அமைச்சர் பதவிக்கு ஆசைபட்டு ஆதரவு தெரிவித்த அண்ணா திராவிட முன்னேற்றக்
கட்சித் தலைவர்களைக் கைவிட்டார் விஜய்.
திராவிட முன்னேற்றக்
கழகத்தின் கூட்டணியில்
வெற்றி பெற்று விஜய்க்கு விசுவாசமான தமிழாக் கட்சிகள்.
இலங்கைத் தமிழர்களுக்கு
எதிரான காங்கிரஸை அமைச்சரவையில்
சேர்த்த தவெக
திமுகவின் திட்டங்களையும்,
அதிமுகவின் திட்டங்களையும் மேம்படுத்தி மக்களின் மனதைக் கவர்கிறது தமிழக அரசு
தமிழக முதலமைச்சர்
விஜய்யின்
தலைமையிலான
அமைச்சரவை
விரிவாக்கம்
செய்ய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள், புதியவர்கள்,
பெண்கள்
, பிராமணர்கள்,பட்டியலினத்தவர்
எனப்
பல
சாதனைகளுடன்
அமைச்சரவை
பதவி
ஏற்றது.
காங்கிரஸ்
கட்சியைச்
சேர்ந்த
இருவர்
அமைச்சர்களாகியுள்ளனர்.
அவர்களுக்கு
தமிழக
ஆளுநர்
அர்லேகர்
பதவிப்
பிரமாணமும்,
ரகசியக்
காப்பு
பிரமாணமும்
செய்து
வைத்தார்
. முதலில் வந்தே மாதரம்
இசைக்கப்பட்டு
பதவியேற்பு
விழா
தொடங்கியது.
விஜய்
முதல்வராக
பதவியேற்றபோதும்
கூட
முதலில்
வந்தே
மாதரம்
பின்னர்
தேசிய
கீதம்
தொடர்ந்து
தமிழ்த்
தாய்
வாழ்த்து
என்று
இசைக்கப்பட்டு
அதற்கு
கண்டனங்கள்
எழுந்தன.
இந்நிலையில்,
பதவியேற்பு
நிகழ்ச்சியிலும்
முதலில்
வந்தே
மாதரம்
இசைக்கப்பட்டது.
கூட்டனியில் தேர்தலைச் சந்தித்து
வெற்றி
பெற்ற
விசிக,
சிபிஐ,
சிபிஎம்,
ஐயூஎம்எல்
உள்ளிட்ட
கட்சிகளின்
ஆதரவில்
தவெக
அரசாங்கம்
இயங்குகிறது.
தவெக அரசுக்கு
வெளியில்
இருந்து
ஆதரவு
தருவதாக
தெரிவித்த விசிக , ஐயூஎம்எல்
ஆகிய
இரு
கட்சிகளும்
அமைச்சரவையில்
இடம்பெற
வேண்டும்
என்று அமைச்சர் ஆதவ்
அர்ஜுனா
அழைப்பு
விடுத்தார்.
அமைச்சரவையில் சேர முதலில்
மறுத்த
இரண்டு
கட்சிகளும்
தவெக
வின்
அமைச்சரவையில்
சேர்வதற்கு
ஒப்புதலளித்தன. அமைச்சரவையில் இடம் பிடைத்தால் திமுக
கூட்டனியில்
இருந்து அவை வெளியேறியதாகவே
கருதப்படும்.
ஸ்டாலினின்
அடுத்த
கட்ட
நடவடிக்கையைத் தமிழகம் எதிர்பார்த்துள்ளது.
தமிழக முதல்
அமைச்சராக
தவெக
தலைவர்
விஜய்
கடந்த
10 ஆம்
திகதி
பதவியேற்றார்.
அவருடன்
9 பேர்
அமைச்சர்களாக
பதவியேற்று
கொண்டனர். தமிழக அமைச்சரவை
விரிவாக்கம்
செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் தவெகவிற்கு
தனிப்பெரும்பான்மை
இல்லை.
இதனால்
ஆட்சி
அமைக்க
ஆதரவு
அளித்த
காங்கிரஸ்
கட்சிக்கு
2 அமைச்சர்
பதவிகளும்,,
விசிக,
இந்திய
யூனியன்
முஸ்லிம்
லீக்
கட்சிகளுக்கு
தலா
ஒரு
அமைச்சரவை
பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைச்சர்களாகும்
23 எம்எல்ஏக்களில்
7 பேர்
பட்டியலினத்தை
சேர்ந்தவர்கள்.
