Sunday, March 22, 2026

கூட்டணிக்குள் குழப்பம் முடிவு செய்ய தயங்கும் தலைமைகள்

அமித்ஷாவைச் சந்திக்க டெல்லியில் தவம் கிடக்கும் தமிழகத் தலைவர்கள்

ரஜினியை வம்புக்கிழுத்த ஆதவ் அர்ஜுனா. கொந்தளிக்கும் ரஜினியின் ரசிகர்கள்

நடிகைகளை அவமானப்படுத்துக் கருத்துகளால் நாறிப்போன அரசியல்

இரட்டை இலையைவிழுங்கி  ஏப்பம் விடத்துடிக்கும் தாமரை

தமிழக சட்டமனறத் தேர்தல் அறிவிக்கப்பட்டி விட்டது. ஆனால், திமுகவும், அதிமுகவும் இன்னமும் கூட்டணிப் பேச்சு வார்த்தையை முற்றாக முடிக்கவில்லை. ஏழு கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்து விட்டது. அதனால் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடியும்,  அவருடைய கூட்டணித்தலைவர்களும், அமித்ஷாவைச் சந்திப்பதற்கு டெல்லிக்கு  காவடி எடுத்துள்ளனர்.

லேடியா?, மோடியா? என நெத்தையடியாகக் கேஎட்ட இரும்புப் பெண்மணி ஜெயலலிதா  கட்டி ஆண்ட கட்சித்தலைவை இன்று அமித்ஷாவின் வீட்டு வாசலில்  மண்டியிட்டு உட்கார்ந்து இருக்கிறார். கூட்டணிக்குத் தலைமை  தாங்கும் கட்சியின்  குழுவும்,  கூட்டணிக் கட்சியின் குழுவும் சந்தித்து பல சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு எட்டிய பின்னர், கூட்டணித்தலைவரும், கூட்டணிக் கட்சியில் தலைவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தொகுதி உடன்பாடு பற்றி  அறிவிப்பார்கள். இது தாம் இதுவரகாலமும் கடைப்பிடிக்கப்படும் நெறிமுறை.

முன்னைய தேர்தல் காலத்தில்  பாரதீய ஜனதாத் தலைவர்கள் த‌மிழகத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இந்த வழமை இன்றைய தேர்தலில் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது. தமிழக அரசியல் தலைவர்கள் அமித்ஷாவை சந்திக்க அதவம் இருக்கின்றன்ர. இரண்டு மணிநேரம் காத்திருந்த எடப்பாடி 15 நிமிடங்கள் மட்டிம்தான் பேசினார். தன்னைச் சந்திக்க போயஸ்காடனுக்குச் சென்ற  பாரதீய ஜனதாத் தூதுவரை வாசலில் வைத்துத்  திருப்பி அனுப்பியவர் ஜெயலலிதார்.

"தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, நாங்கள்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவோம்" என்று எடப்பாடி கத்திக் கத்திச் சொன்னார். அது அமித்ஷாவின் கதில் விழவில்லை.  அமித்ஷாவின்கப் பாவையாக எடப்பாடி மாறிவிட்டாரோ எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  டெல்லித் தலைவர்கள் சென்னையில்  அதிமுக தலைமையுடன் பேசுவார்கள். ஆனால் இப்போது, ஒரு மாநிலக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தும், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக எடப்பாடி டெல்லிக்குச் சென்று காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

கூட்டணிக்குள் யார் இருக்க வேண்டும், யாருக்கு எத்தனை தொகுதி என்பதை எடப்பாடி தீர்மானிப்பார் என்று எதிர்பார்த்த ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து   அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் என வரிசையாக தமிழகத் தலைவர்கள் டெல்லியில் தவம் கிடக்கிறார்கள். இந்த 'டெல்லிப் பயணம்' தமிழக அரசியலில் ஒரு முக்கியமான மாற்றத்தை உரக்கச் சொல்லியிருக்கிறது.  தமிழக அரசியல் கூட்டணிக்கு  அதிமுக தலமை அல்ல என்பதை உரத்துச் சொலியுள்ளது. எடப்பாடையைத்தவிர மற்றைய அனைவருக்கும் அது புரிந்துள்ளது.

