Showing posts with label கே.பாலசந்தர். Show all posts
Showing posts with label கே.பாலசந்தர். Show all posts

Wednesday, February 20, 2013

தடம் மாறியதமிழ்ப்படங்கள் 49



விவகரத்துச்செய்த தனது மனைவி முன்னாள் காதலனைத்திருமணம் செய்வதைத்தடுக்கும் கொடுமைக்காரக்கணவனின் கதைதான் 1977ஆம் ஆண்டு வெளியான அவர்கள் படத்தின் கதை. ரசிகர்களின் பாராட்டையும் பெண் ரசிகைகளின் அனுதாபத்தையும் பெற்று வெற்றிக்கொடி நாட்டியது.

  டில்லியில் பெரிய நிறுவனத்தில் பெரிய அதிகாரியாகப்பணீபுரிகிறார் ரஜினிகாந்த். அவரின் மனைவி சுஜாதா. சுஜாதாவைப்பாராட்டுவதுபோன்று சிலேடையாக அவரது கடந்தகால் வாழ்க்கையைச்சுட்டிக்காட்டுவார்ரஜினிசுஜாதாஇன்னொருவனைக்காதலிப்பதைத்தெரிந்துகொண்டே அவரை ரஜினி திருமணம் செய்தார்.
     நோயாளியான சுஜாதாவின் தகப்பன் தனது மகளின் எதிர்காலம் பற்றித்துன்பப்படுகிறார். சுஜாதாவைத்தான் திருமணம்செய்வதாக உறுதியளிக்கிறார் ரஜினி.தனது முடிவைக்கூற பதினைந்து நாள் அவகாசம் கேட்கிறார் சுஜாதா. சென்னையில் உள்ள தனது காதலனுக்குக் கடிதம் அனுப்புகிறார் சுஜாதா. வழமை போன்று பதில் வராததனால் ரஜினியைத்திருமணம் செய்வதற்குச்சம்மதம் தெரிவிக்கிறார் சுஜாதா.

 ரஜினியை சுஜாதா திருமணம் செய்தபின்னர் சுஜாதாவின் தகப்பன் இறந்துவிடுகிறார். சுஜாதாவின் கடந்தகால காதலைச்சுட்டிக்காட்டி சித்திரவதை செய்கிறார் ரஜினி.கைக்குழந்தையுடன் அல்லல்படும் சுஜாதா சிரித்தபடியே எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறார்.கொடுமையின் உச்சக்கட்டமாக விவாகரத்துச்செய்யப்போவதாக ரஜினி கூறியபோதும் சிரித்தபடியே ஒப்புதலளிக்கிறார் சுஜாதா.

   ரஜினியிடமிருந்து விவாகரத்துப்பெற்ற சுஜாதா கைக்குழந்தையுடன் சென்னைக்கு மாற்றம் பெற்றுச்செல்கிறார்.முதல்நாள் கைக்குழந்தையுடன் அலுவலகத்துக்குச்செல்லும் சுஜாதாவுக்கு அங்கு பணிபுரியும் கமல் உதவி செய்கிறார்.தான்தங்கி  இருக்கும் வீட்டில் சுஜாதாவைக்குடியேற்றுகிறார் கமல்.

