Tuesday, April 30, 2019

ஐபிஎல்லில் உள்ளே வெளியே பலமான போட்டி


டெல்லி கெப்பிட்டல்ஸ், சென்னை ஔப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் பிளே ஃஓவ் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளன. இன்னமும் இரண்டு அணிகள் பிளேஃஓவ் சுற்றுக்குச் செல்வதற்கான  போட்டியில் ஏனைய ஆரு அணிகளும் முட்டி மோத உள்ளன. ஏழாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸும் எட்டாவது இடத்தில் இருக்கும் பெங்களூர் ரோயல் சலஞ்சும் இன்ரு மோத உள்ளன. எட்டு அணிகளும் 12 போட்டிகளில் விளையாடி விட்டன. மிகுதியான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஃஒவ் சுற்றில் விளையாடும்  முனைப்பில் ஆனைய ஆறு அணிகளும் உள்ளன.

ராஜஸ்தான் ஐந்து   வெற்றி, ஏழு தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது.   நாலு வெற்றி எட்டுத் தோல்விகளுடன் 8  புள்ளிகளுடன் பெங்களூர் எட்டாவது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் வெற்றி பெற்றால் மற்றைய அணிகளின் வெற்ரி தோல்விகளுடன் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது.

பிளே ஃஒவ் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற டெல்லியும் ,சென்னையும் மோதுவதால் தோல்வியடையும் அணிக்கு இப்போதைக்குப் பாதகமில்லை. சன்ரைஸ் ஹைதராபாத்தை எதிர்த்து விளையாடும் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் பிளே ஃஒவ் சுற்றுக்குத் தகுதி பெற்று விடும்.  ஹைதராபாத் வெற்றி பெற்றால் அடுத்த போட்டிவரை இரண்டு அணிகளும் காத்திருக்க வேண்டி வரும்.

பஞ்சாப், கொல்கத்தா ஆகிய இரண்டும் தலா 10 புள்ளிகளுடன் முறையே ஐந்தாம் ஆறாம் இடங்களில் இருக்கின்றன. வெற்றி பெற வேண்டிய கட்ட்டாயத்தில் இரண்டு அணிகளும் மோத உள்ளன. வெற்றி மட்டுமல்லாது ஓட்ட விகிதமும் இருந்தால் மட்டுமே பிளே ஃஒவ் சுற்றுக்குச் செல்வதற்கு ஏதுவாக அமையும். முதல் போட்டியில் தோல்வியடையும் பிளே ஃஒவ் சுற்றில் இல்லாத அணிகள் வெளியேற வேண்டிய நிலை உள்ளது.


சீனா உதயகுமாரின் தமிழினி


சிறுகதை,கவிதை, கட்டுரை,இலக்கியம்,சினிமா  என பல்துறையில் தனது ஆளுமையை வெளிப்படுத்தும் சமரபாகு சீனா உதயகுமார், தமிழினி எனும் சிறுகதைத்தொகுப்பை அண்மையில் வெளியிட்டுள்ளார். தினக்குரல், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளிலும், ஜீவநதி,ஞானம்,ஒளி அரசி ஆகிய சஞ்சிகைகளிலும் பிரசுரமான 11 சிறுகதைகள் இத் தொகுப்பில் அடங்கி உள்ளன.

ஒன்பதாம் வகுப்பில் ஒன்றாகப் படிக்கும் தமிழினிக்கும் குமரனுக்கும் இடையிலான மென்மையான நட்பை காதல் என தவறாக வெளிப்படுத்தும் விதமாக "தமிழினி" எனும் கதை அமைந்துள்ளது.

காதலைப்பற்றி எதுவும் அறியாத  மாணவப் பருவத்தில் ஏற்படும் அன்பை காதல்,  என ஊரவர்கள் நினைக்கிறார்கள். பாடசாலையில் கடமையாற்றும்  ஆசிரியர்களும் நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாது தமிழினியையும் குமரனையும் தண்டிக்கிறார்கள். அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல்தாக்கத்தை இப்படியான ஆசிரியர்கள் அறிவதில்லை.