இதில்
தவெகவில்
6 பேரும்,
காங்கிரஸ்
கட்சியில்
ஒருவரும்
பட்டியலினத்தைச்
சேர்ந்தவர்களாவர். நான்கு பெணமைச்சர்கள்
பதவி
ஏற்று
ஆச்சரியப்பட
வைத்துள்ளனர்.59
ஆண்டுகளுக்கு
பிறகு
தமிழக
அமைச்சரவையில்
காங்கிரஸ்
கட்சி
இன்று
இடம்பெறுகிறது.
முதல்வர்
விஜய்யின்
நண்பர்
ஸ்ரீநாத்,
ஆர்கே
நகர்
எம்எல்ஏ
மரிய
வில்சன்
ஆகியோர்
அமைச்சராக
பதவியேற்றனர்.
செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை மாற்றப்பட்டு, அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வழங்கப்பட்டுள்ளது. இப்பதவி உடன் இதர கூடுதல் பொறுப்புகளான வருவாய் நிர்வாகம், மாவட்ட வருவாய் நிர்வாக அமைப்பு, துணை ஆட்சியர்கள், பூதான் மற்றும் கிராமதான் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் ஆகியவற்றையும் அவர் கவனிப்பார். செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை தற்போது புதிய அமைச்சரான மரிய வில்சனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் வெற்றிக்காகப் பாடுபட்ட மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் புறக்கனிக்கப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
தவெக அமைச்சரவை
விரிவாக்கம்
செய்யப்பட்டுள்ள
நிலையில்,
விஜய்
தன்னுடன்
நின்றவர்களுக்கு
மட்டுமே
வாய்ப்பு
அளித்திருப்பது
தெரிய
வந்துள்ளது.
குறிப்பாக
தவெக
வேட்பாளர்கள்
பட்டியல்
அறிவிக்கப்படுவதற்கு
முன்
கட்சியில்
இணைந்த
பலருக்கும்
முதல்வர்
விஜய்
அமைச்சர்
வாய்ப்பை
அளிக்கவில்லை
இந்த அமைச்சரவையில்
விஜய்
மக்கள்
இயக்க
நிர்வாகிகள்
பலருக்கும்
வாய்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது.
வினோத்,
கடலூர்
எம்எல்ஏ
ராஜ்
குமார்,
ராஜபாளையம்
எம்எல்ஏ
ஜெகதீஸ்வரி,
விஜய்
பாலாஜி,
தமிழன்
பார்த்திபன்,
ரமேஷ்,
தென்னரசு,
சம்பத்
குமார்,
பர்வேஸ்,
விக்னேஷ்,
விஜயலட்சுமி
ஆகிய
13 பேருக்கு
வாய்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது.
சத்தியபாமா,
ஆர்.எஸ்.முருகன்,
கருப்பையா, ஸ்டாலினைத் தோற்கடித்த
விஎஸ்
பாபு,
கல்லணை,
தங்கப்பாண்டி,
முஸ்தபா
உள்ளிட்டோருக்கு
அமைச்சர்
பதவி
கிடைக்கும்
என்று
எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்
உட்கட்சி
பூசல்
காரணமாக
சிலருக்கு
மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல்
அமைச்சரவையில்
விஜய்
நம்பிக்கையை
பெற்றவர்களுக்கு
மட்டுமே
வாய்ப்பு
அளிக்கப்பட்டுள்ளது.
திமுக
,அதிமுகவில்
இருந்து
கடைசி
நேரத்தில்
தவெக
பக்கம்
தாவியர்களுக்கு
அமைச்சரவையில்
வாய்ப்பு
அளிக்கப்படவில்லை.
தவெக
எம்எல்ஏ
மீது
முழுமையாக
நம்பிக்கை
வைத்தால்
மட்டுமே
அமைச்சரவையில்
இடம்
கொடுக்க
விஜய்
பரிசீலனையே
செய்திருக்கிறார்.
இதன்
காரணமாக
பல்வேறு
மாவட்டங்களுக்கும்
அமைச்சர்கள்
கிடைக்கவில்லை.
பிராமண அமைப்புகள்
, பல்வேறு
இந்து
மத
அமைப்புகள்
தரப்பில்,
"கோவில்களை
அரசிடமிருந்து
விடுவிக்க
வேண்டும்;
அறநிலையத்துறையின்
கட்டுப்பாடு
நீக்கப்பட்டு,
ஆன்மீகப்
பெரியோர்கள்,
பக்தர்களிடம்
நிர்வாகம்
ஒப்படைக்கப்பட
வேண்டும்"
என்ற
முழக்கம்
மிகத்
தீவிரமாக
முன்வைக்கப்பட்டு
வருகிறது.
