Showing posts with label தினகரன். Show all posts
Showing posts with label தினகரன். Show all posts

Sunday, February 16, 2025

எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி


 

  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் எடப்பாடி. ஓ.பன்னீர்ச்செல்வம்,சசிகலா,தினகரன் ஆகியோரை மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தி சேர்க்க வேண்டும் என்ற குரலை எடப்பாடி அடக்கி ஒடுக்கிவிட்டார். எடப்பாடி சொல்வது தான்  பொதுச் சபையில் நிறவேறும் என்ற எழுதப்படாத விதியை அமுல் படுத்தியுள்ளார். எடப்பாடிக்கு  எதிரானவர்களும், பாரதீய ஜனதாவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  இணைக்கப்பட வேண்டும் என நினைக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  பேசாமடைந்தைகளாக  இருக்கிறார்கள்.

  எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல் தலைவரான செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்துள. எடப்பாடி பழனிசாமியையே அரசியலுக்கு கொண்டு வந்த குருநாதர்தான் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்திலேயே மாவட்ட செயலாளர். எம்.எல்.ஏ. என பதவி வகித்தவர்; ஒரு கால கட்டம் வரை ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர்; அவரது வாழ்க்கையில் சறுக்கல் ஏற்பட ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார்; ஆனால் சசிகலா குடும்பம், அதிதீவிர உண்மையான விசுவாசி செங்கோட்டையனை இன்று வரை கைவிடவில்லை. இத்தனை ஆண்டுகள் கனத்த அமைதி காத்த செங்கோட்டையன் இப்போது திடீரென கலகக் குரல் எழுப்பி இருப்பது மிக சாதாரணமாக கடந்து போய்விடக் கூடியது அல்ல என்பதுதான் அனைத்து அரசியல் பார்வையாளர்களின் கருத்து.   அண்ணா திராவிட முன்னேற்ற்க் கழகதில் போர்க்கொடி எழுப்பியவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.  செங்கோட்டையன் கலகக் குரல் எழுப்பியதுமே 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் பலரும் அவரை தொடர்பு கொண்டு  ஆதரவு தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில்பாரதீய ஜனதா,பாட்டாளி  மக்கள் கட்சி, தேசிய முன்னேற்ற திராவிடக் கட்சி,தமிழ்  மாநிலக் கட்சி ஆகியவைஒன்றிணைந்து  மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே டெல்லியின் கணக்காகும். 

டெல்லியின் கனவுக்கு எடப்பாடி முட்டிக்கட்டை போடுகிறார்.செங்கோட்டையனின் போர்க்கொடிகுப் பின்னால் சசிகலா  இருப்பதாகக் கருதப்படுகிறது. எடப்பாடிக்கு ஆதர்வானவர்களின் வீடுகளிலும் நிறுவனங்களிலும்  வருமான வரித்துறை திடீர் தேடுதல் நடத்தியும் அவர் அசரவில்லை.அதனால்தான் செங்கோட்டையன் உசுப்பிவிடப்பட்டுள்ளார்.

  செங்கோட்டையன் விவகாரத்தை முன்வைத்து மீண்டும் எடப்பாடி பழனிசாமியை காட்டமாக விமர்சித்து வருகிறார் டிடிவி தினகரன்.  ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்டு ஏறத்தாழ அரசியல் அத்தியாயத்தின் இறுதி கட்டத்தில் இருந்தவர்தான் செங்கோட்டையன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மீண்டும் உயிர் பெற்றது செங்கோட்டையன் அத்தியாயம். சசிகலா குடும்பத்தின் மீதான 'மாறாத' விசுவாசம்  இன்றும் தொடர்கிறது.

 சசிகலா சிறைக்குப் போகும் நிலையில் கூவத்தூரில் செங்கோட்டையனை முதல்வராக்க அவரது குடும்பம் தீவிரமாக முயன்றது.காலமும் நேரமும் எடப்பாடிக்கு ஆதர்வாக நின்றதால் அவர் முதலமைச்சரானார்.

 சசிகலா குடும்பத்தின் நெருக்கடியால் தனது குருநாதரான செங்கோட்டையனை வேண்டா வெறுப்பாக அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் எடப்பாடி   எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு எதிரியாகிவிட்டார்; ஆனால் செங்கோட்டையனோ சசிகலா குடும்பத்திடம் இருந்து இம்மியளவும் விலகாமல் இன்று வரை தொடர்பில்தான் இருந்து வருகிறார்.

