Sunday, June 23, 2019

இந்தியாவை மிரட்டிய ஆப்கானிஸ்தான்



உலகக் கிண்ண‌ கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 11 ஓட்டங்கள்  போராடி வென்றது.
செüதாம்டண் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி   50 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 224 ஓட்டங்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெற்களையு இழந்து 213 ஓட்டங்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தானை  எளிதாக தோற்கடிக்கலாம் என களம் இறங்கிய  இந்தியா தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தானின் போராட்டம் கிரிக்கெற் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
இரு அணிகளின் பிளேயிங் லெவனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக முகமது ஷமி களமிறக்கப்பட்டார். ஆப்கானிஸ்தான் அணியில், நூர் அலி ஜத்ரான், தெள‌லத் ஜத்ரான் ஆகியோருக்குப் பதிலாக ஹஸ்ரத்துல்லா ஜஜாய், அஃப்தாப் ஆலம் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்

லோகேஷ் ராகுல்,ரோஹித் சர்மா ஆகிய வீரர்கள் களம் இறங்கினர்.  5-ஆவது ஓவரில் ஒரு ஓட்டத்துடன் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்  ராகுலுடன் கோலி ஜோடி சேர்ந்தார் இந்த ஜோடி இந்திய அணியை மீட்கும் என அநஎதிரபார்க்கப்பட்ட போதுப  30 ஓட்டங்களில் ராகுல் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் களம் புக, மறுமுனையில் அரைசதம் கடந்தார் கோலி. இந்தக் கூட்டணி விக்கெட் சரிவை தடுத்தாலும் ஓட்டங்களை விரைவாகச் சேர்ப்பதற்கு தடுமாறியது.29 ஒட்டங்களில் விஜய் சங்கர் ஆட்டமிழந்தார்.

31-ஆவது ஓவரில்67 ஓட்டங்கள் எடுத்த கோலி ஆட்டமிழந்தார். டோனியுடன் கேதார் ஜாதவ் இணைந்தார். அடுத்து வந்த கேதார் ஜாதவ் சற்று நிலைத்து அரைசதம் கடந்தார்.  மறுமுனையில் 3 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள்  அடித்த டோனி ஆட்டமிழந்தார். ஹார்திக் பாண்டியா 7, முகமது ஷமி 1 ஓட்டங்களில் ஆட்டமிழக்க‌ ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக கேதார் ஜாதவ் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 52 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.  50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெற் இழப்புக்கு 224 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா.  குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா  ஆகியோர் தலா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காமல்  இருந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி , குல்பதின் நயீப் ஆகியோர் இரண்டு விக்கெற்களையும்  முஜீப் உர் ரஹ்மான், அஃப்தாப் ஆலம், ரஷீத் கான், ரஹ்மத் ஷா ஆகியோர் தலா ஒரு விக்கெற்றை வீழ்த்தினர்.

225 எனும் இலகுவான  இலக்கை எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கான் வீரர்கள் நிதானமக விளையாடினார்கள். இந்திய வீரர்கள் துல்லியமாக பந்து வீசி கடும் நெருக்கடி கொடுத்தனர்.ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான‌ஹஸ்ரத்துல்லா 10 ஓட்டங்களிலும், க‌ப்டன் குல்படின் நைப் 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.3-வது விக்கெற்றில் இணைந்த‌ ரமத் ஷாவும், ஹஸ்மத்துல்லா ஷகிடியும் கைகோர்த்து தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 26.3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 100 ஓட்டங்களை எட்டியது. இந்த ஜோடி இந்தியாவை கலங்கடித்தது. ஜஸ்பிரித் பும்ரா இந்த ஜோடியை வெளியேற்றினார். ஒரே ஓவரில் ரமத் ஷா 36 ஓட்டங்களுடனும், ஹஸ்மத்துல்லா 21ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.ஆப்கானீஸ்தானின் விக்கெற்கள் சீரான் இடைவெளியில் வீழ்ந்துகொண்டிருக்க முகமது நபி அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அச்சுறுத்தினார்.

