Tuesday, December 27, 2022

சம்பியன் கனவு அன்று சச்சினுக்கு; இன்று மெஸ்ஸிக்கு

 

ஆர்ஜென்ரீனா அணியின் க‌ப்டன் மெஸ்ஸியை முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 சச்சின் டெண்டுல்கருக்கு உலகக்  கிண்ணம்  மிகப்பெரிய கனவாகவே இருந்தது. எனினும், அவர் விளையாடும் கடைசி உலகக்கோப்பையின் போது அந்த கனவு நனவானது. தற்போது இதே சூழல் தான் மெஸ்ஸிக்கும் நடந்தது.இந்தியாவின் 28 வருட உலகக் கிண்ண‌ கனவு சச்சினுக்காகவே நிறைவேறியது போல, ஆர்ஜெண்ரீனாவின் 36 வருட கனவு மெஸ்ஸிக்காக நிறைவேறியுள்ளது. தற்போது, அவர்கள் இருவரையும் ஒப்பிட்டு, மீம்ஸ் மற்றும் கருத்துகளை ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

 






அமைச்சரானார் உதயநிதி

முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். தமிழக சட்ட மன்றத் தேர்தலில் உதயநிதி போட்டியிட்ட போது அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என எதிர் பார்க்கப்பட்டது. முதலாவது அமைச்சரவையில் அவர் சேர்க்கப்படவில்லை.  என்றாலும் உதயநிதி அமைச்சராகிறார்  என்ற செய்தி பரபரப்பனது. அந்தச் செய்தி இன்று உண்மையாகி உள்ளது.

உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராகப் பொறுப்பேற்றார் உதயநிதி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களைக்கொண்ட அமைச்சரவை கடந்த மே மாதம் பொறுப்பேற்றது. அதன் பிறகு ஒன்றரை ஆண்டு கழித்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதில், தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது

ஆளுநர் மாளிகையிலுள்ள தர்பார் அரங்கில் முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர்கள், தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பேரவைக் கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட அனைவரும் பங்கேற்றனர். மேலும், உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராகப் பொறுப்பேற்றார் உதயநிதி.

கடந்த 2009-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு 56-வது வயதில் அமைச்சரவையில் இடமளித்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் தன் 46-வது வயதில் அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்," நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனபோதும், இப்போது அமைச்சரானபோதும் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும், தலைவர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்களின் ஆலோசனையின்படி சிறப்பாக நிறைவேற்றுவேன். அப்போதும் இப்போதும் என்மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அது அனைத்துக்கும் என் உழைப்பின் மூலம் பதிலளிப்பேன். என் முன்னேற்றத்தில் பத்திரிகையாளர்களின் விமர்சனத்துக்கும் பெரும் அக்கறை இருக்கிறது. அதற்கும் நன்றி. `மாமன்னன்’தான் எனது கடைசி படம். இனி நடிக்க மாட்டேன். கமல் தயாரிக்கும் படத்திலிருந்து விலகிவிட்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சட்டமன்ரத் தேர்தலின் போது  உதயநிதியின் பிரசாரம் மக்களைக் கவர்ந்தது. ஒரு செங்கல்லை வைத்து மக்களின் மனதில் மிக இலகுவாக இடம்  பிடித்தார்.

உதயநிதி அமைச்சரானதை எதிர்க் கட்சிகள்   மிக வன்மையாகக் கண்டித்துள்ளன. வாரிசு அரசியல் என்று குற்றம் சுமத்துகின்றன. இந்தியாவில் வாரிசு அரசியல் இல்லாத மாநிலம் எதுவும்  இல்லை.கருணாநிதி,ஸ்டாலின், உதயநிதி என்பது  மட்டுமே  முன்னில்லைபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2009-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு 56-வது வயதில் அமைச்சரவையில் இடமளித்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் தன் 46-வது வயதில் அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கிறார். ஊராட்சி சபை: 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் முன்னெடுத்த ஊராட்சி சபைக் கூட்டங்களைப் பல மாவட்டங்களில் திறம்பட நடத்தினார். தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றி திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மக்கள்மொழியில் அவர்களுடன் கலந்துரையாடும் வகையிலான இயல்பான பேச்சு, வாக்காளர்களிடம் மிகப்பெரிய அளவில் மனமாறுதலை ஏற்படுத்தியது என்றால், அது மிகையல்ல. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளில் வெல்ல இவரின் பிரசாரத்துக்குக் குறிப்பிடத்தக்கப் பங்குண்டு.


 நீட் தேர்வுக்கு எதிராக, திமுக மாணவர் அணியுடன் இணைந்து தொடர் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார். நீட் தேர்வால் தன் இன்னுயிரை இழந்த தங்கை அனிதாவின் சொந்த ஊரில் அவர் நினைவாக அமைந்துள்ள நூலகத்திற்குச் சென்று தனக்கு அன்பளிப்பாக வந்த புத்தகங்களையும் நூலக மேம்பாட்டுக்கான வளர்ச்சி நிதியையும் வழங்கினார். கொரோனா காலத்தில் ஊரடங்கை மட்டும் அறிவித்துவிட்டுச் செயல்படத் திறனின்றி நின்றன ஒன்றிய, மாநில அரசுகள். பேரிடரில் வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு, உதவிக்கரம் நீட்ட இளைஞர் அணி சார்பாக அனைத்து மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களின் அலைபேசி எண்ணையும் பொதுவெளியில் வெளியிட்டு, ‘உதவித் தேவைப்படுவோர் அந்தந்த மாவட்ட அமைப்பாளரைத் தொடர்புகொள்ளலாம்’ என அறிவித்து அந்த நலத்திட்டப் பணிகளை ஒருங்கிணைத்தார்.

