Tuesday, May 30, 2023

உடல் நலத்துடன் விளையாட வேண்டாம்

பொருளாதார ஸ்திரத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மெது மெதுவாக  மீண்டெழுந்து வருகிறது. காணாமல் போன அத்தியாவசியப் பொருட்கள்  சந்தைக்கு வந்துள்ளன. தட்டுபாடான  பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. சுமார் ஒன்றரை வருடங்களாக மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிரதுஇதனைச் சீர்செய்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

அரச வைத்திய சாலைகளில்  மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. வைத்திய சாலையில் அனும்திக்கப்பட்ட நோயாளிக்கு ஐந்து  ஊசி போட வேண்டும் என வைத்திய எழுதினால்  சில வேளையில் ஐந்தாவது ஊசி இருக்காது. ஊசியை மாரிப் போட்டு நோயாளி சிரமப் பட்ட சம்பவங்களும் உள்ளன. கிளினிக்குகளில்  சில மருந்துகள்  இல்லை என  சொல்கிறார்கள். அவற்றை கடையில் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

 நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக எச்சரிக்கை மணி அடித்தாலும், அரசாங்கம் இவ்விடயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக இலங்கையின் முன்னணி மருத்துவ சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

 இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் வின்யா ஆரியரத்ன. (SLMA) " அரசு மருத்துவமனைகளில் சில மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக கிளினிக்குகளில், நோயாளிகள் வெளியில் இருந்து மருந்துகளை வாங்க டாக்டர்கள் மருந்துச் சீட்டு எழுதிக் கொடுக்கிறார்கள். மேலும், தனியார் மருந்துக் கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகளால் சில நோயாளிகள் சரியான அளவை எடுத்துக் கொள்வதில்லை. இது ஒரு பெரிய பிரச்சினை, இது விரைவில் தீர்க்கப்பட வேண்டும்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பற்றாக்குறை நிலவுகிறது; எவ்வாறாயினும், அரசாங்கம் இந்த விடயத்தின் தீவிரத்தன்மையை சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. நன்கொடையாளர்கள் அரசாங்கத்திற்கு மருந்துகளை வழங்கும் செயல்முறையும் பல தடைகள் காரணமாக தடைபட்டுள்ளதுஎன்றார்.

இதேவேளை, வலிநிவாரணிகள், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதயநோயாளிகளுக்கான மருந்துகள் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA)  ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க  தெரிவித்தார்.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருந்துப் பஞ்சம் காணப்படுகிறது. மேலும், அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வக பொருட்களுக்கும் பற்றாக்குறை உள்ளது. 14 உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் டாக்டர் விஜேசிங்க மேலும் தெரிவித்தார். ஆயினும்கூட, நிலவும் மருந்துப் பற்றாக்குறை சுகாதாரத் துறையில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால், அது நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

மேலும், நிதிப்பற்றாக்குறை, கொள்முதல் முறையில் உள்ள சிக்கல், தெளிவின்மை, சப்ளையர்களின் ஏகபோகம் உள்ளிட்ட பல காரணங்களால் தற்போது மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கான காரணங்களை அடையாளம் காண முடியும் என்றார்.

அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 1,347 வகையான மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவமனைகள் 2022 முதல் மருத்துவ பற்றாக்குறையை எதிர்கொண்டன.

 மருந்து பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவ நோயாளிகளின் மரணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், பல வகையான புற்றுநோய் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் வைத்தியசாலைகளில் கிடைப்பதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

  அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை பெற்றுக் கொள்வதற்காக வந்த நோயாளர்கள் மருந்துகள் கிடைக்காததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், மருந்துப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த சம்பவமும் பதிவாகி உள்ளது.