 தமிழினியையும் குமரனையும் சுற்றி இருப்பவர்களின் சந்தேகப்பார்வை அவர்களுக்கிடையிலான   நெருக்கத்தை அதிகரித்தது. பாலர் பருவம் தாண்டி இளமைப்பருவம் ஆரம்பிக்கையில் பெற்றோரே அவர்கள் இருவரையும் நெருங்கவிடாமல் தடுத்தனர். தமிழினி பெற்றோருடன் கிளிநொச்சிக்கு சென்றதும் அவர்களுக்கிடையிலான நட்பு முடிவுக்கு வந்தது. தமிழினியின் தொடர்பு முடிந்து விட்டது என குமரன் நினைத்திருக்கையில், 17 வருடங்களுக்குப் பின்னர்  வீதியில்  குமரனைக் கண்டாள் தமிழினி. குமரனால் முதலில் தமிழினியை அடையாளம் காண முடியவில்லை.

 குமரனின் வீட்டுக்குச் சென்ற தமிழினி அவனின் மனைவியையும் பிள்ளைகளையும் சந்தித்து அன்பாகப் பழகுகிறாள். தனது பழைய காதலைப்பற்றி தனது மனைவி ஏதும் கேட்பாளோ எனத்தெரியாது குமரன் கலங்குகிறான். அவள் கடைசிவரைகேட்காமல் தந்து கண்ணியத்தை வெளிப்படுத்துகிறாள். ஆசிரியையான தமிழினி ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை என   குமரனின் மனதில் எழுந்த அதே கேள்வி வாசகர் மனதிலும் தோன்றுகிறது. அதை எப்படிக் கேட்பது எனத் தெரியாது குமரன் தடுமாறியபோது தமிழினி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

இரண்டு பெண் பிள்ளைகளை குமரனுக்கும் அவனது மனைவிக்கும் அறிமுகப்படுத்தினாள் தமிழினி. தடுப்பு முகாமில் அனாதையாக நின்ற அநாதைச் சிறுமிகள் அவர்கள். அங்குள்ள வசதியற்ற பிள்ளைகளுக்கு  தனது வீட்டில் இலவசமாக பாடம் சொல்லிக்கொடுக்கிறாள் தமிழினி. தமிழினியின் செய்கைகளால் அவள் மீதிருந்த மதிப்பு குமரனுக்கு அதிகரிக்கிறது.

பணம் இருந்தால் எல்லாத்தையும் வாங்கிவிடலாம் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. காசிருந்தால் வாங்கக்கூடாதவற்றையும் வாங்கலாம் என்பதை “ காசிருந்தால் வாங்கலாம்” என்ற கதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கனடாவில்  வசிக்கும் தனது மகன் ரஞ்சித்துக்கு யழ்ப்பாணத்தில் ஒரு பெண்ணைப்பார்த்து மணமுடித்து  வைக்கிறாள்  பொன்னி. மருமகள் மாலியுடன் கல்கிசையில் வாங்கிய வீட்டில் குடியிருக்கிறாள் பொன்னி. மகன் ரஞ்சித் கனடாவுக்குத் திரும்பச்சென்றுவிட்டான். மருமகள் மாலி கனடாவுக்குச் செல்லும்வரை அவளுக்குத் துணையாக கல்கிசை வீட்டில் பொன்னியும் இருந்தாள்.

கர்ப்பமான மாலிக்கு எய்ட்ஸ் இருப்பது இரத்தப் பரிசோதனையில் தெரிய  வருகிறது. அழகு சொரூபியான மாலி தப்புச் செய்திருப்பாள் என பொன்னி நினைக்கிறாள். தன்னையும் மகனையும் ஏமாற்றிய விரக்தியில் மாலியைத் துன்புறுத்துகிறாள். மாலி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இதனை அறிந்த ரஞ்சுத் தாய்க்கு ஒரு கடிதம் அனுப்புகிறான். அக்கடிதத்தில் தனக்கு எய்ட்ஸ் இருப்பதை வெளிப்படுத்துகிறான்.
வெளிநாட்டு மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும்போது இரத்தப் பரிசோதனை அவசியம் என்பதை கதாசிரியர் அழுத்தமாகச் சொல்லியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகத்தை பட்டும்படாமலும் நாசூக்காக ”சுயம் உரிப்பு” எனும் கதை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் வக்கிரம் கொண்ட குடும்ப உறவுகளால் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கையில் உருவாகும் பிரச்சினைகளையும் “சுயம் உரிப்பு” சொல்கிறது. அறியாத வயதில் தெரியாமல் செய்யும் தவறுகள் எதிர்கால வாழ்க்கையிலும் தொடரும் எனக் கருதும் கயவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் கதை.

