Saturday, June 6, 2026

ஸ்பெய்னுக்கு எதிரான கொங்கோ அணியின் பயிற்சிப்போட்டி இரத்து

எபோலா நெருக்கடியுடன் தொடர்புடைய சாத்தியமான சுகாதார அபாயங்களைக் காரணம் காட்டி, அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நட்புரீதியான போட்டிக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என, ஸ்பெயின் நகரமான லா லினியா டி லா கான்செப்சியனின் மேயர்  அறிவித்துள்ளார்.

 தெற்கு நகரமான லா லினியா டி லா கான்செப்சியனின் அரசாங்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஆனாலும்,   சிலிக்கு எதிரான பயிற்சிப் போட்டி நடக்கும் என கொங்கோ ஜனநாயகக் குடியரசு நம்புகிறது.

புதன்கிழமை அன்று பெல்ஜியத்தின் லீஜ் நகரில், காங்கோ அணி டென்மார்க்கிற்கு எதிராக ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.

அரிதான வகை எபோலா வைரஸ் காங்கோ ,உகாண்டாவைப் பீடித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இதனை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதியில் நோய் பரவல் காரணமாக, காங்கோ ஏற்கனவே மூன்று நாள் உலகக் கோப்பை ஆயத்தப் பயிற்சி முகாமையும், தலைநகர் கின்ஷாசாவில் ரசிகர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் திட்டமிடப்பட்ட வைபவத்தியும் இரத்து செய்திருந்தது.

காங்கோ வீரர்களும், அணியின் பிரெஞ்சு பயிற்சியாளரான செபாஸ்டியன் டெசாப்ரேயும் அந்த மத்திய ஆப்பிரிக்க நாட்டிற்கு வெளியே வசிக்கின்றனர், அவர்களில் பெரும்பாலானோர் பிரான்சில் விளையாடுகின்றனர்.

  

உலகக் கிண்ணத்தில் விளையாடும் மூத்த வீரர் கிரேக் கார்டன் இரண்டாவது இடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ


 48 அணிகள்

 1248 வீரர்கள்

 357வீரர்கள்  முன்னர்  விளையாடியவர்கள்

7 வீரர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்

  43 வயது கிரேக் கார்டன் மூத்த வீரர்

  17 வயது  கில்பெர்டோ மோரா இளையவீரர்

6 ஆவது உலகக்கிண்ணத்தில்   3 வீரர்கள்

 4 நாடுகளுக்கு முதல் உலகக்கிண்ணப் போட்டி

 

அமெரிக்கா, மெக்ஸிகோ,  கனடா ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிக்கான இறுதி அணிப் பட்டியல்களை பீபா புதன்கிழமை வெளியிட்டது.

48 அணிகளிலும் சேர்த்து மொத்தம் 1248 வீரர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 357 பேர் இதற்கு முன்னர் உலகக் கிண்ணப்போட்டியில்  விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள்.

உலகக் கிண்ணத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஏழு வீரர்கள் பங்கேற்பார்கள்.

43 வயதான ஸ்காட்லாந்து கோல்கீப்பர் கிரேக் கார்டன், இந்த முறை பங்கேற்கும் வீரர்களில் மிகவும் வயதானவராக இருப்பார்.  2018  ஆம் ஆண்டு ரஷ்யாவில்  நடந்த  உலகக்  கிண்ணப் போட்டியின்போது  45 வயதாக இருந்த எகிப்திய கோல்கீப்பர் எஸாம் எல் ஹடாரிக்குப் பிறகு, உலகக் கிண்ணத்தில் விளையாடும் இரண்டாவது வயதான வீரரும் இவரே ஆவார்.

  போர்த்துகல் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமான 41 வயதான கிறிஸ்டியானோ  இரண்டாவது இடத்ஹில் உள்ளார். 2026-ஆம் ஆண்டில்  நடைபெறும் உலகக்கிண்ணப் போட்டியில் ரொனால்டோ விளையாடினால்  மூத்த வீரராக  இருப்பார்.

