Thursday, February 12, 2026

நேபாளத்துக்கு எதிரான போட்டியில் 10 விக்கெற்களால் வெற்றி பெற்றது இத்தாலி

 

 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இத்தாலி அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இத்தாலி வரலாற்று வெற்றியை எட்டியது. மோஸ்கா சகோதரர்களின் அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப் , சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இந்த வெற்றிக்கு அடித்தளம் அமைத்தன.

முதலில் துடுப்ப்பெடுத்தாடிய ` செய்த நேபாள அணி, இத்தாலியின் கட்டுக்கோப்பான சுழற்பந்து வீச்சால் 123 ஓட்டங்கள் எடுத்தது. பென் மனேண்டி 9 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், கிரிஷன் கழுகாமகே 18 ஓட்டங் ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெற்களையும் வீழ்த்தினார்.

124 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இத்தாலி, ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக செயல்பட்டது. மோஸ்கா சகோதரர்களான அந்தோனி , ஜஸ்டின், இருவரும் ஆட்டமிழக்காமல் 124 ஓட்டங்கள் அடித்து 12.4 ஒவர்களில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

இளைய சகோதரரான ஜஸ்டின் மோஸ்கா 44 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்களும், மூத்த சகோதரர் அந்தோனி மோஸ்கா, 32 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்களும் எடுத்தனர்.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் இத்தாலியும் இணைந்துள்ளது. ரி20 உலகக் கிண்ணத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் விவரம் பின்வருமாறு:

அவுஸ்திரேலியா , தென்னாப்பிரிக்கா, ஓமான், பாகிஸ்தான், இங்கிலாந்து [2 முறை] ,நியூஸிலாந்து, இத்தாலி

Wednesday, February 11, 2026

விஜய் விரித்த வலையால் தடுமாறுகிறது தமிழக காங்கிரஸ்

 

தனித்து விடப்பட்ட மூத்த அரசியல்வாதி டாக்டர் ராமதாஸ்

மகனை மத்திய அமைச்சராக்க முயற்சி செய்யும் பிரேமலதா

விஜயுடன் கூட்டணி சேர  பெரிய கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.

காங்கிரஸின் முடிவுக்கு காத்திருக்கும் திமுக‌

உயர் நீதிமன்றத் தீர்ப்பு  அரசியல் ரீதியாக விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவு 

தமிழக தேர்தல்களம் நாளுக்கு நாள்  மாறிக்கொண்டே செல்கிறது. திமுகவுடனும், அதிமுகவுடனும்   பேரம் பேசுகிறார் பிரேமலதா. தமிழக அரசியலில் கிங் மேக்கராக வலம் வந்த டாக்டர் ராமதாஸை சேர்க்க பெரிய கட்சிகள் எவையும் விரும்பவில்லை. திமுகவுடன் மிக நெருக்கமாக ஒட்டி உறவாடிய காங்கிரஸ் பதவி ஆசையால் தடுமாறுகிறது.

தமிழகத்தில்  நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக ஆகியவை களத்தில் உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

 அதிமுக கூட்டணியில்  பாஜக, பாமக (அன்புமணி), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை உள்ளன.

 பிரேமலதாவும், ராமதாஸும்  தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னமும் அறிவிக்கவில்லை. இதில் பாமக ராமதாஸை பொருத்தமட்டில் கட்சியே யாரிடம் இருக்கிறது என்பதில் வழக்கு நடந்து வருகிறது. மாம்பழச்சின்னம் யாருக்கு இருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அதற்கிடையில் அன்புமணியை , அடப்பாடி அரவணைத்துள்ளார். ஒற்றுமையாக இருந்த போதே வ்ற்றி பெறாத அன்புமணி கட்சி இரண்டானபின்னர் வெற்ற்றியடைவார் என எஅடப்பாடி நம்புகிறார்.

அன்புமணி அதிமுகவுக்குச் சென்றதால் ராமதாஸ் திமுகவுக்குத் தூது விட்டார். அங்கு அவரது பரம வைரியான திருமாவளவன் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருக்கிறார். விஜயின் பனையூரையும் எட்டிப்பார்த்தார் ராமதாஸ். ப‌னையூர் கதவும் திறக்கப்படவில்லை.

