Showing posts with label நெல்லியடி. Show all posts
Showing posts with label நெல்லியடி. Show all posts

Monday, June 26, 2023

சூர தரிசனம்


 

யாழ்ப்பாணத்து இனிய நினைவுகள்  8


----------------------

இம்முறை யாழ்ப்பாணம் அனுபவங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை அதில் ஒன்று நான் கண்ட சூர தரிசனம் ஆகும்

சூர தரிசனமா?  என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

. ஆம் அது எனக்கு ஒரு  தரிசனமாகவே இருந்தது

கிழக்கு பல்கலைக் கழகத்தில் இந்து நாகரிகத்துறையில் எம் பில் பட்டம் மேற்கொள்ளும்  வினோகா   எனும் மாணவி தேவரையாளி  இந்து கல்லூரியினை  நிறுவிய சூரன் எனும் பெரியாரையும். அவரின் கல்விப் பணிக ளையும்  ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்

அவருக்கு நானும் ஒரு மேற்பார்வையாளர்

மேற்பார்வையாளரின கடமைகளுள்  ஒன்று  மாணவருக்கு உதவியாக களப்பணியில் ஈடுபடுவ தாகும். ( இதை அவர் செய்யாமலும் விடலாம்)  

 மாணவருடன் கள ஆய்வு வேலைகளில் ஈடுபட இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன்

ஒரு நாளின் பெரும் பகுதியை அதற்கு ஒதுக்கினேன்

அதன்படி அன்று காலை அச்சுவேலி சென்று காரில் விவோகாவை ஏற்றிக் கொண்டுகொண்டு தேவரையாளி இந்துக் கல்லூரி இருக்கும் பகுதிக்குச் சென்றேன்

தேவரையாளி  இந்துக் கல்லூரியில் எம்மைக் காத்துக் கொண்டு நின்றார் சூரனின்  பேரனான ரவி வர்மா அவர்கள்

கல்லூரியின் முன்னால் சூரன் என்னும் பெரியாரின் உருவச்சிலை நீண்டு உயர்ந்து   மிகக்  கம்பீரமாக நின்று. கொண்டு இருந்தது

ஏனைய தமிழ் அறிஞர்களின் சிலைகளைப் போல சூரன் அமர்ந்து  கொண்டிராமல் நின்று கொண்டிருந்தமை எனக்கு ஒரு குறியீடாகக் காணப்பட்டது

யாழ்ப்பாணத்தில் அன்று நிலவிய கல்விச் சமத்துவமின்மைக்கு எதிராக போராடி

ஒரு நிறுவனத்தையே நிறுவிய அவரைப் பற்றி எனக்கு பேராசிரியர் சிவத்தம்பி ஏற்கனவே கூறி இருந்தார்

பேராசிரியர் சிவத்தம்பியின் தந்தையார்  கார்த்திகேசு அங்கே   ஒரு காலத்தில் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் என்ற செய்தியும் எனக்கு தெரியும்

சிறிது நேரத்தில் அங்கு வன்னிய குலம்

ராஜேஷ் கண்ணா

 எஸ் கே லோகநாதன்

வதிரி ரவீந்திரன்

போன்ற புத்திஜீவிகள் வந்து விட்டார்கள்

சிலர் ஏற்கனவே நான் அறிந்தவர்கள்

உரையாடல் தொடங்கியது

கலந்துரையாடல் மெருகேற மெருகேற  அகழ்வாய்வில் அசாதாரணமான பொருட்கள் மேற்கிளம்புவது   போல பல புது புது விஷயங்கள் வெளிவர தொடங்கின

மண்ணைத் தோண்டி அகழ்வாய்வு செய்வது போல மனிதர்களின் மனதை தோண்டியும் அகழ்வாய்வு செய்ய வேண்டும்

மண் தரும் உண்மைகள் போல மனமும் பல உண்மைகளைத் தரும்

ஆங்கிலம் கற்பிக்கும் சைவப் பாடசாலைகளை ஆறுமுகநாவலர் ஆரம்பித்த காலத்தில்  அப் பாடசாலைகளில் பலருக்கும் படிக்கும் வாய்ப்பு ஏற்படவி ல்லை 

படிக்கும் வாய்ப்பும் சிலருக்கு மறுக்கவும்  பட்டது

முக்கியமாக விளிம்பு நிலை மக்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை

அதனை ஓரளவு போக்கியவர்கள் கிறிஸ்தவர் மிஷனரிகளே

இந்த நேரத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் பாடசாலைகளை சைவ  அறிஞர்கள் புரவலர்கள்  துணையுடன் ஆரம்பித் தார்கள்

அத்தகைய. ஒரு  பாடசாலை ஏனைய ஆங்கிலப் பாடசாலைகளில் கற்கும் சந்தர்ப்பம் ஏற்படாத மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது

அந்தப் பாடசாலையின் முன்னோடியாகதா திகழ்ந்தது தேவரையாளி இந்து கல்லூரி என்பது புரிய வந்தது

தேவரையாளி இந்துக் கல்லூரி நிறுவிய சூரனின் கல்விப் பணிகளை  ஆறுமுகநாவலரின் பணிகளின் நீட்சி என்று கூறுவார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்

ஆறுமுக நாவலர் அன்று  யாழ்ப்பாணத்தில் பெரும் செல்வந்தர்களாக  இருந்த

செல்வந்தரிடமிருந்து பணம் திரட்டியது போல

 சூரனும் அப் பிரதேசத்தில் மேல் எழுந்த வர்த்தகர்களிடமிருந்து பணம் திரட்டி இந்தப் பாடசாலையை ஆரம்பித்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது


இதற்கு சமாந்தரமாக சிங்களப் பகுதிகளில் பாடசாலைகளும் ஆரம்பித்துள்ளன

இலங்கை கல்வி வரலாற்றை  ஆராய்பவருக்கு   இவை  முக்கிய தகவல்கள் ஆகும்

 மர வேலையிலே தேர்ச்சி பெற்ற  தொழிலாளியாக இருந்த  சூரன் தன் சுய வரலாற்றை எழுதி வைத்திருக்கிறார்.

அது ஒரு காலத்தின் வரலாறு ஆகும்

 அதைப் பதிப்பித்திருக் கிறார்  இருக்கிறார் ராஜ ஸ்ரீகாந்தன்

அதற்கான ஒரு அழகான முன்னுரையும் எழுதி இருக்கிறார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்

 அந்நூல் எமக்குப் பல பழைய தகவல்களைத் தருகின்றது

பாடசாலையின் வரலாறு

 அதனை உருவாக்க நடத்திய போராட்டங்கள்

 அதில் கல்வி கற்றோர்

 கற்பித்தோர்

அதன் மூலம் உயர்நிலை அடைந்தோர்

எனப்பல தகவல்களை அங்கு வந்தோர் உரையாடினர்

நீங்கள்  வராவிட்டால் இவ்வளவு பேர்களையும் ஒன்றாகச்சந்தித்திருக்க முடியாது சேர்

 என்று விவோவா கூறினாள்

நிறையத் தகவல்களை ஒருங்கே பெற்றுக் கொண்ட பெரு மகிழ்ச்சி அவளுக்கு

அங்கு வந்திருந்த ராஜேஷ் கண்ணா சமூகவியல் விரிவுயாளர்

அவர் பார்வை எனக்கு வித்தியாசமாக இருந்தது.

அவரது விளக்கங்கள் என்னை புதிய திசைகளில் சிந்திக்க வைத்தன

இன்றைய இளம் தலைமுறையின் பார்வை அது.

 அவரிடம் ஆலோசனைகள்  பெறுமாறுமாறு. நான் விவோகாவைக் கேட்டுக் கொண்டேன்.

 விவோகாவுக்கு உதவி புரியுமாறு அவரிடமும் கேட்டுக் கொண்டேன்

 அவர் தான் எழுதிய மூன்று நூல்களை எனக்குத் தந்தார்

மதிய உணவு உண்டு செல்லும்படி கேட்டுக் கொண்டனர் ஆனால் விவேகா தன் வீட்டில் எனக்கான மதிய உணவுகளைச் செய்திருந்தாள்

நண்பர் கலாமணி அந்த ஊரவர். அவர் சுகயீனமுற்று இருப்பதாக அறிந்தேன்

அவரைச் சந்திக்க மனம் அவாவியது

நண்பர் ரவீந்திரனும் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார்

தேவரையாளி கல்விச் சமூகத்திடம் இருந்து விடைபெற்று கலாமணி வீடு நோக்கிச் சென்றேன்

பாடசாலைக்கு வெளியே வரும்போது மீண்டும் சூரன் சிலைக்கு முன்னால்  நின்றேன்

அப் பெரியார் இன்னும் பெரிதுயர்ந்து நிற்பதாக எனக்குத் தோன்றியது

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் செய்தல்

அன்னயாவிவிலும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்குஎழுத்தறிவித்தல்

என் பாரதி பாடல் ஞாபகத்துக்கு வந்தது

ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஏழை மக்களுக்காக ஒரு பாடசாலை நிறுவிய சூரன்

என் மனதை நினைத்து நின்றார்

மீண்டும் சூரன் சிலையை நோக்கினேன்

இன்னும் அது  நெடிதுயர்ந்து நின்றது

இப்போது சொல்லுங்கள்

அது

 சூர தரிசனம் தானே?

