Wednesday, April 15, 2026

தேசியக் கட்சிகளை ஓரம் கட்டும் மாநிலக் கட்சிகள் ஸ்டாலினைக் கண்டு கொள்ளாத ராகுல் காந்தி


 

 தேசியக் கட்சிகளை ஓரம் கட்டும் மாநிலக் கட்சிகள்

ஸ்டாலினைக் கண்டு கொள்ளாத ராகுல் காந்தி 

 

தமிழகம் முழுவதும் இருந்து 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பிரசீலனைக்குப் பிறகு  4,618 மனுக்கள் ஏற்கப்பட்டு, 2,460 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 521 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டிருந்தன. இறுதியில் 4,630 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாநிலம் முழுதும், திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வாக்காளர்கள் 2,80,30,658 ஆண்கள், 2,93,04,905 பெண்கள், 7,728 மூன்றாம் பாலினத்தினர் , மொத்தம் 5,73,43,291 .

சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகள்

5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை அல்லது மிகவும் பதற்றமானவை.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை இராணுவப்படை .

வரலாறு காணாதவகையில் புதுச்சேரியில் 90% , அசாமில் 85%, கேரளாவில் 78%  வாக்குப்பதிவு பதிவானது. ஆட்சி மாறுமா? அதிர்ச்சியில்  அரசியல்வாதிகள்.

  பெரம்பூர் தொகுதியில் விஜய்  உட்பட மொத்தம் 47 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் விஜய் பெயரில் மட்டுமே 4 பேர் போட்டியிடுகின்றனர்.  அம்பாசமுத்திரத்தி 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். சுயேச்சைகள் எவரும் இல்லை.திமுக, அதிமுக, நாதக, தவெக ,பகுஜன் சமாஜ் கட்சி   வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, நாதக ,தமிழக வெற்றிக் கழகம் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக  முதன் முறையாக  தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து விட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர அதிமுக முனைப்பு காட்டுகிறது. புதியதாக கட்சி தொடங்கி தேர்தலில் களம் கண்டுள்ள விஜய், எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.சீமானின் நாதக தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. பிரதான கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. விஜய் ஆரம்பித்த கட்சியால் வாக்குகளைக் கணிசமாக  இழக்கப்போகும் கட்சி எது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

விஜய் கட்சியை ஆரம்பித்தபோது  அவருக்கு ஆதரவு தெரிவித்த பலர்  இப்போது பின் வாங்கிவிட்டார்கள். விஜயின் அரசியல் கொள்கை என்ன என்பது எவசுக்கும் தெளிவாகத் தெரியவில்லை. திமுகவையும், ஸ்டாலினையும் திட்டுவதிலேயே அவர் காலத்தைக் கடத்துகிறார். அவரது ஆதரவாளராக  இருக்கும் ரசிகர்கள்  இன்னமும் பக்குவப்படவில்லை.  இந்த நிலையில் விஜய் வெற்றியடைந்தால் தமிழகம் என்ன்ன்னவாகும் என விமர்சகர்கள்  கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வரும் 23ம் திக‌தி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் மார்ச் 30ம் திக‌தி தொடங்கி, ஏப்ரல் 6ம் திக‌தியுடன்முடிவுற்றது. 234 தொகுதிகளிலும் சேர்த்து 7 ஆயிரத்து 599 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  அவற்றின் மீதான பரிசீலனை ஏப்ரல் 7ம் திக‌தி நடைபெற்றது. தனிப்பட்ட மற்றும் குடும்ப சொத்து விவரங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பரிசீலித்ததன் அடிப்படையில், 4 ஆயிரத்து 621 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 2 ஆயிரத்து 460 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.    518 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 616 வேட்புமனுக்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில், 173 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 24 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக பெரம்பூர் சட்டசபை தொகுதியில் 47 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக சைதாப்பேட்டை தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் களமிறங்கும் கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக நடைபெறவில்லை. திமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளை வாங்க வேண்டும் என காங்கிரஸும், அதிமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளை பெற பாரதீய ஜனதாவும்  போராடின. விஜயுடன் பேச்சு வார்த்தை நடத்தியபடியே திமுகவுடன்    தொகுதிப் பங்கீடுபற்றிய ஆலோசனையை நடத்தியது காங்கிரஸ். அதிக தொகுதி, ஆட்சியில் பங்கு என காங்கிரஸ்விடாப்பிடியாக நின்றது. சோனியாவுடன், ஸ்டாலின்  பேசிய பின்னர்  ராகுல் காந்தி இறங்கி வந்தார்.காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக திமுகத் தொண்டர்கள்  இறங்கி  வேலை செய்வது சந்தேகமே.