நாடாளுமன்றத்தில் நாட்டின் ஒற்றுமைக்கே குந்தகம் விளைவிக்கக்கூடிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது ஒன்றிய பாஜக அரசு அதற்குத் துணை நின்றது அன்றைய அதிமுக மதச்சார்பின்மைக்கு எதிரான பாஜக-அதிமுகவின் போக்கைக் கண்டித்து, தமிழகத்தில் முதல் நபராக இளைஞர் அணியினருடன் களத்தில் இறங்கிப் போராடிக் கைதானர்.இந்தித் திணிப்பு, ஒரே தேர்வு என மொழி, கல்வி உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் பாசிச போக்கைக் கண்டித்து, இளைஞர் அணி- மாணவர் அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்.

சட்டப்பேரவை உறுப்பினராகி ஒன்றரை ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், அமைச்சராகியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

திமுகவின் முதல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும், 2018ஆம் ஆண்டில்தான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின். அவரைப் பொறுத்தவரை, இந்த வளர்ச்சி அபாரமானதுதான்.

2018ஆம் ஆண்டு அறிவிப்புக்குப் பிறகு, 2019ல் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி ஸ்டாலின்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே திமுகவின் மிக முக்கிய அணியான இளைஞரணியின் செயலாளராக்கப்பட்டார் உதயநிதி.

இதற்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற உதயநிதி, அப்போதே அமைச்சராவார் என பேசப்பட்டது. ஆனால், அப்போது அமைச்சராக்கப்படாத நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கழித்து இப்போது அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

உதயநிதிக்கு அளிக்கப்பட்டிருக்கும் துறை, இதற்கு முன்பு தமிழக அரசியலில் பெரிய முக்கியத்துவம் பெற்ற துறையாக கருதப்பட்டதில்லை. தன் மீது விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு செயல் மூலம் பதிலளிக்கப்போவதாக உதயநிதி பதிலளித்துள்ளார்.

Monday, December 26, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -49


 ஓய்வதில்லை’ திரைப்படம் சித்ரா லட்சுமணனின  வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான படம். ஒரு பத்திரிகையாளனாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே, ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் அவரும் நெருங்கிய நண்பர்கள்.

அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த கே.பாக்யராஜ் உள்ளிட்ட பல உதவி இயக்குநர்கள் அவரிடமிருந்து விலகி தனியாக படத்தை இயக்கி வந்த சூழ்நிலையில் என்னிடம் ஒரு நாள், “என்னுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறாயா..?” என்று கேட்டார் பாரதிராஜா.

அப்போது அவர் ‘திரைக்கதிர்’ என்ற பெயரிலே ஒரு பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தார். அது தவிர ஏராளமான படங்களுக்கு பத்திரிகைத்  தொடர்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றுவதற்காக பல இளைஞர்கள் கியூவில் காத்துக் கொண்டிருந்த அந்தக்  காலக்கட்டத்தில் அவரே என்னை உதவி இயக்குநராக சேரும்படி அழைக்கிறார் என்றால் அந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று முடிவு செய்து உடனடியாக அவருடன் உதவி இயக்குநராக சேர்ந்தார்.

‘அலைகள் ஓய்வதில்லை’ தமிழ்த் திரையுலகத்தில் பலருக்கும் அடையாளம் தந்த ஒரு படமாக அமைந்தது. கார்த்திக், ராதா, தியாகராஜன் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமான அந்த படத்தில்தான் ஆர்.டி.பாஸ்கர் தயாரிப்பாளர் ஆக அறிமுகமானார்.நான் உதவி இயக்குநராகப்  பணியாற்றிய முதல் படமும் இதே ‘அலைகள் ஓய்வதில்லை’ படம்தான்.

இந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் கதாநாயகியாக ராதா தேர்வானதும் கதாநாயகனாக நடிப்பதற்கும் அந்தப் படத்திலே மிக முக்கிய வேடமாக அமைந்திருந்த கதாநாயகி மேரியின் அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கும் நடிகர்களைத் தேர்வு செய்யும் பணி தொடங்கியது.

பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் அப்போது பாலிடார் என்ற இசைக் கம்பெனியின் சென்னைப் பிரதிநிதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆகவே இளையராஜா, கங்கை அமரன், ஆர்.டி.பாஸ்கர் ஆகியோரோடு அவருக்கு  நெருக்கமான நட்பு இருந்தது.  