2026 உலகக் கோப்பையில்கிண்ணத்தில் விளையாடும் மூத்த வீரர்கள்

        கிரேக் கார்டன் (ஸ்கொட்லாந்து) - 43 ஆண்டுகள், 5 மாதங்கள் ,3 நாட்கள்

        கிறிஸ்டியானோ ரொனால்டோ (போத்துகல்) - 41 வயது, 3 மாதம், மற்றும் 29 நாட்கள்

        கில்லர்மோ ஓச்சோவா (மெக்ஸிகோ) - 40 ஆண்டுகள், 10 மாதங்கள் ,21 நாட்கள்

        லூகா மோட்ரிச் (குரோஷியா) - 40 ஆண்டுகள், 8 மாதங்கள் , 25 நாட்கள்

        எடின் ஜெக்கோ (போஸ்னியா & ஹெர்சகோவினா) - 40 ஆண்டுகள், 2 மாதங்கள் , 17 நாட்கள்

        மானுவல் நியூயர் (ஜேர்மனி) - 40 ஆண்டுகள், 2 மாதங்கள் ,7 நாட்கள்

        வோசின்ஹா (கேப் வெர்டே) - 40 ஆண்டுகள், 0 மாதங்கள்,, 0 நாட்கள்

 ஆர்ஜென்ரீனாவின் லியோனல் மெஸ்ஸி, போத்துகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ , மெக்ஸிகோவின் கில்லர்மோ ஓச்சோவா ஆகியோர் தங்களது ஆறாவது உலகக் கோப்பைப் பயணத்தில் பங்கேற்கவுள்ளனர். அதே சமயம், கேப் வெர்டே, குராசோ, ஜோர்தான் ,உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் தங்களது முதல் உலகக் கோப்பையில் விளையாடவுள்ளன.

 சுமார் 891 வீரர்கள் முதல் முறையாக இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இது உலகளாவிய விளையாட்டில் தொடர்ச்சியையும் புதுப்பித்தலையும் எடுத்துக்காட்டுகிறது," என்று பீபா கூறியது.

ஸ்கொட்லாந்து கோல்கீப்பர் கிரேக் கார்டன் 43 வயது , 162 நாட்களில் இந்தத் தொடரில் பங்கேற்கும் மூத்த வீரராக இருப்பார், அதே நேரத்தில் மெக்சிகோவின் கில்பெர்டோ மோரா 17 வயது , 240 நாட்களில் இளைய வீரராக இருப்பார். தொடரின் தொடக்கத்தில் 20 வயதுக்குட்பட்ட 22 வீரர்களும், 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஏழு வீரர்களும் இருப்பார்கள்.

ரமணி

76/26 

பீலேயின் இறுதிப் போட்டி சீருடை ஏலம் விடப்பட உள்ளது.


   1958 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண  இறுதிப் போட்டியில் விளையாடிய   பீலே அணிந்திருந்த  10 ஆம் எண் சீருடை  ஏலம் விடப்பட உள்ளது.

  ஸ்டாக்ஹோமில் உள்ள ரசுண்டா மைதானத்தில் போட்டியை நடத்திய சுவீடன் அணிக்கு எதிராக பிறேஸில் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றபோது, பீலே இரண்டு கோல்களை அடித்திருந்தார்; அப்போது அவருக்கு  17 வயது. உலகக் கிண்ண  இறுதிப் போட்டியில் கோல் அடித்த மிக இளைய வீரர் என்ற பெருமையை அவர் இன்றும் தக்கவைத்துக் கொள்கிறார். .

பீலே தனது முதல் உலகக்கிண்ண  இறுதிப் போட்டியில் அணிந்திருந்த சீருடை  ஜூன் 29 முதல் ஜூலை 16 வரை இணையவழி ஏலத்தில் விடப்படும்

2022 டிசம்பரில் பெருங்குடல் புற்றுநோயால் 82 வயதில் காலமான பீலே, இறுதிப் போட்டிக்குப் பிறகு கையால் செய்யப்பட்ட அந்தச் சட்டையைத் தனது அறைத் தோழரும் சக வீரருமான டிடாவுக்குப் பரிசாக அளித்தார். அது பல தசாப்தங்களாக டிடாவின் குடும்பத்தினரிடம் இருந்தது. பின்னர் அது ஒரு பிறேஸிலிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு, இறுதியில் 2004-ல் அதன் தற்போதைய உரிமையாளரால் கையகப்படுத்தப்பட்டது. அந்த உரிமையாளரின் பெயர் வெளியிடப்படவில்லை.

