Showing posts with label கலவரம். Show all posts
Showing posts with label கலவரம். Show all posts

Tuesday, July 25, 2023

தனித்து விடப்பட்ட மணிப்பூர்

 இந்திய மாநிலங்களில்  ஒன்றான மணிப்பூரில் நடந்தகொடூரம்  உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலக நாடுகளால்  மிகவும் மதிக்கப்படும் தலவராக பவனிவரும் மோடியின்   பாரதீய ஜனதாஆட்சி செய்யும்  மணிப்பூரில் இரண்டு மாதங்களாகக் கலவரம் நடக்கிறது.

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே  மோதல் என  வெளி உலகுக்குச் சொல்லப்படுகிறது. இளம்  பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று கூட்டுப் பாலியன் வன்கொடுமை செய்தது  வெளி உலகுக்குத் தெரியாமல் மறைப்பப்பட்டதுமேமாத 4 ஆம் திகதி நடந்த அந்தச் சம்பவம் கடந்த கடந்த ம் 25 ஆம் திகதிதான் வெளி உலகுக்குத்  தெரிய வந்தது." நெஞ்சம் வலிக்கிறது குற்றவாளிகள் தப்ப முடியாது என  பிரதமர்  ஒரு வரியில் முடித்துவிட்டார்.   

பாரதீய ஜனதாவின் ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக அரங்கேறிக்கொண்டிருக்கும் வன்முறையில், குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள், நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பூதாகரமாக வெடித்திருக்கிறது.  மே 4-ம் திகதியே நடந்த  இக் கொடூரம்  தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவுசெய்திருந்தும்  குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை.  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய பிறகே, இப்படியோர் இழிவான சம்பவம் வெளிச்சத்துக்கே வந்தது. அதன் பின்னரே குற்றவாளி கைது செய்யப்பட்டார்.  

இத்தகைய சம்பவம் ஒன்று நடந்தது என்று தெரிந்தும்கூட பொலிஸார் இவ்வளவு நாள் இது பற்றி வாய்திறக்காமல் இருந்தனர். இப்படியிருக்க, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை இந்திய  நாடாளுமன்றத்தில் பெரும் விவாதப்பொருளாக மாற்ற முனைப்பு காட்டி வருகின்றன. இன்னொரு பக்கம் உச்ச நீதிமன்றமும், `நடவடிக்கை எடுக்கத் தாமதப்படுத்தினால் நாங்களே தலையிட நேரும்' என்று எச்சரித்திருக்கிறது.

 பாதிக்கப்பட்ட இரு பெண்களில் ஒருவர், ``பொலிஸார்தான் எங்களை அந்தக் கும்பலிடம் விட்டுச் சென்றனர்" என்று தனியார் ஊடகப் பேட்டியில் குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.

  மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்துக்கு  பழங்குடி அந்தஸ்து வழங்குவதர்கு எதிர்ப்புத் தெரிவித்து குகி பழங்குடி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து நடத்திய  போராட்டம் வன்முறையாக மாறியது. வன்முறையால் 100 பேர் உயிர்  இழந்ததாக  அதீகார பூவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துகள் அடித்து நொருக்கித்  தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்கள் , தேவாலயங்கள் ஆலயங்கள் தீவைக்கப்பட்டன. இனக் குழுக்களுக்கிடையேயான  மோதல்  மதக் கலவரமானது.

இரன்டு மாதங்களாக நடைபெற்ற கலவரங்களை  மணிப்பூர் அரசும்,மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. மே மதம் 4 ஆம் திகதி நடைபெற்ற கொடூரச் சம்பவத்தை  மோடியும், அமித் ஷாவும் அறிந்திருப்பார்கள் அதுபற்றி மூச்சுக்கூட விடவில்லை.

பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் சிறு சம்பவம் நடந்தாலும் , தலையிடும் ஆளுநர்களும், பாரதீய ஜனதாத் தலைவர்களும் அமைதியாக  இருக்கிறார்கள். பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சீர் குலையலாம் . அதனை மத்திய அரசு தட்டி கேட்கப் போவதில்லை.