ஒரு நாள் பாஸ்கரோடு அவர் பாரதிராஜாவைப் பார்க்கப் போனபோது அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா. “என்ன அவரையே பார்த்துக்கிட்டிருக்கே. அவரை படத்தில நடிக்க வைக்கப் போறியா..?” என்று இளையராஜாவின் அண்ணனும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான பாஸ்கர் கேட்க “அதைத்தான் யோசிக்கிறேன். மேரியின் அண்ணனாக இவரை நடிக்க வைத்தால்  எப்படியிருக்கும்…?” என்றார்  பாரதிராஜா.  அப்படி சொன்னதையே செய்தார் பாரதிராஜா. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தியாகராஜனே தேர்வானார்.

அடுத்து கதாநாயகனுக்கான வேட்டை தொடங்கியது. பள்ளிகள், கல்லூரிகள், கடற்கரை என்று பல இடங்களில் தேடியும் அந்தக் கதைக்கேற்ற நாயகன் கிடைக்கவில்லை.

படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் அமைந்துள்ள ஆதர்ஷ் வித்யாலயாவில் படித்துக் கொண்டிருந்த ஒரு பையனை அந்தப் பாத்திரத்திற்கு தேர்வு செய்தார் பாரதிராஜா.

அதையடுத்த இரண்டு நாட்களில் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அந்தப் பள்ளிக்குசித்ரா லட்சுமணனை அழைத்துக் கொண்டு போய்  அந்த பையனைக் காட்டினார் அவர். என்ன காரணத்தாலோ… என் மனதுக்கு அந்தப் பையன் ‘அலைகள் ஓய்வதில்லை’யின் விச்சுவின்  பாத்திரத்திற்கு சரியாக இருப்பான் எனத்  தோன்றவில்லை.

அதை அவர்  இயக்குநரிடம் சொன்னபோது, “ஷூட்டிங் எல்லாம் நிச்சயமாகி விட்டது. பரவாயில்லை விடு. இவனே இருக்கட்டும்…” என்றார்.

“இவ்வளவு நாள் பொறுத்துவிட்டோம். இன்று ஒரு நாள் மீண்டும் தேடிப் பார்ப்போம். பையன் சரியாக அமையவில்லை என்றால்… நாளை இவனையே கதாநாயகனாக முடிவு செய்துகொண்டு படப்பிடிப்பிற்கு சென்றுவிடலாம்…” என்று  லட்சுமணன் சொன்னார்.

ஒரு வருடம் ஓடிய ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் முழுக்க, முழுக்க புதுமுகங்களை நடிக்க வைத்து சாதனை புரிந்த பாரதிராஜா பெருந்தன்மையோடு  அவர் சொன்னதை  ஏற்றுக் கொண்டார். அதுதான் அவரிடமுள்ள தனிக் குணம். சாதாரணமாக எல்லா இயக்குநர்களிடமும் பார்க்க முடியாத பல நல்ல குணங்களுக்கு சொந்தக்காரர் அவர்.

மீண்டும் கதாநாயகன் வேட்டை தொடங்கியது. இந்த முறை எங்களுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தின் தயாரிப்பாளரான ஆர்.சி.பிரகாஷும் சேர்ந்து கொண்டார். பல இடங்களில் தேடி அலைந்து விட்டு மாலையில் எழும்பூரில் அமைந்துள்ள ஹாசன் மெமோரியல் பள்ளியின்  வாசலுக்கு சென்ற   மூவரும்  வகுப்புகள் விட்டு  வெளியே வரும் மாணவர்களில் யாராவது தேறுவார்களா என்று பார்த்தார்கள்.ஆனால், அதிலும் யாரும்  தேறவில்லை.

பின்னர் காபி சாப்பிடுவதற்காக மூவரும் அட்லாண்டிக் ஹோட்டலுக்குப் போனபோது காரை ஓட்டியவர் பாரதிராஜா. அவர் அப்போதுதான் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்தார். அட்லாண்டிக் ஓட்டல் அருகே போனபோது சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஒரு பையன் மீது காரை மோதி விட்டார் பாரதிராஜா.

போயஸ் தோட்டத்தில் தன் வீட்டுக்கு அருகே தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் இருப்பதாக ஆர்.சி.பிரகாஷ் கூறவே அந்தப் பையனுக்கு  முதலுதவி செய்வதற்காக அந்த டாக்டரின் இல்லத்துக்கு சென்றார்கள்.

அந்த டாக்டரின் வீடு கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ளது. சிகிச்சை முடிந்து அந்த பையனை அட்லாண்டிக் ஹோட்டல் அருகே இறக்குவதற்காக அவர்கள் காரில் சென்றபோது கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள நடிகர் முத்துராமனின் வீட்டுக்கு பக்கத்தில் நண்பர்களுடன் பூப்பந்து ஆடிக் கொண்டிருந்தார் பின்னாளில் ‘கார்த்திக்’ என்ற பெயரில் அறிமுகமான ‘முரளி’.

கார் அந்தப் பக்கம் சென்ற கண நேரத்தில் அவரைப் பார்த்த பாரதிராஜாவின் கண்களுக்கு… அந்த முரளிக்கு உள்ளே இருந்த நடிகன் எப்படித்தான் தெரிந்தானோ..? காரை கொஞ்சம் பின்னால் ஓட்டச் சொன்னார் “யார் அந்தப் பையன்?” என்று  கேட்டார்.