புதுவையில்  ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒரே நாளில் தேர்தல் பிரசாரம் செய்தார்கள். ஆனால், இருவரும் ஒரே மேடையில் ஏறவில்லை. ஒரே மேடையில் ஏறிப் பிரசாரம் செய்ய ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை  ராகுல் காந்தி நிராகரித்தார். இதலால் திமுக தொண்டர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் ஸ்டலினும், ராகுல் காந்தியும்  ஒரே மேடையில் ஏறவில்லையானால் காங்கிரஸ்  வேட்பாளர்கள் தேறுவது கடினம்.

அதிமுகவின் ஆதரவுடன்  கடந்த  தேர்தலில் 4 தொகுதிகளில்  பாரதீய ஜனதா வெற்ரி பெற்றது. இம்முறை அதிக தொகுதிகளைக் கேட்டு அடம் பிடித்தது. எடப்பாடி  27 தொகுதிகளுடன் அடக்கி விட்டார். ஆனால், சின்னக் கட்சிகள் தாமரை சின்னத்தில் களம் இறங்கி உள்ளன.  தமிழகத்தில்தாமரை மலர்ந்தால் இரட்டை இலைக்கு பெரும் ஆபத்து.  ஆகையால் தாமரைக்கு எதிராக  இரட்டை இலை  உள்ளடி வேலை செய்யும் ஆபத்து உள்ளது.

  தமிழகத்தில் இம்முறை வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர் பார்க்கபப்டுகிறது. விஜயின்  பின்னால் இலைஞர் பட்டாளம் இருக்கிறது. விஜய்க்கு வாக்களிக்கப்போவதாக இளைஞர்களில் சிலர் வெளிபடையாக அறிவிக்கின்றனர்.

விஜய்யின் தவெக 15 சதவீத வாக்குகளை பெறும். ஒரு புதிய அரசியல் கட்சி தனது முதல் தேர்தலிலேயே 15 சதவீத வாக்குகளைப் பெறுவது என்பது மிகச்சிறந்த சாதனையாகக் கருதப்படும். ஆனால், இந்த வாக்குகள் அவருக்குத் தொகுதிகளில் வெற்றியைத் தேடித் தருமா என்பது சந்தேகமே.  தேர்தல் பரப்புரையில் விஜய் பின் தங்கி உள்ளார்.  நகரங்களில் பிரசாரம் செய்யும் விஜய் கிராமங்களுக்குச் செல்லவில்லை. விஜயின் கட் ஒவுட்களுடன் தவெக வேட்பாளர்கள்  பிரசாரம் செய்கின்றனர். இதனால் பெரிய பின்னடிவு ஏற்பட்டுள்ளது.

  புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல்  கடந்த 9 ஆம் திகதி  வியாழக்கிழமை  அமைதியாக நடந்து முடிந்தது.. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 4 பிராந்தியங்களிலும் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் 5,000 அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இத்தேர்தலில் 89.87 சதவீதம் சாதனை வாக்குப்பதிவு நடந்துள்ளது‌. தொடர்ந்து பெறப்படும் தபால் வாக்குகள் மூலம் வாக்கு சதவீதம் 1.36 சதவீதம் கூடும் என தலைமைத் தேர்தல் அதிகாரி ஜவஹர் கூறியுள்ளார். புதுச்சேரியில் இதுவரை நடந்த தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். சுமார் 30 ஆண்டுகளாக புதுச் சேரிக்கும் ,தமிழகத்துக்கும் ஒரே நாலில் தேர்தல் நடைபெற்றது. இம்முறை மோடி அரசு அதனை மாற்றி  அமைதுள்ளது.

கேரளாவின் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக   வாக்குப்பதிவு நடைபெற்றது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.69 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 30,471 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 76,203 பொலுஸார், மத்திய படைகளை சேர்ந்த 140 அணிகள் மற்றும் தமிழக காவல் துறையை சேர்ந்த 20 அணிகளை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1.46 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியாற்றினர்.

