Friday, March 27, 2026

முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள்

 

  11 வெளிநாட்டு வீரர்கள் தங்களது முதல் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளனர். இவர்களில் 9 பேர் கடந்த ஆண்டு ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இருவர் 2025 மெகா ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டும் காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கடந்த ஆண்டு ஐபிஎல் 2026 ஏலத்தில் ₹2 கோடி அடிப்படை விலைக்கு நியூசிலாந்து  வீரர் ஃபின் ஆலனை எடுத்தது. இவர் இதற்கு முன் பெங்களூரு அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல், ஸிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முஸாரபானி, முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்குப் பதிலாக கொல்கத்தா அணியில் இணைந்துள்ளார்.

2025 மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ₹4.80 கோடிக்கு வாங்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கசன்ஃபர், காயம் காரணமாக 2025 சீசனை இழந்தார். தற்போது அவர் ஐபிஎல் 2026 இல் அறிமுகமாகத் தயாராக உள்ளார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ், 2025 மெகா ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்ந்தார், ஆனால் காயத்தால் கடந்த சீசனில் பங்கேற்க முடியவில்லை, இவரும் இந்த ஆண்டு அறிமுகமாகிறார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி, அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பென் ட்வார்ஷுயிஸை ஐபிஎல் 2026 ஏலத்தில் ₹4.40 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. இலங்கையின்  தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா, ₹75 லட்சம் அடிப்படை விலையுடன் ஏலத்தில் பங்கேற்று, டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் இருந்து ₹4 கோடிக்கு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார்.

 அவுஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஜாக் எட்வர்ட்ஸ், தனது அடிப்படை விலையை விட ஆறு மடங்கு அதிகமாக ₹3 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 2026 ஏலத்தில் வாங்கப்பட்டார். மற்றொரு அவுஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கூப்பர் கானெல்லி, பஞ்சாப் கிங்ஸ் அணியால் ₹3 கோடிக்கு எடுக்கப்பட்டார்; இவர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு நீண்டகால மாற்றாக பார்க்கப்படுகிறார்.

இங்கிலாந்தின் ஜோர்டான் காக்ஸ், ₹75 லட்சம் அடிப்படை விலைக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நியூசிலாந்தின் ஆல்-ரவுண்டர் சாக் ஃபௌல்க்ஸை ₹75 லட்சம் கொடுத்து வாங்கியைள்ளது. இந்த வீரர்கள் அனைவரும் 2026 ஐபிஎல் சீசனில் தங்கள் முதல் போட்டியில் களமிறங்க காத்திருக்கின்றனர்.

 

  

ஐபிஎல் க்கு விடை கொடுக்கும் வீரர்கள்


  ஐபிஎல் 2026 சீசன் பல கிறிக்கெற் வீரர்களுக்கு கடைசி தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல வீரர்கள் சர்வதேச கிறிக்கெற்றில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் அணிகளுடனான அவர்களின் எதிர்காலம் இந்த சீசனின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும்.

டோனி (சிஎஸ்கே) தொடர்ந்து ஓய்வு பெறுவது பற்றிய விவாதங்கள் புதிதல்ல. எனினும், 2026 ஐபிஎல் அவரது கடைசிப் போட்டியாக அமையக்கூடும். முழங்கால் பிரச்சனைகள் அவரது களப் பங்களிப்பைக் குறைத்துள்ளன. சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் இருப்பதனால், சிஎஸ்கே எதிர்காலத்திற்குத் தயாராக உள்ளது.

சுனில் நரைன் (கேகேஆர்) கொல்கத்தா அணிக்கு இன்றும் முக்கியமான வீரர். ஆனால் 37 வயதில், தொடர்ந்து விளையாடுவது முக்கியம். ஆண்ட்ரே ரஸ்ஸல் அணியிலிருந்து விலகும் நிலையில், நரைனின் ஆட்டம் சரிந்தால் அவரும் அதே பாதையைப் பின்பற்றலாம்.

அஜிங்க்யா ரஹானே (கேகேஆர்) கப்டனாகக் களமிறங்கும் நிலையில், அவரது எதிர்காலம் செயல்பாட்டைப் பொறுத்தே அமையும். 37 வயதான ரஹானேவுக்கு, ஒரு சுமாரான சீசன் கொல்கத்தாவை விட்டு வெளியேற்றும். இது வேறு அணி அவரை வாங்குவது கடினமாக்கும்.

