Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Thursday, August 31, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 79

தமிழ்த் திரை உலகில் தெளிவான  உச்சரிக்கும் நடிகைகளில் பண்டரிபாயும் ஒருவர். ஆரம்பத்தில் கதாநாயகியாக  ரசிகர்களின் மனதில்  நின்ற பண்டரிபாய்,  பிற்காலத்தில் பராசக்தியில் சிவாஜியின் ஜோடியாக நடித்தவர் . பின்னர்  தெய்வமகனில்  சிவாஜியின் மனைவியாகவும்,  இரட்டை வேடசிவாஜிக்கு அம்மாவாகவும் நடித்தார்.

தேன்மொழியாள்’ பண்டரிபாய் 14 வயதில் நடிக்கத் தொடங்கினார்.ஏழு  மொழிகளில் 1500 க்கு  மேற்பட்ட  படங்களில் நடித்து சாதனை படைத்தார். சிவாஜிகணேசனின் முதல் படமான பராசக்தியில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்ற பெருமைக்கு உரியவர் பண்டரிபாய். பிறகு அவருக்கு தங்கையாக, அக்காவாக, அண்ணியாக, அம்மாவாகவும் நடித்தார். பண்டரிபாயின் சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பத்கல் என்ற கிராமம். 1930ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தார். தந்தை ரங்காராவ். தாயார் காவேரிபாய். பண்டரிபாயுடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர். பண்டரிபாயின் தந்தை ஓவிய ஆசிரியர். என்றாலும் நாடகத்தன் மீது அபார மோகம். எனவே, வேலையை விட்டு விலகி, நாடகக் கம்பனி ஆரம்பித்தார். எனினும் தன் மகள்கள் யாரும் நாடகத்தில் நடிக்கக் கூடாது என்பதில் உறுதி கொண்டிருந்தார்.

நாடகத்துக்கு பதிலாக, மகள்களுக்குக் கதாகாலட்சேபம் கற்றுக் கொடுத்தார். பண்டரிபாய் தன் 10 வயதிலேயே கன்னடத்திலும், மராத்தியிலும் கதாகாலட்சேபம் செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்றார். இவ்வளவு சிறப்பாக காலட்சேபம் செய்கிற பண்டரிபாய் சினிமாவில் நடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று அவரது அண்ணன் நினைத்தார்.

அவருடைய ர் முயற்சியால் “வாணி” என்ற கன்னட படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு பண்டரிபாய்க்கு கிடைத்தது. ஹரிதாஸ் எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் மெகாஹிட் படத்தில் பண்டரிபாய்க்கு ஒரு சிறு வேடம் கிடைத்தது. தமிழில் அது தான் அவருக்கு முதல் படம். படத்தின் முதல் காட்சியில் “வாழ்விலோர் திருநாள்” என்று பாடிக் கொண்டே குதிரையில் வருவார் பாகவதர். பெண்களை துரத்துவார். ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் பண்டரிபாயை விரட்டிக் கொண்டு போவார். அவரை துயில் உரிய முயற்சிப்பார். பிறகு ஒரு மோதிரத்தை பரிசளிப்பார்.

இந்தக் காட்சியில் பண்டரிபாய் நடித்தார். அப்போது அவருக்கு வயது 14 தான்.

பிறகு ஏ. வி. எம். தயாரித்த “வேதாள உலகம்” என்ற படத்தில் காளியாகத் தோன்றினார் பிறகு, வைஜயந்தி மாலா கதாநாயகியாக அறிமுகமான “வாழ்க்கை” படத்தில் இரண்டாவது கதாநாயகியாக பண்டரிபாய் நடிப்பதாக இருந்தது. ஆனால் தமிழில் சரிவர பேச வராததால் அந்த வேடத்தில் டி. கே. எஸ். நாடகக் குழுவைச் சேர்ந்த எம். எஸ். திரவுபதி நடித்தார். “வாழ்க்கை” படம் “ஜீவிதம்” என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட போது இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.பண்டரிபாய்க்கு தமிழ் கற்றுக் கொடுக்க பி. டி. சம்பந்தம் என்ற நடிகரை ஏ. வி. எம். நிறுவனம் ஏற்பாடு செய்தது.  என்றாலும் பண்டரிபாயிடம் இருந்து தமிழ் வார்த்தை தெலுங்கில் தான் வந்தது .பி டி சம்பந்தம் பண்டரிபாயிடமிருந்து தெலுங்கை கற்றுக்கொண்டது தான் மிச்சம் .பின்னர் சகஸ்ரநாமத்திடம் தமிழ் கற்றார் 

விரைவிலேயே தமிழில் அழகாக வசனம் பேச பண்டரிபாய் கற்றுக் கொண்டார்.   சின்ன வேடங்களில் நடித்த படங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் பண்டரிபாய் முக்கிய வேடத்தில் நடித்த முதல் தமிழ்ப் படம் பராசக்தி தான். அதில் சிறப்பாக நடித்ததுடன் கலைஞரின் வசனங்களை தெளிவாகவும், இனிமையாகவும் பேசி தேன்மொழியாள் என்று போற்றப்பட்டார்.

