Showing posts with label ராகுல்காந்தி. Show all posts
Showing posts with label ராகுல்காந்தி. Show all posts

Sunday, September 15, 2024

தமிழகத்தைப் புரட்டிப்போட விஜய் வகுக்கும் அரசியல் வியூகம்

தமிழ் சினிமாவில் அதி உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் அரசியலில் களம்  இறங்குவது  முடிவாகிவிட்டது. தனது ரசிகர்கள் கட்சித் தொண்டர்களாக  மாறுவார்கள் என்ற நம்பிக்கையில் அரசியல் கட்சியை தேர்தல் திணைக்கள‌த்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய் ஆரம்பித்துள்ள புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்டமைப்பு பணிகள், நிர்வாகிகள் நியமனம், கொடி அறிமுகம், உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 23ஆம் திகதி நடத்த அக்கட்சி திட்டமிட்டது.  இதற்காக கடந்த மாதம் மாநாடு நடத்த  தமிழக அரசிடம் முறையாக அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

பதுகாப்பு சம்பந்தமான  வழமையான  கேள்விக்கொத்து விஜயின் கட்சி நிவாகிகளிடம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயின் கட்சி மாநாட்டுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதி கொடுக்க மறுப்பதாக தமிழக பாரதீய ஜனதாக் கட்சிப் பிரமுகர்கள்  குற்றம் சாட்டினர். இந்த இழுபறியில்   கட்சியின் மாநாடு  அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயின் கட்சிக் கொள்கை  என்ன‌?,  இலட்சியம் என்ன?, கோட்பாடு என்ன? என எவருக்கும் தெரியாது. கட்சியின்  பிரமாண்டமான மாநாட்டில் விஜய் அறிவிப்பார் எனச் சொல்லப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றித் தெளிவாகத் தெரிந்த  பின்னரே  விஜய் எப்படிப் பயணிக்கப் போகிறார் என  அரசியல் அரங்குகுத் தெரிய வரும்.

விஜய் தொடங்கிய அரசியல் கட்சியால்  பெரிய கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜய் சேரப்போவதாகவும் வதந்தி பரவியது.சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியைப் பெற்ற எடப்பாடி அவரைத் தூக்கி எறிந்தார்.  முதலமைச்சர் கனவில் எடப்பாடி வாழ்கிறார். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் விஜய் என அவரது ரசிகர்கள் சபதம் செய்துள்ளனர். ஆகையால் அந்தக் கூட்டணி ஆரம்பத்திலேயே  புசுபிசுத்துவிட்டது.

விஜயுடன் கூட்டணி சேர சீமான் ஆர்வமாக  உள்ளார். தம்பியுடன் கைகோர்க்கப் போவதாக வெளிப்படையாக சீமான் அறிவித்தார்.  விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கும் விஜயின் கட்சியுடன்  சேர  ஆசை உள்ளது. பாரதீய ஜனதா மிகுந்த எதிர் பார்ப்புடன்  உள்ளது.தற்போதைக்கு யாருடனும் சேர விஜய் தயாராக  இல்லை. ஆனால்,  கூட்டணி இல்லாமல் அரசியலில் பிரகாசிக்க முடியாது என்பதையும் விஜய் அறிவார்.

திராவிட முன்னேற்றச்க் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,காங்கிரஸ், பாரதீய ஜனதா  போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் சீமானை ஆதரிக்கிறார்கள். அந்த வாக்காளர்கள் விஜயை நோக்கித் திரும்பும் சாத்தியம்  உள்ளது.  விஜயைச் சுற்றி ரசிகர் பட்டாளம்  உள்ளது.  அந்தப் பட்டாளம் வாக்காளர்களாக மாறுவார்கள் என்பதை  உறுதிப்படுத்த முடியாது. எம்.ஜி.ஆரின் ரசிகர்களும், என்.டி ராமராவின் ரசிகர்களும் தாம் விரும்பிய நடிகர்களை  முதலமைச்சர் க‌திரையில் இருத்தி அழகு  பார்த்தார்கள். விஜயின் ரசிகர்களுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம்  கிடைப்பது அபூர்வம்.

விஜய்க்கு அடுத்தபடியாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மட்டுமே தெரிந்த முகமாக  இருக்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் நால்வர் விஜயின் கட்சி  மாநாட்டு மேடையில் ஏறுவார்கள் என செய்திகள் கசிந்துள்ளன. வட தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கியமானவராக ஒரு காலத்தில் திகழ்ந்த செஞ்சி ராமச்சந்திரனை தனது கட்சிக்கு வருமாறு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனேகமாக அவர் அவைத் தலைவராக நியமிக்கப்படக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது. 