    ரஜினியின் திருவிளையாடலைப்பற்றித்தெரியாத தாய் அவருக்கு மணப்பெண் தேடுகிறார்.ரஜினியைத்திருமணம் செய்யப்போகும் பெண் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு ஹிந்தி தெரியும் என்பதை அறிந்து டில்லியிலிருந்து வந்த ஹிந்தியில் எழுதப்பட்ட கடிதத்தைக்கொடுத்தார்.ஹிந்தியில் எழுதப்பட்ட அக்கடிதத்தின் மூலம் ரஜினிக்குத்திருமனம் நடந்தது,விவாகரத்துப்பெற்றது,கைக்குழந்தையுடன் ரஜினியின் மனைவி வீட்டைவிட்டு வெளியேறியது வேலைக்காரன் விபரமாக எழுதியிருந்தான்.மனின் சுயரூபம் தெரிந்ததாய் அதிர்ச்சியடைகிறார்.
    கமலின் வீட்டில் குடியேறிய சுஜாதா காலையில் சுப்ரபாதம்  பாடலை ஒலிக்கவிட்டு சாம்பிராணிப்புகை காட்டுகிறார். எதிர் வீட்டிலிருக்கும் ரவிக்குமார் எட்டிப்பார்க்கிறார். சுஜாதாவின் வீட்டுச்சுவரிலே தூங்கும் மோனாலிசாவின்படம் தான் காதலிக்குக்கொடுத்த மோனாலிசாவை நினைவூட்டையது. எதிர் வீட்டுக்குச்சென்ற ரவிக்குமார் தன்து பழைய காதலி சுஜாதாவைக்கண்டு அதிர்ச்சியடைகிறார்.இருவரும் மனம் விட்டுப்பேசுகின்றனர். தான் அனுப்பிய கடிதங்களுக்கு ஏன் பதில் அனுப்பவில்லை எனக்கேட்கிறார் சுஜாதா.மன நோயளியான தனதுசகோதரி   அக்கடிதங்களை ஒளித்துவைத்ததையும் சகோதரி இறந்தபின்பேஅக்கடிதங்களைத்தான் கண்டதாகவும் கூறுகிறார் ரவிக்குமார்.
  நிம்மதி இன்றி சலனப்படும் சுஜாதாவுக்கு  அலுவலகத்தில் பணி புரியும் நண்பி சாமியார் ஒருவரை அறிமுகப்படுத்துகிறார் .சாமியாரிடம் சென்ற சுஜாதா தனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத் தையும் கூறுகிறார்.நிம்மதி தேடி சாமியாரிடம் சென்ற ரஜினியின் தாய் அதனைக்கேட்டு சுஜாதாதான் தனது மருமகள் என்பதை அறிகிறார்.

  சுஜாதா அலுவலகம் செல்லத்தயாராகும்போது அங்கு சென்ற ரஜினியின் தாய் வீட்டு வேலைகளைச்செய்கிறார்.எதிர் வீட்டிலிருந்து எட்டிப்பார்த்த ரவிக்குமாரை முறைக்கிறார். தனியாகக் குழந்தையுடன் கஷ்ரப்பட வேண்டாம் வீட்டு வேலைக்குத்தன்னை வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார். வேலைக்காரியாக வந்திருப்பது  தனது மாமி எனத்தெரியாத சுஜாதா அவரை வேலைக்குச்சேர்க்கிறார்.சுஜாதாவின் மனதை நோட்டமிட்ட ரஜினியின் தாய், பழைய காதலன் ரவிக்குமாரைத்திருமணம் செய்யும்படி சுஜதாவுக்கு அறிவுரை கூறுகிறார்.  விவாகரத்தின் பின்னரும் ரஜினி கட்டிய தலி கழுத்தில் இருப்பதனால் இரண்டாவது திருமணம் செய்யமுடியாதென சுஜாதா மறுப்புத்தெரிவிக்கிறார்.காலப்போக்கில் இரண்டாவது திருமணம் செய்வது தப்பில்லை என சுஜாதா உணர்கிறார்.

  சுஜாதா வேலை செய்யும் அலுவலகத்துக்கு மேலதிகாரியாக ரஜினி வருகிறார்.தான் திருந்திவிட்டதாகவும் மீண்டும் இணைந்து வாழவிரும்புவதாகவும் சுஜாதாவிடம் கூறுகிறார்.முதலில் நம்பமறுத்த சுஜாதா ரஜினியின் நடவடிக்கைகளினால் அவர் திருந்திவிட்டதாக நினைக்கிறார்.

     விவாகரத்துச்செய்த கணவனா,பழைய காதலனா என முடிவெடுக்க இயலாது தடுமாறிய சுஜாதா தனது நிலையை கமலிடம் கூறினார். ஜூனியர் என்ற பொம்மைமூலம்  அனைவரையும் சிரிக்க கைக்கும் கமல் ஜூனியர் பொம்மை பாடுவதுபோன்று தனது காதலை வெளிப்படுத்தினார்.

