Friday, January 31, 2020

இரண்டாவது சூபர் ஓவரிலும் இந்தியா வென்றது.



டெஸ்ட் கிறிக்கெற் வெற்றி தோல்வியின்றி முடைவது  சகஜம். ஒருநாள், ரி20 போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒரே ஓட்டங்களை எடுத்து சமநிலையில் முடிவது அபூர்வமான சம்பவம். கிறிக்கெற் வரலாற்றில் ஒரே தொடரில் அடுத்தடுத்த போட்டிகள் சமநிலையாவதும், அதில் ஒரே அணி வெற்றி பெறுவதும் இதுவரை நடந்ததே இல்லை. அப்படி ஒரு புதிய வரலாற்றை எழுதி உள்ளது இந்திய அணி.  

ஒருநாள் போட்டிகள் சமநிலையில் முடிந்தால் இரு அணிகளும் வெற்றி - தோல்வி இன்றி போட்டியை முடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், ரி20 போட்டிகள் வந்த பின் அந்த நிலை மாறி உள்ளது. ரி டி20 போட்டிகள் மிக எளிதாக சமநிலையில் முடிகின்றன. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய ரி20 தொடரில் மூன்றாவது, நான்காவது போட்டி அடுத்தடுத்து சமநிலையாகி ஆகி வியப்பை ஏற்படுத்தி உள்ளன. நியூஸிலாந்து வெற்ரி பெற வேண்டிய இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றமை ஆச்சரியமான சம்பவம்


மூன்றாவது ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி வசம் சென்ற போட்டியை முகமது ஷமியின் அசத்தலான கடைசி ஓவரால்  சமநிலை  செய்த இந்திய அணி, அடுத்து சூப்பர் ஓவரில் வென்றது. நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் குவித்த 17 ஓட்டங்கள் அடிக்க  கடைசி இரண்டு பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றி பெற வைத்தார் ரோஹித் சர்மா.

வெலிங்டன்  வெஸ்ட்பாக் மைதானத்தில் நடந்த  போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா எட்டு விக்கெற்களை இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது.   இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. அணி மாற்றம் அதன் படி, இந்திய அணியில் ரோஹித் சர்மா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி அணியில் வாய்ப்பு பெற்றனர். நியுஸிலாந்து அணித்தலைவர் வில்லியம்சன் தோள் பட்டையில் காயம் காரணமாக விளையாடவில்லை. செளதீ அணிக்குத் தலமை தாங்கினார்.


சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல்  ஆகிய இருவரும்  துவக்க வீரர்களாக களமிறங்கினர். சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் ஆட முயற்சி செய்து ஒரு சிக்ஸ் அடித்து, பின் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்., விராட் கோலி 11 ஓட்டங்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 1 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.  சிறப்பாக விளையாடிய  ராகுல் 26 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

  முதல் மூன்று ரி20 களிலும் அசத்திய இந்திய வீரர்கள் ஏமாற்றினார்கள்.
12-வது ஓவரிலேயே பின்வரிசை வீரர் ஷர்துல் தாக்கூர் விளையாட வந்தது இந்திய அணி இன்று பேட்டிங் செய்த விதத்தை வெளிப்படுத்தியது. பாண்டே - தாக்குர் ஆகிய இருவரும் 17-வது ஓவர் வரை தாக்குப்பிடித்து ரன்களைச் சேர்த்தார்கள். 15 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்கள் எடுத்த ஷர்துல் தாக்கூர் பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
 9-வது ஓவரின்போது ராகுல் ஆட்டமிழந்தபின் களமிறங்கிய மணிஷ் பாண்டே  இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். மற்ற வீரர்கள் செய்த தவறை தானும் செய்யாமல் பக்குவமாக விளையாடினார்.  .

