Showing posts with label டில்லி. Show all posts
Showing posts with label டில்லி. Show all posts

Tuesday, January 16, 2024

ராமரை முன்நிறுத்தி ஆன்மீக அரசியல் செய்யும் பாரதீய ஜனதா

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாட்கள் எண்ணப்பட்டு வரும் வேளையில் சகல அரசியல் கட்சிகளும் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றன.  மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடிக்க பரதீய ஜனதாக் கட்சி வியூகம் வகுத்துள்ளது.

ராம ஜென்மபூமி என  சொல்லப்படும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும்  ராமர் கோயில் கும்பபாபிஷேகம் எதிர் வரும் 22 ஆம் திகதி நடக்க  உள்ளது.பாரதீய ஜனதாவின் தேர்தல் துருப்புச் சீட்டாக   ராமர் கோயில் கும்பாபிஷேகம்  இருக்கப்போகிறது.

 பாபர் மசூதியை  இடித்தழித்து அரசியல் அத்திபாரத்தைப் போட்ட  பாரதீய ஜனதாக் கட்சி  ராமர் கோயில் கும்பாபிஷேகத்துடன் ஆட்சியைத் தக்க  வைக்க  உறுதி பூண்டுள்ளது. வட இந்தியாவில்  ராம பக்தைகள்  மிக அதிகமாக  உள்ளனர். அவர்களின் மனதைக் குளிர்விக்கும் விதமாக  ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மிகப் பிரமாண்டமாக நடத்த பாராதீய ஜனதா திட்டமிடுகிறது.

இந்திய எதிர்க்கட்ச்சிகள்  அனைத்தும் இணைந்து  பாரதீய ஜனதாவை எதிர்த்து தேர்தலில் களமிறங்கத் தயாராகின்றன. எதிர்க் கட்சிகள்   விட்டுக்கொடுப்புடன்  பேச்சுவார்த்தை நடத்துவதால்,  பாரதீய ஜனதா அச்சமடைந்துளது. அதனால் தான்  ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பாரதீய ஜனதா கையில் எடுத்துள்ளது.

 சகலருக்கும்  பொதுவான  ராமரை பாரதீய ஜனதா  உரிமை கோருகிறது. பாரதீய ஜனதாவின் அரசியல் ஊதுகுழல் போல் ராமர் சித்திரிக்கப்படுகிறார். வாஜ்பாயும், அத்வனியும் இரத யத்திரை நடத்தி  பாரதீய ஜனதாவை  வலுப்படுத்தினார்கள். மோடியும்,  அமித்ஷாவும் ராமர் கோயிலைக் காட்டி தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு   எதிர்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள்  ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் பகிஸ்கரிக்கின்றன.  பாரதீய ஜனதாவின்  அரசியல் அஜந்தாவில் கும்பாபிஷேகம்  இருப்பதாக  எதிர்க் கட்சிகள்  குற்றம் சாட்டியுள்ளன. ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தமக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என அறிவித்திருக்கின்றன. எதிர்க் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாது  ராமர் கோயில் கும்பாபிஷேகத்திக்கு பாரதீய ஜனதா  நாள்  கு|றித்தது. ராமரை பாரதீய ஜனதாக் கட்சிக்குள்  மோடி அடக்கி விட்டார்.  ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஆன்மீக விழாவாக  இல்லாமல்  பாரதீய ஜனதாவின்  கட்சி மாநாடுபோல் நடத்தப்படுகிறது.  இதனை  எதிர்க் கட்சிகள் கடுமையாகச் சாடியுள்ளன.

 


 இந்துமத மடாதிபதிகளும்   மோடியுன் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

மூலஸ்தானத்தில் ராமர் சிலையை  மோடி பிரதிஷ்டை செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்யும் கும்பாபிஷேகத்திற்கு செல்ல பூரியில் உள்ள கோவர்தன் மடத்தின் பீடாதிபதி மறுத்த நிலையில் உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் பிரதிநிதி அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதியும் ராமர் கோவிலுக்கு செல்ல மாட்டேன் என்றுள்ளார். அதோடு நாட்டின் நான்கு முக்கிய சங்கராச்சாரியார்கள்அல்லது மதத் தலைவர்களோ அந்த நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டார்கள் என்றும் அவர் அறிவித்து உள்ளார். இந்த விழா "சாஸ்திரங்களுக்கு எதிராக" அல்லது "புனிதமான இந்து வேதங்களுக்கு எதிராக" நடத்தப்படுகிறது. மோடி இதை திறப்பார்.. சாஸ்திரத்தின் படி மோடி இதை திறக்கவே கூடாது. ஆனால் அதை மீறி மோடி இதை திறந்து வைப்பார். நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா?

