Friday, February 14, 2025

துடுப்பாட்டத்தில் ஸீரோ, கப்டன்ஷியில் ஹீரோ

 

 இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம், கப்டனாக சூர்யகுமார் யாதவ் மீண்டும் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளார்.  களத்தில் அவர் எடுத்த அனைத்து முடிவுகளும் எதிர்பார்த்த முடிவுகளை கொடுத்தன. அதேநேரம், துடுப்பாட்டத்தில்  இந்த தொடர், சூர்யகுமார் யாதவிற்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது. 5 போட்டிகளில் களமிறங்கிய அவர் முறையே, 0,12,14,0,2 என மிக செயற்பாட்டை  வெளிப்படுத்தினார்.   5 போட்டிகளில் சேர்த்து 28  ஓட்டங்கள் மட்டுமே சேர்த்துள்ளார். கடந்த 10 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே விளாசியுள்ளார். இதனால், ஒரு பேட்ஸ்மேன் ஆக சூர்யகுமார் யாதவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

பேட்டிங்கில் சொதப்பினாலும், கப்டன்ஷியில் அசத்தியதால் சூர்யகுமார் யாதவ் மீதான விமர்சனங்கள் குறைவாக உள்ளன. இந்நிலையில் தான், இந்தியா,இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.. இதில் இந்திய அணியை கப்டன் ரோகித் சர்மா வழிநடத்த உள்ளார். கடந்த சில காலங்களாகவே மோசமான ஃபார்மில் உள்ள ரோகித், இந்த தொடர் மூலம் கம்பேக் தருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உள்ளூரில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், அவுஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ,அண்மையில் களமிறங்கிய ரஞ்சிபோட்டியில் கூட ரோகித் சர்மா பெரிதாக சோபிக்கவில்லை. பேட்ஸ்மேன் ஆக மட்டுமின்றி, கப்டனாக கூட அணியை திறம்பட கையாளவில்லை என விமர்சனங்கள் குவிகின்றன.

நியூசிலாந்து ,அவுஸ்திரேலிய அணிகளுகு  எதிரான இந்தியாவின் தோல்விகளுக்கு, ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்ம் மிக முக்கிய காரணமாகும். அவரது துடுப்பாட்டத்தை  இந்திய அணி எவ்வளவு சார்ந்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது.

ச‌ம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அமைந்துள்ளது. இதன் மூலம் வீரராக மட்டுமின்றி கேப்டனாகவும் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா இருக்கிறார். பேட்டிங்கில் சொதப்பினாலும், சூர்யகுமார் யாதவை போன்று கப்டன்ஷியில்  அணிக்கு பங்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  ஒருவேளை தவறினால், இந்திய அணிக்காக ரோகித் சர்மா விளையாடும், கடைசி ஐசிசி தொடராகவும் சம்பியன்ஸ் ட்ராபி இருக்கலாம்.     

6000 ஓட்டங்கள் 600 விக்கெட்கள் ரவீந்திர ஜடேஜா சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடந்த  முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 முதலில் விளையாடிய இங்கிலாந்து 47.4 ஓவர்களில்  சகல விக்கெற்களையும் இழந்து 248  ஓட்டங்கள் எடுத்தது. க‌ப்டன் ஜோஸ் பட்லர் 52, ஜேக்கப் பேத்தல் 51  ஓட்டங்கள் எடுத்தனர்.

 இந்தியாவுக்கு   ரவீந்திர ஜடேஜா ,அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா  ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

 249 ஓட்டங்களைத் துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் 2, ஜெய்ஸ்வால் 15 ஓட்டங்களில் அ வெளியேறினர்.  சுப்மன் கில் 87, ஸ்ரேயாஸ் ஐயர் 59, அக்சர் படேல் 52 ஓட்டங்கள் எடுத்ததால்  38.4 ஓவர்களில் 6விக்கெற்களை இழந்து 251 ஓட்டங்கள் எடுத்து   எளிதாக வெற்றி பெற்றது.