ரசிகர்கள் , வீரர்கள்  ஆகியோரின்  கருத்துப்படியும், அந்த இறுதிப் போட்டியில் பிறேஸில் ஜாம்பவானின் முதல் கோல், உலகக் கிண்ண  வரலாற்றிலேயே மிகச் சிறந்த கோல்களில் ஒன்றாகும். அவர் பந்தைத் தன் மார்பால் கட்டுப்படுத்தி, ஒரு சுவீடன் தடுப்பாட்டக்காரருக்கு மேலாகத் தூக்கி எறிந்து கோல் அடித்தார். இரண்டாவது கோல், ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் தலையால் முட்டி அடிக்கப்பட்டது.

1970-ல், அமெரிக்கா , கனடாவுடன் இணைந்து போட்டியை நடத்தும் மூன்று நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோவில், பீலே தனது மூன்றாவது உலகக்  கிண்ணல் பட்டத்தை வென்றார். அன்று அவர் சம்பியனாகத் திகழ்ந்த அதே அஸ்டெகா மைதானத்தில்தான், இந்த ஆண்டு உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டமும் நடைபெற உள்ளது; இதில் மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

 

 சிலம்பு

7/6/26 

சுவிஸ் வீரர் பிரீல் எம்போலோவுக்கு விஸா மறுப்பு


 குற்றவியல் தண்டனை பெற்றிருந்த காரணத்தால்,   உலகக் உகிண்ணப் போட்டிக்குச் செல்லும் அணியின் விமானத்தில் ஏற  சுவிட்சர்லாந்து முன்கள வீரர் பிரீல் எம்போலோஅனுமதி மறுக்கப்பட்டது.  ஒரு நாள் கழித்து,   புதன்கிழமை அன்று பெர்னில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அவசர விஸாவுக்கு விண்ணப்பித்தார்.

சான் டியாகோவில் உள்ள அணியின் பயிற்சி முகாமில், சுவிஸ் உதைப்ந்தாட்ட  கூட்டமைப்பு, எம்போலோவின் அமெரிக்கப் பயண அனுமதி ஏன் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது என்பதை செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது. இந்த ஆண்டு அவருக்கு எதிராகக் கட்டாயமாக்கப்பட்ட ஒரு தண்டனைத் தீர்ப்பு உள்ளது.

2018-ஆம் ஆண்டு பேசல் நகர மையத்தில் நடந்த ஒரு வாக்குவாதத்தைத் தொடர்ந்து எம்போலோ மீது குற்றம் சாட்டப்பட்டது, மேலும் கடந்த செப்டம்பரில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அவர் குற்றவாளி என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. தனது வாழ்நாளின் மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியி விளையாட   அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதற்குச் சில வாரங்களுக்கு முன்பு, ஏப்ரல் மாதம் எம்போலோ  எதிரான  இந்தத் தீர்ப்பு இறுதி செய்யப்பட்டது.

29 வயதான எம்போலோ சுவிட்சர்லாந்தின் முதல் தேர்வு முன்கள வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறார்,   அவர் 86 சர்வதேசப் போட்டிகளில் 24 கோல்களை அடித்துள்ளார்.