  கோவில் கட்டுமானம் முழுமையடையாததால், இப்போது சிலை பிரதிஷ்டை செய்வதே தவறானது. அதையும் மோடி செய்வது மிக தவறானது என்று  நான்கு  சங்கர்ச்சாரியார்களும் தெரிவித்துள்ளனர். ராமர் கோயில் முழுமையாகப் பூர்த்தியடைய  இன்னும்  இரண்டு வருடங்கள் தேவை. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்  வெற்றி பெற வேண்டிய தேவை இருப்பதால் ராமர் கோயில் கும்பாபிஷேக நாடகதை மோடி அரங்கேற்ரியுள்ளார். சங்கராச்சாரியார் என்பவர்கள் 8 ஆம் நூற்றாண்டில் இந்து துறவியான ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட இந்து மதத்தின் அத்வைத வேதாந்த பாரம்பரியத்தின் தலைவர்கள் ஆவார்கள். இந்த பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நான்கு மடங்கள் அல்லது துறவற குழுக்களின் மடாதிபதிகள்தான் சங்கராச்சாரியார். ஜோதிர் மடம் (ஜோஷிமத்) மற்றும் கோவர்தன் மடம் தவிர மற்ற இரண்டு மடங்கள் சிருங்கேரி சாரதா பீடம் (சிருங்கேரி, கர்நாடகா), மற்றும் துவாரகா சாரதா பீடம் (துவாரகா, குஜராத்) ஆகும். இந்த நான்கு மடங்களும் முதல்முறையாக மோடிக்கு எதிராக திரும்பி உள்ளன. இந்து மத சாஸ்திரப்படி, சனாதானத்தின் படி மோடிக்கு  ராமர் சிலையை வைக்கும் அதிகாரம் இல்லை. அதை மீறி அவர் வைப்பதை இவர்கள் விரும்பவில்லை என்பதால் நாட்டின் நான்கு முக்கிய சங்கர்ச்சாரியார்களோ அல்லது மதத் தலைவர்களோ அந்த நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டார்கள் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.  எதிர்க் கட்சிகளுக்கு இது   நல்லதொரு வாய்ப்பாக  உள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், ஆதி சங்கரரும் அவரது மடங்களும், ஷைவம் - இந்துக் கடவுளான சிவன் வழிபாடு - மற்றும் சக்தி, இந்து தெய்வம் சக்தியின் வழிபாடு ஆகியவற்றை மட்டுமே மேற்கொண்டு வந்தது. இருப்பினும் இது வைஷவம் பற்றிய கருத்துக்களை போக போக ஏற்றுக்கொண்டது. இந்து கடவுள் விஷ்ணு மற்றும் ராமர் உட்பட அவரது பல்வேறு அவதாரங்களை வழிபடுதல் அதன்பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில்தான் ராமர் கோவில் வழிபாட்டிற்கு செல்ல மாட்டோம் என்று அறிவித்துள்ளனர் சங்கராச்சாரியார்

ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் சார்பில்  2000 கோடி ரூபாவுக்கு  அதிகமாக நிதி பெறப்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் திறப்பு விழா குறித்த அறிவிப்பை உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்த கோவிலை தலைமை கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புரா வடிவமைத்துள்ளார்.

ராமர் பிறந்த இடமான அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராம பிரானுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் பூமி பூஜை 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் திகதி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த கோவிலில் சூர்யன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

 ராமர் கோவில் மொத்தம் 2.7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இதில் 57,400 சதுரஅடியில் கோவில் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளன. இந்த கோவிலுக்கு மொத்தம் 12 நுழைவு வாயில்கள் உள்ளன.

