Showing posts with label உதயநிதி. Show all posts
Showing posts with label உதயநிதி. Show all posts

Tuesday, October 1, 2024

ஆட்சியில் பங்கு கேட்கும் விடுதலைச் சிறுத்தைகள் செந்தில் பாலாஜியைக் கொண்டாடுகிறது திமுக


 

 ஆட்சியில் பங்கு கேட்கும் விடுதலைச் சிறுத்தைகள்

செந்தில் பாலாஜியைக்  கொண்டாடுகிறது திமுக 

மதுவிலக்கு மாநாட்டிற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  அழைப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான வீடியோ வெளியீடு என்பனவற்றால் திராவிட முன்னேற்றக் கழகத்துகும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே உரசல்கள் எழுந்துள்ளன. சிறுபொறியாக ஆரம்பித்த  சலசலப்பு விடுதலைச் சுருத்தைகளின்  பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனவினால்  உறுதிப் படுத்தப்படது. 

மதுவிலக்கு மாநாட்டுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழைபீர்களா என திருமாவளவனிடம் பத்திரிகையாளர் கேட்ட போது யாரும் கலந்து கொள்ளலாம் என அவர் பதிலளித்தார். அந்த மூன்று சொற்கள் வதந் தீயாகப் பரவியது. கேட்டணியில் இருந்து வெளியேறும் திருமாவலவன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையப் போகிறார் என உலாவியது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது விலக்கை வலியுறுத்தி மாநாடு நடத்தப்போவதாகவும் அதில் அ.தி.மு.கவும் கலந்துகொள்ளலாம் என செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த மாநாடு தொடர்பான அழைப்பையும் தேர்தல் கூட்டணியையும் இணைத்துப் பார்க்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டாலும் இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.  திருமாவள‌வன் , ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியபின்னர் சலசலப்பு அடங்கியது

ஸ்டாலினின் தலைமையிலான கூட்டணி சிதறப்போகிறது என்று எடப்பாடி அடிக்கடி உச்சரிப்பதால்  அது வேகமாகப் பரவியது. அந்தச் செய்தி அடங்குவதற்கிடையில்  தமிழக ஆட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கு கேட்கும் விவகாரம் பூதாகரமாக எழுந்தது.  ஸ்டாலின் துணை முதல்வராகப்போகிறார்  என்ற செய்தி தினமும் தலைப்புச் செய்தியாகும் நிலையில் துணை  முதல்வராகும் தகுதி திருமாவளவனுக்கு இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கருத்து தெரிவித்துள்ளது.  

மதுவிலக்கு விவகாரத்தை வைத்து திராவிட முன்னேறக் கழக் கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் அழுத்தம் கொடுக்கிறதா என்பதில் துவங்கி, கூட்டணியைவிட்டு வெளியேறுகிறதா என்பதுவரை பல்வேறு கருத்துகள் இதனைச் சுற்றி எழுந்தன. உள்ளூர் தொலைக்காட்சிகளும் இந்த விவகாரத்தை வைத்து விவாதங்களை நடத்தின.

செப்டம்பர் 14-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியபோது, இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதற்கு அவரே (திருமாவளவன்) விளக்கமளித்துவிட்டார், அதற்கு மேல் ஏதும் சொல்ல வேண்டியதில்லை என்று கூறினார்.

ஆனால், அதே நாளில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்பது குறித்து திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. விரைவிலேயே அது நீக்கப்பட்டது. பிறகு மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, மீண்டும்  கூட்டணி குறித்த பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில்தான், திங்கட்கிழமையன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப்பேசியிருக்கிறார் திருமாவளவன். அதன் பின்னர் கூட்டணிக்குள் எந்த நெருடலும் இல்லை என அவர் அறிவித்தார். 1999 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் பங்கு வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் குரல் கொடுக்கின்றன. காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியனவுக்  கூட்டணியில் பங்கு வேண்டும் என அவ்வப்போது தெரிவித்தன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்துவரும் நவீனத்துவ மாற்றங்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்ட பிரபல தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons) நிறுவனத்தின் தலைவரான ஆதவ் அர்ஜுனா அக் கட்சியின்  துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த ஒரு வருடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில்  நிகழ்ந்து வரும் பல்வேறு மாற்றங்களுக்கும், திருமாவளவனுக்குப் பக்கபலமாகவும் செயல்பட்டு வருபவர் தான் Voice Of Commons நிறுவனத்தின் தலைவர் ஆதவ் ஆர்ஜுனா.