 

உலகக்கிண்ணம் 26,அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ, சுவிட்ஸர்லாந்து,எம்போலா,,ஏகன்,ஏகன் மீடியா

 

Tuesday, June 2, 2026

உலகக் கிண்ணப் போட்டிக்காக ட்ரோன்கள் பறக்கத்தடை விதித்தது அமெரிக்கா


 

   உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும்   மைதானங்கள்  ,போட்டி தொடர்பான ரசிகர் நிகழ்வுகளின் மேலாக  ட்ரோன் பறப்பதற்குத் தடை விதிக்கப்படும் என்று  அமெரிக்க அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

போட்டி நாட்களில், ட்ரோன்கள் உட்பட அனைத்து விமானங்களும் மைதானங்களிலிருந்து மூன்று கடல் மைல் (5.6 கிலோமீட்டர்) தொலைவிற்குள்  தரை மட்டத்திலிருந்து 3,000 அடி (900 மீற்றர்) உயரம் வரை பறப்பதற்குத் தடை விதிக்கப்படும் என்று ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (Fஆஆ)  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

போட்டிகளை நடத்தும் நகரங்கள் மைதானங்கள் மற்றும் பிற இடங்களில் நடத்தும் ரசிகர் நிகழ்வுகளைச் சுற்றியுள்ள பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதிகள், ஒரு கடல் மைல் ஆரம் வரையிலும் மற்றும் தரை மட்டத்திலிருந்து 1,000 அடி உயரம் வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளன.

விதிமீறுபவர்களுக்கு 100,000 டாலர் வரை அபராதம், உபகரணங்கள் பறிமுதல் , மத்திய குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை இந்திய தமிழ் வீரர்கள்


 அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகியன  இணைந்து  நடத்தும்  உலகக்கிண்ண  உதைபந்தாட்டப் போட்டியில் தமிழைப் பூர்வீகமாகக்கொண்ட இரண்டு வீரர்கள் விளையாடுகிறார்கள்ஒருவர் அவுஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரரான

நிஷான் மத்யூ வேலுப்பிள்ளை,  இன்னொருவர்  காங்கோ  குடியரசு  அணியில் இடம் பெற்ற சாமுவேல் ஆல்பர்ட் அலைன் ஆர்கேட்  முத்துசாமி

நிஷான் மத்யூ வேலுப்பிள்ளை (தமிழ்: நிஷான் வேலுப்பிள்ளை,   அவுஸ்திரேலிய தொழில்முறை உதைப்ந்தாட்ட  வீரர் ஆவார். இவர் மெல்போர்ன் விக்டரி ,அவுஸ்திரேலிய தேசிய அணி ஆகியவற்றுக்காக  விளையாடுகிறார்.

 ஆங்கிலோ-இந்தியரான அவரது தாயார் வழியாக இந்திய வேர்களையும், அவரது தந்தை வழியாக மலேசிய , இலங்கைத் தமிழ் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளார். அவர்  அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பிறந்து வளர்ந்தார்.

சாமுவேல் ஆல்பர்ட் அலைன் ஆர்கேட் முத்துசாமி காங்கோ நாட்டு தொழில்முறை  உதைபந்தாட்டவீரர் ஆவார். இவர் கிரீஸில் உள்ள அட்ரோமிட்டோஸ் அணிக்காகவும், டிஆர் காங்கோ தேசிய அணிக்காகவும் தடுப்பு நடுக்கள வீரராக விளையாடுகிறார். இந்தோ-குவாடலூப்பிய தந்தைக்கும் காங்கோ நாட்டுத் தாய்க்க

காங்கோ நாட்டுத் தாய்க்கும் பாரிஸில் பிறந்த இவர், லியோன் ,நான்டெஸ் அணிகளில் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். 

 2023 ஆப்பிரிக்க கோப்பை நாடுகள் போட்டி உட்பட சர்வதேசப் போட்டிகளில் டி.ஆர். காங்கோ அணிக்காக இவர் விளையாடியுள்ளார்.

  1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12 ஆம் திகதி பிறந்த திமுத்தூசாமி, பிரான்சின் பரிஸ் நகரில், காங்கோ நாட்டைச் சேர்ந்த தாய்க்கும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தோ-குவாடலூப்பிய தந்தைக்கும் மகனாகப் பிறந்தார்.