 ஏறக்குறைய 70 சதவீதத்திற்கும் அதிகமான கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் ஜனவரி மூன்றாவது வாரத்தில் கோவில் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம ஜானகி பாத், பக்தி பாத், ராம் பாத் ஆகியவற்றின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக புதிதாக   விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.

அதோடு மிக முக்கியமாக ராம் ஜென்ம பூமியையும், அயோத்தியில் உள்ள மிக முக்கியமான மற்றும் பழமையான ஹனுமன் கோவிலையும் இணைக்கும் சாலை விரிவாக்கப் பணிகளும் நடந்து வருகின்றன. ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஹனுமனையும் தரிசிக்க செல்ல வசதியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராம் ஜெயண்ட பூமி பாத் 30 மீற்றர் அகலமும், பக்தி பாத் 14 மீற்றர் அகலமும் கொண்டதாகும்.

இக்கோவிலின் சுவர்களில் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கருவறை எண்கோண வடிவம் கொண்டதாகும். இக்கோவிலின் கர்ப்ப கிரகத்தில் நிறுவனப்பட உள்ள ராம் லல்லாவின் சிலையின் மீது சூர்ய கதிர்கள் படும் வகையில் கட்டப்பட்டுள்ளன. மூலவர் ராமர் சிலை 5 அடி உயரத்தில் வெள்ளை பளிங்கு கல்லால் அமைக்கப்படட்டுள்ளது. இந்த கோவிலுக்காக 2100 கிலோ எடையுள்ள மணி, எட்டாவிலிருந்து பிரத்யேகமாக செய்து கொண்டு வரப்பட்டுள்ளது. 6 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட இந்த மணியின் விலை 21 இலட்சம் ரூபாயாகும்.

1000 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்டதாக இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. எல் அண்ட் டி நிறுவனம் ராமர் கோவிலை கட்டி வருகிறது. பல கட்ட சோதனைகள் நடத்தி, ஸ்திரதன்மை ஆராயப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் ஒவ்வொரு தளத்திலும் பிரார்த்தனை மண்டபமும், கீர்த்தனை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் முன்புறம் மிக பிரம்மாண்டமாக அனுமன் சிலை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

வாஜ்பாய்க்கும், அத்வானிக்கும்  பாபர் மசூதி வாழ்வு கொடுத்தது. மோடியையும், அமித்ஷாவையும்  மோடி கைதூக்கி  விடுவாரா அல்லது  கைவிடுவாரா என்பதை  இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவு  சொல்லும்.

 

ரமணி

 

Saturday, March 12, 2022

சாதித்தது பா.ஜ. க: வளர்கிறது ஆம் ஆத்மி: காணாமல் போன காங்கிரஸ்

ஐந்து மாநில சட்ட சபைத் தேர்தல்களில் பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி ஆகியன  வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி கரைந்து விட்டது.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநிலங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடந்தது. மற்ற மாநிலங்களில் பா.., ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

பாரதீய ஜனதாவுக்கு எதிரான வாக்குகளை எதிரணிகள்  சிதறடித்ததால் பாரதீய ஜனதா இலகுவாக வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் பத்து வருடங்களாக கடுமையாக உழைத்த ஆம் ஆத்மி அறுவடை செய்துள்ளது. டில்லியில் மட்டுமே சுழன்றடித்த ஆம் ஆத்மி பஞ்சாப்பிலும் கால் பதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சி மாறியதும், காங்கிரஸின் உள்ளக அரசியலும் அக் கட்சியின் தோல்விக்கு  பிரதான காரணமாகும்.

ஐந்து மாநிலங்களிலும் முன்னொருகாலத்தில் ஆட்சி பீடத்தில் இருந்த காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைச் சந்துத்துள்ளது. கோவாவில் கடந்த முறை போல் உறுப்பினர்கள் கட்சி மாறிவிடாமல் இருப்பதற்காக அவர்களிடம் வாக்குறுதி வாங்கியது. தேர்தல் முடிந்த பின்னர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஆனால்,   எண்ணிக்கை துவங்கிய நிலையில் அக்கட்சியின் கனவுகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் தவிடு பொடியாகியன‌. பஞ்சாபில் ஆட்சியை ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடிக்கிறது.