கடைசி 3 ஓவர்களில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 24ஓட்டங்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரில் முகமது ஷமி 3 ஓட்டங்களும், 49-வது ஓவரில் பும்ரா 5 ஓட்டங்களும் விட்டுக்கொடுத்து கட்டுப்படுத்தினர். இதனால் கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார். புல்டாசாக வந்த முதல் பந்தை முகமது நபி பவுண்டரி அடித்து இந்திய ரசிகர்களை திகிலடையச் செய்தார். அடுத்த பந்தில் ஒரு ஓட்டம் எடுக்கும் நிலை ஏற்பட்டது,  ஆனால் முகமது நபி ஓடவில்லை.  55 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்த‌  முகமது நபி மூன் றாவது பந்தை  நபி தூக்கி அடிக்க பவுண்டரில் எல்லையில் நின்ற பும்ரா பிடித்து ஆட்டமிழக்கச்செய்தார்.முகமது நபி ஆட்டமிழந்ததும் இந்தியாவின் வெற்றி உறுதியானது.

அப்தாப் ஆலம், முஜீப் ரகுமான் இருவரும் முகமது ஷமியின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெற்களை இழக்க  முகமது ஷமியின் ‘ஹாட்ரிக் விக்கெட் சாதனையோடு இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 213 ஓட்டங்கள் எடுத்தது.5-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணிக்கு இது 4-வது வெற்றியாகும். ஆப்கானிஸ்தான் சந்தித்த 6-வது தோல்வியாகும். பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மொத்தம் 152 பந்துகளில் இந்திய வீரர்கள் ஓட்டமெடுக்கவில்லை. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களை முழுமையாக ஆடிய ஆட்டங்களில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் குறைந்த ஒட்ட எண்ணிக்கை இதுதான்.

 பொதுவாக இங்கிலாந்து மீடியம் பாஸ்ட் பவுலர்களுக்கு ஏற்ற பிட்சுக்கள் கொண்டது. இதில் சில பிட்க்கள் முழுக்க முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். சில பிட்சுக்கள் ஸ்லோ பால் பிட்சுக்கள் ஆகும். இந்தியா ஆப்கானிஸ்தான் விளையாடிய ரோஸ் பவுல் மைதானம் அப்படிப்பட்ட ஸ்லோ பால் பிட்சுகளை கொண்டதுதான். இந்த பிட்சுக்கள் ஸ்பின் பவுலிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 பந்துகளை இங்கு கணித்து விளையாடுவது கடினம். மிக தாமதமாக பந்து ஸ்விங் ஆகும். இந்த பிட்சில் அதிரடியாக ஆடுவது என்பது மிக மிக கடினம். இதனால்தான் கோலியும், ரோஹித் சர்மாவும் கூட ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சில் தடுமாறினார்கள். அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைச் சமாளித்தவர்கள் கூட இவர்களிடம் மண்டியிட இது முக்கியமான காரணம் ஆகும்.

இதற்கு முன் டோனி ஒரே ஒருமுறைதான் இப்படி ஸ்டம்பிட் ஆகி இருக்கிறார். 2011 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இப்படி அவர் அவுட்டானார். மொத்தம் 293 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள டோனி இரண்டு முறை மட்டுமே இப்படி அவுட்டாகி உள்ளார் என்பது ஆச்சர்யமான விஷயம்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கிண்ண‌ லீக் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். இந்திய அணி, 11 ஒட்ட‌ வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இப்போட்டியில் 50வது ஓவரை வீசிய இந்தியாவின் முகமது ஷமி, 3, 4, 5வது பந்தில் முறையே ஆப்கானிஸ்தானின் முகமது நபி, அப்தாப் அலாம், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச்செய்தார்.. இது, இந்த சீசனில் பதிவான முதல் 'ஹாட்ரிக்' விக்கெட்.
* தவிர 32 ஆண்டுகளுக்கு பின், உலகக் கிண்ணப்போட்டியில்    இந்தியா சார்பில் 'ஹாட்ரிக்' சாதனை பதிவானது. கடைசியாக 1987ல் இந்தியாவின் சேட்டன் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றினார்.