விஜயகாந்தின் தலைமையில் பலமாக  இருந்த கட்சி ஜெயலலைதாவினால் சின்னாபின்னமாக்கப்பட்டது. வாக்கு வங்கி சொல்லும்படியாக  இல்லை.கடந்த கால தேர்தக்ல்களில் மிக மோசமாகத் தோல்வியடைந்ததால் முரசு சின்னம் பறிபோய்விட்டது. தமிழகத்தேர்தலில் ஏழு  தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே  மீண்டும் முரசு சின்னம் கிடைக்கும். இதை எல்லாம் கணக்குப் பார்த்து 14 தொகுதிகளையும் ஒரு ரஜ்யசபா பதவியையும் கேட்கிறார் பிரேமலதா. மகனை அமைச்சரக்க வேண்டும் எனவும்  கோரியுள்ளார். ஐந்து தொகுதிதான் என எடப்பாடி அடித்துச் சொல்லி விட்டார். ஏழு தொகுதிகளுக்கும் ஒரு எம்பி பதவிக்கும் திமுக  ஒப்புக் கொண்டுள்ளது. அதிகமான தொகுதிகளும், அட்சியில் பங்கும் என விஜய் சொல்லியுள்ளார்.  விஜயின் பக்கம் செல்வதற்கு பிரேமலதா விரும்பவிரும்பவில்லை.

  குறைந்தபட்சம் 10 தொகுதிகளையாவது கேட்டு பெறலாம் என தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துகிறதாம்.   பிரேமலதா, விஜய பிரபாகரன், சுதீஷ், பார்த்தசாரதி, மோகன்ராஜ், வெங்கடேசன், நல்லதம்பி, சுபா, இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 10 பேர் கட்டாயம் போட்டியிடுகிறார்களாம்.   இந்த 10 பேரில் விஜயகாந்த் குடும்பத்தில் இருந்து 3 பேர் போட்டியிடுகிறார்கள். மற்ற 7 பேரில் யாரையும் விட்டுக் கொடுக்க முடியாத நிலையில் தேமுதிக உள்ளது. விஜயகாந்த் இருந்த போதே அவருக்கு சிலர் துரோகம் செய்துவிட்டு தங்களுக்கு தோதுபட்ட கட்சிகளில் இணைந்துவிட்டார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் இன்னமும் விஜயகாந்த் விசுவாசிகளாக தேமுதிகவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பதால் அவர்கள் அனைவருக்கும் சீட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக இருப்பதால்தான் சீட் எண்ணிக்கை விஷயத்தில் பிரேமலதாவால் இறங்கி வர முடியவில்லை என்கிறார்கள்.

விஜயின் பக்கத்துக்குப் போகலாம் என ராகுலுக்கு நெருக்கமான டில்லிப் பிரமுகர்கள் விரும்புகிறார்கள்.தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இதற்கு தலை ஆட்டுகிறார்கள். திமுகவுடன்  கூட்டணி இருப்பதால் நாடாளுமன்றத்திலும் ராகுலைப் பாதுகாக்க முடிகிறது. காங்கிரஸின் முடிவுக்காக ஸ்டாலின்  பொறுமையாக இருக்கிறார். வெளியேறினால்  கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கும் முடிவில் ஸ்டாலின்  இருக்கிறார்.

இதேவேளை தீயசக்தி, தூயசக்தி என சவால் விட்ட விஜய்க்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.வருமான வரித்துறை விதித்த  1.5 கோடி  ரூபா அபராதம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் ரீதியாக விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவு  ஏற்பட்டுள்ளது .புலி படத்தில் நடித்ததற்கு வாங்கிய  1.5 கோடி  ரூபா  சம்பளத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு வருமான வரித்துறை தரப்பில்  1.5 கோடி  ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. 2022 ஜூன் 30ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.