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறையை கண்டறியவும், தற்போதுள்ள கையிருப்பு பற்றிய தரவுகளை சேகரிக்கவும் உலக சுகாதார அமைப்பு இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பின்  (WHO) தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியாசிஸ் சுமார்  11  மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

அவசரகால சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அடுத்த 3 மாதங்களில் சுகாதார அமைப்பை சரிவடையாமல் பராமரிப்பதற்கும் 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்த அவர், இலங்கைக்கு குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை எட்டுவதற்கு 47.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் கூறினார். இது மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் மனிதாபிமான வேண்டுகோள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அட்ஜோன் கேப்ரியாசிஸ் குறிப்பிட்டார்.

ஆனாலும் மருந்துகளுக்கு  இன்னமும்தட்டுப்பாடுநிலவுகிறது.

சில மருந்துகளின்  கொம்பனியும், நிறமும் மாறியுள்ளனஅது தாம் வழக்கமாகப் பாவிக்கும் மருந்துதானா என்ற சந்தேகம் சில நோயாளிகளுக்கு உள்ளது.மருந்து தட்டுப் பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

Monday, May 29, 2023

அரசியல் சர்ச்சையில் அகப்பட்ட இந்திய நாடாளுமன்றம்

டெல்லியில் உள்ள தற்போதைய நாடாளுமன்ற 1921 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1927 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் இருவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டடம் மிகப்பழமையானதால்  புதிய நாடாளுமன்றத்தை நவீன் முறையில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக்  கட்டடம் எதிர் வரும் 28 ஆம் திகதி திறந்து  வைக்கப்பட  உள்ளது.

புதிய கட்டடத் திறப்பு விழாவுக்கு  எதிர்க் கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. பழையன கழிந்து  புதியன புகுவது வழமை. ஆனால்,  புதுமை என  அடையாளப் படுத்தப்பட்ட கட்டடத்தை இந்தியப் பிரதமர்  மோடி திறந்து  வைக்கப்போகிறார். இந்திய  நாட்டின் அதி உயர் தலைவராக  ஜனாதிபதி  இருக்கும் போது பிரதமர்  மோடியை  முன்னிலைப் படுத்துவதை எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.  மோடி அரசு  ஜனாதிபதிய அவமானப் படுத்தி விட்டதாக எதிர்க் கட்சிகள்  குற்றம் சாட்டியுள்ளன.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி  தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

அதைத்தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே அணி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன‌ .

 இதுதொடர்பாக அந்தக் கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நாடாளுமன்றத்தின் அங்கமாக இருக்கக் கூடிய குடியரசுத் தலைவரை புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அழைக்காததன் மூலம், அவரை அவமதித்திருப்பது மட்டுமின்றி, ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   சாவர்க்கரின் பிறந்தநாளான   மே 28‍ம் திகதியைத் தேர்ந்தெடுத்ததற்கும்  எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.


 தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 1927- ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டத்தின் பாதுகாப்பு குறைபாடு, இடவசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற நிகழ்வுகளை நடத்த புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வந்தது.

இதன் தொடரச்சியாக புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்துக்கு பிரதமர் மோடி 2020, டிசம்பர் 10‍ம் திக‌தி அடிக்கல் நாட்டினார். 970 கோடி ரூபாய் செலவில் நான்கு மாடிகொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக `சென்ட்ரல் விஸ்டா' என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் சுமார் 888 பேர் வரையும் , மாநிலங்களவையில் 300-க்கும் அதிகமான பேர் அமரும் வகையிலும், இரு அவைகளும் பங்கேற்கும் கூட்டு கூட்டத்தின்போது 1,280 உறுப்பினர்கள் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

543 உறுப்பினர்கள்  உள்ள  இந்திய நடாளுமன்றத்தில் 1.280 உறுப்பினர்கள் அமரும் வண்ணம் ஏன் அமைக்கப்பட்டது.  ஏன் என்ற கேள்வுக்கு விடை கிடைக்கவில்லை.