கோவை அன்னூர் அருகே அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக   பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். இந்த விழாவை மேற்கு மண்டல சீனியரான முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் புறக்கணித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், எங்களை வளர்த்து அடையாளம் காட்டியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. இந்த இருவரது படமுமே எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா நிகழ்வுகளில் இடம் பெறவில்லை. இத்தனைக்கும் அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தவர் ஜெயலலிதா. இதனை எப்படி எங்களால் ஏற்க முடியும்? என்றார். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமாரோ, எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தியது அதிமுக அல்ல; விவசாயிகள் அமைப்புதான் என மழுப்பலாக மட்டுமே பதிலளித்துள்ளார். செங்கோட்டையனின் போர்க்கொடுக்கு இதுதான் முக்கிய காரணம்.

   கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அவரின் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அவருக்கு துப்பாக்கி ஏந்தியபொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது  கழகத்தினுள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தினால்  கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்து வேறு அனைவரின் பெயர்களையும் கூறினார்.

டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  அலுவலகத்தை, சென்னை ராயப்பேட்டையிலுள்ள   தலைமை நிலைய அலுவலகத்தில் இருந்தபடி, காணொளி வாயிலாக பழனிசாமி திங்கள்கிழமை காலையில் திறந்து வைத்தார்.  மூத்த தலைவர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றனர் யில், செங்கோட்டையன் அதிலும் பங்கேற்கவில்லை.  கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் செங்கோட்டையன் பரிந்துரைத்த சிலரை, எடப்பாடி பழனிசாமி போடாததும், புதிய நிர்வாகிகள் நியமனத்தில் அவரிடம் கலந்து பேசாததுமே அதிருப்திக்கு காரணமென்று தெரிகிறது.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், கட்சியை ஒன்றிணைக்கும் வேலையில் ஆறு  தலைவர்கள் ஈடுபட்டதாக செய்தி ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அடங்குவர். இவர்கள் கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கட்சியை ஒன்றுபடுத்தாவிட்டால் வருங்காலத்தில் பெரிய தோல்விகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.இப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். எனவே இந்த ஆறுபேர் மட்டுமின்றி, கட்சியின் பல்வேறு தலைவர்களும் எடப்பாடி மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.  செங்கோட்டையன் தற்போது அளித்துள்ள விளக்கம் என்பது அதிருப்தியின் நீட்சி தான்.

எடப்பாடியின் தலைமையில் 10 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைததால் அடுத்த கட்டத்த் த‌லைவர்கள்  நொந்து போயுள்ளனர்.  செங்கோட்டியன் பூனைக்கு மணி கட்டியுள்ளார்.

 

ரமணி

16/2/25    

Tuesday, July 16, 2024

எடப்படிக்கு எதிராக போர்க்கொடி உச்சம் அடைந்த உட்கட்சி மோதல்


 

எடப்பாடிக்கு எதிராக  போர்க்கொடி  உச்சம் அடைந்த உள் கட்சி  மோதல்

 

ஜெயலலிதாவின்  மறைவின்  பின்னர் அண்ணா திராவிட  முன்னேற்றக்  கழகத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்ற  சசிகலா முயன்றார்ஜெயலலிதாவின் விசுவசியான . பன்னீர்ச்செல்வம் தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். அந்தத் தர்மயுத்தம்  இன்று வரை தொடர்கிறது. கழகத் தலைமைப் பதவி கைக்கு எட்டாத தூரத்துக்குச் சென்று விட்டது.

 சந்தர்ப்ப சூழ்நிலையால்   எடப்பாடியை முதல்வராக்கினார் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதால், கட்சியைக்  கையகப்படுத்தினார். தனக்கு இடைஞ்சலாக  பன்னீர் இருப்பார் என நினைத்தஎடப்பாடி அவரையும் கட்சியை விட்டுத் தூக்கினார்.

அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம் எடப்பாடியின் கையில் உள்ளதுதொடர்ச்சியாக 10  தேர்தல்களில் எடப்பாடியின் தலைமையிலான  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்ததுகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தமிழகத்தின் 39  தொகுதிகளிலும்  வெற்றி பெற்றதுபாண்டிச்சேரியிலும்  திமுக கூட்டணியின் கொடி உயர்ந்தது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்   உட்கட்சி மோதல் உச்சம் அடைந்துள்ளதால்  எடப்பாடி கையைவிட்டு  அதிமுக செல்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

 அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திடீரென அரசியல் புரட்சி ஏற்பட தொடங்கி உள்ளது. அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக கட்சியினர் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் எடப்பாடியை சந்தித்து இருக்கிறார்கள்.

 நாடாளுமன்றத்  தேர்தலில் வென்று காட்டுகிறேன் என்று நம்பிக்கையாக இருந்தார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும். திமுக கூட்டணி உடையும் என்று எடப்பாடி நினைத்தார். ஆனால் அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. அதிமுக படுதோல்வி அடைந்தது. அதோடு இல்லாமல் எடப்பாடியை 10 தோல்வி பழனிசாமி என்று அழைக்கும் நிலை ஏற்பட்டது.

அதிமுகவில்  முக்கிய  தலைவர்கள் பலரும் அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர்எடப்பாடியுடன்  இருக்கும் நிர்வாகிகளே அவரை எதிர்க்க தொடங்கி உள்ளனர்ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று  முக்கிய தலைவர்கள் அவரிடம் சொல்ல தொடங்கிவிட்டனர். கடந்த  நாடாளுமன்ற்த் தேர்தலில் அதிமுகவில் வேட்பாளர் தேர்வில் குழப்பம்பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்களுக்கே தெரியாதவர்கள் வேட்பாளர்கள் ஆனார்கள்.

எடப்பாடியின் பிரச்சாரம் பெரிதாக எடுபடவில்லை. அவரின் பிரச்சாரம் பெரிதாக கொங்கில் கூட மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அப்படி இருக்க அவருக்கு மாஸ் இமேஜ் இல்லை என்ற விமர்சனங்கள் கட்சிக்குள் வைக்கப்பட்டு வருகிறது. . எடப்பாடி இத்தனை காலம் கட்சியை கட்டுப்படுத்த காரணமாக  தலைவர்களே அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர். அப்படி இருக்க அவர் இனி எப்படி கட்சியை கட்டுப்படுத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளதுதென் மண்லடத்தில் அதிமுக கடுமையான சரிவை சந்தித்து உள்ளது. கட்சி படுமோசமான பின்னடைவை சந்தித்து உள்ளது. அங்கே உட்கட்சி மோதலும் உச்சத்தில் உள்ளது.   பன்னீர்செல்வம், சசிகலா உள்ளே வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டார். எடப்பாடி இல்லாத அதிமுக உருவாக்கி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.. கிட்டத்தட்ட தென் மண்டலம், கொங்கு மண்டலம், வடமண்லடம் என்று மூன்று மண்டலங்களை சேர்ந்து 10 தலைவர்கள்,சுமார் 25 எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு இதில் பிரஷர் கொடுக்க தொடங்கி உள்ளனராம்கடந்த 1 வாரமாக எடப்பாடி மட்டுமே பன்னீர்செல்வத்தின் விமர்சனங்களுக்கு பதில் சொல்கிறார். மற்ற நிர்வாகிகள் யாரும் பன்னீர்செல்வத்திற்கு பதில் சொல்லவில்லை. அப்படி இருக்க எடப்பாடி தனித்து விடப்பட்டு விட்டாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர் காலம் பற்றிய செய்தி  வெளிவரும் நிலையில் 2026 தமிழக சட்ட சபைத்  தேர்தலில் பலமான கூட்டணியை அமைக்க எடப்பாடி முயற்சிக்கிறார். பாஜக அல்லாத கூட்டணியை அமைப்போம். மிகவும் வலுவான கூட்டணியை அமைப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சித் தலைவர்களிடம் உறுதிபடக் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலுக்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பே அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் விட்டு விட்டது. பாஜகவை கூட்டணியிலிருந்து விலக்குவதாக அதிமுக அறிவிக்கவே பரபரப்பு கூடியது. மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக மேலிடம் விரும்பினாலும் கூட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை இடையிலான கருத்து மோதலால் இது நடக்காமல் போய் விட்டது.