 இப்போது வரை இது விஜய் கட்சி என்று பலராலும் சொல்லப்படுகிறது. அதேபோல கட்சி முழுவதும் விஜய் ரசிகர்கள்தான் நிறைந்துள்ளனர். ரசிகர்களை மட்டுமே வைத்துக் கொண்டு பெரிதாக சாதிக்க முடியாது. தொண்டர்கள் தேவை.அதை விஜய்யும் உணர்ந்துள்ளார். அந்தக் கட்டமைப்பை உருவாக்க அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களால்தான் முடியும். அதாவது சிறந்த வழி நடத்தல் தேவைப்படும்.

புஸ்ஸி ஆனந்த் மட்டுமே தற்போது விஜய் கட்சியில் அனுபவம் வாய்ந்த ஒரு அரசியல் தலைவராக இருக்கிறார். அவரைத் தவிர்த்துப் பார்த்தால்  பெரிய தலைவர்கள் யாரும் இல்லை. இதனால் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார். அதில் முதல் நடவடிக்கையாக கட்சியில் மூத்த தலைவர் ஒருவரை சேர்த்து கட்சிக்கு தனி இமேஜை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவரது திட்டத்தின் முதல் படிதான் செஞ்சி ராமச்சந்திரன் என்று சொல்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செஞ்சி ராமச்சந்திரன். பழுத்த அரசியல்வாதி. திமுகவில் நீண்ட காலம் இருந்தவர். பின்னர் வைகோ மதிமுகவைத் தொடங்கியபோது அதில் இணைந்து செயல்பட்டார்.

அதன் பின்னர் 2014ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இவரும் அமைதியாகி விட்டார். இப்போது கிட்டத்தட்ட அரசியலில் மறக்கப்பட்ட ஒரு தலைவராக இருந்து வருகிறார். லோக்சபா எம்பியாக இருந்தபோது மறைந்த வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்தவர் செஞ்சி ராமச்சந்திரன்.

செஞ்சி ராமச்சந்திரன் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட, அரசியல் நீக்கு போக்குகள் தெரிந்த, திறமையான, தொண்டர்களை கட்டியணைத்துக் கொண்டு செல்லக் கூடிய ஒரு தலைவர். குறிப்பாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவை அனைத்தும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வந்து சேர்ந்தால் அது கட்சிக்கு மிகப் பெரிய பூஸ்ட்டாக அமையும் என்பது விஜய்யின் கணக்கு.

வடக்கில்தான் மிகப்பெரிய வாக்கு வங்கியாக வன்னியர் சமுதாய மக்கள் உள்ளனர். இவர்கள் ஏற்கனவே பாமக, தேமுதிக என பிரிந்து நிற்கிறார்கள். இதில் தேமுதிக வசம் உள்ள வாக்குகளை தன் பக்கம் இழுக்கும் முகமாகவே தனது கோட் படத்தில் விஜயகாந்த்தை கொண்டு வந்தார் விஜய் என்றும் ஒரு பேச்சு உள்ளது. விஜயகாந்த் அபிமானிகள் தன் பக்கம் ஈஸியாக வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் விஜய்க்கு உள்ளது. தேமுதிகவும் கூட விஜய்க்கு சாதகமாகவே உள்ளது. ஆரம்பத்தில் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கவும் கூட விஜய் தயங்க மாட்டார் என்றும் கணக்கிடப்படுகிறது. 

விஜயகாந்த் கூட ஆரம்பத்தில் பாமகவின் வாக்கு வங்கியைத்தான் பதம் பார்த்தார். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. பாமக வாக்கு வங்கியிலிருந்து பலரும் பிரிந்து தேமுதிக பக்கம் வந்தனர். இப்போது வரை அவர்கள் தேமுதிகவுக்கு விசுவாசமாக உள்ளனர். அதே பாணியில் தானும் வளர விஜய் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அதன் பொருட்டே செஞ்சி ராமச்சந்திரனை அவர் முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள். இதிலும் கூட விஜயகாந்த் பாணியைத்தான் கையில் எடுத்துள்ளார் விஜய்

செஞ்சி ராமச்சந்திரனைத்  தொடர்ந்து மேலும் பல அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் கட்சியில் இணைவார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள பல மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைய விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் உள்ளன. இவை எல்லாமே  மாநாட்டின்போது தெரிய வரும் என்றும் சொல்லப்படுகிறது. தன்னுடன் பயணிக்கப் போகும் தலைவர்களுடன் மாநாட்டு  மேடையில் விஜய் தோன்றுவார் என்றும் சொல்லப்படுகிறது.