 நான்கு அடுக்கு மாடிகளுடன் 64 ஆயிரத்து 500 சதுர அடியில் இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதுசினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தொடக்க விழாவின் போது மக்களவை சபாநாயகர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் உரை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதீய ஜனதாக் கட்சி,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  உட்பட 15 கட்சிகள் பாராளுமன்றக் கட்டடத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

பழைய நாடாளுமன்ற கட்டிடம் 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கட்டிடமாகவும், உறுப்பினர்கள் அமர்வதற்கு போதுமான இடமில்லாமலும் இருப்பதால், சுமார் 200 கோடி செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. .

முக்கோண வடிவில் அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டடம், நூலகம், பல்வேறு அரங்கங்கள், பல்துறை கமிட்டி அலுவலகங்கள், உணவருந்தும் அறைகள், பார்க்கிங் வசதிகள் அனைத்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனித்தனி அலுவலகங்கள் போன்றவையும் இடம்பெறவுள்ளன.


 குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்களுக்கு சிறப்பு நுழைவு வாயில்களுடன் சேர்த்து கட்டடத்தில் 6 நுழைவாயில்கள்  இருக்கும். நெருப்பு நிலநடுக்கத்தை தாங்கும் வலிமையுடன் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கை முன்பாக செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இந்தச் செங்கோல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழ்நாட்டில் இருந்து ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்டது.

 ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக இருந்த வரலாற்றுச் சின்னமான செங்கோல் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. சோழப் பேரரசர் காலத்திலிருந்தே செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்தது. இது புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தபோது ஆகஸ்ட் 14, 1945 அன்று, சுமார் 11:45 மணியளவில் ஜவஹர்லால் நேரு இந்த செங்கோலை தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுக்கொண்டார். நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் இந்தச் செங்கோலை வழங்கினார். இந்தச் செங்கோல் ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்நாட்டு மக்களிடம் அதிகாரம் மாறியதற்கான அடையாளம்.

 குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தில் செங்கோலுக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. சோழ வம்சத்தின் காலத்திலிருந்தே செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும். பிரதமர் மோடி இந்த செங்கோலை ஏற்று, அது சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக வைக்கப்படும். நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல் தற்போது அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படும். ஜனநாயக அமைப்பின் மீதான மரியாதையின் அடையாளமாக செங்கோல் நிறுவப்படும் என அமித் ஷா அறிவித்துள்ளார்.

எதிர்க் கட்சியின் கோரிக்கைகள் எவையும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. தான் நினைத்ததை மோடி அரசு செய்து முடிக்க  உள்ளது. நாடாளுமன்றத் திறப்பு விழாவின் தாக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகம்  இல்லை.

கிறிக்கெற் வீரரான பொறியியலாளர்


 லக்னோ அணிக்கு எதிராக 3. 3 ஓவர்களில்  5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கி உள்ளார்  மும்பை வீரரான  ஆகாஷ் மத்வால்.சேப்பாக்கத்தில்   நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி Qஉஅலிfஇஎர் 2-க்கு தகுதிப்பெற்றது.  இந்த போட்டியில் மும்பை அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் ஆகாஷ் மத்வால். இவர் 5 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.  அணில் கும்பளேவின் சாதனையும் சமன் செய்து மிரளவைத்துள்ளார்.

29 வயதாகும் ஆகாஷ் மத்வால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை டென்னிஸ் பந்தில்தான் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். உத்தராகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஆகாஷ் மத்வால் ரிஷப் பந்தின் வீடு அருகே வசித்து வந்தார். இதனால் அவர் உதவியால் கிரிக்கெட்டுக்குள் வந்திருக்கிறார்.கடந்த 2019 ஆம் ஆண்டு சையது முஸ்தாக் கோப்பையில் அறிமுகமான ஆகாஷ் மத்வால் அதே ஆண்டு ரஞ்சிக்கோப்பையிலும் அதற்கு அடுத்த ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையிலும் அறிமுகமானார்.

