Tuesday, February 17, 2026

அவுஸ்திரேலியாவை வெளியேற்றியது மழை


  

ரி20 உலகக் கிண்ணத் தொடரில்  ஒரு போட்டி மீதம் இருக்கையில் லீக் சுற்றில் இருந்ட்து அவுஸ்திரேலியா வெளியேறியது.

 இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் அவுஸ்திரேலியா ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.ஸிம்பாப்வே தனது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா இரண்டு புள்ளிகளையு, , ஸிம்பாப்வே 4  புள்ளிகளையும் பெற்றன. ஸிம்பாப்வே, அயர்லாந்து ஆகியவற்றுக்கிடையேயான இன்றைய போட்டி மழைகாரணமகக் கைவிடப்பட்டதால்  இரண்டு அணிகளுக்கும் தலா  ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. ஸிம்பாப்வே 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 க்குள் நுழைந்துள்ளது.ஓமானுடனான போட்டியில்  அவுஸ்திரேலியா வெற்றி பெற்றால் 4 புள்ளிகள் மட்டுமே கிடைக்கும்.

ரி 20 உலகக் கிண்ணப் போட்டியில் ஸிம்பாப்வே சூப்பர் 8 கட்டத்தை எட்டுவது இதுவே முதல் முறை. 2024 ஆம் ஆண்டு உலகக் கிண்ண வடிவம் மாற்றப்பட்டதிலிருந்து, ஸிம்பாப்வே குரூப் ஸ்டேஜை கடந்து செல்வது இதுவே முதல் முறை. இருப்பினும், டி20 உலகக் கோப்பையில் ஸிம்பாப்வே குழு கட்டத்தைத் தாண்டி முன்னேறுவது இது இரண்டாவது முறை மட்டுமே. 2022 ஆம் ஆண்டில்  டைசி 12 இடங்களை எட்டியது. ஆனால் வடிவமைப்பு மாற்றத்திற்குப் பிறகு இது ஸிம்பாப்வேயின்  முதல் சூப்பர் 8 ஆகும்.

2026 ரி20 உலகக்  கிண்ணத்தில் குரூப் நிலையிலேயே அவுஸ்திரேலியா வெளியேற்றப்பட்டது. முன்னதாக, 2009 உலகக் கிண்ணத்தில்  அவுஸ்திரேலியா குரூப் சுற்றிலேயேவெளியேறியது. .     இந்தியா, இலங்கை, ஸிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா,  நியூசிலாந்து ஆகிய ஏழு  அணிகள் சூப்பர் 8க்குத் தகுதி பெற்றூள்ளன.

  

Monday, February 16, 2026

உலகக்கிண்ணத்தில் இருந்து வெளியேறுகிறது அவுஸ்திரேலியா?


 


கிறிக்கெற் உலகின் அசுரமாகிய அவுஸ்திரேலியாவுக்கு ரி20 உலகக்கிண்ணம் கைக்கு எட்டாத நிலையில் உள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலியா அயர்லாந்துடனான போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.இலங்கையிடமும் ஸிம்பாப்வேயிடமும் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா  2 புள்ளிகளுடன் மூன்றாஅவ்து இடத்தில் உள்ளது.

கணித ரீதியாக அடுத்த கட்டத்திற்கான வேட்டையில் அவுஸ்திரேலியா இருந்தாலும் அது  அதன் விதி இந்தக் குழுவில் உள்ள பிற முடிவுகளைப் பொறுத்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு ஒரே ஒரு போட்டி மட்டுமே உள்ளது. ஓமானுக்கு எதிரான போட்டியில் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெற வேண்டும்.

ஸிம்பாப்வே  4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலியா 2 புள்ளிகளுடன் மூன்றாவ‌து இடத்திலும் உள்ளன.

இலங்கை,அயர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளுடன் ஸிம்பாப்வே மோத உள்ளது.இஅவ்ற்றில் ஏதாவது ஒரு போட்டியில் ஸிம்பாப்வே   வெற்றி  பெற்றால் அவுஸ்திரேலியாவின் கதை கந்தலாகிவிடும். ஸிம்பாப்வேயுடனான போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றால் 4 புள்ளிகள்  பெற்று விடும்.