 

Wednesday, December 7, 2022

மருத்துவப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் மக்கள்

  கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து   நிலையில், கடந்த சில மாதங்களாக மருந்து மருந்துகள் மற்றும் இதர மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அமெரிக்க டொலர்களை வாங்குவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிரமப்படுகின்றனர். பல நிறுவனங்கள் மற்றும் நாடுகளின் பல்வேறு மானியங்கள் மற்றும் நன்கொடைகளால் நிலைமை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தணிந்திருந்தாலும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை பாரிய அளவில் இல்லை என்றும், சிகிச்சையை வழங்குவதை நிர்வகிக்க முடியும் என்றும் சுகாதார அமைச்சு சமீப காலமாக கூறி வருகிறது.

தொற்று அல்லாத நோய்களுக்கு (NCDs) சிகிச்சை பெறுகின்ற கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள், தடுக்கக்கூடிய குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட 1 மில்லியன் மக்கள், பைபாஸ் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய பட்டியலில் உள்ள 10,000 நோயாளிகள் மற்றும் 10,000 பேர் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ACMOA) கூறியுள்ளது. நாட்டில் நிலவும் மருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக புற்றுநோயாளிகள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ACMOA செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், “நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் போன்ற ண்CDகளுக்கு தினமும் சுமார் 3 மில்லியன் மக்கள் மருந்து உட்கொள்கின்றனர். தற்போது மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாததால், அவர்களுக்கு முறையாக மருந்துகள் கிடைப்பதில்லை. இவர்களுக்கு 10 மருந்துகள் தேவைப்பட்டாலும், மருத்துவமனைகளில் 5 மட்டுமே வழங்கப்படும் நிலை உள்ளது. மற்றவற்றை மருந்தகங்களில் வாங்குவதற்கு அவர்களிடம் பணம் இல்லை.

மேலும் பேசிய அவர், மருத்துவமனைகளில் கான்டாக்ட் லென்ஸ்கள் இல்லாததால் கண்புரை சத்திரசிகிச்சை செய்துகொள்ளக் காத்திருக்கும் தடுக்கக்கூடிய குருட்டுத்தன்மை கொண்ட சுமார் 1 மில்லியன் மக்கள் இலங்கையில் இருப்பதாக தெரிவித்தார். பைபாஸ் சத்திரசிகிச்சை செய்து கொள்வதற்காக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பட்டியலில் 10,000 பேர் இருப்பதாகவும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஐந்து பைபாஸ் அறுவை சிகிச்சைகளுக்கு மேல் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், சுமார் 10,000 புற்று நோயாளர்களுக்கு உரிய மருந்துகளை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரியின் (சிஎம்எல்எஸ்) தலைவர் ரவி குமுதேஷ், தற்போது சுமார் 185 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகவும், இது முன்பு 90 ஆக இருந்த எண்ணிக்கை என்றும் கூறினார். வரவிருக்கும் நேரம், இந்த பிரச்சினையை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கமும் சுகாதார அமைச்சகமும் ஒரு தொழில்நுட்ப குழுவை நியமிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சுகாதாரம் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு சமீபத்தில் பாராளுமன்றத்தில் கூடியது, அங்கு அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் ஊகங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலைகளை எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 14 வகையான அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்காக சீனா வழங்கிய 28 மில்லியன் டொலர் நன்கொடையாகவும், சுகாதாரத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியக் கடன் வரியிலிருந்து 200 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்தியக் கடன் வரியான 1 பில்லியன் டொலரில் இருந்து 35 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

மருத்துவப்  பற்றக்குறை பொது மக்களின் உயிரோடு விளையாடுவதற்கு ஒப்பாகும்.  இதனை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு அரசு அவன செய்ய வேண்டும்.  இதே வேளை மருந்துகளின் விலையும் எட்டாத  உயரத்தில் இருக்கிறது. அதனையும் அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

Sunday, October 9, 2022

விவாதப்பொருளான பொன்னியின் செல்வன் ராஜராஜசோழன்

 கல்கி எழுதிய பொன்னியின் செல்வனை திரைப்படமாக மணிரத்தினம் ஆரம்பித்தபோது எழுந்த சர்ச்சைகளும் சலசலப்புகளும்   படம்  வெளியான பின்னர் அதிகரித்துள்ளன.

