Thursday, December 29, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 18

விபரீத விஞ்ஞானியின் கண்டு பிடிப்பினால் சிறுவன் ஒருவன் இளைஞனாகிரான். அந்த இளைஞனின் மூலம் ஒரு பெண் தாயாகிறார். இரவில் இளைஞனாகவவவும் பகலில் சிறுவனாகவும் மாரும் தன் கனவனைக் கண்டு அதிர்ச்சி அடைகிறால் அப் பெண். இந்த ஒருவரிக்கதையுடன் விரசம், கிளுகிளுப்பு எல்லாம் கலந்து 2004 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் நியூ.
அம்மா தேவயானியுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் சிறுவன் விஞ்ஞானி மணிவண்ணணின் மூலம் இளைஞன் எஸ்.ஜே. சூரியாவாக மாறுகிறாள். இளைஞன் சூர்யாவைக் காதலிக்கிறார் சிம்ரன். சூர்யா சிம்ரன் காதல் திருமணத்தில் முடிகிறது. இனிதான இல்லற வாழ்வின் மூலம் சிம்ரன் கர்ப்பமடைகிறார். இந்த நிலையில் தன் கணவன் எஸ்.ஜே. சூர்யாவைப்பற்றிய உண்மை சிம்ரனுக்கு தெரியவருகிறது. இரவில் இளைஞனாகவும் பகலில் சிறுவனாகவும் இருக்கும் தன் கணவன் எஸ்.ஜே. சூர்யா நிரந்தரமாக சிறுவனாக மாறிவிட்டாள் தனதும் தனது குழந்தையின் நிலையும் என்ன என்று தவிக்கிறார்.
தன் கணவன் ஒரு சிறுவன். தன் குழந்தையின் தகப்பனும் அதே சிறுவன் என்பதை சிம்பரனால் ஏற்றும் கொள்ள முடியாவில்லை. சிறுவனான தன் மகன் தான் சிம்ரனின் கணவன் எஸ் .ஜே. சூரிய என்ற உண்மை தேயானிக்கும் தெரிய வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு காரணமான விஞ்ஞானி மணிவண்ணன் இதனைத் தீர்ப்பதற்காகக் கடுமையாக முயற்சி செய்கிறார். சிறுவன் இளைஞரனாகவும், இளைஞனை சிறுவனாகவும் மாற்றப்படுகிறான்.
விஞ்ஞான கதை என்ற போர்வையுடன் தாரளமாகக் புகுந்து விளையாடியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா . தயாரிப்பு, கதை ,இயக்கம் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தின் மூலம முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். தேவயானி, சிம்ரன், மணிவண்ணன், நாசர், கருணாஸ், ஐஸ்வர்யா ஆகியோர் நடித்தனர். ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய கிரண் ரசிகர்களைத் கிறங்க வைத்தார்.
பாடல்கள் வாலி, இசை ஏ.ஆர். ரஹ்மான் காலையில் தினமும் கண் விழித்தால், இனிவரும், சக்கா இனிக்கிற சக்கா ஸ்பைடர் மேன், கொஞ்ச நேரம் கதகலி, மார்க்கண்டேயா, தொட்டால் பூ மலரும் ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் பெறு வரவேற்பை பெற்றன. எம்.ஜி. ஆரின் படகோட்டி படத்தில் இடம் பெற்ற தொட்டதால் பூ மலரும் என்ற ரீரிமிக்ஸ் பாடலை இளைஞர்கள் விரும்பினாலும் எம்.ஜி. ஆரின் ரசிகர்கøள் அதனை விரும்பவில்லை.
விநியோகஸ்தர்களுக்கு இலாபத்தைக் கொடுத்த நியூ படத்தின் மூலம் நல்ல நடிகர் என்ற பெயரை சம்பாதித்தார் எஸ்.ஜே. சூர்யா . நியூ படத்தின் மூலம் எஸ்.ஜே. சூர்யாவுக்கும்,தணிக்கை குழுவிற்கும் பெரும் மோதலே ஏற்பட்டது. நீதிமன்றம் எஸ்.ஜே. சூர்யாவை எச்சரிக்கை செய்தது. தனிக்கைக்குழுவுடனான மோதல், நீதிமன்ற எச்சரிக்கை எல்லாவற்றையும் மீறி நியூவை வெற்றிப்படமாக்கினார்கள் ரசிகர்கள்.
ரமணிமித்திரன்10/01/12

Wednesday, December 28, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 17

காதலிப்பது போல் நடித்து ஏமாற்றும் பெண்ணால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவன் ஒருவன் வேதனை தாங்காது அப்பெண்ணை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்கிறான். இதனால் ஆத்திரமடைந்த அவனது சகோதரன் தவறு விடும் பெண்களை மயக்கி தன் வலையில் விழ வைத்து கொலை செய்கிறான். 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் என்ற இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்துப் பாராட்டுப் பெற்றார்.
கல்லூரி மானவனான சிம்பு தன்னுடன் படிக்கும் சிந்துதுலானியைக் காதலிக்கிறார். ஆனால் சிந்துலானி சிம்புவை காதலிப்பது போல் நடிக்கிறார். தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் சிந்துதுலானியின் வீட்டை நோக்கிச் செல்லகிறார் சிம்பு. அங்@க எதிர்பாராத காட்சி ஒன்றைக் காண்கிறார். தன் எதிர்கால மனைவி இன்னொருவனுடன் படுக்கையை பகிர்ந்துக் கொள்வதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார் சிம்பு. ஏமாற்றம், ஆத்திரம், துக்கம் எல்லாம் ஒன்று சேர சிந்துதுலானியைக் கொலை செய்கிறார். நடந்த சம்பவத்தைத் தன்னைப் போன்ற உருவமுடைய அண்ணன் சிம்புவிடம் கூறிவிட்டு தலைகொலை செய்கிறார் தம்பி சிம்பு.
தம்பி சிம்புவின் மரணம் அண்ணன் சிம்புவை வெகுவாக வாட்டியது. தம்பியின் மரணத்துக்கு காரணமான தவறு செய்யும் பெண்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி சிம்புவுக்கு ஏற்படுகிறது. தவறு செய்யும் பெண்களைத் @தடத் தொடங்குகிறார். தவறு செய்யும் பெண்களை அடையாளங் கண்டு காதலிக்கத் தொடங்குகிறார். சிம்புவின் காதல் வலையில் விழுந்த பெண்கள் அவரின் பின்னால் "ற்றுகின்றனர். சந்தர்ப்பம் கிடைக்கும்@பாது அப்பெண்களை கொலை செய்கிறார் சிம்பு.
அழகிய பெண்களை கொலை செய்வது யார் என்று தெரியாது பொலிஸார் தடுமாறுகின்றனர். ஒரு நாள் கொலை செய்து கொண்டிருக்கும் போது சிம்புவை பொலிஸார் பிடிக்கின்றனர். இந்த கொலை எல்லாவற்றையும் தன்னைப் போன்ற உருவ ஒற்றுமை உடைய தம்பிதான் செய்வதாக சிம்பு சொல்கிறார். தம்பி இறந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லாததால் தம்பி சிம்புவைப் பொலிஸார் தேடத் தொடங்குகின்றனர். சிம்புவின் கொலை வெறி மீண்டும் புத்துயிர் பெறுகிறது.
சிம்பு, ஜோதிகா, சிந்துதுலானி, மந்த்ராபேடி, யானாகுப்தா, அதுல்குல்கர்ஷினி, ச‌த்யன், ஷாலின், ச‌ந்தானம் ஆகியோர் நடித்தனர். கதை திரைகதை சிம்பு. இயக்கம் ஏ.@ஜ.முருகன். ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகரன். இசை யுவன்ஷங்கர் ராஜா.
சிம்புவின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் மன்மதன். இப்படத்தில் பலர் நடித்திருந்தாலும் சிம்பு மட்டும் தான் பளிச்சென்று தெரிகிறார். அதேவேளை இயக்குனர் முருகனுக்கு கவலையை கொடுத்த படம் இது. இப்படத்தின் இயக்குநர் முருகன் அல்ல சிம்புதான் என்ற செய்தியால் முருகன் மிகுந்த கவலையடைந்தார்.
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன், என்னாசை மைதிலியே, மன்மதனே நீ கலைஞன்தான், வானம்னா உயரத்தைக் காட்டு, தத்தை தத்தை தத்தை போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றன. வசூலில் புதிய சாதனை செய்த இப்படம் தயாரிப்பாளரை விட விநியோகஸ்தர்களை ச‌ந்தோஷப்பட வைத்தது.
ரமணி
மித்திரன்25/12//11

Monday, December 26, 2011

கங்கை கொண்ட சோழபுரத்தை நினைவூட்டிய கோர கடலலை

இந்திய அரசியல்வாதிகள் அனைவரின் வாயையும் சுனாமி தற்காலிகமாக மூடிவிட்டது. இந்தோனேஷியக் கடலில் ஆரம்பமான சுனாமி என்ற கொடூரமான பேரலை தன் ஆற்றல் முழுவதையும் இலங்கையின் வடகிழக்குப் பகுதியிலும் இந்தியாவிலும் காட்டியது.
சென்னை மாநகரத்தின் மொPனா கடற்கரை. இது உலகிலேயே மிக நீளமான இரண்டாவது கடற்கரை. டிசெம்பர் 26ம் திகதி அதிகாலையிலேயே கடற்கரை களைகட்டத் தொடங்கிவிட்டது. அன்று ஞாயிற்றுக் கிழமையாகையினால் அதிகாலையிலேயே கூட்டம் சேரத்தொடங்கிவிட்டது.
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, விடுமுறை நாளில் விளையாட வந்த சிறுவர் கூட்டம் சிற்றுண்டி வியாபாரிகள் என மொPனா சுறுசுறுப்படையத் தொடங்கியது. சூரியன் மேலே உயர உயர மொPனாவை நோக்கிச் செல்லும் மக்களின் தொகையும் அதிகரித்தது.
காலை 6.30 மணிக்கு சென்னையில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னையில் நிலநடுக்கம் ஏற்படுவது என்பதால் எவரும் அதனைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. எங்கோ தொலைது}ரத்தில் நடைபெறும் நிலநடுக்கத்தின் பாதிப்பு சென்னையில் பிரதிபலிப்பதால் எவரும் அதனைப் பெரிதாக எடுப்பதில்லை.
சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதேவேளை இந்தோனேஷியாவின் கடலுக்கடியில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அது தரை கோரத்தாண்டவத்தை தொண்டமனாறு, பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு, திருகோணமலை, மூது}ர், வாகரை, மட்டக்களப்பு, அம்பாறை, சென்னை, நாகப்பட்டினம், கடலு}ர், ஆந்திரா, கேரளம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் ஆடி முடித்தது.
இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப்போகும் விபாPதத்தின் அறிகுறி எதுவுமே தெரியாத மக்கள் கடற்கரையில் மிக உற்சாகமாக நடமாடினர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். காலை 8.30 மணிக்கு எவருமே எதிர்பார்க்காத அந்த விபாPதம் மக்களை பலி வாங்கியது. எத்தனையோ நு}ற்றாண்டுகளுக்கு முன்பு பிரளயம் ஏற்பட்டு உலகின் சில பகுதிகள் அழிந்ததாகக் கேள்விப்பட்டவர்கள் அந்தப் பிரளயத்தை நேரில் கண்டார்கள். முதலாவது முறை கடலைத் தாக்கிய போது கடற்கரையில் நின்ற எவருமே உயிர் தப்பவில்லை. மணிக்கு 600 - 700 மைல் வேகத்தில் 100 முதல் 150 அடி வரை உயர்ந்தெழுந்த சுனாமி என்ற கொடுமையான கடலலை நான்கு மணித்தியாலங்களில் சுமார் 1600 கடல் மைல் து}ரத்தைக் கடந்து ஊழித் தாண்டவமாடியது. கடல் ஊருக்கு வந்ததைக் கண்ட சிலர் உயிர் தப்ப ஓடினார்கள். ஆனால், கடலலையின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவர்களால் ஓட முடியவில்லை. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியவர்களை சுனாமி இழுத்துக் கொண்டு போனது.
கடற்கரையை அண்டி இருந்த உறுதி மிக்க கட்டடங்கள் சின்னாபின்னமாயின. கடற்கரையில் உள்ள மீனவர்களின் சிறு குடிசைகள் இருந்த இடம் தெரியாது மறைந்து போயின. என்ன நடந்தது எனச் சொல்வதற்கு எவருமே உயிருடன் இல்லை சுனாமியின் தாக்கத்தால் சிறுவரும் பெண்களும் தான் மிக அதிகளவில் உயிரிழந்துள்ளனர். ~கடல் பெருக்கெடுத்ததாம். எத்தனையோ பேர் அள்ளுப்பட்டுப் போனார்களாம். இப்போ கடல் வத்திப் போச்சாம் என்ற செய்தி பரவியதால் புதினம் பார்க்க ஆயிரக்கணக்கானவர்கள் கடற்கரையை நோக்கிச் சென்றனர். அதிகாலையில் கடற்கரைக்குச் சென்றவர்களின் கதி என்னவென்று தெரியாது. பதறியபடி சிலர் கடற்கரையை நோக்கி ஓடினார்கள். மிக அழகான கடற்கரை சின்னாபின்னமாகக் காட்சியளித்தது. கடலில் நிற்க வேண்டிய படகுகள் வீதியிலும், கான்களிலும் கிடந்தன. வீதியில் ஓட வேண்டிய வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன. இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப் போகும் விபாPதத்தை அறியாத மக்கள் கூட்டம் கடற்கரையில் கூடியது.