   சுஜாதாவுக்கும் ரவிக்குமாருக்கும் பதிவுத்திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது.பதிவுத்திருமணம் செய்தால் தாலியை என்ன செய்வது எனத்தெரியாது கிலேசமடிந்தார் சுஜாதா. பதிவுத்திருமணத்துக்காக  சுகமில்லை என்று அலுவலகத்தில் விடுமுறை எடுக்கிறார் சுஜாதா.
     பதிவுத்திருமணத்துக்காகக்காத்திருந்து ஏமற்றமடைந்த‌ ரவிக்குமார் சுஜாதாவின் வீட்டுக்குச்செல்கிறார்.அங்கே சுகயீனம் காரணமாக சுஜாதா படுத்திருப்பதைக்காண்கிறார்.டாக்டரிடம் போகவாம் என்று ரவிக்குமார் கூற டாக்டர் வந்து மருந்து கொடுத்துள்ளார் என்று கூறுகிறார் ரஜினி. ரஜினி ,ரவிக்குமார், கமல் மூவரும் இரவிரவாகக்கண் விழித்து சுஜாதாவைப்பராமரிக்கின்றனர்.

  ஆயாவாகத்தந்து வீட்டில் வேலை செய்பவர் ரஜினியின் தாய் என்ற உணமை சுஜாதாவுக்குத்தெரியவருகிறது. ரஜினி உண்மையிலேயே திருந்திவிட்டார் என நம்பிய சுஜாதா ரஜினியுடன் வாழ முடிவுசெய்கிறார். தன‌து முடிவை ரவிக்குமாரிடம் கூறுகிறார்.புல்லாங்குழல் விற்பன்னரான ரவிக்குமாரை அவரது தீவிர ரசிகை காதலிப்பதை அறிந்த ரஜினி இருவருடனும் கதைத்து திருமண நிச்சயதார்த்தம் செய்கிறார்.


   ர‌ஜினியுட‌ன் வாழ்வ‌த‌ற்காக‌ கைக்குழ‌ந்தையுட‌ன் அவ‌ரின் வீட்டுக்குச்செல்கிறார் சுஜாதா.த‌ன்ம‌க‌ன் இன்ன‌மும் திருந்த‌வில்லை என‌க்கூறுகிறார் ர‌ஜினியின் தாய்.ர‌ஜினி திருந்திவிட்ட‌தாக‌ உறுதிப‌ட‌க்கூறுகிறார் சுஜாதா.அப்போது டில்லியிலிருந்துவ‌ந்த‌ ஹிந்தியில் எழுத‌ப்ப‌ட்ட‌ க‌டித‌த்தை சுஜாதாவிட‌ம் கொடுக்கிறார் ர‌ஜினியின் தாய்.அந்த‌க்க‌டித‌த்தைப்ப‌டித்து சுஜாதா க‌ண்க‌ல‌ந்கி நிற்கையில்  கைக்குழ‌ந்தியுட‌ன் வீட்டுக்கு வந்த‌ ஹிந்திப்பெண் இது ர‌ஜினியின் வீடா என‌க்கேட்கிறார்.

   வேலையை இராஜினாமாச்செய்துவிட்டு ஊருக்குப்போகிறார் சுஜாதா. ர‌ஜினியின்தாயும் அவ‌ருட‌ன் செல்கிறார்.

       ஒரு பெண்ணை மூன்று ஆண்க‌ள் விரும்புவ‌து, விவாக‌ர‌த்துப்பெற்ற‌ பெண் ப‌ழைய‌காத‌ல‌னை திருதும‌ண‌ம் செய்ய‌முய‌ற்சிப்ப‌து,ம‌ன‌ம் மாறி விவாக‌ர‌த்துப்பெற்ற‌ க‌ண‌வ‌னுட‌ன் வாழ‌விரும்புவ‌து என‌ இடிய‌ப்ப‌ச்சிக்க‌ல் போன்ற‌ வித்தியாச‌மான‌ முக்கோண‌க்காத‌லைத்த‌ன‌க்கே உரிய‌ பாணியில் இலாவ‌க‌மாக‌க்கையாண்டு  வெற்றிபெற்றார் கே.பால‌ச‌ந்த‌ர்.