கணவனை இழந்த ஆசிரியையும் அவளின் மகளும் சந்திக்கும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை “அம்மா” எனும் கதையின் வாயிலாக அறியமுடிகிறது. கணவன் இல்லாத இளம் ஆசிரியையின் மீது சக ஆசிரியருக்கு ஏற்படும் காதல்.  அம்மாவா காதலனா என்ற புதிருக்கு மகள் எடுக்கும் முடிவு யதார்த்தமாக இருக்கிறது.

“மகேஸ்வரன் சேர்” போன்ற ஆசிரியரை இப்போது காண்பது அரிது. ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை “மகேஸ்வரன் சேர்வெளிப்படுத்துகிறது. முன்னைய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடயேயான உறவு பாடசாலையையும் தாண்டி வீடுவரை இருந்ததை ஆசிரியர் அழகாகத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், வாழ்வாதார உதவிகளை வழங்கும் அரச அலுவலகத்தில் தினசரி நடப்பதை ”கிறுக்கல் சித்திரங்கள்” எனும் கதைமூலம் பகிரங்கப்படுத்தியுள்ளார் சமரபாகு சீனா உதயகுமார். அரசாங்க வேலை கிடைக்கும் வரை கடமையைப்  பற்றிச் சிந்திப்பவர்கள் வேலை கிடைத்ததும் முழுமையாக மாறிவிடுவார்கள் என்பதை ”கிறுக்கல் சித்திரங்கள்துலாம்பரமாக தெரியப்படுத்துகிறது.

புலமைப்பரிசில் பரீட்சையில்  உள்ள நுண் அரசியலை “புலமைப்பரிசில்” எனும் கதையின்வாயிலாக தெரியக்கூடியதாக உள்ளது. சமரபாகு சீனா உதயகுமார் பிரபல கணித ஆசிரியர் ஆகையினால் புலமைப்பரிசில் பரீட்சையில் மறைந்துகிடக்கும் கட் அவுட் புள்ளியை இலகுவாக எடுத்துரைத்துள்ளார். அவர் ஒரு  ஆசிரியராக இருப்பதனால் பாடசாலைப் பிரச்சினைகள் பலவற்றை தனது கதையின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.

சாதிப் பிரச்சினையால் வடமராட்சியில் கைகூடாத காதலர்கள் பல ஆண்டுகள் கடந்து வெளிநாட்டில் திருமண பந்ததில் இணைவதை “மைதிலி”  கதை சொல்கிறது. புதிய கோணத்தில் புதிய சிந்தனையில் கதை நகர்த்தப்பட்டுள்ளது
.
சமூகத்தில் நடைபெறும் அவலங்களை சகிக்க முடியாத சமரபாகு சீனா உதயகுமார் தனது கதைகளினூடு வெளிப்படுத்தி  நியாயம் கேட்கிறார்.
வர்மா.
தினகரன்  28/04/2019