 , “அது நடிகர் முத்துராமனின் மகன்” என்று அவருக்கு சொன்னார். . பின்னர் அந்த பையனை அழைக்கச் சொன்னார். லட்சுமணன்  முரளியை அழைத்துப்  பேசிக் கொண்டிருக்க… அவர் என்னுடன் பேசிக் கொண்டிருந்த முரளியின் முக பாவங்களையே  கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

ஒரு பத்து நிமிடத்திற்குப் பிறகு “அப்பா வீட்டில் இருக்கிறாரா…?” என்று பாரதிராஜா முரளியிடம் கேட்டபோதே ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் நாயகன் முரளிதான்  என்று  புரிந்துவிட்டது.

அப்பா சினிமாவிற்குப் போயிருப்பதாக முரளி சொன்னவுடன் ஆர்.சி.பிரகாஷ் வீட்டு டெலிபோன் நம்பரை எழுதி முரளியிடம் கொடுத்து முத்துராமன்  வந்தவுடன் அந்த நம்பருக்கு கூப்பிடச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

ஆர்.சி.பிரகாஷ் வீடு, கஸ்தூரி ரங்கன் சாலைக்கு மிக அருகில் போயஸ் தோட்டத்தில் அமைந்திருந்ததால் அவரது வீட்டில் முத்துராமனின் டெலிபோன் அழைப்பிற்காக காத்திருந்தோம். “மிகவும் வித்தியாசமான முகம். அது மட்டும் இல்லாமல் பையன் துருதுருவென்று இருக்கிறான். ‘அலைகள் ஓய்வதில்லை’ கதையின் நாயகன் விச்சுவிற்கு இவன் மிக பொருத்தமாக இருப்பான்…” என்றார் பாரதிராஜா.

இரவு பத்து மணியளவில் முத்துராமனிடமிருந்து போன் வந்தது. உடனேயே  அவரது வீட்டுக்குசென்றார்கள்.  வழக்கம்போல உற்சாகமாக எங்களை வரவேற்றார் முத்துராமன். “முரளியை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்” என்று  அவரிடம்  பாரதிராஜா  சொன்னபோது முதலில் அவரால் அதை நம்பவே முடியவில்லை. “இவனையா” என்று திரும்பத் திரும்பக் கேட்டார் என்றாலும் பாரதிராஜா தனது மகனைத் தேர்ந்தெடுத்ததில் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.

பின்னர் முரளியின் பிளஸ் மற்றும் மைனஸ் இரண்டையும் பாரதிராஜாவோடு பகிர்ந்து கொண்ட முத்துராமனும் அவரது மனைவியும் “பையனை உங்ககிட்ட ஒப்படைச்சிட்டோம். இனி அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களது பொறுப்பு” என்று சொல்ல “இனி அவனைப் பற்றிய கவலையை நீங்கள் விட்டு விடுங்கள். அவனை ஹீரோவாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு” என்றார் பாரதிராஜா.

படத்தில் நடிப்பதற்கு முரளி தனது தந்தையிடம் விதித்த ஒரே நிபந்தனை அவர் படப்பிடிப்பைப் பார்க்க வரக்கூடாது என்பது மட்டுமே. அதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டார்  முத்துராமன்.

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது தனது மனைவியுடன்  நாகர்கோவிலுக்கு வந்த அவர் மகனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக படப்பிடிப்பு நடைபெற்ற இடத்துக்கு வரவேயில்லை. ஹோட்டலிலேயே ஒரு நாள் மகனுடன் தங்கிவிட்டு சென்னைக்கு புறப்பட்டுவிட்டார்.   

நாகர்கோவிலுக்கு சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முட்டம் என்னும்  கடற்கரை கிராமத்தில் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

பாரதிராஜாவால் ‘கார்த்திக்’ என்று பெயர் மாற்றம் பெற்றிருந்த முரளியை ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் நாயகன் விச்சுவாக கொஞ்சம், கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்தார் பாரதிராஜா. அதன் பின் கார்த்திகின்  பயணம் வெற்ரிகரமனதாக இருந்தது.

 

 

ஜெலென்ஸ்கியின் அமெரிக்க விஜயம் உக்ரைன் போரில் திருப்பத்தை ஏற்படுத்துமா?


 உக்ரைன் மீது கடந்த பெப்ரவரியில்  ரஷ்யா படையெடுத்ததன் பின்னர்     உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முதன் முதலாக வெளிநாட்டுக்கிச் செல்ல  உள்ளார்.  ஜெலென்ஸ்கியின்  அமெரிக்க விஜயத்தை உலக நாடுகள்  உற்று நோக்கிகின்றன.ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மோதல் முழுவதும் உலகத் தலைவர்கள் மற்றும் கூட்டங்களில் வீடியோ மூலம் உரையாற்றினார்.

இந்த போரின்ரின் கடுமையான போர்களில் ஒன்றான Bஅக்க்முட் முன்னணி நகரத்தில்  ஜெனெஸ்க்கி கடந்த வாரம் முன்னணி துருப்புக்களைச் சந்தித்தபோது, அவருக்கு வீரர்கள் கையெழுத்திட்ட உக்ரேனியக் கொடி வழங்கப்பட்டது, அதில் அவர் உக்ரேனியர்களுக்குத் தேவையான உதவியை நினைவூட்டுவதற்காக வாஷிங்டனுக்கு எடுத்துச் செல்வதாகக் கூறினார்.

 உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கியேவில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில், சர்வதேச மனித உரிமைகள் மன்றத்தில் கலந்து கொண்டார்.

 உக்ரேனிய ஜனாதிபதி  ஜெலென்ஸ்கி புதன்கிழமை ஜனாதிபதி ஜோ பிடனுடனான உச்சிமாநாட்டிற்காக வாஷிங்டனுக்குச் சென்றார் மற்றும் பிப்ரவரியில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து நாட்டிற்கு வெளியே தனது முதல் அறியப்பட்ட பயணத்தில் காங்கிரஸில் உரையாற்றினார்.

 உக்ரைனின் "எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தவும்" தனது நாட்டிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை பிடனுடன் விவாதிப்பதற்காக இந்த விஜயம் என்று ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் கணக்கில் கூறினார்.

உக்ரேனிய குடிமக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுடன், மோதலின் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்ததைக் கண்ட கொடூரமான போரின் 10 மாதங்களுக்குப் பிறகு மிகவும் உணர்ச்சிகரமான பயணம் நடைபெறுகிறது. யு.எஸ். சட்டமியற்றுபவர்கள் உக்ரைனுக்கு சுமார் 45 பில்லியன் டாலர் அவசர உதவியை உள்ளடக்கிய ஆண்டு இறுதி செலவினப் பொதியில் வாக்களிக்கத் தயாராகி வருவதால், தன்னைத் தற்காத்துக் கொள்ள நாட்டிற்கு தேசபக்த நிலத்திலிருந்து வான் ஏவுகணைகளை அனுப்ப பென்டகன் தயாராகி வருகிறது.1,300 கிலோமீட்டர் (800 மைல்) மோதலின் முன் வரிசையில் உள்ள வெப்பமான இடமான உக்ரைனின் டோனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள பக்முட் நகரத்திற்கு செவ்வாய்க்கிழமை துணிச்சலான மற்றும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட பிறகு, ஜெலென்ஸ்கி வெளிநாடு சென்றார். உக்ரேனிய துருப்புக்களின் "தைரியம், பின்னடைவு மற்றும் பலம்" பின்னணியில் பீரங்கிகளின் வளர்ச்சியைப் பாராட்டினார்.

ஓலன்ட் இன் தனியார் ஒளிபரப்பு TVண்24, ஜெலென்ஸ்கி அமெரிக்காவிற்குச் செல்லும் வழியில் புதன்கிழமை அதிகாலை போலந்திற்குச் சென்றதாக அந்த நிலையம் ஜெலென்ஸ்கி  ஒரு ரயில் நிலையத்திற்கு வந்து வாகனப் பேரணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகளைக் காட்டியது. TVண்24, பாதுகாப்பு காரணங்களுக்காக ஓரளவு மங்கலாக்கப்பட்ட வீடியோ, போரிலிருந்து வெளியேறும் பல அகதிகளின் வருகைப் புள்ளியாக இருந்த போலந்து எல்லை நகரமான Pர்ழெம்ய்ச்ல் இல் புதன்கிழமை காலை படமாக்கப்பட்டது.

செவ்வாய்கிழமை இரவு வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் ஒரு அறிக்கையில், ஜெலென்ஸ்கியின் வருகையை பிடன் எதிர்நோக்குவதாகவும், காங்கிரஸின் உரை "உக்ரைனுக்கான வலுவான, இரு கட்சி ஆதரவை" நிரூபிக்கும் என்றும் கூறினார்.

"பொருளாதார, மனிதாபிமான மற்றும் இராணுவ உதவிகள் உட்பட, உக்ரைனை ஆதரிப்பதற்கான அமெரிக்காவின் உறுதியான உறுதிப்பாட்டை இந்த விஜயம் அடிக்கோடிட்டுக் காட்டும்" என்று அவர் கூறினார்.

அமெரிக்க கேபிட்டலில் காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற ஜெலென்ஸ்கிக்கு அவர் விடுத்த அழைப்பில், ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசி, "உக்ரைனுக்கான போராட்டம் ஜனநாயகத்துக்கான போராட்டம்" என்றும், சட்டமியற்றுபவர்கள் "ஒற்றுமை, பின்னடைவு மற்றும் உங்களின் எழுச்சியூட்டும் செய்தியைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்" என்றும் கூறினார். 

யு.எஸ் மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் போருக்கு உடனடித் தீர்வைக் கற்பனை செய்யவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர் மேலும் சில காலம் தொடரும் சண்டைக்குத் தயாராகி வருகின்றனர். உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் மற்றும் பயிற்சி அளிக்கும் அதே வேளையில், அமெரிக்கப் படைகள் நேரடியாக மோதலில் ஈடுபடாது என்று பிடென் மீண்டும் கூறியுள்ளார்