 இஷாந்த் ஷர்மா (ஜிடி) கடந்த சீசனில் ஏழு ஆட்டங்களில் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து சராசரி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2026 சீசனில் அவர் மீண்டு வர முயற்சிப்பார். அதிகரிக்கும் போட்டியின் காரணமாக, இந்த ஐபிஎல் தொடர் அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.  மார்கஸ் ஸ்டோய்னிஸ் (பஞ்சாப் கிங்ஸ்) 11 கோடி ரூபாய்க்குத் தக்கவைக்கப்பட்டு, அணியில் தாக்கத்தை செலுத்தி வருகிறார். ஆனால், அவரது கிறிக்கெற் வாழ்க்கையின் இறுதிப் பகுதிக்குள் நுழைகிறார். இந்த சீசனில் சுமாராக ஆடினால், பஞ்சாப் கிங்ஸ் அவரை விடுவிக்கக்கூடும்

ஐபிஎல் தொடரைத் தவற விடும் நட்சத்திர வீரர்கள்

ஐபிஎல் தொடர் அட்டகாசமாக ஆரம்பித்து விட்டது. நட்சத்திர வீரர்களை  ஏலத்தில் பெரிய தொகை கொடுத்து வாங்கிய  அணிகள் இப்போ கவலையில் உள்ளனசில  நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.   ஐந்து நட்சத்திர வீரர்கள் உடற்தகுதிப் பிரச்சனைகளால் அவதிப்படுவதால்அணிகள்  பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இதனால் பிளேயிங் 11  தேர்வில் அணிகளுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளன.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசன் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தங்களது அணியில் உள்ள முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களால் பல அணிகளின் திட்டங்கள் முடங்கியுள்ளன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் வேகப்பந்து தாக்குதலின் பெரும்பகுதியான ஆகாஷ் தீப், முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் பல்வேறு காரணங்களால் விளையாட மாட்டார்கள் எனத் தெரிகிறது. அதேவேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் தங்களது முதல் நிலை வீரர்களை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சாம் கர்ரன் காயம் காரணமாக விளையாட மாட்டார். கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி கார்பின் பாஷைத் தேர்வு செய்ததைத் தொடர்ந்து, பல அணிகள் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதற்காக முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மாற்று வீரர்களைத் தேர்வு செய்துள்ளன. ஸ்பென்சர் ஜான்சன், பிளெஸ்ஸிங் முசரபானி மற்றும் தசுன் ஷனகா ஆகியோர் இந்த ஆண்டு ஐபிஎல்-இல் விளையாடுவதற்காக பிஎஸ்எல் ஒப்பந்தங்களிலிருந்து விலகியுள்ளனர்

1. ஹர்ஷித் ராணா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

காயம்: வலது முழங்கால் தசைநார் இழுவை (அறுவை சிகிச்சை) இந்த சீசன் முழுவதும் விளையாட வாய்ப்பில்லை.

பாதிப்பு: கடந்த சீசன்களில் தனது திறமையால் அனைவரையும் கவர்ந்த, வளர்ந்து வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ரி20 உலகக்  கிண்ண  பயிற்சி ஆட்டத்தின்போது காயமடைந்தார். கேகேஆர் அணி ஏற்கனவே மாற்று வீரர்களைத் தேடத் தொடங்கியுள்ளது, சமீபத்தில் ஜிம்பாப்வேயின் பிளெஸ்ஸிங் முசரபானியை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது.

 

2. பேட் கம்மின்ஸ் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

காயம்: முதுகுத் தசைப்பிடிப்பு

நிலை: சீசனின் முதல் பாதியில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாக்கம்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைக்கு ஒரு பெரும் பின்னடைவாக, கம்மின்ஸ் தொடக்கக் கட்டப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்பதை அந்த அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

3. மதீஷா பத்திரனா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

காயம்: இடது கால் கெண்டைத்தசைப் பிடிப்பு (Calf Cramp)

தற்போதைய நிலை: தொடக்க ஆட்டங்களில் பங்கேற்பது சந்தேகமே.

