Friday, September 30, 2022

அரசியலில் பெண்களின் பங்களிப்பு

 உலக அரசியலில் அதிகாரம்  மிக்க பிரதமர், ஜனாதிபதி பதவிகளில் உள்ள  பெண் அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு சில நாடுகளில்  பெண்கள் ஜனாதிபதியாக  இருக்கிறார்கள். அவர்கள்  பொம்மை போன்றுதான் செயற்படுகிறார்கள். ஆண்களுக்கு நிகராக  பெண்கள் சகல துறைகளிலும்  முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். அரசியலில்  பெண்களின் வகிபாகம்   மிகவும்  குறைவாக  உள்ளது.

உலக அரசியலுக்கு முதல் பெண்  பிரதமரைத் தந்த இலங்கையில் பெண் அரசியல்வாதிகலின்  பங்களிப்பு மிகவும் குறைவாக  உள்ளது. பெண்  பிரதமரையும், பெண்  ஜனாதிபதியையும் உலகுக்குக் கொடுத்த நாடு  எனும் பெருமை  இலங்கைஉள்ளது. அந்த  இரண்டு  மதிப்பார்ந்த பதவிகளில் தாய் ஸ்ரீமாவும்மகள் சந்திரிகாவும்    இருந்தார்கள். இலங்கையில் அதிகரம்  மிக்க  அமைச்சுப் பதவியில் பெண்கள் யாரும்  இருக்கவில்லைசுகாதாரம், மகளிற் Pஓஓன்ற அமைச்சுகள்தான்  பெண்கலுக்காக  ஒதுக்கப்பட்டன.

 அரசியலில் பெண்களுக்கு அதிக  இடம்  ஒதுக்கபப்ட வேண்டும் என்பதில் மாற்ருக் கருத்தி இல்லை.அதற்குரிய  இடத்தை அரசியல் கட்சிகள்  ஒதுக்குவதில்லைபோரட்டங்களின் போது  பெண்கள்  முன்னின்று செயற்படுவார்கள். முன்னணியில் நின்ரூ போராடும்  பெண்களை திட்டமிட்டு கொச்சைப் படுத்தும் காரியங்களும் கனகச்சிதமாக நடை பெறுகின்றன.

 

அரசியலில் மக்கள் பங்கேற்பு அல்லது மக்களின் அரசியல் பங்குபற்றல் என்பது ஜனநாயகத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.மக்களின் அரசியல் பங்கேற்பு அதிகம் இருக்க வேண்டும் என்பது 'மக்கள் அரசியலைப் பற்றி அதிகம் சுதந்திரமாகப் பேசுவதும் அதிகளவில் சுதந்திரமாக அரசியல் பிரசாரங்களை மேற்கொள்வதும்' என்ற குறுகிய பொருளில் தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அரசியலில் விரும்பிய கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்வது நிச்சயமாக ஓர் அரசியல் உரிமையாகும். ஆனால் அரசியல் பங்கேற்பு என்பது மக்கள் அரசியல் ரீதியாக எப்போதும் அதிகளவில் ஓடித்திரிவதல்லஅரசியலிலும் போராட்டங்களிலும்  பெண்கள்  மிக  முக்கிய இடத்தை வகிக்கிறார்கள்.அரசியலில்  பெண்களுக்கக  ஒதுக்கப்பட்ட இடம் போதாது  என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது

அரசியலில் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க விரும்புவதாகவும், எனவே 50% பெண் அரசியல் பிரதிநிதித்துவத்தை நியமனப் பட்டியலில் கட்டாயப்படுத்துமாறும்  பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண் முஸ்லிம் அரசியல் செயற்பாட்டாளர்கள்  பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து    கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மனைவியும், அரசியல் செயற்பாட்டாளருமான பேரியல் அஷ்ரப் இது தொடர்பாக    கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையிலிருந்து சுமார் 16 முஸ்லிம் பெண் அரசியல் செயற்பாட்டாளர்கள் பிரதமர் குணவர்தனவை சந்தித்து பெண் பிரதிநிதித்துவத்தை உயர்த்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

"நாங்கள் நியமனப் பட்டியலில் பெண் பிரதிநிதித்துவத்தை 50% உயர்த்துமாறு குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்தோம், அவரிடமிருந்து எங்களுக்கு சாதகமான பதில் கிடைத்தது," என்று அவர்   கூறினார்.முஸ்லிம் பெண்களை அரசியலுக்கு வரச் செய்வது மிகவும் கடினம் என்ற பொதுவான கருத்து சில நபர்களிடையே இருப்பதாக ஃபெரியல் அஷ்ரப் குறிப்பிட்டார்.

முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டால், அவர்களது நியமனப் பட்டியலில் காலியிடங்கள் இருக்கும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். முஸ்லிம் பெண்கள் அரசியலுக்கு வருவது மிகவும் கடினம் என்ற கருத்தும் குறிப்பிட்ட சிலரிடையே உள்ளது. இது பொதுவான கருத்து. சில நபர்களின் கூற்றுப்படி, பெண் நியமனப் பட்டியல் கட்டாயத் தேவையாக மாறினால், அவர்களின் பட்டியல் முழுமையடையாது.வேட்புமனுவில் முஸ்லிம் பெண்கள் இருப்பது சில கட்சிகளின் நலன்களுக்கு எதிரானது என்றும், எனவே இந்தக் கட்சிகள் அதை கட்டாயமாக்க வேண்டாம் என்று விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் பெண்கள் எப்படி உணருகிறார்கள் என்பதை குணவர்தனவுக்கோ அல்லது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அணுக முடியாது. முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களின் கருத்துக்களுக்கு மட்டுமே அவை வெளிப்படுகின்றன. எனவே, பிரதமரை சந்தித்து, இந்த கருத்து முற்றிலும் தவறானது என்றும், அரசியலுக்கு வர தயாராக உள்ளோம் என்றும் தெரிவிக்க வந்தோம்,'' என்றார்.

இதேவேளை, பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்காதபட்சத்தில் கட்சிகளை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என பிரதிநிதிகள் வலியுறுத்தியதாக மன்னார் மகளிர் அபிவிருத்தி சம்மேளனத்தின் இணை நிறுவனர் ஷிரீன் அப்துல் சாரூர்  தெரிவித்தார்.

தற்கால உலகில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கருத்தாடல்களில் ஒன்றாக பெண்களைப் வலுப்படுத்தல் என்ற அம்சம் உள்ளது. இன்றைய சமூதாயத்தில் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அந்த பிரச்சினைகள் இல்லாமல் செய்யப்படும் போது மாத்திரமே பெண்களுக்கான பூரண சுதந்திரம், உரிமை என்பன கிடைக்கப்பெறும். இன்று அதிகமாக பல துறைகளிலும் பெண்கள் வலுப்படுத்தப்பட வேண்டியவர்கள். பெண்கள் அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் மாற்றங்களுடன் வலுப்படுத்தப்பட வேண்டும்.

2018 இல் 25 சதவீதம் பெண்களுக்கான ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டனஇது கடந்த உள்ளுராட்சி தேர்தல் முறைமையில் பரவலாக பேசப்பட்டாலும் பெண்களின் அரசியல் பங்குபற்றல் வீதம் ஓரளவு அதிகரித்துள்ளது. இலங்கையில் மொத்தமாக 52.01% பெண்கள் உள்ளனர். அதில் 5.3%பாராளுமன்றத்திலும், 4.5% மாகாண சபையிலும், 1.9% உள்ளுராட்சி சபையிலும் பெண்களின் பங்கேற்பு கடந்த காலத்தில் இருந்ததை காணலாம். இன்று உள்ளுராட்சி சபையிலும், மாகாண சபையிலும் கடந்த காலங்களில் செய்த திருத்தம் காரணமாக சபைகளில் 25% இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எனினும் கடந்த தேர்தலில் அது முழுவதுமாய் வெற்றி அளிக்கவில்லை. எனினும் கடந்த காலத்தினை விட அதிகரித்துள்ளதை ஒப்பிட்டு அறிந்து கொள்ள கூடியதாக உள்ளது. குறிப்பாக கடந்த தேர்தலில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 22.2%, பெண்களளுக்கான பிரதிநிதித்துவம் கிடைத்தது. இது கடந்த காலத்தை விட பாரிய மாற்றம் என்றே குறிப்பிட வேண்டும்.

