Sunday, February 1, 2026

அதிர்ச்சி தரும் கருத்துக் கணிப்புகள் சூடாகும் தமிழக தேர்தல் களம்


 பாமகவின் மம்பழம் துண்டு துண்டாக சிதறியது

மகனை எம்பியாக்க கட்சி நடத்துகிறார் பிரேமலதா

திமுகவுக்கு எதிராக காங்கிரஸுக்குள்  போர்க்கொடி

எடப்பாடிக்குத் தூது விடும் பன்னீர்ச்செல்வம்

தமிழக தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. கூட்ட்டணிக்கட்சிகளை சமாதானப் படுத்துவதில் பிரதான கட்சிகள்  முனைப்புக்காட்டுகின்றன. தோழமைக் கட்சிகளை சமாதானப் படுத்த ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாரதீய ஜனதா செல்வாக்குச் செலுத்துகிறது.

தேர்தலுக்கு முன்னைய ஒருதலைப் பட்சமான  கருத்துக் கணிப்புகள் நடுநிலையான வாக்காளர்களைக் குழப்புகின்றன.பெரும்பாலான திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குன் என  பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் இன்று  இந்திய நாடாளுமன்றத்  தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என இந்தியா டுடே, சி வோட்டர்ஸ்  ஆகியனவற்றின்  கணிப்பு தெரிவிக்கின்றன. தமிழகத்தின் தலைவிதியை மாற்றி அமைகும் எனக் கூறப்படும் விஜயின் தவெகவுக்கு 3வது இடம் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

45% வாக்குகளுடன் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், 33% வாக்குகளுடன் அதிமுக கூட்டணி ஒரே ஒரு தொகுதியிலும்  வெற்றிபெறும் என்கிறது கணிப்பு. தவெக 15% வாக்குகளை பெறும்  ஆனால்  ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என  கணிப்பு வெளியாகியுள்ளது.

வழக்கமாக  நாடாளுமன்றாத் தேர்தலுக்கு முன்னரும், பின்னரும்தான் கருத்துக்கணிப்புகள் வெளியாகும். ஆனால், இந்தியா டுடே  , சி வோட்டர் இணைந்து நடத்தும் 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி , ஓகஸ்ட் மாதங்களில் வெளியாகும். தற்போது  தேர்தல் நடத்தப்பட்டால், என்டிஏ கூட்டணி, இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளை வெல்லும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்கம் தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

இந்தியா டுடே ஆய்வாளர்கள், பல்வேறு அரசியல் கணிப்புகளின்படி, தவெக வரவிருக்கும் தேர்தலில் 15% முதல் 20% வரை வாக்கு சதவிகிதத்தைப் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தரப்பில் எடுக்கப்பட்ட ஒரு இரகசியக் கணிப்பில், தங்களுக்கு 30% வாக்குகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 15% மட்டும் வாக்கு சதவிகிதம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, விஜய்யின் அரசியல் வருகை குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. தவெக பெறும் வாக்குகள் பிரதானமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் சரிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மட்டுமல்லாது 2026 தேர்தலில் திமுக கூட்டணி ஒரு வலுவான நிலையில் இருந்தாலும், விஜய்யின் தவெக மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்து வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றத்தைச் செய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்கத் தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் இருந்த டாக்டர் ராமதாஸை  இன்ரு யாருமே திரும்பிப் பார்க்கவில்லை. கட்சிக்குள் உருவான பூகம்பம் குடும்பத்தைப் பிரித்துவிட்டது.  ராமதஸின் மகன் அன்புமணி தனது பரிவாரங்களுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள் சரணடைந்து விட்டார். அப்பாவும், மகனும் ஒன்றாக இருக்கும்போதே தேர்தல்களின் படுதோல்வி. இனிமேல் மேலே எழு வாய்ப்பு இல்லை என்றே கூறலாம். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ராமதாஸ் தூது விட்டார். அங்குள்ள திருமாவளவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால்   விஜயின் பனையூர்பகம் வண்டியைத் திருப்பிவிட்டார்.

