Showing posts with label பாடசாலை. Show all posts
Showing posts with label பாடசாலை. Show all posts

Monday, June 26, 2023

மூடப்படும் பாடசாலைகளின் பின்னால் உள்ள கதை

 கல்வியில் முதலிடம்  பிடித்து சாதனை படைத்த வடமாகாணம்  இன்று சற்று பின்னடைந்துள்ளது. பிரபலமான பாடசாலைகளில் மாணவர்கள் படிக்கிறார்கள். தனியார் வகுப்புகளுக்குச் செல்கிறார்கள். இழந்த  முதலிடத்தை இன்னமும்  பிடிக்கவில்லைஇந்த நிலையில் வடமாகானத்தில் மாணவர்கள்  இல்லாமையால் சுமார் 194 பாடசாலைகள்  மூடப்பட்டுள்ள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  அதிர்ச்சிகரமான  உண்மை இன்றைத் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோரிடம்  உள்ளது. பேரப்பிள்ளை கல்வியில்  சாதிக்க வேண்டும் என்ற ஆசை பெரியவர்களிடம்  உள்ளது. அதீத ஆசைகள், ஆர்வங்கள்  காரணமாக  கிராமப்புறப் பாடசாலைகளின் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா பாடசாலை வளாகத்தில் அதிபர் குலேந்திரகுமார் தலைமையில்   நடைபெற்றபோது இதில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

வடக்கிலே நாங்கள் ஏறக்குறைய 194  பாடசாலைகளை மூடியிருக்கின்றோம். மாணவர்கள் இல்லாமையால் அந்தப் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணமென நாம் ஆராய்ந்த போது முதலாவது கிராமப்புறங்களிலிருந்து மாணவர்கள் நகர்ப்புறங்களை நோக்கிச் செல்கின்றார்கள், இரண்டாவது பிறப்பு விகிதம் குறைவு. எனவே, இந்த விடயங்கள் புலம்பெயர் சமூகத்தினராலும், இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினராலும் கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் என நான் கருதுகின்றேன்.

நாங்கள் வாழவைக்க வேண்டுகின்ற இந்தச் சமூகம் , நாங்கள் வளமாக வாழவேண்டும் என்று நினைக்கின்ற மக்கள், இந்தப் பிரதேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நான் நினைக்கின்றேன். எனவேதான் நான் உங்களிடம் அன்பாகக் கேட்டுக்கொள்ளும் விடயம் வாழுகின்ற இந்தப்  பிரதேசம், வாழ வேண்டும் என்று விரும்புகின்ற மக்களை வாழவைக்க வேண்டிய வழிவகைகளை நீங்கள் செய்பவர்களாக இருக்க வேண்டும்.

இந்தச் சமூகத்திலேயே சில விடயங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக புள்ளி விபரங்கள் எங்களுக்குக் கூறுகின்றன. ஒன்று விவாகரத்து பெறுபவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகின்றது. இரண்டாவது  குழந்தை பேறு குறைந்து காணப்படுகின்றது.மூன்றாவது வயது சென்ற திருமணங்கள் அதிகரித்திருக்கின்றது. அதேபோன்று இன்னும் சில சமூகப் பிரச்சினைகள் இருக்கின்றன.

குடிபோதை, போதைவஸ்து, தற்கொலை போன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனவே, இவற்றையெல்லாம் கடந்து எமது சமூகம் வாழவேண்டும் என்றால் புலம்பெயர் சமூகம் ஆற்ற வேண்டிய பணி அதிகம் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

எனவே, இந்தச் சமூகத்தை வாழ வைக்க நீங்கள் செய்யும் சிறிய பணியுடன் நின்றுவிடாது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற உள நல பிரச்சினைகளுக்கு  தீர்வு காணவேண்டிய ஒரு காலம் இப்போது உங்கள் முன்னால் இருக்கின்றது.

