Friday, May 15, 2026

உடைந்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பலமானது தமிழக வெற்றிக் கழகம்


 

  தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு  அன்று சமாதி கட்டியவர் அண்ணா. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு  இன்று புத்துயிர் கொடுப்பவர் விஜய் அண்ணா.

அசைக்கு முடியாத தலைவராக  இருந்த எடப்பாடியைத் தூக்கி எறிந்த அதிமுகவின்  தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

சுமக்க முடியாத கடன் சுமை. முதல் நாளே புலம்பிய முதல்வர் விஜய். மகளிர் உரிமை தொகை, மகளிருக்கு இலவச பயணம் ஆகியவற்றுக்குச் சிக்கல்

வெளிநாட்டில் குடியுரிமை பெற்று தமிழக தேர்தலில் வாக்களித்த 17 பேர் விமான நிலையங்களில் கைது. சர்கார் படபாணியில் நியாயம் கிடைக்குமா?

தமிழக அரசியல்  எதிர் பார்த்ததைவிட மிகுந்த பரபரப்பாக உள்ளது. ஆட்சியைத் தக்க வைப்பேன் என  நம்பிக்கையுடன் இருந்த ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளார். விஜய்யைத்தவிர மற்றவர்கள் எல்லோரும் காலி எகன் கணக்குப் போட்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தனது சட்ட மன்ற உறுப்பினர் யார் எனத் தெரியாமலே, விஜய் சொன்னதற்காக கொத்துக் கொத்தாக வாக்களித்தனர்.

 தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும்.  10 பேருக்கு விஜய் என்ன செய்யப்போகிறார் என காத்திருக்கையில்  திமுகவுடன் உரசுப்பட்ட காங்கிரஸ், ஓடிப்போய் கைகொடுத்தது. திமுகவின்  கூட்டணியில் வெற்றி பெற்ற க்கங்கிரசை மகிழ்ச்சியுடன் கைகுலுகி வரவேற்றார் விஜய். காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதென  திமுக கண்டனம் தெரிவித்தது.

நகமும் சதையுமாக  இருந்த திமுகவும், காங்கிரஸும் கீரியும் பாம்புமாக மாறிவிட்டன. காங்கிரஸின் திட்டம் வேறு விதமாக  இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளா, தெலுங்கு தேசம் எங்கும்  ஆழமாகக் கால் வைப்பதற்கு விஜய்  உதவுவார்  என்ற தூரநோக்கு என்கிறார்கள் விமர்சகர்கள். விஜய் இல்லாமலே கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துவிட்டது. விஜய்யுடன் சேர்ந்தால் தென் மாநிலங்களில் அறுவடை செய்யலாம் என ராகுல் காந்தி நினைக்கிறார். அரசியல் சதுரங்கத்தில் ராகுல் காந்தி பெரிய தவறு செய்து விட்டார். வட மாநிலக் கட்சிகள் ராகுலை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ராகுல் பிரதமராவதை, மம்தா, கெஜ்ரிவால் போன்றவர்கள் விரும்பவில்லை. ஸ்டாலின் மட்டும்தான் ராகுல் காந்தியைத் தூக்கிப் பிடித்தார். இந்திய அரசியலில் ராகுல்காந்தியை தனது தோளில் தூக்கிச் சுமந்தவர் ஸ்டலின் என்ற உண்மை  என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

ச‌ட்டசபை தேர்தலில் 108 இடங்களைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக ஆட்சியமைப்பதற்காக நான்கு முறை ஆளுநர் மாளைகைக்கு விஜய் சென்றார்.  போதிய பெரும்பான்மை இலாததால் ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார்.  அரசியல்  தெரியாதவர்களின் வழி காட்டலால் விஜய் அவமானப்படுத்தப்பட்டார். ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாத நிலையில்  திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கொம்யூனிஸ்டுகளும், விடுதலைச் சிறுத்தைகளும் விஜய்க்கு ஆதரவளித்துள்ளன. ஆளுநரின் தலையீடு ஜனாதிபதி ஆஅட்சி என்பன தமிழகத்துக்குள் புகுந்து விடக்கூடாது என்பதே  முக்கிய  கருப்பொருளாகப் பேசப்பட்டது.

பெரும்பான்மையைக் காட்டியதால்  பதவி ஏற்பு வைபவம்  ஒழுங்கு செய்யப்பட்டது. பதவி ஏற்பதற்கு முன்பே விஜய்க்கு எதிரான விமர்சனங்கள் வெளியாகத்தொடங்கின.