ஆவணங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்த போது  1.5 கோடி  ரூபா வருமானத்தை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் விஜய் தொடர்ந்து வழக்கின் விசாரணையின் போது வருமான வரித்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விஜய் தரப்பில் கால தாமதமாக அபராதம் விதிக்கப்பட்டதாக வாதிடப்பட்டது. இறுதியாக விஜய்க்கு விதிக்கப்பட்ட 1.5 கோடி  ரூபா அபராதம் செல்லும் என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றன், விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது அரசியல் தளத்தில் விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.

அரசியலுக்கு வந்த பின் சினிமாவின் உச்சத்தை விட்டுவிட்டு வந்துள்ளேன் என்ற ஒரு பில்டப் இருந்தது. தற்போது நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அரசியல் கட்சித் தலைவருக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பாகவே கருதப்படும். இதனால் விஜய் கூறி வந்த தூயசக்தி என்ற பிம்பம் உடைக்கப்பட்டு, விஜய் ஒரு மாயசக்தி என்று விமர்சனங்கள் வைக்கப்படும்.

 இது அரசியல்வாதி விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவு. பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் தங்களை தூய்மையானவர்களாக வைத்துக் கொள்ள வேண்டும். தூய சக்தி என்றால் நாம் அதனை நிரூபிக்க வேண்டும். விஜய் மீது அரசை ஏமாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் விஜய்யின் வீட்டில் நடந்த ரெய்டு அடிப்படையில், வருமானத்தை மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனால் கறுப்புப் பணம் என்ற விமர்சனத்தை முன் வைத்து வரும் அதிமுக இன்னும் அதிகமாக தாக்கும். அதேபோல் விஜய் வெறும் வாய் சொல் வீரர் என்ற திமுகவின் வாதம் எடுபட தொடங்கும். அரசியலுக்கு வந்த பின் விஜய் இந்த வழக்கை வாபஸ் பெற்றிருக்க வேண்டும். இந்த விவகாரத்தை திமுக கையில் எடுக்கும் இதனை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதி என்ற பிம்பம் விஜய் மீது படிந்துள்ளது.

 

ரமணி

8/2/26 

 

Sunday, February 8, 2026

அயர்லாந்தின் வெற்றியை தட்டிப் பறித்த இலங்கை

பிரேமதாச மைதானத்தில் ந‌டந்த குரூப் பி லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 20  ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில்  6 விக்கெற்களை இழந்து 163 ஓட்டங்கள் எடுத்தது. 164 என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து 19.5 ஓவர்கலில் 143 ஓட்டங்கள் எடுத்தது.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த  9 சர்வதேச ரி20 போட்டிகளில், முதலில் துடுப்பெடுத்தாடிய  அணி தோல்வியையே சந்தித்து வந்தது. ஆனால், அந்த மோசமான வரலாற்றை மாற்றி எழுதிய இலங்கை அணி, முதலில்   வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

நாணயச் சுழற்சியில்  வென்ற  அயர்லாந்து பந்து வீச்சைத் தேர்வு செய்தது அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ்  ஆட்டமிழக்காது 56,  ஓட்டங்கள் எடுத்தார்.  கடைசி நேரத்தில் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ்,  19 பந்துகளில் 44  ஓட்டங்கள்  விளாசினார்.

164 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய அயர்லாந்து அணிக்கு ஆரம்பம் சிறப்பாகவே இருந்தது. ராஸ் அடைர் 34 ,ஹாரி டெக்டர்  40 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கையளித்தனர். 14 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 105  ஓட்டங்கள் எடுத்திருந்தது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்ததால் அயர்லாந்து எளிதாக வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

 15வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் அயர்லாந்து  வீரர்களைத் திணறடித்தனர்.வனிந்து ஹசரங்கா காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவதிப்பட்ட போதிலும், முக்கிய 3 விக்கெட்டுகளை (டெக்டர், டக்கர், கேம்பர்) வீழ்த்தினார். மகேஷ் தீக்ஷனா தனது பங்கிற்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்து அயர்லாந்துக்கு நெருக்கடி கொடுத்தார்.