காலையில் கடற்கரைக்குச் சென்றவர்களைத் தேடிக்கொண்டு கடற்கரைக்குச் சென்ற உறவினர்களும், நண்பர்களும் ஆங்காங்கே கிடந்த சடலங்களைப் புரட்டிப் பார்த்தனர். சிலர் வைத்தியசாலைகளை நோக்கி ஓடினர்.காலை 9.30 மணிக்கு சென்னை மொPனா கடற்கரையை இரண்டாவது முறையாக சுனாமி கலக்கியது. கடற்கரையில் நின்றவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். இரண்டாவது தாக்குதலிலும் பலர் உயிரிழந்தார்கள்.மீண்டும் காலை 10.38 மணிக்கும் 10.50 மணிக்கும் பிற்பகல் 12.24 மணிக்கும் சுனாமி மொPனாவைத் தாக்கியது. சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரையிலான கடற்கரை முற்றாக துவம்சமானது. கன்னியாகுமரி, நாகப்பட்டினம், து}த்துக்குடி, புதுச்சேரி, கடலு}ர், புதுச்சேரி, மாமல்லபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகள் சுனாமியின் தாக்குதலினால் உருத்தெரியாமல் அழிந்தன. இதே போன்றே ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களையும் சுனாமி விட்டுவைக்கவில்லை.
தமிழ்நாட்டில் நாகபட்டினத்திலேயே மிக அதிகமான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நாகபட்டினத்தில் 2500 பேர் பலியாகியுள்ளனர். வேளாங்கன்னியில் 500 பேர் பலியானார்கள். கன்னியாகுமாரி 625, கடலு}ர் 425, சென்னை 200, கல்பாக்கம் 80, புதுச்சேரி 129, காரைக்கால் 250 என தமிழ்நாடு அரசு மரணமானவர்களின் கணக்கைக் கூறுகின்றது. சுற்றுலாப் பயணிகளும் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.தமிழ் நாட்டில் ஒட்டுமொத்தமாக 3000 பேர் மரணமானதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், இத்தொகை அரசாங்கம் அறிவித்த தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. இலட்சக் கணக்கான மக்கள் வீடு வாசலை இழந்து நிர்க்கதியாகி நிற்கின்றனர். தமிழக அரசின் உதவிப் பணிப்பாளர்கள் மிக மிக மந்தமாகவே உள்ளனர். மிக அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதால் அவர்களுக்கு உதவக்கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை. இறந்தவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சம் ரூபாவும், குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாவும் கொடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதிலும் இறந்தவர்களைத் தேடும் பணியிலும் பொதுமக்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஈடுபட்டனர். பொலிஸாரும், இராணுவத்தினரும் செய்ய வேண்டிய பல வேலைகளைப் பொதுமக்கள் மனம் வைத்து செய்து முடித்தார்கள். பிணங்களை ஒவ்வொன்றாகப் புதைக்க முடியாது என்பதால் பாரிய கிடங்குகள் வெட்டப்பட்டு நு}ற்றுக்கணக்கான சடலங்கள் ஒரே குழியில் புதைக்கப்பட்டன. கொலரா போன்ற தொற்று வியாதிகளைத் தடுக்;க வேண்டுமென்றால் கண்ட உடல்களை அங்கேயே புதைக்க வேண்டும் என்பதால் உடல்கள் புதைப்பதில் மிகுந்த அவசரம் காட்டப்படுகிறது. எழில்மிகு கடற்கரைப் பிரதேசம் உருக்குலைந்துள்ளது. எங்கு திரும்பினாலும் நெஞ்சை உருக வைக்கும் ஒப்பாரி, பிஞ்சுக் குழந்தைகளை நெஞ்சில் அணைத்தபடி கதறி அழுபவர்களைக் கண்டவர்களும் கண்ணீர் சிந்தினர். சுனாமியின் ஊழித் தாண்டவம் முடிவுக்கு வந்த பின்னரும் அதன் பாதிப்பில் இருந்து இன்னும் பலர் விடுபடவில்லை. இராமேஸ்வரம், து}த்துக்குடி ஆகிய பிரதான கடற்கரை மூன்று நாட்கள் சுனாமியினால் தாக்கப்படாதிருக்க இலங்கை 25000 உடல்களைக் கொடுத்துள்ளது. இத்தனை அழிவுகளுக்கு மத்தியிலும் மிக முக்கியமான ஒரு சில இடங்கள் எந்தவித பாதிப்பும் இன்றி இருக்கின்றன. மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி, காமராஜர் சமாதி என்பவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
மெரீனா கடற்கரையில் உள்ள பிள்ளையார் சிலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல்லவர் சக்கரவர்த்தியால் அங்குலம் அங்குலமாகப் பார்த்து உருவாக்கப்பட்ட மாமல்லபுரச் சிற்பங்கள் அப்படியே உள்ளன. கடலலை தாலாட்டும் திருச்செந்து}ர் ஆலயத்துக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. வழமையாக ஆலயச் சுவரில் மோதும் அலை சம்பவம் நடந்த அன்று முக்கால் மணி நேரம் வற்றியிருந்தது. பின்னர் பழையபடி கடலலை சுவரைத் தாலாட்டியது.தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே இப்படிப்பட்ட பேரழிவு இதுவரை ஏற்படவில்லை. சுனாமி என்ற இந்த அலையினால் தாக்கப்படும் 28 நாடுகளில் இதனை முன்கூட்டியே அறிவிக்கும் கருவிகள் உள்ளன. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளை சுனாமி தாக்காதபடியினால் இவை அந்த நாடுகளுடன் இதுவரை இணையவில்லை. அந்தக் கருவியைப் பொருத்துவதற்கு ஆயிரம் கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. காசைப் பற்றிச் சிந்திக்காது சுனாமி முன்னெச்சரிக்கைக் கருவியைப் பொருத்த இந்தியா முடிவுசெய்துள்ளது. இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடுகின்றனர். இந்த அனர்த்தத்தில் இருந்து தமிழகக் கரையோரம் மீள்வதற்கு இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமோ தெரியாது?
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 02/01/2005

Sunday, December 25, 2011

விழித்துக் கொண்டார் ஜெ விரட்டப்பட்டார் சசிகலா

உடன் பிறவாச் சகோதரி சசிகலா உட்பட 14 பேரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் ஜெயலலிதா இப்படி ஒரு அதிர்ச்சியைக் கொடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதாவின் நிழல் போல கடந்த 20 வருடங்களாகச் செயற்பட்டு வந்த சசிகலாவுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.
அரசியல் தலைவர்களினால் சம்பாதித்த நல்ல பெயரை அவர்களது வாரிசுகள் சந்தி சிரிக்க வைப்பதே வழøயான சம்பவம் ஆனால் ஜெயலலிதாவின் வாழ்வில் இது நேர்மாறாக நடந்துள்ளது. சசிகலாவும் அவரது பரிவாரங்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் போயஸ் கார்டனிலும் ஆடிய ஆட்டத்தால் பொசுங்கிப்போன எம்.ஜி.ஆர். விசுவாசிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறி இன்னொரு அரசியல் கட்சியில் சேர்ந்தனர். இன்னும் சிலர் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அழகிரியின் பெயர்தான் அதிகம் அடிபட்டது. அழகிரியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று மக்கள் குமுறினார்கள். நான் முதல்வரானதும் அழகிரியிடமிருந்து மதுரையை மீட்பேன் என்று ஜெயலலிதா சபதமிட்டார். அழகிரியின் கட்டுப்பாட்டில் இருந்து மதுரையை மீட்டார். கருணாநிதியால் செய்ய முடியாததை ஜெயலலிதா செய்து காட்டினார். அழகிரியைக் கருணாநிதி அடக்கி வைத்திருந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் நேரான பாதையில் சென்றிருக்கும்.
ஸ்டாலின், அழகிரி, கருணாநிதி அபிமானிகள் என திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்துள்ளது. அன்புமணியின் பின்னால் நிற்பவர்கள் தவிர பாட்டாளி மக்கள் கட்சியில் நீடிக்கமுடியும். தமிழக காங்கிரஸில் எத்தனை கோஷ்டி இருக்கிறöதன்று தலைவி சோனியாவுக்கே தெரியாது. மாவட்டம் தோறும் கோஷ்டிகள் உண்டு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதாவின் விசுவாசிகள் மட்டுமே நீடிக்கலாம். அதுவும் எத்தனை நாட்கள் என்று சரியாக கணிப்பிடற முடியாது. புதிய பதவிக்கு ஒருவரை ஜெயலலிதா நியமிப்பார். அடுத்த நொடியே அவர் தூக்கி எறியப்படுவார். எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் வெளியேற்றப்பட்டார்கள். சசிகலாவின் வட்டத்துக்குள் இருப்பவர்கள் மட்டும் பதவியில் நீடித்தார்கள். இந்த உண்மை ஜெயலலிதாவுக்குத் தெரியவந்ததும் சசிகலா உட்பட 14 பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
கட்சித் தலைவர் அவரின் பிள்ளைகள் இரண்டாம் கட்டத் தலைவரின் பிள்ளைகள், மாவட்ட செயலாளர்களின் வாரிசுகள் இவர்களின் உறவினர்கள் ஆகியோரின் ஆதிக்கமே அரசியல் கட்சிகளுக்குள் உள்ளன. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இந்தத் தொல்லைகள் இல்லை. சசிகலாவின் கையே அங்கு மேலோங்கி இருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகமானோர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோகமாக வெற்றி பெற்றதற்கு வேட்பாளர்கள் முக்கிய காரணமல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் செய்த மாபெரும் தவறினாலேதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றது.

சசிகலாவையும் அவருடைய உறவினர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கான உண்மையான காரணத்தை ஜெயலலிதா வெளியிடவில்லை. பெங்களூரில் நடைபெறும் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியானால் யாரை முதல்வராக்குவது, உளவுத்துறையின் அறிக்கைகள் ஜெயலலிதாவின் பார்வைக்கு நேரடியாக சமர்பிக்கப்படுவதில்லை. சசிகலா பார்வையிட்டு கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் பாதகமான அறிக்கைகள் கிடப்பில் போடப்படுகின்றன. சசிகலாவுக்கு நெருக்கமானவர்களின் தவறுகள் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பப்படுவதில்லை போன்ற காரணங்களினால் சசிகலா விரட்டப்பட்ட செய்திகள் உலா வருகின்றன.
மக்கள் எதிர்பார்க்கும் நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஜெயலலிதா தயாராக இருந்ததாகவும் சசிகலா அதற்கு தடையாக இருந்தார். அத்துடன் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியாது அதிகாரிகள் தவித்தனர். பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதுபோல இது பற்றி ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தது யார் என்ற கேள்விக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சோ, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆகிய இருவரின் பெயர் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதாவின் பிரசாரங்களை வீடியோவாகத் தயாரிப்பதற்காக அன்றை ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மூலம் அறிமுகமானவர் சசிகலா. அவருடைய நிறுவனம் ஜெயலலிதா பிரபல்யமாவதற்கு உதவியது. அந்த நன்றிக் கடனுக்காக தன் அருகிலே சசிகலாவை வைத்து அழகுபார்த்தார் ஜெயலலிதா. அதிக நெருக்கமும் அளவுக்கு மீறிய அதிகாரத் துஷ்பிரயோகமும் அன்புச் சகோதரி ஜெயலலிதாவிடமிருந்து சசிகலாவைப் பிரித்துவிட்டது.
சசிகலா, சசிகலாவின் கணவர் எம். நடராஜும், நடராஜனின் தம்பி எம். ராமச்சந்திரன், சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ், சசிகலாவின் இரண்டாவது அண்ணன் மகன்கள் டிவி.மகாதேவன், தங்கமணில, சசிகலாவின் அக்காவின் மகன் டி.டி.வி. தினகரன், அவருடைய தம்பி சுதாகரன் இவரையே தனது தத்துப் பிள்ளையென ஜெயலலிதா அறிவித்தார். நடராஜனின் தம்பியின் மகன் கணக குலோதுங்கன், ராஜராஜன், சசிகலாவின் தம்பி திவாகழரன், சசிகலாவின் சித்தப்பாவின் மருமகன் ராவணர் ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஆவர்.
சசிகலாவுடனும் ஏனைய பதின்மூன்று பேருடனும் நெருங்கிய தொடர்புடையவர்களை பற்றிய அறிக்கையை தயாரிதக்கப்படுகிறது. அவர்களின் செல்வாக்கினால் அமைச்சர்களானவர்கள் நீக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜெயா ரி.வி. யிலும் சசிகலா குழுவின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. டி.வி.டி. தினகரனின் மனைவி அனுராதாதான் ஜெயா ரி.வி. யின் நிர்வாகப் பொறுப்பாளராக இருக்கிறார். சன் ரீ.வி. கலைஞர் ரீ.வி. ஆகியவற்றுக்குப் போட்டியாகாத? நிலையில் முடங்கிப் போயுள்ளது ஜெயா ரீ.வி. ஆகையினால் ஜெயா ரீ.வி. யிலும் அதிரடி மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
தமிழகத்திலிருந்து வெளிவரும் சில புலனாய்வுப் பத்திரிகைகள் சசிகலாவைப் பற்றிய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தன. அவற்றைப் படித்திருந்தால் இப்படிப்பட்ட நடவடிக்கையை ஜெயலலிதா முன்னதாகவே செய்திருப்பார். 1991 ஆம் ஆண்டு தன் உடன் பிறவாச் சகோதரி சசிகலாவை விரட்டினார் ஜெயலலிதா. மூன்று மாதங்களில் மீண்டும் பூரண கும்பம்? வைத்து சசிகலாவை வரவேற்றார். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்பது ஜெயலலிதாவின் பொன்மொழி.

வர்மா

சூரன்,ஏ,ரவிவர்மா

வீரகேசரிவாரவெளியீடு25/12/11

Friday, December 23, 2011

பாராடத் தயாராகிறது தமிழகம் மௌனம் காக்கிறது மத்திய அரசு

பகுதிகளுக்குத் திருப்பிவிட வேண்டும். அணையின் உயரம் குறைந்தால் தமிழகத்திற்கு நீர் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது என்பதே கேரளத்தின் உள்நோக்கமாகும்.
முல்லைப் பெரியõற்றில் தமிழகத்துக்கு இருந்த உரிமைகள் மெதுமெதுவாக கேரள வசம் சென்று விட்டன. அணையைப் பாதுகாப்பது, மீன் பிடிப்பதுபோன்ற உரிமைகள் தமிழகத்தின் வசம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டன. இழந்த உரிமைகளை மீண்டும்பெற வேண்டும் என்பதற்காக கேரள எல்லையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் என்பன நடைபெறுகின்றன. கம்பம், குமிளி பகுதியில் உள்ள இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட்டுள்ளனர். கேரள எல்லையை நோக்கித் தினமும் செல்லும் மக்கள் படையை பொலிஸõர் சமாதானமாக திருப்பி அனுப்புகின்றனர். சில வேளைகளில் தடியடி நடத்தி கலைக்கின்றனர்.
கேரளாவில் உள்ள தமிழர்கள் மீது ஆங்காங்கே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்குப் பதிலடியாக தமிழகத்தில் உள்ள கேரளக்காரர்களின்
சொத்துக்கள் நாசமாக்கப்படுகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் யுத்தம்போல் எல்லையில் மக்கள் பதற்றப்பட்டு கொண்டிருக்கையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எதுவுமே எடுக்காது மௌனம் காக்கிறது.
முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பை மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் இதனை வலியுறுத்தியுள்ளார். தமிழக கேரள எல்லையில் கொந்தளிக்கும் மக்களை அமைதிப்படுத்த வேண்டிய மத்திய அரசு மெத்தனமாக உள்ளது. எந்த ஒரு அரசியல் கட்சியின் வேண்டுகோளும் இன்றி தமிழக மக்கள் ஒன்று கூடிப்போராட்டம் நடத்துகின்றனர். தமிழக அரசியல் கட்சிகளும் ஆங்காங்கே போராட்டங்களை நடத்துகின்றன. அமைதி காக்கும்படி முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தாலும் அமைதியாக இருப்பதற்கும் தாங்கள் தயாராக இல்லை. மத்திய அரசு தலையிட்டு உறுதியான முடிவை எடுத்தால் தமிழகமும் கேரளாவும் அமைதி பூங்காவாக இருக்கும். இல்லையேல் காஷ்மீரைப்போன்ற ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்படும்.

