Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, January 11, 2015

ஜனநாயகத்தை நிலைநாட்டிய வாக்காளர்கள்

  இலங்கை அரசியல் களத்தில்  அசைக்க முடியாத தலைவராக மிளிர்ந்த மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித்தேர்தலில் எதிர்பாரதவிதமாகதோற்ற்கடிகப்பட்டார். மஹிந்தவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் திராணி யாருக்கும் இல்லை  என்றநிலையை எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று மாற்றிக்காட்டி உள்ளன. 2005 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்கவிடமிருந்து ஜனாதிபதிப்பதவியைப் பொறுப்பேற்றபின் அவரின் வெற்றிக்கொடி உயரத்தில் பறக்கத்தொடங்கியது.

மஹிந்த ராஜபக் ஷ்வின்  வெற்றியிலும் தோல்வியிலும் வடக்கு கிழக்கு மக்களின் பங்களிப்பு மிக அதிகம் 2005 ஆம் அண்டு ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிக்காது மகிநதவை ஜனாதிபதியாக்கிய தமிழர்கள் 2015 ஆம் ஆண்டு வாக்களித்து அவரைத்தோல்வியடையச்செய்தார்கள்.மகிந்தவை எதிர்த்து ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிக்கு தமிழ் மக்கள் மத்தியில் எதுவித செல்வாக்கும் இல்லை.மஹிந்தவுக்கு எதிரான வாக்குகளே மைத்ரியை ஜனாதிபதி ஆக்கியது. தமிழிழவிடுதலைப் புலிகள அழித்ததனால் சிங்கள மக்களின் மீட்பராக அவர் கருதப்பட்டார். தேர்தலில் தோல்விகிடையாது என்ற எண்ணமே  மூன்றாவதுமுறை ஜனாதிபதியாகும் ஆசையை அவருக்கு அருக்கூட்டியது.

சகல அதிகாரங்களும் கையில் இருந்ததனால் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாகும் திட்டத்தை வகுத்தார். அதற்கானதடைக்கற்கள் எல்லாவற்றையும் நிறைவேற்று முறை ஜனாதிபதி என்றதோரணையில் அகற்றினார்.காலம் கனிந்து வரும் வேளையில் அவரின் ச்சல்வைக்குள் பத்திரமாக இருந்த மைத்திரி வெளியேறினார்.சந்திரிகா பண்டாரநாயக்க, ரணில் ஆகியோருடன் மைத்திரி கை கோர்த்ததால் மஹிந்தவின் தோல்விப்பாதை ஆரம்பமகியது.

 மஹிந்தவின் வெற்றிக்கணக்கு அழிக்கப்பட்டு தோல்விக்கணக்கு எழுத ஆரம்பிக்கப்பட்டதும்  அவருடன் கூட இருந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியேறத்தொடங்கினர். அரசாங்கத்தில் இருந்து வெளியேறுபவர்களி முக்கிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக அன்றைய ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார். அவர்களை புனிதர்களாக கருதிய எதிரணி  பதிலடி கொடுத்து ஏற்றுக்கொண்டது.  குடும்ப அரசியலுக்கும்,ஊழலுக்கும் எதிராக போரடப்போவதாக அணிமாறியவர்கள் அறிக்கை விட்டார்கள். ஒப்பந்தம் எதுவும் இலலாமல் இவர்கள் அணிமாறி இருக்க மாட்டார்கள் என்பது வெளிவராத இரகசியம்
மகிந்தவை அதிகாரத்தில் இருந்து இறக்கவேண்டும் என முடிவெடுத்த ஜேவிபி எதிரணிகளுடன் எதுவித ஒப்பந்தமும் இன்றி மறைமுக ஆதரவு தெரிவித்தது.இலங்கை அரசியலில் கிங்மேக்கராக ஒருகாலத்தில் விளங்கிய ஜேவிபி மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்பதற்காக ஒதுங்கி நின்று தனியாகப்பிரசாரம் செய்தது.அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்த ரிஷாட்  அரசியல் நிலவரத்தை உணர்ந்து எதிரணிக்குத்தாவினார். ரிஷாட்டைஎதிர்த்து அக்கட்சியில் இருந்து முதலில் வெளியேறியவரை எதிரணி நடுத்தெருவில் விட்டு விட்டது. 

 தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் முடிவெடுகாது காலத்தைக்கடத்தின. தமிழ்மக்களும் முஸ்லிம் மக்களும்  யாருக்கு வக்களிக்கவேண்டும் என முடிவு செய்துவிட்டனர். வாக்காளரின்  ம்னநிலையை தலைமைகளும் உணர்ந்து கொண்டன  மக்களின் மன நிலைக்கு அவர்களும் பச்சைக்கொடி காட்டினர். இந்தத் தேர்தல் முடிவுக்கு முற்று முழுதாக மக்கள்தான் பொறுப்பு  அரசியல் வாதிகள் மக்களின் பின்னால் போய் உள்ளார்கள்.

இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக தமிழ்மககள் எதுவித ஒப்பந்தமும் இன்ன்றி வாக்களித்துள்ளனர்.தமிழ் மக்களின்மீது முன்னைய அரசாங்கம்  அடக்குமுறையைபிரயோகித்தபோது முஸ்லிம் மக்கள்  மெளனமாக அங்கீகரித்தனர். மசூதிகள் தகர்க்கப்பட்டபோதுதான் தமிழர்களின் வலியை அவர்கள் உணர்ந்தார்கள். முன்னைய அரசின் செல்லப்பிள்ளையான பொதுபலசேனாவின் கொடூரம் முஸ்லிம்களை சிந்திக்கத்தூண்டியது. முஸ்லிம் தலைவர்கள் சற்று தாமதமாக முடிவெடுத்தார்கள்.

ஆட்சிமாறிவிட்டது  காட்சிகள் மாறத்தொடங்கிவிட்டன. செயலாளர்கள்  மாறுகின்றனர், அரசதிணக்கள தலைவர்கள் மாறுகின்ற்னர். சிலர் இராஜினாமச் செய்துவிட்டனர்.  சிலர் தப்பி ஓடிவிட்டனர். இன்னும் சில்ர் தப்பி ஓடிவிட்டதாக வதந்தி பரவுகிறது.எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி  மைத்திரியை ஜனாதிபதியாக்கிய தமிழர்களுக்கு  அவர் என்ன செய்யப்போகிறார். அவருடைய 100 நாள்  வேலைத்திட்டத்தில்  தமிழ்மக்களுக்கு சாதகமான செய்திகளெவையும் இல்லை.

ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது மஹிந்த சொன்னவற்றையே கிளிப்பிள்ளைபோல் மைத்திரி திருப்பிக்கூறினார்.  போர்க்குற்ற விசாரணை  இல்லை.வடக்கில் இருந்து இராணுவம்  குறைக்கப்படமாட்டாது இதை எல்லாம் தெரிந்து  கொண்டுதான் தமிழ்மககள் மைத்திரியைத்தேர்வு செய்தார்கள். நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்திய மஹிந்தவுக்கு உரிய கெளரவம் வழங்கப்படும் என ரணில் அறிவித்துள்ளார். அதை எல்லாம் பொருட்படுத்தாது எதிர்ப்புக்க்காட்டி உள்ளனர் தமிழ் மக்கள்.

ஜனாதிபதி மைத்திரியின் முன்னால் பல பிரச்சினைகள் குவிந்து கிடக்கின்றன. ஊழல்,அதிகாரதுஷ்பிரயோகம்,போதைவஸ்து வியாபாரம்,விலைவாசி என்பன் அவருக்குமுன்னல் உள்ள பொதுவான பிரசினைகள்.

அதிஉயர் பாதுகாப்பு என்றபெயரி சுவீகரிகப்பட்ட தமிழ்மக்களின்  நிலம்,வெற்றிக்கொண்டாட்டத்தின் நினைவுச்சின்னங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, குற்றம் சுமத்தப்படாது சிறையில் வாடும் கைதிகளுக்கு நிவாரணம், பொதுமக்களின் இடங்களில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவமுகாம்கள்,,புற்றீசல்கள்போல் முழைத்துள்ள விகாரைகள் இவற்றுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று தமிழ்மக்கள் விரும்புகிறார்கள்.இறந்தவர்களை நினைத்து அழுவதற்குக்கூட மஹிந்த அரசு அனுமதிக்கவில்ல. 