இரு கட்சிகளும் கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் இணைந்து களம் காணலாம் என்று ஆர்வத்துடன் காத்திருந்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் பெரும் குழப்பமடைந்தன. கடைசியில் பாமகவை, பாஜக தன் பக்கம் இழுக்க, தேமுதிகவை அதிமுக கொண்டு போய் விட்டதுஇப்படி பலம் சிதறி போட்டியிட்டன இரு கூட்டணிகளும். விளைவு.. பெரும் தோல்வியை சந்தித்தனர். இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு கூட்டணி சரியில்லாமல் போட்டதே காரணம் என்று அதிமுக தரப்பிலும், பாஜக தரப்பிலும் கருத்துக்கள் கிளம்பின. அதிமுகவிலிருந்துதான் முதல் குரல் கிளம்பியது. இதை பாஜகவிலிருந்து தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கூறினார்கள்.

இந்தக் குரல்கள் தற்போது அடங்கி விட்ட நிலையில் அடுத்து அதிமுகவை இணைக்க வேண்டும் என்ற குரல்கள்  புறப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை சசிகலா, .பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் கையில் எடுத்துள்ளனர். ஆனால் இந்தக் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்து விட்டார். மேலும் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தையும் அவர் நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில்தான் பாஜகவுடன் கூட்டணி கிடையாது, வலுவான கூட்டணியுடன் 2026 தேர்தலை சந்திப்போம் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதுதான் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி அமைக்க வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். அப்போதுதான் திமுகவை வீழ்த்த முடியும் என்பதுதான் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் பலரின் கருத்தாக உள்ளது. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் கூட இதே கருத்தில்தான் உள்ளன. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பது பலரையும் குழப்பியுள்ளது.

  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுக 8 சட்டசபைத் தொகுதிகளிலும், தேமுதிக 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தது. பாஜக கூட்டணியில் பாமக மட்டும் 3 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

கூட்டணிக் கட்சிகள் கூட ஒரு சில தொகுதிகளில் முன்னிலை வகித்த நிலையில் கூட்டணிக்குத் தலைமை தாங்கிய பாஜகவால் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்க முடியாமல் போயிருக்கிறது. அப்படிப்பட்ட கட்சி நமக்கு தேவையா அதற்கு பாஜகவின் கூட்டணிக் கட்சிகளை நம் பக்கம் இழுத்தால்தான் நமக்கு லாபம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகவும் சொல்கிறார்கள்.

சசிகலவையும், தினகரனையும் தவிர்த்து பன்னீரை கட்சியில் இணைத்தால் பலமாக  இருக்கும் என எடப்பாடியிடம்  சொல்லப்பட்டிருக்கிறது.

பாஜக கூட்டணியிலிருந்து பாமகவை தன் பக்கம்  இழுக்கஅதிமுக திட்டமிட்டுள்ளதாம். இதனால்தான் விக்கிரவாண்டி தொகுதியில்  போட்டியிடாமல் விட்டுக் கொடுத்து விட்டதாகவும் சொல்கிறார்கள். அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. காரணம், கடந்த தேர்தலை விட இந்த முறை அங்கு வாக்குப் பதிவு சற்று அதிகமாகவே நடந்துள்ளது. எனவே கணிசமான அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களித்திருப்பதாக நம்பப்படுகிறது. எனவே வருகிற சட்டசபைத் தேர்தலில் பாமக கேட்கும் தொகுதிகளைக் கொடுத்து கூட்டணிக்குள் இழுத்து விட்டால் வட மாவட்டங்களில் அதிமுக கூட்டணி வலுப்பெறும் என்பது எடப்பாடியாரின் நம்பிக்கையாகும்.

  நாம் தமிழர் கட்சியையும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தையும் கூட்டணியில் இணைப்பதும் எடப்பாடியாரின் திட்டம்.. இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் நடந்தால் நிச்சயம் அதிமுக கூட்டணி வலுப்பெற்று விடும். விஜய் கூட்டணிக்கு வருவாரா அதுவும் அதிமுக கூட்டணிக்கு வருவாரா என்பது சந்தேகம்தான். ஒரு வேளை வந்தால் அது அதிமுகவுக்கு நல்ல பூஸ்ட்டாக அமையும்  பகுஜன் சமாஜ் கட்சியையும் தனது கூட்டணியில் இணைக்க அதிமுக அக்கறை காட்டும். காரணம், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையால் அந்தக் கட்சி மீதான அனுதாபம் மக்களிடையே உள்ளது. குறிப்பாக வட மாவட்ட தலித் மக்களிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை அறுவடை செய்யவும் அதிமுக முயலலாம். எனவே ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கோ அல்லது அவரது குடும்பத்தில் யாருக்கேனுமோ சீட் கொடுத்து கட்சியை கூட்டணியில் இணைக்கவும் அதிமுக முயலலாம்.