முல்லைப்பெரியாறு விவகாரத்தினால் தமிழக கேரள எல்லையில் ஏற்பட்ட பதற்றம் தொடர்கிறது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்யும் கேரள அரசை எதிர்த்து மத்திய அரசு மௌனம் காக்கிறது. முல்லைப்பெரியாறு அணை வலு விழந்துள்ளது. ஆகையினால் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரள அரசின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அணை பலமாக உள்ளது. அணையின் உயரத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தைக் குறைக்க வேண்டும். முல்லைப்பெரியாற்றின் மேலதிக நீரை கேரளாவில் வேறு
தமிழக அமைச்சர்கள் இருவர் நீக்கப்பட்டு புதியவர்கள் இருவர் அமைச்சராகியுள்ளனர்.
செல்வி ராமஜெயம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பரஞ்சோதி அமைச்சரவையில் இருந்து இராஜினாமாச் செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளளார். திறமை இல்லாமையாலும் கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தியதாலும் ராமஜெயத்தின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. திறமை இல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா எப்படிச் சந்தர்ப்பமளித்தார் என்ற கேள்விக்குவிடை தெரியாது தொண்டர்கள் தவிக்கின்றனர்.
திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பரஞ்சோதியின் பெயர் அறிவிக்கப்பட்டபோது அவர் மீது புகாரும் கிளம்பியது. கணவனை இழந்த டாக்டர் ராணிக்கும் பரஞ்சோதிக்கும் இடையேயான நெருக்கம் திருமணத்தில் முடிந்தது. முதல் மனைவியை விவாகரத்துச் செய்வதற்காக தன்னிடமிருந்து பணம், நகை என்பனவற்றை வாங்கிக் கொண்டு தன்னை பரஞ்சோதி ஏமாற்றி விட்டார் என்று டாக்டர் ராணி புகார் தெரிவித்தார். பரஞ்சோதிக்கு எதிரான புகாரை பொலிஸார் ஏற்றுக் கொள்ளாததனால் நீதிமன்றத்தின் உதவியுடன் பரஞ்சோதி மீது புகார் செய்தானர் டாக்டர் ராணி. பரஞ்சோதிக்கு எதிரான புகார் வலுவாக இருந்ததனால் அவரை இராஜினாமாச் செய்யுமாறு பணித்தõர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் விசுவாசத்துக்குரியவர்களில் பரஞ்சோதியும் ஒருவர். அதனால் தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படாது இராஜினாமாச் செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் திருச்சி மேற்குத் தொகுதியில் வெற்றி பெற்றவர் மரியம் பிச்சை. அமைச்சர் பதவி ஏற்ற மரியம் பிச்சை சட்ட சபை நடவடிக்கையில் கலந்து கொள்வதற்காக சென்னையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் விபத்தில் மரணமானார். திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரானார். பரஞ்சோதி 33 நாட்களில் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தார். மரியம் பிச்சையும் பரஞ்சோதியும் அமைச்சராக சட்ட சபைக்குச் செல்லவில்லை. அமைச்சரின் தொகுதி என்ற பெருமையை திருச்சி மேற்கு இழந்து நிற்கிறது.
ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்து தூக்கி எறியப்படுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. அமைச்சரவையில் இருந்து ஒருவர் நீக்கப்படும்போது அதற்கான உண்மையான காரணத்தை தமிழக அரசு வெளியிடுவதில்லை. திறமையற்றவர் தகுதியற்றவர் இதனால் தான் நீக்கப்படுகிறார் என்று பொதுவாக கணிக்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் அடுத்த இலக்கு யார் என்பதே தமிழக அமைச்சர்களின் மனதில் உள்ள கேள்வியாக உள்ளது.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 18/12/11


Wednesday, December 21, 2011

திரை உலகில் பறிக்கப்பட்ட கதைகள்

நாகிரெட்டி தயாரித்த படம் எங்க வீட்டுப்பிள்ளை.எங்க வீட்டுப் பிள்ளை எம்.ஜி.ஆர் எனத் தாய்க்குலத்தால் போற்றிப் புகழப்பட்ட படம். பயந்த சுபாவமும் முரட்டுத்தனமும் மிக்க இரண்டு கதாபாத்திரங்களில் எம்.ஜி.ஆர் நடித்த இந்தப் படத்தின் மூலக்கதையுடன் பல படங்கள் வெளியாகின.
ஜெயலலிதா இரட்டை வேடம் ஏற்று நடித்த வந்தாளே மகராசி, வாணிஸ்ரீயின்இருளும் ஒளியும், வாணி ராணி, தங்கமடி தங்கம் போன்ற படங்கள் எங்கவீட்டுப் பிள்ளையின் பாதிப்பினால் வெளியான படங்கள். பயந்த சுபாவமுள்ள எம்.ஜி.ஆர் நம்பியாரிடம் சவுக்கால் அடிவாங்குவதும் பயந்த எம்.ஜி.ஆருக்குப் பதிலாக வந்த முரட்டு எம்.ஜி.ஆர் நம்பியாரை சவுக்கால் விளாசுவதும் இன்று வரைக்கும் அப்படத்தைப் பற்றிப் பெரிதும் பேசப்பட்ட காட்சி. எங்க வீட்டுப் பிள்ளையின் பாதிப்பில் உருவான படங்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றன என்பதாலும் ~நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடலுடனான அந்தக் காட்சியைப் போன்று ஏனைய படங்களின் காட்சிகள் எவையும் மனதில் நிற்கவில்லை.
ஏ.வி.எம் தயாரித்தநானும் ஒரு பெண்கறுப்பு நிறப்பெண்ணின் வாழ்க்கையை வெளிச்சம் வெளிச்சம் போட்டுக்காட்டியது. விஜயகுமாரியின் உருக்கமான நடிப்பைப் பார்த்து அந்தக்காலப் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கண்கலங்கினர். அப்படமே மேகம் கறுத்திருக்கு என்ற பெயரில் வெளியாகியது.
சிவசங்கரிஎன்ற படம் குழந்தைகளையும் பெரியவர்களையும் கவர்ந்த படம். இது குழந்தையும் தெய்வமும் என்ற படத்தின் கதையை ஒத்தது. குழந்தையும் தெய்வமும் படத்தில் பிரிந்த பெற்றோரை ஒன்றாக்க இரட்டைக் குழந்தைகள் படும் கஷ்டம் தியோட்டருக்கு ரசிகர்களை அலைமோத வைத்தது.
குழந்தையும் தெய்வமும் படத்தில் நடித்த பேபி ஷகீலா சிறந்த குழந்தை நட்சத்திரமாகத் தெரிவு செய்யப்பட்டார். நம்ம வீட்டுத் தெய்வம்என்ற படமே ஆடி வெள்ளியாக வெளியானது.
இயக்குனர் திலகம் கே. பாலச்சந்தரின் கதை, வசனத்தில் உருவான படம் தெய்வத்தாய் எம்.ஜி.ஆருடன் பாலச்சந்தர் இணைந்த ஒரேயொரு படம் இது. இதே படம்தங்கச் சுரங்கம் என்ற பெயரில் சிவாஜியின் நடிப்பில் உருவானது. எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளில் மயங்கி இருந்த ரசிகர்களை அடிதடி மூலம் சிவாஜி கவர முயன்ற படம் தங்கச் சுரங்கம்,ராமராஜனின் அன்புக் கட்டளை என்ற படம் தெய்வத்தாய், தங்கச் சுரங்கம் ஆகியவற்றின் கூட்டுக் கலவை. நடிப்பிற்கு நவராத்திரி, பாட்டுக்குபடகோட்டி என்ற இரு பெரும் திலகங்களின் ரசிகர்களும் அடைமொழி கொடுத்தனர். அகில இந்திய ரீதியில் மீனவர்களின் வாழ்க்கையை செம்மீன் கூறியது போன்று தமிழகத்தின் படகோட்டி பட்டிதொட்டி எங்கும் புகழ் பரப்பியது. படகோட்டி படத்தில் இடம்பெற்ற தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத் தண்ணீரில் தவிக்க விட்டான் என்ற பாடல் இன்றும் மீனவர்களின் நிரந்தரமற்ற வாழ்வைக் கூறுகின்றது. படகோட்டி என்ற படமே சத்தமில்லாமல் ஒன்று எங்கள் ஜாதியே என்ற பெயரில் வெளியானது.
சிவாஜியின் நடிப்பைப் பார்த்து அனைவரும் வியந்த படங்களில் ஒன்று மனோகரா. நடிகை கண்ணாம்பாளின் கனல் தெறிக்கும் வசனங்கள் இன்றும் ரசிகர்களின் காதில் ஒலிக்கின்றனகலைஞரின் கவித்துவமான வசனங்கள் இன்றும் சிவாஜியின் குரலில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. ராஜா ராணிக் கதையான மனோகரா, பாலாபிஷேகம் சரவணன் கதாநாயகனாக நடித்த திரும்பிப் பார் ஆகிய படங்கள் வெளிவர உதவி புரிந்தது.புகழ் பெற்ற கதை வசன கர்த்தாவும் இயக்குனருமான கே.எஸ். கோபால கிருஷ்ணன் கண்கண்ட தெய்வம் என்ற படத்தை படிக்காத பண்ணையார்என்ற பெயரில் மீண்டும் இயக்கினார்.

முருங்கைக்காய்க்கு புது மவுசை ஏற்படுத்திக் கொடுத்த படம் முந்தானை முடிச்சு. இப்படம் வெளியான பின்பு முருங்கைக்காயின் விலை கிடுகிடு என ஏறியது. வயதான சிலர் வெட்கத்தினால் முருங்கைக்காய் சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர்.திறமை மிக்க ஊர்வசி அறிமுகமான முந்தானை முடிச்சு என்ற படம் பாக்கியராஜ், ஊர்வசி, தவக்களை ஆகியோரின் லு}ட்டியினால் தியேட்டரைக் கலகலப்பாக்கியது. பாக்கியராஜின் பெயரை உச்சத்தில் வைத்த இப்படம் ஹிந்தியிலும் பாக்கியராஜ் புகழைப் பரப்ப உதவியது. புன்னகை அரசி கே.ஆர்.விஜயா அறிமுகமான கற்பகம்கதைக்கும் முந்தானை முடிச்சுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.கே.எஸ்.கோபால கிருஸ்ணனின் இயக்கத்தில் உருவான கற்பகம் ரசிகர்களை உருக வைத்து வெற்றி பெற்றது. பாக்கியராஜின் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு கலகலப்பூட்டி வெற்றி பெற்றது. பாக்கியராஜின் வழிவந்தபாண்டியராஜன் மாமியார் மெச்சிய மருமகள் என்ற படத்தை பாட்டி சொல்லைத் தட்டாதே என்ற பெயரில் வெளியிட்டுப் புகழ் பெற்றார்.எம்.ஜி.ஆரின்~கணவன், விஜயகாந்தின் தெற்கத்திக் கள்ளன் சந்திர சேகரின் ராஜாங்கம் சத்தியராஜின் எங்கிருந்தோ வந்தான் ஆகியவை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதை உள்ள படங்கள். ரவிச் சந்திரனின் குமரிப் பெண் என்ற படமே இத்தனை படங்களும் வெளிவரக் காரணம்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 21/03/2004

Sunday, December 18, 2011

தமிழில் வெளியா தமிழ்ப் படங்கள்

சரித்திர, புராணப் படங்களின் ஆளுமைக்குட்பட்டிருந்த தமிழ்த் திரைப் படத்துறை சமூகப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த போது பிறமொழிப் படங்களையே பெரிதும் நம்பியிருந்தது.பிறமொழிகளில் வெற்றி பெற்ற படத்தின் உரிமையை வாங்கி தமிழில் வெளியிட்டார்கள். மேக்கப், லொக்கேஷன் போன்றவை அப்படியே இருக்க நடிகர், நடிகை, டைரக்ரர், இசையமைப்பாளர் போன்ற கலைஞர்கள் மட்டும் மாற்றப்பட்டனர். வங்கப் படங்கள் ஒரு காலத்தில் மிக அதிகளவில் தமிழ் வடிவம் பெற்றன. பின்னர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெற்றி பெற்ற படங்கள் தமிழுக்கு மாற்றமடைந்தன. அதே போன்று தமிழில் வெற்றி பெற்ற படங்களும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தன.
இது தவிர ஒரு கதையை இரு மொழிகளில் ஏக காலத்தில் தயாரித்து வெற்றி பெற்ற தயாரிப்பாளர்கள் உள்ளனர்.முதல் முதலில் அதிக பொருட்செலவு செய்து மிகப் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்ட சந்திரலேகா ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாரானதுதமிழ் மொழி நடிகர்களை வைத்து படமாக்கப்பட்ட காட்சி மீண்டும் அதே உடையில் உள்ள ஹிந்தி நடிகர்களை வைத்து படமாக்கப்பட்டதுஜெமினி, ஏ.வி.எம், தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்பன தமிழில் தாம் வெளியிட்டு வெற்றி பெற்ற படங்களை ஹிந்தியிலும் வெளியிட்டன. பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் வேறு மொழிகளில் வெற்றி பெற்ற படங்களின் உரிமையை வாங்கி தமிழில் வெளியிட்டது. சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரித்த தியாகம் வெள்ளி விழா கொண்டாடியது. ~~தீபம், உத்தமன், நீதி,ராஜா,எங்கிருந்தோ வந்தாள் ஆகியன 100 நாட்களுக்கு மேல் ஓடின.என் தம்பி, எங்க மாமா,திருடன் ஆகியன முதலுக்கு மோசமில்லாமல் தயாரிப்பாளரைக் காப்பாற்றின. அமிதாப்பச்சன் மூன்று வேடங்களில் நடித்த ஹிந்திப் படம் திரிசூலம் என்னும் பெயரில் வெளியாகி 250 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது இது ஒரு வகையில் ஒப்புக் கொள்ளப்பட்ட வியாபாரம். ஆனால் தமிழில் வெளியான கதையை மீண்டும் தமிழில் வெளியிடுவதும், தமிழில் வெளியான ஒரு கதையை சிறிய மாற்றங்களுடன் மீண்டும் தமிழில் வெளியாவதும் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது.

