Wednesday, June 24, 2026

ரொனால்டோ சாதனை அசத்தியது போத்துகல்


   உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் போத்துகல் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. 

முன்னதாக, காங்கோ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ரொனால்டோ எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாததால் தமக்கான கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இவருக்கு நிகரான வீரராக கருதப்படும் மெஸ்ஸி, ஆர்ஜென்ரீனா விளையாடிய முதல் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளிலும் கோல் அடித்தது ரொனால்டோ மீதான விமர்சனங்களை மேலும் அதிகரித்தது. இருப்பினும், அறிமுக அணியான உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்து ரொனால்டோ தனது விமர்சகர்களின் வாயை அடைத்ததோடு புதிய வரலாற்றையும் படைத்தார்.

உஸ்பெகிஸ்தான் , ஆஸ்திரியா ஆகிய நாடுகளுகு எதிராக ரொனால்டோவும், மெஸ்ஸியும்  அடித்த கோல்களின் மூலம், இருவரும் மற்றுமொரு சாதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதாவது, ஒரு வீரரின் முதல் மற்றும் சமீபத்திய உலகக்  கிண்ண கோல்களுக்கு இடையிலான மிக நீண்ட கால இடைவெளியை (சரியாக 20 ஆண்டுகள் மற்றும் 11 நாட்கள்) இவர்கள் எட்டியுள்ளனர். இவ்விரு வீரர்களும் தங்களது முதல் உலகக் கிண்ணத் தொடர் கோலை கடந்த 2006 ஆம் ஆண்டு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை போர்ச்சுகல் அணி தனது பிரிவில் முதலிடம் பிடித்தால், கால் இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் ஆர்ஜென்ரீனா அணியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அதே சமயம், போத்துகல் இரண்டாம் இடத்தைப் பிடித்தால், இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் நேரடியாக மோதும் வாய்ப்பு உருவாகும்.

காங்கோ அணிக்கு எதிரான ஏமாற்றமளிக்கும் தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு, உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக ரொனால்டோ ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 6-வது நிமிடத்திலேயே ஜோவோ கான்செலோவின் லோ கிராஸ் (low cross) பந்தை கோலாக மாற்றி ரொனால்டோ கணக்கைத் தொடங்கினார். அதன் பின்னர், புருனோ பெர்னாண்டஸ் கொடுத்த த்ரூ-பாஸைப் பெற்று, உஸ்பெகிஸ்தான் கோல்கீப்பர் அப்துவோஹித் நேமடோவை வீழ்த்தி முதல் பாதியிலேயே தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.

இந்த ஆட்டத்தின் 90 நிமிடங்களில், கிறிஸ்டியானோ ரொனால்டோ 34 முறை பந்தைத் தொட்டு விளையாடினார். இதில் எதிரணியின் பாக்ஸ் பகுதிக்குள் 10 முறை பந்தைக் கையாண்டதுடன், இலக்கை நோக்கி 7 முறை பந்தை அடித்து, அதில் 5 முறை இலக்கைத் துல்லியமாக எட்டினார். அவரது இந்த சிறப்பான பங்களிப்பிற்காக அவர் ஆட்டநாயகனாகத் (Man of the Match) தேர்வு செய்யப்பட்டார்.

 2026 உலகக் கோப்பை தொடரில் இதுவரை ஒரு போட்டியில் இலக்கை நோக்கி அதிகமுறை (5 முறை) பந்தை அடித்த வீரர்களின் பட்டியலில் என்னர் வலென்சியா (vs குராசோ) ,ஜொனாதன் டேவிட்    [vs கட்டார்) ஆகியோருடன் ரொனால்டோவும் இணைந்துள்ளார். இந்த இரண்டு கோல்களின் மூலம், உலகக் கோப்பையில் போர்ச்சுகல் அணிக்காக அதிக கோல்களை அடித்த யூசிபியோவின் (Eusebio) சாதனையை ரொனால்டோ முறியடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை அரங்கில் இவரது கோல்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்ததுடன், அவரது தொழில்முறை வாழ்க்கையின் மொத்த கோல்களின் எண்ணிக்கை 975 ஆக அதிகரித்துள்ளது.