  சூப்பர் எட்டுக்கு முன்னேற அவுஸ்திரேலியா இப்போது மற்ற முடிவுகளை நம்பியிருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை ஸிம்பாப்வே அயர்லாந்தை வீழ்த்தினால், அவுஸ்திரேலிய அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

அவுஸ்திரேலியா ஓமானுக்கு எதிரான  போட்டியில் வெற்றி பெற்று,  இலங்கை,அயர்லாந்து ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளில் ஸிம்பாப்வே   தோல்வியடைந்தால் மட்டுமே அவுஸ்திரேலியா உயிர்ப்புடன்  இருக்கும்.

   அயர்லாந்தை விட சிறந்த ஓட்ட விகிதம் அவுஸ்திரேலியாவுக்குத்  தேவைப்படும்.

2009  ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில்   குழு C இல் இலங்கை ,மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுக்கு எதிரான  எதிரான போட்டிகளில் அவுஸ்திரேலியா தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

  

Friday, February 13, 2026

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது ஸிம்பாப்வே


  கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற  உலகக்கிண  குரூப் பி பிரிவு லீக் போட்டியில்  பலம்வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை 23 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தி ஸிம்பாப்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரி20 உலகக் கிண்ணத்தைல் அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஸிம்பாப்வே, மீண்டும் ஒருமுறை அதே சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளது. 

 முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய டாடிவானாஷே மருமானி 21 பந்துகளில் 35 , பர்ல்,30 பந்துகளில் 35 ரன்கள் ஓட்டங்கள் எடுத்தனர்.

இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய கப்டன் சிக்கந்தர் ராசா, 13 பந்துகளில்  25  ஓட்டங்கள் அடித்தார். பிரையன் பென்னட் 56 பந்துகளில் 64 ஓட்டங்கள்  குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஸிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 169  ஓட்டங்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது.

170 ரனோட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் ஜோஷ் இங்கிலிஸ் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேமரூன் கிரீன் , டிம் டேவிட் ஆகியோர் டக் அவுட்டானார்கள். க‌ப்டன் டிராவிஸ் ஹெட்டும் 17 ஓட்டங்களில் ஆஸ்திரேலியா   3.2  ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 29 ஓட்டங்கள் எடுத்தது. 4,3 ஓவர்களில் 5 ஆவது விக்கெற்றைஇழந்து 106 ஓட்டங்கள் எடுத்தது.


  மேட் ரென்ஷா,  கிளென் மேக்ஸ்வெல் ஜோடி போராடியது. இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டிற்கு 77  ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழ்ந்தா ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தனி ஆளாகப் போராடிய மேட் ரென்ஷா 44 பந்துகளில் 65 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். மக்ஸ்வெல் 31 ஓட்டங்கள் எடுத்தார் ஏனையோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில்  சகல விக்க்கெற்களையும் இழந்து 146 ஓட்டங்கள் எடுத்தது.

ஸிம்பாப்வேயின்ல் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்சிங் முசரபானி  4 ஓவர்கள் வீசி   17  ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்குத் துணையாக பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஸிம்பாப்வேயின் வெற்றி குரூப் பி பிரிவில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸிம்பாப்வே அணியின் இந்த வரலாற்று வெற்றி, தொடரை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. அவுஸ்திரேலிய அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையும், ஸிம்பாப்வேயும் தலா 4 புள்ளிகளுடன்  முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

 


Thursday, February 12, 2026

நேபாளத்துக்கு எதிரான போட்டியில் 10 விக்கெற்களால் வெற்றி பெற்றது இத்தாலி

 

 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இத்தாலி அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இத்தாலி வரலாற்று வெற்றியை எட்டியது. மோஸ்கா சகோதரர்களின் அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப் , சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இந்த வெற்றிக்கு அடித்தளம் அமைத்தன.

முதலில் துடுப்ப்பெடுத்தாடிய ` செய்த நேபாள அணி, இத்தாலியின் கட்டுக்கோப்பான சுழற்பந்து வீச்சால் 123 ஓட்டங்கள் எடுத்தது. பென் மனேண்டி 9 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், கிரிஷன் கழுகாமகே 18 ஓட்டங் ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெற்களையும் வீழ்த்தினார்.