என்ன பாதிப்பு: ₹18 கோடி என்ற பெரும் தொகைக்கு வாங்கப்பட்ட 'பேபி மலிங்கா' தற்போது காயத்திலிருந்து மீண்டு வருகிறார். தொடரின் இரண்டாம் பாதியில் அவர் திரும்புவார் என்று கேகேஆர் அணி நம்பிக்கையுடன் இருந்தாலும், தொடக்கத்திலேயே அவர் இல்லாதது, அவர்களின் டெத் பவுலிங் பிரிவில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

4. ஜோஷ் ஹேசில்வுட் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

காயம்: தொடை பின்பகுதி தசைநார் மற்றும் குதிகால் தசைநார்

தற்போதைய நிலை: குறைந்தபட்சம் முதல் இரண்டு வாரங்களை தவறவிட வாய்ப்புள்ளது.

  பாதிப்பு: அவுஸ்திரேலியாவின் முன்னணி பந்துவீச்சாளர், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவிடமிருந்து மருத்துவ அனுமதிக்காக இன்னும் காத்திருக்கிறார். 2025-ஆம் ஆண்டு  கிண்ணத்தை  வெல்ல முக்கிய பங்காற்றிய இந்த வேகப்பந்துவீச்சாளரைக் காண, ஆர்சிபி ரசிகர்கள் ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

5. வனிந்து ஹசரங்கா (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)

காயம்: நாள்பட்ட தொடைத்தசைப் பிரச்சினை

தற்போதைய நிலை:  சீசனின் தொடக்கத்தில் பங்கேற்பது மிகவும் சந்தேகமே.

 பாதிப்பு: ரி20 உலகக்  கிண்ணத்தைத்  தவறவிட்ட பிறகு, ஹசரங்கா குணமடைதல் மெதுவாக உள்ளது. ஹசரங்கா கணிசமான காலம் பெஞ்சில் இருக்க நேரிடலாம் என்று அஞ்சி, எல்.எஸ்.ஜி அணி ஏற்கனவே மேற்கிந்திய சுழற்பந்து வீச்சாளர் கூடகேஷ் மோட்டியை மாற்று வீரராகக் கொண்டு வந்துள்ளது.

6   நாதன் எல்லிஸை சிஎஸ்கே

 2022  ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியின் 'டெத் ஓவர்' நம்பிக்கையாக மதீஷா பத்திரனா இருந்தார். ஆனால், 2025 சீசனில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டு, தற்போது கேகேஆர் (KKR) அணியில் இணைந்துள்ளார். அந்த வெற்றிடத்தை நிரப்பவே, 31 வயதான நாதன் எல்லிஸை சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் முன்பு தக்க வைத்தது.

கையின் பின்புறத்தால் வீசப்படும் பந்துவீச்சு (Back of the hand slower balls) மற்றும் துல்லியமான யார்க்கர்களுக்குப் பெயர் பெற்ற எல்லிஸ் இல்லாதது, கடைசி 5 ஓவர்களில்  ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதில் சிஎஸ்கே-விற்கு சிக்கலை உண்டாக்கும்.

 7   ஹர்ஷித் ராணா    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

ரி20 உலகக்  கிண்ணப் போட்டிக்கு முன்பு ஏற்பட்ட முழங்கால் காயத்திற்கு  ஹர்ஷித் ராணா அறுவை 

  இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவிற்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நவதீப் சைனியை உறுதி செய்துள்ளது . 

8  பிருத்விராஜ்   குஜராத் டைட்டன்ஸ்

 பிருத்விராஜ் யர்ராவிற்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கெஜ்ரோலியா களமிறங்குவார் என அறிவித்துள்ளது. அவர் பங்கேற்காதற்கான காரணம் தெரியப்படுத்தப்படவில்லை.

9   பென் டக்கெட் டெல்லி கேப்பிடல்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக்கின்  தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, இங்கிலாந்து தொடக்க  வீரர் பென் டக்கெட் தனது இங்கிலாந்து அணிக்கான வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்ததால் , டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிக்கு இது ஏற்கெனவே நடந்ததைப் போன்ற ஒரு தருணம் ஏற்பட்டுள்ளது. 

