கருணாநிதி காலத்தில் நழுவிய பழம் ஸ்டாலினின் கையில் விழுந்தது.
பனையூர் பக்கம் யாரும் செல்லாததால் தனிமரமான விஜய்
வாக்கு வங்கி இல்லாத கட்சிகளுக்கு தூண்டில் போடும் தலைவர்கள்.
காங்கிரஸின் முடிவுக்காக
ஆவலுடன் காத்திருக்கும் தவெக
தமிழக அரசியல் களம் திடீரென
பரபரப்பாகி உள்ளது. எந்தப் பக்கம் சிக்னல்
போடுவதென முடிவெடுக்காது காலத்தைக் கடத்தி வந்த பிரேமலதா அறிவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
எடப்பாடியுடனும், விஜயுடனும் பகிரங்கமாக டீல் பேசிய பிரேமலதா டெல்லியில் பாரதீய ஜனதாவுடனும்
தொடர்பில் இருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். நல்ல காலம் பிறக்கும், நல்ல
காலம் பிறக்கும் என குடுகுடுப்பைக் காரன் போல டம்பம் அடித்த பிரேமலதாவை திமுக எப்படி
வளைத்தது எனத் தெரியாமல் விமர்சகர்கள் அதிர்ச்சிய்ல்
உறைந்துள்ளனர்.
விஜயகாந்த் காலத்தில் 8 சத
வீத வாக்கு வங்கியுடன் அச்சுறுத்திய கட்சி இன்றுஒரு சத வீதத்தைத் தாண்டுமா என சந்தேகமாக உள்ளது. ஆனாலும், அந்தக் கட்சுக்கு மவுசு கூடிக்கொண்டே
சென்றது.
முதல்வர் பதவியை கருணாநிதி
தக்கவைக்க போராடிய தேர்தல். கருணாநிதியுடம்
இருந்து முதல்வர் பதவியைப் பறிக்க போராடிய தேர்தல். விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை வெற்ரி பெற்றதால் பழம் நழுவி பாலில்
விழும் என பூடகமாக அரி வெளியிட்டன் கருணாநிதி நிம்மதியாக உறங்கினார். ஆனால், வைகோவும் வேறு சில தலவர்களும்
விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாலராக்கி மூன்றாவது அணியை அறிவித்தனர்.அதனால் 1 .1 சதவீத
வாக்குகளால் திகும தோல்வியடைந்தது. அப்படி ஒரு நிலை வரக்கூடாது எகக் கணக்கும் போட்ட
ஸ்டாலின் கச்சிதமாகக் கணக்குப் போட்டு பிரேமலதாவை அறிவாலயத்துக்கு வரவழைத்தார்.
திமுவுடன்
தேமுதிக இணைந்துள்ளதன் மூலம் திமுக கூட்டணி வலுப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டின்
அனைத்து தொகுதிகளிலுமே சொல்லிக்கொள்ளும்படியான வாக்கு வங்கி வைத்துள்ள தேமுதிக, பல
தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும், என்பதை உணர்ந்தே கூட்டணியில்
தேமுதிகவை ஸ்டாலின் சேர்த்துள்ளார். கடந்த
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில்
39 தொகுதிகளில் 5,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் வென்றது திமுக. அதேபோல,
குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே 17 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. தேமுதிகவின்
வருகையால் இதுபோன்ற மிக சொற்ப எண்ணிக்கையிலான தோல்வியை தவிர்க்க முடியும் என திமுக
கணக்கு போட்டுள்ளதாகத் தெரிகிறது.
தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை பெறக்கூடிய ஒவ்வொரு
வாக்கும் முக்கியம். அதேபோல, எதிர்க்கட்சிக்குச் செல்ல வாய்ப்புள்ள ஒவ்வொரு வாக்கையும்
தடுப்பதும் முக்கியம். தமது கட்சிக்கு கிடைக்க வேண்டிய வாக்கு , எதிர்க்கட்சிக்கு சென்றால், அந்தக் கட்சிக்கும்
தமக்குமான வாக்கு வித்தியாசம் 2 ஆகிவிடும். அதனால் தான் தேர்தல் சமயத்தில் சிறு சிறு கட்சிகளைக் கூட பொருட்படுத்தி ஆதரவை திரட்டி வருகின்றன
அரசியல் கட்சிகள். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்,
கொமதேக என பல கட்சிகள் இருக்கும் நிலையிலும் அக்கட்சி தமது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும்
முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களில் துரைமுருகனும் ஒருவர்.
குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றவர்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்
கமல்ஹாசனும் ஒருவர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க
முடியாத மற்றும் மரியாதை மிக்க நட்சத்திரமாக இருந்த விஜயகாந்த், கடந்த 2005ம் ஆண்டு
தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியை தொடங்கினார். மாநிலம் முழுவதும் சூறாவளி
பயணத்தை மேற்கொண்ட அவர், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து பேசினார். 2006 தேர்தலில்
நிலவிய மும்முனைப் போட்டியில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளில் வேட்பாளர்களை
களமிறக்கினார். ஆனால், விஜயகாந்த் மட்டுமே விருதாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று
சட்டப்பேரவைக்கு சென்றார். அதேநேரம், 8.38 சதவிகித வாக்குகளை பெற்று கவனத்தை ஈர்த்தார்.
அந்த தேர்தலில் 39.91 சதவிகித வாக்குகளை பெற்ற அதிமுக வெறும் 4.84 சதவிகித வாக்குகள்
வித்தியாசத்தில் திமுகவிடம் ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது அந்த தேர்தலில்
தேமுதிக பெற்ற வாக்குகள் தான், வெற்றி தோல்வியையே தீர்மானித்தது.
கட்சியின் கட்டமைப்பை மேலும்
வலுப்படுத்தும் விதமாக 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 39 மக்களவை தொகுதிகளிலும்
தேமுதிக தனித்து போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், 10.3 சதவிகித
வாக்குகளை பெற்று திமுக, அதிமுமவிற்கு சவால் விடுக்கும் வகையிலான வலுவான தலைவராக விஜயகாந்த்
உருவெடுத்தார். அடுத்த தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக அவர் இருப்பார்
என்ற கருத்தும் மாநிலம் முழுவதும் பேசுபொருளானது.
விஜயகாந்தின் பலத்தை உணர்ந்த
ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற தீர்மானத்துடன் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தார்.
அந்த தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி, 29 இடங்களில் வென்றது.
திமுகவின் படுதோல்வியால் தேமுதிகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைத்தது. அந்த மிகப்பெரும்
வெற்றியே தேமுதிகவின் சரிவின் தொடக்கமாகவும் அமைந்தது. சட்டமன்றத்திலேயே அதிமுகவுடன்
கருத்து மோதலில் ஈடுபட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
தனித்து போட்டியிட்ட வரை சுமார்
10 சதவிகித வாக்குகளை பெற்று வந்த தேமுதிக, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன்
கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் ஒரே அடியாக கட்சியின் வாக்கு
சதவிகிதம் சுமார் 5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டது.
போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட விஜயகாந்த் கட்சியால் வெற்றி பெறமுடியவில்லை
கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில்
மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருந்த கருணாநிதி, பழம் நழுவி (தேமுதிக) பாலில்
விழும் (திமுக கூட்டணி) என நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக
மதிமுக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிக போன்ற கட்சிகளுடன் சேர்ந்து விஜயகாந்த் மக்கள்
நல கூட்டணி என்பதை அமைத்தார். பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், விஜயகாந்திற்கே டெபாசிட் கூட கிடைக்கவில்லை. தேமுதிகவின் வாக்கு சதவிகிதம்
வெறும் 2.4 சதவிகிதமாக பாதாளத்திற்கு சென்றது. ஆனால் இந்த கூட்டணி பிரித்த வாக்ககுகள்
மூலம் அதிமுக மீண்டும் வென்று ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்தின் உடல் நிலை மோசமடைந்ததால் மனைவி பிரேமலதாவின் பிடிக்குள் கட்சி சென்றது. அவரின் கடுமையான நடவடிக்ககளும், பெருத்த எதிர்பார்ப்பும் கட்சியைச் சீரழித்தது. ஆனாலும், விஜயகாந்தின் ரசிகர்களான தொண்டர்கள் இன்றும் முனைப்புடன் இருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் அவர்கள் மாற்றாத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை பிரேமலதாவிடம் உள்ளது.