தொடர்ந்து சிவாஜிகணேசனுடன் பல படங்களில் பண்டரிபாய் நடித்தார். “கண்கள்” படத்தில் தங்கை, “திரும்பிப்பார்” படத்தில் அக்காள், “அந்தநாள்” படத்தில் மனைவி..... இப்படி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார். கன்னட உலகில் ராஜ்குமார் அறிமுகமான முதல் படத்தில் ராஜ்குமாருக்கும் ஜோடியாக நடித்தவர் பண்டரிபாய்.

  தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர், நடிகைகள் தோன்றி மறைந்தாலும் அவர்களின் புகழ் என்றைக்கும் மாறாமல் காலங்காலமாக நின்னு பேசும். அவர்கள் செய்த சாதனைகள் என்றும் அழியாமல் வரலாற்றில் எழுதி வைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் மிகவும் பெருமைக்குரிய நடிகையாக கருதப்படுபவர் நடிகை பண்டரிபாய்.

சிவாஜிகணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ காலத்திலேயே பண்டரிபாய், தமிழிலும் நடிக்க வந்துவிட்டார். படத்தில் குணசேகரனுக்கும் தங்கை கல்யாணிக்கும்தான் முக்கியத்துவம் என்றாலும் பண்டரிபாய் தன் பாந்தமான நடிப்பால் வெகுவாகவே கவர்ந்திருப்பார். ‘புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே...’ என்று பாடி நம் மனங்களையெல்லாம் ஈர்த்திருப்பார்.

பிறகு பல படங்களில் நாயகியாகத்தான் நடித்தார். தமிழில் பாடல்களே இல்லாமல் வந்த முதல் படமான ‘அந்தநாள்’ படத்தில் சிவாஜியின் மனைவியாக நடித்துக் கலக்கியிருப்பார். ‘சிவாஜியைக் கொலை செய்தது யார்?’ என்ற விசாரணையுடன் தொடங்கும் படத்தின் முடிவில், பண்டரிபாய் சொல்லும் வார்த்தைகளும் அட்சரம் பிசகாமல் பேசுகிற தமிழ் உச்சரிப்பும் வசனங்களும் அப்போதே பிரமிக்கவைத்தன.

குணசித்திரக் கதாபாத்திரங்கள் கிடைத்தன. அம்மா கதாபாத்திரத்துக்கு நடிக்க, கண்ணாம்பாவும் எம்.வி.ராஜம்மாவும் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்தை நிரப்புவதற்கு பண்டரிபாய் பொருத்தமானவர் என தமிழ் சினிமா முடிவு செய்தது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர் என அறுபதுகளின் மத்தியில் இருந்து தொண்ணூறுகள் வரைக்கும் ‘அம்மா... அம்மா... அம்மா...’ என்றே வாழ்ந்துகாட்டினார் பண்டரிபாய். ‘தெய்வமகன்’ படத்தில் வேறொரு அம்மா. ‘அடிமைப்பெண்’ படத்தில் இன்னொரு முகம் காட்டும் அம்மா. ‘கெளரவம்’ படத்தில் சாந்தமும் பணிவும் கொண்டு புருஷனின் எல்லையை மீறாத, மகன் மீது நேசம் கொண்ட பாவப்பட்ட அம்மா. திருடனாக வந்தவன் காயத்துடன் வந்திருக்க அவனுக்கு அடைக்கலம் கொடுத்து, அவனைக் காப்பாற்றி, பிறகு அவனும் தன் பிள்ளைதான் எனத் தெரியவரும் போது, கலங்கித் தவித்து, ‘காணாமல் போன மகன் கிடைத்துவிட்டான்’ என்கிற பூரிப்பைக் காட்டுகிற அம்மா... என்று பண்டரிபாய் எடுத்துக்கொண்ட அம்மா கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப, தன் உடல்மொழியை மாற்றினார். குரலின் ஏற்ற இறக்கங்களுக்கு உயிர் கொடுத்தார். நிறைய பட விமர்சனங்களில், பண்டரிபாயின் நடிப்பும் தமிழ் உச்சரிப்பும் ரொம்பவே பாராட்டப்பட்டன.

