Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

Monday, September 15, 2025

இந்திய பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்

இந்திய பாகிஸ்தான் போட்டி என்றால் பெரும் பரபரப்பு இருக்கும். ஆசியக் கிண்ணப் போட்டியில் இரண்டு அணிகளும்  போட்டி உலகளாவிய ரீதியில் எதிர் பார்க்கப்பட்டது. வீறாப்பு பேச்சுகள், சபதங்கள் என போட்டிக்கு முன்னமேயே பரபரபால் எகிறியது.

 கிறிக்கெற் ரசிகர்களால் பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் திக‌தி துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடப் போவதாக அறிவித்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 127 ஒட்டங்கள் மட்டுமே எடுத்தது. 128 என்ற  வெற்றி இலக்குடன் களம்  இறங்கிய இந்தியா 15.5 ஓவர்களில்  3 விக்கெற்களை இழந்து  131 ஓட்டங்கள் எடுத்து  7 விக்கெற்களால் வெற்றி பெற்றது.

 ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே சாய்ம் ஆயுப் கோல்டன் டக் அவுட்டானார். அடுத்து வந்த முகமது ஹரிஸையும் 3  ஓட்டங்களில் வெளியேற்றினார்  பும்ரா  மற்றொரு துவக்க வீரர் ஃபர்கான் நிதானமாக விளையாடினார்.


ஃபகார் ஜமானை 3 ஓட்டங்களில்  அவுட்டாக்கிய அக்சர் படேல் அடுத்து வந்த பாகிஸ்தான் கப்டன் சல்மான் ஆகாவையும் 3  ஓட்டங்களுடன் அனுப்பினார்.  அடுத்த ஓவரில் ஹசன் நவாஸ் 5, முகமது நவாஸ் 0 ஆகியோர் அடுத்தடுத்து குல்தீப் யாதவ் சுழலில்சிக்கியதால்  12,2 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 64 ஓட்டங்கள் எடுத்தது.  மறுபுறம் நங்கூரமாக விளையாடி வந்த ஃபர்ஹானும் 40 (44)  ஓட்டங்களில் ஆட்டமிழந்ததுடன்  பாகிஸ்தான் ரசிகர்களின் நம்பிக்கை சிதறியது.  ஃபஹீம் அஸ்ரப் 11, சுபியன் முஹீம் 10 ஓட்டங்கலுடன் வெளியேறினர்.

 சாகின் அப்ரிடி கடைசி நேரத்தில்  4 சிக்சர்களை பறக்க விட்டு 33* (16)  பாகிஸ்தான் மானத்தை காப்பாற்றினார். அவருடைய அதிரடியால் தப்பிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெற்களை  இழந்து 127 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரித் பும்ரா   அக்சர் படேல் ஆகியோர் தலா 2, குல்தீப் யாதவ் 3  வருண், பண்டையா ஆகியோர் தலா 1 விக்கெற் எடுத்தனர்.

  128 ஓட்டங்க‌ள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம்  இறங்கியது இந்தியா.  சுப்மன் கில் 10 ஓட்டங்களுடனும், திலக் வ்ர்மா, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல்  47 ஓட்டங்களும், ஷிவம் துபே ஆட்டமிழக்காமல்  10 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தியா 15.5 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்து 131 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெற்களால் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை தக்க  வைத்துள்ளது.

நாணயச் சுழற்சியின்  பின்னர் இந்திய அனி கப்டன் பாகிஸ்தான் கப்டனுடன் கை குலுக்கவில்லை. ஆரம்பமே சர்ச்சையானது.

பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிப்பு  வெளியானதும்  அரங்கமே தேசிய கீதத்துக்கு மதிப்புக் கொடுக்கத் தயாராகியது.  பாகிஸ்தான் வீரர்கள் நெஞ்சில் கை அகித்தனர். அப்போது தேசிய கீதத்திற்கு பதிலாக   ஜிலேபி பேபி பாடல் ஒலிபரப்பாகியது. பாகிஸ்தான் வீரர்கள் குழம்பினர். அரங்கத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியானார்கள். அடுத்த நொடியில்  பாகிஸ்தானின் தேசிய கீதம்  ஒலிபரப்பானது.

பும்ராவின் 5 வருட சாதனையை பாகிஸ்தானின்  இளம் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான்,  முடிவுக்குக் கொண்டு வந்தார்.

 உலக நம்பர் 1 பந்துவீச்சாளரான பும்ராவையே அட்டாக் செய்தார்  இளம் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான். பும்ரா வீசிய 4-வது ஓவரின் மூன்றாவது பந்தை, வைட் லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார்.அந்த சிக்ஸரைப் பார்த்து  கிறிக்கெற் ரசிகர்கள் வியப்படைந்தனர்.வர்ண்னையாளர்கள்  புகழ்ந்து தள்ளினார்கள்.

 பும்ரா வீசிய 6-வது ஓவரில் அவர் மீண்டும் ஒரு அதிரடியான புல் ஷாட்டை பேக்வேர்ட் ஸ்கொயர் திசையில் பறக்கவிட்டு இரண்டாவது சிக்ஸரையும் அடித்து, இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்..

ஃபார்ஹானின் இந்த இரண்டு சிக்சர்கள் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக இது வரை ஒரு சிக்சர் கூட பும்ரா விட்டுக்கொடுத்ததில்லை என்கிற 5 வருட சாதனையை உடைத்தார் சாஹிப்சாதா  ஃபார்ஹான்.  பாகிஸ்தான் அணி பும்ராவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் சிக்சர் இதுவாகும்.  பும்ப்ராவின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்கள் அடிப்பேன் என சபதம் செய்த முகமட் ஹரிள்  பண்டையா வீசிய பந்தை  பும்ராவிடம் பிடிகொடுத்து  ஆட்டமிழந்தார்.

பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடக் கூடாது என பல்வேறு தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இருநாடுகளுக்கு இடையேயான அரசியல் , எல்லை தாண்டிய பிரச்னைகளின் அனல்,   போடிட்டியின் போது ஆடுகளத்திலும் உணரப்பட்டது.

நாணயச் சுழற்சியின் பின்னர்  வழக்கமாக இரு அணிகளின் கப்டன்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் கப்டனின் முகத்தை கூட பார்க்காத, இந்திய கப்டன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்க மறுத்து அங்கிருந்து வெளியேறினார்.

