Monday, June 22, 2026

மாற்றப்பட்டது தமிழக சட்டமன்றத்தின் மரபு நிறவேற்றப்பட்டது ஆளுநரின் ஆசை


 

தவெகவில் சேர பனையூரில் தவம் இருக்கும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்

தமிழக அரசின் அறிக்கையை முழுமையாகப் படித்த ஆளுநர்

கறுத்தப் பதாகைகளுடன்  சட்டசபையில் முதல்வருக்கு முன்னால்   திமுக உறுப்பினர்கள்

 பிணக்கு அரசியலைக் கைவிட்டு இணக்க அரசியல் நடத்தத் தயாராகும்  தவெக

 

தவெக அரசின் முதல் கூட்டத் தொடர்  நடைபெறும் திகதி  அறிவிக்கப்பட்ட அன்றே அரசியலில் பரபரப்பு ஆரம்பமானது. கடந்த காலங்களில் திமுக அரசும் அன்றைய ஆளுநர்  ஆர்.என். ரவி செய்த அரசியல் அலப்பறைகளும் கண் முன்னால் வந்து போயின. தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்னர் தேசிய கீதம் பாடப்பா வேண்டும் என்ற ரவியின் கோரிக்கையை திமுக நிராகரித்தது. அதன் காரணமாக  தொடர்ந்து மூன்று வருடங்களாக அன்றைய ஆளுநர் சட்ட சபையை விட்டு  வெளியேறினார். ஆளுநரின் உரை இல்லாமலேயே கூட்டத்தொடர் ஆரம்பமானது.

தமிழ்த்தாய் வாழ்த்து புறம் தள்ளப்பட்டால் எதிர்ப்பதற்கு திமுக தயாராக  இருந்தது. இந்தச் சிக்கலை தவெக எப்படிச் சமாளிக்கப்போகிறது என்ற கேள்வி ரசியல் அரங்கில் எழுந்தது.

 பிரதமர் மோடியைச் சந்தித்த போது தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட  வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வர் முன் வைத்தார். மோடியிடம் கெஞ்சத்தாத் தேவை இல்லை. தமிழ்த்தால் வாழ்த்து முதலில்  பாடுவது தமிழக சட்ட சபையின் மரபு என்றவிமர்சனம் முன் வைக்கப்பட்டது.

பெரும்  எதிர்பார்ப்புடன் தமிழக சட்ட சபைக் கூட்டம் ஆரம்பமானது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தவெகவின் மீது மதிப்பு உயர்ந்தது.  ஆனால், அது நீடிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.  சபை ஆரம்பமாகும் போதும்  இறுதியிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என அன்றைய ஆளுநர் ரவியின் கோரிக்கி அப்போது நிராகரிக்கப்பட்டது. மரபை மாற்றக்கூடாது.  ஒரு நிகழ்ச்சியில் இரன்டு முறை தேசிய கீதம் பாடுவது  ஏற்புடையதல்ல என திமுக தெரிவித்தது. தவெக மரபை உடைத்து ஆளுநரின் விருப்பத்துக்கு வழி விட்டது.

   தமிழ்நாடு சட்டசபையில்   தவெக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகரின் உரையுடன் தொடங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழக அரசு எழுதிக்கொடுத்த அறிக்கையான  ஆளுநர் உரை  முழுமையாக ஆளுநரால் படிக்கப்பட்டது.

கடந்த திமுக ஆட்சியில் ஆளுநராக இருந்தவர் ஆர்.என். ரவி. அவர் பதவியில் இருந்தவரை திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து முட்டல் மோதல் இருந்து கொண்டே வந்தது.  நீதிமன்றம் வரை சென்று சட்டசபையில் உரிமையை நிலைநாட்டியது திமுக .

திமுகவின் காலத்தில்  ஆளுநர் உரை சட்டசபையில் முழமையாக வாசிக்கப்படவே இல்லை. அப்படியே இருந்தாலும் சுருக்கமாக பேசி விட்டு ஆளுநர் போனதே வரலாறாக இருந்தது. தொடர்ந்து ஆளுநர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்வதும் வழக்கமாக இருந்தது. முழுமையாக ஆளுநர் உரை           ஒரு முறை கூட படிக்கப்படவில்லை. அப்படியே படிக்கப்பட்டாலும் கூட சில பகுதிகளை ஆளுநர் தவிர்த்த சம்பவமும் நடந்தது.