‘நம்நாடு’ படத்தில் பண்டரிபாய் பேசப்பட்டார். ’எங்க வீட்டு பிள்ளை’யில் எம்ஜிஆரின் அக்காவாக, கொடுமைக்கார நம்பியாரின் மனைவியாக பரிதாபப்பட வைத்திருப்பார். ‘வசந்தமாளிகை’ படத்தில் பண்டரிபாயின் நடிப்பும் சிவாஜிக்கும் அவருக்குமான காட்சிகளும் நெகிழவைத்துவிடும். மாலைக்கண் நோயுடன் போராடுகிற சிவாஜிக்கு அம்மாவாக பண்டரிபாய் நடிப்பில் வெளுத்துவாங்கியிருப்பார். ‘நான் வாழவைப்பேன்’ படத்திலும் சிவாஜிக்கு அம்மாவாக, வாழ்ந்திருப்பார். 

எம்ஜிஆருடன் ‘அன்னமிட்ட கை’, ‘இதயக்கனி’, ‘நேற்று இன்று நாளை’ முதலான படங்களில் தன் நடிப்பால் தனி முத்திரை பதித்தார். திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயிலில் கவிஞர் வாலி எழுதிய பாடல் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு கோயிலில், சினிமாப் பாடல் ஒன்று பொறிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. ரஜினி நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் உருவான ’மன்னன்’ படத்தையும் பாடல்களையும் எப்படி மறக்கமுடியும்?

இசைஞானி இளையராஜா இசையில், கே.ஜே.ஜேசுதாஸின் குரலில், கால்கள் நடக்க முடியாமல் இருக்க, கைகள் செயலிழந்துவிட... ரஜினிகாந்த் தூக்கிக்கொண்டு கோயிலுக்குச் செல்ல, குளிப்பாட்டிவிட, தலைவாரிவிட... ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே...’ என்ற அந்தப் பாடலும் பண்டரிபாயின் நடிப்பும் நம்மை கண்கலங்கச் செய்துவிடும். பார்க்கின்ற ரசிகர்களின் அம்மாக்கள் அங்கே பிம்பமாக, அவரவருக்குத் தெரிந்தார்கள். இன்றைக்கு, அந்தக் காட்சியை கவனித்துப் பார்த்தால், பண்டரிபாயின் முகமும் கண்களும் புன்னகையும் கைகளும் கைவிரல்களும் தனித்தனியே நடித்து, தாய்மையை நமக்குள் தளும்பத்தளும்பக் கொடுத்திருக்கும்!

 

Monday, July 17, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 74


 கமலும், ரஜினியும் உச்சத்தில் இருந்த காலத்தில் அவருக்குப் போட்டியாக வலம் வந்தவர்  மோகன். அதிகமான படங்களில் பாடகராக நடித்ததால் " மைக் மோகன்" என அழைக்கப்பட்டார்.  மோகன் மைக்கைப் பிடித்துப் பாடும்  போது நிஜமாக அவர் பாடுவது போல் இருக்கும். மோகன் நடைத்த படங்களில் அதிகமானவை வெள்ளிவிழாக் கண்டு கலக்கின.

மோகனின் படங்களில்  அடிதடி கிடையாது மசாலா  இருக்காது. ஆனாலும், அன்றைய  இளம்  பெண்களின் கனவு நாயகனாகத் திகழ்ந்தார் . மோகன் திரைப்படங்களில் பேசியதில்லை. எஸ். என்.சுரேந்தர் மோகனுக்காக  குரல் கொடுத்தார்.  இவர் நடிகர்  விஜயின் மாமனாராவார்.  'பாசப் பறவைகள்' படத்தில் தனது குரலிலேயே பேசி நடித்தார். அதற்கு காரணம் அந்த படத்தின் கதை வசனகர்த்தாவான முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனாலும், அவரது குரலை ரசிகர்கள் ஏற்கவில்லை.

ரஜினிக்கு முன்னதாகவே கர்நாடகாவில் இருந்து  வந்து தமிழ் மக்களின் மனதை  வென்றவர்  மோகன்.கர்நாடகாவில் சிறிய  ஓட்டல் நடத்திக் கொண்டிருந்தவரை, அங்கு சாப்பிட வந்த கன்னட நாடகக் காரரான கரந்த் என்பவர் மேடை நாடக நடிகராக்கினார்.  இயக்குநர் பாலு மகேந்திரா மோகனை   சினிமாவுக்கு அழைத்துவந்தார். . 1977ல் வெளியான அவரது கன்னட படமான 'கோகிலா'வில் மோகன் நடித்தார். அந்த படத்தின் கதாநாயகன் கம.  பின்னர் கமலுக்குப் போட்டியாக கதாநாயகனாக நடித்தார்.  கன்னடத்தில் இருந்து மலையாளம், அங்கிருந்து தெலுங்குக்குச் சென்ரார்.