வடக்கு மாகாண்சபை இயங்குவதற்கு போடப்பட்ட முட்டுக்கட்டை நீக்கப்படவேண்டும் என்பதும் தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு இவற்றுக்கெல்லாம் புதிய ஜனாதிபதி என்ன முடிவு எடுக்கப்போகின்றார் என்பதை அறிய உலகம் ஆவலாக உள்ளது. முகாம்களில் வாடுபவர்கள்  தாம் சொந்த இடத்துகுச்செல்லும் நாளை ஆவலுடன் எதிபார்த்துள்ளனர்.

தமிழ்மககளால் தோற்கடிக்கப்பட்டதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.  தனிச்சிங்கள் வாக்குக்களால் மூன்றாவது முறையாகவும் ஆட்சிபீடம் ஏறலாம் என்று நினைத்த மஹிந்தவுக்கு  தமிழ்,முஸ்லிம் வாக்குகள் பதிலடி கொடுத்துள்ளன.எங்களை அரவணைத்தால் ஆட்சியில் இருக்கலாம் என்பதை தமிழ்,முஸ்லிம் மக்கள்  பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்கா,சீனா,இந்தியா ரஷ்யா போன்ற உலக நாடுகள் இலங்கைக்கு உதவிசெய்தாலும் வாக்களிப்பது இலங்கை மக்கள்தான் என்பதை ஜனாதிபதித் தேர்தல் முடிவு வெளிப்படுத்தி உள்ளது.