இன்னொரு தேர்தலில் எடப்பாடி தோல்வியடைந்தால் அவர் கட்சியில் இருந்து தூக்கி  எறியப்படுவார்.

 

ரமணி

Sunday, September 3, 2023

தமிழக அரசியலில் அநாதையான ஓ.பன்னீர்ச்செல்வம்

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அசைக்க முடியதவராக வலம் வந்தவர்  .பன்னீர்ச்செல்வம். ஜெயலலிதா சிறைக்குச் சென்ற போது முதலமைச்சர் பதவியைப் பொறுப்புடன் ஏற்று திருப்பிக் கொடுத்தவர். எடப்பாடி பழனிச்சாமி இதற்கு நேர் மாறானவர். முதல்வர் பதவியைக் கொடுத்த சசிகலாவைத் தூக்கி எறிந்தவர்.

ஜெயலலிதாவின்  மறைவின்  பின்னர் சசிகலா அரசியலுக்குள் நுழைந்தபோது அவரை அகற்றுவதற்கு  பன்னீரைபாரதீய ஜனதா  பகடையாகப் பயன்படுத்தியது.சசிகலா சிறைக்குச் சென்றது  பாரதீய ஜனதா நிம்மதி அடைந்தது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சின்னம் பன்னீரின் வசம்  இருந்தது. பாரதீய ஜனதாவின் ஆலோசனையால்  அதனை எடப்பாடிக்குத் தாரை வார்த்தார்  பன்னீர்.கட்சிகுள் இருந்து பன்னீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டினார் எடப்பாடி. பாரதீய ஜனதா தன்னைக் கைவிடாது  என்ற குருட்டு நம்பிக்கையில் கண்ணை மூடிக்கொண்டிருந்தார் பன்னீர்.

பாரதீய ஜனதா  போட்ட தாளம் அனைத்துக்கும் ஆடிய  அன்றைய முதலமைச்சர்  எடப்பாடி கட்சிக்குள் தன்னை  வலுப்படுத்தினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடி வசமானதுபன்னீர் நடத்திய சட்டம் போராட்டம் அனைத்தும்  முடிவுகு வந்தன. தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும்  எடப்பாடிக்கு அங்கீகரம் வழங்கின.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  கூட்டணி தமிழகத்தில் பலமாக  இருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாவும்  ஒரே கூட்டணியில்தான்  இருக்கின்றன. ஆனால், தமிழக  பாரதீய ஜனதாத் தலைவருக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களுக்கும் இடையில் சுமுகமான உறவு இல்லை. வாசன் மட்டும்தான்  இந்தக் கூட்டணிக்கு விசுவாசமாக  இருக்கிறார். ராமதாஸும், விஜயகாந்தும் வெளியில் நிற்கிறார்கள்.

பாரதீய ஜனதாவும்  மெதுமெதுவாக எடப்பாடியின் பக்கம் சாயத் தொடங்கியது. பன்னீர்  இப்பொழுதுதான் கண்ணைத் திறந்துள்ளார். தினகரனுடன் கைகோர்த்துள்ள  பன்னீர்  புதிய அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். பன்னீர்  புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர்  வரை பொறுத்திருக்குமாறு அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். பாரதீய ஜனதாவை இனியும் நம்புவதற்கு பன்னீர்ச்செல்வம் தயராக  இல்லை. தனது பலத்தைக் காட்டுவதர்காகத் தனிக் கட்சி ஆரம்பிக்கும்  முடிவை அவர் நெருங்கிவிட்டார்.

பன்னீர்ச்செல்வம், தினகரன், சசிகலா ஆகிய மூவரையும் கடைசி வரை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்பதில் எடப்பாடி உறுதியாக  இருக்கிறார்.அவரைச் சரிக்காட்ட முடியாமல்  பாரதீய ஜனதா தவிக்கிறது. நிலைமை கை மீறியதால் தனிக் கட்சி என்ற  முடிவை பன்னீர் கையில் எடுத்துள்ளார்.

