Showing posts with label மும்பாய். Show all posts
Showing posts with label மும்பாய். Show all posts

Monday, October 31, 2022

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 41


 குழந்தை நட்ச்த்திரமாக அறிமுகமாகி  இந்திய சினிமாவின்  உச்சத்தைத்க் தொட்ட நாயகி ஸ்ரீதேவி.  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து  மொழிப் படங்களிலும் முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர்  ஸ்ரீதேவி. திரைப் படம் பார்ப்பதை விரும்பாத அரசியல்தலைவரான காமரஜரின் சிபார்சிலேயே ஸ்ரீதேவிக்கு சினிமா வய்ப்பு தேடிச் சென்றது. கர்மவீரர் காமராஜரின் ஆசிதான் ஸ்ரீதேவிக்கு பக்கபலமாக இருந்தது

சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர். ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன். தாய் ராஜேஸ்வரி. காங்கிரஸ் இயக்கத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ஐயப்பன் பெருந்தலைவர் காமராஜரை சநதிக்க அடிக்கடி அவரது இல்லத்துக்குச்  செல்வார்.ஒரு முறை அவர் காமராஜரைச்  சந்திக்கச் சென்றபோது  தனது நான்கு வயது மகளான ஸ்ரீதேவியையும் தன்னுடன் அவர் அழைத்துக் சென்றிருந்தார். அப்போது கவிஞர் கண்ணதாசனும் காமராஜர் வீட்டுக்கு வந்திருந்தார். சிறுமி ஸ்ரீதேவியின் சுறுசுறுப்பைப்  பார்த்த பெருந்தலைவர் “இந்தச்  சிறுமியை நீ சினிமாவில் அறிமுகப்படுத்தலாமே” என்று கண்ணதாசனிடம் கூறினார்.

கண்ணதாசனின் சிபார்சில்  சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த  ‘துணைவன்’ படத்தில் பாலமுருகனாக அறிமுகமானார் ஸ்ரீதேவி.

அதற்குப் பிறகு எல்லா தென்னிந்திய மொழிப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி ‘ராணி மேரா நாம்’ என்ற படத்தின் மூலம் இந்திப் படவுலகில் குழந்தை நட்சத்திரமாகக்  கால் பதித்தார்.

ஸ்ரீதேவிக்குப் பதின்மூன்று வயதானபோது அவரை தனது ‘மூன்று முடிச்சு’  படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு சிற்றன்னையாக அவரை நடிக்க வைத்தார்.  அந்த மூன்று முடிச்சு படம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவிஆகிய மூன்று உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்த முதல் படமாக அமைந்தது.

 இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் அவர் நடித்த ‘16 வயதினிலே’  ,  காமிரா கவிஞர் பாலு மகேந்திராவின்  ‘மூன்றாம் பிறை’ , இயக்குநர் மகேந்திரனின்  ‘ஜானி’  ஆகியன  ஸ்ரீதேவியைத் திரும்புப் பார்க்க வைத்தன.

‘மூன்று முடிச்சு’ படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ட  சம்பளம் முப்பதாயிரம் ரூபாய். ஸ்ரீதேவிக்கு சம்பளம் ஐயாயிரம் ரூபாய். ரஜினிகாந்துக்கு மூவாயிரம் ரூபாய். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஸ்ரீதேவியின் தாயாரிடம் மிகவும் நெருக்கமாக ரஜினி பழகுவார். என்னுடைய தாயாரும் தன்னுடைய மகன் போல அவர் மீது பாசத்தைப் பொழிவார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது  ரஜினியின் ஒரே லட்சியம் நாம் எப்போது கமல்ஹாசன் போல பெரிய நடிகராக வந்து முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவது என்பதாகத்தான் இருந்தது.

“நீ நிச்சயமாக பெரிய நடிகனாக வருவாய். முப்பதாயிரம் என்ன.. அதற்கும் மேலாக சம்பளம் வாங்குவாய்” என்றுஅவர் ரஜினிக்கு  அவருக்கு ஆறுதல் கூறுவார். இப்போ ரஜின்யின்சம்பளம் கோடிக்கணக்கில் உயர்ந்துள்ளது.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி அதற்குப் பின்னால் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர்கள் கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் மட்டுமே. அது தவிர வேறு சில ஒற்றுமைகளும் அவர்களுக்கு உண்டு. இருவருமே திரையுலகில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த சாதனையாளர்கள்.