  1980 ஆம் ஆண்டு   'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில்இயக்குநர் மகேந்திரன்  தமிழுக்கு அரிமுகம் செய்தார்.    அடுத்த படமான 'மூடுபனி'யிலும் இயக்குநரும் நடிகருமான பிரதாப் போத்தன் பிரதான பாத்திரட்ய்க்தில்  நடித்தார். இந்த படங்களில் மோகனை 'கோகிலா' மோகன் என்றால் தான் தெரியும். இந்த இரண்டு படங்களுமே சூப்பர்  ஹிட்.

கிளிஞ்சல்கள்', 'பயணங்கள் முடிவதில்லை'   இரண்டுமே 200 நாட்களை கடந்து ஓடியவை. அதன் பிறகு தயாரிப்பாளர்களுக்கு தங்க முட்டையிடும் வாத்தாகிப் போனார் மோகன். 1980களில் அவரது படங்கள் எல்லாமே   குறைந்தது 175 நாட்களை தாண்டின.

1984ல் மட்டும் மோகன் நடித்த 19 படங்கள் வெளியாகின. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கரா முன்புதான் இருந்தார். ஒரே நாளில் இவரது மூன்று படங்கள் வெளியான  வரலாறெல்லாம் உண்டு. 1980களில் ரஜினி, கமல் படங்கள் ஓடுதோ இல்லையோ இவர் எத்தனை படங்கள் நடித்தாலும் ஹிட்டடித்தன. அந்த அளவுக்கு சாதனைக்கு சொந்தக்காரர்.

அடர்ந்த முடியுடன் டிஸ்கோ டைப் ஹேர் ஸ்டைல் (80ஸ் இளைஞர்களின் விருப்ப ஹேர் ஸ்டைல் இதுதான்), அப்பாவியான முகம், லேசாக பற்கள் தெரிய மென்மையான புன்னகை என 1980களின் ரசிகைகள் மோகனின் வசீகரத்தில் கிறங்கி கிடந்தனர். அதேநேரம் இளையராஜா, எஸ்பிபி உபயத்தால் இவரது படங்களின் பாடல்களில் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களும் மயங்கி கிடந்தனர். ரொமான்டிக் ஹீரோவாக மிக உச்சத்தில் இருக்கும் போதே, மிகக் கொடூரமான கொலையாளியாக ஆன்ட்டி ஹீரோவாக 'நூறாவது நாள்' படத்திலும் இளம் பெண்களை கர்ப்பமாக்கி ஏமாற்றுபவராக 'விதி' படத்திலும் மோகன் நடித்தார். ஆச்சர்யமாக அந்த படங்களும் கூட 200 நாட்கள் 300 நாட்கள் என கடந்து சாதனை படைத்தன. அதிலும் 'விதி' படத்தின் வசன கேசட் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ஸ்ரீதர், ரங்கராஜ், மணிரத்னம் என அன்றைய முன்னணி இயக்குநர்களின் படங்களில் மோகன் நடித்திருக்கிறார். ராதிகா, அம்பிகா, ராதா, சுகாசினி, பூர்ணிமா, ரேவதி, அமலா, ஜெயஸ்ரீ, இளவரசி, சீதா, நதியா 80ஸ் முன்னணி நாயகிகளுடனும் மோகன் நடித்திருக்கிறார்.

வெறும் ஏழெட்டு ஆண்டுகளுக்குள் சுமார் நூறு படங்களை எட்டிய மோகன் நடித்த படங்களில் 'கிளிஞ்சல்கள்', 'பயணங்கள் முடிவதில்லை', 'கோபுரங்கள் சாய்வதில்லை', 'இளமைக் காலங்கள்', 'விதி', 'நூறாவது நாள்', 'நான் பாடும் பாடல்', '24மணி நேரம்', 'உன்னை நான் சந்தித்தேன்', 'தென்றலே என்னைத் தொடு', 'குங்குமச் சிமிழ்', 'இதய கோவில்', 'உதய கீதம்', 'மவுன ராகம்', 'மெல்ல திறந்தது கதவு', ' உயிரே உனக்காக', 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்', 'ரெட்டைவால் குருவி', 'பாடு நிலாவே' 'சகாதேவன் மகாதேவன்' என சூப்பர் டூப்பர் ஹிட் வரிசை படங்கள் ஏராளம். சின்ன பட்டியலுக்குள் அடங்காது.

இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள நடித்துள்ளார். கிட்டத்தட்ட 70 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். தன்னுடைய சொந்த வாழ்க்கையில் உள்ள சந்தோஷத்தை விட்டுவிட்டு பொதுவாக நடிப்பிலும் மீடியாவிலும் தான் தன்னுடைய பொழுதைப் போக்கினார்.பொதுவாக தயாரிப்பாளர்களில் தங்க மீன் என்றால் அது நடிகர் மோகன் தான்.

இப்படி பிரபலமாக இருந்து வந்த நமது நடிகர் மோகன் வாழ்க்கையில் இடி விழுந்தது போல் ஒரு நடிகையின் பொய்யான தகவல் வெளிவந்தது. அதாவது அவர் கூறியது என்னவென்றால் நடிகர் மோகனை ஒரு நடிகை மிக ஆர்வமாக காதலித்து வந்தார்.ஆனால் நடிகர் மோகன் அவரை வெறுக்க ஆரம்பித்து விட்டார் இதனால் கடும் கோபம் கொண்ட அந்த நடிகை திடீரென நடிகர் மோகனுக்கு எய்ட்ஸ் உள்ளது என புரளியை கிளப்பி விட்டார் இதனால் மோகனின் வாழ்க்கையே மாறிவிட்டது.அதன்பிறகு எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லாமல் மோகன் அவதிப்பட்டார் ஆனால் தற்போது மருவத்தூர் வயதாகியும் நல்ல உடல் நலத்துடன் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தன்மீது குறை என்று கூறியது அனைத்தும் பொய் என்று நிரூபித்து உள்ளார்.

 இவருடைய சொந்த வாழ்க்கை பற்றி நிறைய குழப்பங்கள் நிலவி வருகின்றன.திருமணம் ஆகிவிட்டதா, குடும்பம் இருக்கிறதா மனைவி யார் என்று பல கேள்விகள் இருக்கின்றன.

நெடுங்காலமாக மோகனுக்கு திருமணமே ஆகவில்லை, அவர் சிங்கிளாகவே இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது ஆனால் 1987 ஆம் ஆண்டே பெங்களூரில் கௌரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும் இருப்பதாக பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் காணக் கிடக்கின்றன.

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மோகனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்ட போது, எனக்கு இருக்கும் பிரச்சினையால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினையால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று நினைக்கிறேன், விரைவில் என் மகனின் திருமணம் நடக்கப் போகிறது, அப்போது நான் என் குடும்பத்தை வெளி உலகுக்குக் காட்டுவேன் என்று மோகன் குறிப்பிட்டதாகவும் செய்திகள் உலவின.

ஒருமுறை மோகன் இறந்துவிட்டதாக செய்தி பரவி, அதனால் அவருடைய ரசிகர்கள் மாலையும் கையுமாக அவருடைய வீட்டிற்கே சென்றிருக்கிறார்கள். நான் உயிருடன் தான் இருக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். அதற்கடுத்து தான் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்திருக்கிறார் மோகன்.

 

80களில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் மோகன். அவர் பல வருடங்களுக்கு பிறகு தற்போது ஹரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் ஸ்ரீ இயக்கி வரும் இந்த படத்தில் யோகி பாபு, குஷ்பு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் தற்போது வனிதா விஜயகுமார் இணைந்து இருக்கிறார். அவர் மோகன் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு தனது கனவு நனவாகிவிட்டதாக தெரிவித்து இருக்கிறார்.

மோகன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் டி-சர்டில் தான் இருக்கிறார். படத்தில் அவர் டெலிவரி வேலை செய்யும் ரோலில் தான் நடிக்கிறார் என தெரிகிறது.

Tuesday, April 25, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி


 ஒளிப்பதிவு,இயக்கம் ஆகியவற்றுக்காகப் பல விருதுகளை வாங்கிக் குவித்தவர் பாலு மகேந்திரா. பாலுமகேந்திராவின் படங்களைப்பற்ரி பலரும் சிலாகித்து ப் பேசுவார்கள். 40 வருட சினிமா அனுபவத்தில் மூன்று  படங்களைத்தான் தான் நினைத்த மாதிரி  படமாக்கியதாக  ஒப்புதல் வாக்கு மூலமளித்தார். விருதுகள் அங்கீகாரம்தான்  எனக்கூறிய பாலு மகேந்திரா விருதைத்தேடி அலையவில்லை.அவர்  தனுடைய "ஜூலி கணபதி" படக்த்தை எந்த ஒரு விருதுக்கும் அனுப்பவில்லை.