கோவாவில் பா.., ஆட்சி மீண்டும் அமைய உள்ள நிலையில், முதல்வர் யார் என்பதில் தற்போதைய முதல்வர் பிரமோத் சாவந்துக்கும், அமைச்சர் விஷ்வஜித் ராணேவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

கோவாவில், 40 உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல் நடந்தது.  தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள பா.., ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கிடையே, பா..,வில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போது முதல்வராக உள்ள பிரமோத் சாவந்தே மீண்டும் முதல்வராக வேண்டும் என கோவா பா..,வில் ஒரு பிரிவினர் வலியுறுத்துகின்றனர்.

மேலும் சிலர், மாநிலத்தில் மூத்த அமைச்சர் விஸ்வஜித் ராணே முதல்வராக வேண்டும் என விரும்புகின்றனர். இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே, முதல்வர் யார் என்பது தெரியும். இது பற்றி விஸ்வஜித் ராணே கூறுகையில், ''கட்சி மேலிடம் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன். ஏனெனில், கட்சியில் நான் ஒரு சாதாரண தொண்டன்,'' என்றார்.

நான்தான் அடுத்த முதல்வர்' என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்த சித்துவும் தோற்றுவிட்டார். அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் ஜீவன் ஜோத் கவுர் என்ற ஆம் ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளரிடம் அவர் தோற்றுவிட்டார்.


முதல்முறையாக பிரமாண்ட வெற்றி பெற்று பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்கிறது ஆம் ஆத்மி கட்சி. ஆட்சி அவர்களுக்குத்தான் என்று கருத்துக் கணிப்புகள் சொன்னாலும், 117 தொகுதிகளில் 90-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்து ஆட்சியில் அமர்வது மகத்தான சாதனை. டெல்லியை அடுத்து ஆம் ஆத்மி ஆட்சி அமையும் இரண்டாவது மாநிலம் பஞ்சாப். காங்கிரஸும் ராஜஸ்தான், சட்டீஸ்கர் என இரண்டே மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கிறது. எனவே, காங்கிரஸுக்கு சமமான அந்தஸ்தை ஆம் ஆத்மி பெற்றிருக்கிறது எனலாம்.

பஞ்சாப்பில் முதல்வர் போட்டியில்  இருந்த அத்தனை பேரையும் மண்ணைக் கவ்வச் செய்திருக்கிறது ஆம் ஆத்மி. இதன்மூலம் முறையான எதிர்க்கட்சியே இல்லாமல் செய்ததுடன், வலுவான எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் சட்டமன்றத்துக்குள் நுழைய முடியாதபடி செய்துவிட்டது.

ஆட்சியை இழந்திருக்கும் காங்கிரஸ் கட்சியில் முதல்வராக இருந்தவர் சரண்ஜித் சிங் சன்னி. இவரையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து, இரண்டு தொகுதிகளில் போட்டியிடவும் வைத்தது காங்கிரஸ். இரண்டு தொகுதிகளிலும் அவர் தோற்றுவிட்டார்.பதார் தொகுதியில் லப் சிங் உகோக் என்ற எளிய ஆம் ஆத்மி தொண்டரிடம் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் சன்னி தோற்றிருக்கிறார். லப் சிங்கின் தந்தை டிரைவராக இருக்கிறார். அம்மாவோ அரசுப் பள்ளி ஒன்றில் துப்புரவுத் தொழிலாளியாக இருக்கிறார்.

சம்கார் சாஹிப் என்ற இன்னொரு தொகுதியிலும் முதல்வர் சன்னிக்கு தோல்வியே கிடைத்தது. கடந்த முறை இங்கு அவர் ஜெயித்திருந்தார். இம்முறை அவர் பெயர் கொண்ட சரண்ஜித் சிங் என்ற ஆம் ஆத்மி வேட்பாளரிடமே அவர் தோற்றுவிட்டார். இந்த சரண்ஜித் கண் மருத்துவராக இருக்கும் கோடீஸ்வரர்.

