Monday, February 17, 2020

பிகில் தந்த திகில்


தென் இந்தியாவின் முன்னணி நட்சத்திரமான விஜயை வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய விதம் சினிமாவைத் தாண்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும் அடிக்கடி விஜயைச் சீண்டிப் பார்க்கின்றன.   வருமானவரித்துறை அதிகாரிகள் விஜயினுடைய வீட்டில் சோதனை நடத்திய அதேவேளை வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்த அவரை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மல்லையா,  பிரேமானந்தா போன்றோர் வெளிநாடு செல்லும்வரை கண்ணை மூடிக்கொண்டிருந்த இந்திய அரசாங்கம் குற்றவாளியைப் போல விஜயை நடத்தியதை பொதுமக்களும் அரசியல்வாதிகளும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

பிகில் திரைப்படத்துக்கு வாங்கிய பணத்துக்கு வருமான வரி கட்டவில்லை என்று விஜய் மீது குற்றம் சாட்டப்பட்டது. இரண்டு நாட்கள் துதுவித்துருவி நடத்திய விசாரணையில் அவர் வீட்டில் இருந்து எந்த ஒரு ஆவணமும், பணமும் கைப்பற்றப்படவில்லை. இரண்டு நாட்கள் வெளிப்புறப்படப்பிடிப்பு தடைப்பட்ட பின் தொடர்ந்து நடைபெறுகிறது.  புலி படம் வெளியான போதும் விஜய்யின் வீட்டில் வருமானவருத்துறையின சோதனை செய்தனர். அப்போதும் எதுவும் அகப்படவில்லை.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே விஜயின் படங்கள் பல சிக்கல்களைச் சந்தித்தன. கடந்த சில வருடங்களாக விஜயின் படங்கள் அனைத்தும் மிகுந்த போராட்டத்தின் பின்னரே வெளியாகின. கதைத் திருட்டு அல்லது அரசியல் பழிவாங்கல் ஆகியவற்றின் காரணமாக விஜயின் படங்கள் சோதனைக்குள்ளாகின. தன்னுடைய படங்கள் பிரச்சினைக்குட்பட்டபோது  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். இப்போது முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வத்தைச் சந்தித்தார். அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்துகான ஆதரவு நிலைபட்ட விஜய் ஒருகாலத்தில் எடுத்தார். தலைவா பட  பிரச்சினையின் பின்னர் னது முடிவை மாற்றி விட்டார்.

ராகுல் காந்தியை விஜய் சந்தித்தபோது இளைஞர் அணித் தலைவராகிறார், லோக்சபா எம்பியாகிறார் என செய்தி வெளியானது.மோடியின் பார்வையில் இருந்தும் விஜய் தப்பவில்லை. மோடியும் அவரைச் சந்தித்தார். யாருடைய வலையிலும் சிக்காமல் படத்தில் நடிப்பதிலேய கவனத்தைச் செலுத்துகிறார் விஜய். ஆனால், விஜயை முதலமைச்சராக்கியே தீருவேன் என்பதில் அவருடைய தகப்பன் தீவிரமாக இருக்கிறார்.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராகவும், டிஜிட்டல் இந்தியாவை எதிர்த்தும் விஜய் வசனம் பேசியதால் தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் விஜய்க் எதிராக அறிக்கை விட்டனர். நெய்வேலியில் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பாரதீய ஜனதாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்செய்தனர். தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத கட்சி, தென் இந்தியாவில் செல்வாக்குள்ள நடிகரை எதிர்த்து போராட்டம் செய்வது வியப்பாக உள்ளது. சர்கார் படத்தில் இலவச பொருட்களை உடைத்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விஜயை எதிர்த்தது.

சினிமா மீதான அடக்கு முறை இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது. கல்கியின் அலை ஓசை படம் தடை செய்யப்படப்போகிறதென்ற  செய்தி அன்று பரபரப்பாகப் பேசப்பட்டது.  திராவிடக் கழகக் கொள்கைகள் உள்ள பாடல்கள், நாடகங்கள், சினிமாக்கள் அன்றைய காங்கிரஸ் அரசால் தடை செய்யபட்டன.