 தமிழக வெற்றிக் கழகம் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி.   இதுதான் தற்போதைய நிலை. வரும் தேர்தல்களில் தவெக போட்டியிட்டு தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வாக்கு சதவீதத்தைப் பெறும்போதுதான் அக்கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்து கிடைக்கும்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து விட்டுத்தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால் அரசியல் கட்சியாக தங்களை அறிவித்துக் கொண்டோர் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 4-ஏ பிரிவின் கீழ் உள்ள சலுகைகளை பெற விரும்புவோர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துதான் போட்டியிட வேண்டும்.

ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும்போது அவர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் கிடைக்கும். முக்கியமாக சின்னம். இப்படி பதிவு செய்து போட்டியிடும் கட்சிகளுக்கு, தேர்தல் சின்னம் ஒதுக்கீட்டின்போது சுயேச்சைகளை விட முன்னுரிமை கிடைக்கும்.  மேலும் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அல்லது தேசிய கட்சியாக மாறும்போது அவர்களுக்கு அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும்.

மக்கள் நீதி மய்யம், புதிய தமிழகம்,  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்,தேசிய முற்போக்குத் திராவிட கழகம்,மதிமுக,இந்திய ஜனநாயகக் கட்சி,இந்திய தேசிய லீக்,அமமுக,கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்  உட்பட 33 கட்சிகள் பதியப்படாமல்  உள்ளன.

ரமணி   

   15/9/24

Monday, July 22, 2024

மக்களின் முடிவுக்கு எதிராக நீதிமன்றக் கதவைத் தட்டும் தலைவர்கள்

  தமிழகத்தில் நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தல்முடிவை எதிர்த்து  .பன்னீர்ச்செல்வம், நைனா நாகேந்திரன் ,விஜயபிரபாகரன் ஆகிய மூவரும்  நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

  விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி,  தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.  ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வமும்,  திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நைனா நாகேந்திரனும் அத்தொகுதிகளில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில்  திராவிட முன்னேற்றக் கூட்டணி 39  தொகுதிகளிலும்  வெற்ரி பெற்றது.  புதுச்சேரியிலும் திமுக  கூட்டணி வெற்றி பெர்ரது.

  தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.   தேர்தல் வழக்கு தொடர கடைசி நாளில் மூவரும் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

 விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும், காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் விஜய பிரபாகரனை விட 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நவாஸ் கனி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருவரும்   தத்தமது தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

 ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற நவாஸ் கனி வேட்புமனு தாக்கலின் போது சொத்துக்கணக்கை முறையாக காட்டவில்லை. அதனால் அவரது வெற்றி செல்லாது எனக் கூற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் . பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.

விருதுநகர்   தொகுதியில் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். இவரை தொடர்ந்து தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று  4,379 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.  பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகாவோ 1,66,271 வாக்குகளை பெற்று 3ஆவது இடத்தை பெற்றார். மாணிக்கம் தாகூருக்கு கடுமையான நெருக்க்கடி கொடுத்தார் விஜய பிரபாகரன். கடைசியில் நடந்த ட்விஸ்ட்டாக விஜய பிரபாகரன் குறைந்த வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதுகுறித்து சென்னையில் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை. அவர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். உணவு இடைவேளை முடிந்ததும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 13 ஆவது சுற்று வரை விஜய பிரபாகரன் முன்னிலையில் இருந்தார். அந்த சுற்றில்தான் முறைகேடு நடந்தது.

 அது போல் நள்ளிரவில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மற்ற தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் இவ்வளவு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சூழ்ச்சி! விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் செல்போனை அணைத்து வைப்பதாக அவர் தெரிவித்திருந்தார் இவ்வாறு பிரேமலதா.

