Friday, October 26, 2018

எடப்பாடியைக் காப்பாற்றிய நீதிமன்றம்



ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை ஆட்டம் காணத்தொடங்கியது. கட்சித் தலைமையைப் பிடிப்பதற்கும் தமிழக  முதல்வராவதற்கும் ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரியான சசிகலா முயற்சி செய்தார்.சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறைக்குச் சென்றதால் அது பலனளிக்கவில்லை. தர்ம,  அதர்ம யுத்தங்களினால் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரானார். ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட டி.டி.தினகரன், கட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. தனக்கு விசுவாசமான தமிழக சட்டசபை உறுப்பினர்களின் உதவியுடன் முதல்வர் கதிரையில் இருந்து எடப்பாடியை அகற்றுவதற்கு தினகரன் எடுத்த முயற்சியும் நீதிமன்றத் தீர்ப்பினால் தகர்ந்தது
.
முதல்வராகவும் துணை முதல்வராகவும் பதவி வகிக்கும் எடப்பாடியும் பன்னீரும் ஒன்றாக இருப்பது போல் நடித்தாலும் அவர்களுக்கு இடையேயான பனிப்போர் உச்சக்கட்டத்தை  அடைந்துள்ளது. முதலமைச்சர் கதிரையில் இருந்து பன்னீரை இறக்கிவிட்டு தான் ஏறி அமர்வதற்கு நாள் பார்த்துக்கொண்டிருக்கிறார் பன்னீர்ச்செல்வம். சட்டப்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அகற்றுவதற்காக எடப்பாடிக்கும் அமைச்சர்களுக்கும் எதிரான ஊழல் புகார்களுடன் நீதிமன்றத்தின் துணையை நாடுகிறார் ஸ்டாலின். பன்னீருக்கும் ஸ்டாலினுக்கும் மத்தியில் எடப்பாடியை அகற்றியே தீருவேன் என அதிரடி காட்டுகிறார் தினகரன். எந்த நேரமும் புன் சிரிப்புடன் காட்சியளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி,   சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு  அரசியற் காய்களை அகற்றி தனது பதவியைக்  காப்பாற்றுகிறார்.

அரசியல் அரங்கில் இருந்து எடப்பாடியை அகற்றுவதற்காக தினகரனின் விசுவாசிகள் போர்க்கொடி உயர்த்தினர். அதன் உச்சக் கட்டமாக அன்றைய தமிழக பொறுப்பு ஆளுநரான வித்தியாசாகர் ராவைச்  சந்தித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இல்லை. அவருக்குப் பதிலாக வெறு ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  நாங்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் எனக்கூறிய  19 சட்டசபை உறுப்பிர்களின் செயலால் எடப்பாடி கடும் சீற்றமடைந்தார்.  விளக்கம் கோரி 19 உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அவரலில் கமபம் தொகுதி உறுப்பினர் ஜக்கையனின் விளக்கம் ஏற்றுக்கொண்ணப்பட்டது ஏனைய  18 உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

தமிழக சபாநாயகர் தனபாலின் உத்தரவால் 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 18  ஆம்  திகதி முதல்  18 தொகுதிகள் காலியாகின. அதை எதிர்த்து மறு நாள் தினகரன் தரப்பு  உயர் நீதிமன்றம் சென்றது. நீதிபதிகள் இந்திரா பார்னஜி, சிந்தர் ஆகிய இருவரும் 2018 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். அதிருப்தியடைந்த தினகரனின் ஆதரவாளர்கள் உச்ச நீதின்றத்தை நாடினர். 18 உறுப்பிஅர்களின் தகுதி நீக்கம் செல்லும்  என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் எடப்பாடியின் பதவி காப்பாற்றப்பட்டுவிட்டது.

எடப்பாடியை எதிர்த்ததனால் 18 உறுப்பினர்கள் பதவி இழந்தனர். கடந்த ஒரு வருடமாக 18 தொகுதிளின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன. ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அந்தத் தொகுதிகளை எட்டியும் பார்க்கவில்லை. பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களும் தொகுதிப்பக்கம் செல்லவில்லை.  18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தால் அந்தத் தொகுதி மக்களின் மனநிலை  தெரிந்துவிடும். கருணாநிதி, போஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்கள் மரணமானதால் இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன. 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற வேண்டிய நிலை உள்ளது.