அசாமின் 126 தொகுதிகளுக்கும்  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாஜக தலைமையிலான வடக்கு-கிழக்கு ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அசாம் சோன்மிலிட்டோ மோர்ச்சோ கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.50 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 31,486 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாநில போலீஸார், மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 2 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியாற்றி 

 நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. கேரளாவில் 2.78 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணியின்போது போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவு, உயிரிழந்தவர்கள் என 9.06 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த பெப்ரவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 2.69 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், கேரளாவில் தற்போது 78.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரியில் எஸ்ஐஆர் திருத்தத்தின்போது 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் 9.50 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். முதல்முறை வாக்காளர்கள் 24,919 பேர் இருந்தனர். கேரளா, புதுச்சேரியில் எஸ்ஐஆர் காரணமாகவே வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டதால், அங்கு எஸ்ஐஆர் பணி நடக்கவில்லை. பதிவேடு கணக்கெடுப்பின்போதே போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதால் அங்கு தற்போது வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் காங்கிரஸைக் கைகொடுத்துத் தூக்கிவிடுகிறோம் என்கிற நினைப்பில்  திமுக  இருக்க, ராகுலோ புதுச்சேரி விவகாரத்தில் ஸ்டாலினைச் சற்று தள்ளியே வைக்க விரும்புகிறாரோ என்ற கேள்வி எழுகிறது.  , புதுச்சேரி காங்கிரஸின் கோட்டை என்பதை நிரூபிக்க ராகுல் துடிப்பதாகவும், அங்கே தி.மு.க-வின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதை அவர் ரசிக்கவில்லை என்றும் டெல்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. 'ராகுல் காந்தி மெல்ல மெல்ல தி.மு.க-வுக்கு எதிராகத் திரும்புகிறாரா?' என அரசியல் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த 'ஈகோ' யுத்தம் வரும் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா அல்லது வெறும் பிரசார சலசலப்போடு நின்றுவிடுமா என்பதுதான் இப்போதைய மில்லியின்  டொலர் கேள்வி. தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலின் போது காட்டிய வேகத்தை, சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தவில்லை என்று கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. 

நாடாளுமன்றத் தேர்தல் என்றால், ராகுல் காந்தி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வலம் வருவார். திடீரென சாலையில் நடப்பது, தெருவோர ரீக்கடையில் ரீ குடிப்பது,    கார் மெக்கானிக் ஷெட்களில் உரையாடியது வரை ராகுலின் வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், தற்போதைய சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தியோ அல்லது டெல்லி காங்கிரஸின் முக்கியத் தலைவர்களோ இதுவரை தமிழகத்தின் பக்கம் தலை காட்டவில்லை. அண்டை மாநிலமான புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய ராகுல், தமிழகத்திற்குள் இன்னும் நுழையாதது திமுக தரப்பிலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளிலும் இன்னும் தேர்தல் களம் சூடுபிடிக்கவில்லை என்பதே எதார்த்த நிலவரம். வேட்பாளரை அவர்கள் அறிவித்ததே கடைசியாகத்தான். அதிலும் மேலூர் வேட்பாளரை மிக தாமதமாகவே அறிவித்தனர்.   தொகுதிப் பகுதிகளில் வாக்குச் சேகரிப்புப் பணிகளில் திமுகவினரே முன்னின்று செயல்படும் சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் அடிமட்டத் தொண்டர்களின் பங்களிப்பு களத்தில் மிகக் குறைவாகவே தென்படுகிறது. காங்கிரஸ் திமுக இடையிலும் உறவு மிக மோசமாக உள்ளது. களத்தில் இரண்டு தரப்பிற்கும் இடையில் பெரிய நட்பு இல்லை.

ரமணி

12/4/26

தேர்தல், தமிழகம்,சென்னை,ஸ்டாலின், விஜய்,எடபாடி,ராகுல் காந்தி,தமிழன்,

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Saturday, April 11, 2026

ஐபிஎல் 26 சாதனைகளும், வேதனைகளும்


  

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில்  கடந்த வாரம் நடைபெற்ற போட்டிகளில் எட்டப்பட்ட புதிய சாதனைகளும், வேதனைகளும்.

நான்காவது முறையாக  ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்த டெல்லி 

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில்    தொடரின் 14-வது லீக் போட்டி டெல்லி ஜேட்லி மைதானத்தில்   குஜராத் டைட்டன்ஸ் ,டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

 இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி   ஒருஓட்ட‌ வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் டெல்லி அணி   முதலாவது தோல்வியை சந்தித்திருந்தது.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில்    தொடரின் 14-வது லீக் போட்டி டெல்லி ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் ,டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற  போட்டியில் சாதனைகளின் விபரம்.

 இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 1 ஓட்ட‌ வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் டெல்லி அணி தங்களது முதலாவது தோல்வியை சந்தித்திருந்தது.

குஜராத்துக்கு எதிராக நடைபெற்ற  ப‌ரபரப்பான  போட்டியில் டெல்லி ஒரு ஓட்டத்தால் பரிதாபமாகத் தோல்வியடைந்தது.   முன்னரும்  மூன்று முறை ஒரு ஓட்டத்தால் டெல்லி  தோல்வியடைந்தது.

ஐ.பி.எல் போட்டிகளில் நான்காவது முறையாக ஒரு ஓட்ட‌ வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த அணியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓட்ட‌வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த டெல்லி அணி 2016 ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு  ஓட்டத்தால்  தோல்வியை சந்தித்திருந்தது. அதன்பின்னர் 2021 ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணிக்கெதிராக ஒரு  ஓட்டத்தால்  தோல்வியடைந்தது. 

நான்கு முறை ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை சந்தித்து அதிகமுறை ஐபிஎல் போட்டிகளில் ஒரு  ஓட்ட‌வித்தியாசத்தில் நான்கு முறை  தோல்வியை சந்தித்த அணி என்ற   மோசமான அணி எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்து 2 ஆவது வீரராக ஜாஸ் பட்லர்  சாதனை

 டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து யானது ஒரு ரன்   டெல்லி  கெபிடல்ஸ் அனி விளையாடியது.

போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடிய ஜாஸ் பட்லர் 27 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள்,  5 சிக்ஸர்கள்  உட்பட 52 ஓட்டங்கள்  அடித்து ஆட்டமிழந்தார்.   இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் ஜாஸ் பட்லர் ஐ.பி.எல் போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவிற்கு அடுத்து இரண்டாவது வீரராக ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

 முதல் விக்கெட்டாக சாய் சுதர்சன் 12  ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறியதும் மூன்றாவது ஓவரில் பேதுடுப்பெடுத்தாடிய  ஜாஸ் பட்லர் பவர்பிளே ஓவர்களுக்குள் 5 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் துவக்க வீரர் அல்லாத ஒரு வீரர் பவர்பிளே ஓவர்களுக்குள் 5 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா பவர்பிளே ஓவர்களுக்குள் 6 சிக்ஸர்களை விளாசியிருந்த வேளையில் அவருக்கு அடுத்து தற்போது 5 சிக்ஸர்களை விளாசி இரண்டாவது இடத்தினை ஜாஸ் பட்லர் பிடித்துள்ளதுள்ளார்,

9  ஆண்டுகளின் பின்   வாஷிங்டன் சுந்தர் நிகழ்த்திய சாதனை

  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இதுவரை 69 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 558  ஓட்டங்கள் குவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் அவருக்கு இந்த ஆண்டு பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது நான்காவது வரிசையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி , 2 சிக்ஸர்கள் என 55 ஓட்டங்கள் குவித்து அசத்தியிருந்தார்.

இந்தப் போட்டியில்   வாஷிங்டன் சுந்தர் அடித்த அரை சதத்தின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  9 ஆண்டுகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர்   டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். இதன்மூலம் அவரது 9 ஆண்டுகால ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில்  தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ள அவர் ஒருநாள் ,ரி20 போட்டியிலும் அரைசதம் அடித்துள்ளார்.

 

ரமணி

12/4/26

 

 

        

கடைசிப்பந்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது லக்னோ


  ஐபிஎல் சீசனின் 15-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ‘த்ரில் வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற லன்கோ முதலில் பந்து வீசியது.கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 4 க்கெட்டுகளை இழந்து  181  ஓட்டங்கள் எடுத்தது. கொல்கத்தா கப்டன் ரஹானே 41, ரகுவன்ஷி 45, கிரீன் 32, பவெல் 39  ஓட்டங்கள் எடுத்தனர்.

