Saturday, August 8, 2026

GCT செயிண்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் பட்டத்தை வென்றார் பிரக்ஞானந்தா


 

  கிராண்ட் செஸ் டூர் செயிண்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் 2026 போட்டியில், ஒரு சுற்று மீதமிருந்த நிலையில் பட்டத்தைக் கைப்பற்றினார் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா. 20 வயதான அவர், இரண்டாம் இடம் பிடித்த உஸ்பெக் கிராண்ட்மாஸ்டர் ஜவோகிர் சிந்தரோவுக்கு எதிரான இறுதிக்கு முந்தைய சுற்றில் ஆட்டத்தை சமன் செய்து, தனது வெற்றியை உறுதி செய்தார்.

ஐந்து நாட்கள் நடைபெற்ற போட்டித்தொடர் முழுவதும் பிரக்ஞானந்தா முன்னிலை வகித்தார். சிந்தரோவ் கடுமையாகப் போராடி 1.5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்தப் பட்டத்தை வென்றதன் மூலம், இந்திய கிராண்ட்மாஸ்டர் 50,000 டொலர் பரிசுத் தொகையையும் 13 ஜிசிடி புள்ளிகளையும் பெற்றார். இது அவரை 2026 சீசன் தரவரிசையில், அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவிற்குப் பின்னால் இரண்டாம் இடத்திற்கு உயர்த்தியது.

ஓகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்கும் சின்க்ஃபீல்ட் கோப்பையுடன் ஜிசிடி பருவம் நிறைவடையும். இதில் பிரக்ஞானந்தா உட்பட செயின்ட் லூயிஸ் அணியின் பெரும்பாலான வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.


ஐவரி கோஸ்ட் - துருக்கி - செக்கியா ஆகிய நாடுகளுக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்


 

 உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் பல நாடுகள் தமது அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமித்தன. ஐவரி கோஸ்ட்,துருக்கி  செக்கியா ஆகிய நாடுகள்  புதிய பயிற்சியாளரை நியமித்துள்ளன.

  ஐவரி கோஸ்ட்  தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரான்சின் ஹெர்வ் ரெனார்டை மீண்டும் நியமித்துள்ளதாக ஐவோரியன்  உதைப்ந்தாட்டக்  கூட்டமைப்பு  செவ்வாயன்று அறிவித்தது. இது 'யானைகள்' அணியின் பொறுப்பில் அவரது இரண்டாவது காலகட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

  2015 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க  கிண்ணத்தை ஐவரி கோஸ்ட்டுக்குப் பெற்றுக்கொடுத்தவர்.  11 வருடங்களின்  பினனர்  மீண்டும் ஐவரி கோஸ்ட்டுடன் இணைகிறார். காத்திருந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

57 வயதான இவர், எமர்ஸ் ஃபே-க்குப் பதிலாகப் பொறுப்பேற்கிறார். ஃபே-யின் ஒப்பந்தம் ஜூலை 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. 2023 ஆப்பிரிக்கக் கிண்ணப் போட்டியில், சொந்த மண்ணில் 'யானைகள்' அணிக்கு ஒரு வியத்தகு வெற்றியைப் பெற்றுத் தந்தபோதிலும், அவரது ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற  உலகக்  கிண்ணத் தொடரில், ஐவரி கோஸ்ட்  அணி முதல் முறையாக  நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

  அண்மையில் நடந்த  உலகக் கிண்ணப்போட்டியில்  துனிசியா அணியின் பொறுப்பாளராக ரெனால்ட்  இருந்தார் . அங்கு அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே அணியை வழிநடத்தி, இரண்டிலும் தோல்வியடைந்ததோடு, ஏழு கோல்களை விட்டுக்கொடுத்தார்.

  2022 ஆம் ஆண்டு நடைபெற்ற  உலகக்  கிண்ணப் போட்டியின் போது, அவரது அப்போதைய அணியான சவூதி அரேபியா, இறுதியில் உலக சம்பியன் பட்டம் வென்ற ஆர்ஜென்ரீனாவை தோல்வியடையச் செய்ததால்  அவர் செய்திகளில் இடம்பிடித்தார்.