  ஜமுனா, காஞ்சனா, மஞ்சுளா, லதா, சந்திரகலா, ஜெயப்பிரதா, மாதவி, ஜெயசுதா, ஜெயசித்ரா  ப்பொன்ற நடிகைகளுக்கு மத்தியில்  ஸ்ரீதேவி அறிமுகமானார். அடுத்த தலைமுறை நாயகிகளான  அம்பிகா, ராதா, சுகாசினி, ராதிகா, ரதி அக்னிஹோத்ரி, விஜயசாந்தி ஆகியோருடனும் ஸ்ரீதேவி போட்டி போட்டு  நடித்தார். ஏ.நாகேஸ்வரராவோடு இணைந்து நடித்துவிட்டு அவரது மகன் நாகார்ஜுனாவிற்கும்   ஜோடியாக நடித்த பெருமையும் அவருக்கு உண்டு. குழந்தை நட்சத்திரமாக சிவாஜியுடன் பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி ‘கவரிமான்’ படத்தில் அவரது மகளாக நடித்தார். பின்னர் ‘சந்திப்பு’ படத்திலே அவருக்கு ஜோடியானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எல்லா முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீதேவி மலையாளத்தில் மட்டுமே குறைவான படங்களில் நடித்துள்ளார்.


1960-களில் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் ஜோடியாக எண்ணற்ற படங்களில் நடித்த சரோஜாதேவியைப் போல ரஜினி, கமல் ஆகிய இருவரின் படங்களிலும் மாறி மாறி நடித்த ஸ்ரீதேவி தமிழ்ப் பட உலகில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்துவிட்டு இந்திப்பட உலகில் அடி எடுத்து வைத்தார்.

தென்னகத்திலிருந்து இந்திக்குச் சென்று சாதனை படைத்த வைஜயந்திமாலா, பத்மினி, ரேகா, ஹேமமாலினி ஆகியோரைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டில் பிரபல தெலுங்கு பட இயக்குநரான ராகவேந்திரராவ் இயக்கிய ‘ஹிம்மத்வாலா’ என்ற படத்தின் மூலம் இந்தித் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சங்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்தவர் ஸ்ரீதேவி.

  ஜமுனா, காஞ்சனா, மஞ்சுளா, லதா, சந்திரகலா, ஜெயப்பிரதா, மாதவி, ஜெயசுதா, ஜெயசித்ரா  ப்பொன்ற நடிகைகளுக்கு மத்தியில்  ஸ்ரீதேவி அறிமுகமானார். அடுத்த தலைமுறை நாயகிகளான  அம்பிகா, ராதா, சுகாசினி, ராதிகா, ரதி அக்னிஹோத்ரி, விஜயசாந்தி ஆகியோருடனும் ஸ்ரீதேவி போட்டி போட்டு  நடித்தார். ஏ.நாகேஸ்வரராவோடு இணைந்து நடித்துவிட்டு அவரது மகன் நாகார்ஜுனாவிற்கும்   ஜோடியாக நடித்த பெருமையும் அவருக்கு உண்டு. குழந்தை நட்சத்திரமாக சிவாஜியுடன் பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி ‘கவரிமான்’ படத்தில் அவரது மகளாக நடித்தார். பின்னர் ‘சந்திப்பு’ படத்திலே அவருக்கு ஜோடியானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எல்லா முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீதேவி மலையாளத்தில் மட்டுமே குறைவான படங்களில் நடித்துள்ளார்.

1960-களில் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் ஜோடியாக எண்ணற்ற படங்களில் நடித்த சரோஜாதேவியைப் போல ரஜினி, கமல் ஆகிய இருவரின் படங்களிலும் மாறி மாறி நடித்த ஸ்ரீதேவி தமிழ்ப் பட உலகில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்துவிட்டு இந்திப்பட உலகில் அடி எடுத்து வைத்தார்.

ந்தார் அந்த நடிகை. நாங்கள் இருவரும் போனபோது வாசலுக்கு வந்து எங்களை வரவேற்ற அவர் தன்னுடைய அம்மாவை அழைக்க வீட்டுக்கு உள்ளே போனார்.