  9 ஓவர்களில்  ஒரு மெய்டன் உட்பட வெறும் 26 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா 12* ஓட்டங்களும் அடித்து  அசத்தினார். இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மொத்தம் 42* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அ  இந்தியா – இங்கிலாந்து மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை உடைத்துள்ள ஜடேஜா புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

  ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.  ஆண்ட்ரூ பிளின்டாப் 37, ஹர்பஜன் சிங் 36, ஜவஹல் ஸ்ரீநாத்/ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 35 விக்கெட்டுகள் எடுத்தனர்.

  3 விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் ஜடேஜா மொத்தம் 600* விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.  அவர்   6000 ஓட்டங்கள் குவித்துள்ளார்.   சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ஓட்டங்கள் , 600 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய ஸ்பின்னர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக கபில் தேவுக்கு பின் அந்த சாதனையை படைக்கும் 2வது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

  1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது.  இந்த வெற்றிக்கு 87 ஓட்டங்கள் எடுத்த முக்கிய பங்காற்றிய கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

2023 ஒருநாள் உலகக் கிண்ண றுதிப் போட்டிக்குப் பிறகு இந்தியா சொந்த மண்ணில் தங்கள் முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது

கடந்த ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. 

சிலம்பு

9/2/25

  

Tuesday, February 11, 2025

இந்தியர்களை விலங்கிட்டு அனுப்பியது அமெரிக்கா


 அமெரிக்காவில் சட்ட விரோதமாகத் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தப் போவதாக ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் பரப்புரை செய்தார். ட்ரம்ப் பதவி ஏற்ரு ஒரு மாதம் முடிவதர்கிடையில் தேர்தல் பிரராச வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கி விட்டார். குவாத்தமாலா, ஈக்வடார்  கொலம்பியா நாட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

 அமெரிக்காவில் தங்கி இருக்கும் ஏழு  இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை   வெளியேற்ற  அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், முதல் தொகுப்பு நபர்கள்  இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சான் அன்டோனியோ, டெக்ஸாஸ் மாகணங்களிலிருந்து  புறப்பட்ட அமெரிக்க இராணுவ  விமானங்கள்பஞ்சாப் அமிர்தசரஸில் தரை இறங்கின.

அமெரிகாவில் வசதியாக வாழலாம் எனச் சென்றவர்கள் விலங்குகள்  போல் அனுப்பபட்டுள்ளனர்.   கைதிகளைப் போல குடியேறிகள் கைவிலங்கிட்டு, கால்களிலும் விலங்கிடப்பட்டு, முகத்தை மறைக்கும் வகையில் முக கவசம் அணிவிக்கப்பட்டு, கொண்டுவரப்பட்டதாக படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால்  அந்தப் படங்களில் இருப்பவர்கள் இந்தியர் அல்ல என சில முன்னணிப் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டன.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட சில ஊடகங்களும் அந்த புகைப்படங்களில் இருப்பது இந்தியர்கள் அல்ல என்பதை உறுதி செய்துள்ளன. கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் முறையைப் பயன்படுத்தி புகைப்படங்கள் முதலில் எங்கே வெளியிடப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம்.

104 இந்தியர்கள் இன்று நாடுகடத்தப்பட்டதாக ஊடகங்களில் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. இந்தியர்கள் கண்ணியமாக நடத்தப்பட்டார்களா என்பது குறித்தும் இந்திய வெளியுறவுத்துறையும், அமெரிக்க அரசும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு மிக மோசமாக அமெரிக்கா நடத்தியுள்ளது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை அந்த  நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை தலைவரே வெளியிட்டுள்ளார். அத்தோடு இந்தியர்களை Illegal Aliens என்றும் கேவலமாக சித்தரித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் மைக்கேல் டபிள்யூ பாங்க்ஸ் என்ற அதிகாரி இதுகுறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பின்னணி இசை சேர்த்து அவர் போட்டுள்ள அந்த வீடியோவில் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களது கால்களிலும், கைகளிலும் விலங்குகள் போடப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அவர்களை ஏதோ கொத்தடிமை போல அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றுகின்றனர். இதுதொடர்பாக மைக்கேல் போட்டுள்ள எக்ஸ் பதிவில், சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்திருக்கிறோம். இதுவரை  அமெரிக்க  ராணுவம் மேற்கொண்டதிலேயே மிக தூரமான பயணம் இதுதான்.  குடியேற்றச் சட்டங்களை மதிக்காத யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி. அவர்கள் யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக குடியேறினால் வெளியேற்றப்படுவார்கள் என்று திமிராக கூறியுள்ளார் மைக்கேல் பாங்க்ஸ்.