ரமணி

29/3/26/ 

ரியல் மாட்ரிட் அணியில் ரொனால்டோவின் மகன்

 உதைபந்தாட்ட  ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 15 வயது மகன், தற்போது ரியல் மாட்ரிட்   கிளப்பின் இளைஞர் அமைப்புடன் சோதனை அடிப்படையில் உள்ளார் என்று ஸ்பானிய விளையாட்டுப் பத்திரிகையான டியாரோ ஏஎஸ் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

கிறிஸ்டியானோவின் மகன் ர் திங்களன்று ரியல் மாட்ரிட்டின் கடெட் ஏ (16 வயதுக்குட்பட்டோர் அணி) உடன் பணியாற்றத் தொடங்கினார். பீபாவின்  விதிகளின்படி, அவர் எட்டு வாரங்கள் வரை சோதனை அடிப்படையில் கிளப்பில் இருக்கலாம்.

இந்த இளம் வீரர் தற்போது அல் நஸ்ர் இளைஞர் அமைப்பில் உள்ளார். இதற்கு முன்பு மான்செஸ்டர் யுனைடெட் ,யுவென்டஸ் அணிகளில் விளையாடியுள்ளார். அவர் ஒரு முன்கள வீரராக வளர்ந்து வருகிறார். தனது தந்தையைப் போலவே, இவராலும் விங்கராகவும் விளையாட முடியும். மேலும், அவர் ஏற்கனவே போர்ச்சுகல் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்காக அறிமுகமாகியுள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ (தந்தை) 2009-ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார். அங்கு அவர் 438 போட்டிகளில் 450 கோல்களை அடித்ததுடன், நான்கு சம்பியன்ஸ் லீக், இரண்டு கோபா டெல் ரே, இரண்டு லா லிகா பட்டங்கள் , மூன்று உலக கிளப் சாம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்றார். பின்னர் 2018-ல் யுவென்டஸ் அணியில் சேர்ந்தார்.

  

   

சீனாவில் உலக இளையோர் வுஷு சாம்பியன்ஷிப்


 10 ஆவது உலக இளையோர் வுஷு சாம்பியன்ஷிப் போட்டிகள்  கடந்த புதன்கிழமை சீனாவில் ஆரம்பமாகியது   இதில் 78 நாடுகள் ,பிராந்தியங்களைச் சேர்ந்த 666 விளையாட்டு வீரர்கள் உட்பட 1,179 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

மார்ச் 26 முதல் 30 வரை நடைபெறும் இந்தப் போட்டியில் குழந்தைகள், இளையோர் ,இளைஞர் என மூன்று வயதுப் பிரிவுகள் உள்ளன. தாவோலு பிரிவில் 66  போட்டிகளிலும், சாண்டா பிரிவில் 17  போட்டி களிலும் மொத்தம் 83 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும்.

இந்தப் போட்டி, 2026 டக்கார் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒரு ஆயத்தப் பயிற்சி ,அணித் தேர்வாகவும், பயிற்சித் திட்டங்களின் விளைவுகளை மதிப்பிடுவதற்கான ஒரு தளமாகவும் அமைகிறது.

போட்டித்திறனை மேம்படுத்துவதற்காக,  முதன்முறையாக தாவோலு பிரிவில் ஒரு புதுமையான தகுதிச்சுற்று-இறுதிச்சுற்று முறையை அறிமுகப்படுத்தியது. ஆண்கள் இளையோர் சாங்குவான், ஆண்கள் இளையோர் குன்ஷு , பெண்கள் இளையோர் சாங்குவான் ஆகிய மூன்று பிரபலமான போட்டிகளில், போட்டியாளர்கள் தகுதிச்சுற்றுக் குழுக்களாகப் போட்டியிட்டனர், மேலும் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் 12 இடங்களைப் பிடித்தவர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

"2006-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, சர்வதேச வுஷு கூட்டமைப்பின் (IWUF) மிகவும் செல்வாக்குமிக்க இளையோர் நிகழ்வான உலக இளையோர் வுஷு சாம்பியன்ஷிப், எதிர்காலத் திறமைகளை வளர்ப்பதற்கும், திறன்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், கனவுகளைத் தொடர்வதற்கும் ஒரு களமாகச் செயல்பட்டது மட்டுமல்லாமல், வுஷு கலாச்சாரத்தை மேம்படுத்துவதிலும், நாகரிகங்களிடையே பரஸ்பர புரிதலை வளர்ப்பதிலும், நட்பையும் அமைதியையும் ஆழப்படுத்துவதிலும் ஒரு நேர்மறையான பங்கையும் ஆற்றியுள்ளது," என்று சர்வதேச வுஷு கூட்டமைப்பின் (IWUF) பொதுச் செயலாளர் ஜாங் யூபிங், தொடக்க விழாவில் கூறினார்.