Sunday, April 28, 2019

தேர்தல் முடிவுக்குமுன்னரே தோல்வியை ஒப்புக்கொன்ட எடப்பாடி


தமிழகம், புதுச்சேரி ஆகிய இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே, தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதினெட்டும் நமதே என முழங்கிய எடப்பாடி தகுதி நீக்க அஸ்திரத்தைக் கையிலெடுத்து தனது பதவியைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஸ்டாலின், எடப்பாடி ஆகியோரின் பார்வையில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலைவிட தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவு மிக முக்கியமானது. வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் இடை நிறுத்தப்பட்டிருப்பதால் 39 தொகுதிகளில் மட்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தமிழக சட்ட சபயில் எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. முதலமைச்சர் எடப்பாடி பன்னீர்ச்செல்வத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய தினகரனின் ஆதரவாளர்களான 18 சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கம்  செய்ததால் தனது முதல்வர் கதிரையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. இந்த  நிலையில் தமிழ்கத்தில் காலியாஉள்ள மேலும் நான்கு தொகுதிகளுக்கு மே மாதம் 18 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைப் பெற்றுவிடும். 20 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவது சாத்தியமில்லை.  எட்டுத் தொகுதிகளில் வெற்றி பெற்றால் எடப்பாடியின் அரசு தப்பிப்பிழைக்கும். இல்லையேல் பெரும்பான்மை இல்லாததால் எடப்பாடியின் தலைமையிலான அரசு கவிழ்ந்துவிடும். எட்டுத் தொகுதிகளில் கூட வெற்றி பெறமுடியாது என்பதை எடப்பாடி உணர்ந்துள்ளதால் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகையைக்  குறைத்து பெரும்பான்மை பலத்தை காட்ட நினைக்கிறார்.

கட்சிக்கு விரோதமாகச் செயற்படும்  உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கு சட்டத்தில் இடமுண்டு. சட்டம் ஒரு இருட்டறை என்ற அண்ணாவின் வாசகத்தை தனக்குச் சாதகமாக மற்றுகிறார் எடப்பாடி. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசல கலைச்செல்வம், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகியமூவரும் கடந்த ஒருவருடமாக எடப்பாடியின் தலைமையிலான  அரசை விமர்சித்து தினகரனைப் போற்றி புகழ்ந்து வருகிறார்கள். இதுவரை காலமும் மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்த எடப்பாடி பன்னீர்ச்செல்வம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். எடப்பாடியின் உத்தரவுக்கு அமைய செயற்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொறடா ராஜேந்திரன்,  அவர்கள் மூவரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
கலைச்செல்வம் ரத்தினசபாபதி,பிரபு ஆகிய மூவரும் கட்சிக்கு எதிராகச் செயற்பட்ட புகைப்படம் வீடியோ என்பன ஆதாரமாக சபாநாயகரிடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் ஆறு சட்ட சபைத் தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றால் ஆட்சியைத் தக்க வைக்கலாம் என எடப்பாடி கணக்குப் போட்டுள்ளார். இதேவேளை தமீம் அன்சாரி, கருணாஸ் ஆகியோரையும் பலிக்கடாவாக்கும் எண்ணம் எடப்பாடிக்கு இருக்கிறது.

தினகரனைச் சந்தித்து மலர்க்கொத்துக் கொடுத்து வாழ்த்தியதால் கலைச்செல்வம்,ரத்தினசபாபதி,பிரபு ஆகிய மூவரும் பதவியை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளனர். இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற தமீம் அன்சாரி, நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தியுடன் மேடையில் தோன்றியதை இப்போதைக்கு எடப்பாடி பெரிதுபடுத்தவில்லை. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டால், தாம் தவரு எதுவும் செய்யவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் தான். தப்பு செய்தால் மன்னிக்கும் படி அந்த மூவரும் பதிலளிக்க வாய்ப்பு உள்ளது. அந்தப்பதிலுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கப்போகும் நடவடிக்கைதான் எடப்பாடியின் கரத்தைத் பலப்படுத்தும் காரணியாகப்போகிறது.

கலைச்செல்வம்,ரத்தினசபாபதி,பிரபு ஆகிய மூவருக்கும் எதிராக சபாநாயகர் நடவடிக்கி எடுத்தால், சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாப்பிரேரணையைக் கொண்டு வரப்போவதாக ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சபாநாயகருக்கு எதிராகக்கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லாப் பிரேரணை வெற்றியளிக்கப்போவதில்லை. ஆனால், அப்படி ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால், சில சட்டநுணுக்கங்கள் விவாதத்தின் போதுவெளிப்படும். கலைச்செல்வம்,ரத்தினசபாபதி,பிரபு ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அவர்கள்  நீதிமன்றத்தை நாட மாட்டார்கள். தேர்தலைச் சந்திப்பார்கள் என தினகரனின் ஆதரவாளரான வேலுமணி தெரிவித்துள்ளார். தின்கரனுக்கும் அந்த மூவருக்கும் இடையிலான தொடர்பை இது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