105 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் என்ற வலுவான நிலையிலிருந்து, அடுத்த 38  ஓட்டங்கள் எடுப்பதற்குள் மீதமுள்ள 8 விக்கெட்டுகளையும் அயர்லாந்து அணி பறிகொடுத்தது. இறுதியில் 19.5 ஓவர்களில் 143 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது.

 

  

ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து


 

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  ரி20 

கிண்ணப்  கிண்ண்ணப் போட்டியில், ஆப்கானிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி  வெற்றி பெற்றது. 183  ஓட்டங்கள் என்ற சவாலான இலக்கை 13 பந்துகள் எஞ்சிருக்க எட்டி, நியூசிலாந்து  20 ஒவர்களில்  6 விக்கெட்களை இழந்த ஆப்கானிஸ்தான் 182 ஓட்டங்கள் எடுத்தது.  குலாப்தீன் நைப்   63  ஓட்டங்கள் எடுத்தார்.

183 என்ற இலக்குடன் நியூஆஇலந்து களம் இறங்கியது. நியூசிலாந்து அணியில் டிம் செப்பர்ட், இந்த ஆட்டத்தில் நட்சத்திரமாக ஜொலித்தார். 39 பந்துகளில் 55 ஓட்டங்கள் குவித்து தனது முதல் ரி20 உலகக் கிண்ண‌ அரை சதத்தைப் பதிவு செய்தார். முன்னதாக, 48  ஓட்டங்களில் இருந்தபோது ரஷித் கான் அவரை ஆட்டமிழக்கும் சந்தர்ப்பத்தித் தவற விட்டது  ஆப்கானிஸ்தானுக்குப் பெரும் இழப்பாக அமைந்தது.

நியூசிலாந்து அணிக்கு 26 பந்துகளில் 28 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கப்டன் மிட்செல் சான்ட்னர் களத்தில் டேரில் மிட்செலுடன் இணைந்தார். இறுதியில் சாண்ட்னர், டேரல் மிட்செல் ஜோடி 17.5 ஓவரில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

  

சாம் கரனால் தப்பிய இங்கிலாந்து நேபாளத்தை வீழ்த்தியது

  ரி20 உலகக் கிண்ணத்  தொடரின் 5வது லீக் போட்டியில், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி, நேபாள அணியிடம் தோல்வியின் விளிம்பு வரை சென்று, கடைசி ஓவரில் நூலிழையில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த த்ரில்லர் போட்டியில், கடைசி ஓவரில் சாம் கரனின் துல்லியமான யார்க்கர்கள் இங்கிலாந்து அணியைக் காப்பாற்றின.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெற்களை  இழந்து 184 ஒட்டங்கள் எடுத்தது. 185 என்ற வெற்றி இலக்கைத்துரத்திய நேபாளம் 20 ஓவர்களில் 6 விக்கெற்களை  இழந்து 180 ஓட்டங்கள் எடுத்து  4 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. ஜேக்கப் பெத்தல் 55 ,ஹாரி புரூக்  53   ஓட்டங்கள் எடுத்தனர்.

185 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய நேபாள அணி, ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்குச் சவால் அளித்தது. திபேந்திர சிங் ஐரி44,க‌ப்டன் ரோகித் பவுடல் ஓட்டங்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

கடைசி 3 ஓவர்களில் நேபாள வெற்றிக்கு 46  ஓட்டங்கள் தேவைப்பட்டன. 18வது ஓவரை வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 22  ஓட்டங்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் லோகேஷ் பாம் இரண்டு இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இங்கிலாந்தை மிரள வைத்தார். 19வது ஓவரை வீசிய லூக் வுட், 14 ஓட்டங்கள் கொடுத்தாலும் குல்சன் ஜாவை அவுட்டாக்கி சற்று நெருக்கடி கொடுத்தார்.

கடைசி ஓவரில் நேபாள வெற்றிக்கு 10  ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டன. இங்கிலாந்து கப்டன் பட்லர் பந்தை சாம் கரனிடம் கொடுத்தார்.