படத்துக்கான கதை ஒன்றைஎழுதிய  பின்னர் அதில் நடிப்பதற்கு நடிக, நடிகைகளைத் தேர்ந்தெடுப்பார்.நடிகருக்காக கதை எழுதியதும் இல்லை, கதையை மாற்றியதும் இல்லை. காதலனும் காதலியும்  ஆடிப்பாட அவர்களின்  பின்னால் பலர் ஆடுவது பாலு மகேந்திராவுக்குப் பிடிக்காத  ஒன்று. மம்முட்டி,  மோகன்லால் ஆகிய இருவரும்  பாலு   மகேந்திராவுக்குப் பிடித்த நடிகர்கள். "யாத்ரா" படத்தில் மோகன்லால் நடித்தார். மமுட்டியிடன்  இணவதர்குப் பேச்சு வார்த்தை நடந்தது. அது கைகூடவில்லை. பாலு மகேந்திராவுக்கு மிகவும் நெருக்கமானவர் கமல். இருவரும் மனம் விட்டுப் பேசுவார்கள்.

  முள்ளும் மலரும். ரஜினிகாந்த் நாயகன்.  கமலும், ரஜினியும்   இணைந்து படம் செய்ய வேண்டாம் என்று   முடிவெடுத்த காலகட்டம்.

 மகேந்திரனுக்கு முள்ளும் மலரும் படம் கிடைக்க சிபாரிசு செய்தவர் கமல்.  புதியவர், ஆனால் திறமையானவர் என்று கமல் உத்தரவாதமளித்ததால்  ஆரம்பமானது.  பட்ஜெட்டை தாண்டி செலவு செய்துவிட்டதாகக் கூறி, படத்தில் இடம்பெறும், ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்பாடலை எடுக்க முடியாது என்று கூறி விடுகிறார் தயாரிப்பாளர்.  தயாரிப்பாளர் பாடலை படமாக்க மறுத்ததும் கமலுடன் அதைப்பற்றி  மகேந்திரன் உரையாடினார். பாட்டின்  முக்கியத்துவத்தை கமலுக்கு எடுத்துரைத்தார். எல்லாவற்றையும் விபரமாகக் கேட்ட கமல் தயாரிப்பாளரைச் சந்தித்து   மகேந்திரனுக்காக  பேசினார்.  கமல்   சொல்லியும் தயாரிப்பாளர் கேட்பதாகயில்லை. செந்தாழம் பூவில் பாடல் இல்லையென்றால் படம் முழுமையடையாது என்கிறார் மகேந்திரன். அதன் பின்பு கமலே அந்தப் பாடலை படமாக்குவதற்கான அனைத்து செலவையும் ஏற்றுக் கொள்கிறார். பாடல் படமாக்கப்பட்டு படம் வெளியாகி வெற்றி பெறுகிறது. இன்றைக்கும்  முள்ளும் மலரும் என்றால் அந்தப் பாடல் காட்சி மனதில் நிழலாடும். கமல் இல்லை என்றால் அந்த அற்புதமான பாடல் கிடைத்திருக்காது.    செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்  பாடல் காட்சியின் தன்னை அதிக நேரம் காட்டவில்லை என   பேட்டி ஒன்றில் சரத்பாபு தெரிவித்தார்

முள்ளும் மலரும் காலகட்டத்தில் கமலும், ரஜினியும் தொழில் போட்டியாளர்கள். மகேந்திரன் அறிமுக இயக்குனர். ஒரு அறிமுக இயக்குனரின் மீது நம்பிக்கை வைத்து, தனது போட்டியாளரின் படத்துக்கே பணம் செலவு செய்தார் கமல். 

  இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு பணமுடை. இரண்டு லட்சம் வேண்டும். பலரிடம் கேட்டும் பலனில்லை. கடைசியாக கமலிடம் கேட்பது என்று முடிவு செய்து அவரை சந்திக்கிறார். ஆனால், எப்படி கேட்பது? சினிமா குறித்து இருவரும் மணிக்கணக்கில் பேசுகிறார்கள். அனைத்தைம் கேட்டு தெரிந்து கொள்ளும் கமல், பாலுமகேந்திரா வந்த காரணத்தை மட்டும் கேட்கவில்லை. பாலுமகேந்திராவுக்கோ பணம் கேட்க தயக்கம். கேட்டு இல்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? சரி, கேட்க வேண்டாம் என்று முடிவு செய்கிறார்.