 

கலக்கியது கானா தடுமாறியது இங்கிலாந்து


  உலகக்  கிண்ண  குரூப் L போட்டியில்  கானாவை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து  0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. 

  நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி மிகுந்த உற்சாகத்தில் இருந்தது. ஆனால், கானாவுக்கு எதிரான லீக் ஆட்டம் அவர்களுக்கு எளிதாக அமையவில்லை. உலகக் கிண்ணத்தின்   கடினமான யதார்த்தத்தை இங்கிலாந்து அணிக்கு உணர்த்திய ஒரு கடுமையான சோதனையாகவே இந்தப் போட்டி அமைந்தது. முந்தைய ஆட்டத்தில் குரோஷியா அணி இங்கிலாந்தின் மீது அழுத்தத்தை செலுத்த தீவிரமாக முயன்றது. இது இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக அமைந்து எளிதாக கோல் அடிக்க வழிவகுத்தது. ஆனால் கானா அணியோ முற்றிலும் மாறுபட்ட வியூகத்தைக் கையாண்டது. அவர்கள் பின்வாங்கி தற்காப்பதில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தினர். பயிற்சியாளர் தாமஸ் துஷெலின் இங்கிலாந்து அணி நீண்ட நேரம் பந்தை தன் வசம் வைத்திருக்க கானா அனுமதித்தாலும், கோல் பகுதிக்குள் அவர்களை ஊடுருவ விடாமல் மிகச் சிறப்பாக தடுத்தது  இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றி கோனாவின் கோல் அரணை உடைக்கும் ஆட்டம் இங்கிலாந்து வீரர்களிடம் தென்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்களால் கோல் அடிக்க முடியல்லை. 

  உலகத் தரவரிசையில் 64-வது இடத்தில் உள்ள கானா அணி, முன்னணி அணியான குரோஷியாவை விட இங்கிலாந்திற்கு மிரள வைக்கும் சவாலை அளித்தது. இந்த வலுவான தற்காப்பு வியூகத்தை முறியடிப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் இங்கிலாந்திடம் இல்லாததே இந்த ஏமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என   விமர்சகர்கள் கருதுகின்றனர். 

இரண்டு போட்டிகளில் இருந்து இங்கிலாந்தும் கானாவும் தற்போது தலா நான்கு புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இங்கிலாந்து 'L' பிரிவில் முன்னிலை வகிக்கிறது. 

 

200 போட்டிகளில் விளையாடி வரலாறு படைத்த மோட்ரிச்


 

கனடாவின் டொராண்டோவில் உள்ள டொராண்டோ ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2026   உலகக் கிண்ண  'எல்' பிரிவு போட்டியில்,   பனாமாவை எதிர்த்து விளையாடிய குரோஷியா பனாமாவை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.  குரோஷிய நடுக்கள வீரர் லூகா மோட்ரிச், 200  ஆவது சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய வரலாற்றில் நான்காவது ஆண்   வீரர் ஆனார்.  

மாற்று வீரரான ஆன்டே புடிமிர் 54-வது நிமிடத்தில் ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார். இதன் மூலம், குரூப் L-ல் குரோஷியா இந்தப் போட்டியில் தனது முதல் மூன்று புள்ளிகளைப் பெற்றதுடன், இரண்டு ஆட்டங்களுக்குப் பிறகும் புள்ளி எதுவும் பெறாத பனாமாவையும் போட்டியிலிருந்து வெளியேற்றியது.

2006 ஆம் ஆண்டு ஜேர்மனியில் தனது உலகக்  கிண்ணப் போட்டியில் அறிமுகமான      மோட்ரிச் [40] , 200 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய   கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி ,குவைத்தின் பாதர் அல்-முத்தாவா ஆகியோருடன் இணைகிறார்.  