சசிகலாவின் காலில் விழுந்து பதவியைப் பெற்ற எடப்பாடி பழனிச்சாமி, தனது பதவியைக் காப்பாற்றுவதற்காக சசிகலாவை கட்சியில் இருந்து வெளியேற்றினார். தினகரனின் ஆதரவாளர்களை தகுதி நீக்கம் செய்து பதவியைத் தக்கவைத்த எடப்பாடிக்கு இது புதியதல்ல. தமிழக சட்ட சபையில் தடை செய்யப்பட்ட குட்காவைக் காண்பித்த 21 திராவிட முன்னேற்றக் கழக சட்ட சபை உறுப்பினர்களின் மீது உள்ள உருமை மீறல் பிரச்சினையைக் கையில் எடுப்பதற்கும் எடப்பாடி திட்டமிட்டுள்ளார். ஸ்டாலின் உட்பட 21 திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களின் மீது உரிமை மிறல் விசாரணை நடத்தக் கூடாது என நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்தத் தடையை நீக்க முடியுமா என ஆராயும் படி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் எடப்பாடிக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. மாறக காங்கிரஸ் ஆட்சிபீடம் ஏறினால் எடப்பாடியின் பாடு திண்டாட்டம். அதனால் முதலமைச்சர் பதவியை காபாற்ற சகல அஸ்திரங்களையும் பிரயோகிக்க முயற்சி செய்கிறார்.

Thursday, April 25, 2019

ஹைதராபாத்தை விரட்டி வென்ற சென்னை


சென்னை சுப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவற்ருக்கிடையே சென்னைய்ல் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில்  ஆறு விக்கெற் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி  பெற்ற சென்னை கப்டன் டோனி களத்தடுப்பைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய  ஹைதராபாத் 20 ஓவர்களில் மூன்று விக்கெற்களை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது. 19.5 ஓவர்களில்  நான்கு விக்கெற்களை இழந்த சென்னை 176 ஓட்டங்கள் எடுத்து  வெற்றி பெற்றது. இந்த சீசனில் 11 போட்டிகளில் ஒன்பது முறை நாணயச்சுழற்சியில் சென்னை  வெற்றிபெற்றது.

இந்த சீசனில் ஏமாற்றிய மனிஷ் பாண்டே, வட்சன்,ரெய்னா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். சென்னை மைதானத்தின் வெற்றி முகத்தை சுப்பர் கிங்ஸ் மீண்டும் ஒரு முறை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் பிளேஓஃப் தகுதியை சென்னை உறுதி செய்தது. ஹைத்ராபாத் கப்டனின் பாட்டி இரந்ததால் அவர் நியூஸிலாந்துக்குச் சென்று விட்டார். புவனேஸ்குமார் கப்டனாகச் செயற்பட்டார். கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக ஷஹீப் அல் ஹசனும்,  நதீமுக்குப் பதிலாக மணிஷ் பாண்டேயும் விளையாடினார்கள்.
எதிரணி பந்து வீச்சாளர்களை அச்சுறுத்திய வானர், பிறிஸ்டோவ் ஜோடி கலம் இறங்கியது. ஹர்பஜன் வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தை  எதிர்கொண்ட பிறிஸ்டோவ் டோனியிடம் பிடிகொடுத்து ஓட்டமெடுக்காமல் ஆட்டமிழந்தார்.  சென்னை ரசிகர்கள் குதூகலித்தனர். மணிஷ் பாண்டே களம் இறங்கினார். மணிஷ் பாண்டே விரைவில் ஆட்டமிழப்பார் என சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 13.3 ஆவது ஓவர்வரை விக்கெற் எதுவும் விழவில்லை. ஹைதராபாத் 200 ஓட்டங்களை எட்டிவிடும் போல் தோன்றியது. வானர், மணிஷ் பாண்டே ஜோடி சென்னையை சோதித்தனர். 39 பந்துகளில் வானர் அரைச்சதம் அடித்தார். தொடர்ச்சியாக ஐந்தாவது அரைச்சதம். இத்தொடரில் எட்டாவது முறை 50 ஓட்டங்களைத் தொட்டார்.

