உலகக் க்கிக்ண்ண குரூப் 'டி’ பிரிவில் துருக்கிக்கு எதிரான ஆட்டத்தில் பராகுவே 1-0 என்ற கோல் கணக்கில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் நடைபெற்ற போட்டியில், ஆட்டம் தொடங்கிய 65-வது விநாடியிலேயே பரகுவேயின் மத்தியாஸ் கலர்சா (Matias Galarza) கோல் அடித்து அசத்தினார். இது இந்த உலகக் கிண்ண்ணத் தொடரின் அதிவேக கோல் ஆகும். ஆட்டத்தின் பெரும்பகுதி நேரம் ஒரு வீரர் குறைவாக விளையாடிய போதிலும், பரகுவே தனது முன்னிலையைத் தக்கவைத்து வெற்றி பெற்றது.
முதல்
பாதியின் இறுதிக் கட்டத்தில், பரகுவேயின் நட்சத்திர வீரர் மிகுவல் அல்மிரோன்
(Miguel Almiron) சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
எதிரணி வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது வாயை மூடிக்கொண்டு பேசக் கூடாது என்ற
புதிய விதியை மீறியதற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இதனால் பரகுவே அணிக்கு
பின்னடைவு ஏற்பட்ட போதிலும், அந்த அணியின் கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் (Orlando
Gill) பல ஆபத்தான கோல் முயற்சிகளைத் தடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த
வெற்றியின் மூலம் அமெரிக்க அணி குரூப் 'டி’ பிரிவில் முதலிடத்தைப் பிடிப்பதை உறுதி
செய்துள்ளது. அதே நேரத்தில், தொடர்ந்து இரண்டாவது தோல்வியைத் தழுவிய துருக்கி அணி அடுத்த
சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. பரகுவே அணி தனது அடுத்த லீக்
ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த ஆட்டத்தின் முடிவு குரூப்பில்
இரண்டாவது இடத்தை யார் பிடிப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கும்.
அல்பாரோவின்
வியூக மாற்றமும் கலர்சாவின் அதிவேக கோலும்
அமெரிக்க
அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4-1 எனத் தோற்ற பராகுவே, பயிற்சியாளர் குஸ்டாவோ அல்பாரோவின்
(Gustavo Alfaro) வியூக மாற்றத்தால் இப்போட்டியில் மீண்டு வந்துள்ளது. முதல் போட்டியில்
களமிறக்கப்படாத அட்லாண்டா யுனைடெட் வீரர் கலர்சா, இப்போட்டியில் தொடக்க வீரராக வாய்ப்பு
பெற்றார். அதனைச் சரியாகப் பயன்படுத்திய அவர், ஆட்டம் தொடங்கிய 1 நிமிடம் 5 விநாடிகளில்
25 யார் தொலைவில் இருந்து இடது காலால் அபாரமாக கோல் அடித்து பயிற்சியாளரின் நம்பிக்கையைக்
காப்பாற்றினார்.
துருக்கி
அணி முதல் பாதியிலேயே ஆட்டத்தை சமன் செய்ய தீவிரமாக முயன்றது. ஆனால், மெர்ட் முல்டுர்
(Mert Muldur) தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதால் அந்த வாய்ப்பு
நழுவியது. முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் முல்டுர் மற்றும் அல்மிரோன் இடையே மைதானத்தின்
நடுவே ஏற்பட்ட ஃபவுலைத் தொடர்ந்து வாக்குவாதம் வெடித்தது.
அப்போது
அல்மிரோன் தனது வாயை மூடிக்கொண்டு ஏதோ கூற, முல்டுர் உடனடியாக நடுவர் இவான் பார்டனிடம்
(Ivan Barton) முறையிட்டார். விஏஆர் (VAR) சோதனையை மேற்கொண்ட நடுவர், இந்த உலகக் கிண்ணத்தில்
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதியின் கீழ் அல்மிரோனுக்கு சிவப்பு அட்டை வழங்கி
வெளியேற்றினார்.
24
ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற துருக்கி அணி, குரூப்
சுற்றை எளிதில் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போட்டியிலும் அவர்கள் பந்தை அதிக
நேரம் தங்கள் வசம் வைத்திருந்த போதிலும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-0 தோல்வியைத்
தொடர்ந்து இந்த ஆட்டத்திலும் தோல்வியையே தழுவினர்.
நடப்பு
உலகக் கிண்ணப் போட்டியில் முதல் இரண்டு போட்டிகளில் மொத்தம் 62 முறை கோல் அடிக்க துருக்கி
வீரர்கள் முயன்றுள்ளனர். இருப்பினும், அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
1966-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கிண்ண வரலாற்றில்
இரண்டு போட்டிகளில் அதிக கோல் முயற்சிகள் மேற்கொண்டும் ஒரு கோல் கூட அடிக்காத அணி என்ற
மிக மோசமான சாதனையை துருக்கி பதிவு செய்துள்ளது.
இரண்டாம்
பாதியின் தொடக்கத்தில் துருக்கியின் மெரிஹ் டெமிரல் (Merih Demiral) அடித்த கடினமான
பந்தை பராகுவே கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் திறம்பட தடுத்தார். தொடர்ந்து அப்துல்கரிம்
பர்டக்சி (Abdulkerim Bardakசி) , கான் உசுன் (Can Uzun) ஆகியோரின் கோல் முயற்சிகளையும்
அவர் முறியடித்தார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் டெமிரல் தலையால் முட்டிய பந்து இலக்கைத்
தவறவிட, துருக்கியின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.