புதிய நீதிக்கட்சி  , ஐஜேகே  , பார்பர்டு பிளாக்  , பெருந்தலைவர் மக்கள் கட்சி  , தமமுக  , புதிய தமிழகம்  ஆகிய கட்சிகளை  இரட்டை இஅலைச் சென்னத்தில் போட்டியிட வைக்க எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார். அமித்ஷாவின் கணக்கு வேறு மாதிரி உள்ளது. தாமரைக்கு தமிழகத்தில் போதியளவு வாக்கு வங்கி இல்லை. தமிழகத்தில் தாமரை மலரும் என தமிழிசை உரக்கச்சொன்னார். அதுத்து வந்த அனைவரும் தனையே  சொன்னார்கள். அண்ணாமலை ஒரு படி மேலே போய் அடித்துச் சொனார். அப்பவும் தாமரை  நோட்டோவுக்குக் கீழாதான் இருக்கிறது. அந்தக் கணக்கை மாற்றி அமைக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.   புதிய நீதிக்கட்சி  , ஐஜேகே  , பார்பர்டு பிளாக்  , பெருந்தலைவர் மக்கள் கட்சி  , தமமுக  , புதிய தமிழகம்  ஆகிய கட்சிகளை தமரைச் சின்னத்தில் போட்டியிட வைப்பதே அமித்சஷாவின் திட்டமாகும்.  அந்தக் கட்சித்தலிவர்களுக்கு கட்சி முகியமல்ல. தமது வெற்றியும் பதவியும் தான் முக்கியம். அவை பெயரளவிலேதான் அரசியல் கட்சிகள். மற்றும் படி அவை சாதிக் கட்டமைப்புத்தான்.

அமித்ஷாவின் திட்டத்தை உடைத்துக் கொண்டு எடப்பாடி வெளியேறுவாரா அல்லது அமித்ஷாவுக்கு அடிபணிந்து அதிமுகவை அடகு வைப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

  திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமலின் மக்கள் நீதி மய்யம்   கட்சியுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் சின்னம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முடிவு கிடைக்காததால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.  

பேச்சுவார்த்தையின் போது, மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான "உதயசூரியன்" சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. கட்சியின் அடையாளமான 'டார்ச் லைட்' சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாக கமலில் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சில முரண்பாடுகள் இருந்தாலும், இறுதி முடிவை கட்சித் தலைவர் கமல்ஹாசன் எடுப்பார் என ம.நீ.ம தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் ஒரு தெளிவான முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் . கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரசாரத்தில் மட்டும் ஈடுபட்ட கமல்ஹாசன், இந்த முறை தனது கட்சி வேட்பாளர்களைச் சட்டமன்றத்திற்கு அனுப்பும் நோக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

சொந்தச் சின்னத்தில் போட்டியிடுவது கட்சியின் தனித்துவத்தைப் பேண உதவும் என்பது ம.நீ.ம-வின் நிலைப்பாடாக உள்ளது. மறுபுறம், கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பது திமுகவின் கணக்காக இருக்கிறது. அதே போல் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்தும் இதுவரை தெரியவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தச் சின்னம் தொடர்பான இழுபறி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில சிறிய கட்சிகள் ஏற்கனவே உதயசூரியன் சின்னத்திலேயே தொடர்ந்து போட்டியிட்டதால், அந்த கட்சிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்வதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. கட்சியின் அங்கீகாரம் பறிபோய் விடக் கூடாது என்பதால் தங்கள் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுவது என இந்த முறை அனைத்து கட்சிகளும் உறுதியாக உள்ளன. அதே போல் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பதால், கடந்த முறை போட்டியிட்ட 173 தொகுதிகளை விட குறைவான தொகுதிகளிலேயே திமுக போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் 28,மதிமுக 4, சிபிஐ2,ஐஇமுலீ 2,கொமதேக2, மமக2, விசிக 6 ஒன்று புதுசேரி என ஒப்பந்தம் கைத்தாத்திடப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கூடுதலாகக் கேட்டனர். ஸ்டாலின், திருமாவளவன் ஆகிய இருவரும் நேரடியாகப் பேசி முடிவு செய்தனர்.

திரிஷா பிரச்சனையே  இன்னமும் தீரவில்லை. அதற்குள் நயந்தாராவின்  பிரச்சனை தலைதூக்கி உள்ளது.  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷாவின் பெயரை குறிப்பிட்ட தனிப்பட்ட விமர்சனங்களை முன் வைத்தார். இதற்கு நடிகை திரிஷா மட்டுமின்றி பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் இது போன்று செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என பலரும் கூறினார்கள். கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்ததால், தனது கருத்திற்காக நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்தார்.

திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கள் ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதை சுட்டிக்காட்டி, அது திரிஷா தான் என பலரும் அவரின் பெயரை குறிப்பிட்டே சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டார்கள். இந்த கருத்துக்கள் பரவி வந்த அதே வேளையில் விஜய், திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் ஒன்றாக வந்து இறங்கியது தொடர்பாகவும் சர்ச்சை பேச்சுக்கள் எழுந்தது.  நடிகர் பார்த்திபனும் குந்தவையை வீட்டில் குந்தவை எனக் கூறியதால் திரிஷா கொதித்தெழுந்தார். பிரச்சனைஅயை முடிவுக்குக் கொண்டு வருவதர்காக பார்த்திபன் மன்னிப்புக் கேட்டார். திரிஷாவின் அம்மாவும் தனதுபங்குக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் திரிஷா பற்றி விமர்சனங்கள் இன்னும் முடியாமல் போய் கொண்டிருக்கிறது.

திரிஷா  பற்றிய சர்ச்சை முடிவுக்கு வராத நிலையில், திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற போது அதிமுக எம்.பி.,யான சி.வி.சண்முகம், நயன்தாரா பற்றி பேசி புதிய சர்ச்சையை துவக்கி வைத்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், " உங்கள் கனவுகளை சொல்லுங்கள், நிறைவேற்றி வைக்கிறேன் என்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். நயன்தாரா வேணும். இது தான் என் கனவு. இதை நிறைவேற்றி வைப்பாரா?" என பேசி உள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் விமர்சனங்களை முன் வைத்து வருவதும், பிறகு அது கண்டனத்திற்கு உள்ளாவது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. அரசியல் களத்தில் ஏன் நடிகர், நடிகைகள் குறிவைத்து விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது. பெண்ணியம் பேசுபவர்களும் இவற்றுக்கு எதிராகக் கடும் கண்டனங்களை எழுப்பி உள்ளனர்.

  சமீப காலமாக நடிகள், நடிகைகள் குறித்து அரசியல் பிரமுகர்கள் பலரும் தொடர்ந்து தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களை முன்வைப்பது தொடர்ந்து அதிகரித்து வருவது சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, திமுக மிரட்டியதால் தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற ஒரு கருத்தை சமீபத்தில் தெரிவித்தார். திமுக அரசுக்கு எதிரான கண்ட ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தமே இல்லாமல் எதற்காக ரஜினி பற்றி அவர் பேசினார் என தெரியவில்லை. இதற்கு நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிச்சாமி, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். ஆதவ் அர்ஜூனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார் நயினார் நாகேந்திரன். ரஜினி ரசிகர்களும் இதில் எதிர்ப்பை பதிவு செய்த நிலையில்,   ரஜினியே ஆதவ் அர்ஜூனா கூறியது உண்மைக்கு புறம்பானது என அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆதவ் அர்ஜுனவின் பேச்சுக்கு காலம்பதில் சொல்லும் என ரஜினி தெரிவித்துள்ளார். ரஜினி தெரிவித்த காலம் தேர்தல் தினம் என பலரும் வெளிப்படையாகக் கருத்துத்  தெரிவித்துளனர்.  விஜய் வழ்மைபோல  மெளன விரதம் கடைப்பிடிக்கிறார்.

 

 

ரமணி

22/3/26 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பேயர்னின் கோல்கீப்பராக 16 வயதுப் பாலகன் ?


 பேயர்ன் முனிச் உதைபந்தாட்ட அணியில் நட்சத்திர கோல் கீப்பரான ஜேர்மனியின் முன்னாள் கப்டன் மானுவல் நியூயர் ,  மூன்றாவது கோல்கீப்பரான ஸ்வென் உல்ரைச் ஆகியோர் காயம் காரணமாக தொடர்ந்து விளையாடாமல் இருக்கும் நிலையில், ஜோனாஸ் அர்பிக்கிற்கு மீண்டும் வாய்ப்பு திறக்கப்படுவதாகத் தெரிகிறது.

 நடப்பு  ஜேர்மன் சம்பியனான பேயர்ன், கடந்த வாரம் பெர்காமோவை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியபோது ஏற்பட்ட மூளையதிர்ச்சிக்குப் பிறகு, 22 வயதான இவர் திங்களன்று லேசான பயிற்சியை மீண்டும் தொடங்கினார்.

இதற்கிடையில், பேயர்ன் அணியின் 16 வயது U-19 கோல்கீப்பரான லியோனார்ட் பிரஸ்காட், ஒரு சாத்தியமான மாற்று வீரராகக் கவனத்தை ஈர்த்துள்ளார்.


அந்த இளம் வீரர் மாற்று வீரராக அமர நேரிடலாம் அல்லது 16 வயது, 176 நாட்களில், 1963-ஆம் ஆண்டிற்குப் பிறகு பேயர்ன் அணிக்காக விளையாடும் மிக இளைய கோல்கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்தலாம்.