  

Sunday, May 31, 2026

டெல்லியில் எதிர் பார்த்தது நடக்கவில்லை தமிழக முதல்வரைச் சுற்றி வலம் வரும் சர்ச்சைகள்


 

குதிரை  வேகத்தில் நடந்த குதிரை  பேர அரசியலால் தமிழகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் வெறும் கையுடன் திரும்பினார்கள்.

அதிமுக பிரமுகர்கள்  தவெகவில் சேர்வதால் தங்களது வாய்ப்பு பறிபோகும் என  அச்சமடைந்த தொண்டர்கள்.

 தனி விமானத்தில் டெல்லிக்குச் சென்ற தமிழக முதல்வரின் டெல்லிப்பயணம் சர்ச்சைக்குளானது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. என்ன செய்யப்போகிறார் திருமாவளவன்? 

 

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழக அரசியலின் சூடு ஆறவில்லை. மிகுந்த இழுபரியும் மத்தியுல் முதல்வர் ஆசனத்தில் விஜய் அமர்ந்தார். அதன்  பின்னர்   அரசியல் நிகழ்ச்சி நிரல் முடிந்து விடும் என எதிர் பார்த்தவர்கள் ஏமாற்ற மடைந்தனர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையிலும், மாநில அரசியல் களம் இன்னும் அமைதியடையவில்லை. அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி அரசியல் நகர்வுகளால் தமிழக அரசியல் சூழல் தொடர்ந்து உச்சக்கட்ட பரபரப்பிலேயே நீடித்து வருகிறது. ஒருபுறம் ஆளுங்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான உட்கட்சிப் பூசல்களும், மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பிளவுகளும் தேர்தல் கடந்த பின்னரும் தமிழக அரசியலைத் தகித்துக்கொண்டிருக்கச் செய்துள்ளன. 

அதிமுக இரண்டாகப் பிளவு பட்டது. மீண்டும் அவர்கள் இணைந்தது. சிவி சண்முகம் தனி வழிபே போனது. தமிழக முதல்வரின் டெல்லிப்பயணம். திட்டமிட்டபடி சோனியாவையும், ராகுல் காந்தியையும் விஜய் சந்திக்காதது, முதல்வர் விஜயைச் சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்காதது போன்ற சம்பவங்களால் தமிழக அரசியல் பரபரப்பாக உள்ளது.

  முதலமைச்சர் விஜய் யின்  டெல்லிப்பயணத்தால்  தமிழகத்துக்கு மதிய அரசு ஆதரவளிக்கும், நிதி கிடைக்கும் என எதிர் பார்த்திருந்தவர்கள் ஏமாற்ற மடைந்துளனர். டெல்லியில் முதலமைச்சர் விஜய்யின் பயணத்தின்போது திட்டமிடப்பட்ட பல சந்திப்புகள் இரத்தாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின், முதல்முறையாக பிரதமர் மோடியை விஜய் சந்தித்து பேசியுள்ளார். 10 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் மீனவர்கள் கைது,  தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தமிழ்நாடு கேரளா, புதுச்சேரி இணை ஆற்றுப்படுகை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து  முதல்வர விஜய் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நீட் தேர்வு, மும்மொழிக்கொள்கை, கச்சதீவு விககாரம் அப்ற்றியும் விஜய் பேசுவார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பிரதமரும் , தமிழகமுதல்வரும் வெறும் 10 நிமிடங்கள் மட்டும் பேசியதாகச் செய்தி  வ்ந்துள்ளது.பிரதமரைச் சந்திக்கும் தமிழக முதலமைச்சர்கள் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை விலாவரியாக விவரித்து கூறுவதால் சுமார் 30 நிமிடங்கள் முதல் சுமார் 1 மணி நேரம் வரை சந்திப்பு நடைபெறும். ஆனால், மேகதாது அணை விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிறுவனங்களை அமைப்பதில் முக்கியத்துவம் அளிப்பது குறித்து பல பக்கங்களை கொண்ட கோரிக்கை மனுவை மட்டும் விஜய் கொடுத்தார். 

