Showing posts with label சஜித். Show all posts
Showing posts with label சஜித். Show all posts

Wednesday, April 19, 2023

ரணில் ,சஜித்.பஷில் மும்முனைப் போட்டி


   ரணில் ,சஜித்.பஷில் மும்முனைப் போட்டி சித்திரை   புது வருடத்தின்  பின்னர் இலங்கையின் அரசியல் கள நிலைவரம் மாற்றமடையவுள்ளது. பொருளாதார நெருக்கடியில்  இலங்கை சிக்கிச் சுழன்ற  போது துணிச்சல் மிக்க அரசியல் தலைமை  யைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. சித்திரை வருடத்தின் பின்னர்  ஜனாதிபதித் தேர்தல் நடத்தப் படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரணிலின் அரசியல் வியூகங்கள்  ஜனாதிபதித் தேர்தலை நோக்கிச் செல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற வேண்டும் என்பதே ரணிலின்  கனவு.   ஜனாதிபதித்  தேர்தலில் போட்டியிடாமலே அவரின் கனவு  நிஜமாகியது. ரணில்  ஜனாதிபதியாகியதன்  பின்னால் பல விமர்சனங்கள்  உள்ளன அந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்க  அவர் ஆசைப்படுகிறார்.

அரசியலில் அதி உயர் பதவியான ஜனதிபதியாக வேண்டும் என்பது  சஜித் பிரேமதாசவின் விருப்பம். பஷில் ராஜபக்ஷவும்  ஜனாதிபதித் தேர்தலில்  போட்டியிடப்போவதாக் செய்திகள் கசிந்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி என எழுதபட்டு விட்டது. ஜனதாவிமுக்திப் பெரமுனையும் தனது கட்சியின் சார்பில் ஒருவரை களம்  இறக்க  உள்ளது.இவர்களைத் தவிர சுயேட்சைகள் சிலர் புற்றீசல்போல் திடீரென வருவார்கள். சிவாஜிலிங்கம்  போன்ற தமிழர்களும் தமது  பலத்தைக் காட்ட  ஜனாதிபதித் தேர்தலில்சில வேளை போட்டியிடுவார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது கடுமையான விமர்சனங்கள் சுமத்தப்பட்ட போது அவற்றுக்குக் காது கொடுக்காது தனது  இலக்கை நோக்கிப் பயணித்தார். பொருளாதாரத்தை மீட்பதற்கானஅவர் மேற்கொண்ட முயற்சி  சாதாரண மக்களிடம் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.  ரணில் ஜனாதிபதியான  போது நாடு மட்டுமல்ல அவரது வீடும் தீக்கிரையானது.  அப்போதிருந்த அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு,  பொருட்கள் விலையேற்றம், நீண்ட வரிசை ,  போராட்டம், நாடு முடக்கம்  எதுவும்  இப்போ இல்லை.  பொருட்களின் விலை அதிகம்தான் காலப்பொக்கில் விலை குறையும் என மக்கள் நம்புகிறார்கள்.

 ஜனாதிபதி ரணிலின்  ராஜதந்திரத்தால் சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க  உடன்  ப்டாது.  ஆனாலும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்  முன் வைக்கப்படுகின்ரன.   எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள்   போராட்டங்கள் நடத்துகின்றன.  இதனால் ஜனாதிபதி ரணில் மனம் தளரவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு ரணிலுக்கு  உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.  இதே சுட்டுடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ரணீல் ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நோக்கி  ரணிலின் பார்வை விழுந்துள்ளது.

  2020  ஆண்டு நடந்த தேர்தலி ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியடைந்தது.  ஆளும் கட்சியும் எக்திர்க் கட்சிகளும் சேர்ந்தெ ரணிலை ஜனாதிபதியாக்கின.            நிலின் ப் அரம எதிரியான  ம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா  உறுப்பினர்கள் அவரை  ஆதரித்த்னர்.