தொடர்ந்து, போட்டியின் முடிவிலும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது என்பது மரியாதை நிமித்தமாக பின்பற்றப்படுகிறது. ஆனால், நேற்றைய போட்டியில் இலக்கை எட்டியதுமே, பேட்டிங் செய்து கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே ஆகியோர் நேராக இந்திய பெவிலியனை நோக்கி புறப்பட்டனர். பாகிஸ்தான் வீரர்களும் கைகுலுக்குவதை எதிர்பார்த்து காத்திருக்காமல், பெவிலியனை நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

 போடிட்யின்போது கையில் கருப்பு பேட்ஜை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடினர். வெற்றியை இந்திய இராணுவத்திற்கும் பஹால்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் சமர்பிப்பதாக கப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி கைகுலுக்காததால்  பாகிஸ்தான் கப்டன் பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்தார்.

  

Thursday, March 13, 2025

சம்பியன்ஸ் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்றது இந்தியா

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2025 ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் 4 விக்கெற்களால் நியூசிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா.

நாணயச் சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ஓட்டங்கள் எடுத்தது. டேரில் மிட்செல் அதிகபட்சமாக 63 ஓட்டங்கள் எடுத்தார். வருண் சக்ரவர்த்தி , குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

252 ஓட்டங்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஜோடியான ரோஹித் ஷர்மா , ஷுப்மன் கில் அகியோர் முதல் விக்கெட்டிற்கு 105 ஓட்டங்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.ரோஹித் ஷர்மா 76 ஓட்டங்களுடனும், , , ஷுப்மன் கில் 31 , கோலி இட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.49வது ஓவர் வரை போராடிய இந்திய அணி இறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்று, இந்த பட்டத்தை அதிகமுறை வென்ற அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

83 பந்துகளில் 76 ஓட்டங்கள் எடுத்த ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.263 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெற்களை வீழ்த்திய ரச்சின் ரவீந்ரா தொடர் நாயகன் விருது பெற்றார். காயம் அடைந்த மாட் ஹென்றிக்கு பதில் நாதன் ஸ்மித் இடம் பெற்றார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

நியூசிலாந்து அணிக்கு வில் யங், ரச்சின் ரவிந்திரா  ஆகிய‌ இருவரும் 7 ஆவது ஓவரில்  51 ஓட்டங்கள் அடித்து  நம்பிக்கையளித்தனர்.  8வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி களத்துக்கு வந்ததும் ஆட்டத்தின் போக்கு  மாறியது.   குல்தீபின் பந்தை அடித்த வில்லியம்சன் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். 12. 2 ஓவர்களில் 3 விக்கெற்கலை இழந்த நியூஸிலாந்து  75  ஓட்டங்கள் எடுத்தது. அடுத்த 81 பந்துகள்  இந்திய வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.  ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.

லதாம் 14,  பிலிப்சை 34  ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.  மிட்சல், 91 பந்தில் தனது மந்தமான அரைசதத்தை எட்டினார். கடைசி கட்டத்தில் பிரேஸ்வெல் அதிரடியாக ஆடினார்.   மிட்சல் 63   ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்  கடைசி 10 ஓவர்களில் 79  ஓட்டங்கள் அடித்தது நியூசிலாந்து.  50 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்த நியூஸிலாந்து  251 ஓட்டங்கள் எடுத்தது. பிரேஸ்வெல்  ஆட்டமிழக்காது 53 ஓட்டங்கள் எடுத்தார்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா  சூறாவளியாக சுழன்றடித்தார். ஏதோ ஒரு முடிவுடன் வந்ததுபோல் அவர் விளையாடினார். 41 பந்துகளில் ரோஹித் அரைசதம் அடித்தார்.   முதல் விக்கெட்டுக்கு 105  ஓட்டங்கள் அடித்த நிலையில் கிளன் பிலிப்ஸ் வழக்கம் போல பறந்து ஒரே கையால் பிடித்து 31 ஓட்டங்களுடன் சுப்மன் கில்லை வெளியேற்றினார்.

பிரெஸ்வெல்லின் பந்தில் ஒரு ஓட்டம் எடுத்த கோலி எல்.பி.டபிள்யுவில் ஆட்டமிழக்க இந்திய ரசிகர்கள் சோகமடைந்தனர். நியூசிலாந்து வீரர்கள் ஆர்ப்பரித்தனர். 'ரிவியு' கேட்டும்   கோலியின் ஆட்டமிழப்பு உருதியானது. சிறிது நேரத்தில் ரோகித்  76 ஓட்டங்களுடன் வெலியேற  பதற்றம் அதிகரித்தது.

ஸ்ரேயாஸ், அக்சர் ஜோடி பொறுப்புடன் விளையாடி ஓட்டங்களைச் சேர்த்தது. பிலிப்ஸ் ஓவரில் ஸ்ரேயாஸ் அடித்த பந்து 'லாங்-ஆன்' திசையில் நின்ற ஜேமிசன் கைக்கு நேராகச் சென்றது.  அவர் 'கேட்ச்சை' நழுவவிட்டார். 48 ஓட்டங்கள் அடித்த ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார்

அக்ர் படேல் 29, ஹர்திக் பாண்ட்யா 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய லோகேஷ் ராகுல், அணியை கரை சேர்த்தார். ரூர்கே பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரவிந்திர ஜடேஜா, வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து 254 ஓட்டங்கள் எடுத்து  வெற்றி பெற்றது.

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 15வது முறையாக ரோஹித் நாணயச் சுழற்சியில் தோல்வியடைந்தர்.  ஒருநாள் அரங்கில் அதிக முறை 'டாஸ்' வெல்லாத கப்டன் பட்டியலில் முதலிடத்தை  லாரா பகிர்ந்து கொண்டார் ரோஹித்.இருவரும் 12 முறை தோல்வியடைந்தன.

இறுதிப் போட்டியில் நேற்று இந்திய வீரர்கள் நான்கு 'கேட்ச்சை' நழுவவிட்டனர்.ஷமி வீசிய பந்தை  நேராக அடித்தார் ரச்சின். இது ஷமியின் விரலில் பட்டு 'கேட்ச்' நழுவியது. வலியால் அவதிப்பட்ட ஷமிக்கு 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை அளித்தார்.  வருண் சக்ரவர்த்தி பந்தை ரச்சின் துாக்கி அடிக்க, எல்லையில் இருந்து ஓடி வந்த ஸ்ரேயாஸ் 'கேட்ச்சை' கோட்டைவிட்டார்.  ஜடேஜாவின் பந்தில்   பிலிப்ஸ் கொடுத்த 'கேட்ச்சை' எல்லையில் கோட்டைவிட்டார் சுப்மன் கில்.