பதவி ஏற்பின் போது வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டௌ, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப்பாடப்பட்டதால் தமிழகமே கொந்தளித்தது. அரசாங்கம் அனுப்பிய சுற்று நிருபத்தின் பிரகாரமே பதவி ஏற்பு வைபவம் நடைபெற்றதாக தமிழக அரசு குறிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால், வங்க தேச மாநிலத்தில் பதவி ஏற்பின் போது  வந்தே மாதரம் பாடப்படவில்லை என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

விஜக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில்   திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி நடத்தப்போவதாக செய்தி தீயாகப் பரவியது. இந்தச் செய்தியால் திமுக தொண்டர்களும், அதிமுக தொண்டர்களும் கடும் கோபமடைந்தனர்.

இந்த வதந்தீக்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார். இந்திய ருடேக்கு பேட்டியளித்த ஸ்டாலின் ஆரு மாதங்களுக்குப் பொறுமையாக இருக்கப்போவதாகத் தெரிவித்தாஅர்.  அதிமுகவுடன் இணைந்து ஆட்சியை பிடிக்கப்போவது கற்பனை என்றார்.


 இந்நிலையில், வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். நேரடியாக அங்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் நலன் கருதி நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், பொறுமையாக இருங்கள், நல்லதே நடக்கும் என பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினோ, தவெக ஆட்சியமைப்பதில் எந்த இடையூறும் செய்யமாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதேவேளை  எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் தலைமையில், சுமார் 30 எம்எல்ஏ-க்கள்,  தனியார் விடுதியில் தங்கியது அதிமுகவில் உள்ள பிளவை வெளிச்சம்  போட்டுக் காட்டியுள்ளது. ஆதவின் மாமியார் லீமாதான் இதன் பின்னணியில் உள்ளதாக எடப்பாடிக்கு ஆதரவானவர்கள் தெரிவிக்கின்றனர்.

 அதிமுகவில், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மூலம் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக தகவல் பரவிவந்த நிலையில், அதனை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவந்தார். ஆனால், அந்த மோதல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக  செயல்படுவார் என 17 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதம் வழங்கப்பட்ட நிலையில், மாலையில், எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாக 30 எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதம் வழங்கப்பட்டதால், அதிமுகவின் உட்கட்சி மோதல் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த சம்பவத்தின் மூலம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலும் அதிமுக இரண்டாக உடைந்துள்ளது உறுதியாகியுள்ளது. காலையில் இந்த செய்தியை எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், மாலையிலேயே அவர் கூறியது பொய் என்பது தெரியவந்துள்ளது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய்க்கு ஆதர்வான 25 சட்டசபை உறுப்பினர்கள் உட்பட 29 பேரின் பதவிகளைப் பறித்த எடப்பாடி புதியவர்களை நியமித்தார். அதிமுக எடப்பாடியின் கையில் இருக்கிறது. ஆனால், தமிழக சட்ட சபையில் 25 பேர் எடப்பாடிக்கு எதிராக  இருக்கிறார்கள்.அங்கு சபாநாயரின் தீர்ப்பே இறுதி முடிவாகும்.

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி எஸ்.பி. வேலுமணி அணி நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் நியமிக்கும் கொறடாவுக்கே அதிகாரம் உண்டு என எடப்பாடி தரப்பு சொன்னாலும், பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையில் எஸ்பி வேலுமணி தரப்புக்கே கொறடா அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என கூறுகின்றனர். ஒருவேளை எஸ்பி வேலுமணி தரப்பு அங்கீகரிக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் எம்எல்ஏ பதவி பறிபோகவும் வாய்ப்பு உள்ளது.

விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது  எடப்பாடியின் அனி எதிர்த்து வாக்களித்தது. மற்றைய அணி ஆதரவு தெரிவித்தது.  அதிமுக எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், வேலுமணி அணி இதை ஏற்காமல், தாங்களே சட்டமன்றக் குழுவின் உண்மையான பெரும்பான்மை அணி என்றும், சி. விஜயபாஸ்கர்தான் கொறடா என்றும் வாதிட்டு வந்தது. அதன்படி, அவர்கள் தனியாக முடிவு எடுத்து விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவை மீறி நடந்த 25 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்கனவே வலியுறுத்தி வந்தது.

