Sunday, February 8, 2026

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து


 

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  ரி20 

கிண்ணப்  கிண்ண்ணப் போட்டியில், ஆப்கானிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி  வெற்றி பெற்றது. 183  ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை 13 பந்துகள் எஞ்சிருக்க எட்டி, நியூசிலாந்து  20 ஒவர்களில்  6 விக்கெட்களை இழந்த ஆப்கானிஸ்தான் 182 ஓட்டங்கள் எடுத்தது.  குலாப்தீன் நைப்   63  ஓட்டங்கள் எடுத்தார்.

183 என்ற இலக்குடன் நியூஆஇலந்து களம் இறங்கியது. நியூசிலாந்து அணியில் டிம் செப்பர்ட், இந்த ஆட்டத்தில் நட்சத்திரமாக ஜொலித்தார். 39 பந்துகளில் 55 ஓட்டங்கள் குவித்து தனது முதல் ரி20 உலகக் கிண்ண‌ அரை சதத்தைப் பதிவு செய்தார். முன்னதாக, 48  ஓட்டங்களில் இருந்தபோது ரஷித் கான் அவரை ஆட்டமிழக்கும் சந்தர்ப்பத்தித் தவற விட்டது  ஆப்கானிஸ்தானுக்குப் பெரும் இழப்பாக அமைந்தது.

நியூசிலாந்து அணிக்கு 26 பந்துகளில் 28 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கப்டன் மிட்செல் சான்ட்னர் களத்தில் டேரில் மிட்செலுடன் இணைந்தார். இறுதியில் சாண்ட்னர், டேரல் மிட்செல் ஜோடி 17.5 ஓவரில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

  

சாம் கரனால் தப்பிய இங்கிலாந்து நேபாளத்தை வீழ்த்தியது

  ரி20 உலகக் கிண்ணத்  தொடரின் 5வது லீக் போட்டியில், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி, நேபாள அணியிடம் தோல்வியின் விளிம்பு வரை சென்று, கடைசி ஓவரில் நூலிழையில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த த்ரில்லர் போட்டியில், கடைசி ஓவரில் சாம் கரனின் துல்லியமான யார்க்கர்கள் இங்கிலாந்து அணியைக் காப்பாற்றின.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெற்களை  இழந்து 184 ஒட்டங்கள் எடுத்தது. 185 என்ற வெற்றி இலக்கைத்துரத்திய நேபாளம் 20 ஓவர்களில் 6 விக்கெற்களை  இழந்து 180 ஓட்டங்கள் எடுத்து  4 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஜேக்கப் பெத்தல் 55 ,ஹாரி புரூக்  53   ஓட்டங்கள் எடுத்தனர்.

185 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய நேபாள அணி, ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்குச் சவால் அளித்தது. திபேந்திர சிங் ஐரி44,க‌ப்டன் ரோகித் பவுடல் ஓட்டங்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

கடைசி 3 ஓவர்களில் நேபாள வெற்றிக்கு 46  ஓட்டங்கள் தேவைப்பட்டன. 18வது ஓவரை வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 22  ஓட்டங்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் லோகேஷ் பாம் இரண்டு இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இங்கிலாந்தை மிரள வைத்தார். 19வது ஓவரை வீசிய லூக் வுட், 14 ஓட்டங்கள் கொடுத்தாலும் குல்சன் ஜாவை அவுட்டாக்கி சற்று நெருக்கடி கொடுத்தார்.

கடைசி ஓவரில் நேபாள வெற்றிக்கு 10  ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டன. இங்கிலாந்து கப்டன் பட்லர் பந்தை சாம் கரனிடம் கொடுத்தார்.

முதல் பந்து: சாம் கரன் யார்க்கரை வீச, லோகேஷ் பாம் திணறினார். ஓட்டம் இல்லை.

இரண்டாவது பந்து: மீண்டும் ஒரு யார்க்கர். லோகேஷ் பாம் பந்தைத் தொடக்கூட முடியவில்லை.

மூன்றாவது பந்து: ஒரு ஓட்டம் மட்டுமே கிடைத்தது.