ரெனார்ட், ஆப்பிரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற சர்வதேசப் பயிற்சியாளர்களில் ஒருவர்.   அவர் 2012ல் ஸாம்பியாவை ஒரு எதிர்பாராத ஆப்பிரிக்க கோப்பை பட்டத்திற்கு வழிநடத்தியுள்ளார். மேலும், உலகக்  கிண்ணப்  போட்டிகளில் மொராக்கோ ,சவூதி அரேபியா  ஆகிய அணிகளுக்கும் பயிற்சியளித்துள்ளார். மிக சமீபத்தில், அவர் பிரான்ஸ் மகளிர் தேசிய அணியை நிர்வகித்தார்.



                      துருக்கியின் பயிற்சியாளரானார் உதைபந்தாட்ட நடுவர்

துருக்கி உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக  உலகக் கிண்ணப் போட்டியில் நடுவராகக் கடமையாற்றிய அந்தோனி டெய்லர் நியமிக்கப்பட்டுள்ளதாக  டிரினிட்டி சேம்பர்ஸ் சட்ட நிறுவனம்   உறுதிப்படுத்தியது;

 உலகக்  கிண்ணப் போட்டியின் பின்னர் உதைப்ந்தாட்ட  நடுவர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அந்தோனி டெய்லர் அறிவித்துள்ளார். அவரது கடைசிப் போட்டி,     காலிறுதிக்கு முந்தைய  .ஸ்பெயின் ,போத்துகல் ஆகிய  அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியாகும். அப்போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்று, பின்னர் பட்டத்தையும் வென்றது.

47 வயதான அந்தோனி டெய்லரின்,  20 ஆண்டுகாலப் பணி வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் பணியில் அவர் 668 தொழில்முறை உள்நாட்டுப் போட்டிகளுக்கும், யூரோ 2020 போட்டிக்கும், இரண்டு உலகக்  கிண்ணப் போட்டிகளுக்கும் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.


                     செக் குடியரசின்  பயிற்சியாளராக சாண்டி டெனியா நியமனம்

உலகக் கிண்ணப் போட்டியில்  பயிற்சியாளர் மிரோஸ்லாவ் கூபெக்கின் கீழ்,   மூன்று போட்டிகளில் விளையாடிய செக் குடியரசு    ஒரு புள்ளியை மட்டுமே பெற்று, தனது குழுவில் கடைசி இடத்தைப் பிடித்து குழுநிலை போட்டியிலேயே வெளியேறியது.

  தென் கொரியா,  மெக்சிகோ ஆகியவற்றிடம் தோல்வியடைந்து தென்னாப்பிரிக்காவுடன் சமன் செய்த மோசமான முடிவுகளுக்குத் தனது பொறுப்பை கூபெக் ஒப்புக்கொண்டார். ஒரு புள்ளியுடன் 'ஏ' பிரிவில் செக் அணி கடைசி இடத்தைப் பிடித்தது.

 மொரோஸ்லாவ்  கூபெக்குக்குப் பதிலாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த  சாண்டி  டெனியாவை  செக்கியா நியமித்துள்ளது.     செக் குடியரசு தேசிய அணியின் பொறுப்பை ஏற்று , அப்பதவியை வகிக்கும் முதல் வெளிநாட்டவர் ஆனார்.  சாண்டி  அவர்  2024 பரிஸ் ஒலிம்பிக்கில் ஸ்பெயினுக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார். ஸ்பெயினின் 17 வயதுக்குட்பட்ட (2017) , 19 வயதுக்குட்பட்ட (2019) அணிகளுடன் ஐரோப்பிய பட்டங்களையும் வென்றார்.

52 வயதான அவர், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கக்கூடிய வாய்ப்புடன் கூடிய இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக செக்  உதைபந்தாட்டச்  சங்கம் தெரிவித்துள்ளது. செக்கிய உதைபந்தாட்டச்  சங்கத்தின் தலைவர் டேவிட் ட்ருண்டா, பிராகில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் டெனியாவை அறிமுகம் செய்தார்.