இந்த சூழலில் தற்போது எஸ்.பி. வேலுமணி அணியும் அதிரடி நகர்வை மேற்கொண்டுள்ளது. அந்த அணியின் கொறடாவாக அறிவிக்கப்பட்டுள்ள சி. விஜயபாஸ்கர், சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். அந்த மனுவில், "உண்மையான அதிமுக சட்டமன்றக் குழு நாங்கள் தான். எங்கள் கொறடா உத்தரவை மீறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 அந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி நியமித்த அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கே சபாநாயகர் அங்கீகாரம் வழங்க வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது. ஆனால், வேலுமணி அணியினர் தங்களிடம் அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக வாதிட்டு வருகின்றனர். இதனால் சபாநாயகர் எடுக்கும் முடிவு அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த விவகாரம் அடுத்த கட்டமாக நீதிமன்றம் வரை செல்லும் வாய்ப்பும் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் மூலம் இன்னும் சில நாட்களில் அதிமுகவின் எதிர்கால தலைமை யார்? சட்டமன்றக் குழு கட்டுப்பாடு யாரிடம் இருக்கும் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்து விடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தவெக தனிக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிட்டால் அமைச்சர் பதவி கிடைக்கும் எனப்பலர் எதிர்பார்த்தனர். காங்கிரஸும், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களும் அமைச்சுப் பதவிக்கு ஆசைப்படுவதால் விஜய் என்ன செய்யப்போகிறார் எனத் தெரியாமல் அவர்கள் தடுமாறுகிறார்கள்.

சட்டசபையில் கேட்கும் கேல்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலளிக்காமல் முதலமைச்சரும், அமைச்சர்களும் தடுமாறுவதால் தவெகவினர் நொந்துபோயுள்ளனர். இதை எல்லாம் தாண்டி  விஜய் ச‌மாளிப்பாரா  எனப்தும் கேள்விக்குரியாகவெ உள்ளது. 

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காகப் பலர் வெளிநாட்டில் இருந்து சென்றார்கள். விசிலுக்கு வாக்களிக்கப்போவதாக அவர்கள் சொன்னார்கள்.

அவுஸ்திரேலியா, இலங்கை, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குடியுரிமைகள் பெற்றவர்கள்  வாக்களித்ததாகப் பேட்டி கொடுத்தார்கள். பலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும் தமிழகத் தேர்தலில்  வந்து வாக்களித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  சென்னை உட்பட தமிழகம் முழுவதும்  உள்ள விமான நிலையங்களில் சுமார் 17 பேர்   வாக்களித்த குற்றாச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய நாட்டு குடிமக்கள் மட்டுமே இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க முடியும். வெளிநாடுகளில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதோடு, அந்த நாட்டு பிரஜையாகவும் மாறி குடியுரிமை பெற்று விட்டால் அவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுவிடும்.

அப்படிப்பட்ட வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள், இந்தியாவுக்கு வழக்கம்போல் வந்து சென்று கொண்டிருக்கலாம். ஆனால், இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது.

இந்நிலையில்தான் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள், இங்கு வந்து சொந்தத் தொகுதியில் வாக்களித்ததாக தகவல் வெளியானது.

 இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் சென்றது. அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள குடியுரிமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வெளிநாடுகளுக்குச் செல்ல விமான நிலையம் வரும் பயணிகளின் கை விரல்களைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. வாக்களித்த அடையாள மை இருந்து, அவர்கள் வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமை பெற்ற பயணியாக இருந்தால், அவர்களை விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டாம்.

அவர்களின் விமானப் பயணங்களை இரத்துசெய்து, அவர்களை  பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையம் வந்த சில வெளிநாடு வாழ் இந்தியர்கள், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்குமாறாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துள்ளது தெரியவந்தது.

அவர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்துள்ளனர். அதேபோல தமிழகத்தில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் நடத்திய சோதனையிலும் பலர் சிக்கியுள்ளனர்.விஜய் நடித்த சர்கார் பட பாணியில் மறு தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றிருந்தாலும் நடந்து முடிந்த எஸ்ஐஆர் பணிகளில் இவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வாக்களித்ததாக தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த   உத்தரவிடப்பட்டுள்ளது.

  

 

 

 

 

 

 

 

 

Wednesday, May 13, 2026

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளைப் புறக்கணிக்கப் போவதாக சபலென்கா எச்சரிக்கை

பரிசுப் பணத்தில் அதிகப் பங்கைப் பெறுவதற்காக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளைப் புறக்கணிக்கத் தயாராக இருப்பதாக உலக நம்பர் 1 வீராங்கனை அர்னா சபலென்கா செவ்வாயன்று கூறினார்.

"இந்த நிகழ்ச்சி எங்களைச் சார்ந்தது என்று நான் உணர்கிறேன். நாங்கள் இல்லாமல் இந்தப் போட்டியே இருந்திருக்காது, அந்தப் பொழுதுபோக்கும் இருந்திருக்காது," என்று நான்கு முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற அவர் இத்தாலியன் ஓபனில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நிச்சயமாக எங்களுக்கு அதிக சதவீதம் பணம் வழங்கப்பட வேண்டும் என்று நான் உணர்கிறேன். ஒரு கட்டத்தில் நாங்கள் புறக்கணிப்போம் என்று நினைக்கிறேன். எங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதற்கு அதுதான் ஒரே வழி என்று நான் உணர்கிறேன்.