12 ஓவர்களில் 103 ஓட்டங்கள்.  வானரை முந்திக்கொண்டு மணிஷ் பாண்டே அரைச் சதம் அடித்தார். ஹைதராபாத் 120 ஓட்டங்கள் எடுத்தபோது டேவிட் வானர் ஆட்டமிழந்தார். ஹர்பஜனின் பந்தை டோனியிடம் பிடி கொடுத்து 57 ஓட்டங்கள் எடுத்த வானர் வெளியேற விஜய் சங்கர் உள்ளே வந்தார். சென்னை அணியில் சென்னை வீரர்கள் யாரும் இல்லை. சென்னைப்பையனான விஜய் சங்கர்  சென்னைக்கு எதிராகக் களம் இறங்கினார். 26 ஒட்டங்கள் எடுத்த விஜய் சங்கர் தீபக் சாஹரின் பந்தை ஜடேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.  20 ஓவர்களில் ஹைதராபாத் முன்று விக்கெற்களை இழந்து 175 ஓட்டங்கள் எடுத்தது. 49 பந்துகளுக்கு முகம் கொடுத்த மணிஷ் பாண்டே   மூன்று சிக்ஸர் ஏழு பவுண்டரி அடங்கலாக ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்கள் எடுத்தார். யூசுப் பதான் ஐந்து ஓட்டங்கள் எடுத்தார்.

சென்னையின் களத்தடுப்பு மிக மோசம். மின்னல் வேகத்தில் ஒரு ஓட்டம் இரண்டு ஓட்டங்கள் என ஹைதராபாத் ஓட்டங்களைச் சேகரித்தது. ஆரம்பத்தில் தாராளமாக வாரி வழங்கிய சென்னையில்ன் பந்து வீச்சாளர்கள் கடைசி நேரத்தில் இறுக்கிப்பிடித்தனர். கடசி இரண்டு ஓவர்கலில் 15 ஓட்டங்கள் மட்டும் அடிக்கப்பட்டது.

176 என்ற இலக்குடன்  வட்சனும், டுப்ளிசிஸும் கலம் இறங்கினர். வட்சன் மீது நம்பிக்கை இழந்த சென்னையின் ரசிகர்கள் டுப்பிளிசிஸை எதிர்பார்த்தனர். முதல் ஓவரைச் சந்தித்த வட்சன் ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை. இரண்டாவது ஓவரின் முதல் நான்கு பந்துகளையும் டிபிளிசிஸ் தொடவில்லை. சென்னை ரசிகர்கள் டென்சனானார்கள். 2.5 ஆவது ஓவரில் ஒரு ஓட்டம் எடுத்த டுபிளிசிஸ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததும் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஐபிஎல் ஆரம்பப் போட்டிகளில் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த ரெய்னா, இப்போது  தடுமாறுகிறார். மூன்று ஓவர்களில் எட்டு ஓட்டங்கள். முதலில் ஆட்டமிழக்கப்போவது வட்சனா ரெய்னாவா என ரசிகர்கள் எதிர்பார்த்தபோது இருவரும் அதிரடியாக விளையாடி ஆச்சரியமளித்தனர்.  கலீல் அஹமது, புவனேஷ்வர் குமார்,சந்தீப் சர்மா,,ரஷீத் கான், சாகிப் என ஒருவரையும் விட்டு வைக்காமல் வட்சனும் ரெய்னாவும் விரட்டினார்கள். ரஷீத் கானின் ஓவர்களில் சிக்ஸர் பவுண்டரிகலைப் பறக்கவிட்டு வட்சன் வேடிக்கை காட்டினார்.   முறைத்துக்கொண்ட ராஷீத் கான்,மைதானத்தில் வட்சனின் தோள் பட்டையில் இடித்தார். சிரித்துக்கொண்டே வட்சன் சென்றார். இந்தத் தொடரில் வட்ச்னை வெளியேற்ற முடியாத ரஷ்ஹித் கான் வெறுப்படைந்தார்.