124 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இத்தாலி, ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக செயல்பட்டது. மோஸ்கா சகோதரர்களான அந்தோனி , ஜஸ்டின், இருவரும் ஆட்டமிழக்காமல் 124 ஓட்டங்கள் அடித்து 12.4 ஒவர்களில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

இளைய சகோதரரான ஜஸ்டின் மோஸ்கா 44 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்களும், மூத்த சகோதரர் அந்தோனி மோஸ்கா, 32 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்களும் எடுத்தனர்.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் இத்தாலியும் இணைந்துள்ளது. ரி20 உலகக் கிண்ணத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் விவரம் பின்வருமாறு:

அவுஸ்திரேலியா , தென்னாப்பிரிக்கா, ஓமான், பாகிஸ்தான், இங்கிலாந்து [2 முறை] ,நியூஸிலாந்து, இத்தாலி

Wednesday, February 11, 2026

விஜய் விரித்த வலையால் தடுமாறுகிறது தமிழக காங்கிரஸ்

 

தனித்து விடப்பட்ட மூத்த அரசியல்வாதி டாக்டர் ராமதாஸ்

மகனை மத்திய அமைச்சராக்க முயற்சி செய்யும் பிரேமலதா

விஜயுடன் கூட்டணி சேர  பெரிய கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.

காங்கிரஸின் முடிவுக்கு காத்திருக்கும் திமுக‌

உயர் நீதிமன்றத் தீர்ப்பு  அரசியல் ரீதியாக விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவு 

தமிழக தேர்தல்களம் நாளுக்கு நாள்  மாறிக்கொண்டே செல்கிறது. திமுகவுடனும், அதிமுகவுடனும்   பேரம் பேசுகிறார் பிரேமலதா. தமிழக அரசியலில் கிங் மேக்கராக வலம் வந்த டாக்டர் ராமதாஸை சேர்க்க பெரிய கட்சிகள் எவையும் விரும்பவில்லை. திமுகவுடன் மிக நெருக்கமாக ஒட்டி உறவாடிய காங்கிரஸ் பதவி ஆசையால் தடுமாறுகிறது.

தமிழகத்தில்  நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக ஆகியவை களத்தில் உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

 அதிமுக கூட்டணியில்  பாஜக, பாமக (அன்புமணி), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை உள்ளன.

 பிரேமலதாவும், ராமதாஸும்  தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னமும் அறிவிக்கவில்லை. இதில் பாமக ராமதாஸை பொருத்தமட்டில் கட்சியே யாரிடம் இருக்கிறது என்பதில் வழக்கு நடந்து வருகிறது. மாம்பழச்சின்னம் யாருக்கு இருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அதற்கிடையில் அன்புமணியை , அடப்பாடி அரவணைத்துள்ளார். ஒற்றுமையாக இருந்த போதே வ்ற்றி பெறாத அன்புமணி கட்சி இரண்டானபின்னர் வெற்ற்றியடைவார் என எஅடப்பாடி நம்புகிறார்.

அன்புமணி அதிமுகவுக்குச் சென்றதால் ராமதாஸ் திமுகவுக்குத் தூது விட்டார். அங்கு அவரது பரம வைரியான திருமாவளவன் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கிறார். விஜயின் பனையூரையும் எட்டிப்பார்த்தார் ராமதாஸ். ப‌னையூர் கதவும் திறக்கப்படவில்லை.

விஜயகாந்தின் தலைமையில் பலமாக  இருந்த கட்சி ஜெயலலைதாவினால் சின்னாபின்னமாக்கப்பட்டது. வாக்கு வங்கி சொல்லும்படியாக  இல்லை.கடந்த கால தேர்தக்ல்களில் மிக மோசமாகத் தோல்வியடைந்ததால் முரசு சின்னம் பறிபோய்விட்டது. தமிழகத்தேர்தலில் ஏழு  தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே  மீண்டும் முரசு சின்னம் கிடைக்கும். இதை எல்லாம் கணக்குப் பார்த்து 14 தொகுதிகளையும் ஒரு ரஜ்யசபா பதவியையும் கேட்கிறார் பிரேமலதா. மகனை அமைச்சரக்க வேண்டும் எனவும்  கோரியுள்ளார். ஐந்து தொகுதிதான் என எடப்பாடி அடித்துச் சொல்லி விட்டார். ஏழு தொகுதிகளுக்கும் ஒரு எம்பி பதவிக்கும் திமுக  ஒப்புக் கொண்டுள்ளது. அதிகமான தொகுதிகளும், அட்சியில் பங்கும் என விஜய் சொல்லியுள்ளார்.  விஜயின் பக்கம் செல்வதற்கு பிரேமலதா விரும்பவிரும்பவில்லை.