காங்கிரஸில் முதல்வர் பதவிக்காக முட்டி மோதிய இன்னொருவர் நவ்ஜோத் சிங் சித்து. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே காங்கிரஸ் கட்சியில் நிகழ்ந்த பல குழப்பங்களுக்கு சித்துவே காரணமாக இருந்தார். முதல்வர் சன்னியை வெளிப்படையாக விமர்சனம் செய்தார். சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததும் அவருக்குப் பிடிக்கவில்லை. 'நான்தான் அடுத்த முதல்வர்' என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்த சித்துவும் தோற்றுவிட்டார். அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் ஜீவன் ஜோத் கவுர் என்ற ஆம் ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளரிடம் அவர் தோற்றுவிட்டார்.

 முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பெரும்பாலான காலம் முதல்வராக இருந்தவர் ப்டன் அமரிந்தர் சிங். காங்கிரஸ் கட்சியில் எழுந்த கலாட்டாவில் பதவியை ராஜினாமா செய்தவர். பிறகு கட்சியை விட்டே விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார். பா..-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.

பஞ்சாப் தேர்தல் களத்தில் இருந்த ஐந்து முதல்வர் வேட்பாளர்களையும் ஆம் ஆத்மி கட்சியே வீழ்த்தியது விநோதம். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், தான் போட்டியிட்ட துரி தொகுதியில் அத்தனை வேட்பாளர்களையும் கட்டுப்பணம் இழக்கச் செய்து ஜெயித்திருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் இரண்டாவது முறையாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டுள்ளார்.உத்தரப்பிரதேசத்தில் மிகவும் இளம் வயதில் முதல்வரானவர் என்ற பெயருடன் இருப்பவர் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். முலாயம் சிங் யாதவ் மகனான அகிலேஷ் யாதவ் 2012-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வந்த திடீர் முதல்வராகவே பார்க்கப்படுகிறார். அது வரை சமாஜ்வாடி கட்சி தலைவராகவும், 3 முறை முதல்வராகவும் இருந்த முலாயம் சிங் யாதவ் மூன்று முறையும் பிறகட்சிகளின் துணையோடுதான் முதல்வர் பதவியில் இருந்தார். ஆனால் 2012-ம் ஆண்டு நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 224 தொகுதியில் வெற்றி பெற்றுதனிப்பெரும் கட்சியாக வந்தது. அந்நேரம் 73 வயதில் இருந்த முலாயம் சிங் யாதவ் தனது மகனை முதல்வராக்க இதுவே சரியான நேரம் என்று கருதி அகிலேஷ் யாதவை முதல்வராக்கினார்.

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவே எதிர்பாராத விதமாக பிற்படுத்தப்பட்ட தலைவர்களை தன் வசம் இழுத்த அகிலேஷ் யாதவ் பாஜகவிற்கு கடுமையான போட்டியை கொடுத்தார். இதனால் பாஜக அகிலேஷ் யாதவ் குடும்பத்தில் இருந்து சிலரை தங்களது கட்சிக்கு இழுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களில் சமாஜ்வாடி கட்சி 150 இடங்களுக்கு குறையாமல் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த எண்ணிக்கையை பெற முடியாமல் அகிலேஷ் யாதவ் இரண்டாவது முறையாக தோல்வியை தழுவி இருக்கிறார். இன்னொரு புறம், பலம் வாய்ந்த பாஜக-வுக்கு எதிராக தனியாக களத்தில் நின்று கடந்த முறை பிடித்த இடங்களை விட இரு மடங்குக்கும் அதிகமான இடங்களை அகிலேஷ் கைபற்றியுள்ளதே பாஜகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவும் அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்படுகிறது. அகிலேஷ் மீண்டும் கோட்டை விட்டாரா, அல்லது இது வெற்றிகரமான தோல்வியா என்பது 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜகவை எதிர்ப்பதில் அவரின் வியூகம் போன்றவை முடிவு செய்யும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. நாட்டில் அதிக தொகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால், நாடாளுமன்ற தேர்தலிலும் உத்தரபிரதேசம் அதிக கவனம் கொண்டதாக இருக்கும்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே இத் தேர்தல் கணிக்கப்படுகிறது.