நான்காவது பந்து: லோகேஷ் பாம் 2  ஓட்டங்கள் எடுத்தார்.

ஐந்தாவது பந்து: 7  ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், சாம் கரன் மீண்டும் ஒரு துல்லியமான யார்க்கரை வீசினார்.  ஓட்டம் இல்லை.

கடைசி பந்து: ஒரு ஓட்டம்மட்டுமே கிடைத்தது.

இறுதியில் இங்கிலாந்து அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

 இங்கிலாந்தைடைசி வரை பயமுறுத்திய நேபாள வீரர்களின் போராட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 4 ஓவர்கள் வீசி 27  ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய சாம் கரன் இங்கிலாந்தின் ஹீரோவாக மாறினார்.

 

 

Saturday, February 7, 2026

ரி20 உலகக்கிண்ணத்தில் இத்தாலியின் பயணப்பாதை



 


  ஐரோப்பிய தகுதிச் சுற்றுகளில் கடந்த வருடம் ஜூலை முன்னேறிய பிறகு, இத்தாலிய கிறிக்கெற் அணி தங்கள் முதல்ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான பயணத்தை உறுதி செய்தது, மேலும் அடுத்த தலைமுறையை தாயகத்தில் ஊக்குவிக்க ஆர்வமாக உள்ளது.

இத்தாலியில் புல் மைதானங்கள் - அல்லது மைதானங்கள் - இல்லாததால், இத்தாலியின் சொந்த மைதான வீரர்கள் ஆஸ்ட்ரோடர்ஃபில் பயிற்சி பெறுகிறார்கள்.

இத்தாலியில் புல் மைதானங்கள் - அல்லது மைதானங்கள் - இல்லாததால், இத்தாலியின் சொந்த மைதான வீரர்கள் ஆஸ்ட்ரோடர்ஃபில் பயிற்சி பெறுகிறார்கள், மேலும் அணியின் முதல் டி20 உலகக் கோப்பை தோற்றத்தில் ஏதேனும் வெற்றி பெற்றால், வசதிகளை மேம்படுத்தவும், சொந்த நாட்டில் விளையாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்தவும் உதவும் என்று உதவி பயிற்சியாளர் கெவின் ஓ'பிரையன் திங்களன்று தெரிவித்தார்.

இத்தாலிய அணி என்று பிரபலமாக அறியப்படும் அஸ்ஸுரி, ஐரோப்பிய தகுதிச் சுற்றுகளில் ஸ்காட்லாந்தை முந்தி முன்னேறிய பிறகு ஜூலை மாதம் போட்டியில் தனது இடத்தைப் பிடித்தது. 

ஓ'பிரையன் விவரித்தபடி, நம்பிக்கையான அணி, எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தனது முதல் பயிற்சிப் போட்டியில் கனடாவை 10  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது பிரச்சாரத்தைத் தொடங்கியது. ஜனவரி மாதம் துபாயில் அணி நல்ல தயாரிப்பைக் கொண்டிருந்ததாகவும், அங்கு நான்கு போட்டிகளில் விளையாடியதாகவும் ஐரிஷ் வீரர் கூறினார் ‍  உலகக்கிண்ணப் போட்டியில்  ஏதாவது ஒரு  போட்டியிலும்.  வெற்றி பெற்றால், வசதிகளை மேம்படுத்தவும், சொந்த நாட்டில் விளையாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்தவும் உதவும் என்று உதவி பயிற்சியாளர் கெவின் ஓ'பிரையன்   தெரிவித்தார்.

இத்தாலிய வீரர்களுக்கு, இந்த ஆட்டங்கள் வெற்றி வேகத்தை உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல், இயற்கையான மண் ஆடுகளங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கும் முக்கியமானவை, அவர்கள் சொந்த நாட்டில் இது போன்ற மைதானங்கள் இல்லை.

