Showing posts with label தேவரையாளி. Show all posts
Showing posts with label தேவரையாளி. Show all posts

Monday, June 26, 2023

சூர தரிசனம்


 

யாழ்ப்பாணத்து இனிய நினைவுகள்  8


----------------------

இம்முறை யாழ்ப்பாணம் அனுபவங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை அதில் ஒன்று நான் கண்ட சூர தரிசனம் ஆகும்

சூர தரிசனமா?  என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

. ஆம் அது எனக்கு ஒரு  தரிசனமாகவே இருந்தது

கிழக்கு பல்கலைக் கழகத்தில் இந்து நாகரிகத்துறையில் எம் பில் பட்டம் மேற்கொள்ளும்  வினோகா   எனும் மாணவி தேவரையாளி  இந்து கல்லூரியினை  நிறுவிய சூரன் எனும் பெரியாரையும். அவரின் கல்விப் பணிக ளையும்  ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்

அவருக்கு நானும் ஒரு மேற்பார்வையாளர்

மேற்பார்வையாளரின கடமைகளுள்  ஒன்று  மாணவருக்கு உதவியாக களப்பணியில் ஈடுபடுவ தாகும். ( இதை அவர் செய்யாமலும் விடலாம்)  

 மாணவருடன் கள ஆய்வு வேலைகளில் ஈடுபட இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன்

ஒரு நாளின் பெரும் பகுதியை அதற்கு ஒதுக்கினேன்

அதன்படி அன்று காலை அச்சுவேலி சென்று காரில் விவோகாவை ஏற்றிக் கொண்டுகொண்டு தேவரையாளி இந்துக் கல்லூரி இருக்கும் பகுதிக்குச் சென்றேன்

தேவரையாளி  இந்துக் கல்லூரியில் எம்மைக் காத்துக் கொண்டு நின்றார் சூரனின்  பேரனான ரவி வர்மா அவர்கள்

கல்லூரியின் முன்னால் சூரன் என்னும் பெரியாரின் உருவச்சிலை நீண்டு உயர்ந்து   மிகக்  கம்பீரமாக நின்று. கொண்டு இருந்தது

ஏனைய தமிழ் அறிஞர்களின் சிலைகளைப் போல சூரன் அமர்ந்து  கொண்டிராமல் நின்று கொண்டிருந்தமை எனக்கு ஒரு குறியீடாகக் காணப்பட்டது

யாழ்ப்பாணத்தில் அன்று நிலவிய கல்விச் சமத்துவமின்மைக்கு எதிராக போராடி

ஒரு நிறுவனத்தையே நிறுவிய அவரைப் பற்றி எனக்கு பேராசிரியர் சிவத்தம்பி ஏற்கனவே கூறி இருந்தார்

பேராசிரியர் சிவத்தம்பியின் தந்தையார்  கார்த்திகேசு அங்கே   ஒரு காலத்தில் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் என்ற செய்தியும் எனக்கு தெரியும்

சிறிது நேரத்தில் அங்கு வன்னிய குலம்

ராஜேஷ் கண்ணா

 எஸ் கே லோகநாதன்

வதிரி ரவீந்திரன்

போன்ற புத்திஜீவிகள் வந்து விட்டார்கள்

சிலர் ஏற்கனவே நான் அறிந்தவர்கள்

உரையாடல் தொடங்கியது

கலந்துரையாடல் மெருகேற மெருகேற  அகழ்வாய்வில் அசாதாரணமான பொருட்கள் மேற்கிளம்புவது   போல பல புது புது விஷயங்கள் வெளிவர தொடங்கின

மண்ணைத் தோண்டி அகழ்வாய்வு செய்வது போல மனிதர்களின் மனதை தோண்டியும் அகழ்வாய்வு செய்ய வேண்டும்

மண் தரும் உண்மைகள் போல மனமும் பல உண்மைகளைத் தரும்

ஆங்கிலம் கற்பிக்கும் சைவப் பாடசாலைகளை ஆறுமுகநாவலர் ஆரம்பித்த காலத்தில்  அப் பாடசாலைகளில் பலருக்கும் படிக்கும் வாய்ப்பு ஏற்படவி ல்லை 

படிக்கும் வாய்ப்பும் சிலருக்கு மறுக்கவும்  பட்டது

முக்கியமாக விளிம்பு நிலை மக்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை

அதனை ஓரளவு போக்கியவர்கள் கிறிஸ்தவர் மிஷனரிகளே

இந்த நேரத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் பாடசாலைகளை சைவ  அறிஞர்கள் புரவலர்கள்  துணையுடன் ஆரம்பித் தார்கள்

அத்தகைய. ஒரு  பாடசாலை ஏனைய ஆங்கிலப் பாடசாலைகளில் கற்கும் சந்தர்ப்பம் ஏற்படாத மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது

அந்தப் பாடசாலையின் முன்னோடியாகதா திகழ்ந்தது தேவரையாளி இந்து கல்லூரி என்பது புரிய வந்தது

தேவரையாளி இந்துக் கல்லூரி நிறுவிய சூரனின் கல்விப் பணிகளை  ஆறுமுகநாவலரின் பணிகளின் நீட்சி என்று கூறுவார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்

ஆறுமுக நாவலர் அன்று  யாழ்ப்பாணத்தில் பெரும் செல்வந்தர்களாக  இருந்த

செல்வந்தரிடமிருந்து பணம் திரட்டியது போல

 சூரனும் அப் பிரதேசத்தில் மேல் எழுந்த வர்த்தகர்களிடமிருந்து பணம் திரட்டி இந்தப் பாடசாலையை ஆரம்பித்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது


இதற்கு சமாந்தரமாக சிங்களப் பகுதிகளில் பாடசாலைகளும் ஆரம்பித்துள்ளன

இலங்கை கல்வி வரலாற்றை  ஆராய்பவருக்கு   இவை  முக்கிய தகவல்கள் ஆகும்

 மர வேலையிலே தேர்ச்சி பெற்ற  தொழிலாளியாக இருந்த  சூரன் தன் சுய வரலாற்றை எழுதி வைத்திருக்கிறார்.

அது ஒரு காலத்தின் வரலாறு ஆகும்

 அதைப் பதிப்பித்திருக் கிறார்  இருக்கிறார் ராஜ ஸ்ரீகாந்தன்

அதற்கான ஒரு அழகான முன்னுரையும் எழுதி இருக்கிறார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்

 அந்நூல் எமக்குப் பல பழைய தகவல்களைத் தருகின்றது

பாடசாலையின் வரலாறு

 அதனை உருவாக்க நடத்திய போராட்டங்கள்

 அதில் கல்வி கற்றோர்

 கற்பித்தோர்

அதன் மூலம் உயர்நிலை அடைந்தோர்

எனப்பல தகவல்களை அங்கு வந்தோர் உரையாடினர்

நீங்கள்  வராவிட்டால் இவ்வளவு பேர்களையும் ஒன்றாகச்சந்தித்திருக்க முடியாது சேர்

 என்று விவோவா கூறினாள்

நிறையத் தகவல்களை ஒருங்கே பெற்றுக் கொண்ட பெரு மகிழ்ச்சி அவளுக்கு

அங்கு வந்திருந்த ராஜேஷ் கண்ணா சமூகவியல் விரிவுயாளர்

அவர் பார்வை எனக்கு வித்தியாசமாக இருந்தது.

அவரது விளக்கங்கள் என்னை புதிய திசைகளில் சிந்திக்க வைத்தன

இன்றைய இளம் தலைமுறையின் பார்வை அது.

 அவரிடம் ஆலோசனைகள்  பெறுமாறுமாறு. நான் விவோகாவைக் கேட்டுக் கொண்டேன்.

 விவோகாவுக்கு உதவி புரியுமாறு அவரிடமும் கேட்டுக் கொண்டேன்

 அவர் தான் எழுதிய மூன்று நூல்களை எனக்குத் தந்தார்

மதிய உணவு உண்டு செல்லும்படி கேட்டுக் கொண்டனர் ஆனால் விவேகா தன் வீட்டில் எனக்கான மதிய உணவுகளைச் செய்திருந்தாள்

நண்பர் கலாமணி அந்த ஊரவர். அவர் சுகயீனமுற்று இருப்பதாக அறிந்தேன்

அவரைச் சந்திக்க மனம் அவாவியது

நண்பர் ரவீந்திரனும் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார்

தேவரையாளி கல்விச் சமூகத்திடம் இருந்து விடைபெற்று கலாமணி வீடு நோக்கிச் சென்றேன்

பாடசாலைக்கு வெளியே வரும்போது மீண்டும் சூரன் சிலைக்கு முன்னால்  நின்றேன்

அப் பெரியார் இன்னும் பெரிதுயர்ந்து நிற்பதாக எனக்குத் தோன்றியது

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் செய்தல்

அன்னயாவிவிலும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்குஎழுத்தறிவித்தல்

என் பாரதி பாடல் ஞாபகத்துக்கு வந்தது

ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஏழை மக்களுக்காக ஒரு பாடசாலை நிறுவிய சூரன்

என் மனதை நினைத்து நின்றார்

மீண்டும் சூரன் சிலையை நோக்கினேன்

இன்னும் அது  நெடிதுயர்ந்து நின்றது

இப்போது சொல்லுங்கள்

அது

 சூர தரிசனம் தானே?