கிளம்புகிற நேரம், உள்ளே சென்ற கமல், பத்து லட்சம் ரூபாயை எடுத்து வந்து பாலுமகேந்திராவிடம் தந்து, நீங்க ராஜ் கமலுக்காக ஒரு படம் பண்ணணும், அதுக்கு அட்வான்ஸ் என்று சொல்கிறார். எதிர்பார்த்து போனது 2 லட்சம். கிடைத்ததோ 10 லட்சங்கள். அதுவும் கடனாக இல்லை, சம்பளமாக. அந்தப் படம்தான் சதிலீலாவதி. அந்தப் படத்துக்கு கமல் பாலுமகேந்திராவுக்கு நிர்ணயித்த சம்பளம் 35 லட்சங்கள். இதைக் கேட்டதும் பாலுமகேந்திராவுக்கு கடும் கோபம். குறைவாக தந்து விட்டோமோ என நினைக்கிறார் கமல். பாலுமகேந்திராவோ தனது உதவியாளர்களிடம் வந்து கத்துகிறார். "கமல் என்னை ஃபூல் பண்ணலாம்னு நினைக்கிறார். எனக்கு 35 லட்சம் சம்பளமாம். யாரு எனக்கு அவ்வளவு சம்பளம் தருவாங்க? என்னை என்ன முட்டாள்னு நினைக்கிறாரா?" இன்று இரண்டு ஹிட் கொடுத்த இயக்குனர்கள் மூன்றாவது படத்துக்கு பதினைந்து கோடி கேட்கிறார்கள். நல்லவேளை பாலுமகேந்திரா இப்போது இல்லை.ஒரு கலைஞனுக்கு அவனது மனம் நோகாதபடி, கண்ணியம் கலையாதபடி எப்படி உதவ வேண்டும் என்பதை அறிந்தவர் கமல்.

  முள்ளும் மலரும் படம்   1978-ஆம் ஆண்டு வெளியானது. 38 வருடங்களுக்குப் பிறகு பாலுமகேந்திரா சொன்ன பிறகே கமல் செய்த உதவி வெளியுலகுக்கு தெரிய வந்தது.

இன்று முன்னணியில் இருக்கும் வெற்றிமாறன்,பாலா, சீனு ராமசாமி , ராம் ஆகியோர்  பாலு மகேந்திராவின்  சீடர்கள். இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலிருந்தே பல சர்வதேச படங்களையும்பதேர் பதஞ்சலிஉள்ளிட்ட இந்திய கிளாசிக் படங்களையும் பார்த்து சினிமா என்னும் கலை மீது காதல் வயப்பட்டவர் பாலு மகேந்திரா. அவர் வாழ்வின் இறுதிக் கனம் வரை சற்றும் தளர்வடையாத காதல் அது . தளர்வடையவில்லை என்று சொல்வதைவிட உறுதியடைந்துகொண்டே இருந்தது என்று சொல்லலாம். வணிக அழுத்தங்களுக்கு ஆட்படாமல் தான் விரும்பிய நல்ல சினிமாவுக்காகவே வாழ்ந்வர்.

 

முறையாகத் திரைக் கல்வியைப் பயின்றுபனிமுடக்கு’ (1972) என்னும் மலையாளப் படத்தின் ஒளிப்பதிவாளராகத் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்தார். இயக்குநராவதற்கு முன் மலையாளம். தெலுங்கு, உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் இருபதுக்கு மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்றுவிட்டார். அவர் இயக்குநராகக் கால் பதித்தது கன்னட மொழியில். அவர் இயக்குநராக அறிமுகமானகோகிலா’ 1977இல் வெளியானது. கமல் ஹாசனின் அரம்பகாலப் படங்களில் முக்கியமான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்தப் படம் 1980களில் தமிழ் சினிமாவில் வெற்றிவாகை சூடிய நடிகர் மோகனின் அறிமுகப் படம்.

மகேந்திரன் இயக்கிய தமிழ் சினிமாவின் தலைசிறந்த கிளாஸிக் படங்களில் ஒன்றானமுள்ளும் மலரும்படத்தின் ஒளிப்பதிவாளராகத்தான் தமிழ் சினிமாவுக்கு வந்தார் பாலு மகேந்திரா. அதற்கு அடுத்த ஆண்டில் வெளியானஅழியாத கோலங்கள்படத்தின் மூலம் தமிழிலும் இயக்குநராகத் தடம் பதித்தார்.