"இத்தாலியில் வசதிகள் குறைவாகவே உள்ளன, ஆனால் இந்தப் போட்டியின் விளைவாகவும், நாங்கள் பெற்ற எந்தவொரு வெற்றியின் விளைவாகவும், உள்நாட்டில் விளையாட்டின் புகழ் வளரும், மேலும் வசதிகள் மேம்படும், இதனால் உள்நாட்டு வீரர்கள் முன்னேறவும் வளரவும் முடியும்" என்று ஓ'பிரையன் கூறினார்.

உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் சம்பியனான இத்தாலி கிறிக்கெற்றிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளது. 

பாகிஸ்தான் வெளியேறியதால் 4500 கோடி ரூபா இழப்பு


  



 இந்தியாவுக்கு எதிரான ரி20 உலகக்கிண்ணப் போட்டியில்  பாகிஸ்தான் விளையாட மறுத்ததால் அடுத்து ஐசிசி-க்கு 4500 கோடிகளுக்கு மேல் இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டி20 உலகக் கிண்ணத் தொடரை  இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன.

இந்த தொடரில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பெப்ரவரி 15 ஆம் திக‌தி நடைபெற இருந்தது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது. ஆனால் விலகலுக்கான காரணத்தை பாகிஸ்தான் தெளிவாக தெரிவிக்கவில்லை.

இந்தியா  ,பாகிஸ்தான் ஆகிய  அணிகளுக்கு இடையிலான போட்டிதான் அனைத்து உலகக்  கிண்ணப் போட்டிகளிலும்  அதிகம் பார்க்கப்படும் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.  இது அதிக வருவாயையும் ஈட்டும் போட்டியாக பார்க்கப்படுகிறது. தற்போது பாகிஸ்தான் விலகியதை அடுத்து 4500 கோடி ரூபா வரை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் ஒளிபரப்பு, பிரீமியம் விளம்பரம், ஸ்பான்சர்ஷிப்கள், டிக்கெட் விற்பனை , சட்டப்பூர்வ பந்தயம் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் அடங்கும். வேறு எந்த போட்டியும் இந்த மதிப்பை நெருங்கவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான விளம்பர வருவாய் மட்டும் சுமார்  300 கோடி ரூபாவாக  இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போட்டியில் 10 வினாடிகள் கொண்ட விளம்பர ஸ்லாட்டுக்கு  2.5 மில்லியன் முதல்  4 மில்லியன்  ரூபா வரை செலவாகும். இது முழு போட்டியிலும் மிகவும் விலையுயர்ந்த விளம்பர ஸ்லாட்டாக இருக்கலாம். இந்தப் போட்டி நீக்கப்பட்டால் ரி20 உலகக் கோப்பையின் முழு நிதி அமைப்பையும் மாற்றக்கூடும். 

இந்த, போட்டி நடத்தப்படாவிட்டால், இந்தியா   பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்படக்கூடும். பாகிஸ்தான்  கிறிக்கெற் சபை ஐ.சி.சி.யிடமிருந்து 5.75% வருவாய்ப் பங்கைப் பெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த வருவாய் தோராயமாக $34.51 மில்லியன் (தோராயமாக ₹316 கோடி) ஆக இருக்கலாம். பிசிபி இந்த வருவாயையும் இழக்கும் அபாயத்தில் உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி எங்கு நடந்தாலும், மைதானம் எப்போதும் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கும். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் மற்ற போட்டிகளை விட மிகவும் விலை உயர்ந்த விலைக்கு விற்கப்படுவது வழக்கம். தற்போது போட்டி நடைபெறாமல் போவதால் இதிலிருந்தும் பெரிய இழப்பு ஏற்படும்.

பாகிஸ்தானை மிரட்டிய நெதர்லாந்து காப்பாற்றிய பஹீம் அஷ்ரப்

ரி20 உலகக் கிண்ணப் போட்டி இன்று கொழும்பில் ஆரம்பமானது எஸ் எஸ் சி மைதானதில் நெதர்லாந்துக்கு எதிரகநடைபெற்ற முதலாவது போட்டியில் போராடி வெற்றி பெற்றது பாகிஸ்தான். முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது. 19.3 ஓவர்களி, 7 விக்கெற்களை இழந்த பாகிஸ்தான் 148 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த நெதர்லாந்து பவர்பிளே முடிவில் 2 விக்கெற்களை இழந்து 50 ஓட்டங்கள் எடுத்தது. 13 வது ஓவரில் அணியின் 100 ஓட்டங்களைக் கடந்தது,