19-வது ஓவர் முழுக்க விளையாடிய சைனி சில பந்துகளை வீணடித்தார்.   2 பவுண்டரிகளுடன் 10 ஓட்டங்களை எடுத்தார். கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் எடுத்ததால் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே, 36 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்களும் சைனி 11 ஓட்டங்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். நியூஸிந்து தரப்பில். தரப்பில் சோதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் சிறப்பாகப் பந்துவீசியதால்  ஓட்டங்கள் எடுக்கத் தடுமாறினார்கள் நியூஸிலாந்து தொடக்க வீரர்கள். கப்தில்  4 ஓட்டங்களுடன் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மன்ரோவும் சைஃபர்ட்டும் அற்புதமாக விளையாடி வேகமாக ஓட்டங்களைக்  குவித்தார்கள். 47 பந்துகளில் 64 ஓட்டங்கள் எடுத்த மன்ரோ, ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரில் ப்ரூஸ்  சஹால் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி வீரர்கள் மீண்டும் உற்சாகமாக விளையாடினார்கள். ஆனால் சைஃபர்ட் - டெய்லர் ஜோடியால் நியூஸிலாந்து அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தியது. 19 ஓவர்கள் வரை இருவரையும் பிரிக்கமுடியவில்லை. இதனால் 4-வது ரி20 யை   வெல்லும் நிலையில் இருந்தது நியூஸிலாந்து அணி. 32 பந்துகளில் அரை சதமெடுத்தார் சைஃபர்ட்.
19-வது ஓவரை வீசிய சைனி  4 ஓட்டங் மட்டுமே கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற  7 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை ஷர்துல் தாக்குர் வீசினார்.

முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று  24 ஓட்டங்களில் வெளியேறினார் டெய்லர். அடுத்த பந்தில் மிட்செல்  பவுண்டரி அடித்ததால் நியூஸிலாந்து அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. 4 பந்துகளில் 3 ஓட்டங்கள். அடுத்தப் பந்தில் சைஃபர்ட்டை ரன் அவுட் செய்தார் ராகுல்.
இதற்குப் பிறகுதான் திருப்புமுனை ஏற்பட்டது. சான்ட்னர் 1 ஓட்டம் எடுத்தார். 2 பந்துகளில் 2 ஓட்டங்கள்.

ஐந்தாவது பந்தில் மிட்செல்லின் விக்கெட்டை வீழ்த்தினார் ஷர்துல். இதனால் கடைசிப் பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கிற   நிலைமை ஏற்பட்டது நியூஸிலாந்து அணிக்கு. அந்தக் கடைசிப் பந்தில் சான்ட்னரால் ஒரு ஓட்டம்  மட்டுமே எடுக்க முடிந்தது. 2-வது ஓட்டம் எடுக்க முயன்று அவர் ரன் அவுட் ஆனார். இதனால் ஆட்டம் மீண்டும் சமன் ஆனது.

வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. இரு அணிக்கும் தலா ஒரு ஓவர் தரப்படும். இந்தியா சார்பில் பும்ரா பந்து வீசினார். முதல் 3 பந்துகளில் பவுண்டரி உட்பட 8  ஓட்டங்கள் எடுத்த செய்பெர்ட்,4வது பந்தில் அவுட்டானார். அடுத்த இரு பந்தில் மன்ரோ 5  ஓட்டங்கள் எடுக்க  நியூசிலாந்து  அணி   ஒரு விக்கெற்றை இழ்ந்து.13 ஓட்டங்கள் எடுத்தது.
14 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இந்தியாவுக்கு ராகுலும், கோஹ்லியும் களமிறங்கினர். சவுத்தீ பந்து வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த ராகுல், அடுத்த பந்தில் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்தில் ராகுல் ஆட்டமிழந்தார்.. 4வது பந்தில் கோஹ்லி 2 இரண்டு ஓட்டங்கள்  எடுத்தார். அடுத்த பந்தில் கோஹ்லி பவுண்டரி அடிக்க இந்திய அணி ( ஒரு விக்கெற்றை இழந்து 16 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.   

ரி20 கிரிக்கெற் தொடரில், தொடர்ந்து இரண்டு போட்டிகள் சமனான சம்பவம் இதுவரை நடந்தது இல்லை, மேலும், அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வென்றதும் புதிய வரலாறாக மாறி உள்ளது. நியூசிலாந்து அணி சோகமான சூப்பர் ஓவர் வரலாறை மீண்டும் தொடர்ந்து வருகிறது. நியூசிலாந்து அணி அனைத்து விளையாடிய அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் இதுவரை 15 போட்டிகள் சமநிலையில்  முடிந்துள்ளன. அதிக போட்டிகளை சமநிலை செய்த   அணிகளில் நியூசிலாந்து முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் மெற்கு இந்தியத் தீவுகள்  14 போட்டிகளுடன் உள்ளது.  நியூசிலாந்து அணி 8 சூப்பர் ஓவரில் விளையாடி அதில் ஏழு முறை தோல்வி அடைந்துள்ளது.  . அதே சமயம், இந்திய அணி தான் ஆடிய இரண்டு சூப்பர் ஓவர் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
 சர்வதேச கிரிக்கெட்டில் (ஒரு நாள், ரி20 உள்பட) சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து அணி ஒட்டுமொத்தமாக 7-ஆவது முறையாகவும், தொடர்ந்து 6-ஆவது முறையாகவும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
 முதல்முறையாக 2008-ஆம் ஆண்டில் ஆக்லாந்தில் மே.,.தீவுகள் அணியுடன் ரி20  யில் சூப்பர் ஓவர் முறையை எதிர்கொண்டது நியூஸிலாந்து. அதில்   தோல்வியைத் தழுவியது.
 அதையடுத்து, 2010-ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி20 போட்டியில் சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து வென்றது.
 இலங்கைக்கு எதிரான ரி20  (2012),மே.,தீவுகளுக்கு எதிரான ரி20. (2012), இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் , ரி20   (2019), இந்தியாவுக்கு எதிரான இரண்டு ரி20   (2020) ஆகியவற்றில் தோல்வியைத் தழுவியது நியூஸிலாந்து.