எம்.ஜி.ஆர்ம் ,கமலும்  முயற்சி செய்து முடியாமல் போன  பொன்னியின் செல்வன் திரைப் படத்தை மணிரத்தினம் சிறப்பாகச் செய்து முடித்துள்ளார். முதல் தடவை முயற்சி செய்தபோது மணிரத்தினமுக் கைவிட்டுவிட்டார். இரண்டாவது தடவை  வெற்றி பெற்று விட்டார்.

 கல்கியின்  பொன்னியின்  செல்வனை முழுதாக  உள்வாங்கிய வாசகர்கள் மணிரத்தினத்துடன் ஒத்துப் போகவில்லை. பொன்னியின் செல்வன் நாவலின் விற்பனை அதிகரித்துள்ளது. கல்கி வார வெளியீட்டில்  ஐந்து வருடங்களாக பிரசுரமான நாவலை திரைபடமாக்குவது சுலபமானது அல்ல. ஐந்து பாகங்களை திரைக்கதையாகுவதில் சிக்கல்களை  புரிந்துகொள்ள முடிகிறது. இரண்டு பாகங்கள்  முதல் படமாக வந்துள்ளது.ஒன்றரை வருடங்கள் நடக்கும் கதை.

பொன்னியின் செல்வன் படத்தின்  புகைப்படங்கள் வெளியான போது சர்ச்சைகளும் விவாதங்களும் மேலெழுந்தன. பொட்டு,உடை,நகை என்பன தென் இந்திய கலாசாரத்தை வெளிப்படுத்தவில்லை. வட இந்திய திணிப்பு என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இப்போது ராஜராஜ சோழன்  இந்துவா சைவனா எனும் விவாதம் அரசியலாக்கப்பட்டுள்ளது.ராஜராஜசோழன் இந்து என  பாரதீய ஜனதாக் கட்சியினர் கூறுகின்றனர். ராஅராஜசோழன் காலத்தில் இந்து இல்லை. சைவ சமயம்   இருந்தது என தமிழக அரசியல் தலைவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

இயக்குநர் வெற்றிமாறனின்  பேச்சு பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களை  உசுப்பேற்றியுள்ளது. வெற்றிமாறனும்மு ஆதரவாக கமல், சீமான், திருமாவளவன், இடதுசாரி கொம்யூனிஸ்ட் தலைவர்கள் களம்  இறங்கியுள்ளனர்.

வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருப்பதாக  இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளது தற்போது சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு கலை திருவிழா சென்னையில்   நடைபெற்றது; இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டு பேசினார். அப்போழுது சினிமாவை திராவிட இயக்கங்கள் கைப்பற்றியதால் தான் தமிழ்நாட்டில் இன்னும் மதசார்பாற்றக தற்போது வரை விளங்கி வருவதாக கூறினார்.

மேலும் கலையை சரியாக கையாள தவறினால் நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்களை பறித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்கள் என பேசினார்.

அதேபோல் ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் பேசி இருந்தார். அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி தற்போது சமூகவலை தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார் என அறிவித்தார்.

ராஜராஜ சோழனை குறித்த இயக்குநர் வெற்றிமாறன் கருத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

 எச்.ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், குஷ்பு,பேரரசு உள்ளிட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் கருணாஸ் இயக்குநர் வெற்றிமாறனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் “ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து?ஏது இந்தியா?இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது; இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள் .இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் “ராஜராஜ சோழனை இந்து அரசனாக்கி தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறிக்கிறார்கள் என இயக்குநர் வெற்றிமாறன் கூறிய கருத்து மிக உண்மையானது, சரியானது; அவரை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது எனவும் கூறினார்.

