Showing posts with label குரோஷியா. Show all posts
Showing posts with label குரோஷியா. Show all posts

Tuesday, July 30, 2024

யூரோ போட்டியில் இனவெறி மற்றும் பாரபட்சமான ரசிகர் நடத்தைக்காக ஏழு நாடுகளுக்கு UEFA அபராதம் விதித்துள்ளது


 ஜேர்மனியில் நடைபெற்ற யூரோ போட்டியில்   ரசிகர்களால் இனவெறி மற்றும் பாரபட்சமான துஷ்பிரயோகத்திற்காக மொத்தம் 230,000 யூரோக்கள் ($250,000) அபராதம் செலுத்த ஏழு தேசிய கால்பந்து கூட்டமைப்புகளுக்கு UEFA உத்தரவிட்டது.

ஜேர்மனியில் நடந்த ஒரு மாத கால, 24 நாடுகளின் போட்டியில் பால்கனில் உள்ள அணிகளின் ரசிகர்களை பெரும்பாலும் ஈடுபடுத்திய சம்பவங்களின் விவரங்களை UEFA குறிப்பிடவில்லை.

குரோஷியா தனது மூன்று ஆட்டங்களில் ஒவ்வொரு சம்பவத்திற்கும் 50,000 யூரோக்கள் ($54,000) என்ற மிகப்பெரிய அபராதத்தை செலுத்த வேண்டும்.

குரோஷியா மற்றும் அல்பேனியாவின் ரசிகர்கள் ஹம்பர்க்கில் நடைபெற்ற குழு-நிலை ஆட்டத்தின் போது செர்பியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். UEFA இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியது, UEFA செயல்படத் தவறினால் போட்டியில் இருந்து வெளியேறுவதாக செர்பியா கூட்டமைப்பு மிரட்டியது.

குரோஷியா மற்றும் ஸ்பெயினுக்கு எதிரான இரண்டு ஆட்டங்களில் இனவெறி நடத்தைக்காக அல்பேனியா கால்பந்து அமைப்புக்கு புதன்கிழமை 30,000 யூரோக்கள் ($32,500) அபராதம் விதிக்கப்பட்டது.

போட்டியின் போது ரசிகர்கள் பட்டாசுகளை கொளுத்தியதற்காகவும் பொருட்களை வீசியதற்காகவும் அல்பேனிய மற்றும் குரோஷிய கூட்டமைப்புகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, இது 2-2 என சமநிலையில் முடிந்தது. அல்பேனியா வீரர் மிர்லிண்ட் டாகுவும் செர்பியாவுக்கு எதிராக தேசியவாத கோஷங்களில் முன்னணி ரசிகர்களால் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டார்.

ருமேனியா, செர்பியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய மூன்று வெவ்வேறு விளையாட்டுகளில் நடந்த சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டது. ருமேனியாவிற்கு 40,000 யூரோக்கள் ($43,400) அபராதம் விதிக்கப்பட்டது, மற்ற இருவரும் 30,000 யூரோக்கள் ($32,500) செலுத்த வேண்டும்.

இரண்டு ஆட்டங்களில் இனவெறி ரசிகர்களின் நடத்தைக்காக ஹங்கேரிக்கு 30,000 யூரோக்கள் ($32,500) அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் ஆஸ்திரியாவுக்கு ஒரு விளையாட்டில் கட்டணம் விதிக்கப்பட்டது மற்றும் 20,000 யூரோக்கள் ($21,700) அபராதம் விதிக்கப்பட்டது.

 குரோஷியா, ருமேனியா மற்றும் செர்பியா மீது மேலும் தடைகளை விதித்தது.

 

ரமணி

Monday, June 28, 2021

செக். குடியரசு, பெல்ஜியம் வெற்றி போத்துகல் குரோஷியா தோல்வி

யூரோ2020  கிண்ண போட்டியில் செக். குடியரசும், பெல்ஜியமும் காலிறுதியில்  விளையாட தகுதி  பெற்றன. ரொனால்டோவின்  போத்துகலும், குரோஷியாவும்  தோல்வியடைந்து  வெளியேறின.

புடாபெஸ்ட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை2020 கிண்ணதொடரின் இறுதி -16 அணிகளுக்கு இடையேயான  சுற்றில்   சற்றும் எதிர்பாராத செக்.குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து காலிறுதிக்குள் நுழைந்தது.