ஐ.சி.சி., ஒருநாள் தொடரின் 'நாக்-அவுட்' போட்டியில் (உலக கோப்பை அல்லது சம்பியன்ஸ் டிராபி) இரு அணிகளின் துவக்க ஜோடியும் 50 ஒட்டங்களுக்கு  மேல் எடுத்தது 2வது முறையாக அரங்கேறியது.   நியூசிலாந்தின் யங்-ரச்சின் 57  ஓட்டங்கள் அடித்தனர். இந்தியாவின் ரோகித்-சுப்மன் 105  ஓட்டங்கள் எடுத்தனர்.

 இதற்கு முன் இந்தியா-பாக்., மோதிய உலக கோப்பை காலிறுதியில் (1996, மார்ச் 9, பெங்களூரு) துவக்க ஜோடிகள் (சச்சின்-சித்து 90, அன்வர்-சோகைல் 84  ) எடுத்தனர்.

சம்பியன்ஸ் தொடரில்  அதிக ஓட்டங்கள் விட்டுக் கொடுத்த இரண்டாவது இந்திய வீரரானார் ஷமி  ஷமி(9 ஓவர், 1/74). முதலிடத்தில் உமேஷ் யாதவ்(2/75, எதிர், தென் ஆப்ரிக்கா, கார்டிப், 2013) உள்ளார்.

இந்திய 'ஸ்பின்னர்'கள்   37.3 சதவீத பந்துகளை 'ஸ்டம்ப்சை' தாக்கும் வகையில் துல்லியமாக வீசினர். 38 ஓவர்களில் 144 ஓட்டங்கள் மட்டும் மட்டும் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினர்.

 38 ஓவர் வீசி ஒருநாள் அரங்கில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அதிக ஓவர் வீசியதில், மூன்றாவது இடம்  பிடித்தனர். . முதல் இரு இடங்களில் 41.2 ஓவர் (எதிர், வெ.இ., இந்துார், 2011), 30 ஓவர் (எதிர்,கென்யா, குவாலியர், 1998) உள்ளன.

  சாம்பியன்ஸ் டி கிண்ண  அரங்கில் அதிக ஓவர் 'ஸ்பின்னர்'கள் வீசிய அணிகளின் பட்டியலில் இந்தியா (38 ஓவர்) இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் இலங்கை (39.4 ஓவர், எதிர், ஆஸி., கொழும்பு, 2002, அரையிறுதி) உள்ளது.

நியூசிலாந்து வீரர் வில்லியம்சனின் தொடை தசையில் காயம் ஏற்பட்டது. 'பீல்டிங்' செய்ய வரவில்லை. மாற்று வீரராக மார்க் சாப்மேன் களமிறங்கினார்.


நாதன் ஸ்மித் பந்தில் (5.3வது ஓவர்) ஒரு இமாலய சிக்சர் (92 மீ., துாரம்) அடித்த ரோகித், ஒருநாள் அரங்கில் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் (344 சிக்சர், 273 போட்டி) உள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தானின் அப்ரிதி (351 சிக்சர், 398 போட்டி) உள்ளார்.

  3வது ரன்னை எடுத்த போது நியூசிலாந்துக்கு எதிராக 1000  ஓட்டங்கள் எட்டினார் ரோகித்.* ஒருநாள் அரங்கில் கப்டனாக 2,500 ஓட்டங்கள் கடந்தார் ரோகித்.

நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் ஃபைனலில் வெற்றி பெற்று இந்தியா புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன் 2000 சம்பியன்ஸ் ட்ராபி, 2021 டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்களில்நியூஸிலாந்திடம்  இந்தியா தோல்வியையே சந்தித்தது. 3 சம்பியன்ஸ் ட்ராபிகளை (2002, 2013, 2025*) வென்ற முதல் அணி என்ற மாபெரும் சரித்திர உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது இதற்கு முன் அவுஸ்திரேலியா 2 கோப்பைகளை வென்றதே  முன்னைய  சாதனை. 

Friday, March 7, 2025

இந்தியா நியூஸிலாந்து நேருக்கு நேர் புள்ளி விபரம்


சம்பியன் கிண்ண  இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்தும்  துபாயில் மோத  உள்ளன.   இந்திய அணி நியூசிலாந்து அணியை லீக் போட்டியில் வீழ்த்தி இருந்தாலும் ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து அணியின் கையே ஓங்கி இருக்கிறது.

இந்திய அணி அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக மூன்று முறை சம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியை எட்டிய முதல் அணி என்கிற வரலாறு படைத்தது.  நியூசிலாந்து அணி தங்களது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவும் நியூசிலாந்தும் நான்கு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் நியூசிலாந்து அணி முன்னணியில் உள்ளது. நியூசிலாந்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளும் 2000 சம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலும், 2019ஆம் ஆண்டும், 2023  ஆம் ஆண்டு உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியிலும், 2021 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் நேருக்கு நேர் மோதியுள்ளன. 2023 உலகக் கிண்ண  அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை வென்றுள்ளது. இது தான் நியூசிலாந்து அணியை இந்திய அணியை நாக் அவுட்டில் வென்ற ஒரே போட்டியாகும்.

2021 ஆம் ஆண்டு நடந்த உலகடெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப்  போட்டிகளில் இந்தியாவும் நியூசிலாந்தும் இது வரை இரண்டு முறை மோதியுள்ளன.அதில் இரு  அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இந்திய அணி 2000 ஆம் ஆண்டு நடந்த சம்பியன்ஸ்   இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதியது, இதில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. அதன் பின்னர் தற்போது நடந்த லீக் போட்டியில் இந்திய அணி 44 ஓட்டங்களில்  வெற்றி பெற்றது. 

ஒரு நாள் உலகக்கிண்ணப் போட்டியில்  இரு அணிகளும் 10 முறை மோதின. இதில் நியூசிலாந்து 5 முறையும் இந்திய அணி 4 முறையும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண  அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  அந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் கப்டன் எம்.எஸ் டோனியின் கடைசி ஒரு நாள் போட்டியாக அமைந்தது.

ஐசிசி  ரி20 உலகக் கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து இந்தியாவை ஆதிக்கம் செலுத்தி வருகிறது, இது  இரு அணிகளும் மூன்று முறை மோதியுள்ளன அந்த மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது.

    இரு அணிகளும் ஐசிசியின் தொடர்களில் மொத்தம் 16 முறை நேருக்கு மோதியுள்ளன, இதில் நியூசிலாந்து அணி 10 முறையும் இந்திய அணி 5 முறையும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு பெரும் தலைவலியாகவே  இருந்துள்ளது. 