  குறைந்தபட்சம் 10 தொகுதிகளையாவது கேட்டு பெறலாம் என தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துகிறதாம்.   பிரேமலதா, விஜய பிரபாகரன், சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ், வெங்கடேசன், நல்லதம்பி, சுபா, இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 10 பேர் கட்டாயம் போட்டியிடுகிறார்களாம்.   இந்த 10 பேரில் விஜயகாந்த் குடும்பத்தில் இருந்து 3 பேர் போட்டியிடுகிறார்கள். மற்ற 7 பேரில் யாரையும் விட்டுக் கொடுக்க முடியாத நிலையில் தேமுதிக உள்ளது. விஜயகாந்த் இருந்த போதே அவருக்கு சிலர் துரோகம் செய்துவிட்டு தங்களுக்கு தோதுபட்ட கட்சிகளில் இணைந்துவிட்டார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் இன்னமும் விஜயகாந்த் விசுவாசிகளாக தேமுதிகவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதால் அவர்கள் அனைவருக்கும் சீட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக இருப்பதால்தான் சீட் எண்ணிக்கை விஷயத்தில் பிரேமலதாவால் இறங்கி வர முடியவில்லை என்கிறார்கள்.

விஜயின் பக்கத்துக்குப் போகலாம் என ராகுலுக்கு நெருக்கமான டில்லிப் பிரமுகர்கள் விரும்புகிறார்கள்.தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இதற்கு தலை ஆட்டுகிறார்கள். திமுகவுடன்  கூட்டணி இருப்பதால் நாடாளுமன்றத்திலும் ராகுலைப் பாதுகாக்க முடிகிறது. காங்கிரஸின் முடிவுக்காக ஸ்டாலின்  பொறுமையாக இருக்கிறார். வெளியேறினால்  கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கும் முடிவில் ஸ்டாலின்  இருக்கிறார்.

இதேவேளை தீயசக்தி, தூயசக்தி என சவால் விட்ட விஜய்க்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.வருமான வரித்துறை விதித்த  1.5 கோடி  ரூபா அபராதம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் ரீதியாக விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவு  ஏற்பட்டுள்ளது .புலி படத்தில் நடித்ததற்கு வாங்கிய  1.5 கோடி  ரூபா  சம்பளத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு வருமான வரித்துறை தரப்பில்  1.5 கோடி  ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. 2022 ஜூன் 30ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.


ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்த போது  1.5 கோடி  ரூபா வருமானத்தை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் விஜய் தொடர்ந்து வழக்கின் விசாரணையின் போது வருமான வரித்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விஜய் தரப்பில் கால தாமதமாக அபராதம் விதிக்கப்பட்டதாக வாதிடப்பட்டது. இறுதியாக விஜய்க்கு விதிக்கப்பட்ட 1.5 கோடி  ரூபா அபராதம் செல்லும் என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றன், விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது அரசியல் தளத்தில் விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.

அரசியலுக்கு வந்த பின் சினிமாவின் உச்சத்தை விட்டுவிட்டு வந்துள்ளேன் என்ற ஒரு பில்டப் இருந்தது. தற்போது நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அரசியல் கட்சித் தலைவருக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பாகவே கருதப்படும். இதனால் விஜய் கூறி வந்த தூயசக்தி என்ற பிம்பம் உடைக்கப்பட்டு, விஜய் ஒரு மாயசக்தி என்று விமர்சனங்கள் வைக்கப்படும்.

 இது அரசியல்வாதி விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவு. பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் தங்களை தூய்மையானவர்களாக வைத்துக் கொள்ள வேண்டும். தூய சக்தி என்றால் நாம் அதனை நிரூபிக்க வேண்டும். விஜய் மீது அரசை ஏமாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் விஜய்யின் வீட்டில் நடந்த ரெய்டு அடிப்படையில், வருமானத்தை மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனால் கறுப்புப் பணம் என்ற விமர்சனத்தை முன் வைத்து வரும் அதிமுக இன்னும் அதிகமாக தாக்கும். அதேபோல் விஜய் வெறும் வாய் சொல் வீரர் என்ற திமுகவின் வாதம் எடுபட தொடங்கும். அரசியலுக்கு வந்த பின் விஜய் இந்த வழக்கை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். இந்த விவகாரத்தை திமுக கையில் எடுக்கும் இதனை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதி என்ற பிம்பம் விஜய் மீது படிந்துள்ளது.