தமிழில் வெளியான படத்தை மீண்டும் தமிழில் வெளியிட்டுக் கையைக் கடிக்காது தப்பிய தயாரிப்பாளரும் உண்டு. முதலில் தோல்விடைந்த படம் இன்னொரு முறை வெளியாகி வெற்றி பெற்ற சம்பவமும் உண்டு. எம்.கே.ராதாவின் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் என்ற படம் இரட்டை வேடப் படங்கள் வெற்றி பெறும் என்ற எண்ணத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது. ஒரே உருவ அமைப்புக் கொண்ட இரட்டைப் பிறவிகள் சந்தர்ப்ப சூழ்நிலையில் பிரிந்து வாழ்கிறார்கள். ஒருவருக்கு அடித்தால் மற்றவருக்கு வலிக்கும் என்பது இப்படத்தின் சிறப்பம்சம். அபூர்வ சகோதரர்கள் என்ற படக்கதை பின்னாளில் எம்.ஜி.ஆர் நடிப்பில் நீரும் நெருப்பும் என்ற பெயரில் வெளியானது. 100 நாட்களுக்கு மேல் ஓடி எம்.ஜி.ஆருக்குப் புகழ் தேடிக் கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று. தியாகராஜ பாகவதருக்கு சவால் விட்டு நடித்தவர் பி.யு.சின்னப்பா. இவர் இரட்டை வேடத்தில் நடித்த படம் உத்தம புத்திரன் பின்னாளில் அதே கதை, அதே பெயரில் தயாரிக்கப்பட்ட போது சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்தார்இன்று ரஜினி ஸ்ரைல் அனைத்துக்கும் மூல காரணம். அன்றைய உத்தம புத்திரன் சிவாஜியின் நடிப்பு.மேன் வித் த அயன் மாக்ஸ்க் என்ற ஆங்கிலப்படத்துக்கும் உத்தம்புத்திரனுக்கும் தொடர்புள்ளது.
. கண்ணனின் பக்தராக பி.யு. சின்னப்பா நடித்த சுதர்சனம் என்ற படம் பின்னாளில் நாகைய்யாவின் நடிப்பில் சக்கரதாரியாக வெளியானது. மகன் காதலித்த பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலையில் தகப்பன் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சினை தான் எதிர்பாராதது என்ற திரைப்படத்தின் கதை. ரஜினி காதலித்த ஸ்ரீதேவியை அப்பா கல்கத்தா விஸ்வநாதன் மணமுடிப்பதால் மூன்று முடிச்சு திரைப்படத்தின் கதை விறுவிறுப்பானது. எதிர்பாராதது திரைப்படத்தில் பத்மினியைக் காதலித்த சிவாஜி இறந்ததால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சிவாஜியின் தகப்பன் நாகைய்யாவை பத்மினி மணமுடிக்கிறார். கமலும் ஸ்ரீதேவியும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். ஸ்ரீதேவியை ரஜினி ஒருதலைப்பட்சமாகக் காதலிக்கிறார். கமலின் மரணத்திற்குக் காரணமான ரஜினியின் அப்பாவை ஸ்ரீதேவி திருமணம் செய்கிறார்.எதிர்பாராதது படத்தின் உணர்ச்சி மிக்க காட்சியில் பத்மினி சிவாஜிக்கு அடித்தது இன்றும் பழைய ரசிகர்களால் சிலாகித்துப் பேசப்படுகிறது. மூன்று முடிச்சில் ஆரம்பமான ரஜினி ஸ்ரைல் இன்றும் சூப்பஸ்ராராக ஜொலிக்கிறது.


அண்ணன், தங்கை உறவை விபரிக்கும் படங்கள் நு}ற்றுக் கணக்கில் வெளிவந்தாலும் பாசமலர் படத்துக்கு இணையாக எதுவுமில்லை. சாவித்திரியும் சிவாஜியும் அண்ணன், தங்கையாக பாசத்தைக் கொட்டிய பாசமலர் படத்தைப் பார்த்து அழதவர்கள் இல்லை என்றே கூறலாம்.வெள்ளி விழாக் கொண்டாடிய பாசமலரின் கதையே கிழக்குச் சீமையாக உருவானது. 1962ஆம் ஆண்டு இளைஞர்கள் பெரியவர்களுக்குப் பயந்து ரசித்த பாடல் பாவாடை தாவணியில் பார்த்த உருவமா அந்தப் பாடல் இடம்பெற்ற நிச்சய தாம்பூலம் பின்னாளில் புருஷலட்சணமாக குஷ்புவிற்குப் பெருமை சேர்த்தது. தங்கை லட்சுமியின் திருமணத்திற்காக அண்ணன்படும்பாட்டை சித்தரித்த லக்மி கல்யாணம் பொற்காலமாக உருவாகி சேரன் புகழ் பாடியது. மகாபாரதத்தில் வில்லன்களுன் சேர்ந்திருந்த கதாநாயகன் கர்ணன் செஞ்சோற்றுக் கடனைத் தீர்த்த கர்ணனின் கதையே தளபதியாக மாறியது. புராணத்தில் வலம் வந்த கர்ணன் நண்பனுக்காக உயிரைக் கொடுத்தான். ரஜினி இறப்பதை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் தளபதியில் ரஜினி இறக்கவில்லை. பெற்றால் தான் பிள்ளையா என்ற நாவல் பார் மகளே பார் என்ற பெயருடன் வெளியாகி வெற்றி பெற்றது. அதே கதை கொஞ்சம் மாறி இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் பைலட் பிரேம் நாத்தாக வெளியாகியது.


உள்ளத்தை அள்ளித்தா மூலம் ரசிகர்கள் மனதில் குடிபுகுந்து ரகளை செய்தவர் ரம்பா. காதல், நகைச்சுவை அனைத்தும் கனகச்சிதமாக இருந்த இப்படத்தைப் புகழாதவர்கள் இல்லை. ஆனால் சிவாஜி நடித்த சபாஷ் மீனா தான் உள்ளத்தை அள்ளித்தா என்ற பெயரில் வெளியானதை பழைய ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். சபாஷ் மீனாவில் சந்திரபாபு இரட்டை வேடம், உள்ளத்தை அள்ளித்தாவில் அதே பாத்திரத்தை மணிவண்ணன் ஏற்றிருந்தார்.சிவாஜி கணேசனின் நு}றாவது படம் நவராத்திரி. ஒன்பது வேடங்களில் சிவாஜி மிகப் பிரமாதமாக நடித்திருந்தார். ஆனால் அதே போன்ற கதைதான் எம்.ஜி.ஆரின் நவரட்னம். இதில் எம்.ஜி.ஆர் ஒன்பது கதாநாயகியருடன் ஜோடி சேர்ந்தார். ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியான போது வாசகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட நாவல் கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள். தில்லானா மோகனாம்பாள் நாவல் திரைப்படமான போது நாட்டியப்பேரொளி பத்மினி தனது பரதக்கலையை வெளிப்படுத்தினார். நடிகர் திலகமும் நிஜமான நாதஸ்வர வித்வானாக மாறிவிட்டார். அதே கதை கரகாட்டக்காரனாக வெளியாகி வெள்ளிவிழா கண்டது. அப்படத்தின் கதாநாயகனும் கதாநாயகியும் சில நாட்களில் காணாமல் போய்விட்டனர். ஆனால் கவுண்டமணி, செந்தில் ஜோடியின் வாழைப்பழக் கதை இன்றும் சிரிக்க வைக்கிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே நேரத்தில் வெளியான முதல் தமிழ்ப் படம் வசந்த மாளிகை. யாழ்ப்பாணத்தில் வெலிங்டன், லிடோ ஆகிய இரு திரையரங்குகளில் ஒரு படப்பிரதி மூலம் காண்பிக்கப்பட்ட படம். இலங்கையிலும் இந்தியாவிலும் ஏககாலத்தில் வெள்ளிவிழாக் கொண்டாடிய படம்.வசந்த மாளிகை, கோகுலத்தில் சீதையாகவும் பாலும் தேனும், கற்பூர தீபமாகவும் படிக்காத மேதை, பேர்சொல்லும் பிள்ளையாகவும் உருமாறின.

ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 01/02/2004

Friday, December 16, 2011

சாதனைப் புயல் ஷேவாக்

சச்சின் டென்டுல்கரின் 100 ஆவது சதத்தை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்திருந்த வேளையில் சச்சினின் சாதனையையே முறியடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார் வீரேந்திர ஷேவாக்.
டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர்கள் சிலர் சதமெடுத்து அசத்தியுள்ளனர். 100, 200, 300, 400 ஓட்டங்கள் டெஸ்ட் போட்டியின் அரிய சாதனைகளாக உள்ளன. ஒரு நாள் போட்டியில் 200 ஓட்டங்கள் என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. கிரிக்கெட் உலகின் சாதனைகள் பலவற்றின் சொந்தக்காரராகிய சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியின் 200 ஓட்டங்கள் அடித்து புதிய சாதனையை ஏற்படுத்தினார்.
மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் 219 ஓட்டங்கள் எடுத்து புதிய சாதனையை ஏற்படுத்தினார் ஷேவாக்.
இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான ஷேவாக் ஆட்டமிழக்கும் வரை எதிரணி வீரர்கள் பதற்றத்துடனேயே இருப்பார்கள். அவர் அடித்தாட ஆரம்பித்தால் டெஸ்ட் போட்டியே ஒரு நாள் போட்டி போன்று விறுவிறுப்பாகிவிடும். அத்தபத்து, டிராவிட், லக்ஷ்மன் போன்றவர்கள் டெஸ்ட் போட்டியின் போது அடித்தாட வேண்டிய பந்துகளை தவிர்த்து விடுவார்கள். தன்னை நோக்கி வரும் பந்தை அடித்தால் ஆட்டமிழந்து விடுவேன் என்று நினைக்கும் வீரர்கள் அப்படியான பந்துகளைத் தவிர்ப்பார்கள். ஆனால் ஷேவாக் இதற்கு எதிர்மாறானவர். ஆட்டமிழப்பைப்பற்றிக் கவலைப்படாது எதிரணியை அச்சுறுத்துவதிலேயே குறியாக இருப்பார்.
நான்காவது ஒரு நாள் போட்டியின் நாணயச் சுழற்சியில் தோல்வியடைந்த மேற்கு இந்தியத்தீவுகள் அணித்தலைவர் டெரன்சமி வெறுப்படைந்தார். இந்திய அணித்தலைவர் ஷேவாக்குடன் கைக்குலுக்காது விலகிச் சென்றார். 170 ஓட்டங்களில் ஷேவாக் அடித்த இலகுவான பந்தை பிடிக்கத் தவறினார் சமி. அதன் பலனாக ஷேவாக் புதிய சாதனை படைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
மேற்கு இந்தியத்தீவுகள் அணி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 1984 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் ஆட்டமிழக்காது 189 ஓட்டங்கள் எடுத்ததே ஒரு நாள் போட்டியில் அதி கூடிய ஓட்டமாக இருந்தது. ஜெயசூரிய 189, ஹேர்ஸ்டன் 188 (ஆ.இ), டெண்டுல்கர் 186 (ஆ.இ), வட்சன் 185 (ஆ.இ), டோனி 183 (ஆ.இ)கங்குலி 183, ஹைடன் 181 (ஆ.இ) ஆகியோர் நெருங்கினார்களே தவிர முறியடிக்கவில்லை.
14 வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் வீரர் சயீட் அன்வர் இந்தியாவுக்கு எதிராக 194 ஓட்டங்கள் அடித்து அச்சாதனையை முறியடித்தார். 2009 ஆம் ஆண்டு பங்களாதேஷýக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே வீரர் கலென்ட்ரி 194 ஓட்டங்கள் எடுத்து சமப்படுத்தினார். மறுமுனையில் நின்ற வீரர் ஆட்டமிழந்ததனால் சயீட் அன்வரின் சாதனை முறியடிக்கப்படவில்லை. 13 வருடங்களின் பின் 200 ஓட்டங்கள் எடுத்து சயீட் அன்வரின் சாதனையை முறியடித்தார் சச்சின்.
டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதை நினைத்தும் பார்க்க முடியாது என்ற கருத்து வலிமையடைந்த வேளையில் ஒரு வருடம் 10 மாதங்களில் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய சாதனை சில படைத்தார் ஷேவாக். இந்தப் போட்டியில் புதிய சாதனைகள் பதியப்பட்டன. சில சாதனைகள் சமப்படுத்தப்பட்டன. இன்னும் சில சாதனைகள் நூலிழையில் தவற விடப்பட்டன. 200 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்த போது சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியன. இந்திய வீரர் ஒருவர் இந்தச் சாதனையை முறியடித்தால் சந்தோஷப்படுவேன் என்றார் சச்சின். அவர் விரும்பிய படியே இந்திய வீரர் ஷேவாக் அச் சாதனையை முறியடித்தார். சச்சினின் சிஷ்யப்பிள்ளையான @ஷவாக் இரட்டைச் சாதனையை முறியடித்ததனால் இந்திய ரசிகர்கள் இரட்டைச் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 295 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடித்து 300 ஓட்டங்கள் எடுத்தார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 197 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது பவுன்ரி அடித்து 200 ஓட்டங்கள் எடுத்தார். இந்தத் துணிவு ஷேவாக்கை தவிர வேறு எவருக்கும் இல்லை. அதனால் தான் 90 ஓட்டங்கள் கடந்ததும் ஷேவாக் அங்கிள் போல் சிக்ஸர் பவுன்டரி அடியுங்கள் என்று அர்ஜூன் தகப்பனார் டெண்டுல்கருக்கு ஆலோசனை கூறினார்.
சச்சின் டெண்டுல்கர் 50 ஆவது ஓவரில் 147 பந்துகளுக்கு முகம் கொடுத்து 200 ஓட்டங்கள் எடுத்தார். ஷேவாக் 44 ஆவது ஓவரில் 140 பந்துகளுக்கு முகம் கொடுத்து 200 ஓட்டங்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முழுமையாக நின்றால் இரட்டைச்சதம் அடிக்கலாம் என்று ஷேவாக் கூறியிருந்தார். இதுவரை 50 ஓவர்கள் விளையாடியதில்லை. 47 ஆவது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார்.
ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் டெஸ்ட் போட்டியில் முச்சதம் எடுத்த ஒ@ர வீரர் அணித்தலைவராக அதி கூடிய ஓட்டங்கள் எடுத்த வீரர் முன்னர் சனத் ஜயசூரிய 189, டெண்டுல்கர் 186, ஓட்டங்கள் எடுத்தனர். சச்சின், ஷேவாக் இருவரும் மத்திய பிரதேசத்தில் இரட்டைச் சதமடித்தனர்.
ஷேவாக், கம்பீர் ஜோடி முதல் விக்கெட்டில் 176 ஓட்டங்கள் எடுத்தது. 2002 ஆம் ஆண்டு கங்குலி ஷேவாக் ஜோடி எடுத்த 176 ஓட்டங்கள் சமப்படுத்தப்பட்டது. ஒரு நாள் போட்டியில் ஷேவாக் முதன் முதலாக ஏழு சிக்ஸர்கள் அடித்தார்.
ஏழு சிக்ஸர், 25 பவுண்டரிகள் மூலம் 142 ஓட்டங்கள் எடுத்து சிக்ஸர் பவுண்டரிகள் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது வீரராக உள்ளார். 15 சிக்ஸர் 15 பவுண்டரிகள் மூலம் 150 ஓட்டங்களைக் குவித்து அவுஸ்திரேலிய வீரர் வட்சன் முதலிடத்தில் உள்ளார். 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி இந்தியா இரண்டாவது பெரிய வெற்றியை பெற்றது.
160 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த் திய@த முதலிடத்தில் உள்ளது.
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் பங்களாதேஷûக்கு எதிராக 175 ஓட்டங்கள் எடுத்த ஷேவாக்கின் அதி கூடிய ஓட்டங்களாக இருந்தது.
140 பந்துகளில் ஆறு சிக்ஸர் 23 பவுண்டரிகள் மூலம் 175 ஓட்டங்களை குவித்தார்.
2001 ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் அரைச்சதமடித்தார். குறைந்த பந்தில் அரைச்சதமடித்த ட்ராவிட், கபில்தேவ், யுவராஜ் சிங் ஆகிய இந்திய வீரர்களுடன் இரண்டாவது இடத்தைப்பகிர்ந்து கொண்டனர்.
டொன் பிரட்மன் பிரையன் லாரா ஆகியோருக்கு அடுத்ததாக இரண்டு முறை 300 ஓட்டங்கள் அடித்தார்.
இலங்கை அணிக்கு எதிராக இரட்டைச் சதமடித்த முதல் வீரர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இறுதி வரை ஆட்டமிழக்காது 201 ஓட்டங்கள் எடுத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய கவாஸ்கர் ஆட்டமிழக்காது 127 ஓட்டங்கள் எடுத்ததே அதி கூடிய ஓட்டமாக இருந்தது.


டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது முறை இரட்டைச் சதமடித்த ஷேவாக் அதிக இரட்டைச் சதமடித்த இந்திய வீரர் ட்ராவிட்டுடன் முதலிடத்தில் உள்ளார். சச்சின் கவாஸ்கர் ஆகியோர் தலா இரட்டைச் சதமடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர். டெஸ்ட் போட்டியில் முச்சதம் ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதமடித்த ஒரே வீரர்.
ஷேவாக்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறக்கிய பெருமை கங்குலியையே சாரும். 2001 ஆம் ஆண்டு இலங்கை நியூஸிலாந்து இந்திய ஆகிய நாடுகள் கலந்து கொண்ட முத்தரப்பு போட்டியில் காயம் காரணமாக சச்சின் விளையாடவில்லை.
கங்குலியுடன் இணைந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரனாகக் களமிறங்கிய ஷேவாக் 69 பந்துகளில் அதிரடியாக விளையாடி தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்தார். குறைந்த பந்தில் சதமடித்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை பிடித்தார். 62 பந்துகளில் சதமடித்து அஸாருதீன் முதலிடத்தில் உள்ளார்.
துடுப்பாட்டத்தில் மட்டுமல்ல நெருக்கடியான நேரங்களில் சுழல் பந்து மூலம் முக்கியமான வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார்.
ஒரு நாள் போட்டியில் நான்கு முறை 400 ஓட்டங்களை கடந்த ஒரேயொரு அணியாக இந்தியா உள்ளது. இலங்கை, தென்னாபிரிக்க ஆகியன தலா இரண்டு தடவையும் அவுஸ்திரரேலியா, நியூஸிலாந்து ஆகியன தலா ஒரு முறையும் 400 ஓட்டங்களைக் கடந்துள்ளன.


இரட்டைச் சதமடித்து உலக சாதனை செய்த ஷேவாக்குக்கு டெல்லி கிரிக்கெட் 25 இலட்சம் ரூபா பரிசு வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. ஷேவாக்கை நோக்கி விளம்பர நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. சுமார் 10 நிறுவனங்களின் விளம்பரங்களில் ஷேவாக் தோன்றுகிறார். ஆண்டுக்கு இரண்டு கோடி முதல் 2.5 கோடி வரை விளம்பரத்துக்குப் பெறுகிறார். அடுத்த இரண்டு மாதங்களில் ஐந்து புதிய நிறுவனங்களுடன் ஷேவாக் ஒப்பந்தம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1999 ஆம் ஆண்டு மொஹாலியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய ஷேவாக் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 2001 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக விளையாடிய ஷேவாக் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்துக் கலக்கினார். 2006 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் முதலாவது 20 ஓவர் அணிக்கு தலைவராகச் செயற்பட்டார்.
சிறு வயதில் கிரிக்கெட் மீது அவர் ஆர்வங்கொண்ட ஷேவாக்கை தந்தை ஊக்குவித்தார். விளையாட்டை விட்டு விட்டு படிக்குமாறு தயார் அறிவுறுத்தினார். கிரிக்கெட் மீது பிரியம் கொண்ட ஷேவாக்கை அரோரா வித்யா பள்ளியில் தகப்பன் சேர்த்தார்.
அப்பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளரான ஏ.என்.சர்மா, நுணுக்கங்களை ஷேவாக்குக்கு சொல்லிக் கொடுத்தார். 199798 இல் டில்லி அணியிலும் 199899 இல் துலிப் கோப்பைக்கான வடக்கு மண்டல அணியிலும் இடம்பிடித்தார்.
இப்போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட ஷேவாக் தென் ஆபிரிக்காவுக்குச் சென்ற 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம் பிடித்தார்.
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஒரு நாள் போட்டிகளில் ஷேவாக், அஸ்வின்,வருண் ஆரோன், @ராஹித் Œர்மா கோஹ்லி, ட்ராகுல் சர்மா ஆகியோர் முத்திரை பதித்தனர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியா இலங்கை ஆகியவற்றுக்கிடையேயான முத்தரப்பு ஒரு நாள் போட்டியிலும் இந்தியா விளையாடவுள்ளது.
சச்சின் மீதே சகலரின் பார்வையும் இருக்க புதியவர் யாராவது சாதனை படைப்பாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 16/12/11

Thursday, December 15, 2011

திரைக்குவராதசங்கதி 24

தமிழ் இலக்கியத் துறையின் மிகப்பெரிய ஜாம்பவான்கோவி மணிசேகரன்; இலக்கிய சாம்ராட் பட்டம் பெற்ற வித்தகர். கோவி மணிசேகரனின் எழுத்துக்காக தமிழ் இலக்கியஉலகம் காத்துக்கிடந்தது.ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200 நாவல்கள்,10 ஆயிரம் கவிதைகள், 10 நாடகங்கள் எழுதி இலக்கியஉலகில் மிளிரும் கோவி மணிசேகரனின் அடிமனதில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் புரையோடிபோயிருந்தது. இலக்கியவாதி ஆவதற்கு முன்னே சினிமாவில்சாதிக்க வேண்டும் என விரும்பினார்.சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ""சண்டமாருதம்'' என்ற சினி
மா பத்திரிகையில் பணியாற்றிய போது அவரது சினிமாஆர்வம் இன்னும் அதிகரித்தது. சண்டமாருதம் பத்திரிகையின் ஆசிரிய ராகத் திகழ்ந்தவர் கவியரசு கண்ணதாசன்
.அந்தக்கால சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி. ஆர், பி.யு. சின்னப்பா ஆகியோரின் பாடல்களை அப்படியே அழகாக பாடும் திறமை கோவி மணிசேகரனுக்கு இருந்தது. பிற்காலத்தில்முறைப்படி சங்கீதம் பயின்று பட்டம் பெற்றார். மந்திரிகுமாரி படத்தின் வசனங்களைக் கேட்டுவிட்டு இப்படியும்
வசனம் எழுதலாமா என்று வியந்தார் கோவி மணிசேகரன்.எதிர்பார்த்த சினிமா ஆசை அவரைத் தேடிவந்தது. 24 வயதில் "நல்லகாலம்' என்ற படத்துக்கு வசனம் எழுதினார். அப்படத்தின் கதாநாயகனாக எம்.கே. ராதா நடித்தார். அதற்காகஅவருக்கு 101 ரூபா வழங்கப்பட்டது. பூலோகரம்பை படத்துக்காக இரண்டு பாடல்கள் எழுதினார். அப்பாடல்களைஏ.எம். ராஜாவும், ராதாஜெயலக்ஷ்மி பாடினார்கள். ஏ.எம்.ராஜாவும், கோவி மணிசேகரனும் வேலூரில் நரசிம்மனு நாயுடு என்றசங்கீத வித்துவானிடம் ஒன்றாகசங்கீதம் பயின்றவர்கள். பூலோகரம்பையின்பாடல்களுக்காக கோவிமணிசேகரனுக்கு 1000ரூபா வழங்கப்பட்டது.
இது அந்தக்காலத்தில்மிக அதிக தொகை.சினிமாவில் வெற்றிபெற முடியாததனால் மீண்டும் இலக்கியத்தில் முழுமூச்சாக ஈடுபடத்தொடங்கினார்.
கோவி மணிசேகரன்
சினிமா ஆசையை ஒரு புறம் ஒதுக்கிவைத்து விட்டு நாடகங்கள் எழுதி அரங்கேற்றினார். அவருடைய நாடகங்களுக்கு இளையராஜா இசை அமைத்தார்.
கோவி மணிசேகரனின் நாடகங்கள் மக்களைக் கவர்ந்ததனால்அவரிடம் கதை கேட்க பல தயாரிப்பாளர்கள்போட்டியிட்டனர். சினிமாவுக்கு கதை கூறும் திறமை இல்லாததனால் கதையைக் கேட்ட எவரும் படத்தைத் தயாரிக்கமுன்வரவில்லை. திரைப்பட நுணுக்கங்களைப் பற்றி அறியவேண்டுமானால் அனுபவம் உள்ள இயக்குநரிடம் உதவியாளராக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். யாரிடம் உதவியாள‌ராகச்சேர்ந்தால் முறைப்படி சினிமாவை
ப் பற்றிய சகல நுணுக்கங்களையும் அறிந்துகொள்ளலாம் என்று யோசித்தவரின் மனதில் இயக்குநர் சிகரம்கே.பாலச்சந்தர் மனதில் வந்தார்.பாலச்சந்தரின் ""வெள்ளி விழா'' படம் வெற்றி பெற்றிருந்த வேளை, அடுத்து அரங்கேற்றம் என்ற படத்தை தயாரிப்பதற்கு கே.பாலச்சந்தர் அறிவித்தல் விடுத்திருந்தார்.
அரங்கேற்றவேலையில் பாலச்சந்தர் இருந்த வேளையில்அவரின் முன்னால் போய் நின்றார் கோவி மணிசேகரன்.மிகச் சிறந்த இலக்கியவாதி தனது வீட்டிற்கு வந்ததைப்பார்த்த கே.பாலச்சந்தர் "என்ன இந்தப் பக்கம்' எனஆச்சரியத்தோடு கேட்டார். இமயமலையைத் தேடிபறங்கிமலையான தான் வந்த காரணத்தைக் கூறினார்கோவி மணிசேகரன்.

"நீங்கள் மிகப் பெரிய இலக்கியவாதி. உங்களுக்கு ஆயிரக்கணக்கான வாசகர்கள் இருக்கிறார்கள்' என்று இயக்குநர்சிகரம் கே.பாலச்சந்தர் கூறியபோது, அதனை இடைமறித்தகோவி மணிசேகரன் ""இந்த விசயத்தில் நான் உங்கள் ஏ.பி.சி.டி மாணவன்'' என்றார்.கோவி மணிசேகரனை தனது உதவியாளராகச் சேர்ந்தார்இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். தமிழ்த்திரை உலகில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய படம் ""அரங்கேற்றம்''பிரமீளாவின் நடிப்பில் தமிழ் ரசிகர்கள் கண்ணீர் வடித்தபடம் அரங்கேற்றம். அப்படத்தில் இணை இயக்குனராகதமிழ்த்திரை உலகில் அரங்கேற்றினார் கோவி மணிசேகரன்.உதவி இயக்குநர் கோவி மணிசேகரன் என தனியாக அவரின் பெயர் திரையில் காட்டப்பட்டது. ஏனைய உதவி இயக்குநர்கள் இதனால் மனம் வருந்த தமது கவலையை இயக்குநர் சிகரத்திடம் கூறினார்கள். "அவர் மிகப்பெரிய இலக்கியவாதி. அவருக்கு நான் மதிப்புக் கொடுக்க வேண்டும். அதனால்தான் அவரது பெயரை தனியாக திரையில் போட்டேன்'' என்றார் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்.
ரமணி

மித்திரன்28/10/2007



Monday, December 12, 2011

கொந்தளிக்கிறது தமிழகம் குழி பறிக்கிறது கேரளா

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் தமிழகத்துக்கும் கேரளாவுக்குமிடையேயான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை வலுவிழந்துள்ளது. அந்த அணை எந்த நேரத்திலும் உடைந்து கேரளாக் கிராமங்கள் நீரில் மூழ்கி விடலாம் என்ற கேரள அரசியல்வாதிகளின் பிரசாரம் இப்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. முல்லைப்பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது. கேரள அரசு கூறுவதுபோல் பூகம்பம் வந்தாலும் அணைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது என்று தமிழகம் அடித்துக் கூறி வருகிறது.
முல்லைப்பெரியாறு சம்பந்தமான பிரச்சினையில் தமிழகமும் கேரளாவும் நீதிமன்றத்தை நாடின. மேல் நீதிமன்றம்வரை சென்ற இந்த வழக்கில் தமிழகத்துக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்தது கேரள அரசு. நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்குரிய எந்த நடவடிக்கையையும் கேரள அரசு செய்யவில்லை. நீறுபூத்த நெருப்பாக இருந்த முல்லைப்பெரியாறு பிரச்சினை டாம் 999 என்ற ஆங்கிலப் படத்தின் மூலம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அணை உடைந்து கிராமங்களுக்குள் நீர் செல்வதனால் ஏற்படும் பின் விளைவுகளைச் சித்தரிக்கும் இப்படம் முல்லைப்பெரியாறு அணை வலுவில்லாதது என்பதைக் கூறுவதாகத் தமிழகம் குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவில் அணை ஒன்று உடைந்தபோது நடைபெற்ற அவலங்களைத் தான் படமாக்கி இருக்கிறேன். தமிழகத்தைப் பற்றியோ அல்லது முல்லைப் பெரியாறு பற்றியோ படத்தில் ஒரு கருத்தும் கூறவில்லை என்கிறார் இயக்குனர். தமிழகம் பற்றியும் முல்லைப் பெரியாறு பற்றியும் அவர் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் அவர் இயக்கிய படம் முல்லைப்பெரியாறு பற்றித்தான் என்பது வெளிப்படையானது.
தமிழக கர்நாடக எல்லைகளான தேனி, போடி ஆகியவற்றில் பதற்ற நிலை நீடிக்கிறது. தமிழகத்தில் இருந்து சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர்கள் விரட்டப்பட்டனர். கேரள பகுதிக்குக் கூலி வேலைக்குச் சென்றவர்கள் அச்சுறுத்தப்பட்டனர். கேரளாவில் இருந்து தமிழகம் சென்றவர்களும் லொறிகளும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன. கேரள மக்களுக்கு எதுவித அச்சுறுத்தலும் தமிழக எல்லையில் விடுக்கப்படவில்லை. தமிழக கேரள எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தைத் தீர்ப்பதற்கு மத்திய அரசு உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் உள்ளனர். அதேபோன்று கேரளக் கட்சிகளும் ஒரு அணியாக உள்ளன. தேசியக் கட்சி என்று கூறிக் கொள்ளும் காங்கிரஸாரும் இடது சாரிகளும் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் இரட்டை வேடமிடுகின்றன. தமிழக காங்கிரஸாரும் இடதுசாரிகளும் தமிழக அரசுக்கும் கேரள காங்கிரஸாரும் இடதுசாரிகளும் கேரள அரசுக்கும் ஆதரவாகச் செயற்படுகின்றனர்.
நீதிமன்றத் தீர்ப்புகளை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டு தன்னிச்சையாகச் செயற்படும் கேரள அரசைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் உள்ளது மத்திய அரசு. இந்த விவகõரத்திற்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் தமிழக காங்கிரஸ் அதளபாதாளத்தில் வீழ்ந்துவிடும். காங்கிரஸுடன் கூட்டணி சேர தமிழக அரசியல் கட்சிகள் எவையும் முன்வராத நிலை ஏற்படும்.