இன்றைய எடப்பாடியின் அரசு ஒரே ஒரு மேலதிக உறுப்பினரின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. 20 தொகுதிகளிலும் தேர்தல்  நடந்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அதேபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களும் வெற்றி பெறும் சாத்தியக்கூறு மிகவும் குறைவு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிகள் அனைத்துக்கும் ஜெயலலிதாவே பிரதான காரணி. ஜெயலலிதா இல்லாத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி சாத்தியமற்றது என்பதை ஆர்கே நகர் இடைத்தேர்தல்   நிரூபித்துள்ளது. ஆர்கே நகர் போன்றதொரு இன்னொரு வெற்றியை தினகரனால் செய்துகாட்ட முடியாது. எடப்பாடி, தினகரன் ஆகிய இருவருக்கும் 18 தொகுதிகள் மிகவும் முக்கியமானவை. அனைத்துத் தொகுதிகளும் இருவருக்கும் கெளரவப் பிரச்சினையானவை. ஜெயலலிதா என்ற நட்சத்திரம் இல்லாமல் இருவராலும்  வெற்றியைப் பெறமுடியாது.

உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது,  இடைத் தேர்தலைச் சந்திப்பது, வழக்கை எதிர்கொண்டு இடைத்தேதலைச் சந்திப்பது ஆகிய மூன்ரு தெரிவுகள் தினகரனின் முன்னால் உள்ளன. தினகரனின் முடிவைப் பொறுத்துத்தான் தமிழக அரசியலின் அடுத்த காய் நகர்த்தப்பட வேண்டிய நிலை உள்ளது. அதிரடி காட்டாமல் அமைதியாக அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கும் 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் மிக முக்கியமானதாகும்.  20 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவு எடப்பாடிக்குப் பாதகமாகத்தான் அமையும் ஆகையால் இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் காத்திருக்கிறார்.

Wednesday, October 17, 2018

ஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு


அரசியல்வாதிகள் மீது   சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முகியமான இடத்தை வகிப்பது ஊழல். ஊழல் புகாரில் சிக்கிய பல அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். சிலர் வழக்கை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.  தமது அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்டவும் ஊழல் புகார் கைகொடுக்கிறது. மிக நீண்ட கால நீதி விசாரணையின் பின்னர் சில குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அதில் சம்பந்தபப்ட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். தம்மீதான குற்றங்களை ஏற்றுக்கொண்டு அபராதம் செலுத்தி தப்பியவர்களும் உண்டு. பொய்யான புகார்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்த சம்பவங்களும் உண்டு.

முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறத்தண்டனை பெற்று வரலாற்றில் இடம்பிடித்தது தமிழகம். இப்போது முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி உட்பட அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவிக்கபட்டுள்ளது. ஊழல் புகார் எல்லம் பொய் அரசியல் பழிவாங்கல் என  அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்  உள்ளன. தமிழகத்தை உலுக்கிய குட்கா விவகாரம் நிலுவையில் உள்ளது. அதற்கான பனம் கொடுக்கல் வாங்கலுல் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட முன்னாள் இந்நாள் உயர் பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன. அதற்காக விஜயபாஸ்கர்  அலட்டிக்கொள்ளவில்லை. வழக்கைச்  சந்தித்து நான் குற்றமற்றவனென்பதை நிரூபிப்பேன் என்கிறார். அமைச்சர் வேலுமணி மீதும்  புகார் உள்ளது. அதிகார துஸ்பிரயோகம் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக 3000 பக்க அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்துள்ளது. இவற்றை சிபிஐ விசாரித்து வருகிறது.

அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முடியாமல் தவிக்கிரார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வரின்  கீழ் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தத்தில் 4800 கோடி ரூபா ஊழல் நடந்துள்ளதாக திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாலர் எஸ்.ஆர்.பாரதி இலஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தெரிவித்தார். அந்தப் புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னை ஹைகோட்டில் புகார் செய்தார் பாரதி.