   தேர்தலின் மூலம்   தன்னை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தும் மற்றும் தனது பொருளாதார சீர்திருத்தப் பணியை வலுப்படுத்தும் என்பதை ரணில் உணர்ந்துள்ளார். கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நன்கொடை நாடுகளும் உறுதியான   அரசாங்கத்துடன் இணைந்து போக விரும்புகின்றன. ஆகவே  தேர்தலின்  மூலம் தனது பலத்தை வெளிப்படுத்த ஜனாதிபதி ரணில்  விரும்புகிரார்.

இன்றைய நிலையில் ரணிலுக்குச் சவால் விடும்  போட்டியாளர்  கண்ணுக்கு எட்டியதூரத்தில் இல்லை. ஒரு சில கட்சிகளின்  ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்  வெற்றி பெறலாம் என ஜனாதிபதி ரணில்  நினைக்கிறார்.   சஜித்தின்  கட்சியில் உள்ளவர்கள் ஜனதிபதியின் பக்கம் தாவத் தயாராக  இருக்கிறார்கள்  புது வருடத்தின்  பின்னர் அணிமாறும் படலம் நடைபெறும் என நம்பப்படுகிறது.  தனது கட்சியைச்   சேர்ந்தவர்களுக்குப் பணம் கொடுத்து  இழுப்பதாக சஜித்   குற்றம் சாட்டியுள்ளார். 

ரணிலின் தலைமையில் சஜித்தும்  ஒருகாலத்தில் இருந்தவர்தான். சஜித்தின் பின்னால் நிர்பவர்கள் அனைவரும் அசல் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்தவர்கள். ரணிலின் தலைமையில் கட்சி தோல்வியடைகிறது என்பதால் சஜித்தின் பின்னால் சென்றவர்கள்  மீடும் தாய்க்கழகத்துக்குச் செல்ல விரும் புகிரார்கள் அரசிலைல் இது சகஜம் ஆனால், காசு கொடுக்கும்  குற்றச்சாட்டு புதியது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதர்கு சஜித் தயாராக  இருக்கிறார். இந்த நிலையில் அவரை ஆதரிக்க வேண்டிய கட்சியின் முக்கியஸ்தர்கள் ரணிலின் பகம் சாயத்துடிக்கிறர்கள். ரணிலையும், சஜித்தையும்  ஒற்றுமையாகுவதர்கு மேற் கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.     புதிய கூட்டணிஅய் உருவாக்க்  ரணில்  முயற்சி செய்கிறர்.சஜித்தின்பக்கம் இருப்பவர்களில் பாதிப்பேர் ரணிலுடன்  இணையத்ட் கயாராக  இருக்கிறார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்த சிலர் சஜித்தின்பக்கம் சென்றுள்ளனர்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் இணைந்து கட்சி தனது பங்களிப்பை வழங்க வேண்டும்  டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“சில சமகி ஜன பலவேகய (ஸ்JB) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், கட்சி தீர்மானம் எடுக்கத் தவறினால் குழுவாகச் செயற்படுவதாகவும்  பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன  தெரிவித்தார்.“ஹர்ஷ டி சில்வா போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்   ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர்.

 சஜித் பிரேமதாசவின்  தலைமைத்துவ பாணி மீதான உகட்சியின அதிருப்தியடைந்துள்லனர்.  மூத்த கட்சிக்காரர்களை புறக்கணிப்பதாகவும், ஒரு கும்பலை நம்பி எதேச்சதிகாரமாக விஷயங்களை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் மீதான அதிருப்தியே பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறும் எண்ணத்துடன் வி இருப்பதற்கு ரு முக்கிய காரணமாகும். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

"ஆனால் சந்திம வீரக்கொடி மற்றும் ஜயரத்ன ஹேரத் மற்றும்   (ஸ்ள்PP) அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர், மேலும் பலர் வருவதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர்," என்று அவர் கூறினார்.

ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து  பஷிலைக் களம்  முயற்சி நடக்கிறது.  ராஜபஷ குடும்பத்தின் மீதான  கொபம்  மக்களிடன்  இன்னமும் தணியவில்லை 

புது வருடத்தின் பின்னர் புதிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகம்  இல்லை. 

 

 

 

Saturday, February 19, 2022

ஒற்றுமையைக் காட்டமுயலும் அரசங்கம் சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகள்

பொருளாதாரம் பின்னடைவு, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு,  அந்நிய செலாவனி குறைபாடு, ஏற்றுமதி பாதிப்பு, தொழிற்சங்கப் போராட்டம் என இலங்கை தடுமாரும் வேளையில்  தேர்தல் சிந்தனையில் சில தலைவர்கள் க்னவு காண்கிறார்கள்.

பலமான எதிர்க் கட்சியாக இருக்க வேண்டிய ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிரிந்துள்ளது. அங்கும் சஜித்துக்கு எதிராக உள்ளக அரசியல் நடைபெறுகிறது. ஜே,வி,பி வழமைபோல சக்திமிக்க கட்சியாக தன்னைக் காட்டிக்கொள்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி சஜித்தை முன்னிறுத்தி அரசியல் களத்தில் நிற்கிறது. சம்பிக்க தனது படையணீயுடன்  ஜ்னாதிபதியாக முயற்சி செய்கிறார்.

எதிர்வரும் தேர்தல் உள்ளூராட்சி சபைத் தேர்தலாகவே இருக்கும் என்றும், அது பாராளுமன்ற அல்லது ஜனாதிபதித் தேர்தல் அல்ல என்றும் பசில் ராஜபக்ச ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி எவருக்கும் அக்கறை இல்லை, அதைப் பற்றி புதுடில்லிக்கு எழுதவும் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதன் முக்கிய அம்சம் என்னவென்றால், நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க என்ன செய்ய முடியும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதில் அவை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.   உள்ளூராட்சித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அல்லது தோற்றாலும் இலங்கைக்கு அதிக அந்நியச் செலாவணியைக் கண்டுபிடிக்கவோ, கடனை அடைக்கவோ, உரமில்லா உணவுப் பயிரிடவோ உதவப் போவதில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  அனுராத புரத்தில் நடத்திய கூட்டத்தில் ஸ்ரீலங்கா  சுட்தந்திரக் கட்சியும் இடதுசரிகள் சிலரும் கலந்துகொள்ளவில்லை.  முன்னணி அமைச்சர்கலின் ட்தலையையும் அங்கு காணவில்லை. அரசங்கத்தின்பலத்தி வெளிக்காட்டுவதர்காக நடத்துப்பட்ட அநுராதபுரக் கூட்டம் எதிர்பார்த்த  பலனைக் கொடுக்கவில்லை.  முக்கியமான அமைச்சர்கள்  உள்ளிருந்து அரசாங்கத்துகுக் குடைச்சல் கொடுக்கின்றனர்.   எதிர்க் கட்சிகளின் விமர்சனங்களூக்குப் பதிலளிப்பதை விட  சொந்தக் கட்சிய்யில் உள்ளவர்களின் குடைச்சலைச் சமாளிக்கவே நேரம் போதவில்லை.

புதிய அரசியல் யாப்பு ஒன்றைஉருவாக்கும் முயற்சியில் அரசாங்கள் இறங்கியுள்ளது."ஒரே நாடு.  ஒரேசட்டம்" என்ற ஒலியை தமிழ் மக்களும் , முஸ்லிம் மக்களும் ரசிக்கவில்லை.    அரசியல் அமைப்புச் சட்டத்தில் தமிழ் மொழிக்கு இருக்கும் வரைபை அமுல் படுத்துவதற்கு தயங்குபவர்களின் புதிய அரசியல் யாப்பு எப்படி இருக்கப்போகிறதென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கூட்டணி இல்லாமல் ஆட்சியை அமைக்க முடியாது, தமிழர்களினதும், முஸ்லிம்களினது வாக்கு இல்லாமல் இலங்கையில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால், தேர்தல் கால பிரசாரத்தின் மூலம் அந்த நிலை மாற்ரி அமைக்கப்பட்ட வரலாரும் இலங்கையில் உள்ளது.