ரஜினிக்கு எதிராக வருமனவரித்துறை தாக்கல் செய்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. வட்டிக்குப் பணம் கொடுத்ததை ரஜினி ஒப்புக்கொண்டுள்ளார். விஜயையினுடைய வீட்டில் இருந்து எவையும் கைப்பற்றப்படவில்லை ஆனாலும், வருமானவரித்துறை அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது. இது அரசியல் பழிவாங்கலல்ல என பாரதீய ஜனதாக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். உள்ளூராட்சித் தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். இதுவும் அரசின் கண்களை  உறுத்தியுள்ளது.
விஜயின் சினிமாக்குரலை முடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனைப் பற்றியெல்லாம் கவலைப் படாத விஜய் படப்பிடிப்பில் தீவிர கவனம் செலுத்துகிறார். மேடையில் விஜய் தொன்றும் நாளை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது சகலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 பிகில் படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், அதற்கு பண உதவி புரிந்த அன்புச்செழியன் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என்பனவற்றிலும்  வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். அங்கிருந்து ஆவணங்களும் ,பணமும் கைப்பற்றப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.  இராமநாதபுர மாவட்டம், பம்மனேந்தல் கிராமத்தைச்சேர்ந்த அன்புச்செழியன்  வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டார். அங்கிருந்து மதுரைக்கு இடம் பெயர்ந்தார். மதுரை அன்பு எனும் பெயரில் பிரபலமானார். சினிமாவில் நுழைந்ததும் பைனான்சியர் அன்புச்செழியனானார். அமைச்சர்களின் பினாமியாக அன்புச்செழியன் இருபதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்ரியும் வருமானவரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திரைப்படம் தயாரிக்கத் தேவையான பணத்தைக் கொடுக்கும் அன்புச்செழியன் அதனை வசூலிக்கும் முறை மோசமானது. மணிரத்தினத்தின் சகோதரரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜி.வெங்கடேஸ்வரனின் தற்கொலைக்கு அன்புச்செழியந்தான் காரணம் எனக்குற்றம் சாட்டப்பட்டது. அன்ப்ச்செழியனிடம் வட்டிக்குப் பணம் வாங்கியதால் தான் மிரட்டப்பட்டதாக நடிகை ரம்பா  வெளிப்படையாகத் தெரிவித்தார். திரைப்படத் தயாரிப்பாளர் தங்கர்ச்சுவை மிரட்டியதாக 2004 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அன்புச்செழியன் பிணையில் விடுதலையானார்.

2017 ஆம் ஆண்டு      விஜய் சேதுபதியின் அத்தை மகன் தற்கொலை செய்தார்.  அதற்கு அன்புச்செழியன்தான் காரணம் என கடித எழுதி வைத்தார்.  அது தொடர்பாக அன்புச்செழியன் மீதும் அவரது முகாமையாளர் மீதும்  வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. முகாமையாளர் கைது செய்யப்பட்டு பினையில் விடுதலையானார். முன் பிணை பெற்ற அன்புச்செழியன் , அமைச்சர் ராஜுவின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அரசியல் செல்வாக்கு மிக்க அன்புச்செழியனையும் விஜயையும் ஒன்றாக எதர்கு விசாரணை செய்கிறார்கள் என்ற மர்மத்துக்கான விடை எப்போது  கிடைக்குமோ தெரியாது.

Thursday, February 6, 2020

இந்தியாவின் இமாலய இலக்கை விரட்டி வென்ற நியூஸிலாந்து


ஹமில்டனில்   நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள்  போட்டியில்  வெற்றி பெற்ற நியூஸிலாந்து புதிய சாதனை படைத்தது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நான்கு விக்கெற்களை இழந்து 347ஓட்டங்கள் எடுத்தது. 347 எனும் இமாலய இலக்கை நியூஸிலாந்தினால் நெருங்க முடியாது  என அனைவரும் எண்ணியிருந்த வேளை 48.1 ஓவர்களில் ஆறு  விக்கெற்களை இழந்து 348  ஓட்டங்கள் குவித்த நியூஸிலாந்து வெற்றி பெற்றது.

