Showing posts with label பதினாறு வயதினிலே. Show all posts
Showing posts with label பதினாறு வயதினிலே. Show all posts

Friday, August 1, 2008

பாரதிரஜாவின் கனவு 2

இளையராஜாவின் தமிழ் சினிமா இசையமைப்பாளர் என்ற கனவு நினைவாகும் வேளையில் மின்தடை ஏற்பட்டது. சக கலைஞர் ஒருவர் நல்லசகுணம் என்று நக்கலடித்தார். மின்சாரம் வந்ததும் ரிகேசல் ஆரம்பமாகியது.

இளையராஜா இசையமைத்த பாடல் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டதை போட்டுப் பார்த்தார்கள். ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், என ஐந்து நிமிடங்கள் கழிந்த பின்னரும் இளையராஜாவின் இசை கேட்கவில்லை. அப்போது தான் தெரிந்தது ரெக்கோட் ஆகவில்øல என்ற விபரம்.

சற்றும் மனம் தளராத இளையராஜா மீண்டும் தனது கடமையை ஆரம்பித்தார். ஒலிப்பதிவில் திருப்தி இன்மையால் மீண்டும் மீண்டும் ஒலிப்பதிவு நடைபெற்றது. பஞ்சு அருணாசலத்தின் சகோதரர்கள் வெறுத்துப் போய் வெளியேறிவிட்டனர். பஞ்சு அருணாசலம் பொறுமையுடன் காத்திருந்தார். 12 ஆவது முறை செய்யப்பட்ட ஒலிப்பதிவு திருப்தியளித்தது. பல தடை
களுக்கு மத்தியில் இளையராஜாவின் இனிய இசை வெளிவந்தது.

தமிழ் சினிமா இசையில் புதிய அத்தியாயத்தை வெளிப்படுத்திய பெருமைக்குரியவராக இளையராஜா நோக்கப்பட்டார். அன்னக்கிளி படப் பாடல்களில் மிகச் சிறந்தது எது எனக் கேட்டால் எவராலும் பதிலளிக்க முடியாது. பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தன. இளையராஜாவின் இசை தமிழ்த் திரை உலகை கட்டிப்போட்டது. அன்னக்கிளி படத்துக்கு மிகவும் அருமையாக இசை அமைத்த இளையராஜா தன்னைத்தேடி வாய்ப்புகள் வரும் என்று காத்திருக்காது தனது குருவான ஜி.கே. வெங்கடேஷிடம் சென்று அவருக்கு உதவியாளராக கடமையாற்றினார்.

இளையராஜாவின் அன்பு நண்பனான பாரதிராஜாவுக்கு திரைப்படம் இயக்க சந்தர்ப்பம் கிடைத்தது. 16 வயதினிலே என்ற அப்படத்துக்கு யார் இசையமைப்பது என்று தயா
ரிப்பாளரான ராஜ்கண்ணு கேட்டபோது எனது நண்பன் இளையராஜாதான் இசையமைப்பான் என்று கூறினார் பாரதிராஜா. தமிழ்த் திரை உலகில் இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலம். இளையராஜாவைச் சந்திப்பதற்கே மிகவும் கஸ்டமான நேரம் தனது படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்பதைக் கேள்விப்பட்ட ராஜ்கண்ணு மிகவும் சந்தோஷப்பட்டார்.
பாரதிராஜாவும், ராஜ்கண்ணுவும் இளையராஜாவைச் சந்திக்கச் சென்றனர். தனது படத்துக்கு
இசையமைக்க வேண்டும் என்று பாரதிராஜா கேட்டதும் எனது சபதத்தை மறந்து விட்டாயா. என்னால் இசையமைக்க முடியாது எற்றார் இளையராஜா.

பாரதிராஜாவின் முதலாவது படத்துக்கு இளையராஜாவின் குருவான ஜி.கே. வெங்க
டேஷ் இசையமைக்க வேண்டும். இரண்டாவது படத்துக்கு ஜி.கே. வெங்கடேஷின்
வேண்டுகோளின் பிரகாரம் நான் இசையமைப்பேன் என்று இளையராஜா கூறியிருந்தார். இளையராஜா சும்மாதான் சொல்கிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். இறுதியில் ஜிகே. வெங்கடேஷின் அதட்டலின் பின்னரே பாரதிராஜாவின் படத்துக்கு இசையமைக்க இளையராஜா ஒப்புக் கொண்டார்.


16 வயதினிலே படத்தின் கதாநாயகனாக சிவகுமாரைப் போடலாம் என ராஜ்கண்ணு
கூறினார். கமல்தான் பொருத்தமாக இருப்பார் என்று பாரதிராஜா கண்டிப்பாகக் கூறிவிட்டார். கமலின் நடிப்பு 16 வயதினிலே படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.


ரமணி
மித்திரன் 30 06 2007