இலங்கையில் அரசியலில் பிரவேசித்த சொற்பளவிலான பெண்களின் அரசியல் பிரவேசம் திடீரென உருவானது ஆகும்.இந்த நாட்டில் தலைவிகளாக வந்த பெண்கள் கணவன் அல்லது தந்தை அரசியலில் சிறந்து விளங்கியதனூடாக வந்தவர்கள்தான். ஆட்சியில்  இருந்த சிறிமாவோ அம்மையார், சந்திரிக்கா அம்மையார் போன்றோர் அவ்வாறானதொரு பின்னணியில் இருந்துதான் வந்தார்கள். பெண்கள் அதிகம் அரசியலில் பங்கேற்காமல் இருப்பதற்கு இலங்கையில் காணப்படும் சமூக இறுக்கமே காரணமாகும். அந்த இறுக்கம் பெண்களை அதிகளவு அரசியலில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பதில்லை.

 இலங்கையில் 1989 தொடக்கம் 2020 வரையான தேர்தலின்படி பெண்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் அளவு மிகக் குறைவாக உள்ளது. 20 வருட காலத்தில் பெண் பிரதிநிதித்துவம் அதிகரிக்கவில்லை. குறிப்பாக 10 சதவீதத்தை கூட தாண்டவில்லை. 2004  தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் பாராளுமன்றத்திற்கு 5.8% ஆனவர்களே தெரிவானார்கள். இது இன்றுவரை மாறாப்பெறுமானமாக இருக்கிறது. அந்தவகையில் 1989ஆம் ஆண்டு 5.8% ஆனவர்களும்,  1994ஆம் ஆண்டு  5.3%ஆனவர்களும்,  2000ஆம் ஆண்டு  4.0% ஆனவர்களும், 2001ஆம் ஆண்டு  4.4% ஆனவர்களும்,  2004ஆம் ஆண்டு  5.8% ஆனவர்களும், 2010 ஆம் ஆண்டு 5.8%ஆனவர்களும், 2015ஆம் ஆண்டு 5.8%ஆனவர்களும், 2020இல் 5.3% பாராளுமன்றத்திற்கு பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதில் 94% ஆனவர்கள் ஆண்களாக தெரிவு செய்துள்ளனர். இதனால் பெண்கள் பங்கேற்பதற்கான தேவை இலங்கையில் அதிகமாக உள்ளதை காணலாம்

அரசியலில் பெண்களி முன்னிலைப் படுத்துவதற்கான கட்டமைப்பை சகல அரசியல் கட்சிகளும்  உருவாக்க  வேண்டும்.

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 35

தமிழ்த்திரை உலகின் முடி சூடா மன்னர்களான சிவாஜி  கணேசனும், எம்.ஜி.ஆரும்  மிக இலகுவாக அந்தக் கிரீடத்தைக் கைப்பற்றவில்லை.  நாட மேடையில் இருந்து கதாநாயகனாக திரை உலகில் காலடி  வைத்த்வர் சிவாஜி. சிறு சிறு வேடங்களில் நடித்து கதாநாயகனால மிளிர்தவர் எம்.ஜி.ஆர்.  கதாநாயகனாக முதல் படத்தில் நடிகும்போதெ இருவருக்கும்  பல ரூபங்களில் எதிர்ப்புகள்  கிளம்பின. படத்தைக்  கைவிடப்போகிறார்கள், கதநாயகனை மாற்றப் போகிறார்கள்  போன்ற தகவல்களால்  இருவரும் பயந்து பயந்துதான் நடித்தர்கள்.

1946-ம் ஆண்டு தீபாவளியன்று ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த  ‘ஸ்ரீமுருகன்’ மற்றும்  டி.ஆர்.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த ‘வித்யாபதி’ ஆகிய இரு படங்களும்  திரைக்கு வந்தன. அதுவரையில் ஒரே நிறுவனம் தயாரித்த இரு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவந்ததே இல்லை. ஆகவே, இந்தியாவில் அப்படிப்பட்ட சாதனையைச்  செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையை ஜுபிடர் பிக்சர்ஸ் பெற்றது. இரு படங்களும் படுதோல்வியடைந்தன.

  ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் கதாசிரியராக மிகச் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்த்  ஏ.எஸ்.ஏ.சாமி. அவருக்கு ஒரு படத்தை இயக்குகின்ற வாய்ப்பை கொடுக்க முடிவெடுத்த ஜுபிடர் பிக்சர்ஸ் அதிபர்களான சோமுவும், மொகிதீனும் ஒரு நாள் ஏ.எஸ்.ஏ.சாமி அவர்களை அழைத்து அவரிடம் மனம் விட்டுப் பேசினார்கள்.

