Saturday, April 11, 2026


  

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில்  கடந்த வாரம் நடைபெற்ற போட்டிகளில் எட்டப்பட்ட புதிய சாதனைகளும், வேதனைகளும்.

நான்காவது முறையாக  ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்த டெல்லி 

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில்    தொடரின் 14-வது லீக் போட்டி டெல்லி ஜேட்லி மைதானத்தில்   குஜராத் டைட்டன்ஸ் ,டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

 இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி   ஒருஓட்ட‌ வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் டெல்லி அணி   முதலாவது தோல்வியை சந்தித்திருந்தது.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில்    தொடரின் 14-வது லீக் போட்டி டெல்லி ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் ,டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற  போட்டியில் சாதனைகளின் விபரம்.

 இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 1 ஓட்ட‌ வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் டெல்லி அணி தங்களது முதலாவது தோல்வியை சந்தித்திருந்தது.

குஜராத்துக்கு எதிராக நடைபெற்ற  ப‌ரபரப்பான  போட்டியில் டெல்லி ஒரு ஓட்டத்தால் பரிதாபமாகத் தோல்வியடைந்தது.   முன்னரும்  மூன்று முறை ஒரு ஓட்டத்தால் டெல்லி  தோல்வியடைந்தது.

ஐ.பி.எல் போட்டிகளில் நான்காவது முறையாக ஒரு ஓட்ட‌ வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த அணியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓட்ட‌வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த டெல்லி அணி 2016 ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு  ஓட்டத்தால்  தோல்வியை சந்தித்திருந்தது. அதன்பின்னர் 2021 ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணிக்கெதிராக ஒரு  ஓட்டத்தால்  தோல்வியடைந்தது. 

நான்கு முறை ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை சந்தித்து அதிகமுறை ஐபிஎல் போட்டிகளில் ஒரு  ஓட்ட‌வித்தியாசத்தில் நான்கு முறை  தோல்வியை சந்தித்த அணி என்ற   மோசமான அணி எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்து 2 ஆவது வீரராக ஜாஸ் பட்லர்  சாதனை

 டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து யானது ஒரு ரன்   டெல்லி  கெபிடல்ஸ் அனி விளையாடியது.

போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடிய ஜாஸ் பட்லர் 27 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள்,  5 சிக்ஸர்கள்  உட்பட 52 ஓட்டங்கள்  அடித்து ஆட்டமிழந்தார்.   இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் ஜாஸ் பட்லர் ஐ.பி.எல் போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவிற்கு அடுத்து இரண்டாவது வீரராக ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

 முதல் விக்கெட்டாக சாய் சுதர்சன் 12  ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறியதும் மூன்றாவது ஓவரில் பேதுடுப்பெடுத்தாடிய  ஜாஸ் பட்லர் பவர்பிளே ஓவர்களுக்குள் 5 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் துவக்க வீரர் அல்லாத ஒரு வீரர் பவர்பிளே ஓவர்களுக்குள் 5 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா பவர்பிளே ஓவர்களுக்குள் 6 சிக்ஸர்களை விளாசியிருந்த வேளையில் அவருக்கு அடுத்து தற்போது 5 சிக்ஸர்களை விளாசி இரண்டாவது இடத்தினை ஜாஸ் பட்லர் பிடித்துள்ளதுள்ளார்,

9  ஆண்டுகளின் பின்   வாஷிங்டன் சுந்தர் நிகழ்த்திய சாதனை

  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இதுவரை 69 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 558  ஓட்டங்கள் குவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் அவருக்கு இந்த ஆண்டு பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது நான்காவது வரிசையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி , 2 சிக்ஸர்கள் என 55 ஓட்டங்கள் குவித்து அசத்தியிருந்தார்.

இந்தப் போட்டியில்   வாஷிங்டன் சுந்தர் அடித்த அரை சதத்தின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  9 ஆண்டுகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர்   டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். இதன்மூலம் அவரது 9 ஆண்டுகால ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில்  தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ள அவர் ஒருநாள் ,ரி20 போட்டியிலும் அரைசதம் அடித்துள்ளார்.