* தவிர இது, உலகக் கிண்ண அரங்கில், பதிவான 10வது 'ஹாட்ரிக்'. இதனை 9  பந்துவீச்சாளர்கள் நிகழ்த்தினர். இலங்கையின் மலிங்கா, 2 முறை (2007ல் எதிர்: தென் ஆப்ரிக்கா, 2011ல் எதிர்: கென்யா) இச்சாதனை படைத்தார்.

பாகிஸ்தானின் சக்லைன் முஸ்தாக் (1999, எதிர்: ஜிம்பாப்வே), இலங்கையின் வாஸ் (2003, எதிர்: பங்களாதேஷ்), அவுஸ்திரேலியாவின் பிரட் லீ (2003, எதிர்: கென்யா), வெஸ்ட் இண்டீசின் கீமர் ரோச் (2011, எதிர்: நெதர்லாந்து), இங்கிலாந்தின் ஸ்டீவன் பின் (2015, எதிர்: ஆஸி.,), தென் ஆப்ரிக்காவின் டுமினி (2015, எதிர்: இலங்கை), இந்தியாவின் ஷமி (2019, எதிர்: ஆப்கானிஸ்தான்) தலா ஒரு முறை இச்சாதனையைப்  படைத்தனர்.


Saturday, June 22, 2019

இங்கிலாந்தைத் தோற்கடித்து அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்தது இலங்கை



லீட்சில்   இங்கிலாந்தை எதிர்த்து விளையாடிய இலங்கை  20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.. இலங்கை அணியில் இரு மாற்றமாக திரிமன்னே, ஸ்ரீவர்தனா  ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அவிஷ்கா பெர்னாண்டோ, ஜீவன் மென்டிஸ் ஆகியோர் இடம் பிடித்தனர்.  நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று     முதலில்  துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்து 232  ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 47 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 212  ஓட்டங்கள் எடுத்தது.  

கப்டன் கருணாரத்னவும், விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும் இலங்கையின் இன்னிங்சை தொடங்கினர். இவர்களை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் நிலைகுலைய வைத்தனர். கருணாரத்ன ஒரு ஓட்டத்துடனும் குசல் பெரேரா இரண்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அஷ்விக பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். அஸ்விக பெர்னாண்டோ 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸுடன் மத்தியூஸ் ஜோடி  சேர்ந்தார்.  ஓட்ட வேகம் மந்தமானது 23.2 ஓவர்களில் இலங்கை 100 ஓட்டங்களைத் தொட்டது. 16 ஓவர்களில் மூன்று பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன.  சுழற்பந்து வீச்சாளர்களான அடில் ரஷித்தும், மொயீன் அலியும் இலங்கை வீரர்களைக் கட்டுப்படுத்தினர். ரஷித்தின்   ஒரே ஓவரில் குசல் மென்டிஸ் 46 ஓட்டங்களுடனும்  ஜீவன் மென்டிஸ் ஓட்டமெடுக்காமலும் ஆட்டமிழந்தனர். மெண்டிஸ் கடசி வரை நிலைத்து நின்று ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்கள் எடுத்தார்.


50 ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்த இலங்கை 232 ஒட்டங்கள் எடுத்தது. ஆர்ச்சர்,மாக் வூட் ஆகியோர் தலா மூன்று விக்கெற்களையும்,ரஷீட்  இரண்டு விக்கெற்களையும் வோக்கஸ் ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர். 233 எனும் இலகுவான  இலக்கை எதிர்கொண்டும் களம்  இறங்கிய இங்கிலாந்து  வீரர்கள், இலங்கையின் பந்து வீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் 47 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 121 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.