Thursday, January 30, 2020

சூப்பர் ஓவரில் வென்றது இந்தியா


இந்தியா,நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே ஹமில்டனில் நடந்த மூன்றாவது ரி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றது. ரி20 போட்டியின் 20 ஆவது ஓவரின் கடசிப் பந்துவரை நியூசிலாந்தின் பக்கமே வெற்றி இருந்தது. ஒரு பந்து ஒரு ஓட்டம் என்ற நிலையில் ஷமியின் துல்லியமான பந்து வீச்சினால் நியுஸிலாந்துன் விக்கெற்றும் வெற்றியும் தகர்ந்ததன.

20 ஆவது ஓவரில் ஷமி இரண்டு விக்கெற்களை வீழ்த்து நியூஸிலாந்தின் வெற்றியைத் தடுத்தார். சூப்பர் ஓவரில் ரோஹித் தொடர்ச்சியாக இரண்டு சிக்கஸ்கள் அடித்து வெற்றி பெற வைத்தார்.
சூப்பர்  ஓவரில் இரண்டாவதாக இந்தியா துடுப்பெடுத்தாடியது. முதல் நான்கு பந்துகளில் நியூஸிலாந்தின் வசம் வெற்றி இருந்தது. கடைசி இரண்டு பந்துகளிலும் ஹிற்மன் ரோஹித் சிக்ஸார் அடித்ததனால் இந்தியா வெற்றி பெற்றது. நியூஸிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் கடைப் பந்துல் சிக்ஸர் அடித்து இந்தியா வெற்றி பெற்றது. ஆறு சூப்பர் ஓவர்  போட்டிகளில் விளையாடிய நியூஸிலாந்து ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது.
 இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 ஆட்டம் ஹமில்டனில்   நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற   நியூஸிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஆக்லாந்தில் நடைபெற்ற இருரண்டு  ரி20 ஆட்டங்களையும் வென்று 2-0 என ரி20 தொடரில் இந்திய அணி முன்னிலை வகித்ததால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் நியூஸிலாந்து அணிக்கு இருந்தது.
இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. 5-வது ஓவரின் முடிவில் விக்கெற் இழப்பின்றி 42  ஓட்டங்கள் எடுத்தார். பவர்பிளேயின் கடைசி ஓவரை பென்னட் வீசினார். முதல் பந்தில் ராகுல் ஒரு  ஓட்டம் எடுத்தார். கடைசி 5 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா, முதலில் 2 சிக்ஸர்கள் அடித்தார், அடுத்து இரு பவுண்டரிகள், கடைசிப் பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸர் என அதிரடி  காட்டினார்.  . அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 27 ஓட்டங்கள் கிடைத்தன. ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரை சதமெடுத்தார். 6-ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெற் இழப்பின்றி 69 ஓட்டங்கள் எடுத்தது இந்திய அணி.

ரி20 ஆட்டத்தின் பவர்பிளேயில் அரை சதம் எடுத்த முதல் இந்திய வீரர் என்கிற பெருமையையும் ரோஹித் பெற்றார். இதற்கு முன்பு அதிகபட்சமாக தவான் 48 ஓட்டங்கள் எடுத்திருந்தார்
மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் தொடக்க வீரராக 10,000 ர ஓட்டங்கள் எடுத்துள்ளார் ரோஹித் சர்மா. இத்தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது
19 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து ராகுல் 9-வது ஓவரின் முடிவில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஓட்டம் குவிக்கும் வேகம் குறைந்து போனது. கோலிக்குப் பதிலாக 3-ம் நிலை வீரராகக் களமிறங்கிய ஷிவம் டுபே,  தடுமாறினார். 7 பந்துகளை எதிர்கொண்டு 3 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்து பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு முன்பு ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி சில ஓவர்களுக்குத் தடுமாற ஆரம்பித்தது. அவருடைய விக்கெட்டையும் பென்னட் தான் வீழ்த்தினார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகள் விழுந்ததால் அடுத்து வந்த கோலியும் ஷ்ரேயஸ் ஐயரும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினார்கள். ஏழு ஓவர்களுக்குப் பிறகு 11 ஆக இருந்த ரன்ரேட் 11 ஓவர்களுக்குப் பிறகு 9 ஆகக் குறைந்தது. இரு ஓவர்கள் நிதானமாக விளையாடிய கோலி, ஓட்டம் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார்.