  

Sunday, March 22, 2026

கூட்டணிக்குள் குழப்பம் முடிவு செய்ய தயங்கும் தலைமைகள்

அமித்ஷாவைச் சந்திக்க டெல்லியில் தவம் கிடக்கும் தமிழகத் தலைவர்கள்

ரஜினியை வம்புக்கிழுத்த ஆதவ் அர்ஜுனா. கொந்தளிக்கும் ரஜினியின் ரசிகர்கள்

நடிகைகளை அவமானப்படுத்துக் கருத்துகளால் நாறிப்போன அரசியல்

இரட்டை இலையைவிழுங்கி  ஏப்பம் விடத்துடிக்கும் தாமரை

தமிழக சட்டமனறத் தேர்தல் அறிவிக்கப்பட்டி விட்டது. ஆனால், திமுகவும், அதிமுகவும் இன்னமும் கூட்டணிப் பேச்சு வார்த்தையை முற்றாக முடிக்கவில்லை. ஏழு கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்து விட்டது. அதனால் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடியும்,  அவருடைய கூட்டணித்தலைவர்களும், அமித்ஷாவைச் சந்திப்பதற்கு டெல்லிக்கு  காவடி எடுத்துள்ளனர்.

லேடியா?, மோடியா? என நெத்தையடியாகக் கேஎட்ட இரும்புப் பெண்மணி ஜெயலலிதா  கட்டி ஆண்ட கட்சித்தலைவை இன்று அமித்ஷாவின் வீட்டு வாசலில்  மண்டியிட்டு உட்கார்ந்து இருக்கிறார். கூட்டணிக்குத் தலைமை  தாங்கும் கட்சியின்  குழுவும்,  கூட்டணிக் கட்சியின் குழுவும் சந்தித்து பல சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு எட்டிய பின்னர், கூட்டணித்தலைவரும், கூட்டணிக் கட்சியில் தலைவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தொகுதி உடன்பாடு பற்றி  அறிவிப்பார்கள். இது தாம் இதுவரகாலமும் கடைப்பிடிக்கப்படும் நெறிமுறை.

முன்னைய தேர்தல் காலத்தில்  பாரதீய ஜனதாத் தலைவர்கள் த‌மிழகத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இந்த வழமை இன்றைய தேர்தலில் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது. தமிழக அரசியல் தலைவர்கள் அமித்ஷாவை சந்திக்க அதவம் இருக்கின்றன்ர. இரண்டு மணிநேரம் காத்திருந்த எடப்பாடி 15 நிமிடங்கள் மட்டிம்தான் பேசினார். தன்னைச் சந்திக்க போயஸ்காடனுக்குச் சென்ற  பாரதீய ஜனதாத் தூதுவரை வாசலில் வைத்துத்  திருப்பி அனுப்பியவர் ஜெயலலிதார்.

"தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, நாங்கள்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவோம்" என்று எடப்பாடி கத்திக் கத்திச் சொன்னார். அது அமித்ஷாவின் கதில் விழவில்லை.  அமித்ஷாவின்கப் பாவையாக எடப்பாடி மாறிவிட்டாரோ எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  டெல்லித் தலைவர்கள் சென்னையில்  அதிமுக தலைமையுடன் பேசுவார்கள். ஆனால் இப்போது, ஒரு மாநிலக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தும், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக எடப்பாடி டெல்லிக்குச் சென்று காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

கூட்டணிக்குள் யார் இருக்க வேண்டும், யாருக்கு எத்தனை தொகுதி என்பதை எடப்பாடி தீர்மானிப்பார் என்று எதிர்பார்த்த ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து   அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் என வரிசையாக தமிழகத் தலைவர்கள் டெல்லியில் தவம் கிடக்கிறார்கள். இந்த 'டெல்லிப் பயணம்' தமிழக அரசியலில் ஒரு முக்கியமான மாற்றத்தை உரக்கச் சொல்லியிருக்கிறது.  தமிழக அரசியல் கூட்டணிக்கு  அதிமுக தலமை அல்ல என்பதை உரத்துச் சொலியுள்ளது. எடப்பாடையைத்தவிர மற்றைய அனைவருக்கும் அது புரிந்துள்ளது.