பிரஸ்காட்டின் வயது காரணமாக, இரவு 8 மணிக்கு மேல் இளம் தொழிலாளர்கள் வேலை செய்வதைத் தடைசெய்யும்  ஜேர்மன் இளைஞர் தொழிலாளர் சட்டங்களின் கீழ், பேயர்ன் சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்தது.

பயிற்சியாளர் வின்சென்ட் கொம்பனி இறுதி முடிவு எடுப்பதில் எச்சரிக்கையாக இருந்தபோதிலும், மான்செஸ்டர் சிட்டியின் முன்னாள் தடுப்பாட்டக்காரரான அவர், அந்த இளம் கோல்கீப்பரின் திறமையில் நம்பிக்கை தெரிவித்தார்.

முதல் கட்டப் போட்டியில் பெற்ற கணிசமான முன்னிலையும் பேயர்னின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. உல்ரைச் குறைந்தது நான்கு வாரங்களுக்கு விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் தசைக்காயம் காரணமாக  இன்னொரு கோல் கீப்பரான மனுவல் நியூயர் ஏப்ரல் மாத தொடக்கத்திற்கு முன்பு திரும்ப மாட்டார் என்று கொம்பனி கூறினார்.

 திங்கட்கிழமை அன்று அர்பிக் தனது மீள்வருகைக்கான முதல் அடியை எடுத்து வைத்தபோது, பேயர்ன் அணியின் பயிற்சி மைதானம் ஊடகங்களின் தீவிர கவனத்தை ஈர்த்தது. சேபனர் ஸ்ட்ராஸ்ஸில் உள்ள பயிற்சிப் பகுதியைச் சுற்றியுள்ள பெரிய திரைகளுக்குப் பின்னால் ஒரு பார்வை பார்க்க டஜன் கணக்கான தொலைக்காட்சி குழுக்கள் முயன்றன.

ஆசிரியரான  ஜேர்மானியத் தாய்க்கும் , டொக்டரான அமெரிக்கத் தந்தைக்கும் மகனான, நியூயார்க்கில் பிறந்த பிரஸ்காட், பெர்காமோவில் முதல் முறையாக பேயர்ன் அணியில் சேர்க்கப்பட்டு, மாற்று வீரராக அமர்ந்திருந்தார். 1.96 மீற்ற‌ர் உயரமுள்ள இந்தக் கோல்கீப்பர் ஒரு விதிவிலக்கான திறமையாளராகக் கருதப்படுகிறார், மேலும் வரும் ஆண்டுகளில் பேயர்ன் அணிக்கு ஒரு சாத்தியமான எதிர்காலத் தேர்வாகவும் பார்க்கப்படுகிறார்.

பேயர்ன் அணியின் கோல்கீப்பர் பற்றாக்குறையால்,  லியோனார்ட் பிரஸ்காட் இரண்டு முக்கிய சாதனைகளை முறியடிக்க உள்ளார். 

ச‌ம்பியன்ஸ் லீக்கில் விளையாடிய மிக இளம் வயது கோல்கீப்பர் என்ற பெருமையைப் பெறுவார் (மார்டன் வான்டெவூர்ட்டின் 17 வயது 287 நாட்கள் என்ற சாதனையை ஒரு வருடத்திற்கும் மேலாக முறியடிப்பார்) — பேயர்ன் முனிச் அணியின் மூத்தோர் பிரிவு வரலாற்றிலேயே மிக இளம் வயது கோல்கீப்பர் என்ற பெருமையைப் பெறுவார் 23 செப்டம்பர் 2009 அன்று பிறந்த இவருக்கு, அப்போது  16 வயது  176 நாட்கள் ஆகியிருக்கும். சம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இது இதற்கு முன் ஒருபோதும் நடந்ததில்லை.

சிலம்பு

22/33/26 

ஈரானின் போட்டிகளை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்ற பேச்சுவார்த்தை


  உதைபந்தாட்ட  வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக,   ஈரான் விளையாடும் உலகக்    கிண்ணப் போட்டிகளை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றுவதற்காக்    ஈரான்  உதைபந்தாட்ட  கூட்டமைப்பு ,பீபாபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈரான்   உதைபந்தாட்ட  தலைவர் மெஹ்தி தாஜ் கூறினார்.