மணிப்பூரில் இரண்டு  மாதங்களாக நிகழ்ந்த வன்முறை சம்பவத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 400 பேர் காயம் அடைந்தனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோதி மணிப்பூருக்குச் சென்று மக்களை சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. மணிப்பூர் முதலமைச்சர் பிரென் சிங்கும் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.இந்த நிலையில் ராகுல் காந்தி பாதிக்கபபட்டவர்களை காண மணிப்பூருக்கு வியாழக்கிழமை புறப்பட்டார். சுரசந்துபுர் பகுதியில் உள்ள நிவாரண முகாமை பார்வையிடச் சென்ற ராகுல் காந்தியை பிஷ்னபூர் அருகே காவல்துறை தடுத்து நிறுத்தியதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதாக .என். செய்தி முகமையிடம் காவல்துறை கூறியது. இருப்பினும் அவர் ஹெலிகாப்டரில் தனது பயணத்தை தொடர்ந்தார். நிவாரண முகாம்களை பார்வையிட்ட ராகுல், அங்குள்ளவர்களோடும் கலந்துரையாடினார். குழந்தைகளோடு அமர்ந்து உணவருந்தினார். ராகுலால் செய்ய முடிந்ததை பிரதமரால் ஏன் செய்ய முடியாது அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு மோடியைத் தடுப்பது எது?

தமிழகத்தில்  திராவிட முன்னேற்ரக் கழக் அமைச்சர்களில் வீடுகளில் நடைபெறும் சோதனைகளுக்கு  மத்திய படையை அனுப்பும் பாரதீய ஜனதா மணிப்பூரில் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

  மணிப்பூரில் நடைபெறும் கொடூரங்கள் வெளி  உலகுக்குத் தெரியாமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில்  பாதிக்கப்படும் மக்களுக்கும் மோடிதான்  பிரதமர். இதனை உணர்ந்துகொண்டு மத்திய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை செய்தவர்களை  பொதுமன்னிப்பில் விடுதலை செய்யும்  தலைவர்கள்  இருக்கும் வரை நீதி கிடைப்பது  தாமதமாகலாம்.

 

Saturday, May 26, 2018

தமிழகத்தின் கொந்தளிப்பை வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில அரசுகள்