வெறும் அரசியல்உரிமைசார் பிரச்சினைகள் மட்டும் எமக்கு இல்லை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். இளைய சமூகத்தினர் மத்தியில்மாணவர்கள் மத்தியில்குடும்பங்கள் மத்தியில்சிறுவர்கள் மத்தியில் புரையோடிப் போயிருக்கும் சமூக உள நல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய தேவையும் அவசரமும் எங்களிடம் இருக்கின்றது. எனவே, அதை இன்று கூடியிருக்கும் புலம்பெயர் சமூகமும், இணைந்திருக்கும்  உள்ளூர் சமூகமும் உணர்ந்து செயற்பட வேண்டும்.” – என்றார்.

நகர்ப்ப்புற பாடசாலையில் படித்தால்தான் தனது  பிள்ளை கல்வியில் உயர் நிலைக்குச் செல்லும்  என்ற  போலியான நம்பிக்கை  சில பெற்றோர் மத்தியில் உள்ளது.   கண்ணுக் கெட்டிய தூரத்தில் பாடசாலை இருக்கும் போது மிகத் தூரத்தில் உள்ள பாடசாலையில் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். இதனால் அந்தக் குட்டும்பத்தின் செலவு அதிகரிக்கின்றது. நடந்து செல்லும் தூரத்தில்   பாடசாலை  இருக்கும்போது தூரத்துப் பாடசாலைக்குச் செல்லும்  பிள்ளையின் சிரமத்தைப் பெற்றோர் புரிந்துகொள்வதில்லை.

அந்தக் காலத்தில் ஒரு பாடசாலையை உருவாக்க   எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பார்கள் என்பதை இன்றைய தலை  முறை சிந்திப்பதில்லை. ஒரு கல்விக்கூடம்  மூடப்படுவதன்  பின்னணியில் உள்ள துன்பத்தை  யாரும் கவனத்தில்  எடுப்பதில்லை. தனது சொந்த  ஊருக்கு வர வேண்டிய  பெருமைகள் எங்கோ  இருக்கும் நகரத்துக்குச் செல்வதை  எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் எனப் புரிந்துகொள்ள முடியவில்லை.

  ஒரு பாடசாலை  மூடப்படும்  பின்னணியில் இடப்பெயர்வுபுலம்  பெயர்வுபிறப்பு விகிதம்  குறைவு எனப் பல காரணங்கள்  இருக்கின்றனஇதன்  பின்னணியில் கல்வித்துறை  அதிகாரிகளும் என்ற   கசப்பான  உண்மையையும்  மறுக்க முடியாது. அருகில் உள்ள பாடசாலைகளில்  பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டு  தூரத்தில் உள்ள பாடசாலைகளில்  பிள்ளைகள் சேர்க்கப்படுவதை எப்படி அனுமதிக்கிறார்கள்.

சைவம்   கற்பிக்க மறுத்த சில கிறிஸ்தவப் பாடசாலைகள்  இன்று சைவப்பாடசாலைபோல் இயங்குகின்றன. சாதி  வேற்றுமை பார்த்த சில பாடசாலைகள்  இன்று  சகலரையும்  உள்ளீர்க்கின்றன.

இது எமது கிராமம் இங்கிருக்கும் பாடசாலை மூடப்படக்கூடாது என்ற மனநிலை தோன்றினால்  எஞ்சி இருக்கும் பாடசாலைகளுக்கு ஆபத்து ஏற்படமாட்டாது.

Saturday, May 20, 2023

வரம்பு மீறும் பாதுகாவலர்கள்

 மாதா,பிதா,குரு, தெய்வம் என்பது நமது  சமூகக் கட்டமைப்பு. குருவுக்குப் பின்னரே தெய்வத்தை வைத்துள்ளார்கள். மாணவர்களின் அதிகமான நேரம்   ஆசிரியர்களுடன் செலவிடப்படுகிறதுபெற்றோருடன்உறவினர்களுடன்  இருக்கும் நேர்த்தை விட அதிகமான நேரத்தை ஆசிரியருடன்  இணைந்திருக்கின்றனர்  மாணவர்கள்மாணவர்களின் வளர்ச்சியில்  ஆசிரியருக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. தன்னிடம் படித்த மாணவர்  அயர்  நிலைகுச் சென்றால் எவர் எனது மாணவர்ன் என உவகை கொள்வார்.