அவர் உக்ரைனில் இருந்து வெளியேறுவது மற்றும் வாஷிங்டனுக்கு செல்வதற்கான பாதுகாப்பு குறித்து வெள்ளை மாளிகை, ஜெலென்ஸ்கியுடன் ஆலோசனை நடத்தியது, ரஷ்ய நடவடிக்கையின் ஆபத்து உட்பட, ஜெலென்ஸ்கி நாட்டிலிருந்து சிறிது நேரம் வெளியேறினார், உக்ரேனிய தலைவரைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரிக்க மறுத்துவிட்டார். உக்ரேனியப் படைகள் மற்றும் சிவிலியன் உள்கட்டமைப்பு இலக்குகள் மீது ரஷ்யா தனது தாக்குதல்களைத் தொடரும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

காங்கிரஸுக்கு முன் நிலுவையில் உள்ள அமெரிக்க நிதியுதவியானது உக்ரைனுக்கு இன்னும் மிகப்பெரிய அமெரிக்க உதவியாக இருக்கும் - பிடனின் $37 பில்லியன் அவசரகால கோரிக்கையை விடவும் - மேலும் இது வரவிருக்கும் மாதங்களில் போர் முயற்சிகளுக்கு ஆதரவு பாய்வதை உறுதி செய்வதாகும்.

புதனன்று, உக்ரைனுக்கு 1.8 பில்லியன் டொலர் இராணுவ உதவியை அனுப்புவதாக அமெரிக்கா அறிவிக்க உள்ளது, அதில் முதன்முறையாக ஒரு பேட்ரியாட் ஏவுகணை பேட்டரி மற்றும் அதன் போர் விமானங்களுக்கான துல்லியமான வழிகாட்டுதல் குண்டுகள் அடங்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்திய வாரங்களில் அதிகரித்து வரும் ரஷ்ய ஏவுகணைகளுக்கு எதிராக அதன் வான் பாதுகாப்பை வலுப்படுத்த உக்ரைனுக்கு அனுப்பும் மேம்பட்ட ஆயுதங்களின் வகைகளில் அமெரிக்கா விரிவாக்கம் செய்வதை இந்த உதவி சமிக்ஞை செய்கிறது. இந்த தொகுப்பில் பென்டகன் பங்குகளில் இருந்து சுமார் $1 பில்லியன் ஆயுதங்களும், உக்ரைன் பாதுகாப்பு உதவி முன்முயற்சியின் மூலம் $800 மில்லியன் நிதியுதவியும் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைனில் பேட்ரியாட் பேட்டரி எப்போது முன் வரிசையில் வரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் உயர் தொழில்நுட்ப அமைப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து உக்ரேனியப் படைகளுக்கு அமெரிக்கப் படைகள் பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி பல வாரங்கள் ஆகலாம் மற்றும் ஜெர்மனியில் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றுவரை, யு.எஸ் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளால் உக்ரைனின் படைகளுக்கு அனைத்து பயிற்சிகளும் ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ளன.

உக்ரைனுக்கான புதிய இராணுவ உதவிகளை வெள்ளை மாளிகை ஏற்பாடு செய்வதால் பிடனும் ஜெலென்ஸ்கியும் அடிக்கடி தொலைபேசியில் பேசினர். அழைப்புகள் பெரும்பாலும் சூடாக இருந்தன, ரஷ்யர்களுக்கு எதிராக உக்ரைன் உறுதியாக இருப்பதற்காக பிடென் பாராட்டினார் மற்றும் ஆதரவுக்கு அமெரிக்க ஜனாதிபதிக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.   

பிப்ரவரி 24 இல் தொடங்கிய ரஷ்யாவின் படையெடுப்பு வேகத்தை இழந்துவிட்டது. சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் சபோரிஜியா மாகாணங்கள் கடுமையாகப் போட்டியிடுகின்றன.

கிழக்கில் சண்டை ஒரு முட்டுக்கட்டையில் இருப்பதால், மாஸ்கோ உக்ரைனின் மின் சாதனங்களைத் தாக்க ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தியது, உறைபனி வானிலை அமைவதால் மின்சாரம் இல்லாமல் மக்களை விட்டுவிடும் என்று நம்புகிறது.

கிரெம்ளின் விழாவில், உக்ரைனில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட நான்கு பகுதிகளின் மாஸ்கோவால் நியமிக்கப்பட்ட தலைவர்களுக்கு புடின் விருதுகளை வழங்கினார். ரஷ்யாவின் இராணுவம் மற்றும் பாதுகாப்பு முகமைகளை கௌரவிக்கும் காணொளியில் அவர் நான்கு பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களைப் பாராட்டினார், "அங்கு வாழும் மக்கள், ரஷ்ய குடிமக்கள், உங்களால் பாதுகாக்கப்படுவார்கள் என்று எண்ணுங்கள்" என்று கூறினார்.பாதுகாப்பு படையினர் எதிர்கொள்ளும் சவால்களை புதின் ஒப்புக்கொண்டார்.

 


சால்ட் பே க்கு எதிரான விசாரணை ஆரம்பம்


 உலகக் கிண்ண  இறுதிப் போட்டியின்  பின்னர் ஆர்ஜென்ரீன வீரர்களின் வெற்ரி கொண்டாட்டத்தின் போது  துருக்கியின் சமையல்காரர் சால்ட் பே ஆடுகளத்தில்  சம்பியன் கிண்ணத்தை எப்படி கையாள முடிந்தது என்பது  தொட்ர்பாக பீபா விசாரணையைத் தொடங்கியுள்ளது.சால்ட் பேயின் உண்மையான பெயர் நஸ்ரெட் கோகே.