வட்சன், ரெய்னா ஜோடி 45 பந்துகளில் 77 ஓட்டங்கள் எடுத்தது.  38 ஓட்டங்களில் ரெய்னா ஆட்டமிழந்தார். வட்சனுடன் இணைந்த ராயுடுவும் தன் பங்குக்கு அடித்தாடினார்.  53 பந்துகளை எதிர்கொண்ட வட்சன்  ஒன்பது பவுண்டரிகள் ஆறு சிக்ஸர்கள் அடங்கலாக  96 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  வட்சன்   ஆட்டமிழக்கும் போது சென்னை 160 ஓட்டங்கள் எடுத்தது. 17 பந்துகளில் 16 ஓட்டங்கள் அடித்தால் வெற்ரி பெறலாம் என்ற நிலையில் ராயுடுவுடன் கேதார் ஜாதவ் இணைந்தார். இவர்கள் இருவரும் சென்னை ர்சிகர்களின் பொறுமையைச் சோதித்தனர்.
 19.4  ஆவது ஓவரின் சென்னை 175 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை அவசரப்பட்டு தூக்கி அடித்த ராயுடு 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பிராவோ உள்ளே வந்தார். கேதார் ஜாதவ், ஒரு ஓட்டம் அடித்து சென்னைக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். ஆட்ட நாயகன் விருதை வட்சன்  பெற்றார்.

Tuesday, April 16, 2019

வாக்காளரின் விரல் நுனியில் தமிழகத்தின் தலைவிதி.


இந்தியப் பொதுத் தேர்தலால் தமிழக அரசியல்களம் சூடு பிடித்துள்ளது. மத்திய அரசையும் மாநில அரசையும் தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக வாக்காளரின் விரல் நுனியில் உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு ஆளுமைகள் இல்லாத தேர்தல் என்பதால் கட்சிகளை வழிநடத்தும் தலைமைகள் வெற்றி பெற்று தமது தலைமைத்துவத்தை தக்கவைக்க வேண்டிய நிலை உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் ஓய்வு இல்லாது சகல தொகுதிகளிலும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகிய இருவரும் ஆளுக்கு ஒருபக்கமாகச்சென்று பிரசாரம் செய்கிறார்கள்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரிப்பதற்காக தினகரனின் தலைமையிலான சுயேட்சை அணி களம் இறங்கியுள்ளது. சீனானும், கமலும் தமது செல்வாக்கை அறிவதற்காகத் தனியாகத் தேர்தலைச் சந்திக்கின்றனர். பிரபலங்களும் அரசியல் வாரிசுகளும் தேர்தலில் போட்டியிடுவதால் பரப்புரைகள் புதிய பாதையில் செல்கின்றன. கடந்த பொதுத் தேர்தலில்    ஜெயலலிதாவின் வழிகாட்டலில் தமிழகத்தில் 37 தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. இம்முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் மட்டுமே மீண்டும் போட்டியிடுகிரார்கள். அவர்கள் மீண்டும் வெற்றி பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திராவிட முன்னேற்றக்கழகமும் 20தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் யாருமே வெற்றி பெறவில்லை.  ஆகையால் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட அதிகளவான உறுப்பினர்களை வெற்றி பெறவைக்க வேண்டிய கட்டாயம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உள்ளது. இரண்டு பெரிய கட்சிகளும் வாரிசுகளையும் புதியவர்களையும் களம் இறக்கியுள்ளன.
 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளை தினகரன் பிரிப்பார் என்ற கருத்து உள்ளது. கமல்,சீமான் ஆகியோர் தமது செல்வாக்கை கணிப்பதற்கான களமாக பொதுத்தேர்தலை பார்க்கிறார்கள். பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. அக்கட்சியை தமிழ்கத்தில் மலரச்செய்த பெருமை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையே சாரும். எச்.ராஜா, தமிழைசை  ஆகியவர்கள் மீது தமிழக மக்கள் வெறுப்புற்றிருக்கிறார்கள். தமிழிசையை எதிர்த்து கருணாநிதியின் மகள் கனிமொழி போட்டியிடுகிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி,பாரதீய ஜனதாக் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடக்  கட்சி ஆகியன தேர்தலுக்காக அவசரமாகக் கூட்டணி சேர்ந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பாரதீய ஜனதாக் கட்சியையும் ஆட்சியில் ஒருந்து அகற்றுவதற்காகக் கூட்டணி சேர்ந்துள்ளன.
ஆட்சி அதிகாரம் ஒரு கூட்டணிக்கு பக்கபலமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் பதுக்கி வைத்த பணம் பறிக்கப்படுகிறது. ஆனாலும் தமக்குரிய ஆட்சியைத் தீர்மானிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.
தேர்தல்19.அரசியல்,இந்தியா,தமிழகம்