செக்.குடியரசின் 2 கோல்களுமே இடைவேளைக்குப் பிறகுதான் அடிக்கப்பட்டன. 68வது நிமிடத்தில் டொமாஸ் ஹோல்ஸ் தலையால் முட்டி முதல் கோலை அடிக்க, 80வது நிமிடத்தில் பாட்ரிக் ஷிக் 2வது கோலை அடித்தார்.

ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் நெதர்லாந்து தடுப்பு மாவீரர் என்று கருதப்படும் மத்தைஸ் டெலித் பந்தை வேண்டுமென்றே கையால் பிடித்ததால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது நெதர்லாந்தின் வீழ்ச்சிக்குக் காரணமானது.

2014 உலகக் கிண்ணப் போட்டியில்  பங்கேற்ற பிறகு பெரிய உதைபந்தாட்டத்  தொடருக்குத் தகுதி பெற்ற நெதர்லாந்து நாக் அவுட் சுற்றில் பரிதாபமாக வெளியேறியது.ஆட்டத்தில் முதல் வாய்ப்பு செக். குடியரசுக்குத்தான் கிடைத்தது, 23வது நிமிடத்தில் அதன் டொமாஸ் சூசெக் டைவ் அடித்து தலையால் முட்டிய பந்து வெளியே சென்றது. 34வது நிமிடத்தில் இதைவிடவும் நல்ல கோல் வாய்ப்பு மீண்டும் செக். அணிக்குக் கிடைத்தது. ஆனால் மத்தைஸ் டெலித் திகைப்பூட்டும் விதத்தில் தடுத்தார். லூகாஸ் மசோபஸ்ட் அருகிலிருந்து அடித்த கோல் ஷாட்டை டெலித் அபாரமாகத் தடுத்தார்.

இடைவேளைக்கு முன்னதாக நெதர்லாந்து ஏறக்குறைய கோல் அடித்திருக்கும், மெம்பிஸ் டீப்பே அடித்த ஷாட் பாட்ரிக் வான் ஆன் ஹோல்ட்டிடம் வர அவர் இலக்கை தவற விட்டார்.

இடைவேளைக்கு பிறகு மீண்டும் நெதர்லாந்துக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, இம்முறை டோன்யெல் மலேனின் முயற்சியை செக். கோல் கீப்பர் வாக்லிக் முறியடித்தார். அதன் பிறகுதான் செக். குடியரசின் கோல் முயற்சியைத் தடுக்கும் நோக்கத்துடன் மத்தைஸ் டெலித் பந்தை கையால் பிடிக்க சிவப்பு அட்டை  காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். 2004க்குப் பிறகு நெதர்லாந்து வீரர் ஒருவர் சிவப்பு அட்டை  காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஸ்பெயின், செவில்லில் நடைபெற்ற யூரோ2020  இறுதி-16 அணிகள் நாக் அவுட் சுற்றுப் போட்டியில்  ஐரோப்பிய சாம்பியனான போத்துகலை, பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.போர்ச்சுகல் கடும் ஏமாற்றமடைந்தது, காரணம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடும் கடைசி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இது என்று கூறப்படுகிறது, மேலும் ரொனால்டோ 110 கோல்கள் அடித்து அதிக கோல்களுக்கான உலக சாதனையையும் நிகழ்த்த முடியாமல் போனது.

42வது நிமிடத்தில்  தோர்கன் ஹசார்டு அடித்த கோல்தான் பெல்ஜியத்தின் வெற்றி கோலாக அமைந்தது.முக்கியமான வீரர்களானகெவின் டி புருய்ன், ஈடன் ஹசார்டு ஆகியோர் காயமடைந்து வெளியேறினர்.

ஈடன் ஹசார்டு, கெவின் டி புருய்ன், ரொமிலு லுகாக்கு தான் பெல்ஜியத்தின் மும்மூர்த்திகள். ஆனால் இந்தப் போட்டியில் ஜென் வெர்ட்டோன்கன், ஆல்டர்வெய்ரல்ட், தாமஸ் வெர்மீலன் ஆகியோர் முன்னிலை பெற்றனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ படையை இவர்கள் கோல் அடிக்க முடியாமல் ஆட்கொண்டனர்.