ஆசிரியர்களால் மாணவிகள் மேல் நடத்தப் படும்  கொடூரங்கள் அதிகமாக வெளிச்சத்துக்கு வருவதில்லை. அவ்வப்போது சில செய்திகள் வெளிஆகுவதும், காலப் போக்கில் அவை மறக்கடிக்கப்படுவதும் வழமையானவை.   சிறுவர்களின் பாதுகாப்புநல்வாழ்வு பெரியவர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் இப்போது  அதிகமாக வெளியாகின்றன. களுத்துறையில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள் பலரது கண்களைத் திறந்துள்ள நிலையில், இது தொடர்பான பல பாரதூரமான கேள்விகளுக்கு இலங்கை பதில் தேடுகிறது. இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எப்படி தண்டனை வழங்குவது என்ற கவலை இருக்கும் நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க  என்ன செய்ய  வேண்டும் ன்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

களுத்துறையைச் சேர்ந்த தனியார் கல்வி ஆசிரியர் ஒருவர் தனது வகுப்புகளுக்குச் சென்ற 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட சம்பவம். ஆசிரியருடன் இருக்கும்போது குழந்தைகள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தகர்த்துள்ளதுகுழந்தைகளை  தனியார் கல்வி நிறுவனங்களில் கண்காணிக்காமல் விட்டுச்செல்லும் பல பெற்றோர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக  உள்ளது. மேலும் இப்போது தனியார் டியூஷன் வகுப்புகளை வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து தேசிய அளவிலான பேச்சுக்கு வழிவகுத்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு அவசியம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது

வரலாற்றுப் பெருமை மிக்க  கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் தனியார் கல்வி நிலையங்களை நாடுகிறார்கள்பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும்  பிரபலமான ஆசிரியர்கள் தான் தனியார் கல்வி நிலையங்களிலும்  கற்பிக்கின்றனர். சில தனியார் கல்வி  நிலையங்கள் தமக்கென சீருடை   கொடுக்கின்றானமாணவர்களுக்கு வாகன வசதி செய்து கொடுக்கின்றனபாடசாலை முடிந்தது, ரியூஷன்இரவு வீட்டு வேலை என் மாணவர்களின் வழ்வி இயந்திர மயமாகி உள்ளது.

ஐந்தாம் வகுப்பில் மாணவர்கள்  மீது ஏற்றப்படும் கல்விச்சுமை பல்கலைக் கழகாம் வரை தொடர்கிறது. பொது அரிவு, விளையாட்டு என்பனவற்ரின்  பக்கம் மாணவரின் சிந்தனை திரும்புவதில்லை.

தனியார் கல்வி வகுப்புகள் வழங்கும் கல்வியின் தரத்தை முறைப்படுத்தவும், அந்த வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளின் தொகுப்பைத் தயாரிப்பதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், தனியார் கல்வி வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளின் தேவை மற்றும் கோரிக்கை இருந்தபோதிலும், கல்வி இராஜாங்க அமைச்சர் . அரவிந்த் குமார் ஒரு முக்கியமான யதார்த்தத்தை சுட்டிக்காட்டினார். அதாவது, தனியார் கல்வித் துறையை ஒழுங்குபடுத்துவதில் உள்ள வரம்புகள், தனியார் கல்வித் துறையின் மீது அரசாங்கம் முழுக் கட்டுப்பாட்டை வைத்திருக்க முடியாது என்பதால் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைச் செய்வது சாத்தியமற்றது என்று அவர் கூறினார்.

அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்பது தொடர்பான வரம்புகள், கூறப்பட்ட சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் மேம்படுத்த அரசாங்கத்தால் மட்டும் முடியாது என்ற யதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது. எனவே, இந்த முயற்சிக்கு பெற்றோரின் பங்களிப்பையும் பெற வேண்டும்.

தனியார் ஆசிரியர்களின் செயல்திறன் மற்றும் நடத்தை கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும், மேலும் இது பெரும்பாலும் பெற்றோரின் பொறுப்பாகும். குறிப்பாக மாணவர்களின் வீடுகளுக்குச் செல்லும் தனியார் ஆசிரியர்களின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை பெற்றோர்கள் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும்ஒரு சில ஆசிரியர்கள் தமிடம் படித்த மாணவிகளைத் திருமணம் செய்துள்ளனர்.

ஆசிரித்தொழில் புனிதமானது. அவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்க வேண்டும். அதற்குரிய வல்லைமையை  பிள்ளைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.


Sunday, April 30, 2023

மாணவர்களுடன் விளையாட வேண்டாம்

இலங்கையின் வரப்பிரசாதங்களில்  இலவசக் கல்வி  முதன்மையானது. இலவசமாகக் கல்வி கிடைத்தாலும் வயிற்றுப் பசி மாணவர்களை வாட்டியது. சாப்பாடு இல்லாமல் சில மாணவர்கள் பாடசாலைக்குச் செல்கின்றனர். சாப்பாடு இல்லாததால் சில மாணவர்கள்  பாடசாலைக்குச் செல்வதில்லை. மதிய  உணவுத் திட்டம் மணவர்களுக்கு  பெரும் கொடையாக அமைந்தது.

மதிய  உணவு சத்துணவாகக் கொடுக்கப்படுகிறது.  இந்த திட்டத்தின் மூலம் 1.1 மில்லியன் மாணவர்கள்  பயனடைகிறார்கள்.

பணிஸ்,  பிஸ்கற் போன்றவை முன்னர் பாடசாலைகளில்  கொடுக்கபட்டன. பின்னர் அந்த நடைமுறை கைவிடப்பட்டது. இப்போது மதிய  உணவு மாணவர்களுக்கு ஊக்கம்  கொடுக்கிறது.அந்த  உணவுத் திடத்திலும்  இடி விழுந்துள்ளது.உணவு விநியோகம் செய்பவர்களுக்குக் கொடுக்கப் பணம்  இல்லாமையால்  இந்தத் திட்டம் முடங்கும் அபாயம்  உள்ளது.  கடந்த  இரண்டு மாதங்களாக உணவு விநியோகம் செய்பவர்களுக்கு கடந்த இரண்டு மதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

ஒரு காலத்தில் மாஅவர்களின் வருகை  கணிசமாகக் குறைந்திருந்தது, காலை உணவில் குழந்தைகளுக்கு சரியான உணவு கிடைக்காததே இதற்குக் காரணம் என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மாணவர்களின் உணவில் முதல் வேளை உணவு இல்லாததால், பாடசாலைகளில்  காலை கூட்டங்களில் குழந்தைகள் மயக்கம் அடைவதாக செய்தி வந்தது.அப்போதுதான் 'சமூக உணவு பகிர்வு' இணைந்து ஒரு முன்னோடி நிகழ்ச்சியை நடத்தியது. 'உணவு பகிர்வு', கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட வலய மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர்களுடன் இணைந்து இதனை முன்னெடுத்தனர்.

பள்ளி மாணவர்களின் உதவிக்கு வரும் பரோபகாரர்கள் மற்ற பாத்திரங்களை நாங்கள் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஒன்று, மதிய உணவு திட்டத்திற்கு சில உதவிகளை வழங்க பிரெஞ்சு அரசாங்கம் முன்வந்தது. மற்றொரு சந்தர்ப்பம், சீன அரசாங்கம் 70% பள்ளி சீருடைகளை இலவசமாக வழங்க முன்வந்தது.