இந்த நிலையில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் மைக்கேல் டபிள்யூ பாங்க்ஸ் என்ற அதிகாரி இதுகுறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பின்னணி இசை சேர்த்து அவர் போட்டுள்ள அந்த வீடியோவில் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களது கால்களிலும், கைகளிலும் விலங்குகள் போடப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அவர்களை ஏதோ கொத்தடிமை போல அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றுகின்றனர். இதுதொடர்பாக மைக்கேல் போட்டுள்ள எக்ஸ் பதிவில், சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்திருக்கிறோம். இதுவரை  அமெரிக்க  ராணுவம் மேற்கொண்டதிலேயே மிக தூரமான பயணம் இதுதான்.  குடியேற்றச் சட்டங்களை மதிக்காத யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி. அவர்கள் யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக குடியேறினால் வெளியேற்றப்படுவார்கள் என்று திமிராக கூறியுள்ளார் மைக்கேல் பாங்க்ஸ்.

ட்ரம்ப் அதிபராக வந்தது முதல் பல்வேறு அதிரடிகளில் ஈடுபட்டுள்ளார். சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டவரை தற்போது வெளியேற்ற ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இந்தியர்களும் கூட இதில் சிக்கிக் கொண்டுள்ளனர். 

அமெரிக்க அதிகாரி வெளியிட்டுள்ள இந்த வீடியோவின் மூலமாக, நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டது தெளிவாகியுள்ளது.

சட்ட விரோதமாக தங்கள் நாட்டில் வசிப்பதாக கூறி 4 வயது குழந்தை உட்பட 104 பேரை கைவிலங்கு (handcuffs) போட்டு இந்தியாவுக்கு அமெரிக்கா நாடு கடத்தியது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

 "அமெரிக்க சட்டப்படியே நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கை விலங்கு போடப்படவில்லை. வெளிநாட்டில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை திரும்ப பெறுவது அனைத்து நாடுகளின் கடமையாகும். நாடு கடத்தப்பட்டவர்கள் தவறாக நடத்தப்படவில்லை என்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

 அந்த சி 17 ராணுவ விமானத்தில் வந்த ஒருவர், கைகளுக்கு விலங்கு போடப்பட்டதாகவும், கால்களில் செயின்களால் கட்டி வைத்து அழைத்து வந்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் மொத்த பயணத்திலும் இப்படியே அழைத்து வந்ததகாவும் அமிர்தசரஸ் வந்த பிறகுதான் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.   அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்து இருந்தன. இது தொடர்பான புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் இந்த குற்றச்சாட்டு மத்திய அரசு தரப்பில் மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட விமானத்தில் வந்த இந்தியாவை சேர்ந்த ஜஸ்பால் சிங் என்பவர் பல்வேறு திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். 36 வயதான ஜஸ்பால் சிங் கூறியதாவது:- கைகளுக்கு விலங்கு போடப்பட்டதாகவும், கால்களில் செயின்களால் கட்டி வைத்து அழைத்து வந்ததாக கூறியிருக்கிறார். மொத்த பயணத்திலும் இப்படியே அழைத்து வந்ததாகவும் அமிர்தசரஸ் வந்த பிறகுதான் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார். பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜஸ்பால் சிங், அமெரிக்கா எல்லையை கடந்த 24 ஆம் திக‌தி தாண்ட முயற்சிக்கும் போது அந்நாடு எல்லை பாதுகாப்பு ரோந்து படையினரால் பிடிக்கப்பட்டாராம். டிராவல் ஏஜெண்ட் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்காவில் இருந்து 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டு கை விலங்குகளுடன் விமானத்தில் ஏற்றப்பட்டு நாடு கடத்தப்பட்டது குறித்து மத்திய பாஜக அரசு ஏன் மவுனமாக இருக்கிறது என்பதும் எதிர்க்கட்சி எம்பிக்களின் கேள்வி. அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வ்ருகின்றனர். 