நஷ்டமைந்திருக்கும் நிறுவனத்தைத் தூக்கி நிமிர்த்த வேண்டும் இது உங்களது முதல்படம். எம்து ஒப்பந்தத்தில் உள்ள நடிகர்களை வைத்து படத்தை இயக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார்கள். அதற்கு ஒப்புக்க்கொண்ட சாமி "ராஜ குமாரி" எனும் கதையை  எழுதினார்.  திரைக்கதையைக் கேட்ட  ஜூபிடர் சோமுவும் ,மொகிதீனும் தங்கள்  முடிவை அடியோடு மாற்றிக் கொண்டனர். ”கதை நன்றாக இருக்கிறது. ஆனால், இந்தக் கதையை நமது கம்பெனி நடிகர்களை வைத்து எடுத்தால் நிச்சயமாக எடுபடாது. அதனால் கதாநாயகனாக பி.யு.சின்னப்பா அவர்களையும் கதாநாயகியாக டி.ஆர்.ராஜகுமாரியையும் ஒப்பந்தம் செய்து விடுவோம்..” என்றார்கள். எம்.கே.தியாகராஜா பாகவதரும், பி.யு.சின்னப்பாவும் அந்தக் கால கட்டத்தில் தமிழ்ப் பட உலகில் இருந்த இரண்டு  சூப்பர் ஸ்டார்களாக வலம் வந்தனர். ஆனால், சாமியின் எண்ண ஓட்டம் வேறு மாதிரியாக இருந்தது.

எனக்கு பி.யு.சின்னப்பாவும், டி.ஆர்.ராஜகுமாரியும் வேண்டாம். உங்களதுஸ்ரீமுருகன்படத்திலே சிவனாகவும், பார்வதியாகவும் நடித்த ராமச்சந்திரனையும் மாலதியையும்  நீங்கள் ஒப்பந்தம் செய்து தாருங்கள்  போதும்..” என்றார்.

அந்தக் கதைக்காக பெரிய நடிகர்களை  ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் விரும்பிய போதும் சாமியின் மனதில் எம்.ஜி.ஆர் தான் இருந்தார்.

.எஸ்..சாமி அப்படி சொன்னவுடன்  சோமு அவர்களுக்கும் மொகிதீன் அவர்களும் அவர் சொன்னதை அப்படியே ஒப்புக் கொள்ளவில்லை. “இது நீங்கள் டைரக்ட் செய்யப் போகும் முதல் படம். அதில் பி.யு.சின்னப்பாவும், டி.ஆர்.ராஜகுமாரியும் நடித்தார்கள் என்றால் வெற்றி நிச்சயம். செலவைப் பற்றி கவலைப்படாமல் நாங்களே பெரிய நடிகர்களை ஒப்பந்தம் செய்யலாம் என்று சொல்லும்போது நீங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்..?” என்று .எஸ்..சாமியிடம் கேட்டனர்.

ராமச்சந்திரனையும், மாலதியையும் வைத்துக் கொண்டு இந்தப் படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக்க முடியும்  என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி இருக்க எனக்கு எதற்கு மிகப் பெரிய நட்சத்திரங்கள்..?” என்று .எஸ்..சாமி சொன்னவுடன்உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கும்போது அதில் குறுக்கிட நாங்கள்  விரும்பவில்லை. உங்கள் விருப்பப்படியே   படம் எடுங்கள்என்று இயக்குனர் .எஸ்..சாமிக்கு தயாரிப்பாளர்கள் இருவரும் பச்சைக் கொடி காட்டினார்கள்.

ராஜகுமாரிபடத்துக்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றிருந்த எஸ்.எஸ்.சுப்பையா நாயுடு தனது  மிக நெருங்கிய நண்பரான   எம்.ஜி.ஆருக்கு  அந்த இனிய செய்தியைச் சொன்னார். எம்.ஜி.ஆர் சந்தோஷப்படவில்லை   சாயாஎன்றொரு  படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, பல நாட்கள் நடித்த பின்னர் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காயத்தின் வடு அந்த அளவிற்கு அவர் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. “.எஸ்..சாமி உங்களது நெருங்கிய நண்பர்தானே. ஆகவே அவரிடமேராஜகுமாரிபட நாயகன் நீங்கள்தானா என்பதைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்என்றார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு..எஸ்..சாமியை, எம்.ஜி.ராமச்சந்திரன் சந்தித்தபோதுராஜகுமாரிபடத்தின் நாயகன் அவர்தான் என்பதை உறுதிப்படுத்தினார் அவர்.