கடந்தாண்டு பெங்களூர் ராயல் சாலஞ்ஜர்ஸ்  அணிக்கு வலை பயிற்சி பந்துவீச்சாளராக இருந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏலம் எடுத்துகொண்டாலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.இந்த சீசனில்தான் தன்னுடைய முதல் போட்டியை விளையாடினார். பின்பு சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட், குஜராத் அணிக்கு எதிராக 3 விக்கெட், ஐதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட் எடுத்து அசத்தினார். லக்னோ அணிக்கு எதிராக 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. மேலும் அணில் கும்ப்ளேயின்  சாதனையை சமன் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

ஆட்டநாயகன் விருதை வென்ற பின்பு பேசிய ஆகாஷ் மத்வால் நான் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தேன். எப்போதும் அதை நிறுத்தியதில்லை. எனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன். தொடக்கத்தில் இருந்தே நான் டென்னிஸ் பந்தில்தான் பந்துவீசி வந்தேன். நான் இன்னும் சிறப்பாக பந்து வீசுவேன் என நினைக்கிறேன்.மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.மேலும் ஆர்சரும் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலே வெளியேறிய நிலையில் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. தற்போது ஆகாஷ் மத்வாலின் இந்த பந்துவீச்சு மும்பை அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.  பும்ராவுடன் என்னை ஒப்பிடாதீர்கள். நான் இன்னமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் மேலும் 2018-ல் இருந்து என்னுடைய வாய்ப்புக்காக கடுமையாக உழைத்து வருகிறேன் என ஆகாஷ்  பேசியுள்ளார்.

 


வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா  உலக தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்து புதிய வரலாறு படைத்தார்.

 உலக தடகளம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில், நீரஜ் சோப்ரா 1455 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆண்டர்சன் பீட்டர்ஸ் 1433 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார். அதே நேரத்தில் ஜேக்கப் வாட்லேஜ் 1416 புள்ளிகளுடன் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். முன்னதாக, 22 புள்ளிகள் பின்தங்கி இருந்த நீரஜ் சோப்ரா, அதிரடியாக முன்னேறி முதலிடத்தை அடைந்தார்.

நீரஜ் சோப்ரா இந்த ஆண்டு தோஹா டயமண்ட் லீக்குடன் வெற்றியுடன் தொடங்கினார். இப்போட்டியில் நீரஜ் சோப்ரா 88.67 மீற்ற‌ர் தூரம் எறிந்து சாதனை படைத்து முதலிடம் பிடித்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா,  சூரிச்சில் நடைபெற்ற டயமண்ட் லீக்கில் 89.63 மீற்ற‌ர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். வருகின்ற ஜூன் 4ம் திக‌தி நெதர்லாந்தின் ஹோங்கலோவில் நடக்கும் ஃபேன்னி பிளாங்கர்ஸ்-கோயன் கேம்ஸில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா, அதனை தொடர்ந்து ஜூன் 13‍ம் திக‌தி, பின்லாந்தின் துர்கு நகரில் நடைபெறவுள்ள நூர்மி விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, உலக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

காங்கிரஸின் எழுச்சியும் பாரதீயஜனதாவின் வீழ்ச்சியும்

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் காங்கிரஸுக்கு  வாழ்வா சாவா என்ர  போராட்டமாக  இருந்தது. மோடி என்ற துருவ நட்சத்திரத்தின் கவர்ச்சியால்  வென்று  விடலாம் என பாரதீய ஜனதா கனவு கண்டது.தேர்தல்  முடிவு காங்கிரஸுக்கு வாழ்வு கொடுத்தது.  பாரதீய ஜனதாவுக்கு பாடம் புகட்டியது.

கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் கடந்த மே 10 ஆம் திக‌தி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபையில் 113 இடங்களில் பிடிக்கும் கட்சி பெரும்பான்மை பலத்து ஆட்சியை பிடிக்கும். கடந்த மே 13 ஆம் திக‌தி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பாரதீய ஜனதா 66  தொகுதிகளில் வெற்றி பெற்றது.  பாரதீய ஜனதாவின் 14 அமைச்சர்களும், சபாநாயகரும் தோல்விடைந்தனர். தென்னிந்தியாவில்  கர்நாடகாவை மட்டுமே பாரதீய ஜனதா நம்பி இருந்தது. அந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது. ராகுலின் பாதயாத்திரை, ராகுலின் பதவி பறிப்பு என்பனவற்றுக்கான பதிலாக கர்நாடக தேர்தல் முடிவு  அமைந்துள்ளது.

கர்நாடகாவில் ஆட்சியிலிருந்த பாரதீய ஜனதா  அரசின்மீதான ஊழல், கமிஷன், வகுப்புவாதப் பிரச்னைகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. கடந்த 2022-ம் ஆண்டு, பெலகாவியைச் சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரரின் தற்கொலை வழக்குக்குப் பிறகு, `அனைத்துத் துறைகளிலும் 40 சதவிகித கமிஷன் பெறுகிறது பா.ஜ.க ஆட்சி’ என்ற கோஷத்தை முன்னெடுத்தது காங்கிரஸ். `Pஅய்CM’ என்று Qற் கோடில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் முகத்தைச் சேர்த்து ஒட்டப்பட்ட போஸ்டர் பிரசாரம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

 கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ்  கட்சியின் தேசியத் தலைவராக்கியது, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்தது, பணபலமும் செல்வாக்கும் பெற்ற டி.கே.சிவக்குமாரை மாநிலத் தலைவராக்கியது என காங்கிரஸ் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் அவர்களுக்குச் சாதகமாக அமைந்தன. மேலும், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகத் தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கியதும் காங்கிரஸுக்கு சாதகமாக அமைந்தது. அமைந்தது. வியாபாரிகள் சங்கம், ஒப்பந்ததாரர்கள் சங்கம் எனச் சங்கங்களைத் தங்கள் வசம் இழுத்ததும், லிங்காயத் மடாதிபதிகள், இஸ்லாமிய அமைப்புகள் எனச் சமூகரீதியான ஆதரவைப் பெற்றதும் காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்டன.

`தி கேரளா ஸ்டோரி’, `ஜெய் பஜ்ரங் பலி’ என மதம் சார்ந்த விஷயங்களை முன்னிறுத்தி மோடி செய்த பிரசாரங்களையும் கர்நாடக மக்கள் காதில் வாங்கவில்லை. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த சக்திவாய்ந்த தலைவரான எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியபோதே கர்நாடகாவில்   சரிவு தொடங்கிவிட்டது. பசவராஜ் பொம்மை பதவியேற்ற பிறகு கர்நாடகாவில் ஹிஜாப், ஹலால் உள்ளிட்ட மதவாதப் பிரச்னைகளால் பதற்றமான சூழலே நிலவியது. அரசுத் துறைகளில் தலைவிரித்தாடிய லஞ்சம், ஊழல் உள்ளிட்டவையும்  பாரதீய ஜனதாவை  ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கியிருக்கின்றன. மோடியும், அமித் ஷாவும்கர்நாடகாவில்  முகாமிட்டு  பிரசாரம் செய்தும்  வெற்றி பெற முடியவில்லை.