திமுக - தேமுதிக கூட்டணியால் திமுகவில் ஏற்கனவே
இணைந்து செயல்பட்டு வரும் பல முக்கியமான முன்னாள் தேமுதிக புள்ளிகள் கலவரமடைந்துள்ளார்களாம்.
கட்சியில் தங்களுக்கு இருந்து வரும் முக்கியத்துவம் குறையும் அல்லது பறிபோகும் என்ற
அச்சம் அவர்களுக்கு எழுந்துள்ளதாம்.
ஜெயலலிதா - விஜயகாந்த் இடையே
மோதல் ஏற்பட்டு அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக பிரிந்த பின்னர் தேமுதிகவில் எம்எல்ஏக்களாக
இருந்த பலர் அங்கிருந்து விலகி அதிமுக பக்கம் போனார்கள். அதன் பின்னர் பல முக்கியத்
தலைவர்கள் படிப்படியாக விலகிச் சென்றார்கள். விஜயகாந்த்துக்கு நிழலாக இருந்த பலரும்
அப்படி விலகிப் போனார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் வி.சி. சந்திரகுமார், எஸ்.ஆர்.
பார்த்திபன் ஆகியோர் தற்போது திமுகவில் உள்ளனர்.
இந்த இருவரில் வி.சி. சந்திரகுமார்
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். எஸ்.ஆர். பார்த்திபன் சேலம்
மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக எம்.பியாக இருந்தவர். இவர்கள் தவிர வேறு சிலரும்
கூட தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் தற்போது தேமுதிகவே
திமுக கூட்டணிக்கு வந்திருப்பதால் இவர்களுக்கு திமுகவில் முக்கியத்துவம் குறையுமா என்ற
கேள்வி எழுந்துள்ளது.
தேமுதிகவை விட்டு வெளியேறி
திமுகவில் இணைந்தவர்களை, அக்கட்சியின் தொண்டர்கள் துரோகிகள் என்று விமர்சிப்பது வழக்கம்.
பிரேமலதா விஜயகாந்த்தும் கூட அப்படித்தான் விமர்சிப்பார். இப்போது இரு கட்சிகளும் ஒரே
மேடையில் அமரும்போது, மேடையில் பழைய தோழர்களுடன் கைகுலுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இது உள்ளூர் மட்டத்திலான அரசியலில் அவர்களுக்கு ஒருவித நெருக்கடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், தற்போது திமுக வலுவாக
உள்ள சட்டசபைத் தொகுதிகளை நிச்சயம் தேமுதிகவுக்குத் தராது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்சம் விஜயகாந்த் போட்டியிட்டு வென்ற விருத்தாச்சலம், ரிஷிவந்தியம் உள்பட ஒற்றை
இலக்கத்தில்தான் தேமுதிகவுக்கு திமுக சீட்டுகளை ஒதுக்கக் கூடும் என்பதால் ஈரோட்டைச்
சேர்ந்த சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன் போன்றோருக்குப் பிரச்சினை வர வாய்ப்பில்லை
என்று கருதப்படுகிறது.
தலைவர்கள் மட்டத்தில் கூட்டணி
ஏற்பட்டாலும், அடிமட்டத் தொண்டர்களிடையே ஒற்றுமை ஏற்படுவது சவாலான காரியம். காரணம்,
மறைந்த கலைஞர் உயிருடன் இருந்தபோது விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்தபோது நடிகர்
வடிவேலு, திமுக மேடையில் விஜயகாந்த்தை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியதை இன்று
வரை தேமுதிகவினர் மறக்கவில்லை. விஜயகாந்த்தை குடிகாரன் என்றெல்லாம் கடுமையாக பேசியிருந்தார் வடிவேலு. அந்தத் தேர்தலில்தான் எதிர்க்கட்சித்
தலைவரானார் விஜயகாந்த்.
திமுக - தேமுதிக இடையிலான மோதல்
நாடறிந்தது. மிகக் கடுமையான சொல்லாடல்களை இரு தரப்புமே பரஸ்பரம் பரிமாறிக் கொண்டுள்ளன.