இன்றைய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.  அடுத்து வரும் தேர்தலில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், புதிய தொரு அரசாங்கத்தை அமைப்பதற்கான பலம் எதிர்க் கட்சிகளிடம் இல்லை,  தனி ஒருவனாக ரணில் தலையைக் காட்டுகிறார். ஐக்கிய மக்கள் சக்திக்குள் சஜித், சம்பிக்க எனும்  இரட்டைத் தலைமை இருக்கிறதோ என்ற சந்தேகம் எழூந்துள்ளது. அரசாங்கத்துக்குள் சலசலப்பு இருந்தாலும்  அதன் கட்டுக்கோப்பு  குறையவில்லை. தமிழ் மக்களின் சனத் தொகைக்கு அதிகமான கட்சிகள்  வடக்கு, கிழக்கில் உள்ளன. பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி,  சிரீலங்கா  சுதந்திரக் கட்சி,ஐக்கிய மக்கள் சக்தி,  கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்ரின் அங்கத்தவர்களும் வடக்கு கிழக்கில் உள்ளனர். தமிழ் மக்கலின் வாக்குகள் அதிகப் படியாக ஒரே கட்சிக்கு செல்லும் என்பதில் எது வித உத்தரவாதமும் கொடுக்க முடியாது.முஸ்லிம்  கட்சிகளீன் நிலையும் அதேதான்.

ஜே.வி.பியும் சம்பிக்கவும் சிலவேளை இணையலாம்.  அதர்கான சாத்திய கூறுகள்   மிகவும் குறைவாக உள்ளன. மக்களின்மறதிதான் அரசியல்வாதிகளின் மூலதனம். இன்றைய பொருளாதார சிக்கல்கள் அனைத்தையும் ஒப்பேற்றிய பின்னர்தான் தேர்தலை நோக்கி செல்வதற்குரிய ஏற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கும்.

 இலங்கை,அரசியல்,கொழும்பு,கோட்டா,ரணி,மஹிந்த,சஜித் 

பொருளாதாரம் பின்னடைவு, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு,  அந்நிய செலாவனி குறைபாடு, ஏற்றுமதி பாதிப்பு, தொழிற்சங்கப் போராட்டம் என இலங்கை தடுமாரும் வேளையில்  தேர்தல் சிந்தனையில் சில தலைவர்கள் க்னவு காண்கிறார்கள்.

பலமான எதிர்க் கட்சியாக இருக்க வேண்டிய ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிரிந்துள்ளது. அங்கும் சஜித்துக்கு எதிராக உள்ளக அரசியல் நடைபெறுகிறது. ஜே,வி,பி வழமைபோல சக்திமிக்க கட்சியாக தன்னைக் காட்டிக்கொள்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி சஜித்தை முன்னிறுத்தி அரசியல் களத்தில் நிற்கிறது. சம்பிக்க தனது படையணீயுடன்  ஜ்னாதிபதியாக முயற்சி செய்கிறார்.