 

ரமணி

12/4/26

குஜராத்,டெல்லி லக்னோ,ஐபிஎல்,ரி20,விளையாட்டு,இந்தியா,  கொல்கத்தா,லக்னோ,

 

        

கடைசிப்பந்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது லக்னோ


  ஐபிஎல் சீசனின் 15-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ‘த்ரில் வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற லன்கோ முதலில் பந்து வீசியது.கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 4 க்கெட்டுகளை இழந்து  181  ஓட்டங்கள் எடுத்தது. கொல்கத்தா கப்டன் ரஹானே 41, ரகுவன்ஷி 45, கிரீன் 32, பவெல் 39  ஓட்டங்கள் எடுத்தனர்.

182  ஓட்டங்கள் என்ற இலக்கை   விரட்டிய லக்னோ 15.5 ஓவர்களில்  7 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்கள்  எடுத்து தடுமாறியது   மார்க்ரம் 22, மார்ஷ் 15, கப்டன் ரிஷப் பந்த் 10, நிக்கோலஸ் பூரன் 13, அப்துல் சமாத் 2, ஆயுஷ் படோனி 54, ஷமி 1 ஓட்டம்  எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி நான்கு ஓவரில் லக்னோ வெற்றிக்கு 54 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கானுடன்  இணைந்த   முகுல் சவுத்ரி அதிரடி காட்டினார். . கடைசி ஓவரில் லக்னோவுக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தில்  ஒரு ஓட்டம் எடுத்தார் ஆவேஷ். அடுத்த பந்தில் சிக்ஸர் விளாசினார் முகுல். 3, 4-வது பந்துகளில் ஓட்டம் எடுக்கபடவில்லி. 5-வது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தில் பை  ஓட்டத்தின்  மூலம் தனது அணியை வெற்றி பெற செய்தார்.

27 பந்துகளில் 54 ஓட்டங்கள்  எடுத்திருந்தார் முகுல். இதில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை அவர் அடித்தார்.. இந்த சீசனில் இது லக்னோ அணிக்கு 2-வது வெற்றியாக அமைந்துள்ளது. ஆட்ட நாயகன் விருதை முகுல் வென்றார். கொல்கத்தா அணி 4 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் உடன் அந்த அணி விளையாடிய லீக் ஆட்டம் மழை காரணமாக இரத்தானது.

அதிகம் அறியப்படாத முகுல் சௌத்ரியின் கடைசி நேர அதிரடி ஆட்டமான, 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54  ஓட்டங்கள், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக நம்பமுடியாத மூன்று விக்கெட் வெற்றியைப் பெற்றுத் கொடுத்தது. தந்தது .

   

தடை செய்யப்பட்ட வீரர்களுக்கு இழப்பீடு வழங்குகிறது ரஷ்யா


  

உக்ரைன் போர் தொடர்பான கட்டுப்பாடுகள் தொடர்ந்த போதிலும், சர்வதேசப் போட்டிகளுக்கு முழுமையாகத் திரும்புவதை உறுதிசெய்ய அதிகாரிகள் முயற்சிப்பதால், குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து தடை செய்யப்பட்ட வீரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என நாட்டின் விளையாட்டு அமைச்சும் , ஒலிம்பிக் குழுவும் தெரிவித்துள்ளன.

விளையாட்டுப் போட்டிகளில் முழுமையாக மீண்டும் பங்கேற்பதே நோக்கமாக உள்ளது என்றும், அந்த இலக்கை அடைய அதிகாரிகள் தூதரக ,சட்ட வழிமுறைகள் மூலம் செயல்பட்டு வருவதாகவும் ரஷ்ய விளையாட்டுத்துறை அமைச்சரும், ROC தலைவருமான மிகைல் டெக்டியாரேவ் கூறினார்.  