ஈரான் பங்கேற்பதை வரவேற்பதாக அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் கூறினார், ஆனால் "அவர்களின் சொந்த உயிர் மற்றும் பாதுகாப்பிற்காக" அவர்கள் அமெரிக்காவில் விளையாடுவது பொருத்தமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.
"
ஈரான் தேசிய அணியின் பாதுகாப்பை தன்னால் உறுதி செய்ய முடியாது என்று டிரம்ப் வெளிப்படையாகக் கூறியுள்ள நிலையில், நாங்கள் நிச்சயமாக அமெரிக்காவுக்குப் பயணிக்க மாட்டோம்," என்று மெக்சிகோவில் உள்ள ஈரான் தூதரகத்தின் X கணக்கில் தாஜ் பதிவிட்டுள்ளார். நாங்கள் அமஎரிக்காவைப் பகிஷ்கரிக்கொறோம்  உலகக்கிண்ணத்தைப் பகிஷ்கரிக்கவில்லை என்று  ஈரானின்  உதைபந்தாட்டத் தலைவர் மெஹ்தி தாஜ்  தெரிவித்துள்ளார்
அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து தெஹ்ரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்து, அந்நாட்டின் உச்சத் தலைவரைப் படுகொலை செய்ததால், ஈரானிய வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்பது சாத்தியமில்லை என்று ஈரானின் விளையாட்டுத்துறை அமைச்சர் கடந்த வாரம் கூறினார்.
"
இறுதியில், அவர்கள் விளையாடுகிறார்களா இல்லையா என்பதை கூட்டமைப்புதான் முடிவு செய்ய வேண்டும். இன்றுவரை, அவர்கள் உலகக் கிண்ணப் போட்டியில்  பங்கேற்கப் போவதாக கூட்டமைப்பு எங்களிடம் தெரிவித்துள்ளது," என்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் ஆப்பிரிக்க  உதைபந்தாட்ட   கூட்டமைப்பின் (AFC) பொதுச் செயலாளர் வின்ட்சர் ஜான் கூறினார்

 

Tuesday, March 17, 2026

உலகக்கிண்ண உதைபந்தாட்ட‌ப் போட்டியில் இருந்து ஈரான் வெளியேறியது


 இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி, அதன் தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்றதை அடுத்து, 2026 உலகக்  கிண்ண உதைபந்தாட்டம் போட்டியில்   ஈரான்  விளையாடாது என  அந்த நாட்டு  விளையாட்டு அமைச்சர் அகமது டோன்யமாலி புதன்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும்  ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி, இஸ்லாமியக் குடியரசின் உச்ச தலைவரைக் கொன்றன, இது வளைகுடாவில் பிராந்திய அளவிலான மோதலுக்கு வழிவகுத்தது.

"இந்த ஊழல் ஆட்சி எங்கள் தலைவரை படுகொலை செய்ததைக் கருத்தில் கொண்டு, எந்த சூழ்நிலையிலும் நாங்கள் உலகக்  கிண்ணப் போட்டியில் பங்கேற்க மாட்டோம் " என்று அமைச்சர் அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

48 அணிகள் பங்கேற்கும் உலகக்  கிண்ணப் போட்டி ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

 பெல்ஜியம், எகிப்து,  நியூசிலாந்து அணிகளுடன் குழு  ஜி இல்  இடம்  ஈரான் ப்டம் பிடித்தது.  ஜி குழுவின் மூன்று  போட்டிகள் அமெரிக்காவிலும், இரண்டு போஓட்டீகால்  லொஸ் ஏஞ்சல்ஸிலும், ஒன்று சியாட்டிலிலும் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் போட்டிக்குத் தகுதி பெற ஆசிய தகுதிச் சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய ஈரான், கடந்த வாரம் அட்லாண்டாவில் நடைபெற்ற உலகக் கிண்ண  பங்கேற்பாளர்களுக்கான  பீபாதிட்டமிடல் உச்சிமாநாட்டில் பங்கேற்காத ஒரே நாடு ஆகும்.

 பீபாவின் விதிமுறைகளின்படி, "முதல் போட்டிக்கு 30 நாட்களுக்கு முன்னதாக" போட்டிகளில் இருந்து விலகும் எந்தவொரு அணிக்கும்  பீப்   ஒழுங்குமுறைக் குழுவால் குறைந்தது 250,000 சுவிஸ் பிராங்குகள் ($320,800) அபராதம் விதிக்கப்படும்.

 ஈரானுக்குப் பதிலாக      ஈராக்? 

 உலகக்கிண்ணப் போட்டியில் இருந்து  ஈரானின் விலகல், அதன் அண்டை நாடான ஈராக் அணிக்கு சாதகமாக அமையும். தற்போதைய நிலவரப்படி, இந்த மாத இறுதியில்  பிளே-ஆஃப் போட்டியில் ஈராக் விளையாட உள்ளது.