நெடுஞ்சாலை சீரமைக்கும் ஒப்பந்தங்களை, எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர், நண்பர்கள், பினாமிகள்  பெற்றதால் 4800 கோடி ரூபா ஊழல் நடந்ததாக பாரதி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெறவில்லை என முதல்வரின் கீழுள்ள இலஞ்ச ஒழிப்புத்துறை  நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதனி ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் மூன்று மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் பதவிக்காக எடப்படியும் பன்னீரும் முட்டி மோதுகிறார்கள். முதல்வர் பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்ச்செல்வத்துக்கும் இடையில் பனிப்போர் நடைபெறுகிறது.  அண்ணா திராவிட முன்னேற்றக் க்ழக அதிகாரத்தைக் கைப்பற்றும்போட்டியில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் தற்காலிகமாக இணைந்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பத்தை  இருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான எதிரியான தினகரனைச் சந்தித்த விவகாரம் பகிரங்கமானதால் பன்னீர் பரிதவிக்கிறார். தனுடன் இருந்த சட்ட மன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் தினகரனை, பன்னீர்ச்செல்வம் சந்தித்த விவகாரம் எடப்பாடிக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் புகார்  எடப்பாடிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

பாரதீய ஜனதாவின்  ஆதரவில் இயங்கும் தமிழக அரசுக்கு நீதிமன்றத்தின் மூலம் நெருக்கடி கொடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் திட்டமிட்டுள்ளது.

Thursday, October 11, 2018

நக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்


தமிழக ஆளுநராக பன்வரிலால் புரோஹித் பொறுப்பேற்றதிலிருந்து பல வேறு பிரச்சிகளில் சிக்கிவருகிறார். மத்திய அரசின் எல்லையை மீறாமல் மாநில அரசைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதையே பெரும்பாலான ஆளுநர்கள் செய்கிறார்கள். ஆனால், தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித், ஆய்வு செய்கிறேன் என்ற போர்வையில்  தமிழக அரசை வெளிப்படையாகக் கண்காணிக்கிறார். எதிர்க் கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. தமிழகத்தை ஆட்சி செய்யும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுநரின் செயற்பாட்டை வர வேற்கிறது.
ஆளுநரின் ஆய்வை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியது. கறுப்புக்கொடி காட்டிய கழகத்  தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

 ஆய்வு செய்யச்சென்ற ஆளுநர்  குளியலறையை எட்டிப்பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இளம் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை வருடி  பின்னர் மன்னிப்புக் கேட்டார். தமிழக அரசின் ஊழல் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகமும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஆளுநரிடம் கையளித்தன. அதற்கு எந்த விதமான  நடவடிக்கையும்  இதுவரை எடுக்கப்படவில்லை. இலஞ்சம் வாங்கிக்கொண்டு உதவிப் பேராசிரியர்கள் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நான் நியமித்த ஒன்பது புதவிப் பேராசிரியர்களும் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என தமிழக ஆளுநர் வெளிப்படையாகத்  தெரிவித்துள்ளார்.


ஊழல் இலஞ்சம் என்பன தமிழகத்தில் மலிந்து விட்டதாகத் தெரிவிக்கும் ஆளுநர் தமிழக அரசின் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்காது மெளனமாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. இந்த நிலையில் ஆளுநர் அலுவலகத்தின் முறைப்பாட்டின் பிரகாரம் காலையில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை  மாலையில் விடுதலை செய்த   செய்த நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

ஆளுநருக்கு மிரட்டல் விடுத்தது, பணி செய்யவிடாமல் தடுத்தது எனத் தேசத்துரோக குற்றச்சாட்டில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். ஜெயலலிதா இருக்கும் வரை நக்கீரன் மீது ஏதாவது ஒரு  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்படும். தமிழகத்தில் ஒரே நாளில் சுமார் இருநூறுக்கு மேற்பட்ட இடங்களில் நக்கீரன் கோபல் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவற்றை எல்லாம் சட்ட ரீதியாக எதிர்கொண்டு பதிலளித்தார் கோபால்.