யார்க்கர் மன்னன் மலிங்கவின் பந்து விச்சில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ (0), ஜேம்ஸ் வின்ஸ் (14)  ஆட்டமிழந்தனர். முந்தைய ஆட்டத்தில் 17 சிக்சர் அடித்து உலக சாதனை படைத்த கப்டன் மோர்கனும் [21]அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இங்கிலாந்து ரசிகர்கள் நம்பி இருந்த ஜோ ரூட் [57] ஜோஸ் பட்லர்[10] ஆகியோரையும் மலிங்க  வெளியேற்றினார். அதன் பின்னர் விளையாட்டு இலங்கையின் பக்கம் சாயத்தொடங்கியது.

மொயின் அலி [16],இ  ரஷீட் [2], ஆர்ச்சர் [1] ஆகியோர் அகில தனஞ்ஜெயவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க இலங்கையின் வெற்றி உறுதியானது. இங்கிலாந்தின் வெற்றிக்காக பென் ஸ்டோக்ஸ் மட்டும் தனி ஒருவனாகப் போராடி ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்கள் எடுத்தார். நான்கு விக்கெற்களை வீழ்த்திய மலிங்க ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆறு போட்டிகளில் விளையாடிய இலங்கைக்கு இது இரண்டாவது வெற்றி. ஆறு போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்துக்கு இது இரண்டாவது தோல்வி.
 

ஜோப்ரா ஆர்ச்சர் 15 விக்கெற்களை வீழ்த்தியுள்ளார். உலகக்கிண்ணப்போட்டியில் அதிக விக்கெற்களை வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வீரரானார். முதலிடத்தில் இயன் போத்தமும், [16 விக்கெற்கெற் 1992] மூன்றாவது இடத்தில் அண்ரூ பிளிண்டாப்பும் , [14 விக்கெற் 2007] உள்ளனர். உலகக்கிண்ணப்போட்டி முடிவதற்கிடையில் ஆர்ச்சர் முதலிடத்துக்கு முன்னேறிவிடுவார்.
மலிங்க வீசிய முதல்  ஓவரின் இரண்டாவது பந்தில் இங்கிலாந்து வீரர் ஜானி போஸ்டோவ் ஓட்டமெடுக்காது கோல்டன் டக்கில்  இரண்டாவது முறையாக ஆட்டமிழந்தார். முன்னதாக தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இம்ரான் தாஹீரின் பந்தில் கோல்டன் டக் அவுட்டானார்.
ஜோரூட்டை ஆட்டமிழக்கச்செய்த மலிங்க உலகக்கிண்ணப் போட்டியில் 50 ஆவது விக்கெற்றை வீழ்த்தினார். சமிந்தவாசை [49] முந்தி நான்காவது இடத்தைப் பிடித்தார். அவுஸ்திரேலியாவின் மெக்ராத் ,[71] இலங்கி வீரர் முரளிதரன்[68]  பாகிஸ்தான் வீரர்  வாசீம் அக்ரம் [55] ஆகியோர்  முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

 
இங்கிலாந்து அணியின் எதிர்பாராத தோல்வியினால் உலகக்  கிண்ணப் போட்டி சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இலங்கை அணியின் திடீர் விஸ்வரூபம் போட்டியைப் பரபரப்பாக்கியுள்ளது. இதனால் அடுத்து வரும் லீக்  ஆட்டங்கள் முக்கியத்துவம் அடைந்துள்ளன.
இந்த ஆட்டம் தொடர்பான புள்ளிவிவரங்கள்:

 இந்த உலகக்  கிண்ணப் போட்டிகளில் விளையாடும் அணிகளுடன் விளையாடிய கடைசி 12 ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் மட்டுமே இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த உலகக்  கிண்ணப்  போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகப் பெற்ற வெற்றி அது. பெரிய அணிகளுடன் இலங்கை அணி கடைசியாக கடந்த வருடம் அக்டோபரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணிக்கு எதிராக.
  உலகக்  கிண்ணப் போட்டிகளில் இலங்கையுடன் விளையாடிய கடைசி 4 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி தோற்றுள்ளது. 1999-ல் இலங்கையை வென்றபிறகு இங்கிலாந்தால் அந்த அணியை வெல்ல முடியவில்லை. 1999 வரை உலகக்  கிண்ணப் ஆட்டங்களில் இலங்கைக்கு எதிராக 7-ல் ஆறில் வென்றுள்ளது இங்கிலாந்து. அதன்பிறகு இலங்கையின் ஆதிக்கம் தான்.
  2015 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு 275 ஓட்டங்களுக்குக் குறைவான இலக்கை 24 முறை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, இருமுறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது. 2016-ல் பங்களாதேஷுக்கு எதிராக 238 ஓட்டங்களை அடைய முடியாமல் தோற்றது.   இலங்கை அடித்த 232 ஓட்டங்களை எட்ட முடியாமல் தோற்றது.
  2015 உலகக்  கிண்ணப் போட்டிக்குப் பிறகு உள்ளூரில் 275 ஓட்டங்களுக்கு குறைவான இலக்கை ஒவ்வொரு முறையும் அடைந்துள்ளது இங்கிலாந்து அணி. 13 ஆட்டங்களில்   முதல்முறையாகத் தோற்றுள்ளது.
  உள்ளூரில் முழுவதுமாக நடைபெற்ற ஒருநாள் ஆட்டங்களில் 233 என்கிற இலக்கை அடைய முடியாத நிலைமை கடந்த 11 வருடங்களில் முதல்முறையாக இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது.

  இந்த உலகக்  கிண்ணப் போட்டிக்கு வரும் முன்பு பாகிஸ்தான் தொடர்ச்சியாக 10 ஒருநாள் ஆட்டங்களிலும் இலங்கை அணி ஆடிய 9 ஆட்டங்களில் 8 ஆட்டங்களில் தோற்றும் இருந்தன. இந்த இரு அணிகளுடமும் இங்கிலாந்து அணி தற்போது தோற்றுள்ளது. 
  6 ஆட்டங்களில் 8 புள்ளிகள் எடுத்து 3-ம் இடத்தில் உள்ளது இங்கிலாந்து அணி. இப்போது பெரிய பிரச்னையில்லைதான். ஆனால்இ அடுத்ததாக  அவுஸ்திரேலியாஇ நியூஸிலாந்துஇ இந்தியா ஆகிய அணிகளைச் சந்திக்கிறது இங்கிலாந்து அணி. கடந்த 27 வருடங்களில் இந்த மூன்று அணிகளையும் உலகக்  கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றதில்லை. இதனால் லீக் சுற்றின் கடைசிக் கட்டத்தில் நெருக்கடியைச் சந்தித்துள்ளது இங்கிலாந்து அணி.