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்டது தொடர்பாக மத்திய அரசு கனத்த மவுனமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் நேற்று முதல் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்னதான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்.

ரமணி

16.2.25

இடம் பெயர்ந்த காஸா மக்களுக்கு சவால்விடும் குளிர்காலப் புயல்

 காஸா பகுதியில் ஒரு பேரழிவு தரும் குளிர்காலப் புயல் வீசி வருகிறது, இதனால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களின் உயிர்வாழ்வதற்கான போராட்டம் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களை தங்க வைத்திருக்கும் பலவீனமான கூடாரங்கள், புயல், குளிர் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாதவை.  காஸா மக்களுக்கு, புயல் என்பது வெறும் இயற்கையின் செயல் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையைப் பிளந்த பேரழிவுகளின் வரிசையில் ஒரு கூடுதல் சோகம்.

பராக்காவிலிருந்து வெகு தொலைவில் இல்லாத ஓம் அகமது அல்-ரம்லி, புயல் தனது கூடாரத்தை நாசமாக்கிய பிறகு, தனது உடைமைகளைக் காப்பாற்ற தீவிரமாகப் போராடினார்.

 பாலஸ்தீன அரசியல்வாதிகள்  காஸாவை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது பற்றி சண்டையிடுகிறார்கள், ஆனால் இந்தப் போருக்கான இறுதி விலையை செலுத்துவது மக்கள்தான்.நிலம் அடர்ந்த சேற்றின் சேற்றாக மாறுவதால் நிலைமை மோசமடைகிறது, இடம்பெயர்ந்தவர்களை சிக்க வைத்து, தப்பிக்கவோ அல்லது உதவி பெறவோ தடையாகிறது.

இடைவிடாத மழையும், பலத்த காற்றும் முகாம்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன, மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு புகலிடம் இல்லை.எரிபொருள் பற்றாக்குறை அவர்களின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது, குடும்பங்கள் தங்கள் தங்குமிடங்களை சூடாக வைத்திருக்க எந்த வழியையும் இழக்கச் செய்துள்ளது. ஈரப்பதமான மற்றும் குளிரான சூழ்நிலையில் வாழ்வதால், மக்கள் நோய்களுக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளது.

வடக்கு  காஸாவில், நிலைமை அதே அளவுக்கு மோசமாக உள்ளது. ஜனவரியில் ஹமாஸ் , இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையேயான போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஸ்திரத்தன்மையின் சாயல் கிடைக்கும் என்று நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்கள், இடிபாடுகளைத் தவிர வேறு எதையும் காணவில்லை.

வீதிகள், வீடுகள் ,உள்கட்டமைப்புகள் என்பன  அழிக்கப்பட்டுள்ளன, மேலும் உயிர்வாழ்வது அன்றாடப் போராட்டமாகிவிட்டது.

தாங்க முடியாத இந்த துன்பத்தை எதிர்கொள்ளும் நிலையில், இடம்பெயர்ந்த குடும்பங்கள் மனிதாபிமான அமைப்புகளுக்கு அவசர துயர அழைப்புகளை அனுப்பி, இன்னும் உறுதியான கூடாரங்கள், வெப்பமூட்டும் சாதனங்கள் மற்றும் சிறிதளவு நிவாரணத்தை வழங்கக்கூடிய எந்தவொரு உதவியையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மனித உரிமை அமைப்புகள் இந்த அழைப்புகளை எதிரொலித்து, காசாவில் வேகமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து எச்சரித்துள்ளன.சுகாதார சேவைகள் பற்றாக்குறையின் மத்தியில் குளிர் மற்றும் நோய்களுக்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் கடுமையான ஆபத்துகளை அவை எடுத்துக்காட்டுகின்றன.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்படி,  காஸாவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மோதலால் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.அவர்கள் அடைக்கலம் தேடும் முகாம்களில் கண்ணியமான வாழ்க்கை நிலைமைகள் எதுவும் இல்லை. சுத்தமான தண்ணீர், வெப்பமூட்டும் உபகரணங்கள் , அத்தியாவசிய மருந்துகள் என்பன  பற்றாக்குறையாக உள்ளன.