"நாங்கள் வீராங்கனைகள் எளிதாக ஒன்றிணைந்து இதற்காகப் போராட முடியும், ஏனென்றால் சில விஷயங்கள் வீரர்களுக்கு மிகவும் அநியாயமாக இருப்பதாக நான் உணர்கிறேன்." ஒரு கட்டத்தில் இது இந்த நிலைக்கு வரும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட அனைத்து முன்னணி வீரர்களும் நான்கு கிராண்ட்ஸ்லாம் நிர்வாகிகளுக்கும் இரண்டு கடிதங்களில் கையெழுத்திட்டனர். அதில், பரிசுத் தொகையை அதிகரித்தல், ஓய்வூதியம் ,மகப்பேறு சலுகைகளை மேம்படுத்துவதற்காக வீரர் நல நிதியில் பணம் செலுத்துதல், அத்துடன் தங்களைப் பாதிக்கும் முடிவுகளில் தங்களைப் பங்கேற்கச் செய்தல் ஆகியவற்றை அவர்கள் கோரியிருந்தனர்.

போட்டி வருவாயில் 22 சதவீதப் பங்கைப் பெறுவதை அந்தக் கடிதங்கள் இலக்காக நிர்ணயித்தன. இது, ஏடிபி ஆண்கள் சுற்று மற்றும் பெண்கள் டபிள்யூடிஏ சுற்று ஆகியவற்றால் நடத்தப்படும் ஒன்பது ஒருங்கிணைந்த 1000-நிலை நிகழ்வுகளுக்கு இணையாக மேஜர் போட்டிகளைக் கொண்டுவரும்.

இருப்பினும், நான்கு முறை பிரெஞ்சு ஓபன் ஒற்றையர் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், போட்டிகளைப் புறக்கணிப்பது "கொஞ்சம் அதீதமானது" என்று நம்புகிறார்.

கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன் அறிவித்த 9.5 சதவீத பரிசுத்தொகை உயர்வு போதுமானதாக இல்லை என்று வீரர்கள் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ரோலண்ட் கரோஸ் 395 மில்லியன் யூரோக்கள் ($463 மில்லியன்) வருவாய் ஈட்டியதாகவும், இது 14 சதவீத அதிகரிப்பு என்றும் அந்த அறிக்கை கூறியது.இருப்பினும், மொத்த பரிசுத்தொகை வெறும் 5.4 சதவீதம் மட்டுமே உயர்ந்ததால், வருவாயில் வீரர்களின் பங்கு 14.3 சதவீதமாகக் குறைந்தது. இந்த ஆண்டு வருவாய் 400 மில்லியன் யூரோக்களைத் தாண்டும் என்றும், வீரர்களின் பங்கு 15 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்றும் அது மதிப்பிட்டுள்ளது. 

இத்தாலிய ஓபன் போட்டியிலிருந்து விலகினார் மார்டா கோஸ்ட்யூக்


   இடுப்பு , கணுக்கால் பிரச்சினைகள் காரணமாக இத்தாலிய ஓபன் போட்டியிலிருந்து விலகினார்உக்ரைனைச் சேர்ந்த மார்டா கோஸ்ட்யூக்.

சனிக்கிழமையன்று நடைபெற்ற மாட்ரிட் ஓபன் பட்டத்தை வென்ற கோஸ்ட்யூக் , இந்த வாரத் தரவரிசையில் தனது வாழ்நாள் சிறந்த இடமான 15-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மாட்ரிட் போட்டிக்கு முந்தைய வாரம் பிரான்ஸின் ரூவன் நகரில் நடைபெற்ற மற்றொரு களிமண் தரைப் பட்டத்தையும் வென்றதன் மூலம், கோஸ்ட்யூக் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

"என் விளையாட்டு வாழ்க்கையின் மிகச் சிறந்த காலகட்டத்திற்குப் பிறகு, நான் ரோம் போட்டிக்காக ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் சில நேரங்களில் நம் உடலுக்கு வேறு திட்டங்கள் இருக்கும், மேலும் கடந்த சில நாட்களாக, நான் இடுப்புப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறேன். என் கணுக்கால் இன்னும் முழுமையாக 100 சதவீதம் குணமடையாத நிலையில், தற்போதைக்கு தொடர்ந்து முயற்சி செய்வது புத்திசாலித்தனம் அல்ல, எனவே இந்த ஆண்டு நான் அங்கு போட்டியிட மாட்டேன்," என்று ரோமில் போட்டி தொடங்கிய செவ்வாயன்று கோஸ்ட்யூக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