Wednesday, June 12, 2019

அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது இந்தியா


இலண்டன் ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடிய  இந்தியா 36 ஓட்டங்களால் வெற்றி பெற்று அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றா இந்திய அணித்தலைவர் கோலி துடுப்பாட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா ஐந்து விக்கெற்களை இழந்து 352 ஓட்டங்கள் எடுத்தது. 353  எனும் இமாலய இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலியா, 50 ஆவது ஓவரின் கடைசிப்பந்தில் கடைசி விக்கெற்றை இழந்து 316 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது..  முதலில் மெதுவாக விளையாடிய இந்த ஜோடி பின்னர் அதிரடியாக ஆடியது. ஸ்டார்க் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித் அரை சதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் சேர்த்தபோது, ரோகித் சர்மா 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தவானுடன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார்  ஒரு நாள் அரங்கில் 17வது அடித்த தவான் ஸ்டார்க் பந்தில்   117 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
தவான் வெளியேறியதும் ராகுலை  எதிர்பார்த்திருந்தபோது கப்டன் கோஹ்லியுடன், ஹர்திக் பாண்ட்யா இணைந்தார்.ர். கோஹ்லி ஒரு நாள் அரங்கில் 50வது அரை சதம் அடித்தார். பண்டைய்யாவின் அதிரடியால் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்தது. 27 பந்துகளில் 48 ஓட்டங்கள் விளாசிய பண்டைய்யா ஆட்டமிழந்தார். அடுத்து களம்  இறங்கிய டோனி 14 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோஹ்லி 82 ஓட்டங்கள் எடுத்தார்.இந்திய அணி 50 ஓவர்களில்   ஐந்து விக்கெற்களை இழந்து 352 ஓட்டங்கள் எடுத்தது. லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காது 11 ஓட்டங்கள் எடுத்தார்.   அவுஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் இரண்டு விக்கெற்களை வீழ்த்தினார்.
353 எனும் கடின இலக்கை எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியாவின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான அணித்தலிவர் பிஞ்சும், வானரும் களம் இறங்கினர். பிஞ்ச் 36 ஓட்டங்களிலும் வானர் 56 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டீவ் ஸ்மித், கவாஜா ஜோடி இந்திய அணி வீரர்கலின் பந்துவீச்சை சமாளித்து விளையாடியது.   பும்ரா பந்தில் கவாஜா (42) ஆட்டமிழந்தார். ஸ்மித் (69) அரை சதம் கடந்தார். ஸ்டாய்னிஸ் ஓட்டமெடுக்காது வெளியேறினார்.
மேக்ஸ்வெல் 28, கூல்டர் நைல் ,4 கம்மின்ஸ் 8, ஓட்டங்களில் ஆட்டமிழக்க கேரி அரை ஆட்டமிழக்காது 55 ஓட்டங்கள் எடுத்தார்.   அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 316 ஓட்டங்கள் எடுத்தது.  இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், பும்ரா ஆகியோ தலா  மூன்று விக்கெற்களை வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக சதம் விளாசிய தவான் தேர்வு செய்யப்பட்டார். இவ்வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக  இந்திய அணி 352 ஓட்டங்கள் குவித்தது. இதன்மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு அணியின் அதிக பட்ச ஓட்டங்களாக இந்தியாவின் ஒட்டங்கள் பதிவானது. அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 289 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்ச சாதனை.
உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய வீரர் பதிவு செய்யும் 27வது சதம் இதுவாகும். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக சதம் விளாசிய அணி என்ற பெருமையை இந்தியா தட்டிச்சென்றுள்ளது. இதற்கு முன் அவுஸ்திரேலிய வீரர்கள் 26 சதங்கள் விளாசியிருந்தனர்.
  உலகக் கிண்ணப் போட்டியில்  அவுஸ்திரேலியா அணி சேசிங்கில் தொடர்ந்து 19 போட்டிகளில் வென்றிருந்தது. இந்தியாவுக்கு எதிராகத் தோல்வி கண்டதன் பலனாக, 20 ஆண்டு சாதனைக்கு இந்தியா வலுவான முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.  . மேலும், ஐசிசி நடத்தும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து 11 வெற்றிகளை குவித்த அவுஸ்திரேலியாவின் சாதனைக்கும் இந்தியா முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது.
  இந்திய வீரர் பும்ரா 2வது ஓவரின் முதல் பந்தை வீசும் போது வார்னரின் காலில் பட்டு ஸ்டெம்பை உரசியது. ஆனால், பெயில்ஸ் கீழே விழாததால் வார்னர் அவுட்டில் இருந்து தப்பி அரைசதம் அடித்தார். நடப்பு உலகக் கோப்பை தொடர்களில் மட்டும் 5 முறை இதுபோல் நடந்துள்ளது.
 ரோஹித் சர்மா, 20 ஓட்டங்கள் சேர்த்த போது, அவுஸ்திரேலியாவுக்குஸி.க்கு எதிராக 2 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார். இதன் மூலம், குறைந்த இன்னிங்களில் இந்த மைல் கல்லை எட்டிய 2-வது இந்தியர், 4வது சர்வதேச வீரர் என்ற பெருமையை பெற்றார்


