உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜப்பானை உற்சாகப்படுத்த சீன ரசிகர்கள் அரசியலை ஒதுக்கி வைத்தனர்.
ஷாங்காயில் நிரம்பியிருந்த ஒரு விளையாட்டு மதுபான விடுதியில், துனிசியாவின் கோல்கீப்பருக்கு மேலாக ஜப்பானின் அயசே உடா தலையால் முட்டி அடித்த பந்து 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை உறுதி செய்தபோது, சீன உதைப்ந்தாட்ட ரசிகர்கள் ரசிகர்கள் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.
இறுதி விசில் ஒலித்தபோது, அந்தக் குழுவினர் ஒரு பிரம்மாண்டமான ஜப்பான் அணிக் கொடியை வெளியே எடுத்து, மதுபான விடுதியின் முன்புறத்தில் நின்று, மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்தனர்.
ஜப்பான் ரசிகர் பட்டாளம் செழித்து வளர சீனா மிகவும் பொருத்தமான இடம் அல்ல. இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுப் பகை எப்போதும் வெளிப்படையாகவே இருந்து வருகிறது. டோக்கியோவில் கடும்போக்குடைய பிரதமர் சனே டகாயிச்சி பதவியேற்றதிலிருந்து உறவுகள் பதட்டமாகவே இருந்து வருகின்றன.
"எங்கள் தலைமுறையைப் பொறுத்தவரை -- 90களின் தலைமுறை -- எங்களில் பெரும்பாலானோர் அடிப்படையில் 'கேப்டன் சுபாசா' (ஒரு கால்பந்து மேதையைப் பற்றிய தொடர்) உட்பட நிறைய ஜப்பானிய அனிமேக்களைப் பார்த்து வளர்ந்தோம்," என்று அக்குழுவின் முக்கிய அமைப்பாளரான ஃபான் கூறினார், அவர் தனது குடும்பப் பெயரை மட்டுமே தெரிவித்தார். "மிக முக்கியமாக, நாங்கள் இருவரும் ஆசியாவின் ஒரு பகுதியாக இருப்பதால், ஜப்பான் இப்போது ஆசிய கால்பந்தின் பெருமையையும் புகழையும் பிரதிபலிக்கிறது என்று நீங்கள் கூறலாம்."
2002-ல் ஒருமுறை மட்டுமே உலகக் கிண்ணத்துக்கு சீனா தகுதி பெற்றது, அப்போது ஒரு கோல் கூட அடிக்காமல் மூன்று போட்டிகளிலும் சீனா தோற்றது.
நீண்ட காலமாக ஜப்பான் ரசிகராக இருந்து, இது குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ள ஃபூ ஜின்யு, ஜப்பானில் இளைஞர் மேம்பாடு மற்றும் ரசிகர் கலாசாரத்தை ஆதரிக்கும் ஒரு நவீன கால்பந்து சூழல் அமைப்பு உள்ளது என்றும், அந்அணி இப்போது "ஐரோப்பிய அளவிலான போட்டித்திறனில்" உள்ளது என்றும் கூறினார்.
இதற்கு மாறாக, "சீனர்கள் இன்னும் சரியான பாதை எதுவென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்," என்றும் அவர் கூறினார்.
.jpeg)