இந்திய அணியில் ஜாதவ், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றனர். இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா, ஆகிய இருவரும் காயம் காரணமாக அணியில் இடம் சேர்க்கப்படவில்லை.இடம்பெற்றார்கள். ஒருநாள் கிறிக்கெற்றுக்கு  அறிமுகமான  பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகிய இருவரும்   ஆர ம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர்.

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழல் நிலவியபோதும் புதிய தொடக்க ஜோடியான மயங்க் அகர்வால் - பிரித்வி ஷா ஆகிய இருவரும்  தமது இடத்தை உறுதி செய்வதற்காக துடிப்புடன் விளையாடினார்கள். இந்த ஜோடி 50 ஓட்டங்களைச் சேர்த்தபோது பிரித்விஷா 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  மயங் அகர்வாலுடன்  கோலி ஜோடி சேர்ந்தார். மயங் அகர்வால் 31 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ஷ்ரேயாஸ் ஐயார், கோலியுடன் இணைந்தார்.  ஷ்ரேயஸ் ஐயர் ஆரம்பத்தில் மிகவும் தடுமாறினார். நிதானமாகவேஓட்டங்கள் சேர்த்தார்.  ஒன்பதாவது ஓவரில் இணைந்த இந்த ஜோடி 25-வது ஓவரின் முடிவில் பிரிந்தது. 51 ஓட்டங்கள் எடுத்த கோலி ஆட்டமிழந்தார்.  இந்திய அணி இரண்டு விக்கெற்களை இழந்து 134 ஓட்டங்கள் எடுத்தது.  கோலியும், ஷ்ரேயஸ் ஐயரும் இணைந்து 102 ஓட்டங்கள் எடுத்தனர். ஸ்ரேயாஸ் ஐய்யருடன், ராகுல் களம் புகுந்தார். எந்த இடத்தில் ஆடச்சொன்னாலும் அசத்தாமல் விலையாடும் ராகுல் தனக்கே உரிய பாணியில் விளையாடினார்.

  66 பந்துகளில் அரை சதமெடுத்தார் ஷ்ரேயஸ் ஐயர். விரைவாக ஓட்டங்கள் எடுப்பார் என்கிற நம்பிக்கையில் தான் இந்திய அணி நிர்வாகம் ராகுலை 5-ம் நிலை வீரராகக் களமிறக்குகிறது. அந்த நம்பிக்கையை இந்த முறையும் ராகுல் வீணாக்கவில்லை. 35-வது ஓவரில் சோதி பந்துவீச்சில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் அடித்தார். பிறகு செளதி வீசிய ஓவரிலும் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்கள் அடித்தார். செளதி வீசிய 40-வது ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தார் ஐயர். 40-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 3 விக்கெற் இழப்புக்கு 251 ஓட்டங்கள் எடுத்தது.

ஐயரும், ராகுலும் பிரமாதமாக விளையாடியதால் இன்னொரு 100 ஓட்டங்கள் கூட்டணி இந்திய அணிக்குக் கிடைத்தது. 2015-க்குப் பிறகு முதல்முறையாக 3-வது, 4-வது விக்கெட்டுகளுக்கு இந்திய அணி 100 ஓட்டங்களைக் கடந்தது.  இவர்கள் இருவரும் சேர்ந்து 136 ஓட்டங்கள் எடுத்தனர். தனது முதலாவது ஒரு நாள் சத்தை அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் 103 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மணிஷ் பாண்டேக்குப் பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்த ஜாதவ்,  ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். ராகுலும் ஜாதவும் கடைசி 5 ஓவர்களில் அதிரடியாக விளையாடி  56 ஓட்டங்கள் சேர்த்தார்கள்.  ராகுல் 64 பந்துகளில் 6 சிக்ஸர்இ 3 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்களும் ஜாதவ் 1 சிக்ஸர்  3 பவுண்டரிகளுடன் 26 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்திய அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணி 280 ஓட்டங்களுக்கு மேல் இலக்கை விரட்டியதில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெல்லும் என்கிற நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான குப்திலையும்,நிக்கோல்ஸ்சையும் 15 ஆவது ஓவர் வரை இந்திய வீரர்களால் பிரிக்க முடியவில்லை. இவர்கள் இருவரும் 85 ஓட்டங்கள் சேர்த்தார்கள். 32 ஓட்டங்களில் குப்தில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த  ப்ளண்டல் ஒன்பது ஓட்டங்களுடன் வெளியேறினார். ரெய்லர், நிக்கோல்ஸ் ஜோடி விளையாட்டை நியூஸிலாந்தின் பக்கம் திருப்பியது.