Tuesday, June 11, 2019

இங்கிலாந்துக்கு இரண்டாவது வெற்றி

கார்டிப்பில் உள்ள சோபியா கார்டனில் பங்களாதேஷுக்கு எதிராக நடந்த போட்டியில் 106 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக மொயீன் அலிக்கு பதிலாக பிளங்கெட் சேர்க்கப்பட்டார் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50  ஓவர்களில் ஆறு  விக்கெற்களை இழந்து 381 ஓட்டங்கள் எடுத்தது.   ட்ட்ட்   ஓவர்கள் விளையாடிய பங்களாதேஷ் சகல விக்கெற்களையும் இழந்து 281 ஓட்டங்கள் எடுத்தது.
 பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் இருவர் சதம் அடித்தும் இங்கிலாந்து தோல்வியடைந்தது. பங்களாதேஷுக்கு எதிராக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோய் சதம் அடித்தார். இந்தத் உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் மூவர் சதம் அடித்துள்ளனர். மூன்று போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து மூன்றிலும் 300 ஓட்டங்களுக்கு மேல் அடித்துள்ளது.

இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஜானி பேர்ஸ்டோவும் ஜாசன் ரோயும்  முதலில் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி பின்னர் அதிரடியாக விளாசினார்கள். 15 ஆவது ஓவரில் இங்கிலாந்து 100 ஓட்டங்களை எட்டியது. 51 ஓட்டங்களில் பேர்ஸ்டோ ஆட்டமிழக்க இங்கில்லந்து 128 ஓட்டங்கள் எடுத்தது. ஜாசன் ராயுடன் ஜோரூட்  இணைந்தார். அபாரமாக விலையாடிய ரோய் 92 பந்துகளில் சதம் அடித்தார். இது ராயின் ஒன்பதாவது சதம். ஜோரூட் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 121 ஒஅந்துகளுக்கு முகம் கொடுத்த ரோய் 153 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஜோஸ் பட்லரும், கப்டன் மோர்கனும் இணைந்து  பங்களாதேஷ் வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பட்லர் தூக்கியடித்த ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே காணாமல் போனது

பட்லர்   64 ஓட்டங்களும் (44 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), மோர்கன் 35 ஓட்டங்கள்களும் (33 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த வீரர்களும் குறிப்பாக கிறிஸ் வோக்ஸ் 2 சிக்சருடன் 18 ஓட்டங்ரன்களும், பிளங்கெட் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 27 ஓட்டங்களும் (9 பந்து) அடித்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து 386  ஓட்டங்கள் குவித்தது.  இங்கிலாந்து கடைசி 10 ஓவர்களில் மட்டும் 111 ஓட்டங்கள் எடுத்தது..
  387  ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேஷ்  வீரர்கள், குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சகிப் அல் ஹசன்  121 ஓட்டங்கள் அடித்து நம்பிக்கையூட்டினார். முஜிபுர் ரஹ்மான் 44 ஓட்டங்கள் அடித்தார். ஏனையவர்கள் அதற்கும் குறைவான ஓட்டங்களே அடித்தனர். ஆர்ச்சர், பிளங்கெற் ஆகியோர் தலா மூன்று விக்கெற்களை வீழ்த்தினர்.


பங்களாதேஷ் 48.5 ஓவர்களில்  சகல விக்கெற்களையும் இழந்து 280 ஓட்டங்கள் எடுத்தது.. இங்கிலாந்து அணி 106  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது லீக்கில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.   2015-ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில்  பங்களாதேஷிடம் இங்கிலாந்து தோல்வியடைந்தது. பங்களாதேஷுக்கு  இது  இரண்டாவது தோல்வியாகும்.