 திமுகவுக்குத் தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுக்கும் பணிகளை மேற்கொண்டு வந்த ஆதவ் அர்ஜுனாவை விசிகவின் பக்கம் திருமாவளவன் அழைத்து வந்ததே கட்சியைப் பலப்படுத்தவும், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி பயணம் செய்யவே என்று விசிக-வில் ஒரு பேச்சு இருந்து வந்தது. திருமாவளவனின் எண்ணத்தை நன்கு உணர்ந்தவரான ஆதவ் ஆர்ஜுனா, திருச்சியில் நடந்த மாநாட்டில், விசிக-வின் அடிப்படை உறுப்பினராக தம்மை இணைத்தும் கொண்டார்.

பின்னர் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் ஆதவ் அர்ஜுனாவின் திறமைகள் குறித்து திருமாவளவன் பல தருணங்களில் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். கட்சியின் வளர்ச்சிக்குத் துடிப்பாகச் செயல்படக்கூடிய வகையில் இளைஞராகவும், அரசியல் நுண்ணறிவு கொண்டவராகவும், தேர்தல் வியூக நிபுணராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவராகவும் உள்ள ஆதவ் அர்ஜுனாவைத் தனது கட்சியின் செயல்பாடுகளில் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள திருமாவளவன் திட்டமிட்டார். அதன் அடையாளமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பான துணை பொதுச் செயலாளர் பதவியை தற்போது ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கியிருக்கியுள்ளார் திருமாவளவன். 

வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளையாவது திமுகவிடம் கேட்டுப் பெற வேண்டும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த 3 தொகுதிகளில் 2 தனித் தொகுதிகளுடன் ஒரு பொதுத் தொகுதியும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும் விசிக, திமுகவிடம் உறுதியாக எடுத்துரைத்தது.  ஆனால் அது நடைபெறவில்லை.  இரண்டு தொகுதிகள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால்  ஆதவ் அர்ஜுன எம்பியாகவில்லை.அவரைத் தேர்தலில்  வேட்பாளராக்குவதற்கு  திருமாவளவன் விரும்பியபோதும் திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பவில்லை

 அது ஆதவ் அர்ஜுனவின் தனிப்பட்ட கருத்து என விடுதலைச் சிறுத்தைகளின்  இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூறுகின்றனர். திருமாவின் ஒப்புதல் இல்லாமல் அவரால் அப்படிப்பேச முடியாது  இதுபற்றி திருமா  இன்னமும் வாயைத் திறக்கவில்லை.  இப்போதிக்கு  அடங்கி இருக்கும் இந்தப் பிரச்சனை தேர்தல் நேரத்தில் விஸ்வரூபம் எடுக்கு. அல்லது காணாமல் போய்விடும்.

ஸ்டாலினின் நம்பிக்கைகுருய தளபதியான செந்தி பாலாஜி பிணையில் விடுதலையானதை திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  கொண்டாடி வருகின்றனர்.  2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் திதி அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் அவருக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சையெல்லாம் நடந்தது. அதன் பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 15 மாதமாக வெறும் விசாரணைக் கைதியாகவே தான் சிறையில் அடைபட்டிருப்பதாகவும், உடல் நிலை சரியில்லை என்றும் கூறி தனக்கு பிணை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மே  மாதம் மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்தார்.  இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பை   ஒத்திவைத்திருந்தது.

 உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்த்தரவிட்டது. அதன்படி தினசரி அமலாக்கத்துயுடன் பிணை வழங்கியது.  அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.இரண்டு நபர் உத்தரவாதத்தின்பேரில் செந்தில் பாலாஜி  பிணை  பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்துள்ளதால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். கரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் திமுகவினரர் பட்டாசு வெடித்தும் லட்டு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

செந்தில் பாலாஜியை அமைச்சராக்ககூடாது  என்பதில் தமிழக ஆளுநர் பிடிவாதமாக  இருந்தார். செந்தில் பாலாஜி அமைச்சராவதில் எந்தத் தடையும் இல்லை என்பதால்  இன்னொரு பிரச்சனைக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது.