”நடிகையின் அம்மா வந்தவுடன் கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கலாமா?” என்று என்னிடம் ரஜினி  கேட்டார். அப்போது திடீரென்று மின்சாரம் “கட்” ஆனது. நீண்ட நேரம் மின்சாரம் வரவில்லை. 

மீண்டும் வெளிச்சம் வந்த நேரத்தில் ரஜினியின் மனம் மாறி இருந்தது. மின்சாரம் போனதை சகுனத்  தடையாக அவர் நினைத்துவிட்டதால் அந்தத் திருமணம் நடைபெறவில்லை…” என்று குறிப்பிட்டிருக்கிறார் மகேந்திரன்.


 அந்தக் காதல் தோல்வியைத் தொடர்ந்து  நீண்ட இடைவெளிக்குப் பின்னால் இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மீது ஸ்ரீதேவிக்குக்  காதல் பிறந்தது. மூன்று ஆண்டுகள் அவரோடு இணைந்து வாழ்ந்த ஸ்ரீதேவி தனது முதல் மனைவியான யோகிதா பாலியை மிதுன் விவாகரத்து செய்யத் தயாராக இல்லை என்பது தெரிந்ததும் மிகுந்த அதிர்ச்சியோடு அவரை விட்டு விலகினார்.

1996-ல் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகர் அனில் கபூரின் அண்ணனுமான போனி கபூரைத் திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி, அதன் பிறகு திரையுலகைவிட்டு விலகினார். இவருக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடித்த தமிழ்ப் படமாக விஜய் கதாநாயகனாக நடித்த ‘புலி’ படம் அமைந்தது.

ஸ்ரீதேவி நடித்த முதல் திரைப்படமான  ‘துணைவன்’ 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்திலே வெளியானது. அவர் நடித்த  கடைசி படமான ‘மாம்’ திரைப்படமும் அதே ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியானதை ஒரு விசேஷ ஒற்றுமை என்றுதான் சொல்ல வேண்டும்.

இயற்கையை வெல்ல முடியாது என்ற நியதி காரணமாக  அவர் இறந்துவிட்டார் என்றாலும் திரைப்பட ரசிகர்கள் மனதில் அவர் என்றும் வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை.

 

Sunday, April 3, 2022

இரண்டாவது போட்டியிலும் மும்பை தோற்றது

ஐபிஎல் தொடரில் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை ராஜஸ்தான் அணிகள் மோதின. நானயச் சுழற்சியில் வென்ற ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் துடுப்பெடுத்தாடியது. இரண்டாவது ஓவரில்  ஜேஸ்வால்  ஒரு ஓட்டம் எடுத்து ஆட்டமிழந்தார்.    மும்பை இந்தியன்ஸ் அணியின் 4-வது ஓவரை பாசில் தம்பி வீசினார். அந்த ஓவரில் 3 சிக்சர் மட்டும் 2 பவுண்டரிகளை விளாசினார் பட்லர்.

ராஜஸ்தான் அணி 48 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் படிக்கல் 7 ஓட்டங்களில்  வெளியேறினார்பட்லருடன் சாம்சன் ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார். சாம்சன் 30 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பொல்லார்ட் பந்து வீச்சில்மெளியேறினார்.

அடுத்து வந்த ஹெட்மயர் அவரது பங்குக்கு 3 சிக்சர் 3 பவுண்டரிகளை விளாசிய அவர் 35 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்தில் வெளியேறினார். ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய பட்லர் ஐபிஎல்-ல் தனது 2-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 100 ஓட்டங்கள் எடுத்து பும்ரா பந்தில் விக்கெட்டை இழந்தார்ஒரேஞ்சு தொப்பியை பட்லர் தன்வசமாக்கினார்.       

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் பட்லர் ஐபிஎல் தொடரில் தனது 2-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.

அடுத்த வந்த வீரர்கள் அஸ்வின் 1, சைனி 2, பராக் 5 ஓட்டங்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்கள் குவித்தது. மும்பை அணி தரப்பில் பும்ரா, மில்ஸ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

பட்லர் அதிரடி சதம் - மும்பைக்கு 194 ஓட்டஇலக்கை நிர்ணயித்தது ராஜஸ்தான்.

194 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களே எடுத்தது.

23 ஓட்டங்களால்  ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 61 ஓட்டங்கள் எடுத்தார். இஷான் கிஷன் 54 ஓட்டங்கள் சேர்த்தார். ராஜஸ்தான் தரப்பில் நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாகல் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.