பாடசாலைகளுக்கு உணவு விநியோகம் செய்பவர்களுக்கு    நிலுவையில் உள்ள கடன்களைத் தீர்க்க உலக வங்கி நிதி பயன்படுத்தப்படும். பள்ளி உணவுத் திட்டத்திற்கான ஆதரவைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் பள்ளிகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு நிலுவையில் உள்ள கடன்களைத் தீர்க்க உலக வங்கி நிதி பயன்படுத்தப்படும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். பள்ளி உணவுத் திட்டத்திற்கான ஆதரவைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் (GoSL) 'வெளியில் இருந்து' உதவி வருகிறது என்பதை அறிந்து கொள்வது எப்போதும் நல்லது. இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார் 'வெளியில் இருந்து' உதவி வருகிறது என்பதை அறிந்து கொள்வது எப்போதும் நல்லது. இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்

. இந்த வருடம் பெப்ரவரி , மார்ச் மாதங்களில் உணவு விநியோகம் செய்பவர்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த புதன்கிழமை (26) தெரிவித்தார்.

  மேல் மாகாணம் தவிர்ந்த நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. விநியோகம் செய்பவர்கலுக்கு செலுத்த வேண்டிய இந்த இரண்டு மாதங்களுக்கு 875 மில்லியன் ரூபாய் நிலுவையில் உள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த திட்டத்திற்காக 16.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும், பொருளாதார நெருக்கடி காரணமாக கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. பிரேமஜயந்த, உலக வங்கியின் நிதியைப் பயன்படுத்தி அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நிலுவைத் தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிரேமஜயந்த .

மாணவர்களின் பசியுடன் விளையாடாமல் அவர்களின்பசியைப் போக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Friday, November 11, 2022

மாணவர்களை குற்றவாளியாக்கும் கொடுமை


 "எந்தக் குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்கையிலே"  புகழ்  பெற்ற இந்த சினிமாப்பாடலை அனைவரும் கேட்டிருப்பார்கள். முதல் வகுப்பில் இருந்து .பொ.[/] வரை மாணவர்களுடன் நெருக்கமாகப் பழகுபவர்கள் ஆசிரியர்கள். மாதா,பிதா,குரு,தெய்வம் என்பார்கள்.குருவுக்கு அடுத்த இடத்தில்தான் ஆசிரியர்கள் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு சில ஆசிரியர்களின் நடத்தையினால் அனைவரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிய நிலை  உள்ளது.

ஹொரணையில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையின் பணப்பையை திருடியதாக சந்தேகத்தின் பேரில் தரம் ஐந்து பாடசாலை மாணவர்கள் மூவர் அடித்து துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சில ஆசிரியர்களும் பொலிஸாரும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPA) அதிர்ச்சி அடைந்துள்ளது. இது ஒரு விசாரணையைத் தொடங்கியது. விசாரணையின் போது மாணவர்கள் மீது பொலிஸார் மின்சாரம் பாய்ச்சியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கண்டிக்கப்பட வேண்டிய துரதிஷ்டமான சம்பவத்தை, நடந்த பள்ளியின் ஆசிரியர்கள் நிதானத்துடன் செயல்பட்டிருந்தால் தவிர்த்திருக்கலாம்.  மாணவர்கள் மீது பொலிஸார் ஏன் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.அதிபரும்,  பணப்பையைக் களவு கொடுத்த ஆசிரியையும் பொலிஸாருக்கு மிக வேண்டப்பட்டவர்கள் என்பதால்தான் அவர்கள் அப்படி நடந்துகொண்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது. சிறுவர்களையும், மாணவர்களையும் எப்படிக் கையாள்வது என  பொலிஸாருக்கு பயிற்சியளிக்கப்பட்டிருக்கும். அவர்கள் ஏன் அதனை மீறினார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். அதிபரும், இரண்டு பொலிஸாரும் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மன நிலையில் மாற்றம் ஏற்படாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