ராஜகுமாரிபடம்தான் கதாநாயகனாக எம்.ஜி.ஆருக்கு முதல் படம் என்பதால் எம்.ஜி.ஆருக்கு அந்தப் படத்தில் சம்பளம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் என்று முடிவு செய்யப்பட்டது . அதே படத்தில் இன்னொரு முக்கியமான பாத்திரத்தில் நடித்த டி.எஸ்.பாலையாவுக்கு எம்.ஜி.ஆரின் சம்பளத்தைப் போல நான்கு மடங்கு சம்பளம் தரப்பட்டது

பின்னாளில் எம்.ஜி.ஆர்.அவர்களோடு திரையுலகில் மிக நெருக்கமாக இருந்த பலர் இந்தராஜகுமாரிபடத்தில் அவரோடு பணியாற்றினார்கள். எம்.ஜி.ஆர். நடித்து பதினாறு படங்களை இயக்கிய எம்..திருமுகம் அந்தப் படத்தில் உதவி எடிட்டராக பணி புரிந்தார்.


 எம்.ஜி.ஆரை வைத்து அதிகமான படங்களைத் தயாரித்த நிறுவனம் என்ற பெயரைப் பெற்ற தேவர் பிலிம்ஸ் அதிபரான சாண்டோ எம்.எம்..சின்னப்பா தேவர்ராஜகுமாரியில்தான் முதன்முதலாக எம்.ஜி.ஆரோடு நடித்தார். எம்.ஜி.ஆர் அவர்களின் பெரும்பாலான படங்களில் தவறாமல் இடம் பெற்ற இன்னொரு நடிகரான எம்.என்.நம்பியார் எம்.ஜி.ஆரோடு இணைந்து நடித்த முதல் படமும் இதேராஜகுமாரிதான்.கலை உலகில் மட்டுமின்றி அரசியலிலும் எம்.ஜி.ஆர். அவர்களோடு இணைந்து பல ஆண்டுகள் பயணம் செய்த கலைஞர் மு.கருணாநிதி  எம்.ஜி.ஆரோடு இணைந்து பணியாற்றிய முதல் படமாகவும்ராஜகுமாரிஅமைந்ததுகலைஞர் கருணாநிதி  அந்தப் படத்திலே பணியாற்றக்  காரணமாக அமைந்தவர் பிரபல பாடகரான சிதம்பரம்.எஸ்.ஜெயராமன். ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தஉதயணன்என்ற திரைப்படத்துக்கு இசையமையக்க இவர்  ஒப்பந்தமானார்.அது தொடர்பாக அடிக்கடி ஜுபிடர் பிக்சர்சுக்கு வந்தபோது .எஸ்..சாமி அவர்களோடு அவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது.

என் மைத்துனரான மு.கருணாநிதி திராவிடர் கழகத்தில் இருக்கிறார். இப்போதுகுடியரசுபத்திரிகையிலே பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர் மிகச் சிறந்த எழுத்தாற்றால் கொண்டவர். சந்தர்ப்பம் வரும்போது அவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்என்று ஒரு முறை தன்னிடம் சிதம்பரம் ஜெயராமன்  கூறியதை நினைவில் வைத்துக் கொண்டிருந்த .எஸ்..சாமி, தனக்குராஜகுமாரிபடத்தை இயக்குகின்ற வாய்ப்பு கிடைத்ததும் தன்னுடன் இணைந்து வசனம் எழுத வரும்படி கலைஞர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார்.

கோவைக்கு சென்ற கலைஞர் கருணாநிதி,  .எஸ்..சாமியை சந்தித்தார்.  கலைஞர் கருணாநிதிக்கு ஏற்கனவே பல  நாடகங்களை எழுதிய அனுபவம் இருந்ததால் .எஸ்..சாமி  சொன்ன காட்சிகளுக்கு எல்லாம் உடனுக்குடன் அவர் வசனங்களை  எழுதிக் கொடுத்தார். வசனம் எழுதுவதில் அவருக்குள்ள ஆற்றலைப் பார்த்து அசந்து போன .எஸ்..சாமி முழு திரைப்படத்திற்கும் அவரையே வசனம் எழுதச் சொன்னார்.