நெதர்லாந்து அணி 170 ஓட்டங்களைத் தாண்டும் என எதிர்ப்பார்த்த நிலையில் கடைசி 6 விக்கெட்டுகளை வெறும் 20 ஓட்டங்களுள் இழந்தது நெதர்லாந்து அணி. இதனால் நெதர்லாந்து 19.5 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக கப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 37 ஒட்டங்களும், பாஸ் டி லீட் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.

பாகிஸ்தானின் சார்பாக பர்ஹான்சையும் ஆயூப் ஆட்டத்தை தொடங்கினர். அதிரடியாக ஆடிய ஆயூப் 13 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கப்டன் சல்மான் அகா 12, பர்ஹான் 47 ஓட்டங்களில் ஆட்ட்மிழந்தனர் அதன்பின்னர், நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.

உஸ்மான் கான் டக் அவுட்டாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கப்டன் பாபர் அசாம் 15, முகமது நவாசும் 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க நெதர்லாந்து பக்கம் போட்டி திரும்பியது. அப்போது, பஹீம் அஷ்ரப்ஷாகின் அப்ரிடி ஜோடி சேர்ந்தனர். 18வது ஓவர் வரை ஆட்டம் நெதர்லாந்திற்கு சாதகமாக இருந்தது.

வான்பீக் வீசிய 19வது ஓவரின் முதல் பந்தை அஷ்ரப் சிக்ஸருக்கு அனுப்ப, அடுத்த பந்தை அவர் கேட்சிற்கு கொடுத்தார். அந்த கடினமான கேட்ச் வாய்ப்பை நெதர்லாந்து வீரர் தவறவிட, அதே ஓவரில் அவர் சிக்ஸரும், பவுண்டரியும் விளாச கடைசி 6 பந்துகளில் 6 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

கடைசி ஓவரிலும் அஷ்ரப் பவுண்டரி விளாசி ஆட்டத்தை பாகிஸ்தானுக்கு சாதகமாக முடிக்க, பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

 

Sunday, February 1, 2026

அதிர்ச்சி தரும் கருத்துக் கணிப்புகள் சூடாகும் தமிழக தேர்தல் களம்


 பாமகவின் மம்பழம் துண்டு துண்டாக சிதறியது

மகனை எம்பியாக்க கட்சி நடத்துகிறார் பிரேமலதா

திமுகவுக்கு எதிராக காங்கிரஸுக்குள்  போர்க்கொடி

எடப்பாடிக்குத் தூது விடும் பன்னீர்ச்செல்வம்

தமிழக தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. கூட்ட்டணிக்கட்சிகளை சமாதானப் படுத்துவதில் பிரதான கட்சிகள்  முனைப்புக்காட்டுகின்றன. தோழமைக் கட்சிகளை சமாதானப் படுத்த ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாரதீய ஜனதா செல்வாக்குச் செலுத்துகிறது.

தேர்தலுக்கு முன்னைய ஒருதலைப் பட்சமான  கருத்துக் கணிப்புகள் நடுநிலையான வாக்காளர்களைக் குழப்புகின்றன.பெரும்பாலான திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குன் என  பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் இன்று  இந்திய நாடாளுமன்றத்  தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என இந்தியா டுடே, சி வோட்டர்ஸ்  ஆகியனவற்றின்  கணிப்பு தெரிவிக்கின்றன. தமிழகத்தின் தலைவிதியை மாற்றி அமைகும் எனக் கூறப்படும் விஜயின் தவெகவுக்கு 3வது இடம் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

45% வாக்குகளுடன் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், 33% வாக்குகளுடன் அதிமுக கூட்டணி ஒரே ஒரு தொகுதியிலும்  வெற்றிபெறும் என்கிறது கணிப்பு. தவெக 15% வாக்குகளை பெறும்  ஆனால்  ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என  கணிப்பு வெளியாகியுள்ளது.