அமைதிப் பூங்காவான தமிழகம், இப்போது கலவரபூமியாக மாறியுள்ளது. தமிழர்கள் தம் உரிமையையும் கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் காப்பாற்றுவதற்காக தமிழக அரசை எதிர்த்துப் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.தமிழக மக்களின் வாக்குப் பலத்தால் அலங்கார அதிகாரத்தில் இருப்பவர்கள் தம்மை இந்த உயர் நிலைக்கு ஆளாக்கியவர்களைப் பற்றி அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்.
தூத்துக்குடி மக்களின் அமைதியான போராட்டம் 100 ஆவது நாளில் வன்செயலாக மாற்றப்பட்டது. கலெக்டரைச் சந்தித்து மனுக்கொடுக்கப்போன அப்பாவி மக்கள் அநியாயமாகச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி, சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்டுவருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளால் பல்வேறு நோய்களும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். 'ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, பொதுமக்கள் போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்துக்கு, சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 கிராம மக்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். பொதுமக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால், கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. போராட்டத்தின் நூறாவது நாளன்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில், கலெக்டர் அலுவல முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
இதையடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கடைகளும் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. நேற்று காலை 9 மணியளவில், இருபதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டனர். தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் பகுதி அருகே வந்தபோது, இரும்புத் தடுப்புகளை வைத்து அவர்களைத் தடுத்து நிறுத்தியது போலீஸ். ' தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கலைந்து செல்லுங்கள்' எனக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 10 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளதுஅடுத்த நாள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்இதுவரை 13 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 கடந்த, 23 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மக்கள் பல போராட்டங்கள் நடத்தியும், நீதிமன்றங்கள் பல உத்தரவுகள் பிறப்பித்தும், ரூ.100 கோடி அபராதம் செலுத்த உத்தரவிட்டபோதும், அதையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டு, தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வருவதற்கு முக்கிய காரணம், அதன் உரிமையாளரான அனில் அகர்வால்தான். பாட்னாவில் 1954ல் பிறந்த அகர்வாலின் குடும்பம் அலுமினிய கம்பி தொழிலில் ஈடுபட்டு வந்தது. தனது 19 வயதில் மும்பைக்கு சென்ற அகர்வால், குடும்பத்தைப் போலவே, அலுமினியம், தாமிரம் போன்ற உலோகங்களின் மதிப்பை தெரிந்து வைத்திருந்தார். பழைய, பயன்படுத்தப்படாத தாமிரக் கம்பிகளை வாங்கி அதை கைமாற்றி கொடுக்கும் காயலான் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அந்த நேரத்தில் தான், நாமே ஏன் தாமிரக் கம்பிகளை தயாரிக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது. சிறிய அளவில் செயல்பட்ட ஒரு ஆலையை விலைக்கு வாங்கினார். இன்று உலகெங்கும் மிகப் பெரிய தாமிர சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்.
 அவருடைய வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்ததுதான் ஸ்டெர்லைட். பல நாடுகளில் தாமிர தாதுக்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களை வைத்துள்ளார். இந்த ஒருவருக்காக, மொத்த அதிகாரத்தை தனது மக்களுக்கு எதிராக தமிழக அரசு திருப்பி விட்டுள்ளது. துப்பாக்கிச் சூடுகளில் 13பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இது அனில் அகர்வாலுக்கு புதிதல்ல. ஒடிசாவில் பாக்சைட் ஆலையை அமைப்பதற்காக, ஒரு பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்களை இவருடைய நிறுவனம் அடித்து துரத்தியது. இது தொடர்பான வழக்கை 2005ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த ஆலை அமைக்க தடை விதித்தது. இதேபோல் ஜாம்பியா நாட்டிலும், தாமிர தாதுக் கழிவுகளை அங்குள்ள ஆற்றில் கொட்டியதாக அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியதால், அந்த ஆலையும் மூடப்பட்டது.  
குஜராத்,கோவா, கர்நாடகா ஆகிய  மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஸ்டெர்லைட்  ஆலைக்கு அனுமதியளித்த மகாராஷ்டிரா பின்னர் அனுமதிஅளிக்க மறுத்துவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் வருமானம் இருந்தாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு கான்சர் போன்ற நோய்கள் ஏற்படும் என்பதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு மற்றைய மாநிலங்கள் அனுமதியளிக்கவில்லை எனத் தெரிந்துகொண்டும் 1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 1996 ஆம்  ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான அனுமதியை கருணாநிதி வழங்கினார். தமிழகத்தை ஆண்ட இரு பெரும் கட்சிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. அந்தக் கட்சிகளுடன் கூட்டணீ அமைத்த தமிழகக் கட்சிகள் அனைத்தும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றைத் தவிர  அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போது வரிந்து கட்டிக்கொண்டு குரல் கொடுக்கின்றன. தூத்துக்குடிப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் தமிழக பாரதீய ஜனதாத் தலைவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் காங்கிரஸ் கட்சியின் மீதும் குற்றம் சுமத்துகின்றன
கலவரம்செய்தவர்களை விரட்டுவதுபோல பொலிஸார் சுடவில்லை. தீவிரவாதிகளை அல்லது எதிரி நாட்டு இராணுவத்தை சுடுவது போன்றே அன்று பொலிஸார் நடந்து கொண்டனர். இது ஒரு திட்டமிட்ட தாக்குதலாகவே கருதப்படுகிறது. கூட்டத்தைக் கலைப்பதற்கான முன்னெற்றசிக்கை எதுவும் இல்லாமல் கொலை செய்யும் நோக்குடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை முன்னின்ரு நடத்திய செயற்பாட்டாளர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
போராட்டக்காரர்களின் மத்தியில் நக்சலைட்டுகள் ஊடுருவியதால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு கூறுகிறது. தம்மீது கல் எறிந்ததால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யதாக பொலிஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை எதுவுமே ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுதான் இதற்கான ஒரேஒரு தீர்வு.

வர்மா