டோஹாவில் உள்ள லுசைல் மைதானத்தில் ஆர்ஜென்ரீனாவின் வியத்தகு வெற்றிக்குப் பிறகு, அவரது நடத்தைக்காக அவர் பரவலாக விமர்சிக்கப்பட்டார், அங்கு அவர் வீரர்களின் கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்தார், சம்பியன்  கிண்ணத்தைத் தூக்கிப் பிடித்தார்.   லியோனல் மெஸ்ஸி உட்பட சில வீரர்கள் சால்ட் பே முன்னிலையில் எரிச்சலடைந்தனர், இருப்பினும் போட்டியின் கோல்டன் பால் வெற்றியாளர் அவரது இன்ஸ்டாகிராம்  கணக்கில் சமையல்காரருடன் புகைப்படம் எடுத்தவர்களில் ஒருவராவார்.

பீபாவிதிகளின் கீழ், உலகக் கிண்ண வெற்றியாளர்கள், பீபா அதிகாரிகள் மற்றும் அரச தலைவர்கள் ஆகியோர் கிண்ணத்தை வைத்திருக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட நபர்களில் அடங்குவ‌ர், இதன் மதிப்பு சுமார் $20 மில்லியன் (£16.6 மில்லியன்/€18.7 மில்லியன்).

அவரும் மற்ற விருந்தினர்களும் எவ்வாறு ஆடுகளத்தை அணுக முடிந்தது என்பதை ஆராய்வதாக கால்பந்தின் உலகளாவிய நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

கட்டார் 2022 உலகக் கிண்ணப் போட்டியின் போது போது சால்ட் பே விஐபி அணுகலைப் பெற்றார், பீபாதலைவர் கியானி இன்ஃபான்டினோ உட்பட அவரது சமூக ஊடகங்களில் ஏராளமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார்.

2018 இல் UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதி வெற்றிக்குப் பிறகு ரியல் மாட்ரிட் வீரர்களுடன் சமையல்காரர்  புகைப்படம் எடுத்தார்.

லிவர்பூலின் 3-1 தோல்வியின் முதல் பாதியின் போது காயம் அடைந்து கண்ணீருடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய எகிப்திய விங்கர் மொஹமட் சாலாவுடன் போஸ் கொடுத்ததற்காக அந்த போட்டிக்குப் பிறகும் அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார்.  2023 ஆம் ஆண்டு அமெரிக்க  ஓப்பனில்  பெப்பே கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜோகோவிச்சை வரவேற்க தயாராகிறது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய ஓப்பனில் ஜோகோவிச் விளையாடுவது  உறுதியாகி உள்ளது.   

மெல்போர்ன் பூங்காவில் ஒன்பது முறை சாம்பியனான ஜோகோவிச், 2022 ஆம் ஆண்டில் சீசனின் தொடக்க கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. கொரோனா தடுப்பு ஊசி போடாமையால் அவர் நாடு கடத்தப்பட்டார்.  உலகின் ஐந்தாம் நிலை வீரரான அவர் மெல்போர்னில் 10வது பட்டத்தையும், ஒட்டுமொத்த ஆடவர் சாதனைக்கு சமமான 22வது கிராண்ட்ஸ்லாம் விருதையும் வெல்ல எதிர்பார்த்திருக்கிறார்.

கொரோனா தடுப்பு ஊசி போடாமையினால் இந்த ஆண்டுஜோகோவிச் நான்கு  கிராண்ட்ஸ்லாம்  போட்டிகளில் விளையாடவில்லை.   2022 ஆம் ஆண்டு டெல் அவிவ், அஸ்தானா ,டுரினில் நடந்த ஏடிபி   பட்டங்களை வென்றார், அத்துடன் பாரிஸ் மாஸ்டர்ஸின் இறுதிப் போட்டியையும் அடைந்தார்.அவர் ரோம் மற்றும் விம்பிள்டனில் கோப்பைகளை வென்றார்.

டென்னிஸ்,ஜோகோவிச்,அவுஸ்திரேலியா,விளையாட்டு ஜோகோவிச்சை வரவேற்க தயாராகிறது அவுஸ்திரேலியாஅவுஸ்திரேலிய ஓப்பனில் ஜோகோவிச் விளையாடுவது  உறுதியாகி உள்ளது.   

மெல்போர்ன் பூங்காவில் ஒன்பது முறை சாம்பியனான ஜோகோவிச், 2022 ஆம் ஆண்டில் சீசனின் தொடக்க கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. கொரோனா தடுப்பு ஊசி போடாமையால் அவர் நாடு கடத்தப்பட்டார்.  உலகின் ஐந்தாம் நிலை வீரரான அவர் மெல்போர்னில் 10வது பட்டத்தையும், ஒட்டுமொத்த ஆடவர் சாதனைக்கு சமமான 22வது கிராண்ட்ஸ்லாம் விருதையும் வெல்ல எதிர்பார்த்திருக்கிறார்.