முதல் பந்து: சாம் கரன் யார்க்கரை வீச, லோகேஷ் பாம் திணறினார். ஓட்டம் இல்லை.

இரண்டாவது பந்து: மீண்டும் ஒரு யார்க்கர். லோகேஷ் பாம் பந்தைத் தொடக்கூட முடியவில்லை.

மூன்றாவது பந்து: ஒரு ஓட்டம் மட்டுமே கிடைத்தது.

நான்காவது பந்து: லோகேஷ் பாம் 2  ஓட்டங்கள் எடுத்தார்.

ஐந்தாவது பந்து: 7  ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், சாம் கரன் மீண்டும் ஒரு துல்லியமான யார்க்கரை வீசினார்.  ஓட்டம் இல்லை.

கடைசி பந்து: ஒரு ஓட்டம்மட்டுமே கிடைத்தது.

இறுதியில் இங்கிலாந்து அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

 இங்கிலாந்தைடைசி வரை பயமுறுத்திய நேபாள வீரர்களின் போராட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 4 ஓவர்கள் வீசி 27  ஓட்டங்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய சாம் கரன் இங்கிலாந்தின் ஹீரோவாக மாறினார்.

 

 

Saturday, February 7, 2026

ரி20 உலகக்கிண்ணத்தில் இத்தாலியின் பயணப்பாதை



 


  ஐரோப்பிய தகுதிச் சுற்றுகளில் கடந்த வருடம் ஜூலை முன்னேறிய பிறகு, இத்தாலிய கிறிக்கெற் அணி தங்கள் முதல்ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான பயணத்தை உறுதி செய்தது, மேலும் அடுத்த தலைமுறையை தாயகத்தில் ஊக்குவிக்க ஆர்வமாக உள்ளது.

இத்தாலியில் புல் மைதானங்கள் - அல்லது மைதானங்கள் - இல்லாததால், இத்தாலியின் சொந்த மைதான வீரர்கள் ஆஸ்ட்ரோடர்ஃபில் பயிற்சி பெறுகிறார்கள்.

இத்தாலியில் புல் மைதானங்கள் - அல்லது மைதானங்கள் - இல்லாததால், இத்தாலியின் சொந்த மைதான வீரர்கள் ஆஸ்ட்ரோடர்ஃபில் பயிற்சி பெறுகிறார்கள், மேலும் அணியின் முதல் டி20 உலகக் கோப்பை தோற்றத்தில் ஏதேனும் வெற்றி பெற்றால், வசதிகளை மேம்படுத்தவும், சொந்த நாட்டில் விளையாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்தவும் உதவும் என்று உதவி பயிற்சியாளர் கெவின் ஓ'பிரையன் திங்களன்று தெரிவித்தார்.

இத்தாலிய அணி என்று பிரபலமாக அறியப்படும் அஸ்ஸுரி, ஐரோப்பிய தகுதிச் சுற்றுகளில் ஸ்காட்லாந்தை முந்தி முன்னேறிய பிறகு ஜூலை மாதம் போட்டியில் தனது இடத்தைப் பிடித்தது. 

ஓ'பிரையன் விவரித்தபடி, நம்பிக்கையான அணி, எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தனது முதல் பயிற்சிப் போட்டியில் கனடாவை 10  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது பிரச்சாரத்தைத் தொடங்கியது. ஜனவரி மாதம் துபாயில் அணி நல்ல தயாரிப்பைக் கொண்டிருந்ததாகவும், அங்கு நான்கு போட்டிகளில் விளையாடியதாகவும் ஐரிஷ் வீரர் கூறினார் ‍  உலகக்கிண்ணப் போட்டியில்  ஏதாவது ஒரு  போட்டியிலும்.  வெற்றி பெற்றால், வசதிகளை மேம்படுத்தவும், சொந்த நாட்டில் விளையாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்தவும் உதவும் என்று உதவி பயிற்சியாளர் கெவின் ஓ'பிரையன்   தெரிவித்தார்.