 


 

14 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவுக்குச் செல்கிறது ஈரான்


  கிண்ண உதைபந்தாட்டப் போட்டி தொடங்குவதற்கு 14 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவுக்குச் செல்ல ஈரான் தேசிய கால்பந்து அணி திட்டமிட்டுள்ளதாக, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமீர் கலெனோய் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாக ஈரான் ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

 உலகக்  கிண்ண  அணி சிறப்பாகச் செயல்பட  இந்தத் திட்டம் உதவும் என்றும், ஈரான் இன்னும் இரண்டு அல்லது மூன்று உயர்தரப் பயிற்சிப் போட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது என்றும் கலெனோய் கூறினார்.

திட்ட அட்டவணைப்படி, அணி மே 16  ஆம் திகதி துருக்கிக்குப் புறப்பட்டு, அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருக்கும்.

உலகக்  கிண்ணப் போட்டியில் பங்கேற்பது குறித்து சிறந்த முடிவை எடுக்க தாங்கள் பணியாற்றி வருவதாக ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ் தெரிவித்தார்.


Saturday, May 9, 2026


 

 முட்டுக்கட்டை போட்ட ஆளுநர் பதவி ஏற்புவிழா  இரத்து

 

விஜய்க்கு ஆதரவாக கொந்தளிக்கும் தமிழகத் தலைவர்கள் மெளனம் காகும் விஜய்

தமிழக சட்ட மன்றத்தில் அமரப்போகும் 22 சிங்கப் பெண்கள் சாதிப்பார்களா? சறுக்குவார்களா?

   பொற்சிறையில்  வைக்கப்பட்டுள்ள தமிழக சட்ட சபை உறுப்பினர்கள் கூவத்தூர் கூத்து மீண்டும்  வந்தது.

 ஸ்டாலினின் முதுகில் குத்திய ராஜீவ் காந்தி தவெகவுக்கு ஆதரவு. 1967 க்குப் பின்னர் அமைச்சர் பதவியில்  காங்கிரஸ் 

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளை வெளியேற்றிய தவெக  புதிய வரலாறு படைத்துள்ளது. 1967 ஆம் ஆண்டு காங்கிரஸிடம்  இருந்த தமிழகத்தை  திராவிட முன்னேற்றக் கழகம் தட்டிப் பறித்தது. அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என வரிசையாக தமிழகத்தை கட்டி  ஆண்ட திராவிடப் பாரம்பரியத்தை ஸ்டாலினிடம் இருந்து  விஜய் தட்டிப் பறித்தார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில்  தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் எதுவித தடையும் இல்லாமல்  விஜய் முதலமைச்சராகலாம். விஜய்க்கு வெற்றியை அள்ளிக் கொடுத்த மக்கள்  வெற்றிக் கோட்டையைப் பிடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர். 10 உறுப்பினர்களத் தேடிப் பிடித்தால்தான்   விஜய் முதல்வராக முடியும்.

முதல்  ஆளாகக் களம் இறங்கிய ராகுல் காந்தி , தவெக தலைவர் விஜய்க்காகக் குரல் கொடுத்தார். தவெகவினர்  கொண்டாடி மகிழ்ந்தனர்.  திமுகவினர் கொந்தளித்தனர். தோல்வியடைந்தது திமுக மட்டுமல்ல. கொளத்தூரில் ஸ்டாலின்  தோல்வியடைந்ததை  ஏற்றுக் கொள்ள முடியாது திமுகவினர் குமுறிக் கொண்டிருக்கையில், விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தி குரல் எழுப்பியதை திமுகவினரால் சகிக்க முடியவில்லை.

கூட்டணித் தலைவர்கள்   அறிவாலயத்துக்குச்  சென்று ஸ்டலினைச் சந்தித்த அதே வேளையில் ராகுல் காந்தியின் தூதரும், தமிழக காங்கிரஸ் காரர்களும்  விஜய்க்கு பூங்கொத்துக் கொடுத்து மகிழ்ந்தார்கள்.எதிர்க் கட்சிக்கு சுளையாக 40 எம் பிக்களைக் கொடுத்த ஸ்டாலினுக்குத் துரோகம் செய்து விட்டதாக திமுகவினர் விமர்சிகின்றார்கள்.

  சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ்  கட்சி சில நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்தது. சட்டமன்றத்தில் மட்டுமின்றி அடுத்து வரவுள்ள உள்ளாட்சி, மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல்களிலும் த.வெ.க - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் அறிவித்தது. தவெக வின் 108 எம்.எல்.ஏ.க்கள் ,காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற கட்சித்தலைவர் ,ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோருவது வழமையானது.  தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, விஜய்  ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் , காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்க ளின் பட்டியலை வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட ஆளுநர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டது. 

தமிழ்நாடு முதலமைச்சராக வியாழக்கிழமை விஜய்  பதவியேற்பார் என தவெக தொண்டர்களும், அவரது ரசிர்களும் எதிர்பார்த்திருந்தனர். பெரும்பான்மை கிடைக்காததால்    பதவியேற்பு விழாவுக்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த பணிகள் நிறுத்தப்பட்டன‌. ஆளுநர் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்படாத நிலையில் பதவியேற்பு விழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல வெளியானது. தவெக தலைவர் விஜய் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பாதுகாப்புகள் முழுமையாக அகற்றம்பட்டன‌. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான  பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஆளுநரை மீண்டும் சந்திக்க நேரம் கேட்டிருந்தார்அதன்படி ஆளுநர் மாளிகையின் அழைப்பின் பேரில் விஜய்   மீண்டும் ஆளுநர் மாளிகை சென்றார்காலை 11 மணியளவில் விஜய்யுடன்   தவெக நிர்வாகிகள் ஆளுநரை சந்திக்க சென்றனர்ஆளுநர் மாளிகையில் தவெக தலைவர் விஜய் காரை மட்டும்தான் பொலிஸார் உள்ளே அனுமதித்தனர்விஜய் உடன்  சென்ற தவெகவினரின் பிற வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லைஆளுநர் அர்லேக்கர் உடனான தவெக தலைவர் விஜயின் சந்திப்பு 40 நிமிடங்களுக்கு நீடித்தது.  இந்த சந்திப்பின் போது பெரும்பான்மை குறித்து ஆளுநர் சில கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறதுசட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக இருக்கிறதுஎனவே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்மெஜாரிட்டியை நிரூபிக்க தயார்முதலமைச்சராக பொறுப்பேற்று பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என விஜய் உறுதியளித்துள்ளார்அப்போதும்   பதவி ஏற்க அனுமதி வழங்கப்படவில்லை.

இந்தத் தடையின் பின்னணியில் பாரதீய ஜனதா அரசு இருக்கும் என தமிழகத்தலைவர்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்முதல்வராகப் பதவி ஏற்கக் காத்திருக்கும் விஜய் வாய் திறக்காமல் மெளனமாக  இருக்கிறார்என்ன பிரச்சனை என்றாலும் முண்டி அடித்துக் கருத்துக் கூறும் ஆதவ் அர்ஜுனாவின் சத்தத்தைக் கேட்க முடியவில்லை.

2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா இறந்ததும் 122 சட்டமன்ற உறுப்பினர்களின் அதரவுக் கடிதத்துடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற சசிகலாவை அலைக்கழித்தவர் அன்றைய  ஆளுநர் வித்யாசாகர் ராவ்விஜய் முதல்வராவதைத் தடுப்பதே ஆளுநரின் முக்கிய நோக்கம் எனக் கருதப்படுகிறது.  மத்திய அரசின் முகவராகவே அளுநர் கருதப்படுகிறார்மத்திய அரசு செய்ய விரும்புக் காரியங்களை தனது அதிகாரத்தின் மூலம் ஆளுநர் கனகசிதமாகச் செய்வார்.காங்கிரஸ்கட்சி ஆட்சியில் இருந்தபோது இதனைத்தான் செய்ததுஇன்றைய பாரதீய ஜனதா அரசும் அதனையே பின் பற்றுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில்  108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும்ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற  இலக்கை  எட்ட முடியாத சூழல் நிலவுகிறதுஇந்த இக்கட்டான தருணத்தில்டெல்லியின் நேரடி , மறைமுகத் தலையீடுகள் விஜய்க்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.  இதனை விஜய் எதிர்  பார்க்கவில்லைவிஜய்க்கு டெல்லி கொடுக்கும் முதல் நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறதுஏனென்றால் பெரும்பான்மை இல்லையென்றாலும் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அனுமதித்து பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும்.  ஆளுநர் ஏன் அதனைச் செய்யவில்லை என்பது புரியாத புதிராக  இருக்கிறது.