 ஊர்மிளா

Tuesday, February 4, 2025

அபிஷேக் சர்மாவின் அதிரடி சாதனைகள்

 37 பந்துகளில்  100.. 13 சிக்ஸ்.. வாட்சன், டீ காக், ரோஹித்தை முந்திய அபிஷேக்.35 பந்துகளுக்கள் சதம் அடித்திருந்தால் ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்திருப்பார்.

இங்கிலாந்துக்கு நடைபெற்ற ரி20 கிரிக்கெறிக்கெற் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா வென்றது.  மும்பையில்  நடைபெற்ற கடைசிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 248 ஓட்டங்கள் எடுத்தது. இமாலய இலக்கை நோக்கி களம்  இற்ங்கிய இங்கிலாந்தை 10.3 ஓவர்களில்  சகல விக்கெற்களையும் இழந்து 97 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது  இந்தியா 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு அபிஷேக் ஷர்மா 135 ஓட்டங்கள் 2 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார்.

 சர்வதேச ரி20 கிறிக்கெற்றில் அதிகபட்ச ஓட்டங்கள்  (135) பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2023ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் 126 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனை.  சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் சதத்தை அடித்து குறைந்தது ஒரு விக்கெற்  எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அபிஷேக் படைத்துள்ளார். இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரர்களும் ஒரே ரி20 போட்டியில் சதத்தையும் விக்கெட்டும் எடுத்ததில்லை.

இப்போட்டியில் 13 சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் நனைத்த அபிஷேக் சர்மா சர்வதேச ரி20 கிறிக்கெற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர்தலா 10 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனை.

இந்தப் போட்டியில் முதல் 6 ஓவர்களில் மட்டும் அபிஷேக் 58 ஓட்டங்கள் அடித்தார்.   சர்வதேச ரி20 போட்டியில் பவர் பிளேவில் அதிகபட்ச  ஓட்டங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் 53 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனை.

இந்தப் போட்டியில் 10.1 ஓவர்கலில்  சதத்தை தொட்டார்.   சர்வதேச ரி20 போட்டியில் குறைந்த ஓவரில் சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இடதுகை வீரரான அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார். இதன் மூலம், இந்திய அணிக்காக ரி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்தார்.

ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக குறைந்த பந்துகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.  அவுஸ்திரேலிய வீரர் ஆரன் ஃபின்ச், கிறிஸ் கெயில் ஆகியோர் தலா 47 பந்துகளில் சதம் அடித்த பட்டியலில் அபிஷேக் இடம்பெற்றார்.

ரி20- போட்டிகளில் முதல் பவர் ப்ளேயில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 95 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்தது.

95/1 vs இங்கிலாந்து - மும்பை /2025

82/2 vs ஸ்காட்லாந்து / துபாய் - 2021

82/1 vs வங்காள தேசம் / ஹைதராபாத் - 2024

78/2 vs தென் ஆப்பிரிக்கா / ஜோஹன்ஸ்பர்க் - 2018

Sunday, February 2, 2025

கிறிக்கெற் வரலாற்றில் இங்கிலாந்து மோசமான தோல்வி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது ரி20 கிரிக்கெட் போட்டியில், 150ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்ற இந்திய அணி, ரி20 தொடரை 4 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது அசத்தியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5-வது மற்றும் இறுதி ரி20 போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்  நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 9 விக்கெற் இழப்புக்கு 247  ஓட்டச்ங்கள் எடுத்தது.10.3 ஓவர்களில் சகல விக்கெற்களையுமிழந்த இங்கிலாந்து 97 ஓட்டங்கள் எடுத்து 250 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சம்ஸன், அபிஷேக் ஷர்மா ஆகியோர் களம் இறங்கினர்.  7 பந்துகளில் 16 ஓட்டங்கள் அடித்த   சஞ்சு ச‌ம்ஸன் ஆட்டமிழக்க திலக் வர்மா களமிறங்கினார்.