பீபாவின் தகுதி விதிமுறைகளின்படி, ஈரான் போட்டியில் இருந்து விலகினால், மேற்கு ஆசியாவிலிருந்து அடுத்த சிறந்த தரவரிசையில் உள்ள அணி உலகக்  கிண்ணத்தில் விளையாடத் தகுதி பெறும்.

ஈராக்  நாடு ஈரானை விட சற்று கீழே தரவரிசையில் இருந்தாலும், உலகக்  கிண்ண இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்துவிட்டது.

 இதனால் பிளேஆஃப்களில் ஈராக்கின் இடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வழங்கப்படும், ஏனெனில் அது AFC ஐந்தாவது சுற்று தகுதிச் சுற்றுகளில் முந்தைய அணியிடம் தோல்வியடைந்தது.

 


 

 

 

மெக்சிக்கோ கோல்கீப்பர் மலகன் உலகக் கிண்ணத்தில் இல்லை


  மெக்சிக்கோ  அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கோல்கீப்பர் லூயிஸ் மலகன், அகில்லெஸ் தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்டதால், இந்த ஆண்டு  பீபா உலகக்  கிண்ணப் போட்டியில்  இருந்து விலகுவார் என்று லிகா MX கிளப் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

 

செவ்வாய்கிழமை பிலடெல்பியாவில் நடந்த CONCACAF சம்பியன்ஸ் கிண்ண  சுற்று 16க்கான முதல் லெக் போட்டியில் அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் முதல் பாதியில் 29 வயதான அவர் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் காயம் உறுதி செய்யப்பட்டது.

"லூயிஸ் ஏஞ்சல் மலகனுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அகில்லெஸ் தசைநார் சிதைந்திருப்பதைக் காட்டுவதாக கிளப் அமெரிக்கா தெரிவித்துள்ளது" என்று மெக்சிகோ நகரத்தை தளமாகக் கொண்ட கிளப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காயம் குணமடைய பொதுவாக ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர், இதனால் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் உலகக் கோப்பையில் இருந்து அவர் நீக்கப்படுவார்.

2023 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகமானதிலிருந்து மலகான் 19 மெக்சிகோவிக்காக விளையாடினார். அவற்றில்  13 போட்டிகளில் எதிரணிகள் கோல் அடிக்கவில்லை

 

 

Saturday, March 14, 2026

அமித்ஷாவின் பிடியில் எடப்பாடி விஜய்யை எதிர்பார்க்கும் பாரதீய ஜனதா

அதிமுகவை சிதைத்து தமிழகத்தில்   கால் பதிக்கிறது பாரதீய ஜனதா

விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்திய பவன் கல்யாண்

சசிகலாவுடன்  டாக்டர் ராமதாஸ்  கைகோர்த்ததால் அதிமுகவுக்கு பின்னடைவு

தமிழகத்தில் எடப்பாடியின் பெயரைச் சொல்லாத பிரதமர்  மோடி

 

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் மாறுபடுகிறது.  காங்கிரஸ், தேமுதிக, மதிமுக  ஆகியவற்றுக்கு எததை தொகுதிகள் என்பதை திமுக முடிவு செய்துவிட்டது.  மற்றைய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.  கூட்டணிக் கட்சிகளுடனான  பேச்சு வார்த்தையை அதிமுக  இன்னமும் ஆரம்பிக்கவில்லை. எடப்பாடி அடிக்கடி டெல்லிக்குச் சென்று அமித்ஷாவைச் சந்திப்பதால் முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறார்.தமிழகத் தேர்தலில் அதிமுகவின் தலமையில்தான் கூட்டணி அறுதிப் பெரும்பானமையுடன் வெற்றி பெற்று  நான்  முதல்வராவேன் என எடப்பாடி சூளுரைத்துள்ளார்.ஆனால், அவரது கூட்டணியில் இருக்கும் பாரதீய ஜனாவின்  கணக்கு வேறு மாதிரி உள்ளது. அதிமுகவின் தலைமையிலான கூட்டணி என பாரதீய ஜனதா சொல்வதில்லை.    என்டிஏ கூட்டணி எனத்தான் பாரதீய ஜனதா முன்னிலைப் படுத்துகிறது.  தமிழகத்தில் அமித்ஷா கலந்துகொண்ட   கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பெரியாரின் சிலை அகற்றப்பட்டது. பாரதீஜ ஜனதாக் கட்சியின்  முதல் எதிரி பெரியார்.திராவிடன் கழகம், திமுக, அதிமுக, அதிமுக ஆகிய  கட்சிகளில்  பெரியாரின் படம் பிரமாண்டமாக முன்னிலைப் படுத்தப்படும்.  எம்ஜிஆர் காலத்த்ஹில் இருந்து இன்றுவரை காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் பெரியானின் படத்தை பாரதீய ஜனதா அகற்றியதறும் எதிராக அதிமுகவில் உள்ள எவரும்  வாயைத் திறக்கவில்லை. எதிர்க் கட்சிகள்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெரியாரின் கொள்கைகளில் தமிழகம் கட்டுண்டு கிடக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த அனைவரும் பெரியாருக்கு உரிய மரியாதை கொடுக்கிறார்கள். நடிகர் விஜயும் பெரியாரைத் தூக்கிப் பிடிகிறார். பெரியாரைப் பெரிதும் புகழ்ந்த சீமான், இப்போ  பெரியாரை இகழ்வதைக் கொள்கையாகக் கொண்டுள்ளார்.