Saturday, January 3, 2015

அரசியல் அரங்கில் அதிகாரப்போட்டி

இலங்கை சோசலிஸ ஜனநாயக குடியரசின் ஜனாதிபதித் தேர்தல் என்றும் இல்லாதவாறு பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் என ஆளும் தரப்பும் எதிரணியும் சொல்கின்றன. அரசியல் தலைமகளின் குத்துக்கரணங்களை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வது. ஊழலற்ற ஆட்சியை அமைப்பது. குடும்ப ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவது எனும் மூன்று முக்கிய கருத்துக்களுக்கு உடன்பாடு கண்டு எதிரணியின் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் வல்லமை யாருக்கும் இல்லை என்ற என்;ற கருத்தை மைத்திரியின் வரவு ஆட்டம் காணவைத்துள்ளது.  தனது சால்வைக்குள் பாதுகாப்பாக இருந்த ஒருவர், தனக்கு எதிராக புறப்படுவார் என ஜனாதிபதி மஹிந்த கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.
அரசுக்கு எதிரானவர்கள் அனைவருக்கும் புலி முத்திரை குத்துவது வழமையான ஒன்று. மைத்திரிக்கு எதிராக அப்படி ஒரு முத்திரையை குத்த முடியாதுள்ளது. இலங்கையின் புலனாய்வுக் கண்களுக்குத் தெரியாமல், கனகச்சிதமாக பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். பொதுவேட்பாளரைக் களம் இறக்கும் திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பங்கு பிரதானமானது. வேண்டாவெறுப்பாக தனது ஜனாதிபதி பதவியை மஹிந்த் ராஜபக்ஷவிடம் தாரை வார்த்தார் சந்திரிகா பண்டாரநாயக்க. அவருடைய ஒருவருட பதவி சுகமும் நீதிமன்றத்தால் பறிக்கப்பட்டது.
ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறியதும் அரசியலில் இருந்து ஒதுங்கத் தொடங்கினார். மறுபுறத்தில் அவர் மெதுமெதுவாக ஓரங்கட்டப்பட்டார். பண்டாரநாயக்கவின் கட்சி என்ற பரிணாமம் மெதுவாக மறையத்தொடங்கியது. தகப்பன் ஆரம்பித்த கட்சியை திரும்பவும் தனது கையில் எடுப்பதற்கான காலம் வரும்வரை காத்திருந்த அவருக்கு, ஜனாதிபதித் தேர்தல் வரப்பிரசாரமாக அமைந்துவிட்டது.
தேர்தல் தோல்வியில் கின்னஸ் சாதனை என பரிகாசம் செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதித்தேர்தல் புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இருதுருவங்களாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலில் தமது பொது எதிரியான ஜனாதிபதியை பதவியில் இருந்து இறக்குவதற்காக இணைந்துள்ளனர்.
தமிழ்மக்களைப் பகடைக்காயாக்கி சிங்கள வாக்கு வங்கியை அதிகரிக்கும் செயல் இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் தொடர்கதையாக உள்ளது.
பண்டா செல்வா, டட்லி செல்வா, இந்திய - இலங்கை ஒப்பந்தங்கள் எல்லாம் மின்னி மறைந்து போயின. சந்திரிகா, ரணில் ஆகியோரின் சமாதான முயற்சிகள் அப்போதைய எதிரணிகளினால் குழப்பியடிக்கப்பட்டன.
இலங்கையின் பிரதான இரண்டு அரசியல்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலரும், இணைந்து புதிய அரசியல் பாதையை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டாக உடைந்துள்ளன. எஞ்சியிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிரணிக்குத் தாவினர். இன்னும் சிலர் மதில் மேல் பூனையாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நிறைவேற்று அதிகாரம், ஊழல், குடும்ப ஆதிக்கம் என எதிர்க்கட்சிக் கூட்டணி கூறினாலும் சந்திரிகா பண்டாரநாயக்க, ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் தமது அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவே இந்த அரசியல் சதுரங்கத்தை ஆரம்பித்துள்ளனர்.
தான் ஜனாதிபதியாக முடியாவிட்டால் இன்னொருவரை ஜனாதிபதி பதவியில் இருத்தி அவரின் கையாலேயே ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பறிப்பதே ரணிலின் திட்டம்.
ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்றமுடியாது என அன்றைய விமர்சனங்கள் கூறின. விகிதாசார தேர்தல் முறையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது இயலாதகாரியம் என கருதப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குத் தேவையான மூன்றில் இரண்டை வெகுசுலபமாகப் பெற்றுவிட்டார். தற்போது பொதுவேட்பாளரின் வரவால் மூன்றில் இரண்டு ஆட்டம் கண்டுள்ளது.
அரசதரப்பில் இருந்து பலர் எதிரணிக்கு தாவிவிட்டார்கள். எதிரணியிலிருந்த சிலர் அரச தரப்புக்கு பாய்ந்துவிட்டார்கள்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோசம் எதிரணியில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் கட்சியில் இருந்து பலர் எதிரணிக்குத் தாவிவிட்டதால், அவர்கள் புனிதர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இராதாகிருஷ்ணன், திகாம்பரம், ரிஷாட் ஆகியோர் பந்தியில் முந்திவிட்டார்கள். கடிதம் எழுதி களைத்துப்போன ஆனந்த சங்கரி, மைத்திரிக்கு ஆதரவு என்கிறார். அவர் வருவார என இரண்டு தரப்பும் யாரையோ எதிர்பார்கிறது. ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோஷமும் ஒருபக்கத்தில் ஒலிக்கிறது.
ஜனாதிபதிப் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவை அகற்ற வேண்டும் எனக்கூறும் ஜே.வி.பி சரியான வேட்பாளரை இனங்காட்டவில்லை. ஒளித்து விளையாடிய ரவூப் ஹக்கீமும் எதிரணிக்கு தாவிவிட்டார்.
ஆட்சி அதிகாரம் உள்ளவரை அரசியல்வாதிகள் ஆடிக்கொண்டே இருப்பார்கள். அரசியல் அதிகாரம் கைமாறும் போது அவர்கள் மாறிவிடுவார்கள். அரசியல்வாதிகளை நம்பி, கொடி பிடிப்பவர்கள் இரண்டும் கெட்டான் நிலையில் தடுமாற்றத்துடன் முடிவெடுப்பார்கள்.
மக்களை நல்வழிப்படுத்தும் அரசியல் அதிகாரமா, அரசியல்வாதிகளைக் காப்பாற்றும் அரசியல் அதிகாரமா என்பதை முடிவு செய்யும் சந்தர்ப்பம் மகா பொது ஜனங்களுக்கு கிடைத்துள்ளது. ஆள், அம்பு, படை, சேனை என்பன அரசியல்வாதிகளிடம் இருந்தாலும் வெறும் புள்ளடியால் அரசியல் அதிகாரத்தை மாற்றும் சக்தி மக்களிடம் உள்ளது.