எதிர்வரும் தேர்தல் உள்ளூராட்சி சபைத் தேர்தலாகவே இருக்கும் என்றும், அது பாராளுமன்ற அல்லது ஜனாதிபதித் தேர்தல் அல்ல என்றும் பசில் ராஜபக்ச ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி எவருக்கும் அக்கறை இல்லை, அதைப் பற்றி புதுடில்லிக்கு எழுதவும் யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதன் முக்கிய அம்சம் என்னவென்றால், நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க என்ன செய்ய முடியும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதில் அவை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.   உள்ளூராட்சித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அல்லது தோற்றாலும் இலங்கைக்கு அதிக அந்நியச் செலாவணியைக் கண்டுபிடிக்கவோ, கடனை அடைக்கவோ, உரமில்லா உணவுப் பயிரிடவோ உதவப் போவதில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  அனுராத புரத்தில் நடத்திய கூட்டத்தில் ஸ்ரீலங்கா  சுட்தந்திரக் கட்சியும் இடதுசரிகள் சிலரும் கலந்துகொள்ளவில்லை.  முன்னணி அமைச்சர்கலின் ட்தலையையும் அங்கு காணவில்லை. அரசங்கத்தின்பலத்தி வெளிக்காட்டுவதர்காக நடத்துப்பட்ட அநுராதபுரக் கூட்டம் எதிர்பார்த்த  பலனைக் கொடுக்கவில்லை.  முக்கியமான அமைச்சர்கள்  உள்ளிருந்து அரசாங்கத்துகுக் குடைச்சல் கொடுக்கின்றனர்.   எதிர்க் கட்சிகளின் விமர்சனங்களூக்குப் பதிலளிப்பதை விட  சொந்தக் கட்சிய்யில் உள்ளவர்களின் குடைச்சலைச் சமாளிக்கவே நேரம் போதவில்லை.

புதிய அரசியல் யாப்பு ஒன்றைஉருவாக்கும் முயற்சியில் அரசாங்கள் இறங்கியுள்ளது."ஒரே நாடு.  ஒரேசட்டம்" என்ற ஒலியை தமிழ் மக்களும் , முஸ்லிம் மக்களும் ரசிக்கவில்லை.    அரசியல் அமைப்புச் சட்டத்தில் தமிழ் மொழிக்கு இருக்கும் வரைபை அமுல் படுத்துவதற்கு தயங்குபவர்களின் புதிய அரசியல் யாப்பு எப்படி இருக்கப்போகிறதென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கூட்டணி இல்லாமல் ஆட்சியை அமைக்க முடியாது, தமிழர்களினதும், முஸ்லிம்களினது வாக்கு இல்லாமல் இலங்கையில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால், தேர்தல் கால பிரசாரத்தின் மூலம் அந்த நிலை மாற்ரி அமைக்கப்பட்ட வரலாரும் இலங்கையில் உள்ளது.

இன்றைய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.  அடுத்து வரும் தேர்தலில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், புதிய தொரு அரசாங்கத்தை அமைப்பதற்கான பலம் எதிர்க் கட்சிகளிடம் இல்லை,  தனி ஒருவனாக ரணில் தலையைக் காட்டுகிறார். ஐக்கிய மக்கள் சக்திக்குள் சஜித், சம்பிக்க எனும்  இரட்டைத் தலைமை இருக்கிறதோ என்ற சந்தேகம் எழூந்துள்ளது. அரசாங்கத்துக்குள் சலசலப்பு இருந்தாலும்  அதன் கட்டுக்கோப்பு  குறையவில்லை. தமிழ் மக்களின் சனத் தொகைக்கு அதிகமான கட்சிகள்  வடக்கு, கிழக்கில் உள்ளன. பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி,  சிரீலங்கா  சுதந்திரக் கட்சி,ஐக்கிய மக்கள் சக்தி,  கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்ரின் அங்கத்தவர்களும் வடக்கு கிழக்கில் உள்ளனர். தமிழ் மக்கலின் வாக்குகள் அதிகப் படியாக ஒரே கட்சிக்கு செல்லும் என்பதில் எது வித உத்தரவாதமும் கொடுக்க முடியாது.முஸ்லிம்  கட்சிகளீன் நிலையும் அதேதான்.