நக்கீரனையும் கோபாலையும் முடக்கும் நோக்கோடு சட்டப்பிரிவு 124 இன் கீழ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆளுநரையும் ஜனாதிபதியையும்  மிரட்டுபவர்கள்மீதும் அவர்களைப் பணி செய்யவ் இடாமல் தடுப்பவர்கள் மீது இந்தச்சட்டம் பாயும்.  அவர்களை உஅட்னடியாகக் கைது செய்யலாம். நீதிமன்ற உத்தரவில்லாமல் விசாரனை செய்ய முடியாது. பிணை வழங்கப்பட மாட்டாது.  குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதத்துடன் எழு வருட சிறைத்தண்டனை. இதிலிருந்து நக்கீரன் வெளியே வரமாட்டார் என நினைத்துத்தார் இந்தச் சட்டப் பிரிவின் பிரகாரம் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப்பேராசிரியை நிர்மலாவைப் பற்றிய பரபரப்பான ஒலிப்பதிவை நக்கீரன் வெளியிட்டது. அந்த ஒலிப்பதிவு ஆளுநர் மாளிகையை அதிரவைத்தது. மாணவிகளைத் தவறான நடத்தைக்கு அழைத்த நிர்மலாதேவி ஆளுநரை நான்கு முறை சந்தித்தேனொன்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை ஆளுநர் மாளிகையால் ஜீரணிக்க முடியவில்லை. நிர்மலாவைப்ய  தகவல்களை நக்கீரன் அடிக்கடி வெளியிட்டு வருவதால் ஆளுநர் மாளிகை நெருக்கடியை எதிர் நோக்கியது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார்.இதம் மூலம் ஏனைய ஊடகங்களையும் அச்சுறுத்தும் நோக்கம் இருந்தது.

ஆளுநருக்கு அச்சுறுத்தல் விடுத்து பணிசெய்ய விடாமல் தடுத்த குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை. இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரிய ராம்  நீதிமன்றத்தில் ஆஜராகி தவறான ஒரு குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நீதித் துறையி முன்மாதிரியாக இருக்க வேண்டாம் என்று தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை ஏற்க மறுத்து கோபாலை விடுதலை செய்தார்.

பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுவதும் விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவதும் தமிழகத்துக்கு புதியதல்ல.
1987 ஏப்,இ 4: எம்.எல்..இக்கள் பற்றி,இ 'கார்ட்டூன்' வெளியிட்டதற்காக 'ஆனந்த விகடன் இதழின் ஆசிரியர் பாலசுப்ரமணியன் கைது

1989: தமிழக சட்டசபை பற்றி எழுதிய கட்டுரைக்காக  'இல்லஸ்டிரேடட் வீக்லி' பத்திரிகையின் சென்னை செய்தியாளர்  கே.பி.சுனிலை, கைது செய்யும்படி  சபாநாயகர் உத்தரவிட்டார். உச்ச நீதிமன்றம்  அதற்கு தடை விதித்தது
2003: சட்டசபை மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்  செய்தி வெளியிட்டதாக  'தி இந்து' ஆசிரியர்  என்.ராமை கைது செய்ய  அப்போதைய சபாநாயகர் காளிமுத்து உத்தரவிட்டார். அதற்கும்  உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

2003 ஏப் . 11: கொலை வழக்கு  தனி தமிழ்நாடு கோரிக்கை  'லைசென்ஸ்' இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக 'பொடா' சட்டத்தில்இ 'நக்கீரன்' ஆசிரியர் கோபால் கைது. செப்., 19ல், பிணையில்வெளிவந்தார்

2009 அக்.  7: நடிகையர் குறித்து அவதுாறு செய்தி வெளியிட்டதாக  'தினமலர்' நாளிதழ் செய்தி ஆசிரியர் லெனின் கைது. அக்.  9ல்  பிணையில் விடுதலை

2018 அக்  9: கவர்னர் மீது அவதுாறு செய்தி வெளியிட்டதாகஇ 'நக்கீரன்' கோபால், பிரிவு, 124ன் கீழ் கைது. 'இது செல்லாது' என நீதிபதி தீர்ப்பு அளிக்க விடுதலையானார்.
கோபாலைச் சந்திக்கச்சென்ற வைகோ தடுக்கப்பட்டார். அதை எதிர்த்துப் போராடியதால் அவர் கைது செய்யப்பட்டார்.  எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வைத்தியசாலையில் சந்தித்தார். கோபாலுக்கு எந்த உதவியும் கிடைக்கக்கூடாது என்பதில் யாரோ அக்கறை காட்டினார்கள்.
கருத்துச் சுதந்திரத்தை காவல் துறையின் உதவியுடன் அடக்கிவிட முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.