விஜயகாந்த் உயிரோடு இருக்கும்  போதே கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. அந்தக் கனவில் இருந்து இன்னமும் மீளாத பிராமலதா மேடைகளில் சவால் விடுகிறார். மகனை எம்பியாக்குவதற்கு மிரட்டுகிறார். ஸ்டாலினும், எடப்பாடியும் பிடி கொடாமல் நழுவுகிறார்கள்.

பன்னீரை நம்பி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரும் அவரைக் கைவிட்டுவிட்டனர். ஒருவர் மீண்டும் எடப்பாடியிடன் சென்றுவிட்டார். ஒன்னொருவர் விஜயின் பக்கம் சாய்ந்துள்ளார். மற்றைவர்கள்  அனைவரும் அறிவாலயம் சென்று ஸ்டாலினுடன் இணைந்து விட்டனர்.

இத்தனை ஆண்டுகளாக நல்ல பிள்ளைபோல அமைதியாக  இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள்  இப்போதுமுரன்டு பிடிக்கத்தொடாங்கி விட்டனர். அதிக தொகுதி ஆட்சியில் பங்கு என விஜய்  போட்ட வலையில் வசமாகச் சிக்கி விட்டனர்.

காங்கிரஸ் உடனான 40 இட மோதல் கூட்டணி விரிவடைந்தாலும், பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்கும் தி.மு.-விற்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் உரசல் நிலவியது.

காங்கிரஸ் கட்சி இந்த முறை தி.மு.-விடம் 40 இடங்களைக் கோரியது.  ஆனால், தி.மு. தரப்போ கடந்த தேர்தல்களின் செயல்திறன் மற்றும் தற்போது பெருகியுள்ள கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் காரணம் காட்டி, காங்கிரஸின் கோரிக்கையை ஏற்க மறுத்தது.. பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கும் கனிமொழி இந்தச் சிக்கலான சூழலைச் சுமுகமாக முடிக்க, முதல்வர் மு..ஸ்டாலின் தனது சகோதரியும்  பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார்.

கனிமொழி - ராகுல் உயர்மட்ட சந்திப்பு நடந்தது. இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நடந்ததாக சொல்லப்படுகிறது.

  தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருந்தபோதிலும்   தொகுதிப் பங்கீடு குறித்து எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்பே இல்லை என்பதை திமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்பே இல்லை என்பதே திமுகவின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்த மீட்டிங்கில் காங்கிரஸை மதிக்க வேண்டியதன் அவசியத்தை ராகுல் காந்தி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.. மேலும், தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலைத் தீர்க்க கார்கே தலைமையிலான குழுவுடன் திமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.  ஆட்சிய்ல் பங்கு இல்லை என்பதை ராகுலுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லப்பட்டது. திமுக கூட்டனியில் காங்கிரஸ் இருக்கும் எனப்தை ராகுல் உறுதிப் படுத்தியுள்ளார்.

தேர்தல் திகதி அறிவித்த பின்னர் தமிழ்க அரசியல் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கும்

ரமணி

1/2/26

    

3 ரஷ்ய வீரர்களுக்கும் , 7பெலாரஸ் வீரர்களுக்கும் ஒலிம்பிக்கில் அனும்தி


 

 இத்தாலி மிலன் கோர்டினாவில்   நடைபெறும் ஒலிம்பிக்கில்  மொத்தம் 13 ரஷ்ய விளையாட்டு வீரர்கள்   நடுநிலை நபர்களாகப் போட்டியிட உள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2022  பீஜிங்கில்  ரஷ்ய அணியில் 200 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இருந்தனர், இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு இராணுவ படையெடுப்பிற்கு நான்கு நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது, இது சர்வதேச விளையாட்டுகளில் பெரும்பாலானவற்றிலிருந்து விலக்கப்பட வழிவகுத்தது.