இதுகுறித்து மாணிக்கம் தாகூர் விளக்கமளிக்கையில், வாக்கு எண்ணிக்கையின் போது விஜய பிரபாகரன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் இருந்தனர். உணவு இடைவேளையின் போது முறைகேடு நடந்ததாக சொல்கிறார்களே இதை அப்போதே கேட்டிருக்கலாமே! அவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டுதானே இரவு 7 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்தை விட்டு புறப்பட்டனர். சின்ன பசங்க விளையாட்டில் அம்மாவிடம் புகார் கூறி அவர் பஞ்சாயத்துக்கு வருவது போல் விஜய பிரபாகரன் செய்துள்ளார். தோல்வியை ஒப்புக் கொள்ள மனமில்லாமல் அவர்கள் இது போல் என் மீது பழி போடுகிறார்கள் என மாணிக்கம் தாகூர் தெரிவித்திரு்நதார்.

 இந்த நிலையில் இந்த முறைகேடு குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கும் இமெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டதாக பிரேமலதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில்   சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து விஜய பிரபாகரன் வழக்கு தாக்கல் செய்தார்.

ராஜ்யசபாவில் பெரும்பான்மையை இழந்தது பாஜக..

ராஜ்யசபா எனப்படும் மாநிலங்களவையில் பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் பறி போயுள்ளதால் மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிமுக மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை தங்கள் பக்கம் வளைத்து அவர்களது ஆதரவுடன்தான் எதையும் செய்ய முடியும் என்ற நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

பாஜக சார்பில் உறுப்பினர்களாக இருந்த ராகேஷ் சின்ஹா, ராம் சகல், சோனால் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகியோரது பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் பாஜகவின் பலம் ராஜ்யசபாவில் குறைந்துள்ளது. இவர்கள் நான்கு பேருமே நியமன உறுப்பினர்கள் ஆவர். இவர்களது ஓய்வால் தற்போது ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 86 ஆக குறைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 101 ஆக குறைந்துள்ளது. 

ராஜ்யசபாவில் தற்போதைய உறுப்பினர் எண்ணிக்கை 225 ஆகும். மொத்த பலம் 245 ஆகும். தற்போதைய பலத்தை வைத்துப் பார்த்தால் பெரும்பான்மைக்குத் தேவை 113 பேர் ஆகும். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே தற்போது வெறும் 101 பேர்தான் உள்ளனர் என்பதால் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மறுபக்கம் இந்தியா கூட்டணியில் மொத்தம் 87 உறுப்பினர்கள் உள்ளனர். அதிகபட்சமாக காங்கிரஸுக்கு 26, திரினமூல் காங்கிரஸுக்கு 13 எம்பிக்கள் உள்ளனர். திமுக, ஆம் ஆத்மிக்கு தலா 10 பேர் உள்ளனர். 

இதுவரை பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வந்த பிஜூ ஜனதாதளம் (9 எம்.பிக்கள் உள்ளனர்) தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை. அதற்கு ஆதரவாகவும் இல்லை. எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று அது கூறி விட்டது.  இதனால் அந்தக் கட்சியின் எம்.பிக்கள் ஆதரவையும் பாஜக இழந்துள்ளது.

இப்போது என்ன சிக்கல் என்றால் சட்ட மசோதாக்களை நிறைவேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பலம் இல்லை. பிற கட்சிகளின் ஆதரவு இருந்தால்தான் மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்ற நிலையில் பாஜக உள்ளது.

  அதிமுக,, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவற்றைதயவை நாட வேண்டிய நிலையில் பாஜாகா உள்ளாது.  இருவருமே முன்னாள் கூட்டாளிகள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்புதான் கூட்டணியிலிருந்து விலகியவர்கள். அதேசமயம், இவர்களின் மாநிலத்  தலைமை, தேசியத் தலைமையுடன் நல்லுறவில்தான் இருக்கிறார்கள். 

இதில் அதிமுகவிடம் 4 உறுப்பினர்கள் உள்ளனர். ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் வசம் 11 உறுப்பினர்கள் உள்ளனர். மற்றவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதை விட, இந்த இரு கட்சிகளையும் தங்களுக்கு ஆதரவாக திருப்புவது பாஜகவுக்கு எளிதானது. எனவே இவர்களின் ஆதரவை வைத்துத்தான் ராஜ்யசபாவில் நிலைமையை சமாளிக்க பாஜக முயலும் என்று தெரிகிறது.

இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சில பல நிபந்தனைகளுடன் பாஜகவுக்கு ஆதரவளிக்க முன்வரலாம். ஆனால் அதிமுக இறங்கி வருமா என்று தெரியவில்லை. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிடம் ஆட்சியைப் பறி கொடுத்த கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பெரிய வன்முறையே அங்கு தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களால் அரங்கேற்றப்பட்டது. அதற்கெல்லாம் பாஜக நிவாரணம் தேடிக் கொடுத்தால், மேற்கொண்டு நாயுடு தரப்பிலிருந்து தொல்லைகள் வராமல் இருந்தால் ஜெகன் மோகன் ரெட்டி மாநிலங்களவையில் பாஜகவை ஆதரிக்க முன்வரலாம் என்று தெரிகிறது.

  லோக்சபாவில் சந்திரபாபு நாயுடு ஆதரவு, ராஜ்யசபாவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு என பாஜகவின் நிலை விசித்திரமானதாக மாறியுள்ளது.

ராஜ்யசபாவில் 12 நியமன உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை நியமன உறுப்பினர்களாக்கியதே மோடி அரசுதான். எனவே அவர்கள் மோடி அரசுக்கே ஆதரவாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

லோக்சபாவிலும் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன்தான் அங்கு பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தற்போது ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கே பெரும்பான்மை பலம் இல்லாமல் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, June 9, 2024

இந்தியாவில் தொங்கு நாடாளுமன்றம் கூட்டணியின் உதவியுடன் பிரதமராகிறார் மோடி


 இந்திய அரசியல் வரலாற்றில்  மூன்றாவது முறை பிரதமராகும்  இரண்டாவது அரசியல் தலைவர் என்ற சாதனையை  மோடி  ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக நேரு மூன்று முறை பிரதமராக கடமையாற்றி உள்ளார்.

வாஜ்பாய், அத்வானி ஆகியோரை விட கவர்ச்சிகரமான தலைவராக உள்ளார் மோடி. தனிப் பெரும்பன்மையுடன் கடந்த 10 வருடங்களாக பிரதமராக வலம் வந்த மோடி, இம்முறை அறுதிப் பெரும்பான்மை  இல்லததால்  கூட்டனிக் கட்சிகளின் தயவுடன் பிரதமராகிறார்.

பாரதீய ஜனதாக் கூட்டணி 292 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான  கூட்டணி 243 தொகுதிகளிலும்  வெற்றி பெற்றன. மத்தியில் ஆட்சி செய்வதற்கு அருதிப் பெருமபான்மை 272 ஆகும். பாரதீய ஜனதா 240  தொகுதிகளில் மட்டும்  வெற்றி பெற்றதால்  கூட்டணிக் கட்சிகளின் தயவை நாடி உள்ளார். 9 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை  மோடி பிரதமராவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை ஜனதிபதி  ரணில் விக்ரமசிங்கே நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.     8000க்கும் மேற்பட்ட பிரமுகர்களும், பாஜக தொண்டர்களும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது

 பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமாரும், ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஆதரவு அளிப்பதாக கூறி உள்ளனர்.

சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார் ஆகிய  இருவரும் பழுத்த அரசியல்வாதிகள். அவர்களின் நிபந்தனைகள்   மோடிக்கு நெருக்கடியை கொடுக்கும் என்பதில் சந்தேகம்  இல்லை

. சந்திரபாபு நாயுடுவிடம் 16 எம்பிக்களும், நிதிஷ் குமாரிடம் 12 எம்பிக்களும் உள்ளனர். இதனால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.

 சந்திரபாபு நாயுடு லோக்சபா சபாநாயகர் பொறுப்பு உள்பட சில முக்கிய துறையின் அமைச்சர் பதவியை கேட்கிறார். அதேபோல் நிதிஷ் குமாரும் சபாநாயகர் பதவி மீது கண்வைத்துள்ளதோடு முக்கிய இலாக்காக்களை குறிவைத்துள்ளார். இதுதவிர நிதிஷ் குமார் பீகாருக்கும், சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கும் சிறப்பு அந்தஸ்து கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாஜக தர்மசங்கடத்துக்கு ஆளாகி உள்ளது. இவர்களின் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைப்பது சிரமம் என்பதால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது இல்லாவிட்டால் அவர்களை சமாதானம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.

  ஆந்திராவை பொறுத்தவரை நீண்டகாலமாக சிறப்பு அந்தஸ்து கேட்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா புதிய மாநிலமாக 2014ல் பிரிக்கப்பட்டது. அப்போது ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு வழங்கப்பட்டது. இது ஆந்திராவுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆந்திராவை மேம்படுத்த சிறப்பு அந்தஸ்து வழங்க தொடர்ந்து சந்திரபாபு நாயுடுகேட்டார். கடந்த 2014 முதல் 2018 சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருந்தார். ஆனால் மத்தியில் ஆண்ட பிரதமர் மோடி அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை. இதனால் அவர் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினார்.

 ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால் பாஜக சிறப்பு அந்தஸ்து கொடுக்காத பட்சத்தில் சந்திரபாபு நாயுடுஇந்தியா' கூட்டணிக்கு மாறலாம்.இதனால் பாஜக இக்கட்டில் சிக்கி உள்ளது.  பீகாரின் நிதிநிலைமையை மேம்படுத்த நிதிஷ் குமாரும் சிறப்பு அந்தஸ்து கேட்கிறார்.

 சிறப்பு அந்தஸ்து என்பது சமூக பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் மாநிலங்கள் மற்றும் நிலஅமைப்பு சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மாநிலங்களுக்கு ஒரு அந்தஸ்தாகும். மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு தான் வழங்கும். பாஜக கூட்டணிக்கு தாவும் உத்தவ் தாக்கரே? ‛இந்தியாகூட்டணி மீட்டிங் புறக்கணிப்பு.. பெரிய ட்விஸ்ட் இந்த சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களுக்கு வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு சார்பில் அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்.   அசாம், இமாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், உத்தரகாண்ட், தெலுங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளன.

கூட்டணி கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த தொடங்கியுள்ளன. அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக குரலெழுப்பியுள்ளன. பாஜக ஆட்சியமைக்க முக்கிய காரணமாக இருக்கும் ஐக்கிய ஜனதாளத்தின் தலைவர்களின் ஒருவரான கே.சி.தியாகி, "அக்னிபாத் திட்டம் எதிர்மறையான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் பொது சிவில் சட்டம்(UCC) குறித்து அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய ஆலோசனைகளை பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.  லோக் ஜனசக்தி கட்சியும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்த கட்சியின் தலைவர் சிரக் பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

 பாஜக ஆட்சி அமைக்காத நிலையில், அதற்குள் கூட்டணி கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த தொடங்கியருப்பது பாஜக தலைவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  ராகுல் காந்தியைத் தோற்கடித்த  ஸ்மிருதி ராணி, இம்முறை காங்கிரஸ் கட்சித் தொண்டரிடம் தோல்வியடைந்துள்ளார்.   கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட  இம்முறை முறைந்த வக்குகளையே மோடி பெற்றுள்ளார். அதிக  தொகுதிகளில்  பாரதீய ஜனதா வெற்றி பெற்றாலும் அதன் செல்வாக்கு சரிந்துள்ளது.  11 அமைச்சர்கள்  தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். கடந்த  தேர்தலை விட அதிக தொகுதிகளில்  வெற்றி பெற்ற காங்கிரஸ்  வளர்ச்சியடைந்துள்ளது.அதிக   இடங்களில் காங்கிரஸ் கட்சி  வெற்றி பெற்றதால் தொண்டர்கள்  மகிழ்ச்சியாக  இருக்கின்றனர்

தமிழகத்தில்  அசைக்க முடையாத சக்தியாக ஸ்டாலின்

தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் 40 ம் நமக்கே  என்ற கோஷத்துடன், திமுக, அதிமுக, பாரதீய ஜனதா ஆகிய மூன்று கட்சிகளும் களம்  இறங்கின. தமிழகத்தில் தாமரை மலரும் என அண்ணாமலை அடித்துச் சொன்னார். தமிழக மக்கள்  பாரதீய ஜனதாவைப் புறம் தள்ளுவார்கள் என ஸ்டலின்  பிரசாரம் செய்தார். எப்படித்தான் பிரசாரம் செய்தாலும் தமிழகத்தில் தாமரைக்கு இடம்  இல்லை எனப்தை  மக்கள் பகிரங்கப் படுத்தியுளனர்.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த முறை தமிழகத்தில் பா...வின் குரல் ஓங்கி ஒலித்தது. அதுவும், பொதுவாக ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகைத் தரும் நாட்டின் பிரதம அமைச்சர், தேர்தலுக்கு முன்பு கடந்த 4 மாதங்களில் மட்டும், 8 முறை தமிழகத்திற்கு வந்தார். கடைசியாக தியானம் செய்வதற்கு வந்ததையும் சேர்த்தால், சாதனை அளவாக 9 முறை தமிழகம் வந்திருக்கிறார் மோடி. அப்படியொரு திடீர் பாசம் தமிழகத்தின் மீது பாஜக-விற்கு வந்தது, தேர்தல் காரணமாக என்றால் தவறில்லை.