பெரியார்,அம்பேத்கர், அண்ணாதுரை போன்ற வச்னங்கலை அன்றைய ஆளுநர் தவிர்த்தார்.  இன்ரு தவெக கொடுத்த பெரியா,அம்பேத்கர், அண்ணா ஆகிய பெயர்களை ஆளுநர் படித்தார்.

'திராவிட மாடல்', 'சமூக நீதி' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்தார்; தமக்கு விருப்பமான வரிகளைத் தன்னிச்சையாகச் சேர்த்தார். இதனால், கோபமடைந்த முதலமைச்சர் மு..ஸ்டாலின், ஆளுநர் முன்னிலையிலேயே "அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற வேண்டும்" எனத் தீர்மானம் கொண்டு வர, ஆளுநர் ரவி பாதியிலேயே அவையை விட்டு விறுவிறுவென்று வெளியேறி உள்ளார். அந்த சம்பவங்கள் ஒரு பெரும் அரசியல் போர்க்களமாகவே காட்சியளித்தது

 தமிழ்நாட்டின் இடைக்கால ஆளுநராக உள்ள ஆர்லேகருக்கும் இது முதல் உரை. இந்த உரை எப்படி இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்லேகர் வணக்கம் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். அவரது உரை வழக்கத்திற்கு மாறாக முழுமையாக படிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்லேகர் உரையில் இடம் பெற்றிருந்த அனைத்தையும் ஒரு வரி விடாமல் படித்தார்.

உரையில் தமிழ்நாடு அரசின் லட்சியம், அதன் கொள்கைகள், அதன் திட்டங்கள் உள்ளிட்டவை கூறப்பட்டிருந்தது. அதை முழுமையாக ஆளுநர் வாசித்தார். தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழிக் கொள்கை தொடரும் என்பதையும் ஆளுநர்   வாசித்தார்.  காவிரிப் பிரச்சினை குறித்தும் ஆளுநர் உரரையில்  இடம் பெற்றிருந்தது.

முதல்வர் ஜோசப் விஜய்யைப் புகழ்ந்தும் உரையில் இடம் பெற்றிருந்தது. அதையும் ஆளுநர் முழுமையாக வாசித்தார். அண்ணா, பெரியார் உள்ளிட்டோர் குறித்தும் உரையில் இடம் பெற்றது. இப்படி ஆளுநர் உரையில் இடம் பெற்ற அனைத்தையும் ஆளுநர் ஆர்லேகர் வாசித்து முடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆளுநர் உரை சட்டசபையில் முழுமையாக வாசித்து முடிக்கப்பட்டது வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஆளூநர் வெளியேறும் போது முதலில் எதிக்கட்சித்தலைவர் உதயநிதியைப் பார்த்து இரு கரம் கூப்பிக் கும்பிட்டார். உதயநிதியும் பதில்  வணக்கம் தெரிவித்தார். எதிர்க் கட்சி வரிசையில் இருந்தவர்களை கும்பிட்டபின்னர் ஆளும் கட்சி  வரிசையைப் பார்த்து வணக்கம் சொன்னார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டது ஒரு 'சரித்திர நிகழ்வு'. இது மக்களாட்சியின் மாண்பை நிலைநாட்டியுள்ளது; மனதுக்கு நிறைவாக இருக்கிறது" என உருகியிருக்கிறார் ஆளுநர். ஆச்சரியமான மாற்றம் அன்று தமிழக ஆளுநரை எதிர்த்து 'கெத்து' காட்டிய அதே சட்டமன்றக் கூடம், இன்று எந்தவித எதிர்ப்பும் இன்றி இணக்கமாகக் காட்சியளிக்கிறது. மத்திய அரசை விமர்சிக்கும் உரையை ஆளுநரே வாசிப்பதும், அதற்கு ஆளுநரே "மன நிறைவு" எனப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதும் தமிழக அரசியலில் விசித்திரத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.

 இந்த 'புதிய உதயம்' தற்காலிகமானதா அல்லது தேர்தல் கணக்குகளுக்கான அஸ்திவாரமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இடைத்தேர்தல் முடிந்தால் தான் உண்மையான நிலைமை தெரியவரும். ஏனெனில் மத்திய அரசை எந்த வகையிலும் விஜய் விமர்சிப்பதே இல்லை. தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்த பின்னரும் சரி விஜய் அப்படியே தொடர்கிறார். என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.  

ரமணி

21/6/26