182  ஓட்டங்கள் என்ற இலக்கை   விரட்டிய லக்னோ 15.5 ஓவர்களில்  7 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்கள்  எடுத்து தடுமாறியது   மார்க்ரம் 22, மார்ஷ் 15, கப்டன் ரிஷப் பந்த் 10, நிக்கோலஸ் பூரன் 13, அப்துல் சமாத் 2, ஆயுஷ் படோனி 54, ஷமி 1 ஓட்டம்  எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி நான்கு ஓவரில் லக்னோ வெற்றிக்கு 54 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கானுடன்  இணைந்த   முகுல் சவுத்ரி அதிரடி காட்டினார். . கடைசி ஓவரில் லக்னோவுக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தில்  ஒரு ஓட்டம் எடுத்தார் ஆவேஷ். அடுத்த பந்தில் சிக்ஸர் விளாசினார் முகுல். 3, 4-வது பந்துகளில் ஓட்டம் எடுக்கபடவில்லி. 5-வது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தில் பை  ஓட்டத்தின்  மூலம் தனது அணியை வெற்றி பெற செய்தார்.

27 பந்துகளில் 54 ஓட்டங்கள்  எடுத்திருந்தார் முகுல். இதில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை அவர் அடித்தார்.. இந்த சீசனில் இது லக்னோ அணிக்கு 2-வது வெற்றியாக அமைந்துள்ளது. ஆட்ட நாயகன் விருதை முகுல் வென்றார். கொல்கத்தா அணி 4 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் உடன் அந்த அணி விளையாடிய லீக் ஆட்டம் மழை காரணமாக இரத்தானது.

அதிகம் அறியப்படாத முகுல் சௌத்ரியின் கடைசி நேர அதிரடி ஆட்டமான, 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54  ஓட்டங்கள், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக நம்பமுடியாத மூன்று விக்கெட் வெற்றியைப் பெற்றுத் கொடுத்தது. தந்தது .

   

தடை செய்யப்பட்ட வீரர்களுக்கு இழப்பீடு வழங்குகிறது ரஷ்யா


  

உக்ரைன் போர் தொடர்பான கட்டுப்பாடுகள் தொடர்ந்த போதிலும், சர்வதேசப் போட்டிகளுக்கு முழுமையாகத் திரும்புவதை உறுதிசெய்ய அதிகாரிகள் முயற்சிப்பதால், குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து தடை செய்யப்பட்ட வீரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என நாட்டின் விளையாட்டு அமைச்சும் , ஒலிம்பிக் குழுவும் தெரிவித்துள்ளன.

விளையாட்டுப் போட்டிகளில் முழுமையாக மீண்டும் பங்கேற்பதே நோக்கமாக உள்ளது என்றும், அந்த இலக்கை அடைய அதிகாரிகள் தூதரக ,சட்ட வழிமுறைகள் மூலம் செயல்பட்டு வருவதாகவும் ரஷ்ய விளையாட்டுத்துறை அமைச்சரும், ROC தலைவருமான மிகைல் டெக்டியாரேவ் கூறினார்.  

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பெப்ரவரி 6 முதல் 22 வரை மிலன் மற்றும் கோர்டினா டி'அம்பெஸ்ஸோவில் நடத்தப்பட்டன. இதில் 13 ரஷ்ய விளையாட்டு வீரர்கள் நடுநிலை அந்தஸ்தின் கீழ் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஃபிகர் ஸ்கேட்டிங், ஆல்பைன் பனிச்சறுக்கு, கிராஸ்-கன்ட்ரி பனிச்சறுக்கு, ஃப்ரீஸ்டைல் ​​பனிச்சறுக்கு, ஷார்ட் ட்ராக், ஸ்பீட் ஸ்கேட்டிங், லூஜ் மற்றும் பனிச்சறுக்கு மலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர்.

இருப்பினும், முந்தைய போட்டிகளுடன் ஒப்பிடுகையில், இந்தப் போட்டிகளில் ரஷ்யாவின் பங்கேற்பு கணிசமாகக் குறைக்கப்பட்டது. விளையாட்டு வீரர்கள் தங்கள் தேசியக் கொடி அல்லது தேசிய கீதத்தின் கீழ் போட்டியிட முடியவில்லை, மேலும் அதிகாரப்பூர்வ பதக்கப் பட்டியலில் அவர்களின் முடிவுகள் அந்த நாட்டிற்கு வழங்கப்படவில்லை.

இந்த நடவடிக்கைகள் விளையாட்டு உலகில் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேசப் போட்டியின் நேர்மையைப் பேணுவதற்கு இவை அவசியம் என ஆதரவாளர்கள் வாதிடுகையில், விமர்சகர்கள் நியாயம் மற்றும் விளையாட்டு வீரர்கள் மீதான தாக்கம் குறித்துக் கவலைகளை எழுப்பியுள்ளனர். சிலர் இந்தக் கட்டுப்பாடுகளை "நிஜ உலக விளைவுகளைக் கொண்ட ஒரு அரசியல் நடவடிக்கை" என்று விவரித்துள்ளனர்.