அரசியல் சதுரங்கத்தில் விஜய் சிக்கி உள்ள நிலையில் பாரதீய ஜனதா அரசு தனது முகத்தை வெளிப்படுத்தியுள்ளது.  ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கும் வேளையில்,  தமிழகத் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு  அனுப்பியுள்ள கடிதம் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுதேசிய கல்விக் கொள்கையின் கீழ் 'பிஎம் ஸ்ரீமாதிரிப் பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்த உடனடியாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடுமாறு மத்தியக் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது

  திமுக அரசுமும்மொழிக் கொள்கையை (ஹிந்தி திணிப்புஎதிர்த்து இந்தத் திட்டத்தைப் புறக்கணித்ததுஇதனால் மத்திய அரசு வழங்க வேண்டிய 'சமக்ர சிக்சாநிதி முடக்கப்பட்டதுஇப்போது ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழலில், "நிதியைப் பெற வேண்டுமென்றால் மும்மொழிக் கொள்கையை ஏற்றாக வேண்டும்என்ற அழுத்தத்தை டெல்லி மீண்டும் பிரயோகித்துள்ளதுதமிழ் மொழி உரிமைகளுக்காகப் போராடுவோம் என்று முழங்கிய விஜய்பதவி ஏற்பதற்கு முன்பே மொழிப்போர் ,  நிதி நெருக்கடி ஆகிய இரண்டு முனைத் தாக்குதல்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

விஜய்க்கு எதிரான   மிக முக்கியமான நெருக்கடி நீதித்துறையிலிருந்து வந்துள்ளது.  வருமான வரி ஏய்ப்பு மற்றும் சொத்து விவரங்களை மறைத்ததாகத் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம்  புதன்கிழமை உத்தரவிட்டுள்ளதுஎம்ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில்விஜய் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் வருமானத்தை மறைத்துள்ளார்அவர் மீது ஐபிசி (IPC) பிரிவுகளின் கீழ் மோசடி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்அமலாக்கத்துறை (ED) மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் விசாரணை நடத்த வேண்டும்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுவிஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் முன்பே அவருக்குச் சட்ட ரீதியான முட்டுக்கட்டைகளைப் போடும் முயற்சியாகக் கருதப்படுகிறதுகுறிப்பாகஅமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலம் டெல்லி விஜய்யை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்வதையே இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் காட்டுகின்றனஆளுநரின் இழுபறிமும்மொழிக் கொள்கை திணிப்புவருமான வரி வழக்கு என மூன்று திசைகளில் இருந்தும் விஜய்க்கு நெருக்கடி முற்றியுள்ளதுஇந்த "டெல்லி ஆட்டத்தைவிஜய் தனது ராஜதந்திரத்தால் எப்படி முறியடிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் அமையும்

பரபரப்பான அரசியல் சூழலில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் 15 அதிமுக எம்.எல்..க்கள் புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்அதிமுக மூத்த தலைவர்களான .எஸ்.மணியன்தளவாய் சுந்தரம் ஆகியோரும் அங்கு சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவி சண்முகம் தவெக கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும் இதுதொடர்பாக பல்வேறு எம்எல்ஏ-க்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகினஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி.வேலுமணி , சி.வி.சண்முகம்சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்தனர்இதைத்தொடர்ந்து  எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றதுதவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என ஒரு தரப்பினரும்தரக்கூடாது என அதிமுகவில் மற்றொரு தரப்பினரும் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசியிருந்ததாக தகவல் வெளியானதுஅதிமுக முன்னாள் தலைவரும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான கேபி முனுசாமி செய்தியாளர்கள் சந்தித்தார்அப்போதுபேசிய அவர்தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக எதுவும் பேசவில்லைஎந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காதுஎன்று தெரிவித்தார்

திருமாவளவனிடமும்இடதுசாரிகளிடமும் ஆதரவு கோரி விஜய் கடிதம் அனுப்பி உள்ளார்இக் கட்டுரை எழுதும் வரை அவர்களின்  முடிவு  வெளிப்படுத்தப்படவில்லைதீய சக்தி என விஜய் விமர்சித்த கட்சியின் கூட்டணிகட்சிகளிடம் விஜய் ஆதரவு கோருவதும் விமர்சனத்துக்குட்படுத்தப்பட்டுள்ளது

இந்திய அரசியலில் 2026-ம் ஆண்டு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளதுசமீபத்தில் நடந்து முடிந்த பல்வேறு மாநிலத் தேர்தல்கள் ,இடைத்தேர்தல்களின் முடிவுகள்இந்திய அரசியலின் அசைக்க முடியாத சக்திகளாகக் கருதப்பட்ட பல தலைவர்களின் கோட்டைகளைத் தகர்த்துள்ளனகுறிப்பாகஎதிர்க்கட்சிகளின் முகங்களாக அறியப்பட்ட   தலைவர்கள் தங்களின் சொந்தத் தொகுதிகளிலேயே தோல்வியைத் தழுவியிருப்பதுபாஜகவிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாகவும்எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அபாயச் சங்காகவும் பார்க்கப்படுகிறது.