    சுஜாதா,க‌ம‌ல்,ர‌ஜினி,ர‌விக்குமார்,லீலாவ‌தி,குமாரிப‌த்மினி,குட்டி ப‌த்மினி கோகுல்நாத்,வீர‌ராக‌வ‌ன்,குழந்தை ஹ‌ரி ஆகியோர் ந‌டித்த‌ன‌ர்.சுஜ‌ஹ்டாவுக்கு முக்கிய‌த்துவ‌ம் மிக்க‌ இப்ப‌ட‌த்தின் டைட்டிலில் சுஜாதாவின் பெய‌ர் முத‌லில் காட்ட‌ப்ப‌டடுகிற‌து.வில்ல‌னான‌ ர‌ஜினிக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் உள்ள‌து. ர‌விக்குமார் அறிமுக‌மான‌ ப‌ட‌ம்.

   சுஜாதா,க‌ம‌ல்,ர‌ஜினி ஆகியோரின் ந‌டிப்பு ப‌ட‌த்துக்கு மெருகூட்டிய‌து.வ‌ச‌ன‌ம் க‌தைக்கு உயிரூட்டிய‌து.க‌ம‌ல்,ர‌குமான் இனைந்து ந‌ட‌த்திய‌ வ‌ச‌ன‌ம் இல்லாத‌ கிரிக்கெற் காட்சி ர‌சிக்கும்ப‌டி இருந்த‌து.க‌ம‌லின்  ஜூனிய‌ர் பொம்மை க‌ல‌க‌ல‌ப்பூட்டிய‌து.பாட‌ல்க‌ள் க‌ண்ண‌தாச‌ன்,இசை எம்.எஸ்.விஸ்வ‌நாத‌ன்.எஸ்.ஜான‌கி,எஸ்.பி.பால‌சுப்ர‌ம‌ணிய‌ம் ஆகியோரின் குரலில்.இப்ப‌டி ஓர் தாலாட்டுப்பாட‌வா,காற்றுக்கென்ன‌வேலி,ஜூனிய‌ர்ஜூனிய‌ர் ஜூனிய‌ர் இரும‌ன‌ கொண்ட‌ திரும‌ண‌ மேடையில்,அங்கும் இங்கும் பாதை உண்டு  ஆகிய‌ பாட‌ல்க‌ள் ர‌சிக‌ர்க‌ளைக்க‌வ‌ர்ந்த‌ன‌.
ஒளிப்ப‌திவு பால‌ச‌ந்த‌ரின் ஆஸ்தான‌ வித்த‌க‌ர் என்.லோக‌நாத‌ன்.க‌தை ,வ‌ச‌ன‌ம் உத‌வி அன‌ந்து. க‌தி வ‌ச‌ன‌ம் இய‌க்‌க‌ம் கே.பால‌ச‌ந்த‌ர்.
ர‌ம‌ணி
மித்திர‌ன்  24/02 13

Thursday, December 20, 2012

தடம் மாறிய தமிழ்ப் படங்கள் 45


பெண்பித்தனானகணவனைத்திருத்தும்பெண்ணின்கதைதான்1976ஆம்ஆண்டுவெளியானமன்மதலீலை.இளம்பெண்களையும்திருமணமானபெண்களையும்மயக்கிவசப்படுத்தும்கணவனாககமல்நடித்தார்.கமலைத்திருத்தும்மனைவியாககவர்ச்சிநடனமாடிரசிகர்களைக்கிளுகிளுக்கவைத்தஆலம்நடித்தார்.

பெண்பித்தனாகத்திரியும்கமல்,ஆலத்தைமுறைப்படி திருமணம் செய்கிறார். ஒருவர்மீதுஒருவர்அளவுகடந்தபாசத்தையும்அன்பையும்பொழிகின்றனர்.அழகானமனைவிவீட்டில்இருக்கவேறுபெண்களைக்கண்டதும்மனம்தடுமாறுகிறார்கமல்.அழகானபெண்களின்பின்னால்சென்றுஅவர்களதுபலவீனம்அறிந்துதன்வலையில்வீழ்த்துகிறார்.இளம்பெண்களும் திருமணமான பெண்களும் கமலின்  வலையில் வீழ்ந்து அவரின் காமப் பசிக்கு இரையாகின்றனர்.