சதி லீலாவதிபடத்திலே எம் ஜி ஆருக்கு நிச்சயமாக ஒரு வாய்ப்பு தந்தே ஆக வேண்டும் என்று எம்.கே.ராதா அவர்கள் போராடியதைப்போலராஜகுமாரிபடத்திலே தனது நண்பரான சின்னப்பா தேவருக்கு ஒரு  வாய்ப்பினைப் பெற்றுத் தரப் போராடினார் எம்.ஜி.ஆர்.‘ராஜகுமாரிகதையின்படி  ராணிக்கு ஒரு மெய்க்காப்பாளன் இருந்தான். அந்த மெய்க்காப்பாளனிடம் சண்டையிட்டு கதாநாயகன் அவரை  வெல்கின்ற  காட்சியிலே  எம்.ஜி.ஆரோடு  நடிக்க  மிகப் பெரிய பயில்வான் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாளரான சோமு. இறுதியில் எம்.ஜி.ஆரின் பிடிவாதம் வென்றது.

ராஜகுமாரிபடத்தின்  தயாரிப்பாளர்களான சோமுவுக்கும்,    மொகிதீனுக்கும்  படத்தை எடுத்த வரையில் திரையிட்டுக் காட்டினார் இயக்குநர் .எஸ்..சாமி.    படம் மிகச் சிறப்பாக அமைந்திருப்பதாக அவர் எண்ணினார். ஆகவே படத்தைப் பார்த்துவிட்டு முதலாளிகள் இருவரும் தன்னை நிச்சயம் பாராட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தார் அவர்.  ஆனால் அவரது எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக படத்தின் முதலாளிகள் இருவரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் இருவருக்குமே படம் பிடிக்கவில்லை.

முந்தைய இரு படங்களும் தோல்வியடைந்துள்ள நிலையில் இன்னொரு தோல்விப் படம் கொடுக்க வேண்டுமா என்று ஒரு முறைக்கு இரு முறை யோசித்துக் கொள்ளுங்கள்என்று தன்னுடைய பங்குதாரரான சோமுவிடம் கூறினார் மொகிதீன். அவர் அப்படிக் கூறியவுடன் சோமு மிகப் பெரிய குழப்பத்துக்கு ஆளானார்.

இன்னொரு தோல்விப் படத்தை தங்களது நிறுவனம் தாங்காது என்று அவருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் அதே சமயம்ராஜகுமாரிபடம் நிறுத்தப்பட்டால் முதன் முதலாக அந்தப் படத்திலே இயக்குநராக அறிமுகமாகும்  .எஸ்..சாமி, அந்தப் படத்தில் கதானாயகனாக நடித்து வரும் ராமச்சந்திரன் ஆகிய இருவரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடுமே என்று யோசனை செய்த அவர், அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு வித்தியாசமான ஒரு முடிவை எடுத்தார்.

எப்படியும் பாதி படத்துக்கும் மேலாக எடுத்துவிட்டோம். மீதமுள்ள நான்காயிரம் அடி படத்தையும் எடுத்துவிட்டுப் போட்டுப் பார்ப்போம். அதற்குப் பிறகும் படம் பிடிக்கவில்லை என்றால் யார் கண்ணிலும் காட்டாமல் படத்தை தூக்கிப் போட்டு விடலாம்என்பதுதான்  மொகிதீனிடம் அவர்  சொன்ன முடிவு.

எம்.ஜி.ஆர்., .எஸ்..சாமி ஆகிய இருவரின் எதிர்காலத்தை மனதில் கொண்டு மொகதீன் அவர்களும் சோமுவின் முடிவை ஏற்றுக் கொள்ளராஜகுமாரிபடத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தது.

பலபோராட்டங்களை சந்தித்துவிட்டு திரைக்கு வந்தராஜகுமாரிதிரைப்படம் மிகப் பெரிய வெற்றியைக் குவித்தது.அந்தப் படம்தான்  தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்களின் பட்டியலில்  ஒரு நிரந்தரமான  இடத்தை  எம்ஜிஆருக்கு பெற்றுத் தந்தது.