 

 ரமணி

9/8/26

  

 

ரி20 யில் அதிக ஓட்டங்கள் ஜோஸ் பட்லர் சாதனை


 ரி20 கிறிக்கெற்றில் அதிக  ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில்,   கீரோன் பொல்லார்டைப் பின்னுக்குத் தள்ளி ஜோஸ் பட்லர்  இடம்பிடித்தார்.

தி ஹன்ட்ரட் தொடரின் சமீபத்திய சுற்றுப் போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக வெல்ஷ் ஃபயர் அணிக்கு எதிராக இங்கிலாந்து வீரர் அரைசதம் (27 பந்துகளில் 51*ஓட்டங்கள்) அடித்து இந்த மைல்கல்லை எட்டினார்.

பட்லர் தற்போது தனது ரி20 கிறிக்கெற் வாழ்க்கையில் 522 போட்டிகளில் 35.36 சராசரி , 147.02 ஸ்டிரைக் ரேட்டுடன் 14,833  ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் பத்து சதங்களும் 106 அரைசதங்களும் அடங்கும்.

பொல்லார்ட் 14,803 ஓட்டங்களுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதே சமயம், 12 ஆண்டுகளாக (4,467 நாட்கள்) முதலிடத்தில் இருந்த கிறிஸ் கெய்ல், தற்போது 14,562 ஓட்டங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

   ரி20 போட்டிகளில் அதிக  ஓட்டங்கள்

ஜோஸ் பட்லர் - 14,833 ஓட்டங்கள்

கீரோன் பொல்லார்ட் - 14,803 ஓட்டங்கள்

கிறிஸ் கெய்ல் - 14,562 ஓட்டங்கள்

அலெக்ஸ் ஹேல்ஸ் - 14,449  ஓட்டங்கள்

டேவிட் வார்னர் - 14,284  ஓட்டங்கள் 

 

இளஞ்சிவப்பு நிற பூட்ஸ்களுக்காக மன்னிப்புக் கேட்டது அடிடாஸ்


 அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் அதிகப்படியான இளஞ்சிவப்பு நிற  பூட்ஸ்கள் இடம்பெற்றதற்கு அடிடாஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. பூட்ஸ் காலணி வண்ணங்களின் வழக்கத்திற்கு மாறான சீரான தன்மை பற்றிக் கேட்கப்பட்டதற்கு, அடிடாஸ் தலைமை நிர்வாக அதிகாரி பியோர்ன் குல்டன், “அது தற்செயலாக நிகழ்ந்தது என்று பதிலளித்தார்.

நடந்து முடிந்த  உலகக்  கிண்ணப் போட்டியில் இளஞ்சிவப்பு நிற பூட்ஸ்கள் பரவலாகக் காணப்படுவது குறித்து, சிலர் அந்த நிறம் பச்சை நிற ஆடுகளத்திற்கு எதிராகத் தெரிவதாகவும், இது பூட்ஸ் தயாரிப்பாளர்களின் தயாரிப்புகளை ரசிகர்களின் பார்வையில் தனித்துக் காட்ட உதவுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் இளஞ்சிவப்பு நிற பூட்ஸ்களை அணிந்திருந்தது ஒரு தற்செயல் நிகழ்வு என்றும், அதற்காக அடிடாஸ் நிறுவனம் வியாழக்கிழமை மன்னிப்பு கோரியது .

அடிடாஸ் தலைமை நிர்வாக அதிகாரி பியோர்ன் குல்டன்,  இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில்;

"இது ஒரு தற்செயல் நிகழ்வு என்று நான் நினைக்கிறேன், மேலும் இது மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன், என்னை ஆச்சரியப்படுத்தியது அந்த நிறம் அல்ல, மாறாக வெவ்வேறு பிராண்டுகள் அனைத்தும் ஒரே நிறத்தைத் தேர்ந்தெடுத்ததுதான்,  இளஞ்சிவப்பு ஒரு நல்ல நிறம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் அனைவரும் ஒரே நிறத்தைத் தேர்ந்தெடுத்தது விசித்திரமாக இருக்கிறது,” என்றார் அவர். 

நைக்  பூட்ஸ் தயாரிப்பு மேலாளர் ஒடிங்கா நிமாகோ, 'தி அத்லெடிக்' என்ற விளையாட்டுப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் , இளஞ்சிவப்பு நிறம் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகக் கருதப்படுவதால் சில வீரர்களால் விரும்பப்படுகிறது என்று கூறினார்.

புதிய தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, காலணி தயாரிப்பாளர்களுக்குத் தங்கள் போட்டியாளர்களின் துல்லியமான வண்ணத் திட்டங்களைப் பற்றி பொதுவாக அதிகம் தெரிந்திருக்காது என்று குல்டன் கூறினார்.

 

 

Friday, August 7, 2026

கிளாஸ்கோவில் காணாமல் போன வீரர்களைத்தேடும் பொலிஸ்

  கிளாஸ்கோ நகரில்  நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட  "பல" விளையாட்டு வீரர்கள் காணாமல் போனதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஸ்கொட்லாந்து  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உகாண்டாவின் குத்துச்சண்டை அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் ஸ்கொட்லாந்தில் காணாமல் போனதாகவும், செவ்வாயன்று உகாண்டாவுக்குத் திரும்புவதற்கு முன்பு அவர்கள் மற்ற குழுவினருடன் மீண்டும் இணையவில்லை என்றும் உகாண்டாவின் விளையாட்டுச் செய்தி இணையதளமான NBS Sport தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீரர் காணாமல் போனதாக பாகிஸ்தான் டுடே செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

"பல விளையாட்டு வீரர்கள் காணாமல் போனதாக ஸ்கொட்லாந்து பொலிஸாருக்கு   தகவல்கள் கிடைத்துள்ளன. சூழ்நிலைகளை மதிப்பிடுவதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, மேலும் உள்துறை அமைச்சுடன் ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன," என்று ஸ்கொட்லாந்து பொலிஸ்  செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

2018 ஆம் ஆண்டு  அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற போட்டிகள் மற்றும் 2014ஆம் ஆண்டு  கிளாஸ்கோவில் நடைபெற்ற போட்டிகள் உட்பட, முந்தைய கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் தஞ்சம் கோரிய பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

"74 நாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 3,000 விளையாட்டு வீரர்களை நாங்கள் இந்த நகரத்திற்கு வரவேற்றுள்ளோம். பாதுகாப்பான , பத்திரமான போட்டிகளை வழங்க நாங்கள் விரும்புகிறோம். எனவே, அனைவரும் விதிமுறைகளுக்கு இணங்க வந்து செல்வதை உறுதி செய்வதற்காக, ஸ்கொட்லாந்து பொலிஸார் , எல்லைப் பாதுகாப்புப் படை ,  இங்கிலாந்து விஸாக்கள் மற்றும் குடிவரவுத் துறையுடன் நாங்கள் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம்," என்று போட்டிகளின் தலைமை நிர்வாகி ஃபில்   கூறினார்.

 

 

 

உகண்டாவின் உதைபந்தாட்ட வீரர் அடித்துக் கொலை

உகாண்டாவின் மிகவும் பிரபலமான உதைப்ந்தாட்ட வீரரான டேவிட் ஓவோரி வழிப்பறிக் கும்பலுடன் நடந்த போராட்டத்தின் போது அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் உள்ள தனது வீட்டருகே, செவ்வாய்க்கிழமை இரவு,   27 வயதான டேவிட் ஓவோரியின் தொலைபேசி ,பிற உடைமைகளைப் பறிக்க ஒரு கும்பல் நடத்திய வன்முறை முயற்சியை எதிர்த்தபோது அவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மகின்டியே என்ற ஆடம்பரமான புறநகர்ப் பகுதியில், ஸ்போர்ட்ஸ் கிளப் (SC) வில்லாவின் கப்டனான அவரை, தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று நடைபாதைக் கற்களால் தாக்கியதை நேரில் பார்த்தவர்கள் கண்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அவரது உடைமைகளுடன் தப்பிச் சென்றபோது, அவர் சுயநினைவிழந்து கிடந்தார்.

ஓவோரி அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார், பின்னர் நகரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் புதன்கிழமை தனது காயங்களால் உயிரிழந்தார்.

 உகாண்டாவின் தேசிய அணிக்காக விளையாடிய ஓவோரியின் மரணம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.  பாராளுமன்றம் புதன்கிழமை ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியதுடன், ஓவோரியின் மரணம் குறித்து விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

2024-ல், அவர் SC வில்லா அணிக்கு 20 ஆண்டுகளில் முதல் லீக் பட்டத்தை வென்று கொடுக்க உதவினார், இது அந்த அணிக்கு 17-வது உயர்மட்டக் கோப்பையாகும்.

2021 ஆப்பிரிக்கக் கிண்ண  தகுதிச் சுற்றுகளின் போது ஓவோரி 'தி கிரேன்ஸ்' அணியுடன் பணியாற்றினார், மேலும் எதிர்கால முக்கிய அழைப்புகளுக்கு ஒரு வலுவான தேர்வாகக் கருதப்பட்டார்.

  

Friday, July 31, 2026

ஆர்ஜென்ரீனாவுக்கு எதிரான விதி மீறல் விசாரணையை ஆரம்பித்தது பீபா


   உலகக்  கிண்ண உதைப்ந்தாட்டத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் விதிமீறல்கள் தொடர்பாக அர்ஜென்டினா உதைபந்தாட்டச்  சங்கத்தின் மீதும்,,  ஆர்ஜென்ரீனா வீரர்கள் மீதும் பீபா  ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக உலக  உதைப்ந்தாட்ட நிர்வாக அமைப்பு புதன்கிழமை அறிவித்தது.

 போட்லண்ட்  தீவுகளின் மீதான இறையாண்மையை வலியுறுத்தும் பதாகையை ஏந்தி நின்றது உட்பட, உலகக் கிண்ணப் போட்டியின் போது  நடந்ததாகக் கூறப்படும் பல விதிமீறல்களுக்காக ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

  விதிமீறல்களில் ஆதரவாளர்களின் பாகுபாடு நிறைந்த கோஷங்கள் ,சைகைகள், தாமதமான ஆட்டத் தொடக்கம், போட்டி ,பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறுதல், அணி ,பார்வையாளர்களால் பொருத்தமற்ற செய்திகளைக் காண்பித்தல், ,பார்வையாளர் அரங்குகளில் இருந்து பொருட்களை வீசுதல் ஆகியவை அடங்கும்.

விளையாட்டு சாராத ஆர்ப்பாட்டங்கள், அணியின் முறைகேடு, பாகுபாடு , இனவெறித் துஷ்பிரயோகம், அத்துடன் போட்டிகளில் ஒழுங்கு , பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை  ஆர்ஜென்ரீனா எதிர்கொள்ளக்கூடும் என்று  பீபா கூறியது.

ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகியவற்றுக்கிடையேயான உலகக் கிண்ண   இறுதிப் போட்டிக்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தொடர்பாக, ஆர்ஜென்ரீனாவீரர்கள் லியாண்ட்ரோ பரேடெஸ், நஹுயல் மோலினா , தியாகோ அல்மடா, அணி அதிகாரி ராபர்டோ அயலா ,ஸ்பெயின் வீரர் காவி ஆகியோருக்கு எதிராகத் தனித்தனி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஜூலை 19 அன்று நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின், ஆர்ஜென்ரீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அதனைத் தொடர்ந்து, பல  ஆர்ஜென்ரீனா  வீரர்களும் பணியாளர்களும்  ஸ்பெயின் சகாக்களுடன் மோதல்களில் ஈடுபட்டனர்.

விளையாட்டுக்கு எதிரான நடத்தை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மோலினா, அல்மடா மற்றும் காவி ஆகியோருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.