இதற்காகப்
பல
சட்டப்
போராட்டங்களும்,
சமூக
ஊடகப்
பிரச்சாரங்களும்
தொடர்ந்து
நடந்து
வருகின்றன.
இப்படிப்பட்ட
ஒரு
தார்மீக
மற்றும்
அரசியல்
ரீதியான
அழுத்தங்கள்
நிலவி
வரும்
சூழலில்,
தமிழக
வெற்றிக்
கழகத்
தலைவர்
விஜய்
எடுத்துள்ள
இந்த
முடிவு
பலரையும்
அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.
ஒரு
'பிராமண'
அமைச்சரிடம்
அறநிலையத்துறை
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிராமண
சமூகத்தைச்
சேர்ந்த,
அதுவும்
ஆன்மீக
பூமியான
ஸ்ரீரங்கத்தைச்
சேர்ந்த
ரமேஷிடம்
இந்தத்
துறையை
ஒப்படைத்ததன்
மூலம்
விஜய்
ஒரே
கல்லில்
இரண்டு
மாங்காய்களை
அடிக்க
முயன்றுள்ளதாக
அரசியல்
விமர்சகர்கள்
கருதுகின்றனர்.
அதே
சமயம்
விஜய்
முடிவு
தவறு
என்றும்
கடுமையாக
விமர்சிக்கப்படுகிறது.
திமுக, அதிமுக காலத்தில் விவசாயம் படித்த பட்டதாரிகள் வேளான் அமைச்சராகப் பதவி வகித்தனர். விஜய்யின் அமைச்சரவையில் விவசாயி அல்லாத நகைக்கடை உரிமையாளர் அமைச்சரானதும் விமர்சனத்துள்ளாகி உள்ளது.
தமிழகத்தில் தவெக
ஆட்சியை
பிடித்துள்ள
நிலையில்,
அமைச்சரவையில்
இந்தியன்
யூனியன்
முஸ்லிம்
லீக்
,விடுதலைச்
சிறுத்தைகள்
இணைவதால்
திமுகவுடன்
கூட்டணி
தொடர்கிறதா.?
அல்லது
முறிந்து
விட்டதா
என்ற
கேள்வி
எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்ற
தேர்தலில்
108 தொகுதிகளில்
வெற்றிபெற்று
தவெக
தனிப்பெரும்
கட்சியாக
உருவெடுத்துள்ளது.
அதே
நேரம்
ஆட்சி
அமைக்க
தேவையான
118 இடங்கள்
கிடைக்காத
காரணத்தால்
ஆட்சி
அமைக்க
முடியாத
நிலை
ஏற்பட்டது.
இதனையடுத்து
முதல்
ஆளாக
திமுக
கூட்டணியை
முறித்துக்கொண்டு காங்கிரஸ் தவெக
அணிக்கு
தாவியது.
அடுத்ததாக
விடுதலை
சிறுத்தைகள்,
முஸ்லிம்
லீக்
மற்றும்
கம்யூனிஸ்ட்
கட்சிகள்
வெளியில்
இருந்து
ஆதரவு
தெரிவிப்பதாக
அறிவித்தது.
அதே
நேரம்
அமைச்சரவையில்
பங்கேற்க
வேண்டும்
என
ஆதரவு
கொடுத்த
கட்சிகளுக்கு
தவெக
அழைப்பு
விடுத்தது.
கம்யூனிஸ்ட் கட்சி
அமைச்சரவையில்
இணைய
மறுப்பு
தெரிவித்தன.
விடுதலை
சிறுத்தைகள்
, முஸ்லிம்
லீக் ஆகியன தவெகவின்
அமைச்சாரவையில்
இடம்
பிடித்துள்ளன.
அமைச்சரவையில்
இடம்பெறுவது
தொடர்பாக
திமுக
தலைவர்
ஸ்டாலினுடன் பேசியதாக முஸ்லிம்
லீக் தலைஇவர் தெரிவித்தார். அப்போது
எங்களுக்கு
உதவி
செய்ததற்கு
நன்றி
வாழ்த்துக்கள்
என
ஸ்டாலின்
கூறியதாக
குறிப்பிட்டார்.
கூட்டணி
பற்றி
பேசவில்லை.