எங்களுக்கு மதங்கள் வெவ்வேறு இருந்த நிலையில், எட்டாம் நூற்றாண்டில் அதையெல்லாம் ஆதிசங்கரர் என்பவர் ஷன்மத ஸ்தாபனம் என கொண்டு வந்தார்.இந்து மதம் என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர் என்றும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்பது கிடையாது எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு கருத்துகளை சமூக வலைத்தளம் மூலம் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் மணிரத்னம் இயக்கியுள்ள  பொன்னியின் செல்வன் படத்தை சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் பார்த்தார். அவருடன் நடிகர்கள் விக்ரம், கார்த்தி இருவரும் இணைந்து படம் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல், பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். 

திரைஉலகில் சர்ச்சைக்குள்ளான  பொன்னியின் செல்வன், அரசியல் அரங்கில் ராஜராஜசோழனின் மதம் எது என்ற‌ விவாதத்தை உருவாக்கியுள்ளது.

இலங்கையைக் காப்பாற்றும் நட்பு நாடுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை அமா்வில் இலங்கை விவகாரம் தொடர்பான தீர்மானம்  கடந்த வியாழக்கிழமை [6 ஆம்திகதி] நிறைவேற்றப்பட்டுள்ளதுஇறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர்  ஐநாவில் இலங்கை விவகாரம் பற்றிய விவாதம், பிரேரணை, வாக்கெடுப்பு என்பன தொடர்ச்சியாக நடை பெற்றுவருகின்றன.

இலங்கை விவகாரம் ஐநாவுக்குப் போகிறதுஇலங்கைக்கு கடிவாளம்  போடப்படும் என நம்பி இருந்த அப்பாவித் தமிழ் மக்கள் காத்திருந்து காத்திருந்து ஏமாந்து  போனார்கள்காரசாரமான விவாதங்கள், கடும் கண்டன அறிக்கைக்கள் என்பன அரங்கேறும். இறுதியில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படும். உலக அரசியல் இரண்டுபட்டுள்ளது. அமெரிக்காவும் நேச நாடுகளும் சொல்வதை எதிர்ப்பதற்கென்றே சில நாடுகள் ஐநாவில் கலந்துகொள்கின்றனபோதாக்குறைக்கு வீட்டோ அதிகாரம்  சிலவற்றுகுக்குத் தடை போடுகின்றன.

கடந்த மாதம் 12 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமைச் சபை அமர்வில் இலங்கையின் சமகால நிலைமைகள் மற்றும் கடந்த தீர்மானங்களை இலங்கை நிறைவேற்றாமை தொடர்பாக விரிவான விவாதங்கள் நடைபெற்றன. ஐநா மனித உரிமை கவுன்சிலின் 51வது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. மொத்தம் 47 நாடுகளைக் கொண்ட ஐநா மனித உரிமை கவுன்சிலில் 20 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ஏழு நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்த நிலையில், இந்தியா உட்பட 20 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன

தீர்மானத்திற்கு எதிராக விழுந்த வாக்குகளை விட ஆதரவாக விழுந்த வாக்குகள் அதிகம் என்பதால் இந்தத் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து,ஜேர்மனி, மெக்சிகோ, உக்ரைன் உள்ளிட்ட 20 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனஇந்தியா ,ஜப்பான், நேபாளம், கட்டார் உள்ளிட்ட 20 நாடுகள் இதைப் புறக்கணித்தனசீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்தன.

 கடந்த ஆண்டும் ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு எதிராகக் கடந்த 2012, 2013, 2014, 2015, 2017, 2019 , 2021 ஆண்டுகளிலும் ஐநா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், 2015 தவிர அனைத்து முறையும் இது தனது இறையாண்மையை மீறுவதாக இலங்கை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

ஐநாவின் தீர்மானத்தால் இலங்கைக்கு உடனடியாகாப் பாதிப்பு ஏற்படப்போவதில்லைமுன்னரும் இது போன்ர தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை இலங்கை தனது அரசியல் சாணக்கியத்தால் நீர்த்துப்போகச் செய்துள்ளது. இலங்கைக்கு உதவு நாடுகள் ஐநாவில் வெளிப்படையாக இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்றன

நடுநிலை வகிப்பதாகக்கூறும் இந்தியா  போன்ற நாடுகள், கடுமையான எதிர்ப்பதை தெரிவிக்காமையினால்    அவை தமக்குச் சாதகமாக  இருப்பதாக  இலங்கை தெரிவிக்கிறது. நடுநிலை என்பது  ஏதோ ஒரு அணிக்கு ஆதரவானது என்பதை  உலக நாடுகள்  புரிந்துகொள்ள வேண்டும்.