தனது கல்யாண மண்டபத்தை இடித்தது திமுக தான் என்று கடுமையாக குற்றம் சாட்டிப் பேசியவர்
விஜயகாந்த். இந்த நிலையில் இரு கட்சிகளும் கூட்டணியாக இணைந்திருப்பது சில காலத்திற்கு
உறுத்தலாகத்தான் இருக்கும். ஆனால் அரசியலில் எல்லாமே சகஜம் என்பதற்கேற்ப இந்தக் கூட்டணியும்
போகப் போக இயல்பாகி விடும் என்று எதிர்பார்க்கலாம்.
திமுகவின் பாசறையில் தேமுதிக இணிஅந்ததால் காங்கிரஸின் குரலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாணிக்கம் தாகூர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்பதிலளித்தார். அப்போது,
‛‛திமுக
கூட்டணியில் தேமுதிக வந்து சேர்ந்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?'' என்று கேள்வி
கேட்கப்பட்டது. அதற்கு மாணிக்கம் தாகூர், ‛‛மகிழ்ச்சியான
செய்தி.. எந்தவொரு கட்சி கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் சரி.. அது மகிழ்ச்சியாக தான்
இருக்கும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அதனை வரவேற்றுள்ளார். தமிழக காங்கிரஸ்
சார்பில் நானும் அதனை வரவேற்கிறேன்'' என்றார் இதையடுத்து, ‛‛திமுக
கூட்டணியில் தேமுதிக உள்ளே வந்ததால் காங்கிரஸ் வெளியே போய்விடும் என்ற கருத்து இருக்கிறதே''
என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணிக்கம் தாகூர், ‛‛இது
பொய்யான கருத்து என்று நினைக்கிறேன் என்றார்.
ஆட்சியில் பங்கு வேண்டும் எனக் கடுமையாகக்குரல் எழுப்பிய மாணிக்கம்
தாகூர்ரின் குரல் அடங்கி விட்டது. காங்கிரஸின்
மிரட்டலுக்குப் பதிலளிக்காது மெளனமாக இருந்த ஸ்டாலின் நகர்த்தியகாய் காங்கிரஸின் வாயை அடைத்து விட்டது.
பிரேமலதாவின் வருகையை எதிர்பார்த்துக்
காத்திருந்த தமிழக பாரதீய ஜனதா கலவரமடைந்துள்ளது. திமுகவுடன் கேப்டன் உருவாக்கிய தேமுதிக
இணைந்ததை ஒருபோதும் கேப்டன் விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என்று தமிழக பாஜக விமர்சனம்
செய்துள்ளது.
தேமுதிக கட்சி திமுகவுடன் கூட்டணி
அமைத்துள்ள முடிவை விமர்சித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சி இன்று அதிரடியான அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளது. அதில், மறைந்த தலைவர் விஜயகாந்தின் கொள்கைகளுக்கு மாறாக தேமுதிக செயல்படுவதாகக்
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக வெளியிட்ட
எக்ஸ் தள பதிவில், 'தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர்
விஜயகாந்த். அதனால், விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும்,
அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன்
உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது' என்ற பதிவை வெளியிட்டுள்ளது.
திமுக மற்றும் தேமுதிக இடையிலான
இந்தக் கூட்டணி, தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜகவின்
இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளது.
அதிமுகவில் இருந்து பலர் வருகிறார்கள்.
பன்னீர் வருகிறார், தினகரன் வருகிறேர், பிரேமலதா வருகிறார் என விஜயை
சிலர் உசுப்பினார்கள். எந்த ஒரு அரசியல்
தலைவரும் விஜயை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பனையூர் கூடாரம் தர்போதைக்கு காலியாவே உள்ளது. பிரேமலதவின் வண்டு அரிவாலய்த்தில் தஞ்சமடைந்துள்ளது.
காங்கிரஸ் வருகிறது என்ற பூச்சாண்டியும் பலிக்கவில்லை.
தலைவர்களின் அலப்பறைகள் தேர்தல்
முடிவில் வெட்ட வெளிச்ச்மாகி விடும்.
ரமணி
22/2/26




.jpg)