ஜெயலலிதா தமிழக முதலமைச்சரானதும் கருணாநிதி, ஸ்டாலின் அழகிரி ஆகியோருக்கு எதிராக ஏதாவது ஒரு வழக்குத் தாக்கல் செய்யப்படும். அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 2001ஆம் ஆண்டு கருணாநிதியையும் ஸ்டாலினையும் ஊழல் புகாரில் கைது செய்து ஊழல் புகார் நிரூபிக்கப்படாமையினால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
ஆகையினால் வலுவான ஆதாரமின்றி அவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. ஜெயலலிதா முதல்வரானதும் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்களும் முக்கிய புள்ளிகளும் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஸ்டாலினைச் சீண்டிப் பார்க்க முனைந்த சிலர் ஸ்டாலின் மீது புகார் கொடுத்தனர்.
ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தனது வீட்டை மிரட்டி வாங்கியதாக சேஷாத்திரிகுமார் என்பவரும் புகார் கொடுத்துள்ளார். தமிழக அமைச்சர் பரஞ்சோதி மீது டாக்டர் ராணி என்பவர் கொடுத்த புகாரை பொலிஸார் ஏற்க மறுத்தனர். அவர் நீதிமன்றத்தை நாடினார். அமைச்சர் மீதான புகாரை ஏற்றுக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆகையினால் ஸ்டாலின் மீதான புகாரை மேலிடத்து அனுமதி இன்றி பொலிஸார் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார்கள். தனக்கு எதிரான குற்றச்சாட்டை தனக்குச் சாதகமாக்கியுள்ளார் ஸ்டாலின்.
அரசியல்வாதிகள் மீது பொலிஸில் புகார் செய்யப்பட்டால் முன் பிணை பெறுவது அல்லது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதே வழமையானதாகும். ஸ்டாலின் அதற்கு நேர்மாறாகச் செயற்பட்டுள்ளார். தன் மீது புகார் செய்ப்பட்டதும் பொலிஸ் உயர் அதிகாரியைச் சந்தித்து தன்னைக் கைது செய்யும்படி வலியுறுத்தினார். ஸ்டாலினின் வேண்டுகோளால் பரபரப்பு ஏற்பட்டது. முன்பிணை வாங்க மாட்டேன். நீதிமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறுவேன். வழக்கை ஒத்தி வைக்கும்படி கோரிக்கை விடமாட்டேன் என்ற ஸ்டாலினின் வார்த்தைகள் ஜெயலலிதாவுக்கு சாட்டை அடியாக விழுந்தன.
கொடநாடு, சிறுதாவூர் ஆகிய இடங்களில் உள்ள நிலங்களை இன்னொருவரின் பெயரில் ஜெயலலிதா அபகரித்துள்ளார். இதற்கு சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கொடநாடு விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பையே ஜெயலலிதா தட்டிக் கழித்தார் என்பதையும் ஸ்டாலின் நினைவூட்டினார். ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி அறிவித்துள்ளார். ஸ்டாலினுக்கு வைத்த பொறியில் தமிழக அரசு சிக்கியுள்ளது.
வர்மா


சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு11/12//11



Sunday, December 11, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 16



புற்றுநோய் காரணமாக மரணமடையும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவர் தான் இறந்ததும் மறுமனம் செய்யும்படிபடி மனைவியிடம் கூறுகிறார். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழிக்கு ச‌வால் விட்ட திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்.
தேவிகாவும் கல்யாண்குமாரும் காதலர்கள் ச‌ந்தர்ப்பவச‌த்தால் இருவரும் பிரிந்து விடுகின்றார்கள். தேதவிகா முத்துராமனை திருமணம் செய்கிறார். முத்துராமனுக்கு புற்றுநோய் என்று தெரியவருகின்றது. முத்துராமனின் புற்றுநோயைத்தீர்க்க அதில் நிபுணத்துவம் பெற்ற பல வைத்தியரிடம் அழைத்துச் செல்கிறார் தேவிகா. தேவிகா தேடிச் சென்ற வைத்தியர் தேவிகாவின் காதலர் கல்யாண்குமார். தனது முன்னாள் காதலியின் கணவனுக்கு புற்றுநோய் என்பதை அறிந்த டாக்டர் கல்யாண்குமார் துடிக்கிறார். புற்றுநோயை குணப்படுத்தி முத்துராமனை காப்பாற்றுவதாக உறுதியளிக்கிறார்.
நோய் பற்றி நன்கு அறிந்த முத்துராமன் தான் நீண்ட காலம் உயிர் வாழப்@பாவதில்லை என்று நினைக்கிறார். தன் மனைவி தேவிகாவும் தனக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கல்யாண்குமாரும் காதலர்கள் என்ற உண்மை முத்துராமனுக்குத் தெரியவருகிறது. தான் இறந்த பின் விதவையாக இருக்கக்கூடாது மறு மணம் செய்ய வேண்டும் என்று தேவிகாவுக்குக் கூறுகிறார் முத்துராமன். இரவு பகலாக ஆராய்ச்சி செய்து முத்துராமனை காப்பாற்றிய பின் உயிரிழக்கிறார் கல்யாண்குமார்.
1961 ஆம் ஆண்டு வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தைப்பற்றிய விமர்ச‌னங்கள் பரப்பரப்பாக இருந்தாலும் தமிழ்க் கலாசாரத்துக்கு ச‌வால்விடும் முக்கோணக் காதல் கதையை ச‌ற்றும் பிச‌ங்காது வெற்றிகரமாக முடித்தார் ஸ்ரீதர். முத்துராமன், தேவிகா, கல்யாண்குமார், நாகேஷ், குட்டி பத்மினி ஆகியோர் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். இசை, மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் ராமமூர்த்தி. பாடல்கள், கவியரசு கண்ணதாச‌ன். ஒளிப்பதிவு வின்செட். கதை, வச‌னம், டைரக்ஷன் ஸ்ரீதர். ஸ்ரீதரின் சித்ராலயா இப்படத்தை தயாரித்தது.
நெஞ்சில் ஓர் ஆலயம் 14 நாட்களில் படமாக்கப்பட்டது. முக்கோண காதல் கதையை தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்த்தியிருந்தார் ஸ்ரீதர். தான் இறக்கபோவது உறுதி என நம்பிய முத்துராமன் தேவிகாவை மணப்பெண் அலங்காரத்தில் பார்க்க ஆசைப்படுகிறார். முத்துராமனின் ஆசைப்படி மணப்பெண் அலங்காரத்தில் தேவிகாபாடிய‌ சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே என்ற பாடல் காட்சியை பார்த்து கலங்காதவர்கள் இல்லை. இப்படக் கதையையும் தேவிகாவின் மன நிலையையும் ஒன்று சேர பாடலாக்கியிருந்தார் கவியரசு கண்ணதாச‌ன். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்குப் பாடல் எழுதுவதற்கு கண்ணதாச‌ன் கால தாமதம் செய்ததனால் கோபித்துக் கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணதாச‌னுடன் வேலை செய்ய முடியாது என்று கூறியதை அறிந்ததினால் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பதிலளிப்பதற்காகவே சொன்னது நீதானா என்ற வரியுடன் ஆரம்பித்தார் கண்ணதாச‌ன்.அந்தப்பாடல் வரிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பதிலளிப்பதாகவே அமைந்தது.
கல்யாண்குமாருக்காக ஏ.எல்.ராகவன் பாடிய எங்கிருந்தாலும் வாழ்க முத்துராமனுக்காக பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை ஆகிய பாடல்களும் படத்தின் கதையை ஒட்டியே எழுதப்பட்டன. முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ என்ற ச‌ந்தோஷப் பாடலில் மகிழ வைத்த குட்டி பத்மினி முத்தான முத்தல்லவோ என்ற சோகப்பாடலில் கலங்க வைத்தார். துள்ளிவரும் மான்குட்டி, என்ன நினைத்து என்னை அழைத்தாயோ ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம் ஆகிய பாடல்களும் இன்றும் மனதைவிட்டகலாதவை.
படம் முழுக்க சோகம் இழையோடி இருந்தாலும் வாட் போயாக வரும் நாகேகஷ் கலகலப்பூட்டுகிறார். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் கல்யாண்குமார் அணிந்த கொலர் இல்லாத ச‌ட்டை அக்காலத்தில் பஷனாகியது. தமிழில் பெரும் வெற்றிபெற்ற நெஞ்சில் ஓர் ஆலயம். திலரக் மந்திரம்என்ற‌ பெயரில்ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்றது. ராஜேந்திரகுமார் ராஜ்குமார் மீனாகுமார் ஆகியோருடன் குட்டிபத்மினி நடித்தார்.
ரமணி



மித்திரன்11/12/11

Thursday, December 8, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 15

தமிழ்த்திரை வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்திய படம்சிந்தாமணி. 1937 ஆம் ஆண்டு வெளியான சிந்தாமணி என்ற இப்படத்தைப் பார்த்த அன்றைய இளைஞர்கள் நாயகியான அசுவத்தம்மா மீது காதல் கொண்டு அலைந்தார்கள். அசுவத்தம்மாவின் முகத்தை ஒரு முறை பார்பபதற்கு இளைஞர்கள் முன்டியடித்தார்கள். அசுவத்தம்மாவை பார்க்கும் ஆவலில் இலங்கையிலிருந்தும் பல இளைஞர்கள் கப்பல் மூலம் இந்தியாவுக்குச்சென்றார்கள். குடும்பத்தையும் மனைவியையும் துறந்து தாசி சிந்தாமணியே கதி என்று கிடந்த கோடீஸ்வர இளைஞனின் கதைதான் சிந்தாமணி.
தாசி குடும்பத்தில் பிறந்த சிந்தாமணி. விருப்பமின்றி குலத் தொழில் செய்து வருகிறாள். சிந்தாமணியின் அழகில் மயங்கிய பலர் அவளின் வீட்டுக்கு அடிக்கடி சென்றனர்.பேராசை பிடித்த சிந்தாமணியின் தாய், சிந்தாமணியைத்தேடி வருபவர்களின் பெறுமதிமிக்க பொருட்களையும்சொத்துக்களையும் அபகரித்த பின் விரட்டிவிடுவாள். சிந்தாமணியின் தாயிடம் சொத்துக்களைப் பறிக்கொடுத்து ஓட்டாண்டியானவர்களில் எம்கேக.தியாகராஜபாகவதரின் நண்பனும் ஒருவர். சொத்துக்களை இழந்தபோதும் சிந்தாமணியின் அழகில் சொக்கியுள்ள அவர் தன் நண்பனான எம்.கே. தியாகராஜபாகவதருக்கு சிந்தாமணியை அறிமுகப்படுத்துகிறார்.
கோவிலில் சிந்தாமணியின் நாட்டியத்தைப் பார்த்த எம்.கே.தியாகராஜபாகவதர் மதிமயங்குகிறார். சிந்தாமணியின் நாட்டியமும் அழகும் எம்.கே.தியாகராஜபாகவதரின் மனதைக் கிறங்கடித்தன. அழகு தேவதையின் அபிநயத்தில் மயங்கிய எம்.கே.தியாகராஜபாகவதர் சிந்தாமணியின் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினார். சிந்தாமணியின் தாய் தன் சுயரூபத்தை மெல்ல மெல்ல வெளிப்படுத்தத் தொடங்குகிறாள். எம்.கே.தியாகராஜபாகவதர் வீட்டில் உள்ள பெறுமதியான பொருட்கள் எல்லாம் சிந்தாமணியின் வீட்டுக்கு இடம் மாறுகின்றன.
தாசி வீடே கதியென எம்கே.தியாகராஜபாகவதர் கிடப்பதைக்கண்டு தகப்பன் தன் சொத்துக்களை மருமகளின் பெயருக்கு மாற்றினார். கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற கொள்கையின் படி வாழும் எம்..கே. .தியாகராஜபாகவதரின் மனைவி சொத்துக்கள் அனைத்தையும் கணவனின் காலடியில் வைத்து தன்னுடன் சேர்ந்து வாழும்படி கெஞ்சுகிறாள். சொத்தை இழந்தாலும் சுகத்தை இழக்க விரும்பாத எம்.கே.தியாகராஜபாகவதர் தாசி சிந்தாமணியைத் தேடிச் செல்கிறார். இடியுடன் கூடிய மழை பெய்யும்போது எம்கே.தியாகராஜபாகவதரின் தகப்பன் இறந்துவிடுகிறார். தகப்பன் இறந்ததையும் பொருட்படுத்தாது சிந்தாமணியைத் தேடிச் செல்கிறார் தியாகராஜபாகவதர். தியாகராஜபாகவதரின் மனைவி கங்கையில் மூழ்கி உயிரிழக்கிறார்.
கடும் மழை கரணமாக வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அப்போது வெள்ளத்தில் மிதந்துவந்த பிணம் ஒன்றைப் பற்றிப்பிடித்து நீந்திக்கொண்டு சிந்தாமணி வீட்டுக்குச் செல்கிறார் எம்.கே.தியாகராஜபாகவதர். மதிலில் மலைபாம்பு ஒன்று தொங்கியிருக்க கொடி என நினைத்து மலைப்பாம்பைப் பிடித்து மதிலேறி சிந்தாமணியின் வீட்டுக்குள் செல்கிறார் எம்.கே.தியாகராஜபாகவதர். எம்.கே.தியாகராஜபாகவதரின் கரத்தில் உள்ள இரத்தக் கறையைக் கண்ட சிந்தாமணி இது எப்படி ஏற்பட்டது என வினவுகிறாள். வெள்ளத்தில் கட்டையைப்பிடித்து நீந்தியதாகவும் கொடியைப்பிடித்து மதிலைக் கடந்ததாகவும் கூறுகிறார் எம்.கே.தியாகராஜபாகவதர்.
தியாகராஜபாகவதர் கூறியது உண்மையா என்று பார்ப்பதற்கு சென்று பார்த்தபோது மதிலில் மலைபாம்பு இருந்தது. அவர் கரையேறிய இடத்தில் மனைவியின் பிணமும் கிடந்தது. தன் தவறை உணர்ந்த தியாகராஜபாகவதர் கிருஷ்ண பக்தராக மாறுகிறார். இதுவரை காலமும் குருடனாக வாழ்ந்ததை எண்ணி தன் கண்ணைக் குத்தி குருடனாகிறார். சிந்தாமணியும் பக்தையாகிறாள்.
சிந்தாமணி அல்லது பில்வமங்கள் என்ற பெயர் இப்படம் வெளியான போதும் சிந்தாமணி என்ற பெயரே நிலைத்துவிட்டது. சிந்தாமணியாக அசுவத்தம்மாவும், பில்வமங்களாக எம்.கே.தியாகராஜபாகவதரும் நடித்தனர். எம்.கேதியாகராஜபாகவதரின் மனைவியாக அரங்கநாயகியும், நண்பனாக வை.வி.ராவும் நடித்தனர். பாடல்கள் பாப நாசசிவன். வசனம் ஏ.அய்யாலு சோமயாஜுலு, ஒளிப்பதிவு வை.பி.வாஷிர். இயக்கம் நண்பனாக நடித்த வை.வி.ரா. இவர் நடிகை லக்ஷ்மியின் தகப்பனாவார். ஆந்திராவில் நீண்ட காலமாக நாடகமாக நடிக்கப்பட்ட கதையே சிந்தாமணி என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்றது.
53 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடிய சிந்தாமணி திரைப்படம் வரலாற்றில் பலசாதனைகளைப் படைத்த மதுரையில் உள்ள ராயல் டாக்கீஸ் சிந்தாமணி படத்தை தயாரித்தது. சிந்தாமணியின் வெற்றியைக்கடந்து மதுரைராயல் டாக்கீஸ் சிந்தாமணி தியேட்டர் என பெயர் மாறியது. இப்படம் பின்னர் மறு தணிக்கை செய்யப்பட்டது.
மாயப்பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை, பஜனை செய்வோம் கண்ணன் நாமம், ஞானக்கண் இருந்திடும் போதினிலே, ராதே உனக்கு கோபம் ஆகாதடி போன்ற பாடல்களை முணு முணுக்காதவர்களே இல்லை.செஞ்சுருட்டியில் வர்ண மெட்டில் அமைந்த ராதே உனக்கு கோபம் ஆகாதடி என்ற பாடலே ரங்கூன் ராதா படத்தில் ரி.எம்.எஸ் பாடிய ராதை உனக்கு கோபம் ஆகாதடி என்ற பாடலின் முன்னோடியாகும்.
ரமணி