அடுத்த வாரம் பிப்ரவரி 6 ஆம் திகதி தொடங்கும் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏழு பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் இப்போது அழைக்கப்பட்டுள்ளனர். ரஷ்யர்களுக்கும் பெலாரஷ்யர்களுக்கும் அணியின் நிறங்கள், கொடி அல்லது கீதம் போன்ற தேசிய அடையாளங்கள் இருக்காது தொடக்க விழா தடகள அணிவகுப்புகளில் பங்கேற்க முடியாது.

உக்ரைன் மீதான தங்கள் நாடுகளின் போரை தீவிரமாக ஆதரிக்கவில்லை என்று தீர்மானிக்கப்பட்ட மற்றும் இராணுவ அல்லது மாநில பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படாத தனிப்பட்ட விளையாட்டுகளில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவால் நடுநிலை அந்தஸ்தை அங்கீகரிக்க முடியும்.

ஒலிம்பிக்கில் ஆல்பைன் ஸ்கீயிங் போட்டியில் பங்கேற்க இரண்டு ரஷ்ய விளையாட்டு வீரர்களும் ஒரு பெலாரஷ்யரும் அழைக்கப்பட்டுள்ளனர், இருப்பினும் யாரும் உண்மையான பதக்கப் போட்டியாளராக இல்லை.

2024 பாரிஸ் கோடைக்கால விளையாட்டுப் போட்டிகளில் இருந்ததைப் போலவே, ஐஸ் ஹாக்கி போன்ற குழு விளையாட்டுகளிலிருந்து ரஷ்யா இன்னும் விலக்கப்பட்டுள்ளது.

2022 பீஜிங் ஒலிம்பிக்கில், ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ROC இல் போட்டியிட்டு ஐந்து தங்கம் உட்பட 32 பதக்கங்களை வென்றனர் - இது ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் சுருக்கமாகும், இது நீண்டகாலமாக மாநில ஊக்கமருந்து ஊழலில் தண்டனையாக ஒரு நடுநிலை பட்டமாகும்.

அடுத்த மாதம் இத்தாலியில், விளையாட்டு வீரர்கள் AIN என்று அழைக்கப்படுவார்கள், இது தனிநபர் நடுநிலை விளையாட்டு வீரர்களுக்கான பிரெஞ்சு சுருக்கமாகும்

செனகல் , மொராக்கோ அணிகளுக்கும் பயிற்சியாளர் தியாவுக்கும் அபராதம்

மொராக்கோவிற்கு எதிரான ஆப்பிரிக்கக் கிண்ண  (AFCON) இறுதிப் போட்டியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, செனகல் பயிற்சியாளர் பாப் தியாவுக்கு ஆப்பிரிக்க  உதைபந்தாட்ட கூட்டமைப்பு     தடை விதித்துள்ளதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 18  ஆம் திகதி  ரபாட்டில் நடந்த இறுதிப் போட்டியின் போது, "விளையாட்டுக்குக் கேடு விளைவித்ததற்காகவும்,  "விளையாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதற்காகவும்  இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் செனகல் ஃபார்வர்டுகளான இலிமான் நிடியாயே ,இஸ்மாயிலா சார் ஆகியோர் "நடுவருக்கு எதிராக மோசமான நடத்தை" காரணமாக இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டனர்.

இறுதிப் போட்டியின் போது பல்வேறு குற்றங்களுக்காக செனகல்  உதைபந்தாட்ட   கூட்டமைப்புக்கு (FSF) மொத்தம் USD 615,000   அபராதம் விதிக்கப்பட்டது.

விளையாட்டுக்கு ஒவ்வாத நடத்தை" காரணமாக, மொராக்கோ ஃபார்வர்ட் இஸ்மாயில் சாய்பாரிக்கு மூன்று போட்டிகள் தடை , 100,000 அமெரிக்கடொலர் அபராதம் விதிக்கப்பட்டது, அதே நேரத்தில் கப்டனும் டிஃபெண்டருமான அக்ரஃப் ஹகிமிக்கு இரண்டு போட்டிகளில் விடையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

" தகாத நடத்தைக்காக" ராயல் மொராக்கோ  உதைபந்தாட்ட  கூட்டமைப்புக்கு (FRMF) 200,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