வழக்கமாக  நாடாளுமன்றாத் தேர்தலுக்கு முன்னரும், பின்னரும்தான் கருத்துக்கணிப்புகள் வெளியாகும். ஆனால், இந்தியா டுடே  , சி வோட்டர் இணைந்து நடத்தும் 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி , ஓகஸ்ட் மாதங்களில் வெளியாகும். தற்போது  தேர்தல் நடத்தப்பட்டால், என்டிஏ கூட்டணி, இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளை வெல்லும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்கம் தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

இந்தியா டுடே ஆய்வாளர்கள், பல்வேறு அரசியல் கணிப்புகளின்படி, தவெக வரவிருக்கும் தேர்தலில் 15% முதல் 20% வரை வாக்கு சதவிகிதத்தைப் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தரப்பில் எடுக்கப்பட்ட ஒரு இரகசியக் கணிப்பில், தங்களுக்கு 30% வாக்குகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 15% மட்டும் வாக்கு சதவிகிதம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, விஜய்யின் அரசியல் வருகை குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. தவெக பெறும் வாக்குகள் பிரதானமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் சரிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமல்லாது 2026 தேர்தலில் திமுக கூட்டணி ஒரு வலுவான நிலையில் இருந்தாலும், விஜய்யின் தவெக மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்து வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றத்தைச் செய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்கத் தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் இருந்த டாக்டர் ராமதாஸை  இன்ரு யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. கட்சிக்குள் உருவான பூகம்பம் குடும்பத்தைப் பிரித்துவிட்டது.  ராமதஸின் மகன் அன்புமணி தனது பரிவாரங்களுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள் சரணடைந்து விட்டார். அப்பாவும், மகனும் ஒன்றாக இருக்கும்போதே தேர்தல்களின் படுதோல்வி. இனிமேல் மேலே எழு வாய்ப்பு இல்லை என்றே கூறலாம். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ராமதாஸ் தூது விட்டார். அங்குள்ள திருமாவளவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால்   விஜயின் பனையூர்பகம் வண்டியைத் திருப்பிவிட்டார்.

விஜயகாந்த் உயிரோடு இருக்கும்  போதே கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. அந்தக் கனவில் இருந்து இன்னமும் மீளாத பிராமலதா மேடைகளில் சவால் விடுகிறார். மகனை எம்பியாக்குவதற்கு மிரட்டுகிறார். ஸ்டாலினும், எடப்பாடியும் பிடி கொடாமல் நழுவுகிறார்கள்.

பன்னீரை நம்பி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரும் அவரைக் கைவிட்டுவிட்டனர். ஒருவர் மீண்டும் எடப்பாடியிடன் சென்றுவிட்டார். ஒன்னொருவர் விஜயின் பக்கம் சாய்ந்துள்ளார். மற்றைவர்கள்  அனைவரும் அறிவாலயம் சென்று ஸ்டாலினுடன் இணைந்து விட்டனர்.

இத்தனை ஆண்டுகளாக நல்ல பிள்ளைபோல அமைதியாக  இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள்  இப்போதுமுரன்டு பிடிக்கத்தொடாங்கி விட்டனர். அதிக தொகுதி ஆட்சியில் பங்கு என விஜய்  போட்ட வலையில் வசமாகச் சிக்கி விட்டனர்.

காங்கிரஸ் உடனான 40 இட மோதல் கூட்டணி விரிவடைந்தாலும், பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்கும் தி.மு.-விற்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் உரசல் நிலவியது.

காங்கிரஸ் கட்சி இந்த முறை தி.மு.-விடம் 40 இடங்களைக் கோரியது.  ஆனால், தி.மு. தரப்போ கடந்த தேர்தல்களின் செயல்திறன் மற்றும் தற்போது பெருகியுள்ள கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் காரணம் காட்டி, காங்கிரஸின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.. பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கும் கனிமொழி இந்தச் சிக்கலான சூழலைச் சுமுகமாக முடிக்க, முதல்வர் மு..ஸ்டாலின் தனது சகோதரியும்  பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார்.