  

  

Friday, April 10, 2026

டோஹா டைமண்ட் லீக் ஒத்திவைப்பு


 மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, கட்டாரில் நடைபெற இருந்த டோஹா  டைமண்ட் லீக் தடகள போட்டி ஒத்திவைக்கப்படுவதாக உலக தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உலக தடகள போட்டிகளில் மிகவும் முக்கியமான தொடர்களில் ஒன்று டைமண்ட் லீக். நடப்பு 2026ம் ஆண்டு சீசனின் முதல் சுற்று போட்டி கத்தார் தலைநகர் டோஹாவில் மே 8ம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.  ஈரான், அமெரிக்கா  , இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல் காரணமாக அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. இரண்டு வார போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம்,குவைத் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, தடகள வீரர்கள் ,ரசிகர்கள் ஆகியோரின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மே 8ம் திகதி நடக்க இருந்த போட்டி ஜூன் 19ம்  திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு சூழல் சீரடைந்தால் மட்டுமே போட்டி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் கட்டாரில் கடுமையான வெப்பம் இருக்கும் என்பதால், போட்டியின் மைதானமும் மாற்றப்பட்டுள்ளது. முதலில் கட்ட்ர் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டி, தற்போது அதிநவீன குளிர்சாதன வசதி கொண்ட கலிபா சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு தான் 2019 உலக தடகள சம்பியன்ஷிப் , 2022   உலகக் கிண உதைபந்தாட்டம் ஆகியன   வெற்றிகரமாக நடத்தப்பட்டன .

  

ஒரு ஓட்டத்தால் டெல்லியிடம் தோற்றது குஜராத்


 ஐபிஎல் 2026 தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே 1  ஓட்ட  வித்தியாசத்தில் வீழ்த்தியகுஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற  டெல்லி கப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் கே\ப்டன் சுப்மன் கில் 45 பந்துகளில் 70  ஓட்டங்களும் , ஜாஸ் பட்லர் 27 பந்துகளில் 52 ஓட்டங்களும் , வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55  ஓட்டங்களும்  எடுத்தனர். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 210  ஓட்டங்கள் என்ற வலுவான நிலையை  எட்டியது. டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

211 என்ற டினமான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் நிதானமாக நின்று ஆடினார். அவர் 52 பந்துகளில் 11 பவுண்டரிகள் , 4 சிக்ஸர்களுடன் 92  ஓட்டங்கள் அடித்துஅணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார். பதும் நிசங்க 41  ஓட்டங்கள் எடுத்தார்.

ரஷித் கானின் அபாரமான பந்துவீச்சால் டெல்லி அணி  தொடர்ந்து விக்கெட்களை இழந்தது.    கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 12  ஓட்டங்கள் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனதால், டெல்லி அணி 1  ஓட்டவித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. குஜராத் தரப்பில் 4 ஓவர்களில்   17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்

Thursday, April 9, 2026

மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான் முதலிடத்துக்கு முன்னேறியது

ஐபிஎல் 2026 தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. மழையினால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

கெளகாத்தியில் நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற  மும்பை கப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 11 ஓவர்கள் மட்டுமே கொண்ட ஆட்டம் என்பதால், ராஜஸ்தான் தொடக்க வீரர்கள் முதல் பந்திலிருந்தே அதிரடியில் இறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77  ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது பங்கிற்கு 14 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 39  ஓட்டங் கள் அடித்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து கு 150 ஓட்டங்கள்  எடுத்தது. மும்பை தரப்பில் அல்லா கசன்பர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

151  ஓட்டங் கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்குத் தொடக்கம் முதலே நெருக்கடி ஏற்பட்டது. ரோஹித் சர்மா (5) , சூர்யகுமார் யாதவ் (6) ஆகியோர் சொற்ப  ஓட்ட்டங்களில்  ஆட்டமிழந்த‌னர். ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (25) , நமன் தீர் (25) ஆகியோர் அதிரடியாக ஆட முயன்ற போதிலும், ராஜஸ்தான் பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. மும்பை அணி 11 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்கள் எடுத்து  தோல்வியடைந்தது.  ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா, நந்த்ரே பர்கர் ,ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 தோல்விகளுடன் 7-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆட்டநாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார்.