  அபிஷேக் ஷர்மா, 17 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும்  அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 24 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.  அணித்தலைவர் சூர்யகுமார் இரண்டு ஓட்டங்களில் வெளியேறினார்.  அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் சதம் அடித்தார்.ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்ததே இந்தியாவின்  சதனையாகும்.

  சூர்யகுமார்  வெளியேற களமிறங்கியிருந்த ஷிவம் துபே தனது  பங்கிற்கு   பின்னி எடுத்து, 13 பந்துகளில் 30 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா  ரிங்கு சிங்  ஆகிய  இருவரும் தலா  9 ஓட்டங்களுடன் நடையை கட்டினர். அதிரடி காட்டிக்கொண்டிருந்த அபிஷேக் ஷர்மா, 54 பந்துகளில், 13 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 135 ஓட்டங்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

ஆட்டமிழந்தார்.அதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிந்தனர். இறுதியில், 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில்,  ப்ரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும், மார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 248 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்தியப் பந்து வீச்சாள‌ர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.தொடக்க வீரர்கள் அதிரடி காட்டினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி. ஒரு முனையில் சால்ட் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள்  அடுத்தடுத்து வெளியேறினர். 23 பந்துகளில் 55  ஓட்டங்கள் எடுத்திருந்த சால்ட் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் வரிசையாக பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து அணி, 10.3 ஓவர்களில் 97 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய தரப்பில்,  முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் தூபே , அபிஷேக் ஷர்மா ஆகியோர்  தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக, துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் அசத்திய அபிஷேக் ஷர்மா தேர்வானார்.தொடர் நாயகனாக, பந்து வீச்சில் கலக்கிய  வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.இந்த இமாலய வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை, 4 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

டெஸ்ட்கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட ஸ்மித்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டி அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் புது சாதனை படைத்துள்ளார்.

கிறிக்கெற் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்பவர் ஸ்டீவ் ஸ்மித். இவர் இந்தியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலே 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், ஒரே ஒரு ஓட்டத்தால்   அந்த சாதனையைத் தவறவிட்டார்.ஸ்டீவ் ஸ்மித் ஒரு ஓட்டம் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டினார். க‌ப்டனாக இருக்கும்போது இந்த சாதனையை அவர் எட்டியிருப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்ளை எட்டிய 15வது வீரர் ஸ்மித் ஆவார். அவுஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம்  ஓட்டங்களை எட்டிய 4வது வீரர் ஸ்மித் ஆவார். இதற்கு முன்பு அலன் பார்டர், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங்  ஆகியோர்மட்டுமே இந்த சாதனையை எட்டியிருந்தனர்.

35 வயதான ஸ்மித் பாகிஸ்தானுக்கு எதிராக 2010ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தற்போது வரை 115 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஸ்மித் 4 இரட்டை சதங்கள், 34 சதங்கள், 42 அரைசதங்களுடன் 10 ஆயிரத்து 68 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 205 இன்னிங்ஸ்களில்  விளையாடிய‌ ஸ்மித்தின் அதிகபட்சமாக்  239 ஓட்டங்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் சராசரி 56.25 வைத்துள்ளார். பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்துக்குப் பின்னர் ஒரு வருட   தடையில் இருந்து மீண்டு வந்த ஸ்மித் சிறப்பாக ஆடி இந்த சாதனையைப் படைத்துள்ளார். ஸ்மித்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்மித் 165 ஒருநாள் போட்டியில் ஆடி 12 சதங்களும், 34 அரைசதங்களும் விளாசி 5 ஆயிரத்து 662 ரன்கள் எடுத்துள்ளார். 67 டி20 போட்டிகளில் ஆடி 1094 ரன்களும், 103 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 485 ரன்களும் எடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். அவர் 15 ஆயிரத்து 921 ஓட்டங்களுடன் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் இந்த டெஸ்ட் தொடரிேல யூனிஸ் கான், கவாஸ்கர்  ஆகியோரின் சாதனைகளை முறியடிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.