அரசியல் பூகம்பம் தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலமாக நிலவி வந்த திராவிட அரசியலின் பிடி தளர்ந்துள்ளதைக் காட்டும் விதமாகதமிழக முதல்வர் மு.ஸ்டாலின்   தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்தது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளதுதமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி பாஜகவிற்கு எதிர்காலத்தில் சாதகமாக மாறலாம்திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில் அக்கட்சிவீழ்ந்துள்ளது . தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்துள்ளதுஒரு முதலமைச்சர் தனது சொந்தத் தொகுதியை இழப்பது என்பது அந்தப் கட்சியின் எதிர்காலத்திற்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது.  

 மாற்று அரசியலை முன்னெடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்தனது சொந்தத் தொகுதியை இழந்தது ஆம் ஆத்மி கட்சிக்கு பலத்த  அஸ்ஸாமில் காங்கிரஸின் இளம் நம்பிக்கையாகப் பார்க்கப்பட்ட கௌரவ் கோகாய் தோல்விவடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் பிடி எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.   மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தூணாகக் கருதப்பட்ட ஜித்து பட்வாரியின் தோல்விஅங்கு பாஜகவின் செல்வாக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.   பீகாரில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் கோட்டைகளாகக் கருதப்பட்ட தொகுதிகளில் தோல்வியைத் தழுவியுள்ளனர்இது ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் வீழ்ச்சியைக் குறிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்  மகாராஷ்டிராவில் சிவசேனாவின் (UBT) முக்கிய முகமான ஆதித்ய தாக்கரேதனது தொகுதியில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் போராடி வென்றார்அவர்களின் கட்சி வீழ்ந்ததுஇது மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாக்கரே குடும்பத்திற்கு இருந்த செல்வாக்கு குறைந்து வருவதைக் காட்டுகிறது.


வங்கதேசத்தில் மம்தான் பானர்ஜி தோல்வியடைந்தமையும்அங்கு பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடித்ததும்  எதிர்க் கட்சிகளின்  பலவீனத்தைக்  கட்டியம்கூறுகிறது

   எதிர்க்கட்சிகளின் பலவீனம் இந்தத் தொடர் தோல்விகள் ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர்த்துகின்றனஎதிர்க்கட்சிகளின் பலம் வாய்ந்த தலைவர்களை அவர்களின் சொந்தத் தொகுதியிலேயே முடக்குவது என்ற பாஜகவின்   வியூகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதுஒரு கட்சியின் தலைவரே தனது தொகுதியைக் காப்பாற்றப் போராடும்போதுஅவரால் மாநில அளவில் அரசியல் செய்ய முடியாத சூழல்வலுவான தலைவர் என்று காட்டிக்கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறதுமேலும்வலுவான பாஜகவிற்கு எதிராக எதிராக ஒரு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி இன்னும் உருவாகவில்லை என்பதும்பல மாநிலங்களில் 'இந்தியா' (INDIA) கூட்டணியின் கட்சிகளுக்குள் நிலவும் முரண்பாடுகளும் பாஜகவிற்குச் சாதகமாக அமைந்துள்ளன.

தற்போது இந்தியாவில் பாஜகவிற்கு ஈடுகொடுக்கக் கூடிய ஒரு வலுவான தேசிய அளவிலான எதிர்க்கட்சித் தலைமை இல்லை என்ற பிம்பம் உருவாகியுள்ளதுதங்களின் சொந்தத் தொகுதிகளிலேயே செல்வாக்கை இழந்த தலைவர்கள்இனி வரும் காலங்களில் மக்களை எவ்வாறு திரட்டப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகியுள்ளது. 2026-ன் இந்த தேர்தல் முடிவுகள்இந்திய அரசியல் இனி "தலைமுறைகள் தாண்டிய குடும்ப அரசியல்என்பதிலிருந்து மாறி, "சோசியல் மீடியா மற்றும் புதிய வியூகங்கள்கொண்ட அரசியலாக மாறியுள்ளதை உறுதிப்படுத்துகின்றனபாஜக இந்த மாற்றத்தை அறுவடை செய்துதனது வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதுஎதிர்க்கட்சிகள் தங்களை முழுமையாக மறுசீரமைப்பு செய்யாவிட்டால்வரும் காலங்களில் ஜனநாயகம் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லாத சூழலை நோக்கித் தள்ளப்படலாம்.

ரமணி

10/5/26