57-வது நிமிடத்தில், பனாமாவின் கார்னர் கிக்கிலிருந்து ஒரு எதிர் தாக்குதலைத் தொடங்கி, மரியோ பாசலிச்சை கோலை நோக்கி அனுப்பியதன் மூலம், குரோஷியாவின் முன்னிலையை இரட்டிப்பாக்க மோட்ரிச் உதவினார். ஆனால், அந்த நடுக்கள வீரரின் ஷாட் தடுக்கப்பட்டது. 43,036 ரசிகர்களின் முன்னிலையில், 81-வது நிமிடத்தில் மோட்ரிச் மாற்று வீரராக வெளியேற்றப்பட்டார். அவருக்கு எழுந்து நின்று கரவொலி எழுப்பப்பட்டது.

குரோஷியாவின் இந்த வெற்றியானது  சுமார் நாற்பது லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டின் மிகச் சிறந்த தொடர் வெற்றிகளில் ஒன்றைத் தொடரச் செய்கிறது. 1998-ல் தனது முதல் உலகக் கிண்ணப்  போட்டிக்குப் பிறகு, குரோஷியா 2018-ல் ஒருமுறை இரண்டாம் இடத்தையும், 1998 ,2022 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

 

 

Monday, June 22, 2026

  உலகக் கிண்ண  பார்வையாளர்களின் எண்ணிக்கை  23 இலட்சத்தைத் தாண்டியது

 

 

 

பீபா வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2026 உலகக் கோப்பை போட்டி பார்வையாளர் வருகையில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகிறது.

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில்  நடைபெறும்  இப்போட்டியின் முதல் 36 ஆட்டங்கள் மொத்தம் 23,07,947 பார்வையாளர்களை  ஈர்த்ததாக  உதைபந்தின் உலகளாவிய நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போது காலி இருக்கைகள் காணப்பட்டபோதிலும், இது ஒரு போட்டிக்கு சராசரியாக 64,100 பார்வையாளர்கள் வருகை தந்ததைக் குறிக்கிறது. மேலும், மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 99.54 சதவீதம் நிரம்பியிருந்தது.

அதிக விலையுள்ள பயணச்சீட்டு விலைகள் , சில பங்கேற்கும் நாடுகளின் ஆதரவாளர்கள் எதிர்கொள்ளும் பயணச் சிரமங்கள் குறித்த கவலைகள் இருந்தபோதிலும், இந்த வலுவான பார்வையாளர் வருகை ஏற்பட்டுள்ளது.

 உதைப்ந்தாட்டத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட மெக்சிகோவில் அதிக பார்வையாளர் வருகை எதிர்பார்க்கப்பட்டாலும், அமெரிக்காவிலும் , கனடாவிலும் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அங்கு, கால்பந்து ஏற்கனவே நன்கு நிலைபெற்ற பல குழு விளையாட்டுகளுடன் கவனத்திற்காகப் போட்டியிடுகிறது

  

 

 

மாற்றப்பட்டது தமிழக சட்டமன்றத்தின் மரபு நிறவேற்றப்பட்டது ஆளுநரின் ஆசை


 

தவெகவில் சேர பனையூரில் தவம் இருக்கும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்

தமிழக அரசின் அறிக்கையை முழுமையாகப் படித்த ஆளுநர்

கறுத்தப் பதாகைகளுடன்  சட்டசபையில் முதல்வருக்கு முன்னால்   திமுக உறுப்பினர்கள்

 பிணக்கு அரசியலைக் கைவிட்டு இணக்க அரசியல் நடத்தத் தயாராகும்  தவெக

 