 களுத்துறையில், சாப்பிட ஏதாவது வாங்குவதற்காக ஐந்து ரூபாயை திருடிய ஒரு வயதுக்குட்பட்ட சிறுமியை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அதே மாவட்டத்தில்  பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக தேங்காய் திருடியதற்காக மற்றொரு பள்ளி மாணவி கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் பலகோடி ரூபாய் மோசடி செய்தவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்புக் கொடுக்கிறது. மக்களை ஏமாற்றி பெரும் தொகையை ஏமாற்றிய திலினி ப்ரியமாலியை கண்ணியமாக நடத்துகிறார்கள். நாட்டைத் திவாலாக்கிய அரசியல்வாதிகளுக்கு பொலிஸார் பாதுகாப்புக் கொடுக்கிறார்கள்.

சிறு திருட்டு சம்பவங்களில் மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அடிக்கப்படும் போது, 22 மில்லியன் மக்களை ஏமாற்றி, நாட்டையே திவாலாக்கிய அரசியல்வாதிகளுக்கு, தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது, உச்சக்கட்ட கேலிக்கூத்து! யஹபாலன அரசாங்கத்தின் கீழ் நிதிக் குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்ட மிகப் பெரிய ஊழல்வாதிகள் விடுதலை! பொது நிதியை கொள்ளையடிக்கும் ஒரு சமூகத்தில், குழந்தைகள் நேர்மையை மதிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

சில மாணவர்கள் திருடு உண்மையானால் அதற்கு  காரணம் என்ன  என்பதைக் கண்டறிய வேண்டும். பல குழந்தைகள் வெறும் வயிற்றில் பள்ளிக்குச் செல்கின்றனர். அல்லது, அவர்களுக்கு வேறு ஏதாவது பணம் தேவைப்பட்டதா? போதைப்பொருள் கடத்துபவர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பல்வேறு பொருட்களை விற்பவர்கள் உட்பட சில தீய சக்திகளின் இலக்காகவும் மாணவர்கள் மாறியுள்ளனர். காவல்துறை, என்சிபிஏ, ஆசிரியர்கள், பெற்றோர்கள் இதில் அதிக் அக்கறை காட்ட வேண்டும்.

மாணவர்கள்  மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆசிரியர்களும், பெற்றோரும்  இணைந்து மாணவர்கள்  மீது அதிக அக்கறை காட்ட வேண்டும். 

தலைமுடியை வெட்டாமைக்காக சில ஆசிரியர்கள் மாணவர்களை கிரங்கமாகத் தண்டிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மன வேதனையை ஆசிரியர்கள்  புரிந்துகொள்வதில்லை. தண்டிக்கப்படும் மாணவர்கள் ஆசிரியகளை  மிரட்டும் சம்பவங்களும் நடை பெறுகின்றன

 மாணவர்கள் சிலரை இழுத்த இரண்டு ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் கோருகின்றனர்.

பாடசாலை சூழலில் சிறுவர்கள் திடீரென கட்டுப்பாடுகள் மற்றும் அதிகாரங்களுக்கு ஆளாகியுள்ளனர் என மருத்துவ உளவியலாளர் லக்மால் பொன்னம்பெரும தெரிவித்துள்ளார்.

இணையத்திற்கான இலவச அணுகல் புதிய உலகங்களைத் திறந்தது, வழிகாட்டுதல் இல்லாமல், அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம்.

கடந்த மூன்று வருடங்களாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் நண்பர்களுடன் கூடிய பாடசாலைச் சூழல் இல்லாததும் ஒழுக்காற்று அதிகாரம் இல்லாததும் இந்த நிலைமைக்குக் காரணமாகியுள்ளது.

இந்த சிக்கலில் இருந்து மாணவர்களை  மீட்டெடுப்பது  பெற்றோரினதும், மாணவர்களினதும் தலையாய பணியாகும்.