VAR மறுஆய்வுப் பகுதிக்குள் படையெடுத்து காங்கோ நடுவரின் பணியைத் தடுத்த வீரர்கள், தொழில்நுட்ப ஊழியர்களின் "முறையற்ற நடத்தைக்கு" கூடுதலாக 100,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டது

மொராக்கோ ஆதரவாளர்கள் செனகல் வீரர்களின் கவனத்தை சிதறடிக்க லேசர்களைப் பயன்படுத்தியதால் 15,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது

 

Tuesday, January 27, 2026

சூடு பிடிக்கும் தமிழக அரசியல் கட்சிமாறும் தலைவர்கள்


 திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டிய காங்கிரஸ் அடிபணிந்தது.

சபதத்தைக்  கைவிட்டு தினகரனுடன் கைகோர்த்த எடப்பாடி

தனிமரமானார் முன்னாள் முதல்வர் பன்னீர்ச்செல்வம்

மதில்மேல் பூனையாக காத்திருக்கும்பிரேமலதா

மாம்பழத்துக்காக சண்டையிடும் அப்பாவும், மகனும் 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் நிலையில் அரசியல்களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. தேர்தலுக்கு முன்னர் பலமான கூட்டணி அமைப்பதில் பெரிய கட்சிகள் அதீத ஆர்வம் காட்டுகின்றன. தமிழகத்தி மிகப்ப்பெரும் சக்தியாக  உருவெடுக்கும் எனக் கணிக்கப்பட்ட விஜயை, முக்கிய கட்சிகளும், சிறிய கட்சிகளும்  புறக்கணித்துள்ளன.

விஜயை  முன்னிறுத்தை திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேரம் பேசலாம் எனக் கணக்குப் போட்ட காங்கிரஸ் கட்சி,  அடிபணிந்து விட்டது.  100 தொகுதிகள் ,துணை முதலமைச்சர் பதவி என விஜய் ஆசைகாட்டியும், டெல்லி மேலிடம் இணங்கவில்லை.

தமிழக காங்கிரஸ்காரகள் சிலர் பதவி ஆசையால் விஜயின் வலையில் சிக்கினார்கள். விஜயுடன் கூட்டுச் சேர்ந்தால் அணை மாநிலங்களான தெலுங்கானா, கர்நாடகம் ஆகியவற்றில் உள்ள விஜய் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று அங்கும் ஆட்சியில் பங்கேற்கலாம் எனக் கருதினார்கள்.

காங்கிரஸ் கூட்டணி டெல்லியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி.) தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில்  ராகுலின் முன்னிலையில்நடந்த முக்கிய கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள், ஆளும் தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி தொடர விரும்புவதாகத் தெளிவுபடுத்தினர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் மட்டுமே அமைச்சர் பதவிகளைக் கோரும் என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியை உடைத்தால், அதன் தாக்கம் தமிழ்நாட்டோடு நிற்காது. தேசிய எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, இந்திய அரசியலின் அடிப்படைகளையே மாற்றிவிடும் என்று காங்கிரஸ் தேசிய தலைமை அஞ்சுவதாக கூறப்டுகிறது. திமுக வெளியேறினால், மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ், சரத் பவார் இந்தியா கூட்டணியில் நீடிப்பது சந்தேகமே. அவர்களுக்கு இக்கூட்டணி வெறும் தேர்தல் கணக்கீடு, உணர்வுபூர்வமானது அல்ல. தெற்கின் முக்கிய தூணான திமுகவை இழப்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.