ரமணி

30/8/24

Saturday, August 31, 2024

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் இலண்டனுக்குச் சென்றார் அண்ணாமலை துணை முதல்வராவாரா உதயநிதி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின்

 இலண்டனுக்குச் சென்றார் அண்ணாமலை
துணை முதல்வராவாரா உதயநிதி?
 

தமிழக அரசியலில் பரபலப்பான  பல சம்பவங்கள் கடந்த வாரம் நடைபெற்றனமறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியுடனான தனது நினைவுகளை ‘கலைஞர் எனும் தாய்’ எனும் பெயரில் பொதுப்பணிநெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ..வேலு நூலா எழுதியுள்ளார். கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி  வெளியீட்டு விழா நடைபெற்றது. அங்கு  உரையாற்றிய ரஜினி, திராவிட முன்னேற்றக் கட்சியின் மூத்த  உருப்பீனர்களைப்பற்றிப் பேசியதும் அதற்கு அமைச்சர் துரைமுருகன் கொடுத்த பதிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்குச் சென்றதை எதிர்க் கட்சிகள் விமர்சிக்கின்றன. அரசியல் படிப்பதற்காக அண்ணாமலை  இலண்டனுகுச் சென்றுள்ளார். தனக்கு அரசியல் படிபிக்க வேண்டாம் என முழக்கமிட்டவர் அரசியல் படிப்பதற்காக  இலண்டனுக்குச் சென்றதை சமூக வலைத்தளங்கள் வைரலாக்குகின்றன.  ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்ற வழமையான விவதமும் தமிழகத்தில் பேசு பொருளானது.

புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுகையில் கருணாநிதியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் அமைச்சர் துரைமுருகன்.  மூத்த அமைச்சர்களால் ஸ்டாலினுகுச் சிக்கல், அவதானமாக இருக்க வேண்டும் எனப் பொருள்படப் பேசினார்.

ரஜினியின்  பேச்சை அமைச்சர் துரை முருகன்  ரசிக்கவில்லை பல்லுப் போன பின்பும்  இளம் கதாநாயகிகளைக் கட்டிப்பிடிக்கிறார்கள் என மேடையிலேயே பதிலளித்தார். இப்படி ஒரு பதில்வரும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.  கூட்டம்  முடிந்ததும்  இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்டாலினின் முன்னால் பஞ்சாயத்து நடந்ததாகத் தகவல் கசிந்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு ஸ்டாலினுக்கு சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டை பொருளாதார மாநிலமாக உயர்த்த முதல்வர் மு ஸ்டாலின் அரசு முறை பயணமாகசென்னையிலிருந்து விமான மூலமாக புறப்பட்டு அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு அவர் 17 நாட்கள் தங்கி இருந்து முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்தும் பேசவும், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். ஆகஸ்ட் 31ம் தேதி, புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேச இருக்கிறார் முதல்வர். செப்டம்பர் இரண்டாம் தேதி சிகாகோவில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் திகதி அயலக தமிழர்களின் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறார். இதன் பின்னர் அமெரிக்கா பயணத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 14ஆம் திகதி சென்னை திரும்புகிறார்.

இந்த நிலையில் அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு ஸ்டாலினுக்கு சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் டிஆர்பி ராஜா மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள்  பொன்னாடை போர்த்தி பூங்கொத்துக்கள் கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார். நடிகர் நெப்போலியன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் முதல்வருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர்.

 இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்வில், முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.ஈல்டு என்ஜினியரிங், மைக்ரோ சிப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம், அமெரிக்காவின் Applied materials நிறுவனம் சென்னை தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தை அமைக்கிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மையமாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை செம்மஞ்சேரியில், ரூ.250 கோடி முதலீட்டில் செமி கண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்க Microchip நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 1500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இது தவிர சென்னை அடுத்த சிறுசேரியில் ரூ.450 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி மையம் அமைக்க நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் Paypal நிறுவன முதலீட்டின் மூலம் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடப்பட்டிருக்கிறது.