இது
தேர்தல்
காலத்திற்கான
முடிவு
இல்லை.
ஆட்சியில்
பங்கேற்பதற்கான
முடிவு
என
கூறினார்.
எதிர்கட்சியாக
திமுக
பல்வேறு
போராட்டங்களில்
ஈடுபடும்
போது அமைச்சரவையில் இருக்கும் முஸ்லீம் லீக்
பங்கேற்க
முடியாது.
அது
தவெகவுக்கு
முழு
ஆதரவாக
இருக்க
வேண்டிய
நிலையில்
உள்ளது.
உள்ளாட்சி மன்ற
தேர்தல்,
நாடாளுமன்ற
தேர்தலில்
தங்கள்
நிலைப்பாடு
தொடர்பாக இப்போதைக்கு முடிவு
எடுக்கப்பட
மாட்டாதாம். திமுக் கூட்டணியில்
இருந்து
முஸ்லீம் லீக் வெளியேறுவதற்குத் தயாராக
இருப்பதையே
இந்தப்பதில்
எடுத்துக்
காட்டுகிறது.
தமிழக அமைச்சரவையில்
இடம்பெற
விசிக
முடிவெடுத்துள்ள
நிலையில்,
திமுக
உடனான
கூட்டணியில்
தொடர்கிறதா
என்ற
கேள்விக்கு
திருமாவளவன்
பதிலளிக்க
மறுத்துள்ளார்.
தமிழக
அமைச்சரவையில்
இடம்பெறுகிறோம்
என்ற
அறிவிப்பை
மட்டுமே
விசிக
வெளியிடுவதாக
கூறிய
திருமாவளவன்,
மற்ற
விஷயங்களை
பின்னர்
விரிவாக
பேசலாம்
என்று
கூறியுள்ளார்.
தவெகவிடம்
இருந்து
மேலும்
எதையோ
விசிக
எதிர்பார்க்கிறது
எனப்து
புலனாகிறது.
முதல்வர் விஜய்
தலைமையிலான
அமைச்சரவையில்
காங்கிரஸ்,
ஐயூஎம்எல்
ஆகிய
கட்சிகளை
தொடர்ந்து
விசிகவும்
இணைந்துள்ளது. விசிகவின் வன்னி
அரசு
, ஐயூஎம்எல்
எம்எல்ஏ
ஷாஜகான்
ஆகியோர்
அமைச்சராக
பொறுப்பேற்றனர். இதனால் திமுக
உடனான
விசிகவின்
கூட்டணி
முடிவுக்கு
வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின்
கைப்பிள்ளை
விஜய்
என
தேர்தல்
கால
ப்ரப்புரையில்
திருமாவளவன்
தெரிவித்த்ச்தை
மக்கள்
இன்னமும்
மறக்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ்ஸிக்
கைப்பிள்ளையில்
அமைச்சரவையில்
திருமாவணவனா
என
ஆச்சரியப்பட
வைத்துள்ளது.
அவரின்
செயற்பாடு.
1999 ஆம் ஆண்டு
விசிக
தேர்தலில் களமிறங்கிய போது ஆட்சியிலும் பங்கு.
அதிகாரத்திலும்
பங்கு
என்ற
முழக்கத்தை
முன்
வைத்தது. தமிழக அரசியல்
வரலாற்றில்
முதல்முறையாக
கூட்டணி
ஆட்சி
முறை
அறிமுகமாகிறது.
தவெக
அழைப்பை
கணக்கில்
கொண்டு
விசிகவின்
நீண்ட
கால
கனவையும்
கருத்தில்
கொண்டு
இந்த
முடிவை
எடுக்க
வேண்டும்
என்று
பெரும்பாலான
நிர்வாகிகள்
எடுத்துள்ளனர்.
விசிகவும் ,முஸ்லீம் லீக்கும் தவெகவின்
அமைச்சரவையில் குந்தி இருந்துகொண்டு
திமுகவுடன்
தொடர்பில்
இருப்பதாக
அறிக்கை
விடுகின்றன.
அரசியலில்
எதுவும்
நடக்கலாம்
என்ற
எச்சரிக்கையுடன்
அவை
இருக்கின்றன.