'இந்தியா' கூட்டணியில் உள்ள பிராந்தியக் கட்சிகள் கூட்டாக வென்ற சுமார் 100 தொகுதிகளுக்கு , அடுத்த தேர்தலில் சிக்கல் ஏற்படும். ஒருங்கிணைப்பு இல்லாததால் வாக்குகள் பிளவுபட்டு, மும்முனைப் போட்டிகள் உருவாகி, எதிர்க்கட்சி அரசியல் விரைவாகச் சிதறிவிடும். தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு இதன் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்கும். திமுகவின் ஆதரவின்றி, தற்போதுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் யாரும் மீண்டும் பாராளுமன்றத்துக்குச் செல்ல முடியாது.  . இந்தக் கூட்டணி வெறும் கூடுதல் பலம் அல்ல, அதுவே காங்கிரஸின் உயிர்நாடி. இந்திய அரசியலில், கூட்டணிகள் என்பது உயிர்வாழும் கட்டமைப்புகள். ஒரு முக்கிய தூண் அகற்றப்பட்டால், முழு கூரையும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

பன்னீர்ச்செல்வம்,சசிகலா,தினகரன் ஆகிய மூவரையும் கட்சியில் சேர்க்க மாட்டேன் எனச் சபதம் செய்த எடப்பாடி தற்போது தினகரனை  செங்கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார்.வெளியே போன அண்ணா திராவிட வாக்குகள் திரும்பவும்  கிடைக்கும். இதைத் தவிர  எடப்பாடிக்கு எந்த இலாபமும் இல்லை.தினகரனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. ஏழு தொகுதிகலும் ஒரு எம் பி பதவியும் கொடுக்கப்படும் என தினகரனுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாம். துரோகத்திற்கான நோபல் பரிசை கொடுத்தால், அதனை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் சில வாரங்களுக்கு முன் விமர்சித்திருந்தார்.

அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது என்ற  அறிவிப்பை வெளியிட்ட தினகரன் ,மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை   சந்தித்தார்.   அதிமுகவுடன் இருப்பது பங்காளி சண்டை மட்டும்தான் என்றும், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்றும் கூறி இருந்தார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமியுடன் டிடிவி தினகரன் சந்திப்பு நடத்தாதது பேசுபொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனை வரவேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

தினகரன் சட்டசபை உறுப்பினராவார். அவரின் கட்சியைச் சேர்தவர்களில்  ஒருவர் அல்லது. இரண்டு பேர் சிலவேளை வெற்றி பெறலாம். சட்டசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு தினகரன் எம்பியாவார். அப்போது நடக்கும் தேர்தலில் சில வேளை அந்தத்தொகுதி திமுகவின் கைக்குப் போகலாம். ஊழல் வழக்குகளில் சிக்கிய தினகரன்  பாரதீய ஜனதாவின் கொள்கைப்படி இப்போது புனிதனாகி விட்டார்.

 மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், ஆலங்குளம் தொகுதி உறுப்பினர்  மனோஜ் பாண்டியன் ஆகிய இருவரும்  இராஜிநாமாச் செய்து விட்டு திமுகவில் இணைந்தார்கள். இவர்கள்  இருவரும்  பன்னீரின் தீவிர ஆதர்வாளர்கள்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த. பின்னர், தவெக தலைவர் நடிகர் விஜய் முன்னிலையில், அவரது கட்சியில் இணைந்தார்.

, வால்பாறை தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலமானார்.  சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பொன்னுசாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மறைந்தார். இந்த இரண்டு தொகுதிகளும் ஏற்கனவே காலியாக இருந்த நிலையில், தற்போது இராஜினாமாக்கள் காரணமாக காலியான தொகுதிகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

இதனால் அதிமுகவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. கூட இருந்தவர்கள் வெளியேறியதாலும், பாரதீய ஜனதா கைவிட்டதாலும்  பன்னீர்ச்செல்வம் தனிமரமாக இருக்கிறார்.  எடப்பாடியை எதிர்ப்பவர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிஜயுடன் இணைவார்கள் என செங்கோட்டியன் சொன்னார். அங்கிருந்து  வெளியேறுவதாகத் தெரியவில்லை.

தேர்தல் திகதி இன்னமும் அரிவிக்கப்படவில்லை தேர்தல் விஞ்ஞாபனத்தை எடப்பாடி வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு இலவச பஸ் பயணம்  மக்கள் மத்தியின் வெற்றி பெற்றதால் ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம் என அறிவித்துள்ளார்.

ஆட்சியைக் கைப்பறுவதற்காக அதிமுக வியூகம் அமைத்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதற்கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.

, சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2,000 வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். திமுக 1500 ரூபா வழங்குகிறது.

நகரப் பஸ்களில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா   பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். திமுகவால் அறிமுகப்படுத்தப்பட்ட  ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரபஸ்களில்  பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

 ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கின்றபோது, அரசே இடம் வாங்கி, அவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். கலைஞர் வீட்டுத்திட்டத்தை திமுக நடைமுறைப்படுத்தி வருகிறது.

100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தப்படும்.

அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் மூலம் மகளிருக்கு ரூ. 25,000 மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி ஐந்து வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

'அம்மா இல்லம் திட்டம்' மூலம், கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டி 'அம்மா இல்லம் திட்டம்' மூலம் விலையில்லாமல் வழங்கப்படும்.

பிரேமலதா வழக்கம் போல எந்த முடிவையும் எடுக்காது  காத்திருக்கிறார். காங்கிரஸ் வெளியேறினால், பிரேமலதாவை உள்ளே கோண்டுவரும் முடிவில்  ஸ்டலின் இருந்தார். காங்கிரஸை  சமாளிக்க  வேணை இருப்பதால்  ஸ்டாலினின் பார்வையில் இருந்து பிரேமலதா வெளியேறிவிட்டார். எடப்பாடியின் முடிவுக்கு பிரேமலத காத்திருக்கிறார். பிரேமலதா விரும்புவதை எடப்பாஅடி கொடுக்காவிட்டால், அவரது கார் விஜயின் பனையூருக்குச் செல்லும்.

பாட்டாளி மக்கள் கட்சியை அப்பாவும், மகனும்  பிரித்துவிட்டார்கள். கட்சியின் சின்னமான மாம்பழத்துக்கு இருவரும் உரிமைகோருகிறார்கள். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்ற  கோதாவில் இருந்து  வெளியேறிய அன்புமணி எடப்பாடியிடம்  ச‌ரணடைந்து விட்டார்.   ஸ்டாலினுடன் சேர்வதற்கான நாளை எதிர் பார்த்திருக்கிறார்  ராமதாஸ்.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழக தேர்தல் களம்   இதை விடச்சூடாக இருக்கும்  என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

ரமணி

25/1/26 

 

ஒலிம்பிக் கொப்பரைகளுக்கான வடிவமைப்பு வெளியிடப்பட்டது


 மிலானோ கோர்டினா 2026 இன் அனுரசரணையரான ஃபின்காண்டியேரியுடனான கூட்டாண்மை மூலம் உருவாக்கப்பட்ட இந்த கொப்பரைகள் மார்கோ பாலிச், லிடா காஸ்டெல்லி  , பாவ்லோ ஃபான்டின் ஆகியோரின்  உழைப்பாகும்.. வாழ்க்கை, ஆற்றல் மற்றும் புதுப்பித்தலின் முதன்மை ஆதாரமாகவும், தொடர்ச்சி மற்றும் மறுபிறப்பின் உலகளாவிய சின்னமாகவும் சூரியனுக்கு அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.

இந்த வடிவமைப்பு இத்தாலிய கலைஞர் டா வின்சி ,அவரது முடிச்சுகளால் ஈர்க்கப்பட்டது, இது இயற்கைக்கும் மனித புத்தி கூர்மைக்கும் இடையிலான நல்லிணக்கத்தைக் குறிக்கிறது. மறுமலர்ச்சி காலத்தின் மிகவும் பிரபலமான கலைஞர்களில் ஒருவருக்கும் மிலனுடனான அவரது வரலாற்று தொடர்புக்கும் அஞ்சலி, அவரது டியூக், லுடோவிகோ ஸ்ஃபோர்ஸா, டா வின்சியின் குருவாகவும் ஆதரவாளராகவும் இருந்தார்.

