Showing posts with label கிறிக்கெர். Show all posts
Showing posts with label கிறிக்கெர். Show all posts

Saturday, December 9, 2023

உலகக்கிண்ண ரி20 மைதானங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்


   அமெரிக்கா, கரீபியன் தீவுகளில்  2024 ஆம் ஆண்டு நடைபெறும்  உலகக்கிண்ண போட்டிகள் நடைபெறும் மைதானங்களை  ஆய்வுசெய்யும் பணி  நவம்பர் 30 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 15 ஆம் திகதி முடிவடையும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.    

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (சிடபிள்யூஐ) பிரதிநிதிகள் அடுத்த ஆண்டு ரி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக கரீபியன் ,அமெரிக்காவில் உள்ள மைதானங்களில் இரண்டாவது ஆய்வைத் தொடங்க  உள்ளனர்.  அரங்குகளின் தயார்நிலை குறித்த இரண்டு வார ஆய்வு நவம்பர் 30 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 15 ஆம் திகதி முடிவடையும் என்று   தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐசிசி செயல்பாட்டுத் தலைவர் குஷியால் சிங், இரண்டு வாரங்களாக ஆய்வுக் குழு கவனம் செலுத்தி வரும் பகுதிகளை விளக்கினார்.

பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்ட் தயாரிப்புகள், பயிற்சி வசதிகள், வீரர்களின் ஆடை அறைகள், ஒளிபரப்பு மற்றும் ஊடக வசதிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் திறன்கள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள்... ரசிகர் பூங்காக்களுக்கான பகுதிகள் மற்றும் பிற முக்கிய கூறுகள் ஆகியவை மதிப்பீடு செய்யப்படும்.   என்று சிங் கூறினார்.

 20 அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 55 போட்டிகள் ஜூன் 4 முதல் ஜூன் 30, 2024 வரை நடைபெறும். மேற்கிந்தியத் தீவுகள் ,அமெரிக்கா ஆகியன இணைந்து  முதல் முறையாக ஐசிசி போட்டியை நடத்துகின்றன.

Friday, May 12, 2023

ஆசிய கிண்ணப் போட்டி பாகிஸ்தானில் நடத்துவதில் சிக்கல்

ஆகியக் கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானுக்கு  வெளியே நடத்துவதற்கு இலங்கையும், பங்களாதேஸும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தகவலை பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அங்கு நடைபெற்றால் இந்தியா பங்கேற்காது என்று இந்திய கிரிக்கெட் சபை  தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பாகிஸ்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருநதது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்பு கருத்து தெரிவித்திருந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா, பாகிஸ்தானுக்கு பதிலாக வெளி நாட்டில் ஆசியக் கிண்ண  கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். இதை பாகிஸ்தான் ஏற்கவில்லை என்றால் அந்த நாட்டிற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தை தொடரில் சேர்க்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு வெளியே ஆசியக் கிண்ண  தொடரை நடத்துவதற்கு இலங்கையும், பங்களாதேஷும்  ஆதரவு தெரிவித்துள்ளன. பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பதால் பாகிஸ்தான் இந்த தொடரை புறக்கணிப்பு செய்யலாம் அல்லது வெளிநாட்டில் நடக்கும் தொடரில் பங்கேற்கலாம்.

ஆசியக் கிண்ண   தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காவிட்டால் தொடரை ஒளிபரப்பு செய்யும் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும். இதனை இந்தியாவில் நடைபெறும் தொடர்கள் மூலம் சரி செய்வோம் என்று ஜெய் ஷா உறுதி அளித்துள்ளார். இதற்கிடையே உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் ஒக்டோபர்,  நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணியை மத்திய அரசு அனுமதிக்காவிட்டால், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட்சபைத்  தலைவர் நஜிம் செதி முன்பு கூறியிருந்தார். ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்த வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்துவதைப் போன்று, உலகக் கோப்பை தொடரை இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வலியுறுத்த வாய்ப்புள்ளதால் இந்த விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது.

 தொடரை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்த இலங்கை, வங்கதேசம் ஆதரவு தெரிவிட்த்துள்ளன.