16 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்த ஷ்ரேயஸ் ஐயர், சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக விராட் கோலி, 38 ஓட்டங்களில் பென்னட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 27 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்தார் கோலி
20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது. ஜடேஜா 10, மணிஷ் பாண்டே 14 ஓட்டங்கள் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். நியூஸிலாந்துத் தரப்பில் பென்னட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூஸிலாந்து அணிக்கு பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்புக்கு 51 ஓட்டங்கள் கிடைத்தது. கப்தில் 21 பந்துகளில் 31 ஓட்டங்கள்  எடுத்தார். மன்ரோவை 14 ஓட்டங்களில் வீழ்த்தினார் ஜடேஜா.   அவர் சிறப்பாகப் பந்துவீசியது இந்திய அணிக்கு மிகவும் உதவியது. விரைவாக ஓட்டங்கள் குவிக்கக் களமிறக்கப்பட்ட சான்ட்னர் 11 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த கிராண்ட்ஹோம் 12 பந்துகளில் 5 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தாக்குர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்
எனினும் நியூஸிலாந்து கப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணி பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் சவாலாக விளங்கினார். 28 பந்துகளில் அரை சதமெடுத்த வில்லியம்சன், தொடர்ந்து சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்து இந்திய அணிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். அதிலும் உலகின் சிறந்த பந்துவீச்சாளரான பும்ராவைக் குறி வைத்து ஓட்டங்கள் குவித்தார். பும்ரா பந்துவீச்சில் 12 பந்துகளை எதிர்கொண்டு 25 ஓட்டங்கள் எடுத்தார் வில்லியம்சன். அதில் 5 பவுண்டரிகள்
கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவை என்கிறபோது ஷமி பந்துவீசினார். முதல் பந்திலேயே டெய்லர் சிக்ஸர் அடித்ததால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கை இழந்தார்கள். ஆனால், 5 பந்துகளில் 3 ஓட்டங்கள் என்கிற எளிதான நிலையிலிருந்து ஆட்டம் மாறியதுதான் அதிசயம். 3-வது பந்தில் 95 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் வில்லியம்சன். 48 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடித்தார் வில்லியம்சன்

அடுத்து வந்த சைஃபர்ட், 2 பந்துகளிலும் தடுமாறினார். கடைசிப் பந்தை எதிர்கொண்டார் டெய்லர். அப்போது ஆட்டம் சமனில் இருந்தது. 1ஓட்டம் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் கடைசிப் பந்தில் டெய்லரை 17 ஓட்டங்ககளில் வெளீயேற்றுனார். ஷமி. இதனால் ஆட்டம் சமன் ஆகி, சூப்பர் ஓவர் நிலைக்குச் சென்றது
சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி, பும்ராவின் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்கள் எடுத்தது. இந்த முறையும் பும்ராவின் பந்துவீச்சில் 1 ஒரு சிக்ஸரும் 1 பவுண்டரியும் அடித்து அசத்தினார் வில்லியம்சன்.
18 ஓட்டங்கள்  இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி, முதல் 2 பந்துகளில் 3 ஓட்டங்கள் தான் எடுத்தது. பிறகு ராகுல் ஒரு பவுண்டரி அடித்தார். கடைசி இரு பந்துகளில்  10 ஓட்டங்கள் தேவை என்கிற பொறுப்பு ரோஹித் சர்மா வசம் சென்றது.
செளதி வீசிய 5-வது பந்தில் சிக்ஸர் அடித்தார் ரோஹித். கடைசிப் பந்தில் 4 ஓட்டங்கள் தேவை என்கிற நிலையில் மற்றுமொரு சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித் தந்தார் ரோஹித் சர்மா.
யாரும் எதிர்பாராதவிதத்தில் 3-வது ரி0 ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் வென்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரையும் வென்றுள்ளது. இதன்மூலம் நியூஸிலாந்து மண்ணில் முதல்முறையாக டி20 தொடரை வென்றுள்ளது இந்திய அணி
மிகச்சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த ரோஹித் சர்மா, ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்