வலிமையான மற்றும் இலகுவான பொருட்களில் ஒன்றான விமான அலுமினியத்தால் ஆன இந்த கொப்பரைகள், திறப்பு ,மூடுதல் இயக்கத்தை உருவாக்கும் மாறும் கட்டமைப்புகளாகும், இது காலத்தின் தொடர்ச்சிக்கும் பகல் ,இரவுக்கு இடையிலான இயற்கையான மாற்றத்திற்கும் சாட்சியமளிக்கிறது. விரிவடைந்து சுருங்க வடிவமைக்கப்பட்ட அவை, ஒரு கலசத்தைப் போல, ஒலிம்பிக் சுடரின் விலைமதிப்பற்ற தன்மையை வெளிப்படுத்தி பாதுகாக்கின்றன.

இந்த அமைப்பு மாறி வடிவவியலைக் கொண்டுள்ளது, மூடியிருக்கும் போது 3.1 மீற்ற‌ரிலிருந்து திறந்திருக்கும் போது 4.5 மீற்ற‌ராக விரிவடையும் விட்டம் கொண்டது. சிக்கலான இயந்திர அமைப்பு 244 பிவோட் புள்ளிகள் மற்றும் 1,440 கூறுகளை ஒருங்கிணைக்கிறது, அவை ஊசிகள் மற்றும் தாங்கு உருளைகளில் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மையத்தில், சுடர் ஒரு கண்ணாடி மற்றும் உலோக கொள்கலனில் மூடப்பட்டிருக்கும் மற்றும் நிலையான இயற்கை விளைவுகளைப் பயன்படுத்துகிறது: பொருள் வீழ்ச்சி இல்லை, குறைந்த ஒலி தாக்கம், குறைந்தபட்ச புகை உமிழ்வு மற்றும் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும் சூழல்களுக்கு முழுமையான பாதுகாப்பானது.

  

பொல்லார்ட் சாதனை சமன் ரசல் சாதனை உடைப்பு அபிஷேக் சர்மா புதிய சாதனை


   நியூசிலாந்துக்கு எதிராக  நாக்பூரில் நடந்த   முதல்  ரி20 போட்டியில்   48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா  வென்றது.   அபிஷேக் ஷர்மா 84 ஓட்டங்கள் அடித்தார்.

  சர்வதேசம், உள்ளூர்  , ஐபிஎல் ஆகிய அனைத்து விதமான ரி20 தொடர்களில் அபிஷேக் ஷர்மா 2898 பந்துகளில் 5000 ஓட்டங்கள் கடந்துள்ளார். ரி 20 கிறிக்கெற்றில் பந்துகள் அடிப்படையில் வேகமாக 5000 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற ஆண்ட்ரே ரசல் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

1. அபிஷேக் சர்மா (இந்தியா): 2895*

2. ஆண்ட்ரே ரசல் ( மேற்கு இந்தியா): 2942

3. டிம் டேவிட் (அவுஸ்திரேலியா): 3117

4. வில் ஜேக்ஸ் (இங்கிலாந்து): 3196

5. கிளன் மேக்ஸ்வெல் (அவுஸ்திரேலியா):

 நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு ரி20 போட்டியில் 2வது அதிக (8) சிக்ஸர்கள் அடித்த வீரர் கைரன் பொல்லார்ட் சாதனையையும் அபிஷேக் ஷர்மா சமன் செய்துள்ளார்.  2020ஆம் ஆண்டு ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ்க்காக பொல்லார்ட்டும் 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 2012 ஹமில்டன் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் ரிச்சர்ட் லெவி 13 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த போட்டியின் போது தான் சந்தித்த 22-வது பந்தில் அவர் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ரி20 போட்டிகளில் 25 பந்துகளுக்கு குறைவாக அதிக முறை அரைசதம் எடுத்த சர்வதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 முன்னதாக பிலிப் சால்ட், சூரியகுமார் யாதவ், எவின் லூயிஸ் ஆகியோர் 25 பந்துகளுக்கு குறைவாக ஏழு முறை அரைசதம் கடந்துள்ளனர். அவர் 22 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் எட்டாவது முறையாக ரி20 போட்டிகளில் 25 பந்துகளுக்கும் குறைவாக அரைசதம் அடித்து மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.