      

சம்பியன் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து மோதல்


 

 இந்தியா , நியூசிலாந்து அணிகள் மோத உள்ள,  ஐசிசி சம்பியன்ஸ்  கிண்ண இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற உள்ளது.

 இரண்டு அணிகளும் இதே மைதானத்தில் லீக் சுற்றில் மோதியதால், மைதானத்தில் சூழல் எப்படி இருக்கும் என இரண்டு அணிகளும் அறிந்திருக்கின்றன. இதனால், போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். இந்தியாவை  விட  நியூசிலாந்து அணி வலுவாக  இருப்பதாக விமர்சகர்கள்  கூறுகிறார்கள்.

இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கக்கூடிய அணியாக நியூஸிலாந்து உள்ளது.  இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான அந்த அணியில் மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ் ,ரச்சின் ரவீந்திர ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே சுழற்பந்து வீச்சில் உள்ள பன்முகத்தன்மையின் அடிப்படையில் வலுவாக உள்ளனர். லீக் சுற்று போட்டியில் அவர்களின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் சமாளித்தாலும், இறுதிப்போட்டி கடும் சவாலாக  இருக்கும்.

 : நியூசிலாந்து அணி களத்தில் ஃபீல்டிங் மூலம் மட்டுமே 30/ 40   ஓட்டங்களை  சேமிக்கும் திறன் கொண்டுள்ளது.   அட்டகாசமான கேட்சுகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.  சாண்ட்னர், வில் யங் , மைக்கேல் பிரேஸ்வெல் போன்றவர்கள் சிறந்த பீல்டர்களாக திகழ்கின்றனர். கூடுதலாக எதிரணி வீரர்களையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தக் கூடிய க்ளென் பிலிப்ஸ்ம் நியூசிலாந்து அணியில் இருக்கிறார். அவர் தனது விதிவிலக்கான பீல்டிங் மூலம் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும். சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்படும் போது, அவர்களின் சிறந்த ஃபீல்டர்கள் அனைவரும் வளையத்தில் இருப்பதால், அவர்கள்  ஒற்றை ஓட்டத்தை  நிறுத்துவதன் மூலம் அழுத்தத்தை அதிகரிக்கின்றனர்.  

இந்தியாவைப் போலவே, நியூசிலாந்து அணியும் சூழ்நிலைக்கு ஏற்ற துடுப்பாட்ட  வரிசையைக் கொண்டுள்ளது. லீக் போடிட்யில் அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், கம்பேக் கொடுக்கும் திறன் கொண்டுள்ளனர். ரச்சின், யங் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை உள்ளடக்கிய டாப் ஆர்டர் விரைவான தொடக்கத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மிடில் ஆர்டருக்கு ஒரு அடித்தளத்தை உருவாக்கி தருகின்றனர். பெரும்பாலான அணிகள் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்த்துப் போராடுவதில் சிரமப்பட்டாலும், டாம் லாதம், டேரில் மிட்செல் மற்றும் பிலிப்ஸ் போன்றவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.

  இந்தியாவும் சளைத்ததல்ல 2013 சம்பியன்ஸ் தொடரில் டோனி தலைமையில்  இறுதிப் போட்டியில் விளையாடிய  இந்தியா கோப்பையையும் வென்றதுசம்பியனது. 2017 சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில்  விராட் கோலி தலைமையிலிறுதிப் போட்டிக்குச் சென்ற   இந்திய அணிபாகிஸ்தானிடம் தோற்றது. தற்போது ரோகித் சர்மா தலைமையில் இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது.

ச‌ம்பியன்ஸ் கிண்ண   வரலாற்றில் தொடர்ந்து  மூன்று தொடர்களில் (2013, 2017, 2025)  இறுதிப்போட்டிக்குச் சென்ற  பெற்ற முதல் அணி என்ற ஹட்ரிக் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது

 2023 டெஸ்ட் சம்பியன்ஷிப்  இறுதிப் போட்டிக்குத்  தகுதிப் பெற்ற இந்தியா அடுத்ததாக நடைபெற்ற 2023 உலகக்கோப்பை,   2024 இல் ரி20 உலகக் கோப்பை ஆகியவற்றில்  இந்திய சம்பியன் பட்டத்தை வென்றது.

  தற்போது நடைபெறும் சம்பியன்ஸ் டிராபி  இறுதிப் போட்டிக்கும்  இந்தியா தகுதி பெற்றுள்ளது.  கடைசியாக நடைபெற்ற 4 ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி  இறுதிப் போட்டிக்குத்  தகுதி பெற்றுள்ளது.   ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்ற   சாதனையை இந்தியா படைத்துள்ளது.

 இதற்கு முன் 1975 – 1983 காலகட்டங்களில் மேற்கு இந்தியா , 2000 – 2003 காலகட்டங்களில் இந்தியா, 2019 – 2021 காலகட்டங்களில் நியூசிலாந்து அணிகள் தலா 3 இறுதிப் போட்டிக்குத் தொடர்ந்து தகுதி பெற்றதே முந்தைய சாதனை. இதிலிருந்து மற்ற அணிகளை காட்டிலும் இந்திய ஐசிசி தொடர்களில் நன்றாக செயல்படுவது தெரிகிறது.

கோலி,ரோஹித் ஆகியோருக்கு கடைசி சம்பியன்  தொடர் என்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது

 

ரமணி

9/3/25

சம்பியன்கிண்ணம்25,பாகிஸ்தான்,துபாய்,விளையாட்டு,கிறிக்கெற்,தமிழன்,இந்தியா,,நியூஸிலாந்து,

Monday, March 3, 2025

இந்தியச் சுழலில் சிக்கிய நியூஸிலாந்து

துபாயில் நடந்த ச‌ம்பியன்ஸ்  கிண்ண லீக்  போட்டியில் நியூசிலாந்தை  எதிர்கொண்ட இந்தியா 44 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

  இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக  வருண் சக்ரவர்த்தி வாய்ப்பு பெற்றார்.  நான்கு 'ஸ்பின்னர்களுடன் இந்தியா களம் புகுந்தது.   நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து பந்து வீச்சைத் தேர்வு  செய்தது.

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து  249 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில்  சகல விக்கெற்களையும் இழந்து 205 ஓட்டங்கள் எடுத்தது.