82 பந்துகளில் 78 ஓட்டங்கள் எடுத்த நிகோல்ஸை கோலி ரன் அவுட் செய்தார். இது ஒரு அற்புதமான ஆட்டமிழப்பு. ரெய்லர், லதாம்     கூட்டணி  இந்தியாவின் சவாலுக்கு பதிலடி கொடுத்தது. இவர்கள் இருவரும் விரைவாக ஓட்டங்களைக் குவித்தனர். குல்தீப் யாதவ்,  ஷர்துல் தாக்குர் ஆகிய இருவருடைய ஓவர்களையும் குறிவைத்துத் தாக்கினார்கள்.   தாக்குர் வீசிய 40-வது ஓவரில் டெய்லரும் லதமும் 22  ஓட்டங்கள் எடுத்தார்கள். 48 பந்துகளில் 2 சிக்ஸர்கள்  8 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் எடுத்த லதம்இ குல்தீபின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  இவர்கள் இருவரும் இணைந்து 124 ஓட்டங்கள் எடுத்தனர்.

73 பந்துகளில் சதமடித்தார் டெய்லர். ஷமி வீசிய 46-வது ஓவரில் நீஷம் 9 ஓட்டங்களிலும் கிராண்ட்ஹோம்  ஒரு ஓட்டத்துடனும்  ஆட்டமிழந்தார்கள். இதனால் ரி20 ஆட்டங்களில் ஏற்பட்டதுபோல நியூஸிலாந்து அணி மீண்டும் தடம் புரளுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் டெய்லர் கடைசிவரைக் களத்தில் இருந்து அணியைப் பத்திரமாகக் கரை சேர்த்தார்.

   48.1 ஓவர்களில் 6 விக்கெற் இழப்புக்கு 348 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. டெய்லர் 109, சான்ட்னர் 12 ஓட்டங்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஷர்துல் தாக்குர் 9 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து 80 ஓட்டங்கள் கொடுத்தார். குல்தீப் யாதவ்  10 ஓவர்களில் 2 விக்கெட் எடுத்து 84 ஓட்டங்கள் கொடுத்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது நியூஸிலாந்து அணி. 2-வது ஒருநாள் போட்டிபெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெறுகிறது.

Tuesday, February 4, 2020

இளையோர் உலகக்கிண்ணம் இறுதிப்போட்டியில் இந்தியா


  

தென் ஆபிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெற் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடிய இந்தியா  10 விக்கெற்றால்  வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி  பெற்றது. 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி 8வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதித்தது

. போர்ட்செப்ஸ்ரூமில் நடந்த முதல் அரையிறுதியில் நாணயச் சுழற்சியில் வெற்ரி பெற்ற பாகிஸ்தான் முதழ்லில் துடுப்பெடுத்தாடியது.
 


பாகிஸ்தான் அணிக்கு ஹைதர் அலி,ஹுரைய்ரா ஜோடி  ஆரம்ப்த்த் உடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். சுஷாந்த் பந்துவீச்சில் நான்கு ஓட்டங்கள் எடுத்த ஹீரையா ஆட்டமிழந்தார். பிஷ்னாயின் சுழற்பந்தில் ஓட்டம் எடுக்காது பகத் ஆட்டமிழந்தார்

ஹைதர் அலியும் கப்டன் ரோகைல் நாசிரும்  அணியை மீட்க முயற்சித்தனர்.  56 ஓட்டங்கள் எடுத்த ஹைதர் அலி, ஜெய்ஸ்வாலின் பந்தி ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பாகிஸ்தானின் வீர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். நான்கு விக்கெற்களை இழந்து 146  ஓட்டங்கள் எடுத்த பாகிஸ்தான்  26  ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெற்களை இழந்தது.