கர்நாடகத் தேர்தல்  முடிவு தமிழகத்தில் எதிரொலிக்கிறது. கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக தமிழக பாரதீய ஜனதாத் தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். கர்நாடகத்தில்  பாரதீய ஜனதாவின் தோல்வியை அண்ணாமலையின் தோல்வியாகவே தமிழ‌கம் கொண்டாடுகிறது. தமிழ்நாடு பாரதீய ஜனதாவின்   மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தார். இதனையும் தமிழகம்  கொண்டாடுகிறது. சி.டிரவி தனது சிஷ்யனிடம்  தோல்வியடைந்தார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பரதீய ஜனதா தோல்வியடைந்துள்ளது.  தமிழர்கள் வசிக்கும் தொகுதியில் அதிகமான வாக்குகளை பெற்று காங்கிரஸ் வெற்றி முகம் கண்டுள்ளது. அதேபோன்று கர்நாடக தமிழர்கள் பாரதீய ஜனதாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலின் எதிர்பார்ப்பை சட்டசபைத் தேர்தல்  கோடிட்டுக் காட்டியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேசியக் கட்சிகளான காங்கிரஸும், பாரதீய ஜனதாவும்  நேரடியாக மோதிய  கர்நாடகத் தேர்தலை அரசியல் கட்சிகள்  அனைத்தும் உன்னிப்பாக அவதானித்தன.

  காங்கிரஸுக்குக் கிடைத்த வெற்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட அவர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். அதேநேரம் தேர்தலில்  வெற்றிபெற மோடியின் பிம்பம் மட்டுமே போதும் என்ற பாரதீய ஜனதாவின் விம்பம்  தகர்ந்துள்ளது.


 கர்நாடகத்தில் பாரதீய ஜனதா தோல்வியடைந்ததால் எடப்பாடி  நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்கத்தில் பாரதீய ஜனதா  கேட்கும் தொகுதிகளின் தொகையைக் குறைக்க  எடப்பாடி காரணத்தைக்  கண்டறிந்துள்ளார்.

கர்நாடகத் தேர்தல் வெற்றியை நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் கொண்டாடி வரும் வேளையில் முதலமைச்சர் யார் என்பதில் போட்டி  நிலவியது. முன்னாள்  முதல்வர் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கர்நாடகத்தில் பாரதீய ஜனதாவின் ஆட்சியை அகற்றுவதற்கு  டி.கே. சிவகுமார் முழுமூச்சாகச் செயற்பட்டார்.

 டிகே சிவக்குமார் தனக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தால் ஏற்பதாகவும், இல்லாவிட்டால் துணை முதலமைச்சர், அமைச்சர் என எந்த பதவியும் வேண்டாம் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் முதலமைச்சர் சித்தராமையா என்றும், துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் எனவும் குறிப்பிட்டு கர்நாடகா மாநில உத்தேச அமைச்சரவை பட்டியல் ஒன்றும் வெளியானது. இந்த நிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தற்போது சித்தராமையாவை கர்நாடகா மாநில முதலமைச்சராக மீண்டும் பத‌வி ஏற்க  உள்ளார்.சோனியா காந்தி கேட்டதற்கிணங்க   முத்ல்வர் பதவியை  டி.கே.சிவகுமார் விட்டுக் கொடுத்துள்ளார்.

காங்கிரஸின் எதிர்கால வெற்றிக்கு கர்நாடகம் அடித்தளம்  இட்டுள்ளது.


Tuesday, May 23, 2023

ஐபிஎல் இல் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்

16 வருட ஐபிஎல் வரலாற்றில்  இதுவரை ஒவ்வொரு அணியும் எவ்வளவு முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்ற விபர்ம. 

ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 16வது ஆண்டாக இந்த தொடர் நடைபெற்றுவருகிறது.  இந்நிலையில் 16வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள்   முடிவடைந்தது. இம்முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி என மொத்தம்  நான்கு அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் கடந்த ஆண்டு தான் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகின. இந்த அணிகள் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் 16 வருட ஐபிஎல் தொடரில் இதுவரை ஒவ்வொரு அணியும் எவ்வளவு முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறித்து இங்கு காணலாம்.