புதிய நீதிக்கட்சி  , ஐஜேகே  , பார்பர்டு பிளாக்  , பெருந்தலைவர் மக்கள் கட்சி  , தமமுக  , புதிய தமிழகம்  ஆகிய கட்சிகளை  இரட்டை இஅலைச் சென்னத்தில் போட்டியிட வைக்க எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார். அமித்ஷாவின் கணக்கு வேறு மாதிரி உள்ளது. தாமரைக்கு தமிழகத்தில் போதியளவு வாக்கு வங்கி இல்லை. தமிழகத்தில் தாமரை மலரும் என தமிழிசை உரக்கச்சொன்னார். அதுத்து வந்த அனைவரும் தனையே  சொன்னார்கள். அண்ணாமலை ஒரு படி மேலே போய் அடித்துச் சொனார். அப்பவும் தாமரை  நோட்டோவுக்குக் கீழாதான் இருக்கிறது. அந்தக் கணக்கை மாற்றி அமைக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.   புதிய நீதிக்கட்சி  , ஐஜேகே  , பார்பர்டு பிளாக்  , பெருந்தலைவர் மக்கள் கட்சி  , தமமுக  , புதிய தமிழகம்  ஆகிய கட்சிகளை தமரைச் சின்னத்தில் போட்டியிட வைப்பதே அமித்சஷாவின் திட்டமாகும்.  அந்தக் கட்சித்தலிவர்களுக்கு கட்சி முகியமல்ல. தமது வெற்றியும் பதவியும் தான் முக்கியம். அவை பெயரளவிலேதான் அரசியல் கட்சிகள். மற்றும் படி அவை சாதிக் கட்டமைப்புத்தான்.

அமித்ஷாவின் திட்டத்தை உடைத்துக் கொண்டு எடப்பாடி வெளியேறுவாரா அல்லது அமித்ஷாவுக்கு அடிபணிந்து அதிமுகவை அடகு வைப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

  திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமலின் மக்கள் நீதி மய்யம்   கட்சியுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் சின்னம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முடிவு கிடைக்காததால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.  

பேச்சுவார்த்தையின் போது, மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான "உதயசூரியன்" சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. கட்சியின் அடையாளமான 'டார்ச் லைட்' சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாக கமலில் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சில முரண்பாடுகள் இருந்தாலும், இறுதி முடிவை கட்சித் தலைவர் கமல்ஹாசன் எடுப்பார் என ம.நீ.ம தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் ஒரு தெளிவான முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் . கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரசாரத்தில் மட்டும் ஈடுபட்ட கமல்ஹாசன், இந்த முறை தனது கட்சி வேட்பாளர்களைச் சட்டமன்றத்திற்கு அனுப்பும் நோக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

சொந்தச் சின்னத்தில் போட்டியிடுவது கட்சியின் தனித்துவத்தைப் பேண உதவும் என்பது ம.நீ.ம-வின் நிலைப்பாடாக உள்ளது. மறுபுறம், கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பது திமுகவின் கணக்காக இருக்கிறது. அதே போல் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்தும் இதுவரை தெரியவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தச் சின்னம் தொடர்பான இழுபறி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில சிறிய கட்சிகள் ஏற்கனவே உதயசூரியன் சின்னத்திலேயே தொடர்ந்து போட்டியிட்டதால், அந்த கட்சிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்வதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. கட்சியின் அங்கீகாரம் பறிபோய் விடக் கூடாது என்பதால் தங்கள் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுவது என இந்த முறை அனைத்து கட்சிகளும் உறுதியாக உள்ளன. அதே போல் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பதால், கடந்த முறை போட்டியிட்ட 173 தொகுதிகளை விட குறைவான தொகுதிகளிலேயே திமுக போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் 28,மதிமுக 4, சிபிஐ2,ஐஇமுலீ 2,கொமதேக2, மமக2, விசிக 6 ஒன்று புதுசேரி என ஒப்பந்தம் கைத்தாத்திடப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கூடுதலாகக் கேட்டனர். ஸ்டாலின், திருமாவளவன் ஆகிய இருவரும் நேரடியாகப் பேசி முடிவு செய்தனர்.