  இந்திய அணி  ஆரம்பத்தில் திக்குமுக்கடியது.  மாட் ஹென்றி 'வேகத்தில்'  2  ஓட்டங்கள் எடுத்த சுப்மன் கில்   எல்.பி.டபிள்யு. முறையில் ஆட்டமிழந்தார். ஆனார். ஜேமிசன் பந்தில் கப்டன் ரோஹித் சர்மா 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். 11 ஓட்டங்கள் எடுத்த் கொலியும் பவிலியன் திரும்ப‌ கோலியும் (11) விரைவில் வெளியேற,  7 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்த இந்தியா 30 ஓட்டங்கள் எடுத்தது.

 ஸ்ரேயாஸ், அக்சர் படேல் ஜோடி  நான்காவது விக்கெட்டுக்கு 98 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கையளித்தது. 42 ஓட்டங்களுடன் அக்சர் படேல் ஆட்டமிழந்தார்.  ஓட்ட எண்ணீக்கையை உயர்த்துவதற்காக அதிரடியாக விளையாடிய  ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தார் நம்பிக்கையுடன்  நின்ற ராகுல் 23 ஓட்டங்களில் வெளியேறினார். 

 கடைசிக் கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் இறங்கினார்.    ஜடேஜா, 16  பாண்ட்யா 45,   ஷமியை  5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா 50 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 249 ஓட்டங்கள் எடுத்தது.ஹென்றி 5 விக்கெற்களை வீழ்த்தினார்.

250 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெறும்  கனவில்  களம் இறங்கிய நியூஸிலாந்து இந்தியாவின் சுழலில் சிக்கி தோல்வியடைந்தது. ரவிந்திரா 6,  ' வில் யங் 22 ,டேரில் மிட்சல் 17  ஓட்டங்களில் வெளியேறினர். 26 ஓவர்களில் 3 விக்கெற்களி இழந்த நியூஸிலாந்து 104 ஓட்டங்கள்  அடித்தது.

  வில்லியம்சன், லதாம் ஆகிய இருவரும்  சிறிது நேரம் போராடினர்.  வில்லியம்சன், 77 பந்துகளில்  ஒருநாள் அரங்கில் 47வது அரைசதத்தை  எட்டினார். லதாம் 14,   கிளன் பிலிப்ஸ் 12, பிரேஸ்வெல் 2 ஓட்டங்களில் நடையைக் கட்டினர்.  அக்சர் படேல் பந்தில் வில்லியம்சன்   81 ஓட்டங்களுடன் வெளியேற இந்தியாவின் வெற்றி உறுதியானது.  ஹென்றியை 2 ஓட்டங்களில் வெளியேற்றிய  வெளியேற்றிய வருண், தனது 5வது விக்கெட்டை பெற்றார். நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 205 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது

  ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 13வது முறையாக 'டாஸ்' வெல்ல தவறியது. ரோகித் தலைமையில் மட்டும் 10 முறை (2023 நவ.- 2025, மார்ச்) 'டாஸ்' வெல்லவில்லை. அதிக முறை 'டாஸ்' வெல்ல தவறிய கேப்டன் பட்டியலில் ரோகித் (10) மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடங்களில் வெஸ்ட் இண்டீசின் லாரா (12, 1998 அக்.-1999 மே), நெதர்லாந்தின் பீட்டர் போரன் (11, 2011 மார்ச்-2013 ஆக.) உள்ளனர்.

'சூப்பர்மேன்' பிலிப்ஸ்

தனது 300வது ஒருநாள் போட்டியில் நேற்று களமிறங்கிய கோலி, மாட் ஹென்றி வீசிய பந்தை (6.4வது ஓவர்) அடித்தார். இதை 'பேக்வார்ட் பாய்ன்ட்' திசையில் நின்ற கிளன் பிலிப்ஸ் அந்தரத்தில் பறந்து, வலது கையை நீட்டி அற்புதமாக பிடிக்க, அதிர்ச்சியில் வெளியேறினார் கோலி (11). இந்த 'கேட்ச்சை' 0.62 வினாடி நேரத்தில் கணித்து கச்சிதமாக பிடித்தார் பிலிப்ஸ். ஜான்டி ரோட்ஸ் போன்ற இவரது 'சூப்பர்மேன்' சாகசத்தை பார்த்து, துபாய் அரங்கில் இருந்த கோலி மனைவி அனுஷ்கா, ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

* பின் ஹென்றி வீசிய பவுன்சரை (45.5வது ஓவர்) ஜடேஜா (16) அடிக்க, அனுபவ வில்லியம்சன் பறந்து 'கேட்ச்' பிடித்து அசத்தினார்.

* இத்தொடரில் நியூசிலாந்து அணி 96.0 சதவீத 'கேட்ச்' பிடித்து முதலிடத்தில் உள்ளது. ஒரு கேட்ச் மட்டுமே நழுவவிட்டது.

ஒருநாள் அரங்கில்   தனது மந்தமான அரைசதத்தை எட்டினார் ஸ்ரேயாஸ் (75 பந்தில்). இதற்கு முன் 74 பந்தில் (எதிர், வெ,இ., 2022, ஆமதாபாத்) அரைசதம் அடித்திருந்தார்.

ஷமியை தாக்கிய பந்து

ஹென்றி பந்தை (49.5வது ஓவர்) அடித்த ஷமி 2வது ஓட்டத்துக்கு ஓடினார். அப்போது நியூசிலாந்து பீல்டர் எறிந்த பந்து ஷமியின் முதுகில் பலமாக தாக்கியது. சிறிது நேரம் 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை அளித்தார். பின் சகஜ நிலைக்கு திரும்பினார் ஷமி.

ஹென்றி 5 விக்.

  5 விக்கெட் வீழ்த்திய மாட் ஹென்றி (5/42), சம்பியன்ஸ் தொடரில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இரண்டாவது நியூசிலாந்து வீரரானார். முதலிடத்தில் ஜேக்கப் ஓரம் (5/36, எதிர், அமெரிக்கா, 2004) உள்ளார்.


                                                  கோலி '300'

நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கிய விராத் கோலி, ஒருநாள் அரங்கில் 300வது போட்டியில் விளையாடிய 7வது இந்திய வீரரானார். இதுவரை 300 போட்டியில், 51 சதம் உட்பட 14,096 ஓட்டங்கள்  குவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் சச்சின் (463 போட்டி), டோனி (350), டிராவிட் (344), முகமது அசார் (334), கங்குலி (311), யுவராஜ் சிங் (304) இம்மைல்கல்லை எட்டினர்.

* சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 300 ஒருநாள், 100 டெஸ்ட், 100 'ரி-20' போட்டிகளில் விளையாடிய முதல் வீரரானார் கோலி. இதுவரை இவர், 300 ஒருநாள், 123 டெஸ்ட், 125 சர்வதேச 'ரி-20'ல் பங்கேற்றுள்ளார்.