பன்னீருக்கு  ஆதரவாக நிற்கும்  மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தொலக் காட்சி ஒன்றுக்கு வழங்கிய  பேட்டியில் , "நாங்கள் தனித்து நிற்போம் என்றும், பாஜகவுடன் ஓபிஎஸ் இல்லை என்றும்" அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார். தனிக்கட்சி: அதுமட்டுமல்ல, தங்கள் பலத்தை காட்டுவதற்காக தனிக்கட்சி தொடங்குவதற்கு ஓபிஎஸ்ஸிடம் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆதரவாளர்களின் இந்த எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில்தான், ஓபிஎஸ்ஸும் விரைவில் தனிக்கட்சியை தொடங்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்பதை  மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் உறுதிபடுத்தியிருக்கிறார்.

பாரதீய ஜனதாக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற போது பனீருக்கு அழைப்பு விடப்படவில்லை. பாரதீய ஜனதாவின் தயவை எதிர்பர்க்கும் தினகரனும், சசிகலாவும்  புறக்கணிக்கப்பட்டனர். இதனால்  பன்னீர்  பெரிதும்  பாதிக்கப்பட்டார்.

 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்காகபல கள ஆய்வுகளை  பாரதீய ஜனதா செய்துள்ளது. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கூட்டணி பலமாக  இருக்கிறது என்பதை பாரதீய ஜனதா  புரிந்துகொண்டுள்ளது. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள், மக்களின் அடிப்படை பிரச்சினைகள்நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை பிரச்சாரம் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என பாரதீய ஜனதா நம்புகிறது.

தமிழகத்தில் 10 தொகுதிகளை பாரதீய ஜனதா  குறிவைத்துள்ளதுஎடப்பாடி,பன்னீர்,தினகரன், சசிகலா ஆகிய நால்வரும்  இணைந்தால் வெற்றி   பெறலாம் என பாரதீய ஜனதா கருதுகிறது. அதற்கு  எடப்பாடி முட்டுக் கட்டையாக  இருக்கிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு தினகரன் பிரித்த வாக்குகளே காரணம்.

தென் மாவட்டங்களில் 15 தொகுதிகள் மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் நாங்கள்  இருவரும் இல்லாமல்   அதிமுகவால் வெல்ல முடியாதுஎன  திஅகரன் எச்சரித்துள்ளார்டெல்டா மாவட்டங்கள் மற்றும் மத்திய, தென் மாவட்டங்களில் தினகரனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இந்த மாவட்டங்களில் தான் ஓபிஎஸ்ஸுக்கும் ஆதரவு வட்டம் இருக்கிறது.

இதையெல்லாம் கணக்குப் போட்டே இருவரும் இணைந்து மூன்றாவது அணியை அமைப்போம். சசிகலாவோடு சேர்த்து இன்னும் சில கட்சிகளையும், அமைப்புகளையும் உள்ளடக்கி அதிமுகவை தோற்கடிக்கும் ஒரே கொள்கையுடன் தேர்தலைச் சந்திப்போம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்கள் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட்டால் அது அதிமுக அணிக்குத்தான் பின்னடைவை ஏற்படும் என்பது உண்மை.

  திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, சிவகங்கை, திருச்சி உள்பட பாரதீய ஜனதா போட்டியிட நினைக்கும் பல தொகுதிகளில் ஓபிஎஸ் க்கும்தினகரனுக்கும் நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே, இவர்கள் மூன்றாவது அணி அமைத்தால் அது தங்களையே பாதிக்கும் என்ற பதறுகிறது பாரதீய ஜனதா.

தமிழகத்தில் இதுவரை பலமுறை மூன்றாவது அணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவை அனைத்துமே யார் வெல்லவேண்டும் என்பதைவிட, யார் தோற்கவேண்டும் என்பதையே தீர்மானித்துள்ளன. இப்போது பன்னீர்  தினகரன் அமைக்கத் திட்டமிடும் மூன்றாவது அணிக்கும்  எடப்பாடியை வீழ்த்தும் முயற்சியே பிரதானமாக இருக்கும்.

தலைவர்கள் ஒன்று பட்டாலும் தொண்டர்கள் ஒன்று சேர்வார்களா என்ற சந்தேகமும்  உள்ளது

வர்மா