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பெப்ரவரி 6 முதல் 22 வரை மிலன் மற்றும் கோர்டினா டி'அம்பெஸ்ஸோவில் நடத்தப்பட்டன. இதில் 13 ரஷ்ய விளையாட்டு வீரர்கள் நடுநிலை அந்தஸ்தின் கீழ் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஃபிகர் ஸ்கேட்டிங், ஆல்பைன் பனிச்சறுக்கு, கிராஸ்-கன்ட்ரி பனிச்சறுக்கு, ஃப்ரீஸ்டைல் ​​பனிச்சறுக்கு, ஷார்ட் ட்ராக், ஸ்பீட் ஸ்கேட்டிங், லூஜ் மற்றும் பனிச்சறுக்கு மலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர்.

இருப்பினும், முந்தைய போட்டிகளுடன் ஒப்பிடுகையில், இந்தப் போட்டிகளில் ரஷ்யாவின் பங்கேற்பு கணிசமாகக் குறைக்கப்பட்டது. விளையாட்டு வீரர்கள் தங்கள் தேசியக் கொடி அல்லது தேசிய கீதத்தின் கீழ் போட்டியிட முடியவில்லை, மேலும் அதிகாரப்பூர்வ பதக்கப் பட்டியலில் அவர்களின் முடிவுகள் அந்த நாட்டிற்கு வழங்கப்படவில்லை.

இந்த நடவடிக்கைகள் விளையாட்டு உலகில் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேசப் போட்டியின் நேர்மையைப் பேணுவதற்கு இவை அவசியம் என ஆதரவாளர்கள் வாதிடுகையில், விமர்சகர்கள் நியாயம் மற்றும் விளையாட்டு வீரர்கள் மீதான தாக்கம் குறித்துக் கவலைகளை எழுப்பியுள்ளனர். சிலர் இந்தக் கட்டுப்பாடுகளை "நிஜ உலக விளைவுகளைக் கொண்ட ஒரு அரசியல் நடவடிக்கை" என்று விவரித்துள்ளனர்.

  

  

Friday, April 10, 2026

டோஹா டைமண்ட் லீக் ஒத்திவைப்பு


 மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, கட்டாரில் நடைபெற இருந்த டோஹா  டைமண்ட் லீக் தடகள போட்டி ஒத்திவைக்கப்படுவதாக உலக தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

உலக தடகள போட்டிகளில் மிகவும் முக்கியமான தொடர்களில் ஒன்று டைமண்ட் லீக். நடப்பு 2026ம் ஆண்டு சீசனின் முதல் சுற்று போட்டி கத்தார் தலைநகர் டோஹாவில் மே 8ம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.  ஈரான், அமெரிக்கா  , இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடந்து வரும் மோதல் காரணமாக அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. இரண்டு வார போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம்,குவைத் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, தடகள வீரர்கள் ,ரசிகர்கள் ஆகியோரின்  பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மே 8ம் திகதி நடக்க இருந்த போட்டி ஜூன் 19ம்  திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு சூழல் சீரடைந்தால் மட்டுமே போட்டி நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் கட்டாரில் கடுமையான வெப்பம் இருக்கும் என்பதால், போட்டியின் மைதானமும் மாற்றப்பட்டுள்ளது. முதலில் கட்ட்ர் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டி, தற்போது அதிநவீன குளிர்சாதன வசதி கொண்ட கலிபா சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு தான் 2019 உலக தடகள சம்பியன்ஷிப் , 2022   உலகக் கிண உதைபந்தாட்டம் ஆகியன   வெற்றிகரமாக நடத்தப்பட்டன .