தவெக அரசின் முதல் கூட்டத் தொடர்  நடைபெறும் திகதி  அறிவிக்கப்பட்ட அன்றே அரசியலில் பரபரப்பு ஆரம்பமானது. கடந்த காலங்களில் திமுக அரசும் அன்றைய ஆளுநர்  ஆர்.என். ரவி செய்த அரசியல் அலப்பறைகளும் கண் முன்னால் வந்து போயின. தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்னர் தேசிய கீதம் பாடப்பா வேண்டும் என்ற ரவியின் கோரிக்கையை திமுக நிராகரித்தது. அதன் காரணமாக  தொடர்ந்து மூன்று வருடங்களாக அன்றைய ஆளுநர் சட்ட சபையை விட்டு  வெளியேறினார். ஆளுநரின் உரை இல்லாமலேயே கூட்டத்தொடர் ஆரம்பமானது.

தமிழ்த்தாய் வாழ்த்து புறம் தள்ளப்பட்டால் எதிர்ப்பதற்கு திமுக தயாராக  இருந்தது. இந்தச் சிக்கலை தவெக எப்படிச் சமாளிக்கப்போகிறது என்ற கேள்வி ரசியல் அரங்கில் எழுந்தது.

 பிரதமர் மோடியைச் சந்தித்த போது தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட  வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் முன் வைத்தார். மோடியிடம் கெஞ்சத்தாத் தேவை இல்லை. தமிழ்த்தால் வாழ்த்து முதலில்  பாடுவது தமிழக சட்ட சபையின் மரபு என்றவிமர்சனம் முன் வைக்கப்பட்டது.

பெரும்  எதிர்பார்ப்புடன் தமிழக சட்ட சபைக் கூட்டம் ஆரம்பமானது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தவெகவின் மீது மதிப்பு உயர்ந்தது.  ஆனால், அது நீடிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  சபை ஆரம்பமாகும் போதும்  இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என அன்றைய ஆளுநர் ரவியின் கோரிக்கி அப்போது நிராகரிக்கப்பட்டது. மரபை மாற்றக்கூடாது.  ஒரு நிகழ்ச்சியில் இரன்டு முறை தேசிய கீதம் பாடுவது  ஏற்புடையதல்ல என திமுக தெரிவித்தது. தவெக மரபை உடைத்து ஆளுநரின் விருப்பத்துக்கு வழி விட்டது.

   தமிழ்நாடு சட்டசபையில்   தவெக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகரின் உரையுடன் தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழக அரசு எழுதிக்கொடுத்த அறிக்கையான  ஆளுநர் உரை  முழுமையாக ஆளுநரால் படிக்கப்பட்டது.

கடந்த திமுக ஆட்சியில் ஆளுநராக இருந்தவர் ஆர்.என். ரவி. அவர் பதவியில் இருந்தவரை திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து முட்டல் மோதல் இருந்து கொண்டே வந்தது.  நீதிமன்றம் வரை சென்று சட்டசபையில் உரிமையை நிலைநாட்டியது திமுக .

திமுகவின் காலத்தில்  ஆளுநர் உரை சட்டசபையில் முழமையாக வாசிக்கப்படவே இல்லை. அப்படியே இருந்தாலும் சுருக்கமாக பேசி விட்டு ஆளுநர் போனதே வரலாறாக இருந்தது. தொடர்ந்து ஆளுநர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்வதும் வழக்கமாக இருந்தது. முழுமையாக ஆளுநர் உரை           ஒரு முறை கூட படிக்கப்படவில்லை. அப்படியே படிக்கப்பட்டாலும் கூட சில பகுதிகளை ஆளுநர் தவிர்த்த சம்பவமும் நடந்தது.

பெரியார்,அம்பேத்கர், அண்ணாதுரை போன்ற வச்னங்கலை அன்றைய ஆளுநர் தவிர்த்தார்.  இன்ரு தவெக கொடுத்த பெரியா,அம்பேத்கர், அண்ணா ஆகிய பெயர்களை ஆளுநர் படித்தார்.