கணவனின்காமலீலைகளைஅறிந்தஆலம்அவரைத்திருத்தமுயல்கிறார்.கமலைத்திருத்துவதற்காகஅவரின்கழுத்தில்தாலிகட்டுகிறார்.கழுத்தில்தாலிஇருந்தால்தனதுநினைவுவரும்வேறுபெண்களைத்திரும்பிப்பார்க்கமாட்டார்என்றுநினைக்கிறார்ஆலம்.ஆலம்கட்டியதாலிக்குமதிப்புக்கொடுக்காதுஅதனைக் கழற்றிவைத்துவிட்டுசல்லாபலீலையைத்தொடர்கிறார்கமல்.கமலைத்திருத்தமுடியாதுஎன்பதை அறிந்த ஆலம் விவாகரத்துச் செய்கிறார்.


ஆலம்தன்தாய்வீட்டிற்குச்செல்கிறார்.ஆலம்வீட்டைவிட்டுவெளியேறியதால்கவலைப்படுகிறார்கமல்.அன்றுமுதல்தன்னுடன்வேலைசெய்பவரிடம் தனது மனக்குமுறலைவெளிப்படுத்துகிறார்.நண்பனின்அறிவுரையால்கமல்மனம்மாறுகிறார்.தாய்வீட்டிற்குசென்றஆலம்தனதுதகப்பனும்கம‌லைப் போன்று பெண்பித்தன் என அறிகிறார் தன்தவறை உணர்ந்து இருவரும் மீண்டும் ணைந்து வாழத் தொடங்குகிறார்கள்.

கமல்,ஆலம்,ஜெயப்பிரதா,வை.விஜயா,சுனந்தினி,ஹேமாசௌத்திரி,ஜெயசுதாஆகியோர்நடித்தனர்.இவர்கள் அனைவரும் கமலின்ஆசைக்குஇரையாகும் பாத்திரத்தில்நடித்தனர்.அன்றையகவர்ச்சிநடிகையானஆலம்கதாநாயகியாகநடிக்கஅன்றையபிரபலநாயகிகளானஜெயப்பிரதாஜெயசுதாஆகியோர்சிறியபாத்திரத்தில்நடித்தனர்.மன்மதலீலையில்பெண்க‌ளைமயக்ககமல்புரியும்அங்கசேஷ்டைகள்ரசிகர்க‌ளைப்பெரிதும்கவர்ந்தது.பெண்களைப்பார்த்து"உங்களுக்குத்திருமணமாச்சா"என்றுகமல்கேட்கும்வசனத்தைஅன்றுஉச்சரிக்காதவர்கள் இல்லை.

பாடல்கள்கண்ணதாசன்இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்,கே.ஜே.ஜேசுதாஸ்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசிலா,வாணிஜெயராம்,எல்.ஆர்.ஈஸ்வரிஆகியோர் பாடியுள்ளனர்.மன்மதலீலைமயக்குதுஆளைமனைவிஅமைவதெல்லாம்இறைவன்கொடுத்தவரம்  நாதமெனும்கோயிலிலே,ஹலோமைடியர்ரோங் நம்பர்ஆகியபாடல்கள்இன்றும்திகட்டாதுஇனிக்கின்றன. கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் கே. பாலச்சந்தர்.

தமிழில்மன்மதலீலைஎன்றபெயர்வெளியாகிரசிகர்களைக்கவர்ந்தஇப்படம்தெலுங்கில்"மன்மதலீலா"ஹிந்தியில்"மீட்டிமீட்டிபேட்டன்"என்றபெயரில்வெளியாகி பிரபல்யமானது.
மித்திரன்
ரமணி 30/12/12


