Friday, May 29, 2026

தங்க நிற ஆடையில் ரசிகர்களைக் கவர்ந்த நவோமி ஒசாகா


 பிரெஞ்சு ஓபன் போட்டியில் நவோமி ஒசாகாவின் ஜிகினாக்கள் பதிக்கப்பட்ட தங்க நிற ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. செவ்வாயன்று பிரெஞ்சு ஓபன் போட்டியில் நவோமி ஒசாகாவின் ஆடை அலங்கார ரசனை மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பரிஸில் தனது தொடக்க ஆட்டத்திற்காக, இந்த டென்னிஸ் நட்சத்திரம், விழாக்களுக்குரிய கறுப்பு நிற பாவாடை , கையில்லாத, மணிகள் பதிக்கப்பட்ட மேலாடையுடன் சுசான்-லெங்லென் மைதானத்திற்குள் நுழைந்தார். பின்னர், அந்த மேலாடையைக் கழற்றி, ஜிகினாக்கள் பதிக்கப்பட்ட தங்க நிற விளையாட்டு ஆடையை வெளிப்படுத்தினார்.

கவசத்தை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட மேலாடையையும், தனது விளையாட்டு ஆடையின் மேல் ஒரு நீண்ட மடிப்புப் பாவாடையையும் அணிந்து ஒசாகா களமிறங்கினார். பின்னர், அந்த மேலாடைகளைக் கழற்றிவிட்டு, ஜெர்மன் வீராங்கனை லாரா சீகெமுண்டை 6-3, 7-6 (3) என்ற கணக்கில் தோற்கடித்தார்.

விளையாட்டு ஆடையை நைக் நிறுவனமும், மேலாடைகளை சுவிஸ் வடிவமைப்பாளர் கெவின் ஜேர்மனியரும் வடிவமைத்ததாக ஒசாகா கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவுஸ்திரேலிய ஓபனில், ஒசாகா அகலமான விளிம்பு கொண்ட தொப்பி, முக்காடு அணிந்து, கையில் ஒரு வெள்ளைக் குடையுடன் மேடைக்கு வந்தார். மேலும், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபனில், அவர் தனது சிவப்பு நிற ஆடைக்கு மேலே, குதிரைவால் கொண்டையில் பளபளப்பான சிவப்பு ரோஜாக்களை அணிந்திருந்தார். அதோடு, பில்லி ஜீன் பிளிங் என்று பெயரிட்ட, அதே நிறத்தில் ஒரு லபுபு நாயையும் வைத்திருந்தார்.

நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியனான இவர், சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த மெட் காலா விழாவிலும் அனைவரையும் அசரவைக்கும் ஒரு ஆடையை அணிந்திருந்தார்.

போட்டிக்குப் பிறகு தனது ஆடையைப் பற்றி ஒசாகா, “இது மிகவும் உயர்தர ஆடை வடிவமைப்பு போல உள்ளது,” என்றார். “இரவில் ஈபிள் கோபுரம் ஜொலிக்கும்போது எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் நானும் இருப்பதாக நினைக்கிறேன் என்றார்.

  

வென்றது ராஜஸ்தான் வெளியேறியது ஹைதராபாத் சூர்யவன்ஷி அபார சாதனை


   ஐபிஎல் 2026 தொடரின்  இரண்டாவது எலிமினேட்டர்  ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற  ஹைதராபாத் அணியின் கப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.   16 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், ஹைதராபாத் பந்துவீச்சை விளாசித் தள்ளினார். சூர்யவன்ஷி  29 பந்துகளில் 12 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 97  ஓட்டங்கள்  அடித்து ஆட்டமிழந்தார்.

இந்த இன்னிங்ஸின் மூலம், ஐபிஎல் சீசன் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் 65  சிக்ஸர்கள்  அடித்த சூர்யவன்ஷி ,கிறிஸ் கெய்லின் (59 சிக்ஸர்கள்) 14 ஆண்டுகால சாதனையை முறியடித்து சூர்யவன்ஷி புதிய  சாதனை படைத்தார். அவரைத் தொடர்ந்து துருவ் ஜூரெல் அதிரடியாக 21 பந்துகளில் அரைசதம் கடந்து அணிக்கு பலம் சேர்த்தார். இறுதி ஓவர்களில் ஹைதராபாத் அணி விக்கெட்டுகளை வீழ்த்தி கட்டுப்படுத்திய போதிலும், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து  243 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

244  ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு, ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அபிஷேக் சர்மாவை வீழ்த்திய அவர், 11 பந்துகளில் 33 ஓட்டங்கள் அடித்த  இஷான் கிஷானையும் வெளியே அனுப்பினார். 19.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 196 ஓட்டங்கள் எடுத்தது.

வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  குவாலிஃபையர் 2 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த இன்று   வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது

  

உசேன் போல்ட்டின் சாதனையை முறியடிப்பவருக்கு 10 மில்லியன் டொலர்


  சர்ச்சைக்குரியதும், போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதுமான 'என்ஹான்ஸ்டு கேம்ஸ்' போட்டியின் நிதிப் பந்தயத்தை கணிசமாக அதிகரிக்கும் வகையில், தங்களது 2027  விளையாட்டு அட்டவணையில்  உசேன் போல்ட்டின் 100 மீற்றர் உலக சாதனையை முறியடிக்கும் எந்தவொரு ஆணுக்கும் 10 மில்லியன் டொலர் போனஸ் வழங்கப்படும் என்று அதன் அமைப்பாளர்கள் புதன்கிழமை அறிவித்தனர் .

ஆடவர் 100 மீற்றர் இறுதிப் போட்டியின் வெற்றியாளர், 2009-ல் பெர்லினில் ஜமைக்கா வீரர் போல்ட் பதிவுசெய்த 9.58 வினாடிகள் என்ற நேரத்தை விட வேகமாக ஓடினால், அவருக்குப் பரிசு வழங்கப்படும் என அரிவிகப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, ஞாயிற்றுக்கிழமை ரிசார்ட்ஸ் வேர்ல்ட் லாஸ் வேகாஸில் நடைபெற்ற முதல் மேம்படுத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இதில், விளையாட்டு வீரர்கள் ஒரு நீச்சல் "உலக சாதனையையும்" , 21 தனிப்பட்ட சிறந்த நேரங்களையும் பதிவு செய்தனர்.

கிரேக்க நீச்சல் வீரர் கிறிஸ்டியன் கோலோமீவ் 50 மீற்றர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் 20.81 வினாடிகளில் வெற்றி பெற்று, மொத்தமாக 1.5 மில்லியன் டொலரைப்  பெற்றார். இதை அந்த நிறுவனம், நீச்சல் வரலாற்றில் ஒரே நபருக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத்தொகை என்று வர்ணித்தது.

போட்டியாளர்களின் முடிவுகள் உலகளாவிய விளையாட்டு அதிகாரிகளால் சட்டவிரோதமானவை எனக் கருதப்படுவதால், அவருடைய நேரம் அதிகாரப்பூர்வ சாதனைப் புத்தகங்களில் இடம்பெறாது.

மேம்படுத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள், உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையால் (WADA) தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தும் விளையாட்டு வீரர்களை அனுமதிக்கின்றன; அதே நேரத்தில், 2010-ல் தடைசெய்யப்பட்ட பாலியூரிதேன் “சூப்பர்-சூட்களை அணியவும் நீச்சல் வீரர்களுக்கு அனுமதி உண்டு.

தலைமை நிர்வாகி மாக்சிமிலியன் மார்ட்டின், பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், இந்த அறிமுக நிகழ்வானது “மருத்துவ மேற்பார்வையிடப்பட்ட மேம்பாட்டு நெறிமுறைகளின் தாக்கத்தைக் காட்டியதாகவும், இதில் 13 தடகள வீரர்கள் 21 புதிய தனிப்பட்ட சிறந்த சாதனைகளைப் படைத்ததாகவும் கூறினார்.

போட்டியாளர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்று, நலமுடன் நிகழ்விலிருந்து வெளியேறியதாக நிறுவனம் தெரிவித்தது.

  

ரைபகினாவை வெளியேற்றினார் ஸ்டாரோடுப்ட்சேவா


 

  பிரெஞ்சு ஓபன் போட்டியின் இரண்டாவது சுற்றில், தரவரிசையில் இடம்பெறாத உக்ரேனிய வீராங்கனை யூலியா ஸ்டாரோடுப்ட்சேவாவிடம் தோல்வியடைந்து  அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆரம்பத்திலேயே வெளியேறினார் அவுஸ்திரேலிய ஓபன் சம்பியனான எலெனா ரைபகினா.

ரோலண்ட் கேரோஸில் நடந்த போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான எலெனா ரைபகினா   3-6, 6-1, 7-6 (10/4) என்ற கணக்கில் தோல்வியுற்றார்.

தனது விளையாட்டு வாழ்க்கையில் முதல் முறையாக முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரு போட்டியாளரை வீழ்த்தினார்  ஸ்டாரோடுப்ட்ஸேவா.

   2024 அவுஸ்திரேலிய ஓப்பனுக்குப் பிறகு ஒரு முக்கியப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளில் அவர் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும்.

 

 

Wednesday, May 27, 2026

காணாமல் போனவர்களுக்கு ஆதரவாக மெக்ஸிகோவில் பிரசாரம்

 

 உலகக் கோப்பையை இணைந்து நடத்த  மெக்ஸிகோ  தயாராகி வரும் நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நம்பிக்கையில், ஆர்வலர்கள் ஞாயிற்றுக்கிழமை அதன் முக்கிய  உதைபந்தாட்ட மைதானமான  அஸ்டெகாவுக்கு அருகில் மெக்சிகோவில் "காணாமல் போன" சிலரின் படங்களை ஆர்வலர்கள் காட்சிப்படுத்தினர்.