 

ரமணி

8/2/26 

 

Sunday, February 8, 2026

அயர்லாந்தின் வெற்றியை தட்டிப் பறித்த இலங்கை

பிரேமதாச மைதானத்தில் ந‌டந்த குரூப் பி லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 20  ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில்  6 விக்கெற்களை இழந்து 163 ஓட்டங்கள் எடுத்தது. 164 என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து 19.5 ஓவர்கலில் 143 ஓட்டங்கள் எடுத்தது.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த  9 சர்வதேச ரி20 போட்டிகளில், முதலில் துடுப்பெடுத்தாடிய  அணி தோல்வியையே சந்தித்து வந்தது. ஆனால், அந்த மோசமான வரலாற்றை மாற்றி எழுதிய இலங்கை அணி, முதலில்   வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

நாணயச் சுழற்சியில்  வென்ற  அயர்லாந்து பந்து வீச்சைத் தேர்வு செய்தது அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ்  ஆட்டமிழக்காது 56,  ஓட்டங்கள் எடுத்தார்.  கடைசி நேரத்தில் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ்,  19 பந்துகளில் 44  ஓட்டங்கள்  விளாசினார்.

164 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய அயர்லாந்து அணிக்கு ஆரம்பம் சிறப்பாகவே இருந்தது. ராஸ் அடைர் 34 ,ஹாரி டெக்டர்  40 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கையளித்தனர். 14 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 105  ஓட்டங்கள் எடுத்திருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்ததால் அயர்லாந்து எளிதாக வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

 15வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் அயர்லாந்து  வீரர்களைத் திணறடித்தனர்.வனிந்து ஹசரங்கா காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவதிப்பட்ட போதிலும், முக்கிய 3 விக்கெட்டுகளை (டெக்டர், டக்கர், கேம்பர்) வீழ்த்தினார். மகேஷ் தீக்ஷனா தனது பங்கிற்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்து அயர்லாந்துக்கு நெருக்கடி கொடுத்தார்.

105 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் என்ற வலுவான நிலையிலிருந்து, அடுத்த 38  ஓட்டங்கள் எடுப்பதற்குள் மீதமுள்ள 8 விக்கெட்டுகளையும் அயர்லாந்து அணி பறிகொடுத்தது. இறுதியில் 19.5 ஓவர்களில் 143 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.

 

  

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து


 

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  ரி20 

கிண்ணப்  கிண்ண்ணப் போட்டியில், ஆப்கானிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி  வெற்றி பெற்றது. 183  ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை 13 பந்துகள் எஞ்சிருக்க எட்டி, நியூசிலாந்து  20 ஒவர்களில்  6 விக்கெட்களை இழந்த ஆப்கானிஸ்தான் 182 ஓட்டங்கள் எடுத்தது.  குலாப்தீன் நைப்   63  ஓட்டங்கள் எடுத்தார்.

183 என்ற இலக்குடன் நியூஆஇலந்து களம் இறங்கியது. நியூசிலாந்து அணியில் டிம் செப்பர்ட், இந்த ஆட்டத்தில் நட்சத்திரமாக ஜொலித்தார். 39 பந்துகளில் 55 ஓட்டங்கள் குவித்து தனது முதல் ரி20 உலகக் கிண்ண‌ அரை சதத்தைப் பதிவு செய்தார். முன்னதாக, 48  ஓட்டங்களில் இருந்தபோது ரஷித் கான் அவரை ஆட்டமிழக்கும் சந்தர்ப்பத்தித் தவற விட்டது  ஆப்கானிஸ்தானுக்குப் பெரும் இழப்பாக அமைந்தது.

நியூசிலாந்து அணிக்கு 26 பந்துகளில் 28 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கப்டன் மிட்செல் சான்ட்னர் களத்தில் டேரில் மிட்செலுடன் இணைந்தார். இறுதியில் சாண்ட்னர், டேரல் மிட்செல் ஜோடி 17.5 ஓவரில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.