'திராவிட மாடல்', 'சமூக நீதி' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்தார்; தமக்கு விருப்பமான வரிகளைத் தன்னிச்சையாகச் சேர்த்தார். இதனால், கோபமடைந்த முதலமைச்சர் மு..ஸ்டாலின், ஆளுநர் முன்னிலையிலேயே "அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற வேண்டும்" எனத் தீர்மானம் கொண்டு வர, ஆளுநர் ரவி பாதியிலேயே அவையை விட்டு விறுவிறுவென்று வெளியேறி உள்ளார். அந்த சம்பவங்கள் ஒரு பெரும் அரசியல் போர்க்களமாகவே காட்சியளித்தது

 தமிழ்நாட்டின் இடைக்கால ஆளுநராக உள்ள ஆர்லேகருக்கும் இது முதல் உரை. இந்த உரை எப்படி இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்லேகர் வணக்கம் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். அவரது உரை வழக்கத்திற்கு மாறாக முழுமையாக படிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்லேகர் உரையில் இடம் பெற்றிருந்த அனைத்தையும் ஒரு வரி விடாமல் படித்தார்.

உரையில் தமிழ்நாடு அரசின் லட்சியம், அதன் கொள்கைகள், அதன் திட்டங்கள் உள்ளிட்டவை கூறப்பட்டிருந்தது. அதை முழுமையாக ஆளுநர் வாசித்தார். தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழிக் கொள்கை தொடரும் என்பதையும் ஆளுநர்   வாசித்தார்.  காவிரிப் பிரச்சினை குறித்தும் ஆளுநர் உரரையில்  இடம் பெற்றிருந்தது.

முதல்வர் ஜோசப் விஜய்யைப் புகழ்ந்தும் உரையில் இடம் பெற்றிருந்தது. அதையும் ஆளுநர் முழுமையாக வாசித்தார். அண்ணா, பெரியார் உள்ளிட்டோர் குறித்தும் உரையில் இடம் பெற்றது. இப்படி ஆளுநர் உரையில் இடம் பெற்ற அனைத்தையும் ஆளுநர் ஆர்லேகர் வாசித்து முடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆளுநர் உரை சட்டசபையில் முழுமையாக வாசித்து முடிக்கப்பட்டது வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஆளூநர் வெளியேறும் போது முதலில் எதிக்கட்சித்தலைவர் உதயநிதியைப் பார்த்து இரு கரம் கூப்பிக் கும்பிட்டார். உதயநிதியும் பதில்  வணக்கம் தெரிவித்தார். எதிர்க் கட்சி வரிசையில் இருந்தவர்களை கும்பிட்டபின்னர் ஆளும் கட்சி  வரிசையைப் பார்த்து வணக்கம் சொன்னார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது ஒரு 'சரித்திர நிகழ்வு'. இது மக்களாட்சியின் மாண்பை நிலைநாட்டியுள்ளது; மனதுக்கு நிறைவாக இருக்கிறது" என உருகியிருக்கிறார் ஆளுநர். ஆச்சரியமான மாற்றம் அன்று தமிழக ஆளுநரை எதிர்த்து 'கெத்து' காட்டிய அதே சட்டமன்றக் கூடம், இன்று எந்தவித எதிர்ப்பும் இன்றி இணக்கமாகக் காட்சியளிக்கிறது. மத்திய அரசை விமர்சிக்கும் உரையை ஆளுநரே வாசிப்பதும், அதற்கு ஆளுநரே "மன நிறைவு" எனப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதும் தமிழக அரசியலில் விசித்திரத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

 இந்த 'புதிய உதயம்' தற்காலிகமானதா அல்லது தேர்தல் கணக்குகளுக்கான அஸ்திவாரமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இடைத்தேர்தல் முடிந்தால் தான் உண்மையான நிலைமை தெரியவரும். ஏனெனில் மத்திய அரசை எந்த வகையிலும் விஜய் விமர்சிப்பதே இல்லை. தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின்னரும் சரி விஜய் அப்படியே தொடர்கிறார். என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.  

ரமணி

21/6/26