தமிழ்நாட்டில் ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் போது அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தங்களது செல்வாக்கை காட்டும் வகையில் சில செயல்களில் ஈடுபடுவார்கள். இது கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட திமுக, அதிமுக கட்சியில் நடைபெற்றதுதான் மாற்றம் என்ற கோஷத்துடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த தவெகவிலும் நடை பெறுகிறது. புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சி அப்படியிருக்காது என பொதுமக்கள் நம்பியிருக்கும் நிலையில் சிலர் செய்யும் செயல்களால் கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள்
, மருத்துவமனைகளில்
ஆய்வு
என்ற
பெயரில்
தவெகவினர்
அத்துமீறி
வருவதாக
புகார்கள்
வந்த
வண்ணம்
உள்ளது.
ஓரிடத்தில்
பிரச்னை
என்றால்
சம்பந்தப்பட்ட
மாவட்ட
எம்.எல்.ஏ.,
அமைச்சர்கள்,
கட்சியின்
மாவட்ட
செயலாளர்கள்,
மேயர்,
ஆட்சியர்,
அரசு
அதிகாரிகள்
என
ஆய்வு
மேற்கொள்ள
இத்தனை
பேர்
உள்ளனர். ஆனால் செல்வாக்கை
பயன்படுத்தி
அத்துமீறி
நடப்பது,
அதிகாரத்தை
காட்டுவது
தவறு
என
அரசியல்
வட்டாரத்தினர்
தெரிவிக்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தில்
அரசு
மருத்துவமனையில்
தவெக
மருத்துவரணி
என்ற
பெயரில்
சிலர்
ஆய்வு
செய்ததும்,
கன்னியாகுமரியில்
பேரூராட்சி
அலுவலகத்தில்
சென்று
தவெகவினர்
அத்துமீறி
ஆவணங்களை
எடுத்ததாகவும் பொலிஸ் நிலையம்
வரை
புகார்
சென்றுள்ளது. மதுத்துவ தாதியான
ஒரு
பெண்
மருத்துவமனையின்
டீனை
கேள்வி
கேட்டதை
சமூக
ஆர்வலர்கள்
ஏற்றுக்க்கொள்ளவில்லை.
இதுபோன்ற செயல்களை
வரும்
காலங்களில்
தவெகவினர்
தவிர்க்க
வேண்டும்.
விஜயின்
ஆட்சிக்கு
நற்பெயர்
ஏற்படுத்த
வேண்டும்
என
பலரும்
சமூக
வலைத்தளங்களில்
கோரிக்கை
விடுத்துள்ளனர்.
ஆட்சிக்கு
வந்து
ஒரு
வாரம்
மட்டுமே
நிறைவடைந்த
நிலையில்
தொண்டர்களின்
அடாவடிக்கு
முதலமைச்சர்
விஜய்
முற்றுப்புள்ளி
வைக்க
வேண்டும்
என்பதே
பலரின்
எதிர்பார்ப்பாக
உள்ளது
தலைமைச் செயலகத்தில் அமைச்சர் புஸ்ஸி
ஆனந்த்,
கட்சிப்
பணிகளை
செய்துள்ள
சம்பவம்
சர்ச்சையாகி
இருக்கிறது.
அதிமுக
மாநில
இலக்கிய
அணி
செயலாளர்
சிவராஜ்
, அதிமுக
மாநில
மகளிர்
அணி
துணைச்
செயலாளர்
செல்வ்வி
என்
ஜெயதேவி
ஆகியோரை
தலைமைச்
செயலகத்தில்
வைத்து
தவெகவில்
இணைத்துள்ளார்.
இதனால்
அலுவல்
பணிகளை
செய்யும் இடத்தில் கட்சிப்
பணிகளை
செய்வது
சரியா
என்று
பலரும்
கேள்வி
எழுப்பி
வருகின்றனர்.
தவெக பொதுச்செயலாளரும்,
அமைச்சருமான
புஸ்ஸி
ஆனந்த்
கட்சிப்
பணிகளை
மேற்கொண்டிருப்பதுசர்ச்சையாகி
உள்ளது.
நீர்வளத்துறை
அமைச்சர்
ஆனந்த்
முன்னிலையில்
அதிமுக
மாநில
இலக்கிய
அணி
இணைச்
செயலாளர்
டி
சிவராஜ்
தவெகவில்
இணைந்துள்ளார்.
அதேபோல்
அதிமுக
மாநில
மகளிர்
அணி
துணைச்
செயலாளர்
செல்வி
என்
ஜெயதேவி
உள்ளிட்டோர்
தவெகவில்
இணைந்துள்ளார்.
இவர்கள்
தவெகவில்
இணைந்ததில்
யாருக்கும்
எந்த
பிரச்சனையும்
கிடையாது.
ஆனால்
தலைமைச்
செயலகத்தில்
வைத்து
தவெகவில்
இணைக்கப்பட்டது
தான்
பிரச்சனையாக
மாறியுள்ளது.
அரசு மற்றும்
அலுவல்
பணிகளை
மேற்கொள்ளவே
தலைமைச்
செயலகம்
இருக்கிறது.
கட்சிப்
பணிகளை
அந்தந்த
கட்சி
அலுவலகத்தில்
வைத்துதான்
செய்ய
வேண்டும்.
ஆனால்
புஸ்ஸி
ஆனந்த்
அலுவலகப்
பணிகளை
செய்யும்
இடத்தில்
கட்சிப்
பணிகளை
மேற்கொண்டு
வருகிறார்.
இதனால்
அமைச்சர்
புஸ்ஸி
ஆனந்த்
மீது
விமர்சனங்கள்
எழுந்துள்ளன..
அதிமுகவிலிருந்து
பிரிந்து
வந்து
தவெகவுக்கு
ஆதரவு
கொடுத்த
25 எம்எல்ஏக்களில்
எவருக்கும்
அமைச்சரவையில்
இடம்
ஒடுக்கப்படவில்லை.
ஊழல்
குற்றாச்
சாட்டு
சுமத்தப்பட்டவர்கள்
இருப்பதால்
விஜய்
அவர்களைத்
தெரிவுசெய்யத்
தயக்கம் காட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டச்
சிக்கல்கள்
காரணமாக
பதவி
விலகி
விசில்
சின்னத்தில் போட்டியிட ஆலோசனை
வழங்கப்பட்டதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
இராஜினாமாச்
செய்து மரு தேர்தலைச்
சந்திக்க
அவர்களில்பலரும்
தயாராக
இல்லை. அதிமுகவில் இருந்து
பிரிந்தவர்களுக்க் அமைச்சரவையில் இடம்
வழங்கினால்
ஆதரவை
பரிசீலனை
செய்வோம்
என்று
இடதுசாரிகள்
எச்சரித்திருந்தனர்.
அதிமுக அதிருப்தி
எம்எல்ஏ.,க்கள்
அவசரமாக
கூடி
ஆலோசித்து
வருகிறார்கள்.
மற்றொரு
புறம்
இபிஎஸ்
தலைமையில்
முக்கிய
நிர்வாகிகளும்
ஆலோசித்து
வருகின்றனர்.
இப்போது
அதிமுக
அதிருப்தி
எம்எல்ஏ.,க்கள் இபிஎஸ் இடம்
சரணடைய
வேண்டும்.
இல்லை
என்றால்
தவெக.,வில்
ஐக்கியமாக
வேண்டும்.
அப்படி
தவெக.,வில்
சேர்ந்தால்
ஏதாவது
பொறுப்பு
கிடைக்கலாம்.
ஆனால்
கட்சி
தாவல்
தடை
சட்டத்தின்
படி
அவர்களின்
எம்எல்ஏ.,
பதவிகள்
பறி
போகும்.
ஒருவேளை மீண்டும்
தேர்தல்
வந்து
அவர்களே
போட்டியிட்டாலும்
மீண்டும்
வெற்றி
பெறுவதற்கு
எந்த
உத்தரவாதமும்
இல்லை.
காரணம்,
பதவிக்காக
தான்
அவர்கள்
அதிமுக.,வில்
இருந்து
விலகி
வந்ததை
மக்கள்
பார்த்துக்
கொண்டு
இருக்கிறார்கள்.
அவர்கள்
தவெக
சின்னத்தில்
போட்டியிட
ஒரு
வேளை
வாய்ப்பளிக்கப்பட்டால்
தவெகவுக்கும்
கெட்ட
பெயர்
ஏற்படும்.
இந்த இரண்டு
வாய்ப்பு
இல்லை
என்றால்,
மூன்றாவது
இருக்கும்
வாய்ப்பு,
தனியாக
ஒரு
இயக்கம்
துவங்கி
நடத்துவது
தான்.
ஆனால்
அதற்கு
மக்களிடம்
செல்வாக்கும்,
ஆதரவும்
கிடைக்குமா
என்றால்,
அதற்கு
வாய்ப்பே
இல்லை.
இதனால்
இவர்கள்
அடுத்து
என்ன
செய்ய
போகிறார்கள்
என்பது
தான்
அனைவரின்
எதிர்பார்ப்பாக
உள்ளது.
ரமணி
24/5/25