மணி ரத்னம் இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தபோதே தன் முதல் படத்துக்கு பாலு மகேந்திராதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டார். அப்போது ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் பல படங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த பாலு மகேந்திரா அந்த அறிமுக இயக்குநரின் திறமையைச் சரியாகவே கணித்திருந்தார். பாலு மகேந்திரா ஒளிப்பதிவில் மணி ரத்னத்தின் அறிமுகப் படமானபல்லவி அனு பல்லவி’ (1983) கன்னட சினிமாவின் தரமான படைப்புகளில் ஒன்றாக நிலைத்துவிட்டது. அதன் பிறகு இந்தியா முழுவதும் புகழைப் பெற்ற இயக்குநராக உயர்ந்தார் மணி ரத்னம். திறமையாளர்களைத் தரமான படைப்பாளிகளை அடையாளம் காணும் திறன் பாலு மகேந்திராவுக்குத் தொடக்கத்திலிருந்தே இருந்தது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். பாலு மகேந்திராவின் படத்துக்கு இளையராஜாதான் இசையமைப்பார்.

புத்தாயிரத்தின் தொடக்கத்தில் தொலைக்காட்சி ஊடகத்தில் அடி எடுத்து வைத்தபோது பல எழுத்தாளர்களின் நல்ல சிறுகதைகளை அரை மணிநேர தொலைக்காட்சிப் படங்களாகபாலு மகேந்திரா கதை நேரம்என்னும் பெயரில் இயக்கினார். இப்படியாக 50க்கு மேற்பட்ட சிறுகதைகள் அவரால் திரைவடிவம் பெற்று இன்னும் பரவலான மக்களைச் சென்றடைந்தது. இவற்றில் பெரும்பாலான கதைகள் தமிழ்ச் சமூகம் அன்று பொதுவில் உச்சரிக்கவே தயங்கிய கருப்பொருள்களைப் பேசுபொருளாகக் கொண்டிருந்தன. ஆனால்பாலுமகேந்திரா கதை நேரம்தமிழ்க் குடும்பங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது என்பதற்குக் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக் காலம் அது நீண்டது என்பதே சான்று.

பாலுமகேந்திரா என்றதும் நினைவுக்கு வரும் பல விஷயங்களில் ஒன்று, அவரது நாயகிகள். வெள்ளைத் தோல் அழகிகள் அணிவகுத்த சினிமாவில் கருப்பழகிகளை அறிமுகப்படுத்தியவர். இதுகுறித்து கேட்ட போது, அது என் ஈழத்து நினைவு என்று பதிலளித்தார். ஈழத்தமிழரான அவர் ஈழம் குறித்து அதிகம் பொதுவெளியில் பேசியதில்லை. அதுபற்றி திரைப்படம் எடுத்ததில்லை. ஈழம் அவரது மனக்கொந்தளிப்பான விஷயமாக கடைசிவரை இருந்தது. பேட்டியொன்றில் ஈழம் குறித்த கேள்விக்கு பதில் சொல்கையில் அழுதிருக்கிறார். ஈழத்திலிருந்து வரும் படைப்புகள், படைப்பாளிகள் குறித்து நெருக்கமாக அறிந்திருந்தார். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் கவிஞரும், பாடலாசிரியமான தேன்மொழி தாஸின் முதல் கவிதைத் தொகுப்பான 'இசையில்லா இலையில்லை' வெளியீட்டு விழாவில் ஈழக்கவிஞரின் கவிதைகளை தேன்மொழி தாஸின் கவிதைகளுடன் ஒப்பிட்டுப் பேசினார் பாலுமகேந்திரா.

ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய சின்னச் சின்ன படங்களை எடுக்க வேண்டும் என்று விரும்பினார். பாலா, வெற்றிமாறனையும் அதுபோன்ற படங்களை இயக்க வைக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தது. ஆனால், அது நிறைவேறவில்லை. வெற்றிமாறன் லாக்கப் நாவலை ஒரு மணிநேரம் ஓடக்கூடிய படமாகவே எடுத்தார். அப்போது, ஒருமணி நேர படத்தை சந்தைப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு இல்லாததால், இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளை தானே எழுதி அதனை முழுநீளத் திரைப்படமாக்கினார்.

தொலைக்காட்சிக்காக பாலுமகேந்திரா இயக்கிய கதைநேரம் எந்தமொழி படைப்புகளுடனும் ஒப்பிடத்தகுந்தவை. அவர் காலத்தில் ஓடிடி தளங்கள் இல்லை. இருந்திருந்தால், அதில் முத்திரை பதித்திருப்பார். ஓடிடி அவருக்கேற்ற தளம். இனத்தையும், மொழியையும், கலையையும் மனதார நேசித்த கலைஞன். அவரிடமிருந்து சினிமாவை கற்றுக் கொள்ள முடிந்தவர்கள் பாக்கியசாலிகள்.