மித்திரன்04/12//11

Tuesday, December 6, 2011

திரைக்குவராதசங்கதி 23

பேரறிஞர் அண்ணாவின் செல்லப்பிள்ளை. நடிப்பிசைப் புலவர் என அண்ணாவால் பட்டம் சூட்டப்பட்டவர். வசனஉச்சரிப்பிலும் பாட்டிலும் தனக்கென ஒருபாணியை வகுத்துக் கொண்டவர் கே. ஆர்.ராமசாமி.குடந்தையை அடுத்து அம்பா சமுத்திரத்தில்ராமபத்திர செட்டியார் குப்பம்மாள்தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தகே. ஆர். ராமசாமி நான்காவது வகுப்புடன்படிப்பை முடித்து விட்டு நாடகத்தில் நடிக்கத்தொடங்கி விட்டார்.பாய்ஸ் கொம்பனி என அழைக்கப்படும்மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கொம்பனியின்சிறுவர் நாடகக் குழுவில் இணைந்தார்.நடிப்பில் ஆர்வம் உள்ள கே. ஆர். ராமசாமிக்கு சிறு சிறு வேடங்களே கிடைத்தன.தனது ஆர்வத்துக்கு உரிய இடம் இதுஅல்ல என்பதை உணர்ந்த கே. ஆர். ராமசாமி, டி.கே. என். சண்முகம் சகோதரர்களின்
நாடகக் குழுவில் சேர்ந்தார். அப்போது அவருக்கு 13 வயது.
டி.கே. சகோதரர்களின் நாடகக் குழுவில்இணைந்ததும் அவருடைய நடிப்பு மேலும்மெருகேறியது. டி.கே. சகோதரர்களின்மிக முக்கிய நடிகராக கே.
ஆர். ராமசாமி திகழ்ந்தார். தொழில் மீது அவர்வைத்திருந்த பக்தி அவரை உச்சத்துக்குகொண்டு சென்றது.குடந்தையில் சிவலீலா என்ற நாடகம்தொடர்ந்து 38 நாட்கள் நடந்தது. அப்போது கே. ஆர். ராமசாமியின் தகப்பன் மரணப்படுக்கையில் இருந்தார். பகல் முழுவதும் தகப்பனின் அருகில் துக்கம் தோய்ந்த
நிலையில் இருக்கும் கே. ஆர். ராமசாமிஇரவு வேஷமிட்டு ஹேமநாதர் எனும்வேடத்தில் கலகலப்பாகி மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார்.
ராமாயணம் நாடகத்தில் கே. ஆர். ராமசாமி ஆஞ்சநேயர் வேடமேற்று நடித்தார்.ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை கே. ஆர். ராமசாமியின்தகப்பன் மரணமாகி விட்டார்.அன்று மாலை 6 மணி வரை ஆஞ்சநேயராக யாரை நடிக்க வைப்பது என்று தெரியாது நாடகக் குழுக்களும் குழம்பியது. 11மணிக்கு நடிக்க வருவேன் எனகே.ஆர்.ராமசாமி தகவல் அனுப்பினார்.டி.கே. எஸ்ஸின் குழு நடித்த மேனகா,குமாஸ்தாவின் பெண் ஆகிய படங்களில்கே. ஆர். ராமசாமியும்நடித்தார். குமாஸ்தாவின் பெண் படத்தின்உதவி இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு ஆகிய இருவரின் மனதிலும் கே. ஆர். ராமசாமி இடம்பிடித்துவிட்டார்.
கே. ஆர். ராமசாமியின்கம்பீரமும் குரலும் நடிப்பும் அன்றையபிரபல நட்சத்திரமான தியாகராஜ பாகவதருக்கு ஈடõக இருந்ததை கிருஷ்ணனும்
பஞ்சுவும் அவதானித்தனர்.தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் கே. ஆர்.ராமசாமியை கதாநாயகனாக்கி படம் இயக்குவது என இருவரும் முடிவு செய்தனர்.
தமது விருப்பத்தை தயாரிப்பாளரிடம் கூறினர். தயாரிப்பாளர் சம்மதித்ததால் 1944ஆம் ஆண்டு கே. ஆர். ராமசாமி திருஞானசம்பந்தராக நடித்த பூம்பாவை வெளியானதுபூம்பாவை படம் சிறப்பாகப் பேசப்பட்டது. கே. ஆர். ராமசாமிக்குநல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. என்றாலும் அடுத்த படம்அவரைத் தேடி வரவில்லை.திரைப்பட வாய்ப்பு இல்லாததனால் மீண்டும் நாடக மேடைப் பக்கம் கவனம் செலுத்தத்தொடங்கினார் கே. ஆர். ராமசாமி.
மனோகரா நாடகத்தில் கே. ஆர். ராமசாமிமனோகராவாகவும் மனோகராவின் தாயார் பத்மாவதியாக கணேசனும் நடித்தனர்.அதே கணேசன்தான் பின்னர் மனோகராதிரைப்படத்தில் மனோகரனாக நடித்துகலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களைப் பேசினார்.பேரறிஞர் அண்ணாவின் நாடகங்களான ஓர் இரவு, வேலைக்காரி,சொர்க்க வாசல் ஆகியவை படமானபோது அவற்றில் நடித்து படத்துக்குசிறப்புச் சேர்த்தார் கே. ஆர். ராமசாமி.லட்சுமிகாந்தன் கொலைவழக்கி ல் தியாகராஜ பாகவதர் சிறை சென்றதால் அந்தஇடத்தை கே. ஆர். ராமசாமி நிறைவுசெய்தார். துளிவிஷம் படத்தில் கே. ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்தார். நடிகர் திலகம் வில்லனாக நடித்தார்.நாடோடி, அரச கட்டளை, நம் நாடுஆகிய படங்களில் மக்கள் திலகத்துடன்நடித்தார்.1971 ஆம் ஆண்டு நடிப்பிசைப் புலவர்கே. ஆர். ராமசாமி காலமானார் என்றாலும் பாராமுகம் ஏனம்மா, உள்ளம்தேடாதே என்று சொல்லுதே, செந்தமிழ்நாட்டுச் சோலையிலே சிந்து பாடித் திரியும்பூங்குயிலே, கண்ணில் தோன்றும் காட்சியாவும் கண்ணா உந்தன் காட்சியேபோன்ற பாடல்கள் இன்றும் மனதை விட்டுநீங்காது ரீங்காரமிடுகின்றன.
ரமணி
மித்திரன்21/10/2007

Monday, December 5, 2011

தேர்தலுக்குத் தயாராகிறார் வைகோகை கொடுக்குமா சங்கரன் கோவில்?

தமிழகத்தின் முன்னாள் முதல்வரின் பார்வை திஹார் சிறையை நோக்கியே இருந்தது. ஸ்பெக்ரம் விவகாத்தில் சி.பி. ஐ.யினால் கைது செய்யப்பட்ட கனிமொழி பிணையில் விடுதலையாவது சிக்கலாக இருந்தது. கனிமொழி பிணை கோரி சமர்ப்பித்த நான்கு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. சிறையில் வாழ்வதற்குத் தன்னைப் பழக்கப்படுத்தினார் கனிமொழி. சிறைக்குச் செல்வது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு புதியதல்ல. ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழி கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்ததை திராவிட முன்னேற்றக் கழகத்தினால் ஜீரணிக்க முடியாதுள்ளது. கனிமொழி பிணையில் வந்தது கருணாநிதிக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
கனிமொழி சிறையில் இருந்ததனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகளைத் தீவிரமாகக் கவனிக்க முடியாத நிலையில் தவித்தார் கருணாநிதி. தமிழக அரசின் கெடுபிடிகளினால் வாக்களித்த மக்கள் கலங்கிப் போயுள்ளனர். எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய விஜயகாந்த் அடக்கி வாசித்தார். தற்பொழுது தான் ஜெயலலிதாவுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளார். கருணாநிதியை வெளியேற்றுவதிலேயே குறியாக இருந்த விஜயகாந்த், ஜெயலலிதா முதல்வரானதும் என்ன செய்வார் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டார். தமிழக மக்கள் படும் துன்பங்களுக்கு விஜயகாந்தும் ஒரு காரணம் தனது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்தார் விஜயகாந்த். அவர் எதிர்பார்த்தது போன்றே கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதேவேளை யாருமே எதிர்பார்க்காத வகையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியையும் மக்கள் அவருக்கு வழங்கினார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் செய்த தவறுகளினால் தான் கருணாநிதி முதல்வர் பதவியை இழந்தார்.
எதிர்க்கட்சி என்ற அங்கீகாரமும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லாமல் போனது. ஜெயலலிதா ஆட்சி பீடம் ஏறியதும் தவறுக்கு மேல் தவறு செய்யத் தொடங்கினார். உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வதற்கு விரும்பிய விஜயகாந்த் தமிழக அரசின் தவறுகளைத் தட்டிக் கேட்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்ட விஜயகாந்த் தமிழக அரசின் தவறுகளைப் பட்டியலிடத் தொடங்கிவிட்டார். விஜயகாந்தின் காலம் கடந்த ஞானத்தினால் ஆகப் போவது ஒன்றுமில்லை. விஜயகாந்தின் பேச்சுக்கு ஆதரவாளர்கள் கை தட்டுவார்கள். அதனால் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதுவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிராகக் களமிறங்க வைகோ தயாராகி வருகிறார். சங்கரன் கோவில் தொகுதி இடைத் தேர்தலில் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடப் போகிறது. சங்கரன் கோவில் வைகோவின் சொந்தத் தொகுதி கருணாநிதியும் வைகோவும் ஓரணியில் இருந்தபோது சங்கரன் கோவில் தொகுதியை வைகோவின் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை. அதனால் கோபித்துக் கொண்ட வைகோ திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவுடன் கைகோர்த்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவினால் அவமானப்படுத்தப்பட்ட வைகோவின் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வாக்குப் பெற்று தனது பலத்தை நிரூபித்தார் வைகோ.
சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் மரணமாகிவிட்டார். அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை. அங்கு தேர்தலை சந்திக்க ஜெயலலிதாவும் வைகோவும் தயாராகி வருகின்றனர். அரசின் இலவசத் திட்டங்கள் சங்கரன் கோவில் தொகுதியில் மிக மும்மூரமாக விநியோகம் செய்யப்படுகின்றன. இடைத் தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட்டங்களை வைகோ நடத்தி வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின்போது நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் நேரடியாகப் போட்டியிட்டால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். ஆகையினால் சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்போட்டியிடாது ஒதுங்கலாம் என்ற எதிர்பார்ப்புற உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலின்போது சங்கரன் கோவில் தொகுதியில் சில இடங்களில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முதலிடம் பிடித்தது. சில இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தையே பிடித்தது. ஆகையினால் செல்வாக்கு இல்லாத சங்கரன் கோவில் தொகுதியில் இருந்து ஒதுங்கி ஜெயலலிதாவுக்கு கருணாநிதி நெருக்கடி கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விஜயகாந்த், இடதுசாரிகள் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரும் இதே நிலைப்பாட்டை எடுத்தால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி பிரகாசமானதாகி விடும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு04/12//11

Sunday, December 4, 2011

மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள்

போர்க்கால துன்பங்களிலும் துயரங்களிலும் சிக்கி அவஸ்தைப் பட்ட மக்களின் குரலாக வெளிவந்துள்ளது ""மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள்'' என்ற கவிதைத் தொகுதி இன்று வெளியாகும். கவிதைகளில் அதிகமானவை காதலுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. வெ.துஷ்யந்தன் என்ற இந்த இளைஞனின் கவிதைத் தொகுப்பில் சராசரி இளைஞனுக்கு உள்ள காதல் கவிதைகளைக் காண முடியவில்லை. மனித வாழ்வின் அவலங்களையும் இயலாமையையும் நறுக்குத் தெறித்தாற் போல் வெளிப்படுத்துகிறார்.
எங்கிருந்தோ வந்தால் என்ற முதலாவது கவிதையைப் படிக்கும்போது இவன் காதலில் விழுந்த கவிஞன் என்ற உணர்வு ஏற்படுகிறது. இறுதியிலே தான் காதலிப்பது கவிமகள், கவி மங்கை என்று கவிதை மீதான தன் காதலை வெளிப்படுத்துகிறார்.
மௌன தேவதை
எல்லோர் இதயங்களிலும்
நிரந்தரவாசியாயிருக்கிறாள்
என்ற வரிகளின் மூலம் மக்கள் மௌனமாக இருக்கும் காரணத்தைப் புலப்படுத்துகிறார். மக்கள் எதற்காக மௌனமாக இருக்கிறார்கள் என்பதையும் மௌனமாகவே புரிய வைக்கிறார்.
வேலை இல்லாது இருக்கும் இளைஞனிடம் வேண்டுமென்றே என்ன செய்கிறாய் எனச் சிலர் கேட்பார்கள். சும்மா இருக்கிறேன் என்ற சொல் இளைஞனின் மனதில் கீறும் ரணங்களை,
""சும்மா'' என்னும் வார்த்தையன்றோ
சுமைகளின் இருப்புகள் எம்
இமைகளின் வழியே நீர் சொரியும்
சும்மா இருத்தல் கூட
ஒரு வகையில்
அணு அணுவாய்
மனதைக் கீறிடும்
சுகம் தரும் சுமைதான்
எனக் கூறுகிறார்.
புதிய கோணத்தில் சிந்தித்து கவிதைகளைப் படைக்கும் இவர் கவிதைக்கான கருக்கள்
என்னிடம் ஏதும் இல்லை என்கிறார்.
முகாரியை மாத்திரம் மீட்டித் திரிந்த
எம் இதய வீணைகளில் எதற்காக
பூ பாளத்தை மீட்ட முனைவதாக
பாசாங்கு செய்து கொள்கிறீர்கள்?
நொந்து போன எங்கள் இதயங்கள்
நொந்ததாகவே இருக்கட்டும்
இந்த மண்ணில் ஆழப் புதைந்து
கிடப்பவை பிணங்கள் மட்டுமல்ல
எங்கள் கனவுகளும்தான்
பிணங்களை மட்டுமே இந்த மண் கண்டதாய் கனவு கண்டு கொள்ளாதீர்
எத்தனையோ நடைப் பிணங்களையும்
இந்த மண் தன்னில் அலைய விட்டு
அழகு பார்த்துக் கொள்கிறது
என்ற கவி வரிகள் இந்த மண்ணின் துன்ப துயரங்களை பட்டியலிடுகின்றன.
எம் சான்றாதார
வாதங்கள் எல்லாம்
""பூதங்களிடம்'' தோற்றுப் போகின்றன
இப்படியே கழிந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு இராக்களும்
எங்களுக்காக மட்டும்
""அச்சப் பிராந்திய இரவுகளாக''
பிரகடனப்படுத்தப்படுகிறதோ?
என்ற வரிகள் எம் மூதாதையரின் வரலாற்றையும் ஆக்கிரமிப்பையும் வெளிப்படுத்துகின்ற அதேவேளை அச்சப்படுத்திய பூதங்களையும் ஞாபக மூட்டுகின்றன.
மீளும் நினைவுகள் 2 என்ற கவிதையின் மூலம் தனது கிராமத்தை மனதில் பதியவிட்டுள்ளார். முத்தான தலைப்புகளில் உள்ள 36 கவிதைகளும் மனதில் ஆழமாகப் பதியும் வகையில் புனையப்பட்டுள்ளன. சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமான கவிதைகள் இத் தொகுதியில் அடக்கப்பட்டுள்ளன. கவிதைகள் பிரசுரமான ஆண்டைக் குறிப்பிட்டிருந்தால் கவிதைகளின் பின்புலத் தையும் அவரின் வளர்ச்சியையும் அறியக் கூடியதாக இருந்திருக்கும்.
இன்றைய இளம் எழுத்தாளர்களில் பலர் தமது ஆளுமை, திறமை, அனுபவம், அறிவு என்ற வட்டத்துக்கு வெளியே நின்று சிந்திக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவராகவே வெ.துஷ்யந்தனும் மிளிர்கிறார்.
நூல்: மொழி பெயர்க்கப்படாத
மௌனங்கள்
(கவிதைத் தொகுதி)
ஆசிரியர்: வெற்றிவேல் துஷ்யந்தன்
வெளியீடு: ஜீவநதி, கலை அகம்
அல்வாய்
விலை ரூபா: 200/=
ரமணி
வீரகேசரிவாரவெளியீடு27/11/11