Saturday, June 19, 2021

இங்கிலாந்தை திணறடித்த ஸ்கொட்லாந்து

யூரோ 2020 கிண்ண  குரூப் டி போட்டியில் இங்கிலாந்தைத்  திணறடித்த ஸ்கொட்லாந்து  கோல் எதுவும்  இல்லாது ஆட்டத்தை  சமப்ப‌டுத்தியது.

 பலமான  அணி என  வர்ணிக்கப்பட்ட இங்கிலாந்தால் ஸ்கொட்லாந்தின்  தடுப்பணையை  உடைக்க முடியவில்லை.  கோல் அடிப்பதற்கு ஸ்கொட்லாந்துக்கு  அதிக  சந்தர்ப்பம்  கிடைத்தது.அனைத்தும்  வீணாகிவிட்டது. 

இங்கிலாந்து வீரர்கள்  பதற்றமாகவே ஆடினர். ஆனால் ஸ்காட்லாந்துக்கும் அதிர்ஷ்டம் இருந்தது. இங்கிலாந்தின் ஜான் ஸ்டோன்ஸ் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில்  பட்டது. 

ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் ஸ்காட்லாந்துக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆண்டி ராபர்ட்ஸனிடமிருந்து பந்தை டியர்னி பெற்றார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸைக் கடந்து பந்தை ஸ்காட் வீரர் ஓடனலுக்கு கொடுத்தார். ஓடனலும் அருமையாக கோலை நோக்கி அடித்தார், ஆனால் அங்கு கோல் கீப்பர் வலது புறம் தாழ்வாக விழுந்து கோல் விழாமல் தடுத்தார். தடுத்த பந்து மீண்டும் வந்த போது சே ஆடம்ஸ் அதனை கோலாக மாற்றத் தவறினார்.

 

5  நிமிடங்களில்  2  கோல்கள்

புகாரெஸ்ட்டில்  நடைபெற்ற யூரோ  கிண்ண‌ பிரிவு சி ஆட்டத்தில் வடக்கு மசடேனியாவுக்கு  எதிராக  விளையாடிய குரோஷியா  2 - 1 கோல்  கணக்கில்  வெற்றி  பெற்றது.

நெதர்லாந்துடனான   முதலாவது  போட்டியில்  தோல்வியடைந்தாலும்  உக்ரேனின் ஆட்டம்  அச்சுறுத்தலாகவே   இருந்தது.உக்ரைன் வீரர்கள் ஆந்த்ரீ யார்மலெங்கோ, ரோமன் யரேம்சுக் ஆகியோர் முறையே 29 மற்றும் 34வது நிமிடங்களில் இடைவேளைக்கு முன்னரே அடித்த  இரன்டு கோல்கள் உக்ரைனுக்கு வெற்றி பெற்று கொடுத்தன.

ஆட்டத்தின் 57வது நிமிடத்தில், பெரும்பகுதி உக்ரைன் வயிற்றில் மோட்டார் ஓட வைத்த நார்த் மேசிடோனியா வீரர் அலியோஸ்கி ஒரே கோலை அடித்தார். 

வடக்கு  மசடோனியா வீரர் அவ்ரமோவ்ஸ்கியின் கையில் பந்து பட்டதையடுத்து உக்ரைனுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரஸ்லன் மலினோவ்ஸ்கி அடித்தபோது  , வ்டக்கு  மசடோனியா கோல் கீப்பர் அபாரமாகக் கணித்து பிடித்தார்.

வடக்கு  மசடோனியா டோனியா அடித்த ஒரே கோலுமே பெனால்டி கிக் மூலம் வந்ததுதான், ஆனால் உக்ரைன் கோல் கீப்பர் கிரிகரி புஷ்சன் தடுக்க அதனை மீண்டும் நார்த் மேசிடோனியா வீரர் அலியோஸ்கி கோலுக்குள் தள்ளினார்.

வடக்கு  மசடோனியா அபாரமான‌ ஆட்டத்தை வெளிப்படுத்தியும் பயனில்லாமல் போனது. இன்னும் புள்ளிகள் பெறவில்லை. பிரிவு சியில் நெதர்லாந்து 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க உக்ரைன் 3 புள்ளிகள் பெற்று 2ம் இடத்திலும் ஆஸ்திரியா 3 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன.