முதல் வெற்றி

சம்பியன்ஸ்  தொடரில் அரங்கில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 2 முறை மோதின. இதில் நியூசிலாந்து (2000, நைரோபி), இந்தியா (2025, துபாய்) தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.

5 விக்கெட்

சுழலில் அசத்திய வருண் சக்ரவர்த்தி (5 விக்கெட், 42 ஓட்டங்கள் , 10 ஓவர்) சம்பியன்ஸ் தொடரில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் ரவிந்திர ஜடேஜா (5 விக்கெட், 36 ரன், எதிர்: வெஸ்ட் இண்டீஸ், லண்டன், 2013) உள்ளார்.

* சம்பியன்ஸ்தொடரில்  அறிமுகமான முதல் போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த 2வது பவுலரானார் வருண். முதலிடத்தில் அவுஸ்திரேலியாவின் ஹேசல்வுட் (6/52, எதிர்: நியூசிலாந்து, 2017) உள்ளார்.

* இது, ஒருநாள் போட்டியில் வருண் சக்ரவர்த்தியின் சிறந்த பந்துவீச்சானது. இதற்கு முன், கட்டாக்கில் (2025, பிப். 9) நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தி, 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.

Monday, February 24, 2025

கில் சதம் இந்தியா வெற்றி


  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பங்களாதேஷை எதிர்த்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தனது சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்தது

ஐசிசி 2025 சம்பியன்ஸ்  கிண்ணப் போட்டி  பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.   இந்தியாவின்  போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது. அந்தத் தொடரில் இந்தியா தங்களது முதல் போட்டியில் பங்களாதேஷை எதிர் கொண்டது.  நாணயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடியது. 49.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த பங்களாதேஷ் 228 ஓட்டங்கள் எடுத்தது.  இந்தியா 43.6 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 231  ஓட்டங்கள் எடுத்தது.

 சௌமியா சர்க்கார் 0, கப்டன் நஜ்முல் சாண்டோ 0, தன்சித் ஹசன் 25, மெஹதி ஹசன் 5, ரஹீம் 0  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். 5 விக்கெற்களை இழந்து 35 ஓட்டங்கள் எடுத்துத் தடுமாறிய போது  மிடில் ஓடரில் தௌஹீத் ஹ்ரிடாய் – ஜாகிர் அலி ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினார்கள்.

  6வது விக்கெட்டுக்கு 154  ஓட்டங்கள்  அடித்து பங்களாதேஷைக் காப்பாற்றினார்கள்.   ஜாகிர் அலி அரை சதத்தை அடித்து 68 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.   சேர்ந்து விளையாடிய தௌஹீத் தனது முதல் சதத்தை அடித்து [100] ஆட்டமிழந்தார்.      49.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த பங்களாதேஷ் 226 ஓட்டங்கள் எடுத்தது. ஷமி 5, ஹர்ஷிட் ராணா 3, அக்சர் படேல் 2 விக்கெட்களி வீழ்த்தினார்கள்.

69 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக சேர்த்து   நல்ல துவக்கத்தைக் கொடுத்த கேடன் ரோஹித் சர்மா 41 (36)  ஓட்டங்கள் எட்டுத்து ஆட்டமிழந்தார். த விராட் கோலி 22, ஸ்ரேயாஸ் ஐயர் 15, அக்சர் படேல் 8  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் நிதானத்தைக் காட்டிய கில் அரை சதத்தை கடந்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைதோட்டங்களில்  இருந்த போது கொடுத்த கேட்ச்சை வங்கதேசம் தவற விட்டது. அதைப் பயன்படுத்திய ராகுல் 41* (47) ஓட்டங்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் சேர்ந்து தொடர்ந்து நிதானத்தை காட்டிய கில் சதத்தை அடித்து 101* (129)ஓட்டங்கள் அடித்தா. 46.3 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்த இந்தியா  231  ஓட்டங்கள் எடுத்து   6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 51 இன்னிங்ஸ்களில்  கில் தனது 8வது சதத்தை பதிவு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 8 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ஷிகர் தவான் 57 இன்னிங்ஸில் 8 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை.  ஆட்டநாயகன் விருது கில்லுக்கு வழங்கப்பட்டது.


இந்திய வீரர் அக்சர் படேல் வீசிய 9-வது ஓவரில் தன்சித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர். அடுத்த பந்தில் ஜாக்கர் அலி பேட்டில் பட்டு பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற க‌ப்டன் ரோஹித் வசம் சென்றது. அதை கேட்ச் பிடித்திருந்தால் அக்சர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருப்பார். அதை ரோஹித் மிஸ் செய்தார். கிட்டத்தட்ட ஆட்டத்தின் திருப்புமுனை என்றும் அதை சொல்லலாம்.

  5 விக்கெட்டுகளை முதல் 10 ஓவர்களுக்குள் இழந்த நிலையில் கடைசி ஓவர் வரை அந்த அணி விளையாடி அசத்தியது.க‌ப்டன் ரோஹித் மட்டுமல்லாது 20-வது ஓவரில் ஹ்ரிடோய் கொடுத்த கேட்ச்சை மிட்-ஆஃப் திசையில் நின்ற ஹர்திக் பாண்டியா நழுவவிட்டார். அப்போது ஹ்ரிடோய் 23  ஓட்டங்களில் இருந்தார். 

ரமணி

23/2/25    

Wednesday, February 19, 2025

பாகிஸ்தானில் மினி கிறிக்கெற் திருவிழா


 கிறிக்கெற் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கத் துடிக்கும்  மினி உலக கிறிகெற் திருவிழாவான சம்பியன் கிண்ணப் போட்டி இன்று புதன் கிழமை பாகிஸ்தானில் ஆரம்பமாகிறது.

  இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ்  ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும் அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மறு பிரிவிலும்  போட்டியிடுகின்றன.இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கிறது. 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடக்கும் சர்வதேச கிறிக்கெற் போட்டி என்பதனால்  மிக முக்கியத்துவம்  பெறுகிறது.

ச‌ம்பியன் கிண்ணத்தை  வெல்லும் அணிக்கு 2.24 மில்லியன் டொலரும், , இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.12 மில்லியன் டொலரும் பரிசாக வழங்கப்படும்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டியில், உலகின் முதல் எட்டு ஒருநாள் அணிகள் பங்கேற்கும்.

இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சம்பியன்' பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. சொந்த மண்ணில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியிந்துடுப்பாட்டம் பலமாக உள்ளது. சமீபத்தில் கராச்சியில் நடந்த முத்தரப்பு தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 355 ஓட்டங்களைத் துரத்தி வென்றது. கீப்பர், கப்டன் ரிஸ்வான், பாபர் ஆசம், பகர் ஜமான், சல்மான் அகா, உஸ்மான் கான் தமது பலத்தி நிரூபிப்பார்கள். பந்துவீச்சில் ஷாகீன் ஷா அப்ரிதி, நசீம் ஷா, 'ஸ்பின்னர்' அப்ரார் அகமது அசத்துவார்கள்.

புதிய கப்டன் சான்ட்னர் தலைமையில் நியூசிலாந்து அணி அசத்துகிறது. முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பின் கராச்சியில் நடந்த பைனலில் மீண்டும் பாகிஸ்தானை சாய்த்து, கோப்பை வென்றது. இன்றும் அசத்தினால், 'ஹட்ரிக்' வெற்றியை பதிவு செய்யலாம். டேரில் மிட்சல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் என நிறைய 'ஆல்-ரவுண்டர்கள்' இருப்பது பலம். அனுபவ வில்லியம்சன், கான்வே, லதாம் ரன் மழை பொழியலாம். பந்துவீச்சில் ரூர்க்கே, மாட் ஹென்றி, சான்ட்னர் மிரட்டலாம்.

இரு அணிகளும் 118 ஒருநாள் போட்டியில் மோதின. பாகிஸ்தான் 61, நியூசிலாந்து 53ல் வென்றன. 3 போட்டிக்கு முடிவு இல்லை. ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது.

* சம்பியன்ஸ் டிராபி அரங்கில் 3 முறை மோதின. பாகிஸ்தான் இரண்டு முறையும்,நியூசிலாந்து ஒரு போட்டியிலும்  வென்றன.


 * கராச்சி மைதானத்தில் 9 போட்டிகளில்  மோதின. நியூசிலாந்து 5 முறை வெற்றி பெற்றது.

* கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டிகளில்  நியூசிலாந்து 3,  மூன்றுமுறை  வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.

1998ம் ஆண்டு முதல் நடக்கும் இந்த மினி உலகக்கோப்பையை இதுவரை வென்ற அணிகள் விபரம்

1998ம் ஆண்டு - தென்னாப்பிரிக்கா

200ம் ஆண்டு - நியூசிலாந்து

2002ம் ஆண்டு - இந்தியா, இலங்கை

2004ம் ஆண்டு - வெஸ்ட் இண்டீஸ்

2006ம் ஆண்டு - ஆஸ்திரேலியா

2009ம் ஆண்டு - ஆஸ்திரேலியா

2013ம் ஆண்டு - இந்தியா

2017ம் ஆண்டு - பாகிஸ்தான்

இன்று நிலவும் கிரிக்கெட் சூழலுக்கு நேர் எதிரான சூழல் தான் 1996ம் ஆண்டில் காணப்பட்டது.  சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தங்களை வலுவாக நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துக்கொண்டு இருந்தது. ஆனால், இன்றைய நிலவரத்தை போன்று அன்று பொருளாதார ரீதியாக பிசிசிஐ வலுவாக இல்லை. அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி, 1996 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற இந்தியாவிற்கு உதவி தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான், இந்தியாவிற்கு ஆதரவாக இணைந்து செயல்பட அப்போதைய பாகிஸ்தான், இலங்கை ஆகியன முன்வந்தன.

 1987ம் ஆண்டிலேயே இந்தியாவிலும்  பாகிஸ்தானிலும்  ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இங்கிலாந்திற்கு வெளியே நடைபெற்ற முதல் உலகக் கோப்பை இதுவாகும். அந்த போட்டியில் இந்தியா பெரும்பங்கு வகித்த நிலையில், 1996 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்தது.

   1996ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்சபை   பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற தீவிரமாக விரும்பியது.அந்த காலத்தில் ஒவ்வொரு முடிவும், நடவடிக்கையும் லாப நோக்கத்தை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அவுஸ்திரேலியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்தபோது, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இணைந்து சென்று அங்கு ஒரு போட்டியில் பங்கேற்றன. இதன் மூலம், இலங்கை பாதுகாப்பான நாடுதான் என்பதை உறுதி செய்தன. இன்றும் இலங்கைக்கு பயணம் செய்து, அர்ஜுனா ரணதுங்கா போன்றவர்களிடம் கேட்டால், இது ஒரு மறக்க முடியாத ஒரு செயல் என்று குறிப்பிடுவர்.

  கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் அபாய நாட்களுக்கு பதிலளித்த நாட்கள் அவை. ஆனால் இன்று, பலவீனத்தின் எந்த அறிகுறியும் அதிகமாக சுரண்டப்படுவதற்கான அழைப்பாக உள்ளது.

 , காலங்கள் உருண்டோடி இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரெதிர் துருவங்களாக உருவெடுத்துள்ளன. அரசியல் சூழல் காரணமாக, இந்தியா பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதற்கான வாய்ப்பு ஒருபோதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணமாகவே பாகிஸ்தானுக்கு செலவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், எல்லை தாண்டி கிரிக்கெட் விளையாட இந்தியாவை அனுமதிப்பதில்லை என்பதில்  அரசியல் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. விளையாட்டும் அரசியலும் கலக்கக்கூடாது என்று சொல்பவர்கள் இருப்பார்கள், ஆனால்  விளையாட்டு தனியாக இயங்காது.

  

Tuesday, October 1, 2024

களை கட்டப்போகும் மகளிர் ரி 20 உலகக்கிண்ணம்


   9வது .சி.சி. மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி  ஐக்கிய அரபு எமரேட்ஸில் உள்ள சார்ஜா, துபாய் ஆகிய மைதானங்களில்   ஒக்டோபர் 3ம் திகதி முதல் ஒக்டோபர் 20ம் திகதி வரை நடைபெற உள்ளது.

கடந்த மகளிர் ரி20 உலகக்  கிண்ண  இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சம்பியன் பட்டம் பெற்றது. 10 அணிகள்   பி  என  இராண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப்   இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் , இலங்கை  .

குரூப் பி  இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்தியா,பங்களாதேஷ் , தென்னாப்பிரிக்கா  .

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை  அதிக முறை வென்ற நாடு என்ற பெருமையை அவுஸ்திரேலியா தன்வசம் வைத்துள்ளது. 8 முறை நடைபெற்றுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில்  அவுஸ்திரேலியா 6 முறை ம்பியன் பட்டம் வென்று  அசத்தியுள்ளது. இங்கிலாந்து, மேற்கு இந்தியா ஆகியன  தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளன.