கோரிக்கை மனு குறித்து விலாவரியாக பிரதமரிடம் எடுத்துக்கூறுவதற்கு இந்த 10 நிமிடங்கள் போதுமா? என்ற கேள்வியும் பல தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பொதுவாக டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர்கள் தமிழ்நாடு அரசின் இல்லத்தில் பத்திரிகையாளர்களை நேரில் சந்திப்பது வழக்கம். ஆனால், அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பதையும் தவிர்த்தார்.   மத்திய உள்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் விஜய்  சந்தித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் சந்திப்பார் எனக் கூறப்பட்டது.  ஆனால், அவர் அமித்ஷாவுடனான சந்திப்பு நடைபெறவில்லை. அமித்ஷாவை சந்திப்பதற்கு விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், அலுவலக பணிகள் இருப்பதாக காரணம் கூறி அமித்ஷாவை சந்திப்பதற்கு விஜய்க்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், அமித்ஷா கேரளாவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விடி சதீஷனை   சந்தித்தார்.

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை  முதல்வர் விஜய் திறந்து வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் சிலையை திறந்து வைக்காமல் டனடியாகச்  சென்னைக்குத்  திரும்புனார்.

  தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாமல் இருந்த தவெக-விற்கு காங்கிரஸ் கூட்டணி அமைத்து பக்கபலமாக இருந்தது. இதனால், டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய் டெல்லியில் ராகுல் காந்தி, சோனியாகாந்தியை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், சோனியா மற்றும் ராகுல்காந்தியையும் அவர் சந்திக்கவில்லை. இதற்கான காரணம்   வெளியாகவில்லை. விஜய்யை வரவேற்க காங்கிரஸ் அலுவலகத்தில் பதாகைகள் வைக்கப்பட்டன.

விஜய்யின் டெல்லி பயணம்   விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரைகாலமும் தலைமைச் செயலாளர், நிதி அமைச்சர், ஆலோச்கர்கள், முக்கைய துறை சார்ந்த நிபுணர்கள் தமிழகத்தில் இருந்து  முதல்வருடன் டில்லிக்குச் சென்றார்கள்.

விஜய்யுடன் சென்றவர்களின் பட்டியலை உற்று நோக்கினால் அதில் தமிழக அரசியலுக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறார்கள் விமர்சகர்கள். ஆந்திர முன்னாள் முதல்வரின் உறவினர்கள், தொழிலதிபர்கள் ஏன் விஜய்யுடன் சென்றார்கள் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.  சிகை அலங்கார நிபுணரும் முதல்வருடன் டெல்லிக்குச் சென்றார்.

விஜய் முதல்வராவதற்கு திருமாவளவன் உதவியதால் விசிகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.  திருமாவளவனின் செயற்பாட்டை ஆதரிக்காதவர்கள்  குமுறிக்கொண்டிருக்கிறார்கள். திருமாவளவனின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பனையூர் பாபு கட்சியில்ல் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் விசிக அதிர்ச்சியடைந்துள்ளது.  விசிகவின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட பனையூர் பாபு, ஆலூர் ஷாநவாஸ், சிந்தனைச் செல்வன் , எஸ்.எஸ். பாலாஜி ஆகிய 4 முன்னாள் எம்.எல்..க்களும் விரைவில் தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ளப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த தேர்தல் சமயத்தில் தொகுதிப் பங்கீடு மற்றும் கட்சிப் பொறுப்புகள் ரீதியாக ஏற்பட்ட சில அதிருப்திகளே இவர்களின் இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. விசிகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட  இவர்கள்  திமுகவிற்கு மாறினால், அது விசிக தலைமைக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆளூர் ஷாநவாஸ் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் வரை தொடர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆளூர் ஷாநாவாஸுக்கு தவெக மூலம் ராஜ்யசபா சீட் பெற்றுத் தந்து சமாதானம் செய்யும் முயற்சியில் திருமாவளவன் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் வழங்கப்படாதது விசிகவுக்குள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. கட்சியில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