கூட்டணிக்கு தலைமை  தாங்கும்  கட்சியின் அலுவலகத்திலே வழமையாகப் பேச்சுவார்த்தை நடைபெறும். அமித்ஷா தமிழ்கத்துக்கு விஜயம் செய்த பின்னர் அவருக்குப் பின்னால் எடப்பாடி டிலிக்குச் சென்ரு பேச்சுவார்த்தை நடத்தியது ஏன் எனப்து  புரியாத புதிராக  உள்ளது. மதுராந்தகம், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்ற பிர்மாண்டமான மாநாட்ட்சில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.  எங்குமே எடப்பாடியின் பெயரையும், அதிமுகவையும் மோடி உச்சரிக்கவில்லை. கடசியாக திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில்  கட்சித் தலைவர்களின் படங்கள் காட்சிப் ப்டுத்தப் பட்டிருந்தன. எடப்பாடியின்  ப்டம்  அங்கு இல்லாதது பேசு பொருளாக இருந்தது.

தமிழகத்தில்  திமுகவுக்குப் போட்டியாக இருந்த அதிமுக எனும் பிரமாண்டமான கட்சியை பாரதீய ஜனதா விழுங்கி ஏப்பம் விட்டுள்ளது. இதனைப் புரிந்து கொண்ட அதிமுகவின்  அடுத்த கட்டத் தலைவர்கள் திமுகவிடம் சரணடைந்துள்ளனர். அதிமுகவுக்குப் போட்டியாக விஜயை  முன்னிலைப்படுத்த பாரதீய ஜனதா விரும்புகிறது. கடைசிக் கட்ட ஆயுதமாக பவன் கல்யாணை  பாரதீய ஜனதா தூது விட்டுருக்கிறதாக அரசல் புரசலாக செய்தி வெளியாகி உள்ளது.

விஜய்க்கு இணையான நடிகர் சிரஞ்சீவி  அவர் அரசியக் கட்சி ஆரம்பித்தபோது ஆந்திர மக்கள் அவர் பின்னால் இருந்தனர்.  அடுத்த முதல்வர் சிரஞ்சீவி  என்பது  அவரின்  பின்னாள் திரண்ட கூட்டம்  உறுதிப்படுத்தியது. 2008-ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆந்திரப் பிரதேசத்தில் பிரஜா ராஜ்ஜியம் கட்சி  என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். சமூக நீதி , ஊழலற்ற ஆட்சியை வலியுறுத்தி தொடங்கப்பட்ட இக்கட்சி, 2009 தேர்தலில் போதிய வெற்றியைப் பெறாததால், 2011-ல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைக்கப்பட்டது. பின்னர் சிரஞ்சீவி காணாமல் போய்விட்டார்.  பவன் கல்யாணின் கதை அப்படியானதல்ல பாரதீய ஜனதாவுடன்  இணைந்த  பவன் கல்யாண் இன்று  துணை முதல்வராக இருக்கிறார். இவை எல்லாம் விஜய்க்கு எடுத்துச் சொல்லப்பட்டது. விஜயின்  முடிவுக்காக பாரதீய ஜனதா காத்துக் கொண்டு இருக்கிறது.


முதல்வர் ஸ்டாலினும் , வைகோவும் கூட்டணி பேச்சிவார்த்தையை முடித்து விட்டனர்.  மதிமுகவுக்கு  4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டன் மதிமுக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் பொதுச் சின்னத்திலும் மதிமுக போட்டியிட  உள்ளது.