கனிமொழி - ராகுல் உயர்மட்ட சந்திப்பு நடந்தது. இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நடந்ததாக சொல்லப்படுகிறது.

  தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருந்தபோதிலும்   தொகுதிப் பங்கீடு குறித்து எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்பே இல்லை என்பதை திமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்பே இல்லை என்பதே திமுகவின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்த மீட்டிங்கில் காங்கிரஸை மதிக்க வேண்டியதன் அவசியத்தை ராகுல் காந்தி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.. மேலும், தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலைத் தீர்க்க கார்கே தலைமையிலான குழுவுடன் திமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.  ஆட்சிய்ல் பங்கு இல்லை என்பதை ராகுலுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லப்பட்டது. திமுக கூட்டனியில் காங்கிரஸ் இருக்கும் எனப்தை ராகுல் உறுதிப் படுத்தியுள்ளார்.

தேர்தல் திகதி அறிவித்த பின்னர் தமிழ்க அரசியல் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கும்

ரமணி

1/2/26

    

3 ரஷ்ய வீரர்களுக்கும் , 7பெலாரஸ் வீரர்களுக்கும் ஒலிம்பிக்கில் அனும்தி


 

 இத்தாலி மிலன் கோர்டினாவில்   நடைபெறும் ஒலிம்பிக்கில்  மொத்தம் 13 ரஷ்ய விளையாட்டு வீரர்கள்   நடுநிலை நபர்களாகப் போட்டியிட உள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2022  பீஜிங்கில்  ரஷ்ய அணியில் 200 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இருந்தனர், இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு இராணுவ படையெடுப்பிற்கு நான்கு நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது, இது சர்வதேச விளையாட்டுகளில் பெரும்பாலானவற்றிலிருந்து விலக்கப்பட வழிவகுத்தது.

அடுத்த வாரம் பிப்ரவரி 6 ஆம் திகதி தொடங்கும் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏழு பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் இப்போது அழைக்கப்பட்டுள்ளனர். ரஷ்யர்களுக்கும் பெலாரஷ்யர்களுக்கும் அணியின் நிறங்கள், கொடி அல்லது கீதம் போன்ற தேசிய அடையாளங்கள் இருக்காது தொடக்க விழா தடகள அணிவகுப்புகளில் பங்கேற்க முடியாது.

உக்ரைன் மீதான தங்கள் நாடுகளின் போரை தீவிரமாக ஆதரிக்கவில்லை என்று தீர்மானிக்கப்பட்ட மற்றும் இராணுவ அல்லது மாநில பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படாத தனிப்பட்ட விளையாட்டுகளில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவால் நடுநிலை அந்தஸ்தை அங்கீகரிக்க முடியும்.

ஒலிம்பிக்கில் ஆல்பைன் ஸ்கீயிங் போட்டியில் பங்கேற்க இரண்டு ரஷ்ய விளையாட்டு வீரர்களும் ஒரு பெலாரஷ்யரும் அழைக்கப்பட்டுள்ளனர், இருப்பினும் யாரும் உண்மையான பதக்கப் போட்டியாளராக இல்லை.

2024 பாரிஸ் கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளில் இருந்ததைப் போலவே, ஐஸ் ஹாக்கி போன்ற குழு விளையாட்டுகளிலிருந்து ரஷ்யா இன்னும் விலக்கப்பட்டுள்ளது.

2022 பீஜிங் ஒலிம்பிக்கில், ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ROC இல் போட்டியிட்டு ஐந்து தங்கம் உட்பட 32 பதக்கங்களை வென்றனர் - இது ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் சுருக்கமாகும், இது நீண்டகாலமாக மாநில ஊக்கமருந்து ஊழலில் தண்டனையாக ஒரு நடுநிலை பட்டமாகும்.

அடுத்த மாதம் இத்தாலியில், விளையாட்டு வீரர்கள் AIN என்று அழைக்கப்படுவார்கள், இது தனிநபர் நடுநிலை விளையாட்டு வீரர்களுக்கான பிரெஞ்சு சுருக்கமாகும்