Wednesday, April 9, 2014

திசைமாறும் அரசியல் அரங்கம்

இலங்கையில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் ஐ.ம.சு.மு. வெற்றிபெறும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இதற்கு விதிவிலக்காக வடமாகாணம் உள்ளது என்பதனால் பலத்த இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்றது. மேல் மாகாணம், தென் மாகாணம் ஆகியவற்றில் எதிர்பார்த்ததுபோலவே ஆளும் ஐ.ம.சு.மு. வெற்றிபெற்றது. 
பிரசாரம் இல்லாது வெற்றிபெறும் வல்லமை ஐ.ம.சு.முக்கு உண்டு. என்றாலும், தேர்தல் என்றால் பிரசாரம் தேவை என்பதனால் உச்சக்கட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்ட ஐ.ம.சு.முவின் வெற்றி எதிர்பார்த்ததைவிட குறைந்தளவிலேயே உள்ளது. இரண்டு மாகாணங்களிலும் 17 ஆசனங்களை ஆளும் கட்சி இழந்துள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

வாக்குறுதி, தேர்தல் விஞ்ஞாபனம் எதுவுமில்லாது  புலிகளை அழித்த அரசு என்ன மாயையில் இதுவரை வெற்றிபெற்றுவந்த அரசுக்கு இரண்டு மாகாணசபைத் தேர்தல்களும் சற்றுப் பின்னடைவைக் கொடுத்துள்ளன. அபிவிருத்தியில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது நாடு. அதிவேக  விரைவு நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், புதிய வீதிகள் என்பன வெற்றியைத் தேடிதரும் என அரசு நம்பியிருந்தது. 
விமானநிலையம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, சர்வதேச விளையாட்டரங்கு, சர்வதேச விமானநிலையம் என அம்பாந்தோட்டை அபிவிருத்தி கண்டுள்ளது. இந்த அபிவிருத்தியின் பின்னணியில் நடந்த தேர்தலில் கடந்த முறையைவிட இம்முறை குறைந்த வாக்கு விகிதத்தையே ஆளும் கட்சி பெற்றுள்ளது. 


ஐ.ம.சு.மு. மேல் மாகாணத்தில் கடந்த தேர்தலின்போது 64.73 சதவீத வாக்குகளைப் பெற்றது. இம்மு 53.35 சதவீத வாக்குகளைப் பெற்றது. தென் மாகாணத்தில் கடந்த தேர்தலின்போது 67.88 சதவீத  பெற்றது. 58.06 சதவீத வாக்குகளை இம்முறை பெற்றது. யுத்தம் முடிந்து மக்கள் சுதந்திரமாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்கிறார்கள் என அரசு பரப்புரை செய்துவருகிறது. ஆனால், மேற்கும் தெற்கும் அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளன. 

ஆட்சியைப் பிடிப்பதற்காக சிங்களம் மட்டும் சட்டத்தை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கையில் எடுத்தார். சந்திரனுக்குப் போய் என்றாலும் இலவச அரிசி தருவேன் என ஆட்சிபீடம் ஏறினார் அவரின் மனைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க. கொடுமையான யுத்தத்துக்கு முடிவுகட்டப்போவதற்காக சமாதானப்புறாவாக அரியணை ஏறினார் அவர்களின் மகள் சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க. சந்திரிகாவின் சமாதானப் பாதையில் பயணத்தைத் தொடர புறப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து அசைக்கமுடியாத தலைவராக விளங்குகிறார். 