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 14

சினிமாவிலும் அரசியலிலும் எதிரும் புதிருமாக இருந்த மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படம் கூண்டுக்கிளி. நண்பனின் மனைவியை அடையத் துடிக்கும் துரோகியின் கதை. எம்.ஜி.ஆர் கதாநாயகனாகவும் சிவாஜி வில்லனாகவும் நடித்தனர்.
பி.எஸ்.சரோராஜாவைப் பெண் பார்த்த சிவாஜி, அவர்தான் தன் மனைவி என்று முடிவு செய்கிறார். விதி வச‌த்தால் சிவாஜியின் நண்பன் எம்.ஜி.ஆரின் மனைவியாகிறார் சரோஜா. இதை அறியாத சிவாஜி பி.எஸ்.சரோஜாவைத்தேடி ஊரெல்லாம் அலைகிறார். வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவாஜி ரயிலின் முன் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தபோபாது எம்.ஜி.ஆர் காப்பாற்றுகிறார். சிவாஜியை வீட்டுக்கு கூட்டிவந்த எம்.ஜிஆர். தன் மனைவி பி.எஸ். சரோஜாவை அறிமுகப்படுத்துகிறார். தனக்கு மனைவியாக வரவேண்டிய பி.எஸ்.சரோராஜா தன் நண்பனின் மனைவியானதை அறிந்து அதிர்ச்சியடைகிறார் சிவாஜி.
சிவாஜி செய்த குற்றத்திற்காகக் சிறைக்குச் செல்லும் எம்.ஜி.ஆர் தன் மனைவியை கவனமாக பார்க்கும் படி கூறுகிறார். உயிர் கொடுப்பான் நண்பன் என்பதற்கிணங்க எம்.ஜி.ஆர் சிறைச்செல்ல நண்பனுக்கு துரோகம் செய்ய திட்டமிடுகிறார் சிவாஜி. தனக்கு தலைவலி என்று கூறி தலைக்கு தைலம் பூசும்படி பி.எஸ்.சரோஜாவிடம் கூறுகிறார். கள்ளம் கபடமில்லாத சரோஜா, சிவாஜிக்குத் தைலம் பூ"கிறார். சரோஜாவின் கைப்பட்டதும் சிவாஜியின் காமத் தீ வெளிப்படுகிறது. தன் இச்சையை சரோஜாவிடம் கூறுகிறார். தான் நண்பனின் மனைவி என்பதை சரோராஜா ஞாபகப்படுத்துகிறார்.
கடுமையான மழை பெய்த ஒருநாள் சரோஜாவை கெடுக்க முயற்சிக்கிறார் சிவாஜி. அப்போது உண்டான மின்னலால் சிவாஜியின் கண் பார்வை பறி போகிறது. தன் தவறுக்கு கடவுள் கொடுத்த தண்டணை என்று உணர்ந்த சிவாஜி ஊரை விட்டுச் செல்கிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த எம்.ஜி.ஆர் நண்பனின் துரோகத்தை மன்னித்து மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.



இரு பெரும் துருவங்கள் நடித்த கூண்டுக்கிளி பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படு தோல்வியடைந்தது. தியேட்டர்களில் சிவாஜி ரசிகர்களும் மோதிக் கொண்டார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இப்போது இப்படத்தை எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி ரசிகர்களும் அமைதியாக பார்க்கின்றனர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.எஸ்சரோஜா, கொட்டாபுளி ஜெயராமன், ஈ.ஆர்சகாதேவன், டிகே.கல்யாணம், குச‌லகுமாரி, டி.பி.முத்துலட்சுமி, அங்கமுத்து ஆயோர் நடித்தனர். திரைக்கதை வச‌னம் விந்தன். பாடல்கள் தஞ்சை ராமையாதாஸ். கவி.காமு.ஷெரீப், மருதகாசி, விந்தன். இசை கே.வி.மகாதேவன். கொஞ்சுங் கிளியான பெண்ணை கூண்டுகிளி ஆக்கிவிட்டு கொட்டு மேளம் கொட்டுறது ச‌ரியா தப்பா என்ற டி.எம்.எஸ்ஸின் குரல் இன்றும் மனதை வருடுகிறது. இயக்கம் டி.ஆர்.ராமண்ணா.
1954 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தபோது சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற இரு பெரும் நட்ச‌த்திரங்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. விதி வச‌த்தால் அதுவே முதலும் கடைசியுமான படமானது. ரசிகர்களை அமைதிப்படுத்தி இருவரும் இணைந்து நடித்திருக்கலாம். இருவரும் இணைந்து நடிக்காததற்கு தமிழக அரசியலும் ஒரு முக்கிய காரணம்.
ரமணி
மித்திரன்13/11/11

Friday, December 2, 2011

திரைக்குவராதசங்கதி 22

ஒரு நாள் நடிகர் திலகத்தின் படத்தைப் பார்த்து விட்டு பஸ்ஸுக்காக காத்து நின்ற போது இயக்குனர் பி. மாதவன், விஜயகுமாரைக் கண்டு தனது படத்தில் நடிக்க அழைத்துச் சென்றார். பி. மாதவனிடமும் விஜயகுமார் ஏற்கெனவே வாய்ப்புக் கேட்டு சென்றிருந்தார்."பொண்ணுக்கு தங்க மனது' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார் விஜயகுமார். விஜயகுமாரிடம் இருந்துமுருகன் வாய்ப்பை தட்டிப் பறித்த சிவகுமாரும் பொண்ணுக்கு
தங்க மனசு படத்தில் நடித்தார். சிவகுமார் என்றஒருவர் சினிமாவில் இருப்பதால் விஜயகுமார் என்றபெயரை பி. மாதவன் சூட்டினார்.
கமல், ரஜினி ஆகியோரின் காலத்தில் கதாநாயகனாகநடித்த விஜயகுமார் பின்னர் அவர்களின் தந்தையாக நடித்தார். மிகச் சிறந்த குணசித்திர நடிகராக விஜயகுமார் இருக்கிறார்.சிறந்த கதாநாயகர்களில் ஒருவராக விஜயகுமாரை தமிழ்சினிமா உலகம் ஏற்றுக் கொண்டது. ஒரே மாதிரியான பாத்திரத்தில் நடித்த விஜயகுமார் வித்தியாசமான பாத்திரங்களைத் தேடினார். கதாநாயகனான விஜயகுமாருக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வந்தது. நடிப்புத்தானே என்பதற்காகவில்லனாக நடித்தார்.மதுரையில் நடந்த விழாவுக்கு சென்ற விஜயகுமாரைச்சூழ்ந்து கொண்ட அவரது ரசிகர்கள் கதாநாயகனாக நடித்தஉங்களை வில்லனாக பார்க்க நாங்கள் விரும்பவில்லைஎன்றனர். தனது ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள பாசத்தில்நெகிழ்ந்து போன விஜயகுமார் அன்றிலிருந்து நடிப்புக்குமுழுக்கு போட்டார்.
அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல் நகரில் மனைவி மஞ்சுளாவின்பெயரில் சைவ உணவகம் ஒன்று ஆரம்பித்தார். விஜயகுமார் சைவ உணவகம் மிகவும் பிரபல்யமாகி வாடிக்கையாளர்களை ஈர்த்தது. விஜயகுமார் சினிமாவைத் துறந்துமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.மூன்று வருடங்களின் பின்னர் விஜயகுமார் சென்னைக்குவந்த போது மணிரத்தினத்திடம் உதவியாளராக கடமையாற்றிய இயக்குநர் சுபாஷ் விஜயகுமாரைச் சந்தித்துமணிரத்தினத்தின் படத்தில் நடிக்கும்படி அøழப்பு விடுத்தார்.விஜயகுமார்மறுத்துவிட்டார்.இரண்டு பெண்டாட்டி காரனின் கதை. கதையைத்தூக்கி நிறுத்தும் அப்பாவின்பாத்திரத்தில் நடிகர்திலகம் நடிக்க வேண்டியகேரக்டர் அவர் நடித்தால்அவர்தான் ஜொலிப்பார்.கதை இரண்டாம் பட்சமாகிவிடும் நீங்கள் நடித்தால் நீங்களும் பேசப்படுவீர்கள் படமும் வெற்றி பெறும் என்றுசுபாஷ் கூறினார். சுபாஷின் வற்புறுத்தலினால் மணிரத்தினத்தைசந்தித்தார் விஜயகுமார். மணிரத்தினம் கதையைக்கூறியதும் அடடா இப்படிப்பட்ட படத்திலா நடிக்க மறுத்தேன் என்று வருந்தினார்
விஜயகுமார்.பிரபு, கார்த்திக், விஜயகுமார் ஆகியோரின் நடிப்பில் வெளியான அக்கினி நட்சத்திரம் என்ற அப்படம் பெரு வெற்றிபெற்றது. அதன் பின்னர் விஜயகுமார் பிஸியான நடிகராகிவிட்டார். குணச்சித்திர பாத்திரமா கூப்பிடு விஜயகுமாரைஎன்று அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.
அவிநாசி மணி இயக்கிய ஜானகிசபதம் என்ற படத்தில்நடித்தபோது அங்கு சுறுசுறுப்புடன் பணியாற்றிய உதவிஇயக்குநர் ஒருவரைப் பார்த்து விஜயகுமார் வியந்தார். விஜயகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடித்த டூயட்காட்சி ஒன்றை பிறேம் பிறேமாக எப்படி எடுக்க வேண்டும்என அந்த இளைஞர் விபரித்தார். அந்த இளைஞனின் கற்பனையில் மனம் லயித்த விஜயகுமார் தயாரிப்பாளரிடம்அந்த இளைஞனின் கற்பனையைக் கூறி அவர் கூறுவது
போல் பாடல் காட்சியை மீண்டும் எடுப்பதாக இருந்தால்கால்ஷீட் தருகிறேன். அதற்கான பிலிம் செலவை நானேபொறுப்பேற்கிறேன் என்றார். நேரம் இல்லாமையால் அப்பாடல் காட்சியை திரும்ப எடுக்க முடியாது என்று தயாரிப்பாளர் கூறினார். விஜயகுமாரின் எண்ணம் வீண் போகவில்லை அந்த இளைஞன்தான்சினிமாவை கிராமத்துக்குஅழைத்துச் சென்ற பாரதிராஜா, பாரதிராஜாவின் படங்கள்பெரு வெற்றி பெற்றன. பாரதிராஜாவின் வெற்றியில் விஜயகுமார் மகிழ்ச்சியடைந்தார்.பாரதி ராஜாவின் இயக்கத்தில் கிழக்குச் சீமையிலே என்றபடத்தைத் தயாரிக்க கலைப்புலி தாணு திட்டமிட்டார். அண்ணன்
தங்கை பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் அப்படத்தில் தங்கையாக நடிக்க ராதிகாவை தேர்வு செய்தார்கள்.அண்ணனாக விஜயகுமாரை நடிக்க வைக்கலாம் என்றபோது விஜயகுமாரை வைத்து நான் இயக்கமாட்டேன்என்று ஒரேயடியாக பாரதிராஜா கூறிவிட்டார்.மிகச் சிறந்த விஜயகுமாரை வைத்து படமெடுப்பதில்லைஎன்ற பாரதிராஜாவின் சபதத்தைக் கேட்டவர்கள் அதிர்ந்துவிட்டனர். 16 வயதினிலே படத்தின் பிரிவியூ காட்சிக்குவரும்படி அøழத்திருந்தேன். அவர் வரவில்லை எனதுஅழைப்பை மதிக்காதவரை வைத்து படமெடுப்பதில்லைஎன்று தீர்மானித்துவிட்டேன் என்றார் பாரதிராஜா.
பாரதிராஜாவின் சபதத்தை விஜயகுமாரிடம் கலைப்புலிதாணு கூறினார். நடிகர் திலகம் நடிக்க வேண்டிய பாத்திரம்நீங்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்கலைப்புலி தாணு.
பாரதிராஜாவின் சபதத்தை கேள்விப்பட்ட விஜயகுமார்உடனடியாக பாரதிராஜாவின் வீட்டுக்குச் சென்றார். விஜயகுமாரைக் கண்ட பாரதிராஜா அவரை அன்புடன் வரவேற்றார். இருவரும் சிறிது நேரம் பொதுவான விசயங்கள்பற்றிப் பேசினார்கள். 16 வயதினிலே பிரிவியூ காட்சியைப்பார்ப்பதற்கு வர முடியாத நிலையை விஜயகுமார் விளக்கினார். படப்பிடிப்பு முடிந்தால் வருகிறேன் என்று கூறியதைநினைவு படுத்தினார். படப்பிடிப்பை இடையில் விட்டால்தயாரிப்பாளருக்கு ஏற்படும் நஷ்டம், பிஸி நடிகனின் அன்றாடநாள் கூட அவனுக்குச் சொந்தமில்லை என்று விஜயகுமார் கூறினார். விஜயகுமாரின் கருத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த பாரதிராஜா மனம் மாறினார். விஜயகுமார்,ராதிகா நடிப்பில் கிழக்குச் சீமையிலே வெற்றி பெற்றது. பாரதிராஜாவின் அந்திமந்தாரை என்ற படத்தில் விஜயகுமார்நடித்தார். அப்படத்துக்கு மத்திய அரசின் விருது கிடைத்தது.அப்படத்தில் நடித்த விஜயகுமாருக்கு சிறந்த நடிகருக்கானசிறப்புப் பரிசை தமிழக அரசு கொடுத்தது. சிறந்த நடிகருக்கான விருதை மத்திய அரசு விஜயகுமாருக்குக் கொடுக்காததற்கு பாரதிராஜா மனம் வருந்தினார்
ரமணி
மித்திரன்