  

ஒரு ஓட்டத்தால் டெல்லியிடம் தோற்றது குஜராத்


 ஐபிஎல் 2026 தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே 1  ஓட்ட  வித்தியாசத்தில் வீழ்த்தியகுஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற  டெல்லி கப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் கே\ப்டன் சுப்மன் கில் 45 பந்துகளில் 70  ஓட்டங்களும் , ஜாஸ் பட்லர் 27 பந்துகளில் 52 ஓட்டங்களும் , வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55  ஓட்டங்களும்  எடுத்தனர். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 210  ஓட்டங்கள் என்ற வலுவான நிலையை  எட்டியது. டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

211 என்ற டினமான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் நிதானமாக நின்று ஆடினார். அவர் 52 பந்துகளில் 11 பவுண்டரிகள் , 4 சிக்ஸர்களுடன் 92  ஓட்டங்கள் அடித்துஅணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார். பதும் நிசங்க 41  ஓட்டங்கள் எடுத்தார்.

ரஷித் கானின் அபாரமான பந்துவீச்சால் டெல்லி அணி  தொடர்ந்து விக்கெட்களை இழந்தது.    கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 12  ஓட்டங்கள் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனதால், டெல்லி அணி 1  ஓட்டவித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. குஜராத் தரப்பில் 4 ஓவர்களில்   17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்

Thursday, April 9, 2026

மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான் முதலிடத்துக்கு முன்னேறியது

ஐபிஎல் 2026 தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. மழையினால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

கெளகாத்தியில் நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற  மும்பை கப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 11 ஓவர்கள் மட்டுமே கொண்ட ஆட்டம் என்பதால், ராஜஸ்தான் தொடக்க வீரர்கள் முதல் பந்திலிருந்தே அதிரடியில் இறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77  ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது பங்கிற்கு 14 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 39  ஓட்டங் கள் அடித்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து கு 150 ஓட்டங்கள்  எடுத்தது. மும்பை தரப்பில் அல்லா கசன்பர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

151  ஓட்டங் கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்குத் தொடக்கம் முதலே நெருக்கடி ஏற்பட்டது. ரோஹித் சர்மா (5) , சூர்யகுமார் யாதவ் (6) ஆகியோர் சொற்ப  ஓட்ட்டங்களில்  ஆட்டமிழந்த‌னர். ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (25) , நமன் தீர் (25) ஆகியோர் அதிரடியாக ஆட முயன்ற போதிலும், ராஜஸ்தான் பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. மும்பை அணி 11 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்கள் எடுத்து  தோல்வியடைந்தது.  ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா, நந்த்ரே பர்கர் ,ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 தோல்விகளுடன் 7-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆட்டநாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார்.

  

மழையால் கைவிடப்பட்டது கொல்கத்தா பஞ்சாப் போட்டி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 லீக் ஆட்டம், விடாது பெய்த கனமழை காரணமாக  கைவிடப்பட்டது.

ஏடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில் நானயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற  கொல்கத்தா கப்டன் அஜிங்கியா ரஹானே முதலில்துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.  பஞ்சாப் வேகப்பந்துவீச்சாளர் சேவியர் பார்ட்லெட் வீசிய இரண்டாவது ஓவரில், தொடக்க வீரர் ஃபின் ஆலன் (6) , கேமரூன் கிரீன் (4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கொல்கத்தா அணி 3.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 25  ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது. அப்போது கப்டன் ரஹானே 8 ஓட்டங்களுடனும், அங்க்ரிஷ் ரகுவன்ஷி 7  ஓட்டங்க‌ளுடனும் களத்தில் இருந்தனர்.

மழை நின்ற பிறகு மைதானத்தைச் சீரமைக்க ஊழியர்கள் கடுமையாகப் போராடினர். 5 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தை நடத்துவதற்கான கடைசி நேரமான 11:14 மணி வரை காத்திருந்தும், மைதானம் விளையாடத் தகுதியற்ற நிலையில் இருந்ததால் போட்டி இரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ஐபிஎல் விதிகளின்படி, போட்டி இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையைச் சற்று உயர்த்தியுள்ளது.  இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யக் காத்திருந்த கொல்கத்தா அணிக்கு, இந்தப் புள்ளி ஒரு சிறிய ஆறுதலாக அமைந்துள்ளது.