Saturday, April 13, 2019

டோனியைக் கோபப்பட வைத்தவர்


கப்டன் கூல் எனப் பெயர் பெற்றவர் டோனி. எந்தச் சந்தர்ப்பத்திலும் பதற்றப்படாமல், கோபப்படாமல் இருப்பவ்ர். கப்டன் என்றால் டோனியைப்போல இருக்க வேண்டும் என கூறுவார்கள். அப்படிப்பட்ட டோனியே கோபப்படுமளவுக்கு நடுவர் ஒருவர் செயற்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 6 பந்துகளில் 18 ஓட்டங்கள். பென் ஸ்டோக்ஸ் பந்துவீச வந்தார். முதல் பந்தில் ஜடேஜா கீழே விழுந்தாலும் பந்தை ஸ்ட்ரெய்ட் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். அடுத்த பால் நோ பால். ஒரு ஓட்டம் அடித்துவிட்டு ஓடினார் ஜடேஜா.. ஸ்ட்ரைக்கிற்கு வந்தார் டோனி. ஃப்ரீ ஹிட்டில் இரண்டு ஓட்டங்கள் அடித்தார் டோனி. 4 பந்துகளில் 8 ஓட்டங்கள் அடிக்க வேண்டும். டோனி க்ளீன் போல்டு. 43 பந்துகளில் 58 ஓட்டங்கள் அடித்திருந்தார் டோனி. இதில் 32 ரன்கள் ஓடி ஓடி எடுத்தது. சான்ட்னர் க்ரீஸுக்கு வந்தார். ஸ்டோக்ஸ் வீசிய நான்காவது பந்து இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸாக வரை அதை 2 ஓட்டங்களுக்கு அடித்துவிட்டு ஓடினார் சான்ட்னர். இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸாக வந்த பந்தை முதலில் `நோ பால்காட்டிய அம்பயர், லெக் அம்பயரை பார்த்ததும் முடிவை மாற்றிக்கொண்டு `நோ பால்இல்லை என்று மறுத்துவிட்டார். இதனால் Dugout-ல் இருந்த டோனி கடுப்பானார். கைகளை உயர்த்தி `நோ பால்எனச் சத்தம் போட்டவர் ஒரு கட்டத்தில் மைதானத்துக்குள் வந்தார்.

இரண்டு அம்பயர்களுடனும் வாக்குவாதம் செய்தார். நோ பால் காட்டிய அம்பயரை கைகளை நீட்டி பேசிக்கொண்டிருந்தார் டோனி. ஆனால், நோ பாலாக அது அறிவிக்கப்படவில்லை. இதனால் 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை என ஆட்டம் மாறியது. அடுத்த பந்தில் 2 ஓட்டங்கள் அடித்தார் சான்ட்னர். கடைசி பந்தில் 4 ஓட்டங்கள் தேவை. ஆனால், அடுத்த பந்தை வைடாக வீசினார் ஸ்டோக்ஸ். இதனால் கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவை என ஆட்டம் பரபரப்பின் உச்சத்தைத்தொட்டது. இரண்டு ஓட்டங்கள் அடித்தால் ஆட்டம் டை-யாகும், சூப்பர் ஓவருக்குப் போகும் என விறுவிறுப்பு கூடியது. ஆனால், கடைசி பந்தை ஸ்ட்ரெய்ட் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் சான்ட்னர். சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றது. டோனி மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்றார்.

கள நடுவர்களின் முடிவுகள் இந்தத் தொடரில் தொடர்ச்சியாகச் சர்ச்சையாகி வருகிறது. பெங்களுரூ - மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் கடைசிப் பந்தில் நோ பால் வீசப்பட்டும் அதை நடுவர்கள் கவனிக்காமல் விட்டது சர்ச்சையானது. கடைசிப் பந்தில் பெங்களூர் வெற்றிபெற 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.