கொரோனா தடுப்பு ஊசி போடாமையினால் இந்த ஆண்டுஜோகோவிச் நான்கு  கிராண்ட்ஸ்லாம்  போட்டிகளில் விளையாடவில்லை.   2022 ஆம் ஆண்டு டெல் அவிவ், அஸ்தானா ,டுரினில் நடந்த ஏடிபி   பட்டங்களை வென்றார், அத்துடன் பாரிஸ் மாஸ்டர்ஸின் இறுதிப் போட்டியையும் அடைந்தார்.அவர் ரோம் மற்றும் விம்பிள்டனில் கோப்பைகளை வென்றார்.


Sunday, December 25, 2022

இளம் தலைமுறையை ஆட்டிப்படைக்கும் ஐஸ் போதைப்பொருள்

போதைப்பொருள் பாவனை சமூகத்துக்கு  எச்சரிக்கவிடும் காரியமாகும். கஞ்சா, அபின்,கெரோயின்  போன்ர போதைப் பொருட்களுகு மத்தியில் ஐஸ் எனும் போதைப் பொருள்  இன்ரு இளம் தலைமுறையின் மத்தியில் புழங்குவது சமூக ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களைக் குறிவைத்து  ஐஸ் போதைப் பொருள் விநியோகம் செய்யப்படுவதால் அவர்களின் பண்பாட்டுக்கு சவால் விடும் வகையில் உள்ளது.

 இலங்கையில் 2022 அக்டோபர் வரை மெத்தம்பேட்டமைனுக்கு (ICE) எதிரான ஒடுக்குமுறையில் 6,000 க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 377 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர் என்று தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் (NDDCB) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"இது இன்னும் இந்த ஆண்டு அக்டோபர் வரையிலான எண்கள் மற்றும் இது இன்னும் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்டிடிசிபியின் அநாமதேய அதிகாரி ஒருவர் EconomyNext இடம் கூறினார்.

"குறிப்பாக அக்டோபர் மாதத்திற்குள், ICE தொடர்பான நடவடிக்கைகளுக்காக 6,000 க்கும் மேற்பட்ட நபர்கள் உள்ளனர், மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாங்கள் அவதானித்துள்ளோம்"

NDDCB வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் 67,900 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இது 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியை விட 77.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதில் 67,900 பேர் 35,765 பேர் ஹீரோயின் தொடர்பானவர்கள், 25,114 பேர் கஞ்சா தொடர்பானவர்கள், 6,728 பேர் ICE தொடர்பான கைதுகள். நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்பட்ட ஹெராயின் மொத்த அளவு 1,046 கிலோவாகும், நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் அளவு 10,214 கிலோவாகும், மேலும் 377 கிலோ ஐசிஇ 2022 ஜனவரி முதல் அக்டோபர் வரை கைப்பற்றப்பட்டது.

2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில், 19,582 ஹெராயின் தொடர்பான கைதுகளும், 14,649 கஞ்சா தொடர்பான கைதுகளும், 3,744 ICE தொடர்பான கைதுகளும் பதிவாகியுள்ளன.

தொற்றுநோய்க்குப் பிறகு, தொற்றுநோய்க்குப் பிறகு தெரு மட்ட விலைகள் குறைந்துள்ளன, மேலும் ஹெராயின் போன்ற மருந்துகளின் தூய்மையின் அளவும் குறைந்துள்ளது என்று அவதானிப்புகள் செய்யப்பட்டுள்ளன என்று NDDCB கூறியது.

"மாதிரிகளில் இருந்து, நாங்கள் ஆராய்ச்சி செய்தோம், மருந்துகளின் தூய்மையின் அளவு குறைந்துவிட்டதை நாங்கள் கவனித்தோம், இப்போது தெரு விலைகள் குறைந்துள்ளன. ஒரு டோஸ் சுமார் 500- 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறதுஎன்று NDDCB வட்டாரம் தெரிவித்தது

இலங்கையில் 'ஐஸ்' எனப்படும் 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறை தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம்   அமலுக்கு வந்துள்ளது. ஐஸ் போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை தண்டிப்பதற்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் போதுமானவையாக இருக்கவில்லை. அதனால், அந்தச் சட்டம் திருத்தப்பட்டு, அதன்மூலம் மரண தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கடந்த செப்டம்பர் மாதம் 09ஆம் தேதி, அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் கட்டளைச் சட்டத்துக்கான திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அது அக்டோபர் 19ஆம் தேதி, '2022ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டம்' எனும் பெயரில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கடந்த செவ்வாய்கிழமை குறித்த சட்டத்தில் தனது கையொப்பத்தை இட்டு, சான்றுப்படுத்தினார். அதனையடுத்து குறித்த திருத்தச் சட்டம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.

மரணதண்டனை என அரிவிக்கப்பட்டும் ஐஸ் போதைப் பொருள் விநியோகம்   நடைபெறுகிறதுஒரு சில மாணவர்கள் ஐஸ் போதைப் பொருளைப் பாவிப்பதால் அனைத்து மாணவர்களையும் சோதனை செய்ய  வேண்டிய நிலை  உள்ளது. ஆசிரியர்களும்பெற்ரோரும்  இணைந்து அஸ் போதைப் பொருளுக்கு எதிராக துரித நடவடிக்கை  எடுத்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் மிக  இறுக்கமான அநடவடிக்கை எடுத்து இளம் சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும்.