கப்டன் நாசிர் அதிகபட்சமாக 62 ஓட்டங்ன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் 172 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா சார்பில் சுஷாந்த்  மூன்று விக்கெற்களையும், கார்த்திக் தியாகி, ரவி பிஷ்னாய்  ஆகியோர் தலா இரண்டு  விக்கெட் ற்களையும் வீழ்த்தினர்.


13 எனும் இலகுவான இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், சக்சேனா ஜோடி நல்லதொரு கொடுத்தது. இருவரும் அவ்வப்போது பவுண்டரி அடிக்க ஓட்ட எண்ணிக்கை சீராக உயர்ந்தது.

இந்திய அணி 35.2 ஓவர்களில்  விக்கெற் இழப்பின்றி 176 ஓட்டங்கள் எடுத்து  10 விக்கெற் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜெய்ஸ்வால்  105 ஓட்டங்களும்,சக்சேனா  59 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இளையோர் உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா ஏழாவது முறையாக  இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Monday, February 3, 2020

நியூஸிலாந்தில் சாதித்தது இந்தியா



நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ரி20 போட்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 5  போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றியுள்ளது. நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 5-ஆவதும் , கடைசியுமான டி20 ஆட்டம்  ஞாயிற்றுக்கிழமை மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறவில்லை.   ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்தியா விளையாடியது.  நாணயச்சுழற்சியில்  வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 163  ஓட்டங்கள் எடுத்தது.

கேஎல் ராகுல்,சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன்   இரண்டு ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுலுடன்  ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார்.  இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோஹித் சர்மா 35 பந்துகளில் 3 பவுண்டரி,2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் கேஎல் ராகுல் 45  ஓட்டங்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். கேஎல் ராகுல் ஆட்டமிழக்கும்போது இந்தியா 11.3 ஓவர்களில் 93  ஓட்டங்கள் எடுத்திருந்தது.
 60 ஓட்டங்கள் எடுத்த  காயம் காரணமாக ரோஹித் வெளியேறினார். அப்போது இந்தியா 138  ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதன்பின் நியூஸிலாந்தின் நேர்த்தியான பந்து வீச்சுஇந்திய வீரர்களைத் தடுமாறவைத்தது. ,ர் இந்தியாவால் ஓட்டங்கள் குவிக்க இயலவில்லை 

19 ஓவர்களில் இந்தியா மூன்று விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை டிம் சவுத்தி வீசினார். முதல் பந்தை சிக்சருக்கும், 2-வது பந்தை பவுண்டரிக்கும் விரட்டினார் மணிஷ் பாண்டே. அதன்பின் நான்கு பந்தில் ஐந்து ஓட்டங்களே அடித்தனர். கடைசி ஓவரில் 15 ஓட்டங்கள் அடிக்க இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள்  எடுத்தது.. ஷ்ரேயாஸ் அய்யர் 31 பந்தில் 33  ஓட்டங்களுடனும், மணிஷ் பாண்டே 4 பந்தில் 11  ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் குகலின் 4 ஓவரில் 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்