ஜே.வி.பியும் சம்பிக்கவும் சிலவேளை இணையலாம்.  அதர்கான சாத்திய கூறுகள்   மிகவும் குறைவாக உள்ளன. மக்களின்மறதிதான் அரசியல்வாதிகளின் மூலதனம். இன்றைய பொருளாதார சிக்கல்கள் அனைத்தையும் ஒப்பேற்றிய பின்னர்தான் தேர்தலை நோக்கி செல்வதற்குரிய ஏற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கும்.

Monday, October 28, 2019

விருப்பமில்லாதவருக்கு எதிராக வாக்களிக்கும் நிலையில் உள்ள மக்கள்


தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நாடு. அவர்தம் பாட்டனும் முப்பாட்டனும் கோலோச்சிய நாடு. ஒல்லாந்தரும் போத்துக்கேயரும் அழிக்க முயன்ற நாடு,  பிரிடிஸ்காரன்  பிரித்து வைத்தநாடு உலகில் உள்ள நாடுகளைப்போல் ஜனநாயகக்கடமை எம் நாட்டிலும் நடைபெறுகிறது. ஆனால், தம் அரசாங்கத்தைத் தேர்வு செய்யும் உரிமை இலங்கையில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இல்லை. இலங்கை என்பது நம் தாய்த்திருநாடு என்பது அந்தப் பாட்டுடனே கடந்துபோய்விட்டது.

ஒருநாடு இரண்டு பெயர்கள். இலங்கை என்கின்றனர் தமிழர்கள்.சிங்களவர்கள்  ஸ்ரீலங்கா எனக் கூறுகின்றனர்.  இலங்கை சுதந்திரமடைந்து  71 ஆண்டுகளாகின்றன. 47 வருடங்களாகத் தாம் விரும்பிய அரசாங்கத்தை தமிழ் மக்கள் அமைக்கவில்லை.  தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆதரவளித்து சிங்களக் கட்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே தமிழர்கள் எடுத்தனர். அதனைக் கண்டு சிங்களத் தலைவர்கள் யாரும் வருந்தவில்லை. அதனையே தமது வாக்கு வங்கிக்குப் பயன் படுத்திக்கொண்டார்கள்.

இலங்கையில் தலை நிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வை  சிங்களம் மட்டும்,தரப்படுத்தல்,விகிதாசாரம்  போன்றவை முட்டுக்கட்டைகளாக முடக்கின. சிங்களம்  பெளத்தம் என்பனவற்றுக்கு அரசியலமைப்பு முன்னிலை கொடுத்ததால் தமிழ் மக்களின் வாழ்வு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டது. இலங்கை  சுதந்திரமடைந்தபோது சிங்களத் தலைவர்களும், தமிழ்த் தலவர்களும்  ஒற்றுமையகச் செயற்பட்டனர். ஆட்சி அதிகாரப்போதை தலைக்கேறியதால் சிங்களத் தலமைகள் தமிழர்களை உதாசீனம் செய்யத்தொடங்கியது.  தமக்குரிய அங்கீகாரத்தையும் உரிமைகளையும் கேட்டுப்போராடி வெறுப்படைந்த தமிழ்த்தலைமைகள் தனிநாட்டுக்கோஷத்தை முன்வைத்தன. அதனை வேத வாக்காக ஏற்றுக்கொண்ட வடக்கு கிழக்கில் வாழும்  தமிழ் மக்கள்  47 வருடங்களாகத் தமக்குரிய அரசாங்கத்தைத் தேர்வு செய்யவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாறிமாறி இலங்கையை ஆட்சி செய்தபோதும்  வடக்கு, கிழக்கில் அவற்றால் ஆழமாகக்கால் ஊன்ற முடியவில்லை. ஆனாலும், விகிதாசாரத் தேர்தல் முறையால் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் சிங்களத்தலைமைத்துவக் கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுகின்றன. பிரிந்திருந்த தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாகி  தமிழீழம் என்ற  கோரிக்கையுடம் தேர்தலில் போட்டியிட்ட போது  வடக்கு கிழக்கு தமிழர்கள் ஆதரித்தார்கள். பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் கட்சியாக அங்கீகாரம்  பெற்றது.