 : கோவை சூலூரில் செமி கண்டக்டர் உபகரண ஆலையை ஈல்டு இன்ஜினியரிங் நிறுவனம் அமைக்கிறது. ரூ.150 கோடியில் அமையும் இந்த ஆலை மூலம் 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது தவிர மதுரை எல்காட் வடபழஞ்சியில் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் மையம் அமைகிறது. ரூ.50 கோடியில் அமையும் இந்த மையத்தின் மூலம் 700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர், "வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது. நவீன உட்கட்டமைப்பு, திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன. புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

வழமைபோன்று எதிர்க் கட்சிகள் ஸ்டாலினின்  அமெரிக்க விஜயத்தை விமர்சித்து கூறு போடப்போகின்றன.

பாரதீய ஜனதாவின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் தொடர்பான படிப்பை மேற்கொள்ள  சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டார்.

இதற்காக சென்னை விமான நிலையத்தில்  தொண்டர்கள் உற்சாகமாக அண்ணாமலையை வழியனுப்பி வைத்தனர். மூன்று மாதம் அங்கு தங்கி இருந்து படிப்பை மேற்கொள்ளும் அண்ணாமலை காணொளி வாயிலாக கட்சியை கவனித்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த  40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஒருவர். இந்த படிப்புக்கான செலவை லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமே ஏற்றுள்ளதாம். இதனால்  ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை மூன்று மாத கால அரசியல் படிப்பை தொடங்க லண்டன் சென்றுள்ளார்.

அண்ணாமலை லண்டனுக்கு செல்லும் இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு பதிலாக மாற்றுத் தற்காலிக தலைவர் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நான் லண்டனுக்கு சென்றாலும் அங்கிருந்து கட்சிப் பணிகளை கவனித்துக் கொள்வேன். ஆளுங்கட்சியினரின்  தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருப்பேன். எனது சண்டைகள் அறிக்கை மூலம் தொடரும். நான் வெளிநாட்டுக்கு படிக்க சென்றாலும் என் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும் என தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

 தமிழக அமைச்சரவையில் மாற்றம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது என்ற தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலிலும், சோஷியல் மீடியாக்களிலும், தொலைக்காட்சி  விவாதங்களிலும் தீவிரமாக பேசப்பட்டு வரும் தலைப்பாக இருந்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரும். அதோடு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்ற அறிவிப்பும் வெளியாக உள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அமைச்சரவை மாற்றம் குறித்து தனக்கே தகவல் வரவில்லையே என முதல்வர் ஸ்டாலினே பதிலளித்து விட்டார். இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டு தான் உள்ளது.

    முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய 17 நாள் சுற்றுப்பயணமாக  அமெரிக்கா புறப்பட்டு சென்று விட்டார். அவர் அமெரிக்க பயணத்தை முடித்து திரும்பி வந்த பிறகு தான் அமைச்சரவை மாற்றமும், உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி பற்றிய அறிவிப்பும் வெளியாக உள்ளதாம். திமுக ஆட்சி காலம் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ளதால் இப்போது அவரை துணை முதல்வராக அறிவித்தால் மட்டுமே வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் அவர் முன்னிறுத்த முடியும் என திமுக தலைமை நினைக்கிறதாம்.

மாற்றம் ஒன்றே மாறாதது. பொறுத்திருந்து பாருங்கள் என அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்வி முதல்வர் பதிலளித்திருப்பதால், அமைச்சரவை மாற்றம் உண்மை தான் என்பதை அவரே மறைமுகமாக உறுதி  செய்துள்ளார். அதே போல் உதயநிதிக்கு துணைமுதல்வர் பதவி தகவலும் உண்மை தான் என கட்சி வட்டாரங்களும் கூறி வருகின்றன. உதயநிதி தற்போது இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். அதோடு சிறப்பு திட்ட செயலாக்கத்தையும் அவர் கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது.