Sunday, February 27, 2011

பங்களாதேஷ் வென்றது

நெதர்லாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே பங்களாதேஷ் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் 276 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களை எடுத்தது. பங்களாதேஷ் அணியில் மஹமதுல்லா நீக்கப்பட்டு அஷ்ரபுல் இடம் பிடித்தார்.
தமிம் இக்பால் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தார்ராந்தில் வீசிய பந்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.இம்ருகைல்ஸ் 12, சித்திக் ஆகியோர் மூன்று ஓட்டங்கள். முஷ்பிகுர் ரஹிம் களம் புகுந்தார். அதிரடி காட்டிய தமீம் இக்பால் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் சஹிப் அல் ஹசன் 16 ஓட்டங்களில் வெளியேறினார். 15.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 86 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது பங்களாதேஷ். முஷ்பிகுர் ரஹிம் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்ரபுல் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். ரஹிபுல் ஹசன் 38, நயீம் இஸ்லாம் 29 ஓட்டங்கள் எடுத்தனர். 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து பங்களாதேஷ் 205 ஓட்டங்கள் எடுத்தது.
இந்தியாவுடனான போட்டியில்ஒன்பது விக்கெட்களை இழந்து 283 ஓட்டங்கள் எடுத்த பங்களாதேஷ் நெதர்லாந்துடனான போட்டியில் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்கள் எடுத்தது. நெதர்லாந்தின் பந்து வீச்சும் களத்தடுப்பும் பங்களாதேஷை கட்டுப்படுத்தின.
206 என்ற வெற்றி இலக்கு டன் களம் புகுந்த நெதர்லாந்து 45 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்கள் எடுத்து 27 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.

சலபமான இலக்கை திரட்டக் களம் புகுந்த நெதர்லாந்து பங்களாதேஷின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது தடுமாறியது. ஜோய்ஸ் 16, அன்ரூ எயிட் 10, ஸ்டாரில் 09, போடர் பில்ட் 20, ரியல் ஓபிரைன் 38,கெபின் ஓபிரைன் 37 ஓட்டங்கள் எடுத்தனர். ரியல் ஓபிரைன், கெபின்ஓபிரைன் ஆகிய இருவரும் சிறிது நேரம் போராடினர். 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த நெதர்லாந்து 178 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
ஷபியுல் இஸ்லாம் எட்டு ஓவர்கள் பந்து வீசி 21 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு ஓவரை ஓட்டமற்ற ஓவராக வீசினார். தமீம் இக்பால் ஆட்டநாயனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

வீழ்ந்தது நியூஸிலாந்து


நியூஸிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நாக்பூரில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா ஏழு விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்கள் எடுத்தது. முன்னணித் துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். மக்கலம் 52 ஓட்டங்களும் அணித்தலைவர் வெட்டோரி 44 ஓட்டங்களும் எடுத்தனர். அவுஸ்திரேலிய வீரர்கள் உதிரிகளாக 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தனர். 9.1 ஓவர்கள் பந்து வீசிய ஜோன்சன் 33 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் 3 ஓவரை ஓட்டமற்ற ஓவராக வீசினார்.
வைட் மூன்று விக்கெட்டுக்களையும், பாட்லீ, வட்சன், ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
20??? என்ற இலகுவான இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா 34 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது. வட்சன் 62, ஹடின் 55, பொண்டிங் 12 ஓட்டங்கள் எடுத்தனர். மைக்கல் கிளாக் ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களும், வைட் ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களும் எடுத்தனர். நியூஸிலாந்து வீரர்கள் 32 உதிரிகளை விட்டுக் கொடுத்தனர். பெனட் இரண்டு விக்கெட்டுக்களையும், கௌரி இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். ஆட்ட நாயனாக வட்சன் தேர்வு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

அசத்தினார் அறிமுக வீரர்

தென் ஆபிரிக்கா, மே. இந்திய தீவுகளுக்கிடையே டில்லி பெரோஷாகோட்வா மைதானத்தில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்கா ஏழு விக்கெட்களினால் வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்கா வீரர்டிவில்லியஸின் அறிமுக வீரரான இம்ரான் தாஹிரின் சுழலும் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கு உதவின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா களத்தடுப்பை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய மே.இந்தியத்தீவுகள் 47.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 222 ஓட்டங்கள் எடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கைல்ஸ் போத்தாவின் பந்தை கலிஸிடம் பிடிகொடுத்து இரணடு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மே.இந்தியத்தீவுகள் வீரர்களின் பல வீனத்தை அறிந்த தென். ஆபிரிக்க அணித் தலைவர் சுழல்பந்து வீச்சுடன் ஆட்டத்தை ஆரம்பித்தார். முதல் ஓவரிலேயே கைல்ஸ் ஆட்டமிழந்தது மே.இந்தியத்தீவுகளுக்குப் பாதகமாக அமைந்தது.
டேவிட் ஸ்மித்துடன் அடுத்த லாரா என வர்ணிக்கப்படும் டென்பிராவோ ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 111 ஓட்டங்கள் எடுத்தனர். போத்தாவின் வலையில் விழுந்த டெரன்பிராவோ 73 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கம்ரான் தாஹிரின் சுழலில் சிக்கிய டேவன்ஸ்மித் 36 ஓட்டங்களிலும் சர்வானி இரண்டு ஓட்டங்களிலும் வெளியேறினர். 26.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்கள் எடுத்த போது களமிறங்கியடுவைன் பிராவோ மிரட்டினார். 30 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்த டுவைன் பிராவோ ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். சந்த‌போல் 31 ஓட்டங்களிலும், தோமஸ் 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பொலட்,சமி,பென் ஆகியோர் ஸ்டைனின் பந்து வீச்சில் வந்த வேகத்திலேயே வெளியேறினர். 47.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த மே.இந்தியத் தீவுகள் 222 ஓட்டங்கள் எடுத்தது.
ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 10 ஓவர்கள் பந்து வீசிய இம்ரான் தாஹிர் 41 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டெய்ன் மூன்று விக்கெட்டுகளையும், போத்தா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
223 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்கா 42.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை எடுத்து ஏழு விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது.
அம்லா 14 ஓட்டங்களிலும், கலிஸ் நான்கு ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இரண்டு விக்கெட்டுகளை இழந்து 20 ஓட்டங்கள் எடுத்த போது அணித் தலைவர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார். டிவில்லியஸ் இவர்கள் இருவரும் இணைந்து 119 ஓட்டங்கள் எடுத்தனர். ஸ்மித் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டிவிலியஸ், டுமினி ஜோடி தென் ஆபிரிக்காவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. 97 பந்துகளுக்கு முகம் கொடுத்த டிவிலியஸ் இரண்டு சிக்சர், ஆறு பவுண்டரிகள் அடங்கலாக தனது 10 ஆவது சதத்தை அடித்தார். டிவிலியஸ் ஆட்டமிழக்காது 107 ஓட்டங்களையும் டுமினி ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் அடித்தனர். ஆட்டநாயகனாக டிவிலியஸ் தெரிவு செய்யப்பட்டார்.
2009 ஆம் ஆண்டு டில்லி மைதானத்தில் இந்திய இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டி மோசமான ஆடுகளம் காரணமாக கைவிடப்பட்டது. ஒரு வருடத் தடை விதிக்கப்பட்ட இம் மைதானம் தடையிலிருந்து மீண்டும் சிறந்த முறையில் போட்டியை நடத்தியுள்ளது
.ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

Thursday, February 24, 2011

205 ஓட்டங்களால் வென்றது பாகிஸ்தான்

பாகிஸ்தான், கென்யா ஆகியவற்றுக்கிடையே அம்பாந்தோட்டையில் நடைபெற்ற உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 205 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச் சூழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 317 ஓட்டங்கள் எடுத்தது. மொஹமட் ஹபிஸ், அஹமட் ஷேஷாட் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
கென்ய வீரர்களின் பந்து வீச்சில் பாகிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் திணறினார்கள். பாகிஸ்தான் 11 ஓட்டங்கள் எடுத்திருந்தவேளை மொஹமட் ஹபிஸ் ஆட்டமிழந்தார். 20 பந்துகளைச் சந்தித்த மொஹமட் ஹபிஸ் ஒரு பவுண்டரி உட்பட ஒன்பது ஓட்டங்களை எடுத்தார். 18 பந்துகளுக்கு முகம் கொடுத்த அஹமட் ஷேஷாட் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். 6.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான் 12 ஓட்டங்களை எடுத்தது.
கம்ரன் அக்மல், யூனிஸ்கான் ஜோடி பாகிஸ்தானைச் சரிவிலிருந்து மீட்டது. இவர்கள் இருவரும் இணை ந்து 98 ஓட்டங்கள் எடுத்தனர். 67 பந்துகளுக்கு முகம்கொடுத்த கம்ரன் அக்மல் ஐந்து பவுண்டரிகள் உட்பட 55 ஓட்டங்கள் எடுத்தார். யூனிஸ்கானுடன் மிஸ்பா உல் ஹக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 45 ஓட்டங்கள் சேர்த்தது. 67 பந்துகளைச் சந்தித்த யூனிஸ்கான் இரண்டு பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார்.
மிஸ்பா உல் ஹக்குடன் உமர் அக்மல் ஜோடி சேர்ந்தார். கென்ய வீரர்களின் பந்து வீச்சை உமர் அக்மல் சிதறடித்தார். 69 பந்துகளுக்கு முகம்கொடுத்த மிஸ்பா உல் ஹக் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 65 ஓட்டங்கள் எடுத்தார்.
52 பந்துகளுக்கு முகம் கொடுத்த உமர் அக்மல் ஒரு சிக்ஸர், எட்டு பவுண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்கள் எடுத்தார். அப்ரிடி ஏழு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அப்துல் ரஸாக் ஆட்டமிழக்காது எட்டு ஓட்டங்களும் அப்துல் ரெஹமான் ஆட்டமிழக்காது 5 ஓட்டங்களும் எடுத்தனர்.
தோமஸ் ஒடாயோ 3 விக்கெட்டுக்களையும் ஒடியானோ, கோச்சே, கமாண்டே, டிக்கா÷லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். கென்ய வீரர்கள் உதிரிகளாக 46 ஓட்டங்களைக் கொடுத்தனர்.
நியூசிலாந்துடனான போட்டியில் 69 ஓட்டங்களில் சுருண்ட கென்யா 318 என்ற இமாலய இலக்கை எதிர்நோக்கிக் களமிறங்கியது.
318 என்ற பிரமாண்டமான இலக்குடன் களமிறங்கிய கென்யா 33.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்ளை எடுத்தது. அணித் தலைவர் அப்ரிடியின் சுழலில் சிக்கிய கென்ய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஒபுயா அதிகபட்சமாக 47 ஓட்டங்கள் எடுத்தார்.
மொரிஸ், வோட்டஸ் ஆகியோர் களமிறங்கினர். வோட்டஸ் 17 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மொரிஸ் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஒபுயா இருவரும் சிறிது நேரம் தாக்குப் பிடித்தனர். இருவரும் இணைந்து 73 ஓட்டங்கள் எடுத்தனர்.
டிகாலோ 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மிஸ்ரா ஆறு ஓட்டங்களுடனும் பட்டேல் இரண்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். கென்யாவின் ஐந்து வீரர்கள் ஓட்டமெதுவும் எடுக்கவில்லை. 33.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்கள் எடுத்த கென்யா 205 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
துடுப்பாட்டத்தில் ஏமாற்றிய அப்ரிடி பந்து வீச்சில் பிரகாசித்தார். மூன்று ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட எட்டு ஓவர்கள் பந்து வீசிய அப்ரிடி 16 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கட்டுகளைக் கைப்பற்றினார். சர்வதேச அரங்கில் நான்காவது முறை ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தினார்.
உமர் குல் இரண்டு விக்கட்டுகளையும் மொஹமட் ஹபீஸ் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். உமர் அக்மல் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட் டார். சர்வதேச ஒருநாள் அரங்கில் 46 உதிரிகளை விட்டுக் கொடுத்து கென்யா நான்காவது இடத்தில் உள் ளது. முதல் மூன்று இடங்களில் ஸ்கொட்லாந்து (59), இந்தியா (51), பாகிஸ்தான் (47) உள்ளன.
1999 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய கென்யா 44 உதிரிகளை விட்டுக் கொடுத்தது.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

மிரட்டியது நெதர்லாந்து


இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கிடையே நாக்பூரில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட்களால் வெற்றி பெற் றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 292 ஓட்டங்கள் எடுத்தது.
ஒருநாள் கிரிக்கெட் அரங்கின் பாலகனான நெதர்லாந்தை இலகுவாக மடக்கி விடலாம் என்ற எண்ணத்துடன் களம் புகுந்த இங்கிலாந்து வீரர்கள் திணறினார்கள். நெதர்லாந்து வீரர்களின் துடுப்பாட்ட ஆக்கிரமிப்பை உடைப்பதற்கு இங்கிலாந்து வீரர்கள் சிரமப்பட்டனர்.
இங்கிலாந்து அணி பெரிதும் நம்பிக்கை வைத்திருந்த ஜேம்ஸ் அன்டர்ஸனின் பந்து வீச்சை நெதர்லாந்து வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்தனர். 10 ஓவர்கள் பந்து வீசிய அன்டர்ஸன் விக்கெட் எதுவும் எடுக்காது 72 ஓட்டங்களைக் கொடுத்தார்.
கெöவாசி, பெரெஸி ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். 16 ஓட்டங்களில் செவேஸி ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் பெரெஸி 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
மூன்றாவது இணைப்பாட்டத்தில் கூப்பருடன் ஜோடி சேர்ந்தார் டஸ்ட்டே. இவர்கள் இருவரும் இணைந்து 17 ஓவர்களில் 78 ஓட்டங்கள் எடுத்தனர். கூப்பர் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டஸ்ட்டே, டிகுரூத் ஜோடி 10 ஒவர்களில் 64 ஓட்டங்கள் எடுத்தது. டி குரூத் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
42.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்த நெதர்லாந்து 213 ஓட்டங்கள் எடுத்தது. டஸ்காட்டேவுடன் இணைந்த அணித் தலைவர் பொரென் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினார்.
நெதர்லாந்து விக்கெட்கள் வீழ்ந்த போதும் டஸ்காதி தனது முழுத்திறமையை வெளிப்படுத்தி இங்கிலாந்து வீரர்களைத் திணறடித்தார். கொலிங்வூட், அன்டர்ஸன் ஆகியோர் டஸ்கட்டேயின் துடுப்பாட்டத்துக்கு இரையானார்கள்.
டஸ்கட்டேயின் பந்தில் போபராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 110 பந்துகளுக்கு முகம் கொடுத்த டஸ்ட்டே மூன்று சிக்ஸர், ஒன்பது பவுண்டரி அடங்கலாக 119 ஓட்டங்கள் எடுத்தார்.
ஐந்தாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய டஸ்ட்டே 323 ஓட்டங் கள் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்துள்ளார்.
பிராட், அன்டர்சன் ஆகியோர் அதிக ஓட்டங்களைக் கொடுத்தனர். பிரொட், ஸ்வான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் பிரெஸ்னன், கொலிங்வூட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நெதர்லாந்து நிர்ணயித்த 293 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 48.4 ஓவர்களில் நான்கு விக்கெட்களை இழந்து 296 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அணித் தலைவர் ஸ்ரோட்ஸ், பீட்டர்ஸன் ஆகியோர் இணைந்து இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். 39 ஓட்டங்கள் எடுத்த பீட்டர்ஸன் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 17.4 ஓவர்களில் 105 ஒட்டங்கள் எடுத்தனர். ஸ்ரோட்ஸுடன் டிராட் ஜோடி சேர்ந்தார். 27 ஆவது அரைச் சதத்தை பதிவு செய்த ஸ்ரோட்ஸ் 88 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ட்ரொட்டுடன் இயன்பெல் இணைந்தார்.
இருவரும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். ஏழாவது அரைச் சதத்தை அடித்த ட்ராட் 62 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். பெல் 33 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
கொலிங்வுட், போபரா ஜோடி ஆட்டமிழக்காது தலா 30 ஓட்டங்கள் எடுத்தது. 48.4 ஓவர்களில் நான்கு விக்கெட்களை இழந்து 296 ஓட்டங்கள் எடுக்க இங்கிலாந்து ஆறு விக்கெட்டுகளால் வெற்றியடைந்தது.
புகாரி, சீலர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 119 ஓட்டங்கள் அடித்து இரண்டு விக்கெட்களை வீழ்த்திய டஸ்ட்டே ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
நெதர்லாந்து வீரர்கள் மூன்று சிக்ஸர்கள் அடித்தனர். இங்கிலாந்து வீரர் போபரா மட்டும் ஒரே ஒரு சிக்ஸரை அடித்தார். நெதர்லாந்து 27 பவுண்டரிகள் அடித்தது. இங்கிலாந்து 24 பவுண்டரிகள் அடித்தது.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

Wednesday, February 23, 2011

தலித் கட்சிகளுக்குஜெயலலிதா முன்னுரிமை


தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாரோடு யார் கூட்டணி சேர்வார்கள் என்று அரசியல் கட்சித் தொண்டர்களே மண்டையைப் போட்டுக் குடைந்து கொண்டிருக்கையில் புதிய தமிழகம், இந்தியக் குடியரசுக் கட்சி ஆகியவற்றுடனான தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்டார் ஜெயலலிதா. கூட்டணி சேரும் பெரிய கட்சிகள் இரண்டும் தாம் வெற்றி பெறும் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்ட பின்னரே சிறிய கட்சிகளுடன் தொகுதிகள் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவது வழமை. இம்முறை அதற்கு எதிர்மாறாக சிறிய கட்சிகளை முதலில் அரவணைத்துள்ளார் ஜெயலலிதா.
திராவிட முன்னேற்றக கழகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட பின்னர் அவர் ஆரம்பித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு கூடுதல் பங்களிப்பு வழங்கியவர்கள் தலித் சமுதாயத்தினரே. எம்.ஜி. ஆரின் வெற்றிக்குக் காரணமாக இருந்த தலித் கட்சிகளுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார் ஜெயலலிதா. விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சி வட மாவட்டங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலித் சமுதாய வாக்கு வங்கியைச் சிதறடித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கைக் குறைத்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகளிடம் இழந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்குகளை மீண்டும் பெறுவதற்காகவே புதிய தமிழகம் இந்தியக் குடியரசுக் கட்சி ஆகியவற்றுடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் ஜெயலலிதா.
டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் செ.கு. தமிழரசனின் இந்தியக் குடியரசுக் கட்சிக்கு ஒரு
தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகளின் பலம் வாய்ந்த தொகுதிகளிலேயே இந்த இரண்டு கட்சிகளும் போட்டியிடலாம் எனத் தெரியவருகிறது. அருந்ததியர் இனத்துக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கி அந்தச் சமூக மக்களைத் தன்வசம் ஈர்த்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மீது ஜெயலலிதா சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலளிக்க முடியாத கருணாநிதி தலித்களை ஜெயலலிதா அவமானப்படுத்து
கிறார் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டிலிருந்து விடுபடுவதற்காகவே தலித் கட்சிகளுடன் முதலில் தொகுதி ஒப்பந்தம் செய்துள்ளார் ஜெயலலிதா.
கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று கருணாநிதி, மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகி யோர் அறிக்கைவிட்டனர். தொகுதி உடன்பாட்டுக்காக இரு கட்சிகளும் ஐவர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்த ஐவர் குழு தம க்குள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதே தவிர இரண்டு குழுவும் இதுவரை சந்திக்கவில்லை.
அதிக தொகுதிகள், துணை முதல்வர் பதவி, மந்திரி சபையில் பங்கு என்ற கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சி முன் வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த மூன்று கோரிக்கைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை சாதகமான பதிலளிக்கவில்லை. 100 முதல் 80 தொகுதிகள்வரை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. 80 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தால் 80 தொகுதிகள் ஒதுக்கலாம். 30 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெறலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. மேலதிகமாக 50 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு தோல்வியடைந்தால் அது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸுக்கான வெற்றி வாய்ப்புப் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் 30 தொகுதிகளில் வெற்றி நிச்சயம். 30 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபாட்டுடன் செயற்பட்டால் வெற்றி பெறலாம். மேலும் 30 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இல்லை என்று தெரிந்து கொண்டு போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே அதிக தொகுதிகள் கேட்கப்படுவதாகக் கருதப்படுகிறது.
அதிக தொகுதி, துணை முதல்வர் பதவி, மந்திரி சபையில் இடம் ஆகியவற்றுக்கு உறுதியான முடிவு காணப்பட்டால்தான் திராவிட முன்னேற்றக் கழக காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.
தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக மீனவர்களுக்காகக் குரல் கொடுப்போர் தொகை அதிகரித்துள்ளது. 132 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற கனிமொழி உட்பட சுமார் 5ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னர் பாக்கு நீரிணையில் சுமார் 500 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். படகுகள், வலைகள் பல அழிக்கப்பட்டன. அவற்றின் பெறுமதி கோடிகளைத் தாண்டும் எனத் தெரியவருகிறது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்த கனிமொழி இப்போது சீறி எழுந்ததன் காரணம் தமிழக சட்ட சபைத் தேர்தல் என்பது வெளிப்படையானதே.
அரசியலில் இறங்குவதற்கான தருணம் பார்த்திருக்கும் நடிகர் விஜய் 22ஆம் திகதி
நாகப்பட்டினத்தில் மீனவர்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார். மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தும் விஜய் அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் உரையாற்றுவார். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக விஜய் பிரசாரம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் உள்ளது. விஜய் நடித்த காவலன் திரைப்படம் வெளியாவதைத் தடுப்பதற்கு ஆளும் கட்சி பிரமுகர்கள்தான் காரணம் என்று விஜய் வெளிப்படையாக அறிவித்திருந்தார். ஆகையினால் விஜய் நடத்தப்போகும் ஆர்ப்பாட்டம் ஆளும் கட்சிக்கு எதிரானதாகவே இருக்கும்.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் மீனவர் பிரச்சினை மிகவும் முக்கியத்துவம் பெறும். மீனவர்கள் கடலில் தாக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு எதிராக மீனவர்கள் வாக்களிப்பார்கள். மீனவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இப்போதே வியூகம் அமைக்கத் தொடங்கி விட்டன.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 20/02/11

91 ஓட்டங்களால் வென்றது ஆஸி.

அவுஸ்திரேலியா சிம்பாப்வே ஆகியவற்றுக்கிடையே அஹமதாபாத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலியா 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்கள் எடுத்தது.
சிம்பாப்வே வீரர்களின் துல்லியமான பந்து வீச்சும் மிகச் சிறந்த களத்தடுப்பும் அவுஸ்திரேலிய வீரர்களின் ஓட்ட எண்ணிக்கையை மட்டுப்படுத்தியது. வட்சன், ஹெடின், பொண்டிங் ஆகியோர் கூடுதலான பந்து வீச்சுக்கு முகம் கொடுத்து குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
வட்சனும் ஹெடினும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். சிம்பாப்வே வீரர்களின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாத அவுஸ்ரேலிய வீரர்கள் சிம்பாப்வேயைத் தடுத்தாடினார்கள். 85 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்தது அவுஸ்திரேலியா. ஹெடின் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 29 பந்துகளைச் சந்தித்த ஹெடின் மூன்று பவுண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்கள் எடுத்தார்.
வட்சனுடன் ஜோடி சேர்ந்தார் அணித் தலைவர் பொண்டிங். இதற்கு ஜோடியாலும் அதிரடியை வெளிப்படுத்த முடியவில்லை. 18.5 ஆவது ஓவரில் ஹடின் ஆட்டமிழந்தார். பொட்சன் பொண்டிங் ஜோடி 31.2 ஓவர்கள் வரை களத்தில் நின்று இணைப்பாட்டமாக 79 ஓட்டங்களையே சேர்த்தது. சிம்பாப்வே வீரர்களின் பந்து வீச்சும் களத்தடுப்பும் அவுஸ்திரேலிய வீரர்களைக் கட்டுப்படுத்தியது.
92 பந்துகளுக்கு முகம் கொடுத்த வட்சன் எட்டு பவுண்டரிகள் ஒரு சிச்சர் அடங்கலாய் 79 ஓட்டங்கள் எடுத்தார். பவுண்டரி எல்லையில் இருந்து மா<ஃபு வீசிய பந்து நேரடியாக விக்கெட்டில் பட்டதால் பொண்டிங் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். 36 பந்துக்களுக்கு முகம் கொடுத்த பொண்டிங் 28 ஓட்டங்கள் எடுத்தார். மைக்கல் கிளார்க் கமருன் வைட் ஜோடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முயற்சி செய்தது. 36 பந்துகளைச் சந்தித்த கமருன் வைட் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததை அடுத்து களமிறங்கிய டேவிட் ஹஸி, ஸ்டீவ் ஸ்மீத், மிட்சல் ஜோன்சன் ஆகியோரின் அதிரடியில் அவுஸ்திரேலியாவின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. எட்டுப் பந்துகளுக்கு முகம் கொடுத்த டேவிட் ஹசி ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடங்கலாக 14 ஓட்டங்ககளை எடுத்தார். 4 பந்துகளைச் சந்தித்த ஸ்டீவ் ஸ்மீத் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடங்கலாக 11 ஓட்டங்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலியா ஆறு விக்கெட்டுகளை இழந்து 262 ஓட்டங்கள் எடுத்தது. மைக்கல் கிளார்க் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்கள் எடுத்தார். 55 பந்துகளைச் சந்தித்த இவர் நான்கு பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்கள் எடுத்தார். மூன்று பந்துகளுக்கு முகம் கொடுத்த மிச்சல் ஜோன்சன் ஆட்டமிழக்காது ஏழு ஓட்டங்கள் எடுத்தார். முதலில் துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களைக் குவித்து சிம்பாப்வேக்கு நெருக்கடியைக் கொடுக்கலாம் என்று பொண்டிங் எதிர்பார்த்தார். ஆனால், சிம்பாவேயின் பந்து வீச்சிலும் களத்தடுப்பிலும் சிக்கிய அவுஸ்திரேலியா மிகச் சிரமப்பட்டு 262 ஓட்டங்கள் எடுத்தது. சிம்பாப்வே வீரரான பிரொஸ்மர் உட்சயா அவுஸ்திரேலிய வீரர்களை மிரட்டினார். இவர் 10 ஓவர்கள் பந்து வீசி 43 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இவரது இரண்டு ஓவர்களில் அவுஸ்திரேலிய வீரர்கள் ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. மா<ஃபு இரண்டு விக்கெட்டுகளையும் பிரைஸ், கிரெமர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 263 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சிம்பாப்வே 46.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்கள் எடுத்தது. கௌவென்ட்ரி, பிரண்டன் டெய்லர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். பிரட் லீயின் பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி அடித்த கொலென்ட்ரி அவரிடமே பிடி கொடுத்து 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பிரண்டன் ரெய்லர் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலிய பந்து வீச்சில் சிக்கிய சிம்பாப்வே 12.3 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 44 ஓட்டங்கள் எடுத்தது. சிகும்பு, வில்லியம் இணைந்து சிறிது நேரம் போராடினர். இவர்கள் இருவரும் இணைந்து 44 ஓட்டங்கள் எடுத்தனர். சிகும்புரா 14, வில்லியம்ஸ் 28, சகாப்வா ஆறு ஓட்டங்களில் ஆட்டமிழக்க சிம்பாப்வே தடுமாறியது. அடுத்து வந்த உட்சயர், கிரெமர் ஆகியோர் போராடினர். உட்சயா 24, கிரெமர் 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 46.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்த சிம்பாப்வே 171 ஓட்டங்கள் எடுத்து 91 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. ஜோன்ஸன் நான்கு விக்கட்டுகளையும் கிரெய்ஜா, டெய்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் பிரட் லீ ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். வட்சன் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். 2003, 07 உலகக் கிண்ணத் தொடரில் பொண்டிங் தலைமையில் பங்குபற்றிய அவுஸ்திரேலிய இப்போட்டியின் மூலம் 23 ஆவது வெற்றியைப் பதிவு செய்தது. உலகக் கிண் ணக் கிரிக்öகட் போட்டியில் விளையாடியவர்களின் வரிசையில் பொண்டிங் முதலிடம் பிடிக்கப் பொண்டிங் 40 போட்டிகளில் விளையாடியுள்ளõர். இரண்டாவது இடத்தில் மக்ராத் உள்ளார். இவர் 39 போட்டிகளில் விளையாடினார். ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்த அவுஸ்திரேலியர் பொண்டிங் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் 30 போட்டிகளில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார். 32 போட்டிகளில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்த மாக்வோ முதலிடத்தில் உள்ளார். அவுஸ்திரேலியா, சிம்பாப்வே அணிகள் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. அவுஸ்திரேலிய 26 போட்டிகளிலும் சிம்பாப்வே ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றன. உலகக் கிண்ணத் தொடரில் இரண்டு அணிகளும் ஒன்பது போட்டிகளில் சந்தித்த அவுஸ்திரேலியா எட்டுப் போட்டிகளிலும் சிம்பாப்வே ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றன. ரமணி சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

210 ஓட்டங்களால் வென்றது இலங்கை

ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை 210 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 332 ஓட்டங்கள் எடுத்தது.
தரங்க, டில்சான் ஆகியோர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறக்கினர். 19 ஓட்டங்களை எடுத்த தரங்க ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். டில்ஷானுடன் சங்கக்கார ஜோடி சேர்ந்தார்.
டில்ஷான் 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சங்கக்கார மஹேல ஜோடி நிதானமாக விளையாடியது. சங்கக்கார, மஹேல ஜோடி மூன்றாவது இணைப்பாட்டத்தில் 187 ஓட்டங்களை அடித்தது. சங்கக்கார சதமடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் டேவிசன் வீசிய பந்தை அவரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 87 பந்துகளுக்கு முகம் கொடுத்த சங்கக்கார ஒரு சிக்சர், ஏழு பவுண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களை அடித்தார்.
மஹேல 100 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 81 பந்துகளுக்கு முகம் கொடுத்த மஹேல ஒரு சிக்சர் ஒன்பது பவுண்டரிகள் அடங்களாக 100 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த இலங்கை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். பெரேரா 11 கபுகெதர 02, மத்தியூஸ் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவின் போது இலங்கை அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 332 ஓட்டங்களை எடுத்தது. சமரவீர ஆட்டமிழக்காது 18 ஓட்டங்களும், குலசேகர ஆட்டமிழக்காது ஏழு ஓட்டங்களும் எடுத்தனர்.
கனடாவுக்கு எதிராக இலங்கை 332 ஓட்டங்கள் எடுத்தது. என்றாலும், 7 விக்கெட் டுகளை இழந்தது ஆரோக்கியமானதல்ல.
டேவிசன், பைட்வான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ரிஸ்வான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
333 என்ற பிரமாண்டமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய கனடா 36.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. குணசேகர, டேவிசன் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். குலசேகரவின் பந்தை டில்ஷானிடம் பிடிகொடுத்த குணசேகர ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
டேவிசன் ஓட்டமெதுவும் எடுக்காது பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் வெளியேற பாகியும், ரிஸ்வானும் போராடினார்கள். 35 பந்துகளை சந்தித்த ரிஸ்வான் இரண்டு சிக்ஸர், நான்கு பவுண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்களை எடுத்தார். பாகி 22 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் வெளயேறினர். 36.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து கனடா தோல்வியடைந்தது.
பைட்வான் ஆட்டமிழக்காது 18 ஓட்டங்கள் எடுத்தார்.
குலசேகர, பெரேரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் முரளிதரன் இரண்டு விக்கெட்டுகளையும் மெண்டிஸ் சமரவீர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக மஹேல தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

Tuesday, February 22, 2011

210 ஓட்டங்களால் வென்றது இலங்கை

அம்பாந்தோட்டை மஹிந்தராஜபக்ஷ மைதானத்தில் கனடா இலங்கை ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை 210 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 332 ஓட்டங்கள் எடுத்தது.
தரங்க, டில்சான் ஆகியோர் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறக்கினர். 19 ஓட்டங்களை எடுத்த தரங்க ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். டில்ஷானுடன் சங்கக்கார ஜோடி சேர்ந்தார்.
டில்ஷான் 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சங்கக்கார மஹேல ஜோடி நிதானமாக விளையாடியது. சங்கக்கார, மஹேல ஜோடி மூன்றாவது இணைப்பாட்டத்தில் 187 ஓட்டங்களை அடித்தது. சங்கக்கார சதமடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் டேவிசன் வீசிய பந்தை அவரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 87 பந்துகளுக்கு முகம் கொடுத்த சங்கக்கார ஒரு சிக்சர், ஏழு பவுண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களை அடித்தார்.
மஹேல 100 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 81 பந்துகளுக்கு முகம் கொடுத்த மஹேல ஒரு சிக்சர் ஒன்பது பவுண்டரிகள் அடங்களாக 100 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த இலங்கை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். பெரேரா 11 கபுகெதர 02, மத்தியூஸ் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவின் போது இலங்கை அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 332 ஓட்டங்களை எடுத்தது. சமரவீர ஆட்டமிழக்காது 18 ஓட்டங்களும், குலசேகர ஆட்டமிழக்காது ஏழு ஓட்டங்களும் எடுத்தனர்.
கனடாவுக்கு எதிராக இலங்கை 332 ஓட்டங்கள் எடுத்தது. என்றாலும், 7 விக்கெட் டுகளை இழந்தது ஆரோக்கியமானதல்ல.
டேவிசன், பைட்வான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ரிஸ்வான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
333 என்ற பிரமாண்டமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய கனடா 36.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. குணசேகர, டேவிசன் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். குலசேகரவின் பந்தை டில்ஷானிடம் பிடிகொடுத்த குணசேகர ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
டேவிசன் ஓட்டமெதுவும் எடுக்காது பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் வெளியேற பாகியும், ரிஸ்வானும் போராடினார்கள். 35 பந்துகளை சந்தித்த ரிஸ்வான் இரண்டு சிக்ஸர், நான்கு பவுண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்களை எடுத்தார். பாகி 22 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் வெளயேறினர். 36.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து கனடா தோல்வியடைந்தது. பைட்வான் ஆட்டமிழக்காது 18 ஓட்டங்கள் எடுத்தார்.
குலசேகர, பெரேரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் முரளிதரன் இரண்டு விக்கெட்டுகளையும் மெண்டிஸ் சமரவீர ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக மஹேல தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

இலகுவாக வென்றது நியூசிலாந்து

நியூசிலாந்து கென்யா ஆகிய அணிகளுக்கிடையே சென்னையில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து 10 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கென்யா முதலில் துடுப்பெடுத்தாடி 23.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 69 ஓட்டங்களை மட்டும் பெற்றது.
ஒமண்டா,வாட்டர்ஸ் ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். இருவரும் நியூசிலாந்து வீரர்களின் பந்து வீச்சை தடுத்தாட முற்பட்ட முற்பட்டதால் அவர்களால் அதிக ஓட்டங்களைப் பெற முடியவில்லை. ஆறு ஓட்டங்களில்ஒமண்டாஆட்டமிழந்தார்.ஒபுஜாஜோடி சேர்ந்தார். அதிரடியாக இரண்டு பௌண்டரிகள் அடித்து மிரட்டியஒபுஜா 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.பாடல்16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மூன்று வீரர்கள் தலா இரண்டு ஓட்டங்களுடனும் ஒருவர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். மூன்று வீரர்கள் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தனர். பாடல் ஆட்டமிழக்காது 16 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூசிலாந்து 8 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 72 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. குப்தில் 39 ஓட்டங்களும் மக்குலம் 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
நான்கு விக்கட்டுகளை கைப்பற்றிய பெர்னட் ஆட்டநாயகனாகத் தெரிவானார். சௌதி, ஒராம்ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளை கைப்பற்றினர்.
கடந்த ஆண்டு நியூசிலாந்து அடித்த 103 ஓட்டங்களே குறைந்த ஓட்டங்களாக இருந்தது.
சேப்பாகக்த்தில்1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் அவுஸ்திரேலியா இந்தியாவை ஒரு ஓட்டத்தாலும் சிம்பாப்வேயை 96 ஓட்டங்களினாலும் தோற்கடித்தது. 1996 ஆம் ஆண்டு காலிறுதியில் நியூசிலாந்து ஆறு விக்கட்டுக்களினால் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மாமெட்ரோநியூஸ்

Sunday, February 20, 2011

ஷேவாக் கோஹ்லி சதம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 87 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 370 ஓட்டங்கள் எடுத்தது.
பங்களாதேஷ் மிர்பூர் தேசிய மைதானத்தில் முதலாவது உலகக் கிண்ண போட்டி நடைபெற்றது. ஷேவாக், டெண்டுல்கர் ஆகிய இருவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
முதலாவது பந்தை பவுண்டரிக்கு அடித்து 10 ஆவது உலகக் கிண்ணப் போட்டியன்று ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தார் ஷேவாக்.
ஷேவாக்கும் டெண்டுல்கரும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர். 8.5 ஓவர்களில் 50 ஓட்டங்களை எடுத்தது இந்தியா. சச்சின் டெண்டுல்கர் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 29 பந்துகளைச் சந்தித்த சச்சின் நான்கு பவுண்டரிகள் அடங்கலாக 28 ஓட்டங்கள் எடுத்தார்.
ஷேவாக்குடன் கம்பீர் இணைந்தார். இருவரும் இணைந்து வழமையான அதிரடியை வெளிப்படுத்தினர். 39 பந்துகளுக்கு முகம் கொடுத்த கம்பீர் மூன்று பவுண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களைப் பெற்றவேளையில் மஹமதுல்லாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு ஷேவாக்குடன் ஜோடி சேர்ந்தார் கோஹ்லி. இருவரும் அதிரடியை வெளிப்படுத்த இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. 45 பந்துகளில் ஒரு சிக்சர், ஏழு பவு ண்டரிகள் அடங்கலாக 50 ஓட் டங்கள் எடுத்தார் ஷேவாக். ஷேவாக் கோஹ்லி இருவரையும் பிரிக்க முடியாது திணறினார்கள் பங்களாதேஷ் வீரர்கள். 94 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஷேவாக் ஒரு சிக்கர், ஒன்பது பவுண்டரி அடங்கலாக 10 ஆவது உலகக் கிண்ணப் போட்டியின் முதலாவது சதத்தை அடித்தார் ஷேவாக்.
மறுமுனையில் 46 பந்துகளுக்கு முகம் கொடுத்த கோஹ்லி ஐந்து பவுண்டரிகளுடன் அரைச் சதமடித்தார். 124 பந்துகளைச் சந்தித்த ஷேவாக் 150 ஓட்டங்கள் அடித்தார். இதில் நான்கு சிக்ஸர் 13 பவுண்டரிகள் அடங்கும். ஷேவாக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டதால் அவரது அதிரடியின் வேகம் குறைந்தது. ஷேவாக்குக்கு ரன்னராக கம்பீர் களம் புகுந்தார்.
உலகக் கிண்ண போட்டியில் அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனை தென்னாபிரிக்க வீரராக ஹேர்ஸ்டன் திகழ்கிறார். ஹேர்ஸ்டனின் 188 ஓட்டங்களைக் கடந்து ஷேவாக் புதிய சாதனை படைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த வேளையில் பங்களாதேஷ் அணித் தலைவர் சகிப் அல்ஹசனின் பந்தில் ஆட்டமிழந்தார் ஷேவாக். 140 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஷேவாக் 175 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஐந்து சிக்ஸர்கள், நான்கு பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை களிப்படையச் செய்தார் ஷேவாக்.
மூன்றாவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஷேவாக், கோஹ்லி ஆகியோர் 145 பந்துகளில் 203 ஓட்டங்களை அடித்து புதிய சாதனை படைத்தனர். ஷேவாக் ஆட்டமிழந்ததும் களம் புகுந்த யூசுப்பதான் வழமை போன்று அதிரடி காட்டினார். கோஹ்லி சதத்தை நெருங்கும் வேளையில் மறுமுனையில் பதான் அதிரடியாக ஓட்டங்க ளைக் குவித்தார்.
49 ஓவர்கள் முடிந்து 50 ஆவது ஓவரின் நான்காவது பந்தை யூசுப் பதான் எதிர்நோக்கினார். செஞ்சரி அடிக்க கோஹ் லிக்கு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று ரசிகர்கள் பதை பதைத்தனர். ஒரே ஒரு ஓட்டத்துடன் நின்று விட்டார் யூசுப் பதான். ஒரு ஓட்டம் எடுத்து உலகக் கிண்ணப் போட்டியில் தனது முதலாவது சதத்தை அடித்தார் கோஹ்லி 83 பந்துகளுக்கு முகம் கொடுத்த கோஹ்லி இரண்டு சிக்ஸர் எட்டு பவுண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் எடுத்தார். கடைசிப் பந்தில் யூசுப்பதான் ஆட்டமிழந்தார். பதான் 8 ஓட்டங்கள் எடுத்தார். கோஹ்லி ஆட்டமிழக்காது 100 ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசி 27 ஓவர்களில் 218 ஓட்டங்கள் எடுத்தது இந்திய அணி. ருபெல் ஹொசைன், சஹீர் அல் ஹசன் ஆகிய இருவரும் சராசரியாக ஆறு ஓட்டங்களை விட்டுக் கொடுத்தனர். ஏனையோர் அதிக ஓட்டங்களைக் கொடுத்தனர்.
சஃவியுல் இஸ்லாம், சகிப் அல் ஹசன், மஹமதுல்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
371 என்ற பிரமாண்டமõன இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தமீம் இக்பாலும் இமருல் கயஸும் மிரட்டினார்கள்.
ஸ்ரீசாந்தின் ஒரு ஓவரில் இமருல் கயஸ் 24 ஓட்டங்கள் எடுத்தார். 30 பந்துகளில் பங்களாதேஷ் 50 ஓட்டங்களை எட்டியது. பட்டேலின் பந்தில் இமருல் கயஸ் ஆட்டமிழந்தார். 29 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஏழு பவுண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்கள் எடுத்தார்.
தமிம் இக்பாலுடன் சித்திக் ஜோடி சேர்ந்தார். 10 ஓவர்களில் 68 ஓட்டங்கள் எடுத்த னர். பங்களாதேஷ் ரசிகர்களின் பலத்த ஆரவார இரைச்சலுக்கு மத்தியில் 15 ஓவர்க ளில் 93 ஓட்டங்கள் எடுத்தது பங்களாதேஷ்.
ஹர்பஜன் சிங், யூசுப் பதான் ஆகியோரின் பந்து வீச்சு பங்களாதேஷின் துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தியது. அவர்கள் இருவரும் இணைந்து வீசிய 11 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாது திண்டாடினார்கள் பங்களாதேஷ் வீரர்கள்.
அதிரடியாக விளையாடிய தமிம் இக்பால் மந்தமாக விளையாடினார். யுவராஜ் சிங்கின் பந்தில் சிக்சர் அடித்து மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தினார். தமிம் இக்பாலின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் முனாப் பட்டேல்.
முனாப் பட்டேலின் பந்தை யுவராஜிடம் பிடிகொடுத்த தமிம் இக்பால் ஆட்டமிழந்தார். 86 பந்துகளுக்கு முகம் கொடுத்த தமிம் இக்பால் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கலாக 70 ஓட்டங்கள் எடுத்தார்.
வெற்றிக்காகப் போராடிய அணித் தலைவர் சாஹிப் அல் ஹஸிர் 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். முஷிபுர் ரஹிம் 28, ரகிபுல் ஹஸன் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர். 50 ஓவர்கள் பங்களாதேஷ் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 283 ஓட்டங்கள் எடுத்தது.
ஐந்து ஓவர்கள் பந்து வீசிய ஸ்ரீசாந்த் 53 ஓட்டங்களைக் கொடுத்தார். முனாப் பட்டேல் 48 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளையும் சகிர்கான் இரண்டு விக்கெட்டுகளையும் ஹர்பஜன், யூசுப்பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஷேவாக் தெரிவு செய்யப்பட்டார். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் சஹிட் அல்ஹசன் 260 ஓட்டங்கள் வரை துரத்தி வெற்றி பெற முடியும் என்று கூறினார்.
அணித் தலைவரின் எதிர்பார்ப்பை சக வீரர்கள் நிறைவேற்றி விட்டனர். இந்தியாவும் பங்களாதேஷûம் இதுவரை 23 முறை மோதியுள்ளன. இந்தியா 21 போட்டிகளிலும் பங்களாதேஷ் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றன.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்

Thursday, February 17, 2011

தமிழக முதலமைச்சருக்கு எதிராகசுப்பிரமணிய சுவாமி போர்க்கொடி


தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு மூச்சாக இறங்கிவிட்டது. நடிகர் கார்த்திக்குடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் பார்வட் பிளாக் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா. சில கட்சிகளுடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டார். திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் இன்னமும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவில்லை. தேர்தல் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் குழு அமைத்துள்ளன.
தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தைக் குழுவில் முக்கியமான சிலர் சேர்க்கப்படாததனால் இரண்டு கட்சிக்குள்ளும் புகைச்சல் கிளம்பியுள்ளது. துணை முதல்வரும் பொருளாளருமான ஸ்டாலின், முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான ஆர்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான பொன்முடி, நாடாளுமன்ற திராவிட முன்னேற்றக்கழக குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். கட்சிக்குள் இருந்து கொண்டு அடிக்கடி பரபரப்பு செய்யும் அழகிரி, தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இல்லாதது அவரது ஆதரவாளர்களைச் சீற்றமடைய வைத்துள்ளது.
அழகிரியின் தயவு இல்லாமல் தென் மாவட்டங்களில் வெற்றி பெற முடியாது. ஸ்டாலின், அழகிரி என்ற கோஷ்டிப் பூசல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் உள்ளது. இது வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும் ஸ்டாலினின் ஆதரவாளர் அழகிரியின் ஆதரவாளர் என்ற பிரிவு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தலைவரின் சொல்லுக்குக் கட்டுப்படும் அழகிரி, தலைவரின் சில முடிவுகளை விமர்சிக்கவும் தவறுவதில்லை. அழகிரியைத் தலைவர் ஒதுக்குகிறாரோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளதனால் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவில் அழகிரியும் சேர்க்கப்படலாம்.
இதேவேளை கட்சியுடன் அதிகம் ஒட்டாமல் இருக்கும் தயாநிதிமாறனும் குழுவில் சேர்க்கப்படலாம். சோனியாவுடனும், ராகுல் காந்தியுடனும் மிக நெருக்கமாக இருப்பவர் தயாநிதிமாறன். தயாநிதிமாறனும் குழுவில் இருந்தால் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இளங்கோவன் இல்லாததால் அவரது ஆதரவாளர்கள் சீற்றமடைந்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகளை மூர்க்கமாக எதிர்த்த இளங்கோவன் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இல்லாதது திராவிட முன்னேற்றக் கழகத்தைத் திருப்திப்படுத்தவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் இளங்கோவன். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணி தொடரும் என்று சோனியா காந்தி அறிவித்ததும் பழையது எல்லாவற்றையும் மறந்து கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக முழங்கினார் இளங்கோவன்.
காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கையினால் வெறுப்படைந்துள்ள இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மீது ஏற்பட்ட வெறுப்பில் உள்ளவர்களுக்கு வலை விரிக்கத் தயாராகிறது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் கட்சி வெற்றி பெறக்கூடிய தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விட்டுக் கொடுத்தலில் அல்லது தாம் எதிர்பார்க்கும் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் அனுமதி மறுத்தால் கட்சி மாறுவதற்குத் தயாராக சிலர் உள்ளனர்.
தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை என்ற பெயரில் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் காலத்தை இழுத்தடிக்கத் திட்டமிடுகின்றன. விஜயகாந்தின் அறிவிப்புக்கமைய இரண்டு கட்சிகளும் காத்திருக்கின்றன. விஜயகாந்த், ஜெயலலிதாவுடன் இணைவதற்கான சாத்தியக்கூறு எதுவும் இப்போதைக்கு இல்லை. தமிழகத்தில் 10 சதவீத வாக்கு வங்கியை வைத்திருக்கும் விஜயகாந்தை ஒதுக்கிவிட்டு சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில் விஜயகாந்தின் வரவுக்காக இன்னொரு கதவை திறந்து வைத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.
கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறி நிலையில் இருக்கும் வேளையில் தமிழக முதல்வர் கருணாநிதி மீது வழக்குத் தொடர்வதற்கு கவர்னரின் அனுமதி கோரியுள்ளார் சுப்பிரமணிய சுவாமி.
"அரசு விருப்புரிமை' என்ற பெயரில் சட்ட விதிகளை மீறி தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு நிலத்தையும் வீடுகளையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார் சுப்பிரமணிய சுவாமி. சுப்பிரமணிய சுவாமியின் குற்றச்சாட்டினால் நிலை குலைந்த அரசு விருப்புரிமை வழங்கலை இடைநிறுத்தியுள்ளது. கடந்த அரசின் நடைமுறையையே பின்பற்றியதாகக் கூறி இக்குற்றச்சாட்டில் இருந்து விடுபட முயற்சி செய்கிறார் முதல்வர் கருணாநிதி. தாம் வழங்கிய நடைமுறை சரி என்று அடித்துக் கூறாது ஜெயலலிதா மீது குற்றத்தைத் திசை திருப்புகிறார் கருணாநிதி.
2004ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது கருணாநிதியின் முயற்சியினால். தமிழகத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டவர் சுர்ஜித்சிங் பர்னாலா சுப்பிரமணிய சுவாமியின் வேண்டுகோளுக்கு கண்ணை மூடிக்கொண்டு கவர்னர் அனுமதி வழங்கமாட்டார்.
கருணாநிதி மீது வழக்குத் தொடர கவர்னர் அனுமதி வழங்கினால் கருணாநிதிக்கும் சிக்கல். அனுமதி வழங்காவிட்டால் கவர்னருக்கு சிக்கல். கவர்னர் சரியான பதில் அளிக்கவில்லை என்றால் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கத் தயங்கமாட்டார் சுப்பிரமணிய சுவாமி.
ஸ்பெக்ரம் வழக்கில் ராசா கைது செய்யப்படுவதற்கு சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த வழக்கும் ஒரு காரணம். 1995ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவின் மீது வழக்குத் தொடர்வதற்காக அன்றைய கவர்னரான சென்னா ரெட்டியிடம் சுப்பிரமணிய சுவாமி கொடுத்த மனுவின் பிரகாரம் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது வழக்குத் தொடர்வதற்காக இரண்டு வக்கீல்கள் சுவர்னர் பரத்வாஜிடம் கொடுத்த மனுவின் காரணமாக எடியூரப்பா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு பீகார் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட மனுவுக்கு ஒப்புதல் வழங்கினார் கவர்னர் ஏ. ஆர். கித்வாய்.
சுப்பிரமணிய சுவாமி மீது வழக்குத் தொடரப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் முதல்வர் மீது வழக்குத் தொடர்வதற்கு அனுமதி கேட்டு மனுக் கொடுத்துள்ளார் சுப்பிரமணிய சுவாமி.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் சுப்பிரமணியன் சுவாமி கொடுக்கும் குடைச்சல் முதல்வர் கருணாநிதிக்கு பெரும் தலை இடியைக் கொடுக்கப் போகிறது.வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளீயீடு 13/02/11

Monday, February 7, 2011

குழம்பியுள்ளகூட்டணிப் பேச்சுவார்த்தைகள்

தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை குழப்ப நிலையிலேயே உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று இரு தலைவர்களும் உறுதிபடத் தெரிவித்து வந்தனர். ஆனால் டெல்லியில் சோனியாவுக்கும் கருணாநிதிக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்øதையில் முடிவு எட்டப்படவில்லை. ராசாவின் கைது கூட்டணி பேரத்தைக் குழப்பியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், விஜயகாந்தின் கட்சியும் இணைவதற்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது என தகவல்கள் வெளிவந்தன. விஜயகாந்த் தரப்பில் விடுக்கப்பட்ட நிபந்தனையினால் பேச்சுவார்த்தை முறிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று விடுத்த நிபந்தனையை ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைவதற்கு தூதுக்கு மேல் தூது அனுப்பினார் ராமதாஸ். ராமதாஸின் தூதர்களுக்கு சாதகமான பதிலை வழங்காத முதல்வர் கருணாநிதி, கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் இருக்கிறது என டில்லியில் கூறினார். கூட்டணி சேர்வதற்காக கெஞ்சிக் கொண்டிருந்த ராமதாஸ் கூட்டணி பற்றி நாம் இன்னமும் முடிவு செய்யவில்லை என்று தடாலடியாக அறிவித்தார்.
தமிழக அரசியலில் என்றுமே இல்லாதவாறு கூட்டணிப் பேரங்கள் குழம்பிப் போயுள்ளன. தனி ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் சூழ்நிலை தமிழகத்தில் இல்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்த நினைக்கும் கட்சிகள் அதிக தொகுதி கேட்டு நெருக்கடி கொடுக்கின்றன. கூட்டணி பற்றிய இறுதி முடிவு எடுக்கலாம் என்ற நம்பிக்கையில் டில்லிக்குச் சென்ற முதல்வர் கருணாநிதிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. தமிழக ஆட்சியைத் தக்க வைப்பதற்காக கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தையை கருணாநிதி நம்பி இருந்தார். சோனியாவின் சுகவீனம் காரணமாக சந்திப்பு பிற்போடப்பட்டது. சோனியாவைச் சந்திக்காது தமிழகத்துக்குத் திரும்பினால், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற பிரசாரம் பெரிதாகி விடும் என்பதை உணர்ந்த கருணாநிதி சோனியாவைச் சந்திப்பதில் அதிக அக்கறை காட்டினார்.
அதிக தொகுதி, துணை முதல்வர் பதவி, அமைச்சரவையில் பங்கு ஆகியவற்றில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. இந்த மூன்றையும் அங்கீகரிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை. அதிக தொகுதிகள் கொடுத்தால் அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத நிலை ஏற்படும். திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய இலவசங்களும் சலுகைகளும் தமிழக சட்டசபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை முதல்வர் கருணாநிதியிடம் உள்ளது. துணை முதல்வர் பதவியைக் கொடுத்தால் ஸ்டாலினுக்கு எதைக் கொடுப்பது. மகனுக்காக முதல்வர் பதவியைத் துறக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆகையால் இம் மூன்று கோரிக்கைகளுக்கும் சாதகமான பதிலை வழங்க முடியாத நிலையில் உள்ளார் கருணாநிதி.
முன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்கி வரவேண்டிய நிலைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தள்ளப்பட்டுள்ளது. ஆதாரங்கள் கைவசம் உள்ளதால்தான் ராசா கைது செய்யப்பட்டதாக சி. பி. ஐ. அறிவித்தாலும் கூட்டணிப் பேச்சுவார்த்தை டில்லியில் நடைபெறும் நிலையில் ராசா கைது செய்யப்பட்டதில் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைக் கட்டுப்படுத்தும் வல்லமையை இழந்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி, கருணாநிதி சொல்வதற்கெல்லாம் தலையாட்டிய சோனியா விழித்துக் கொண்டதால் சோனியா கீறிய கோட்டில் நடக்க வேண்டிய நிலையில் உள்ளார் கருணாநிதி. காங்கிரஸின் கோரிக்கைகள் சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டால் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடரும். இல்லை என்றால் விஜயகாந்துடன் கைகோர்க்க காங்கிரஸ் தயாராக உள்ளது.
ஜெயலலிதாவும், விஜயகாந்தும் இணையப் போகிறார்கள் என்ற செய்தி பரபரப்பாக வெளிவந்து கொண்டிருந்தது. இருவரும் இணைந்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. விஜயகாந்த் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையினால் பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ளது. விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்குத் துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. தனக்கு இணையாக ஆண்கள் வருவதையே விரும்பாத ஜெயலலிதா இன்னொரு பெண்ணுக்கு இடம் கொடுக்க மாட்டார்.
அடுத்த முதல்வர் என்ற கோஷத்துடன் அரசியலில் களமிறங்கிய விஜயகாந்த், தன் மனைவியை துணை முதல்வராக்க விரும்புவதாக வெளியானால் செய்தி அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கியுள்ளது. அப்படி ஒரு கோரிக்கையை தான் முன் வைக்கவில்லை என்று அறிக்கை விடக் கூடிய நிலையில் விஜயகாந்த் இல்லை. அப்படி ஒரு அறிக்கை வெளியானால் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்றதை ஒப்புக் கொண்டது போல் ஆகி விடும்.
மனைவி பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவியை விஜயகாந்த் கேட்கிறார் என்ற தகவலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் கசிய விட்டிருக்கலாம். விஜயகாந்தின் கோரிக்கைகளை ஏற்கும் நிலையில் ஜெயலலிதா இல்லை. ஆகையினால் இந்தக் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவாகி உள்ளது. விஜயகாந்தின் பார்வை காங்கிரஸ் மீது உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை காங்கிரஸ் முறித்துக் கொண்டால் காங்கிரஸுடன் விஜயகாந்த் கைகோர்ப்பார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரத் தூது விட்ட ராமதாஸ், எந்தக் கூட்டணியிலும் சேராது நழுவி வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சி எமது கூட்டணியில் உள்ளது என்று டில்லியில் முழங்கினார் கருணாநிதி. உடனடியாக மறுப்பறிக்கை விட்டு கூட்டணி பற்றி இன்னமும் நாம் முடிவு செய்யவில்லை என்றார் டாக்டர் ராமதாஸ். ராமதாஸின் மறுப்பறிக்கையைப் பார்த்த கருணாநிதி, எமது கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இல்லை என்றார்.
தன் மகன் அன்புமணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தரும் கட்சியுடன் தான் கூட்டணி என்ற கொள்கையில் உள்ளார் டாக்டர் ராமதாஸ். தமிழக சட்டமன்றத் தேர்தலில் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் ஒரு ராஜ்யசபை உறுப்பினர் பதவியைப் பெறலாம். ஆகையினால் வெற்றி பெறக் கூடிய 35 தொகுதிகளை எதிர்பார்க்கிறார் ராமதாஸ். மகன் அன்பு மணிக்கு ராஜ்ய சபை உறுப்பினர் பதவி தருவதாக வாக்குறுதியளித்தால் போட்டியிடும் தொகுதிகளைக் குறைக்கத் தயாராக உள்ளார் ராமதாஸ்.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்கும் கட்சிகள் அனைத்தும் மக்களுக்கு சேவை செய்யப் போவதாக வெளிப்படையாகக் கூறினாலும் தமது சொந்த நலனிலேயே அதிக அக்கறை காட்டுகின்றன.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீட06/021/11