Monday, December 25, 2023

ஐபிஎல் 2024 அதிசயங்கள் ஆச்சரியங்கள்

ஐபில் 2024 மினி ஏலம் துபாயில்    பரபரப்பாக நடந்தது. நட்சத்திர வீரர்களை  வாங்குவதற்கு பல அணிகள்  முட்டி மோதின.சர்வதேசப் போடியில் விளையாடவர்கலுக்கான ஏலத்தொகை எகிறியது. ஏலத்தில் வாங்கப்படாத வீரர்கள் ஏமாற்றமடைந்தனர். கடந்த ஆண்டு ந்நிராகரிக்கப்பட்ட வீரரை வாங்குவதற்கு பலத்த  போட்டி நிலவியது. ஐபிஎல் இன்  புண்ணியத்தால் சில வீரர்கள்  கோடீச்வரரானார்கள்.இறுதிப்பட்டியலில் 333 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டின. இறுதியில் மொத்தமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 72 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.இதற்கான 10 அணிகள் சார்பில் மொத்தமாக 230.45 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதிகபட்சமாக கொல்கத்தா அணி 31.35 கோடி செலவிட்டது. இதில் பல வீரர்களுக்கான ஏலத்தொகை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

                     கோடீஸ்வரனான பழங்குடியின வீரர்


குஜராத் மாநிலம் பழங்குடியினத்தைச் சேர்ந்த 21 வயதான ராபின் மின்ஸை, குஜராத் டைட்டன்ஸ் அணி 3.6 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அடிப்படை ஏலத்தொகயான 20 லட்ச ரூபாய் பிரிவில் இருந்த அவரை கைப்பற்ற பல முன்னணி அணிகளும் தீவிரம் காட்டின.

சென்னை கூட 1.2 கோடி ரூபாய் வரை ஆர்வம் காட்டிய நிலையில், இறுதியில் குஜராத் அணி ராபினை ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்கப்பட்ட முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேநேரம், கடந்த ஆண்டு இவர் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

இடது கை வீரரான ராபின் மின்ஸ் பிரமாண்ட ஷாட்களை ஆடுவதில் கைதேர்ந்தவராக உள்ளார். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர், டோனியின் பரமரசிகராவார். டோனியின் வழிகாட்டியான சன்சல் பட்டாச்சார்யா தான் ராபினுக்கும் வழிகாட்டியாக செயல்பட்டுள்ளார். ஜார்க்கண்டில் உள்ள கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த மின்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியால் இங்கிலாந்தில் பயிற்சி அளிக்கப்பட்ட போது பலரது கவனத்தை ஈர்த்தார்.

  ஜார்கண்ட் மாநிலத்திற்காக இதுவரை ரஞ்சிடிராபி போட்டியில் விளையாடியது இல்லை. அதேநேரம், ஜார்கண்ட்டின்  u-19 மற்றும்  u - 25 அணியின் கப்டனாக செயல்பட்டுள்ளார்.

                 ஏலத்தில் ஆதிக்கம் செலுத்திய வேகப்பந்து வீச்சாளார்கள்


ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்களில் பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. டாப் 5 வீரர்களில் கூட 4 வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள்தான். ஒருவர் மட்டும்தான் துடுப்பாட்ட வீரராக உள்ளார்.மிட்ஷெல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுள்ளார். இவரை கொல்கத்தா அணி  24.75 கோடிக்கு வாங்கியுள்ளது.   பேட் கம்மின்ஸை ரூபாய் 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேரில் மிட்ஷெல்லை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  14 கோடிக்கு வாங்கியுள்ளது.    இந்திய வேகப்பந்து வீச்சாளரானஹர்ஷல் பட்டேலை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடிக்கு வாங்கியுள்ளது. நடந்து முடிந்த மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர் ஹர்ஷல் பட்டேல்.   அதிக விலைக்கு ஏலம் போன ஐந்தாவது வீரராக அல்ஜாரி ஜோசப். இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11.50 கோடிக்கு வாங்கியுள்ளது.

                                நிராகரிக்கப்பட்ட அதிரடி வீரர்


மேற்கு இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ரி20 போட்டியில் சதம் அடித்து அசத்திய இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஃபில் சால்ட்   நான்காவது ரி20 போட்டியிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார்.இங்கிலாந்து அணி சார்பாக ஒரு வீரர் சர்வதேச ரி20 போட்டிகளில் அடுத்தடுத்து சதங்களை விளாசுவது இதுவே முதல் முறை. அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை பதிவுசெய்த இங்கிலாந்து வீரராகவும்  சாதனையை நிகழ்த்தினார். இப்படி தொடர்ச்சியாக இரண்டு ரெஇ20 சதங்களை விளாசிய அதிரடி ஆட்டக்காரரான பில் சால்ட் 1.50 கோடி ரூபாய் என்கிற அடிப்படை விலையில் .பி.எல் ஏலத்தில் பங்கேற்றிருந்த வேளையில் அவரை எந்த ஒரு ஐபிஎல் அணியும் ஏலத்தில் எடுக்காதது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும்.


                              தவறான வீரரை வாங்கிய  பஞ்சாப்

சஷாங்க் சிங் என் 32 வயதுதுடுப்பாட்ட வீரரை  20 கோடி என்ற அடிப்படை விலையில் வாங்கியது பஞ்சாப்.ஆனால், வாங்கிய சில நிமிடங்களிலேயே, தாங்கள் வாங்க நினைத்த வீரர் இவர் இல்லை எனவும், அதனை மாற்றிக் கொள்ள முடியுமா எனவும் பஞ்சாப் அணி கேட்டுக் கொண்டது சர்ச்சையானது.

அந்தக் குறிப்பிட்ட வீரருக்கான ஏலம் நிறைவடைந்துவிட்ட படியால், ஏலத்தை மாற்ற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப் அணியின் இந்த நடவடிக்கை இணையத்தில் வெகுவாக விமர்சிக்கப்பட்டது.

  சஷாங்க் சிங் என்ற 19 வயது இளம் வீரரை வாங்கவே தாங்கள் திட்டமிட்டதாகவும், அதே பெயரில் இருந்த வேறு ஒரு வீரரை தவறாக வாங்கி விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.ஆனால், புதிதாக வந்த வீரரையும் தாங்கள் வரவேற்பதாகத் தெரிவித்திருக்கிறது பஞ்சாப் அணி. இந்த ஐபிஎல் ஏலத்தில் ஹர்ஷல் படேல், ரைலி ரூசௌவ் மற்றும் கிரிஸ் வோக்ஸ் உள்ளிட்ட வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.