2006-ல் அரசாங்கம் தனது சர்ச்சைக்குரிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து, மெக்சிகோவில் சுமார் 130,000 பேர் அதிகாரப்பூர்வமாக காணாமல் போனவர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஏப்ரல் மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று இந்த நெருக்கடியை மிகவும் கடுமையானதாகக் கருதி, அதை "மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்" என்று முத்திரை குத்தியது.

தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் ஆர்வலர்களும் குடும்பத்தினரும், ஞாயிற்றுக்கிழமையன்று மெக்சிகோ நகரத்தில் உள்ள அஸ்டெகா மைதானத்திற்கு அருகில் அவர்களின் முகப் படங்களை ஒட்டினர். அங்குதான், ஜூன் 11 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மெக்சிகோ தனது உலகக் கோப்பை பயணத்தைத் தொடங்குகிறது

ஈரான் அணி மெக்ஸிகோவில் தங்குவதற்கு அனுமதி


 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் ஈரானிய தேசிய உதைப்ந்தாட்ட அணி மெக்சிகோவில் தங்குவதற்குத் தனது அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகவும் , ஆனால் அந்த அணியை உபசரிக்க அமெரிக்கா விரும்பவில்லை என்றும் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம் திங்களன்று தெரிவித்தார்.

அந்த அணி தனது குழுநிலைப் போட்டிகளை அமெரிக்காவிலேயே தொடர்ந்து விளையாடும். ஆனால், அதன் தளம் கலிபோர்னியாவின் சான் டியாகோவிற்குச் சற்று தெற்கே உள்ள மெக்சிகோவின் டிஜுவானாவிற்கு மாற்றப்பட்டுள்ளது . இந்த மாற்றத்தை ஈரானின் உதைப்ந்தாட்ட கூட்டமைப்பு சமீபத்தில் அறிவித்ததுடன், விளையாட்டின் நிர்வாக அமைப்பான பீபாவும் இதை உறுதிப்படுத்தியது.

ஈரான் தனது மூன்று குழுப் போட்டிகளையும் அங்கு அமெரிகாவில் விளையாடும். போட்டித்தொடர் முழுவதும் ஈரான் அணி நாட்டில் தங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று கூறியதைத் தொடர்ந்து, பீபா தனது அரசாங்கத்தை அணுகியதாக ஷெயின்பாம் கூறினார் .

ஈரானிய தேசிய அணி அமெரிக்காவில் இரவு தங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை,” என்று ஷெயின்பாம் செய்தியாளர்களிடம் கூறினார். பின்னர்அவர்கள் மெக்சிகோவில் இரவு தங்க முடியுமா?” என்று கேட்டதாக பீபா பிரதிநிதி ஒருவர்,அவர் கூறினார்.

அதற்கு நாங்கள், ‘ஆம், எந்தப் பிரச்சினையும் இல்லை. அதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லைஎன்று கூறினோம்,” என்றார் அவர்

Tuesday, May 26, 2026

ஜெஸ்ஸி மார்ஷின் ஒப்பந்தத்தை 2030 ஆம் ஆண்டு வரை நீடித்தது கனடா


 தலைமைப் பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஷ் உடனான உப்பந்தத்தை  2030  ஆம் ஆம்டு உலகக் கிண்ணப் போட்டி வரை நீடிக்கும் வகையில் கனடாவுடன் நான்கு ஆண்டு கால ஒப்பந்த நீடிப்பில் கையெழுத்திட்டுள்ளார்.

ஜான் ஹெர்ட்மேனுக்குப் பிறகு 2024-ல் பொறுப்பேற்ற அந்த அமெரிக்கர், 2024 கோபா அமெரிக்காவில் கனடாவை நான்காவது இடத்திற்கும், கடந்த ஆண்டு அதன் மிக உயர்ந்த பீபா தரவரிசையான 26-வது இடத்திற்கும் வழிநடத்தினார்.

அமெரிக்கா  மெக்சிகோ ஆகிய நாடுகளுடன் இணைந்து உலகக்  கிண்ணப் போட்டியை  நடத்தவுள்ள கனடா, இத்தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்று, இந்த வார இறுதியில் தனது இறுதி அணியை அறிவிக்கத் தயாராகி வருகிறது.

 லீட்ஸ் யுனைடெட் , ஆர்.பி. லீப்ஜிக் அணிகளின் பயிற்சியாளராக இருந்த மார்ஷ், கனடா அணியுடன் 12 வெற்றிகள், 12 சமநிலைகள், ஐந்து தோல்விகள் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.