இரத்தம்  சொட்ட  சொட்ட  அடிக்கப்பட்ட  கோல்

யூரோ கிண்ண தொடரின் குரூப் டி-யின்    செக். குடியரசு,  குரேஷியா ஆகியனவற்றுக்கிடையேயான   போட்டி  1-1 என்ற கோல் கணக்கில் முடிந்தது. ஆனால் 4 புள்ளிகளுடன் செக். குடியரசு அணி இந்தப் பிரிவில் முதலிடம் வகித்து நாக் அவுட் சுற்று தகுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

 பாட்ரிக் ஷிக் அற்புதமாக ஆடினார், அதனால் அவரை குரேஷிய வீரர்க‌ள் குறிவைத்து முரட்டுத் தனமாக ஆடினர். ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் குரேஷியாவின் கோல் பகுதியில் வலது புறம் மேலே வந்த பந்தைப் பெறுவதில் குரேஷிய வீரர் தேஜன் லவ்ரென், செக். வீரர் பாட்ரிக் ஷிக் இருவருமே எம்பினர். அப்போது குரேஷிய வீரர் தேஜன் லவ்ரென் உடைய  முழங்கை பாட்ரிக் ஷிக்கின் மூக்கில் பட்டது. இதனால் பாட்ரிக் ஷிக் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது.

இந்தத் தாக்குதலை குரேஷிய வீரர் வேண்டுமென்றே செய்தார் என‌ பாட்ரிக் ஷிக்  முறையிட்டார். ரீப்ளேயில் லவ்ரென் எம்பி பந்தை தன் வசம் கொண்டு வரும் முயற்சியில் முஷ்டியை கொண்டு வந்ததாகவே தெரிந்தது. இன்னும் சொல்லப்போனால் அவரது முழங்கையின் மீது ஷிக் தான் தன் முகத்தைக் கொண்டு சென்று அடி வாங்கியது போல் தெரிந்தது.

ஆனால் ஷிக் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும்போது ஸ்பானிய ரெஃப்ரி கார்லோஸ் டெல் செரோ   தொலைக்காட்சி ரீப்ளே முடிவை கேட்டார். உடனே ஸ்பாட் கிக், அதாவது பெனால்டி கிக்கை செக். குடியரசுக்குச் சாதகமாக்கினார்.

பெனால்டி கிக்கையும் ஷிக்தான் அடித்தார். மூக்கில் கொட்டிய ரத்தத்துடன் அவர் பெனால்டி ஷாட்டை இடது காலால் கோலுக்குள் திணித்தார். செக். அணி 1-0 என்று முன்னிலை பெற்றது.

 இடைவேளையின் போது செக். குடியரசு அணி 1-0 என்று முன்னிலை வகித்தது.

இடைவேளைக்குப் பிறகு குரேஷியா வீரர்கள்  ஆக்ரோசமாக  விளையாடினார்கள்.

ஆனால் இடைவேளைக்கு பிறகு 2 நிமிடங்களில் அதாவது 47வது நிமிடத்தில் குரேஷிய வீரர் பெரிசிச் இடது ஓரம் பந்தை எடுத்துக் கொண்டு வேகம் காட்டினார். பிறகு வலதுகாலால் வெட்டி உள்ளுக்குள் நுழைந்தார். அவரை குறிவைத்து தடுக்க நிறுத்தியிருந்த செக். வீரருக்குப் போக்குக் காட்டி அதிவேக ஷாட் ஒன்றை அடித்தார். டாப் கார்னரில் கோல் வலையில் பந்து சிக்கியது. 1-1 என்று ஆட்டம் சமன் ஆனது.

கடந்த 2 உலகக் கிண்ண  போட்டிகள், யூரோ 2016, இப்போது 2021 யூரோ கோப்பை என்று 4 பெரிய  தொடர்களில் கோல்களை அடித்து சாதனை புரிந்தார் குரேஷிய நட்சத்திர வீரர் பெரிசிச்.

மூக்கில் ரத்தம் வர கோல் அடித்த ஷிக் தனது 3வது கோலை இந்த தொடரில் அடித்து முன்னிலையில் உள்ளார். ஷிக் தனது 12 சர்வதேச ஆட்டங்களில் 9 கோல்களை அடித்துள்ளார்.