 

1. சென்னை சூப்பர் கிங்ஸ் - 12 முறை

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் உள்ள சென்னை அணி 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. மொத்தம் 14 வருடங்கள் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள சென்னை அணி 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2018, 2019, 2021 மற்றும் 2023ஆம் ஆண்டு என இதுவரை 12 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று, அதிக முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 12 முறை ப்ளேஆஃப் சென்ற சென்னை அணி அதில் 9 முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளது. இதில் 4 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டு இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

                                    2. மும்பை இந்தியன்ஸ் - 10 முறை

16 வருடங்கள் தொடரில் விளையாடி அதில், 5 முறை சாம்பியன் பட்டத்தினை தன்வசப்படுத்தியுள்ள மும்பை அணி 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2020 மற்றும் இந்தாண்டுடன் மொத்தம் 10 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேநேரத்தில் 6 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மும்பை அணி அதில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த ஆண்டு இன்னும் முடிவு எட்டப்படவில்லை.


                                 3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -  8 முறை

ஒவ்வொரு ஆண்டும் ஈ சாலா கப் நம்தே என்ற நம்பிக்கையுடன் களமிறங்கி லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பெங்களூரு அணி இதுவரை 2009, 2010, 2011, 2015, 2016, 2020, 2021, 2022 என 8 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் மூன்று முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள இந்த அணி மூன்று முறையும் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த அணியும் 2008ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது.


                                               4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 6 முறை

ஐபிஎல் தொடரின் ஆஸ்தான அணிகளில் ஒன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த அணி இதுவரை 2011, 2014, 2016, 2017, 2018, 2021 என மொத்தம் ஆறு ஆண்டுகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் மூன்று முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள இந்த அணி இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. கொல்கத்தா அணியின் முதல் கோப்பை சென்னை அணிக்கு எதிராக வாங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை வென்றிருந்தால் தொடர்ந்து மூன்று முறை கோப்பையை வாங்கிய அணி என்ற சாதனையைப் படைத்திருக்கும்.


                                    5. டெல்லி கேப்பிடல்ஸ் - 6 முறை

டெல்லி அணியைப் பொறுத்த வரையில் துவக்கத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் இருந்தது. அதன் பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் என தனது பெயரினை மாற்றியது. இந்த அணி இதுவரை 2008, 2009, 2012, 2019, 2020, 2021 என மொத்தம் 6 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் ஒருமுறை மட்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பினை இழந்தது.


                                   6. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் -  6 முறை

2013 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் உள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 2013, 2016, 2017, 2018, 2019, 2020 என மொத்தம் 6 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்த அணி அதில் ஒருமுறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.


 

                                            7.ராஜஸ்தான் ராயல்ஸ் - 5 முறை

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட வருடமான 2008ஆம் ஆண்டு கோப்பையை வென்று ஐபிஎல் கோப்பையை முதல் முறை வென்ற அணி என்ற பெருமைக்கு சொந்தமானது. இதுவரை 2008, 2013, 2015, 2018, 2022 என மொத்தம் 5 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.


8. பஞ்சாப் கிங்ஸ் - 2 முறை                 

ஐபிஎல் தொடரில் மிகவும் பரிதாபத்துக்குரிய அணி என்றால் அது பஞ்சாப் அணி தான். 2008ஆம் ஆண்டு முதல் உள்ள இந்த அணி தொடக்கத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரில் இருந்தது. அதன் பின்னர் பஞ்சாப் கிங்ஸ் என பெயரை மாற்றிக்கொண்டது. இந்த அணி இதுவரை 16 தொடர்கள் விளையாடி 2008 மற்றும் 2014 என இரண்டு முறை மட்டும் தான் ப்ளேஆஃப் சுற்றுக்கு வந்துள்ளது. இதில் 2014ஆம் வருடம் மட்டும் இறுதிப் போட்டிக்குச் சென்ற அந்த அணி கோப்பையை கொல்கத்தாவிடம் பறிகொடுத்தது.


                                          9 - குஜராத் டைடன்ஸ்  [2 முறை]

2022 ஆம் ஆண்டு புதிதாக உருவான அணிகளில் ஒன்றான குஜராத் டைடன்ஸ்   இரண்டாவது முறையும் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள்து.