இத்தாலிய வீரர்களுக்கு, இந்த ஆட்டங்கள் வெற்றி வேகத்தை உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல், இயற்கையான மண் ஆடுகளங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கும் முக்கியமானவை, அவர்கள் சொந்த நாட்டில் இது போன்ற மைதானங்கள் இல்லை.

"இத்தாலியில் வசதிகள் குறைவாகவே உள்ளன, ஆனால் இந்தப் போட்டியின் விளைவாகவும், நாங்கள் பெற்ற எந்தவொரு வெற்றியின் விளைவாகவும், உள்நாட்டில் விளையாட்டின் புகழ் வளரும், மேலும் வசதிகள் மேம்படும், இதனால் உள்நாட்டு வீரர்கள் முன்னேறவும் வளரவும் முடியும்" என்று ஓ'பிரையன் கூறினார்.

உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் சம்பியனான இத்தாலி கிறிக்கெற்றிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளது. 

பாகிஸ்தான் வெளியேறியதால் 4500 கோடி ரூபா இழப்பு


  



 இந்தியாவுக்கு எதிரான ரி20 உலகக்கிண்ணப் போட்டியில்  பாகிஸ்தான் விளையாட மறுத்ததால் அடுத்து ஐசிசி-க்கு 4500 கோடிகளுக்கு மேல் இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டி20 உலகக் கிண்ணத் தொடரை  இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன.

இந்த தொடரில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பெப்ரவரி 15 ஆம் திக‌தி நடைபெற இருந்தது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது. ஆனால் விலகலுக்கான காரணத்தை பாகிஸ்தான் தெளிவாக தெரிவிக்கவில்லை.

இந்தியா  ,பாகிஸ்தான் ஆகிய  அணிகளுக்கு இடையிலான போட்டிதான் அனைத்து உலகக்  கிண்ணப் போட்டிகளிலும்  அதிகம் பார்க்கப்படும் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.  இது அதிக வருவாயையும் ஈட்டும் போட்டியாக பார்க்கப்படுகிறது. தற்போது பாகிஸ்தான் விலகியதை அடுத்து 4500 கோடி ரூபா வரை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் ஒளிபரப்பு, பிரீமியம் விளம்பரம், ஸ்பான்சர்ஷிப்கள், டிக்கெட் விற்பனை , சட்டப்பூர்வ பந்தயம் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் அடங்கும். வேறு எந்த போட்டியும் இந்த மதிப்பை நெருங்கவில்லை.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான விளம்பர வருவாய் மட்டும் சுமார்  300 கோடி ரூபாவாக  இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போட்டியில் 10 வினாடிகள் கொண்ட விளம்பர ஸ்லாட்டுக்கு  2.5 மில்லியன் முதல்  4 மில்லியன்  ரூபா வரை செலவாகும். இது முழு போட்டியிலும் மிகவும் விலையுயர்ந்த விளம்பர ஸ்லாட்டாக இருக்கலாம். இந்தப் போட்டி நீக்கப்பட்டால் ரி20 உலகக் கோப்பையின் முழு நிதி அமைப்பையும் மாற்றக்கூடும். 

இந்த, போட்டி நடத்தப்படாவிட்டால், இந்தியா   பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு சுமார் ரூ.200 கோடி இழப்பு ஏற்படக்கூடும். பாகிஸ்தான்  கிறிக்கெற் சபை ஐ.சி.சி.யிடமிருந்து 5.75% வருவாய்ப் பங்கைப் பெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த வருவாய் தோராயமாக $34.51 மில்லியன் (தோராயமாக ₹316 கோடி) ஆக இருக்கலாம். பிசிபி இந்த வருவாயையும் இழக்கும் அபாயத்தில் உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி எங்கு நடந்தாலும், மைதானம் எப்போதும் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கும். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் மற்ற போட்டிகளை விட மிகவும் விலை உயர்ந்த விலைக்கு விற்கப்படுவது வழக்கம். தற்போது போட்டி நடைபெறாமல் போவதால் இதிலிருந்தும் பெரிய இழப்பு ஏற்படும்.