரிப்பு நிலையம் அடங்கும்.

இஸ்ரேல் ஒரு வித்தியாசமான தந்திரத்தை எடுக்கலாம், ஈரானில் இலக்கு கொலைகளை அதன் திட்டத்தை விரிவுபடுத்தலாம். ஜூலை இறுதியில் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸ்மாயில் ஹனியேவைக் கொன்றதன் மூலம் தெஹ்ரானில் படுகொலைகளை நடத்த முடியும் என்பதை அது ஏற்கனவே காட்டியுள்ளது . நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, அவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து ஒன்றை அது வெடிக்கச் செய்தது.

2020 நவம்பரில் ரிமோட் கண்ட்ரோல் இயந்திர துப்பாக்கியால் கொல்லப்பட்டதாக கூறப்படும் மொஹ்சென் ஃபக்ரிசாதே உட்பட பல ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் இஸ்ரேலால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது . எவ்வாறாயினும், இஸ்ரேல் வெளிப்படையான ஏவுகணைத் தாக்குதலுக்கு குறைந்த முக்கிய பதிலைப் பரிசீலிப்பதாகத் தெரியவில்லை,

ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. பதிலுக்கு இஸ்ரேல் லெபனானை தாக்கி வருகிறது. ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் என்பது சாதாரண தாக்குதல் கிடையாது. இஸ்ரேலின் ஆணிவேரையே அசைத்து பார்த்த தாக்குதல். நாங்கள் 99% ஏவுகணைகளை மறித்துவிட்டோம்.. ஈரான் எங்களுக்கு சேதங்களை ஏற்படுத்தவில்லை என்று இஸ்ரேல் கூறலாம். ஆனால் ஈரானின் 80% ஏவுகணைகளை இஸ்ரேலில் இலக்கை தாக்கி உள்ளதாகவே உலக போர் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கெல்லாம் கண்டிப்பாக இஸ்ரேல் பதிலடி கொடுக்கும்.. அந்த பதிலடி போரை கூட உருவாக்கும். ஏற்கனவே பல நாடுகள் போரில் ஈடுபட்டு வரும் நிலையில்.. இஸ்ரேலின் பதிலடி வெறும் போரை மட்டும் உருவாக்காது.. அது உலகப்போரையே உருவாக்கும்.

 இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஈராக், எகிப்து, சிரியா, அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டு உள்ளன. லெபனான், ஈராக், எகிப்து, சிரியா பாலஸ்தீனம் பக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக இரண்டு போர்களையும் கணக்கிட்டால் 10 நாடுகள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ரஷ்யா, சீனாவும் தலையிட்டு உள்ளன‌. இதெல்லாம் உலகப்போரை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது

  உலகப்போருக்கான வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. போர் தொடங்குவதற்கான சதவிகிதம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்க தொடங்கி உள்ளனர்.உலக அளவில் புதிய வேர்ல்டு ஆர்டர் உருவாகும் வாய்ப்புகளும் உள்ளன. வேர்ல்டு ஆர்டர் என்பது தற்போது இருக்கும் உலக நிலை.  அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆதிக்கம்., ஆசியாவில் சீனா - இந்தியாவின் வலிமை, சீனா - ரஷ்யாவின் நட்பு இதை எல்லாம் வேர்ல்டு ஆர்டர் என்பார்கள். 

இதுதான் உலகப்போர் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிக் குழுக்களுக்கும் இடையே நடக்கும் போர், இப்போது நடக்கும் இஸ்ரேல் - ஈரான் - லெபனான் போர், உக்ரைன் ரஷ்யா போர், தென் கொரியா வடகொரியா போர் காரணமாக உலகப் போர் மூளும் அபாயங்கள் ஏற்பட்டு உள்ளன.

 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 35 சதவீதமாக இருந்த ஒரு முழு உலகப் போருக்கான வாய்ப்புகளை 50 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அமெரிக்க பில்லியனர் மற்றும் ஹெட்ஜ் நிதி வழிகாட்டியான ரே டாலியோ தெரிவித்துள்ளார்.

இந்தப் போர் பல நாடுகளில் பல்வேறு வகையான மோதல்களுக்கு வழிவகுக்கும் அதிக ஆபத்து உள்ளது, மேலும் இது இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ளவர்களுக்கும் அப்பால் போரை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

 இதில் போருக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. முக்கியமாக சிறிய உலகபோராக இல்லாமல் இது பெரிய உலகபோராக மாறலாம். பல வல்லரசு நாடுகள் கூட இதில் கலந்து கொள்ளும் அபாயம் உள்ளது. 

வர்மா

6/10/24