எந்தச் சூழ்நிலையிலும் சிங்கள அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கக்கூடாது என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடு. ஆட்சி மாற்ற அரசியலில் சிக்குண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலின் அரசைக் காப்பாற்றியது. அரசியல் கைதிகள் விவகாரம், இராணுவத்தின் வசமுள்ள காணி விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறியமுடியாத நிலை என்பனவற்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள்   வெறுப்படைந்துள்ளனர். அடுத்துவரும் தேர்தலில் கூட்டமைப்பின் பலம் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்கமுடியாதுள்ளது. சம்பந்தன்,மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளும் வெறுப்பான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் தகுதியான ஒரு தலைவரைத் தெரிவு செய்ய முடியாத நிலை உள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இலங்கை அரசியல்  களம்   சுறுசுறுப்படைந்துள்ளது. பிரதான கட்சிகள் தமது வேட்பாளரை களத்தில் நிறுத்தியுள்ளன. சுயேச்சைகளும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். தமக்கு விருப்பமான ஒருவரைத் தேர்வு செய்யும் நிலையில் தமிழர்கள் இல்லை. இலங்கையின் ஜனாதிபதியாக யார் வரக்கூடாது என்பதைத் தீமானிப்பவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள். இந்த உண்மை சிங்களத் தலைமைகளுக்கும் நன்கு தெரியும்.

சமாதானம் என்ற கோஷத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க முதலில்   போட்டியிட்டபோது சமாதானத்தை விரும்பிய தமிழர்கள் அவருக்கு வாக்களித்தனர். சமாதானப்பறவையை வல்லூறு விரட்டியது. அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தல் மீதான ஆர்வம் தமிழ் மக்கள் மத்தியில் இல்லாமல் போனது. சரத் பொன்சேகாவும், மஹிந்த ராஜபக்‌ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது மஹிந்தவுக்கு எதிராக அதிகமான தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.  புலிகளை அழித்த  போரின் வெற்றி அவரை ஜனாதிபதியாக்கியது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியும் மஹிந்தவும் முட்டி மோதியபோது மீண்டும் மஹிந்தவுக்கு எதிராகவே தமிழர்கள் வாக்களித்தனர்.

மைத்திரியின் அரசியல் பின்புலம் அவருடைய கொள்கை என்பனவற்றின்மீது  தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை வைத்தனர். நல்லிணக்கம் எனும் சொல் மயங்கவைத்தது. அரசியல் சதுரங்கத்தில் சிக்கிய ஜனாதிபதி மைத்திரியின் மீதான நம்பிக்கை சிதறியது.  அரசியல் எதிரிகளின் சவால்களை முறியடிப்பதிலேயே  தனது ஆட்சிக்காலத்தை முடிக்கிறார் ஜனாதிபதி மைத்திரி. மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தமிழ் மக்கள் தயாராகிவிட்டார்கள். இப்போது மஹிந்த வின் இடத்தில் அவரது சகோதரர் கோதபாய. சகோதரரை ஜனாதிபதியாக்கி தான் பிரதமராவதே அவரது இலக்கு. ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு எதிராக ஜனாதிபதி களத்தில் நிற்பவர் சஜித்  பிரேமதாச.

பண்டாரநாயக்க குடும்பத்தின் கைகளில் இருந்த இலங்கை அரசியல் இப்போது ராஜபக்‌ஷ குடும்பத்தின் கைகளுக்குச் சென்று விட்டது. அவர்களை எதிர்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி  பிரேமதாசவின் வாரிசான சஜித் தயாராகிவிட்டார். இலங்கையின் ஜனாதிபதியாக யார்வெற்றி பெற்றாலும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்பட மாட்டாது என்பது  உண்மை.