164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி  20 ஓவர்களில் ஒன்பது விகெற்களை இழந்து 156 ஓட்டங்கள் எடுத்தது.ஏழு விக்கெற்களால் தோல்வியடைந்தது.  . அந்த அணிக்கு தொடக்கம் படுமோசமாக அமைந்தது. முதல் விக்கெட்டாக கப்தில் வெறும் 2  ஓட்டங்களுக்கு பூம்ரா வேகத்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து  அதிரடி காட்டிய கோலின் முன்ரோ 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் ஓவரில் போல்டானார். அடுத்து களமிறங்கிய டாம் புரூஸும் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 17 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து,சைஃப்ர்ட்டுடன் ராஸ் டெய்லர் இணைந்தார். இந்த இணை தொடக்கத்தில் விக்கெட்டைப் பாதுகாத்து விளையாடியது. இதன்பிறகு, ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் இருவரும் அதிரடிக்கு மாற முயற்சித்தனர்.
இந்த சூழலில் இந்திய அணி ஷிவம் துபேவை பந்துவீச அழைத்தது. இவருடைய ஓவருக்கு முன் நியூஸிலாந்து அணி 9 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 64 ரஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், 10-வது ஓவரை வீசிய துபே 34 ஓட்டங்களை வாரி வழங்கினார். இதனால், இந்த ஓவரின் முடிவில் நியூஸிலாந்து அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களை எட்டி வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டை எளிதாக்கியது. வெற்றி பெற ஒரு ஓவருக்கு 7-க்கும் குறைவான ஓட்டங்களே தேவை என்ற நிலை ஏற்பட்டது. எனவே, ஆட்டம் மீண்டும் நியூஸிலாந்து பக்கம் திரும்பியது.
ஆனால், இந்திய அணி கடந்த இரண்டு ஆட்டங்களைப்போல் விடாமுயற்சியோடு ஆட்டத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 29 பந்துகளில் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து வந்த சைஃபர்ட் அரைசதம் அடித்த கையோடு சரியாக 50 ஓட்டங்களுக்கு சைனி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் இந்திய அணியின் வெற்றிக்கான கதவைத் திறந்தது. அடுத்த ஓவரில் பூம்ரா யார்க்கரில் மிட்செல் 2 ஓட்டங்களுக்கு போல்டானார்.

இதனால், அனுபவ வீரரான ராஸ் டெய்லர் மீது பொறுப்பும் நெருக்கடியும் அதிகரித்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டும் மீண்டும் உயரத் தொடங்கியது.
இந்நிலையில், ஷர்துல் தாக்கூர் மீண்டும் ஒரு அற்புதமான ஓவரை வீசி நியூஸிலாந்துக்கு இரட்டை அடி கொடுத்தார். இந்த ஓவரின் 3-வது பந்தில் சான்டனரையும், 5-வது பந்தில் குக்லெயினையும் ஆட்டமிழக்கச் செய்தார் ஷர்துல் தாக்கூர்.
இந்த நெருக்கடியிலேயே அடுத்த சைனி வீசிய 18 ஆவது  ஓவரின்   முதல் பந்தில்     53 ஓட்டங்களில்  ராஸ் டெய்லர் ஆட்டமிழந்தார். இதனால், கடைசி இரண்டு ஓவர்களி நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 24 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில்இ 19-வது ஓவரை வீசிய பும்ரா வெறும்  மூன்று ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து,நியூஸிலாந்து அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த சௌதியின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
  நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்தது. இந்த ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார். இதில், சோதி இரண்டு இமாலய சிக்ஸர்கள் அடித்து அச்சுறுத்தினார்.  என்றாலும்  13 ஓட்டங்கள் மட்டுமே நியூஸிலாந்து அணிக்கு கிடைத்தது.

    இந்திய ஏழு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணித் தரப்பில் பும்ரா மூன்று விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனிஇ ஷர்துல் தாக்கூர்ஆகியோர்  தலாஇரண்டு விக்கெட்டுகளையும்  . வாஷிங்டன் சுந்தர்  ஒரு  விக்கெட்டையும்  கைப்பற்றினர்.

கடந்த இரண்டு ஆட்டங்களில் கையில் இருந்த வெற்றி வாய்ப்புகளைத் தவறவிட்டு சூப்பர் ஓவர் வரை எடுத்துச் சென்று தோல்வியடைந்த நியூஸிலாந்து அணிஇ இந்த ஆட்டத்திலும் அதே தவறைச் செய்துள்ளது. தொடக்கத்தில் திணறினாலும், சைஃப்ர்ட்,டெய்லர் இணை நியூஸிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கியது. ஆனால், முக்கியமான கட்டத்திலும் நெருக்கடியை எதிர்கொள்வதிலும் திணறிய நியூஸிலாந்து இந்த தொடரின் 5-வது ஆட்டத்திலும் தோல்வியடைந்தது.