இந்த முறை தேர்தலில், தமிழகத்தில் சாதித்துக் காட்ட வேண்டும் என்பதற்காக, மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒரு படையே களமிறங்கியது. தி.மு.., .தி.மு..விற்குச் சவால்விடும் வகையில், வீடு, வீடாக ஆதரவு கோருவது முதல் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி விடயங்களைப் பெரிதாக்குவது வரை, அனைத்திலும், திராவிட கட்சிகளுடன் மல்லுக் கட்டியது. அமைச்சர் முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை, தமிழக பாரதீய ஜ்னதாத் தலைவர்  அண்ணாமலை ஆகியோர் படுதோல்வியடைந்தனர்.

 பா...வின் கூட்டணி கட்சிகளின் பிரமுகர்களான   பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், தேவநாதன், செளமியா அன்புமணி, ராதிகா சரத்குமார் ஆகியோரும் தோல்வியடைந்தனர்.

  தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கிய பிறகு, 19 இடங்களில் பா... நேரடியாகப் போட்டியிட்டது. அதுமட்டுமின்றி, பாரிவேந்தர், ஏசி சண்முகம், தேவநாதன், ஜான் பாண்டியன் ஆகிய கட்சித் தலைவர்களும் பா...வின் சின்னத்தில் என தாமரை சின்னத்தில் மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர்.

தாமரை சின்னத்தில் போட்டியிட்டவர்களில், தமிழகத்தில் மட்டும் இந்த முறை 11 பேர் கட்டுப்பணத்தை இழந்தனர்.    தாமரை சின்னத்தில் போட்டியிட்ட 23 இடங்களில், 9 இடங்களில் 2-ம் இடத்திற்கு வந்தனர்.

தனிப் பெரும் தலைவராக  உருவெடுக்க முயற்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி  தொடர்ந்து 10 ஆவது தேர்தலில் படுதோல்வியடைந்தார். திமுகவில் இருந்து  பன்னீர்ச்செல்வம்  வெளியேறியது, பாரதீய ஜனதாக் கூட்டணியில் இருந்து வெளியேரியது போன்ற காரணங்களினால்  அதிமுக தோல்வியடைந்தது.

அதிமுக, பாரதீய ஜனதா ஆகிய  இரண்டு கட்சிகளின் தோல்விக்கு  அண்ணாமலைதான் முக்கிய காரணம். பாரதீய ஜனதாவின் மூத்த த்லைவரான எச். ராஜா , தனது கட்சியின் தோல்வியை பட்டாசு கொளுத்திக் கொண்டாடினார்.

மோடி 1.0, மோடி 2.0 போன்று இல்லாமல் மோடி 3.0 அமைச்சரவை அமைப்பதில் பாஜக-விற்கு ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. ஏனெனில், சந்திரபாபு  நாயுடு , நிதீஷ்குமார் அகியஇரு பெரும் மூத்த தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் வகையில், அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க வேண்டிய நிலைக்கு மோடியும், அமித் ஷா வும்  தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தேர்தல் முடிவுகளுககுப் பிந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் கூட்டத்தில், இந்தச்சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படுமா, கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படுமா போன்ற பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், டெல்லியில் இருந்து வரும் தகவல்கள், கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்வதில் பாஜக தலைமை உறுதியாக இருப்பதாகவும், மோடி தலைமையில் ஆட்சி அமைத்தே ஆக வேண்டும் என்பதால்,  கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படும் என்றே தெரிகிறது.

முதல் இரண்டு காலக் கட்டங்களைப் போல், மோடி 3.0,  ஆட்சியில், பிரதமர் மோடியால் முழு வேகத்துடன், அவர் பாணியில் நினைத்ததை நிறைவேற்றும் வகையில் செயல்பட முடியுமா அல்லது கூட்டணி கட்சிகள் செக் வைத்து, சிக்கல்களைத் தருவார்களா என்பதற்கு காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும். அதேபோல், சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ்குமாரும் தொடர்ந்து ஆதரவு தருவார்களா என்பதும் பல மில்லியன் டாலர் கேள்வி என்றால் மிகையில்லை.

 

ரமணி