மதிமுகவின் எதிர்காலம் , தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதா வைகோ தெரிவித்தார். "கட்சியின் தனித்தன்மையை நிலைநாட்டவும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் குறைந்தது ஒரு தொகுதியிலாவது தனிச் சின்னத்தில் போட்டியிடுவது அவசியம் என கட்சியின் உயர்நிலைக் குழு முடிவெடுத்தது. அதன் அடிப்படையிலேயே இந்த தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்துள்ளது," என்று அவர் கூறினார்.  மனிதநேய மக்கள் ,இந்திய முஸ்லீம் கட்சிக ஆகியவற்றுக்கு  தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் கிங் மேக்கராக முன்னொரு காலத்தில்  கோலோச்சிய டாக்டர் ராமதாஸை இன்று கவனிப்பார் எவரும் இல்லை. அவருடைய மகன் அன்புமணி பாரதீய ஜனதாவின்  ஆதரவுடன்  எம்பியாகிறார். ரமதாஸுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் எப்படும்  எட்டாப்பொருத்தம். ஆகையால்  திமுகவின் பக்கம் வண்டியைத் திருப்பினார். அங்கே நந்தியாக திருமாவளவன் குந்தி இருக்கிறார்.  விஜய்யின் பக்கம் முயற்சித்தார். அங்கும் கதவு திறக்கப்படவில்லை. இப்போ சசிகலாவுடன்  கூட்டணி சேர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி என்ற அடைமொழியுடன் அரசியலில் கோலோச்சிய சசிகலாவும் அரசியல் அநாதையாகி விட்டார். இந்தக் கூட்டணி  வெற்றி பெறாது. ஆனாலும், அதிமுகவின் வாக்கு வங்கிக்கு ஆப்பு வைக்கப்போகிறது.

தைலாபுரம் ச் என்ற சசிகலா அங்கு டாக்டர் ராமதாஸைச் சந்தித்தார். பலமான கட்சிகள்  ஒன்றிணைவது அதிசயமல்ல. பெரிய கட்சிகளால் தனித்து விடப்பட்ட  ராமதாஸும், சசிகலாவும்  இணைந்தது ஆச்சரியமாகக்ப் பார்க்கப்படுகிறது. 30 சத வீதத்துக்கும் அதிகமாக இருந்த  அதிமுகவின் வாக்கு வங்கி  20  சதவீதமாகக் குறாஇந்துள்ளது. இந்த நிலையில் சசிகலா, ராமதாஸ் கூட்டணியும் அதிமுகவின் வாக்கு வங்கியைச் சிதைக்கப்போகிறது.

  சசிகலாவின்  செயற்பாடு , "துரோகங்களை வீழ்த்துவது" என்ற ஒற்றை இலக்கை முன்னிறுத்தி நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது.. சசிகலாவும் அதிமுகவில் தனக்கான இடத்தை இழந்து தனித்து விடப்பட்டுள்ள நிலையில், ராமதாஸுடன் அவர் கைகோர்ப்பது என்பது தென் மாவட்ட முக்குலத்தோர் வாக்குகளையும் வட மாவட்ட வன்னியர் வாக்குகளையும் ஒரு புள்ளியில் இணைக்கும் முயற்சியாகும்.

அதிமுகவின் கோட்டைகளாக கருதப்படும் பகுதிகளில் வாக்குகளை பிரிப்பதன் மூலம், அதன் வெற்றி வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் வலிமை இந்த அணிக்கு உண்டு. அதேபோல் பாஜகவின் வாக்கு வேட்டைக்கும் இது முட்டுக்கட்டையாக அமையும்.  அதேசமயம்  தங்களை ஓரங்கட்டியவர்களுக்குத் தரும் பதிலடியாகவும்  இது அமையக்கூடும்.

பெரிய கட்சியும், சிறிய கட்சிகளும்  ஒன்றிணைந்து பலமான கூட்டணியை உருவாக்குவதே தேர்தல் கால முக்கிய வேலைத்திட்டமாகும். 2014 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர்  இந்த நிலைப்பாடு மாற்றமடைந்துள்ளது.

மகாராஷ்டிராவின் அசுர பலத்துடன் இருந்த சிவசேனாவுக்குள் ஊடுருவிய பாரதீய ஜனதா, அந்தக் கட்சியை இரண்டாக்கியது. இப்போ பாரதீய ஜனதாவின் உதவியில் அங்கு  ஆட்சி நடக்கிறது.அருணாசலப் பிரதேசத்தில் மக்கள் கட்சியை  மென்று விழுங்கியது பாரதீய ஜனதா.  மணிப்பூர், கோவா, சிக்கிம், பீகார் வரை பாரதீய ஜனதாவின்  அசுரக் கை நீண்டுள்ளது.

 

பாரதீய ஜனதாவின் உறவால் வலிமையிழந்த மாநிலப் பட்டியல் மிக நீளமானது. அந்த வரிசையில் கடைசியாக அதிமுக சேர்ந்துள்ளது.

ரமணி

15/3/16