திரிஷா பிரச்சனையே  இன்னமும் தீரவில்லை. அதற்குள் நயந்தாராவின்  பிரச்சனை தலைதூக்கி உள்ளது.  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷாவின் பெயரை குறிப்பிட்ட தனிப்பட்ட விமர்சனங்களை முன் வைத்தார். இதற்கு நடிகை திரிஷா மட்டுமின்றி பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் இது போன்று செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என பலரும் கூறினார்கள். கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்ததால், தனது கருத்திற்காக நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்தார்.

திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கள் ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதை சுட்டிக்காட்டி, அது திரிஷா தான் என பலரும் அவரின் பெயரை குறிப்பிட்டே சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டார்கள். இந்த கருத்துக்கள் பரவி வந்த அதே வேளையில் விஜய், திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் ஒன்றாக வந்து இறங்கியது தொடர்பாகவும் சர்ச்சை பேச்சுக்கள் எழுந்தது.  நடிகர் பார்த்திபனும் குந்தவையை வீட்டில் குந்தவை எனக் கூறியதால் திரிஷா கொதித்தெழுந்தார். பிரச்சனைஅயை முடிவுக்குக் கொண்டு வருவதர்காக பார்த்திபன் மன்னிப்புக் கேட்டார். திரிஷாவின் அம்மாவும் தனதுபங்குக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் திரிஷா பற்றி விமர்சனங்கள் இன்னும் முடியாமல் போய் கொண்டிருக்கிறது.

திரிஷா  பற்றிய சர்ச்சை முடிவுக்கு வராத நிலையில், திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற போது அதிமுக எம்.பி.,யான சி.வி.சண்முகம், நயன்தாரா பற்றி பேசி புதிய சர்ச்சையை துவக்கி வைத்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், " உங்கள் கனவுகளை சொல்லுங்கள், நிறைவேற்றி வைக்கிறேன் என்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். நயன்தாரா வேணும். இது தான் என் கனவு. இதை நிறைவேற்றி வைப்பாரா?" என பேசி உள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் விமர்சனங்களை முன் வைத்து வருவதும், பிறகு அது கண்டனத்திற்கு உள்ளாவது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. அரசியல் களத்தில் ஏன் நடிகர், நடிகைகள் குறிவைத்து விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது. பெண்ணியம் பேசுபவர்களும் இவற்றுக்கு எதிராகக் கடும் கண்டனங்களை எழுப்பி உள்ளனர்.

  சமீப காலமாக நடிகள், நடிகைகள் குறித்து அரசியல் பிரமுகர்கள் பலரும் தொடர்ந்து தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களை முன்வைப்பது தொடர்ந்து அதிகரித்து வருவது சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, திமுக மிரட்டியதால் தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற ஒரு கருத்தை சமீபத்தில் தெரிவித்தார். திமுக அரசுக்கு எதிரான கண்ட ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தமே இல்லாமல் எதற்காக ரஜினி பற்றி அவர் பேசினார் என தெரியவில்லை. இதற்கு நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிச்சாமி, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். ஆதவ் அர்ஜூனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார் நயினார் நாகேந்திரன். ரஜினி ரசிகர்களும் இதில் எதிர்ப்பை பதிவு செய்த நிலையில்,   ரஜினியே ஆதவ் அர்ஜூனா கூறியது உண்மைக்கு புறம்பானது என அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆதவ் அர்ஜுனவின் பேச்சுக்கு காலம்பதில் சொல்லும் என ரஜினி தெரிவித்துள்ளார். ரஜினி தெரிவித்த காலம் தேர்தல் தினம் என பலரும் வெளிப்படையாகக் கருத்துத்  தெரிவித்துளனர்.  விஜய் வழ்மைபோல  மெளன விரதம் கடைப்பிடிக்கிறார்.

 

 

ரமணி

22/3/26