அரசை வீட்டுக்கு அனுப்ப ரணிலும் அவரது சகபாடிகளும் பல தடவைகள் நாள் குறிப்பிட்டும் அவர்களது எதிர்பார்ப்பு எதுவும் நிறைவேறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐ.ம.சு.மு.க்கும் தலையிடியைக் கொடுக்கும் மூன்றாவது சக்தியாக உயர்ந்த ஜே.வி.பி. பலமான எதிர்ப்புகளைக் காட்டிவிட்டு ஓய்ந்துவிடுகிறது. புலிகளை இல்லாமல் செய்த யுத்த வீரர்கள் என்று சிங்கள மக்களால் தலையில் வைத்துக் கொண்டாடப்பட்ட சரத் பொன்சேகா ஓரிரவில் தனது பெருமைகள் எல்லாவற்யும் இழந்தார். அரசியல் அரங்கில் தன்னை முழுமையாக நிறுத்துவதற்கு மிகுந்த பிரயாசைப்படுகிறார்.

தென், மேல் மாகாணசபைத் தேர்தல்கள் ஐ.தே.கவுக்கும், ஜே.வி.பிக்கும் புதிய தெம்பை அளித்துள்ளன. சரத் பொன்சேகாவும் தன்னை ஓர் அரசியல் தலைவராக அடையாளப்படுத்திக்கொண்டார். கணிசமான வாக்குகளையும் அங்கத்தவர்களையும் பெற்றுள்ளார். மூன்று சிங்கள அரசியல் கட்சிகளும் மூன்று திக்கில் நின்று தேர்தலைச் சந்தித்தால் அது ஆட்சி பீடத்திலுள்ள ஐ.ம.சு.முக்கு இலாபமாக இருக்கும். மூன்று கட்சிகளும் ஒன்றிணையாவிட்டால் அவர்கள் நினைப்பது நிவேறாமல் போய்விடும். 
அரசியல் அரங்கில் பல காட்சிகளைக் கண்டு அனுபவப்பட்ட பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என்று சரத் பொன்சேகா கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஓர் அறிவிப்பை ஜே.வி.பி. வெளியிடுவது சாத்தியமில்லை. புதிய அரசை அமைப்பதற்கு பொதுமக்கள் தயாராக இருந்தாலும், அரசியல் கட்சிகள் இப்போதைக்குத் தயாராக இல்லை.




தமிழ் மக்களினதும், முஸ்லிம் மக்களினதும் பார்வை மேல் மாகாணத்தையே நோக்கியது. மேல் மாகாணத்தில் சிங்கள மக்கள் சிறுபான்மையாகிவிட்டனர் என்ற வதந்தியை தேர்தல் பொய்யாக்கியுள்ளது. தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஆட்சிசெய்யும் ஐ.ம.சு.முவின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதை மேல் மாகாணசபைத் தேர்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது. ஐ.ம.சு.முவில் போட்டியிட்ட தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் வாக்குகள் சிதறவில்லை. தமிழ் வாக்காளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள்  காங்கிரஸும் தனித்தனியாகக் களம் கண்டன. இரண்டு கட்சிகளிலும் மூன்று வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். அவை இரண்டும் அமைச்சர்களின் கட்சிகள் என்பதனால் அரசுக்கு எதிரான அணியில் அதன் உறுப்பினர்களைச் சேர்க்க முடியாது.

கூட்டணி சேராது தனித்துத் தேர்தலைச் சந்தித்த மனோ கணேசனின் கட்சி உறுப்பினர்கள் இருவர் வெற்றிபெற்றனர்.  அரசின் பங்காளியாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் தனியாக தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது. 
மேல் மாகாண மக்களும், தென் மாகாண மக்களும் தமது மனதில் இருப்பதைத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டனர். எதிர்க்கட்சியில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது தனிப்பட்ட செல்வாக்கை அறியும் களமாகவே தேர்தல்களை நோக்குகின்றனர். இவர்களின் பிரிவினையால் அரசுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படப்போவதில்லை.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் 54 பேர் தோல்வியடைந்துள்ளனர். பிரமில் கொஸ்தா, ரி.ராஜேந்திரன், பி.ராம், கலாநிதி குமரகுருபரன், நௌசர் பௌசி ஆகியோர் தோல்வியடைந்தவர்களில்  முக்கியமானவர்கள். 

வானதி
 சுடர் ஒளி 06/04/14