  அவருக்கு விசிக முதன்மை செயலாளர் பொறுப்பு வழங்கி திருமாவளவன் சமாதானம் செய்ய முயன்றதாக கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் விசிக பங்கேற்றதிலும் ஆளூர் ஷாநவாஸ் வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்.  இந்த நிலையில், "ஆளூர் ஷாநவாஸ் திமுகவில் இணையப் போகிறார்" என்ற தகவல்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதற்கு காரணமாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான முக ஸ்டாலின் மற்றும் ஆளூர் ஷாநவாஸ் இடையே நடந்ததாக கூறப்படும் ரகசிய சந்திப்பு பேசப்படுகிறது.

ஆளூர் ஷாநவாஸ் பெயரில் சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அவை அவருடைய அதிகாரப்பூர்வ பதிவுகள் அல்ல என்று விசிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆளூர் ஷாநவாஸ் நேரடியாக எந்த மறுப்பும் தெரிவிக்காததால் சந்தேகங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. 

சட்டமன்ற தேர்தல் முடிந்து, அதிமுக 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், அதிமுக இரண்டாக உடைந்தது. இபிஎஸ் க்கு எதிராக  எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம்   கோஷ்டி  விஸ்வரூபமெடுத்த நிலையில், அந்த பிரச்னைகள் முடிந்து, இரு அணி எம்எல்ஏ-க்களும் ஒன்றாக சபாநாயகரை சந்தித்து, ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுக்களை வாபஸ் பெற்றனர்.

தவெகவில் இணைந்தா அமைச்சுப் பதவி பெறலாம் என எதிர்பார்த்த சிலர் எடப்பாடிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள். விஜய்யின் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது  அவர்களுக்கு இடம் கொடுக்கபப்டாமையிலான தந்து உறுப்பினர் பதவியைக் காப்பாற்றுவதற்காக எடப்பாடியுடம் சரணடைந்தனர். 

சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏ-க்களான ஜெயக்குமார், சத்தியபாமா, மரகதம் குமரவேல் , இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை இராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.  அதிமுகவின்  முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  தவெக-வில் இணைந்தார்.  அதிமுக-வினர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக-விற்கு புதிய போட்டியாக உருவாகியிருக்கும் தவெக-வில் இணைவதால் தங்களது அரசியல் எதிர்காலத்தை காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற போக்கிலே அவர்கள் இணைந்து வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக-வினர் தொடர்ந்து தவெக-வில் இணைவது இரண்டாம் கட்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இதன்மூலம் கட்சியில் தங்களது ஆதரவாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பொறுப்புகளை பெற முயற்சிப்பார்கள் என்றும், அடுத்தடுத்து நடக்கும் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு பெறுவார்கள் என்றும், இதனால் கட்சி தொங்கியது முதலே கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு உரிய வாய்ப்பு மறுக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருச்சி கிழக்கு தவிர அம்பாசமுத்திரம், பெருந்துறை, , மற்றும் மதுராந்தகத்தில் தவெக சார்பில் ஏற்கனவே பாேட்டியிட்டவர்களுக்கு விஜய் வாய்ப்பு வழங்குவாரா? அல்லது தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை உதறித் தள்ளிவிட்டு வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்குவாரா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. ராஜ்யசபா பதவி தவெக-விற்கு கிடைத்திருக்கும் சூழலில், ராஜ்யசபா உறுப்பினராக விஜய் மாநிலங்களவைக்கு யாரை அனுப்பி வைக்கப்போகிறார்? என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.  

விஜய்க்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகத்திற்காக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரமும், முன்னுரிமையும் எப்போதும் அளிக்க வேண்டும் என்றும், அதை கட்சித் தலைமை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தவெக வலியுறுத்தி வருகிறது. இதுதவிர விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் திமுக மற்றும் அதிமுக-விற்கு மாற்றாகவே தவெக-விற்கு வாக்களித்தோம். ஆனால், அந்த கட்சியில் இருப்பவர்கள் இங்கே இணைந்தால் எப்படி மாற்றம் வரும்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.