Thursday, December 13, 2012

தடம் மாறிய தமிழ் படங்கள் 43


மகளைப் போன்று பாசம் காட்டி வளர்க்கும் அப்பாவியான இளம் பெண்ணைத் தாயாக்கிய கதை தான் 1979 ஆம் ஆண்டு வெளியான நூல்வேலி.
துணை நடிகையான சியாமளாவின் மகள் சரிதா. உலகம் அறியாத அப்பாவியான வெகுளிப் பெண். இவர்களின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் குடியேறுகிறார் சரத்பாபு. அவரது மனைவி சுஜாதா எழுத்தாளர். இவர்களுக்கு தான் படப்பிடிப்புக்குச் செல்லும் போது சரத்பாவு சுஜாதா தம்பதியின் மகளுடன் விளையாடுவார் சரிதா. அப்பாவியான சரிதாவின் மீது பரிதாபப்பட்டு தன் வீட்டில் சுதந்திரமாகத் திரிவதற்கு அனுமதி வழங்குகிறார் சுஜாதா.
துணை நடிகையான சியாமளா இறந்த பின் அநாதரவாக நிற்கும் சரிதாவைத் தன் மகள் போல் வளர்க்கிறார் சுஜாதா. கணவர் சரத்பாவும் சரிதாவின் மீது பாசம் வைக்கிறார். தாய் இறந்த சோகம் தெரியாது சரிதாவின் மகளுடன் விளையாடுகிறார் வெகுளிப் பெண் சரிதா. ஒரு நாள் கொட்டும் மழையில் நனைந்த படி வீட்டிற்கு வருகிறார் சரிதா. மழையில் நனைந்த சரிதாவின் இளமை சரத்பாவுவின் மனதில் இருந்த மோகத்தீயை தீண்டி விடுகிறது. காமத்தால் நிலை தடுமாறிய சரத்பாபு சரிதா வெகுளியென்பதையும் தான் அவளை மகளைப் போல் வளர்ப்பதையும் மறந்து தன் காம வெறித்தீர்க்கிறார். இதனை அறிந்த சுஜாதா மகளுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
வெகுளிப் பெண்ணான சரிதா குழந்தையைப் பெற்றெடுத்து சரத்பாபுவிடமும் சுஜாதாவிடமும் ஒப்படைத்து விட்டு மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்கிறார்.
வெகுளிப் பெண்ணாக நடித்த சரிதா அற்புதமாக நடித்து ரசிகர்களின் அனுதாபத்தை பெறுகிறார். சுஜாதாவும் தன் பங்குக்குத் திறமையை வெளிப்படுத்தித் தனது முத்திரையைப் பதிக்கிறார். சரத்பாபு, ஆனந்த் ஆகியோரும். பாத்திரமறிந்து நடித்தனர். படிச்சவங்கல்லையா அவங்க சொன்னால் சரியாத்தான் இருக்கும் என்ற அவரின் வசனம் மிகப்பிரபலமானது.
இசை எம்.எஸ்.விஸ்வநாதன், பாடல்கள் கவியரசு கண்ணதாசன், இயக்கம் கே.பாலச்சந்தர், பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா ஆகியோர் பாடியுள்ளனர். பாலமுரளி கிருஷ்ணா பாடிய மௌனத்தில் விளையாடும் மனச்சாட்சியே என்ற பாடல் காலம் கடந்தும் மனதில் ரீங்காரமிடுகிறது.
ரமணி
மித்திரன்  02/12/12

Sunday, November 25, 2012

திரைக்குவராதசங்கதி 47


திரைப்ப‌டங்கள்அனைத்தும்வெற்றிபெறவேண்டும்என்றேநடிகரும்ரசிகர்களும்விரும்புவார்கள்100ஆவதுபடம்பிரமாண்டமான‌வெற்றிப்படமாகஅமையவேண்டும்என்றேநடிகரும்,ர‌சிகர்களும்விரும்புவார்கள்.நடிகர்திலகத்தின்100ஆவது படமான நவராத்திரி, மக்கள்திலகத்தின்ஒளிவிளக்குஎன்பனமிகப் பெரியவெற்றிபெற்றன.வேறுஎந்தஒருநடிகரின்அல்லதுநடிகையின்100ஆவதுபடம்இப்படிவெற்றிபெற்றதில்லை.சர‌த்குமார்தனது100ஆவதுபடமானதலைமகன்வெற்றிபெறவேண்டும்எனமுழுமூசுச்டன்செயற்பட்டுவருகிறார்.சூப்பர்ஸ்டார்என்றபெயரெடுத்தர‌ஜினிகாந்த்தனது100ஆவதுபடத்தைர‌சிகர்களின்விருப்பத்துக்குமாறானதனதுஆத்மதிருப்திக்காகநடித்தார்.ர‌ஜினியின்100ஆவதுபடம்ஸ்ரீராகவேந்திரா.அக்ஷன்,ஸ்டைல்,கோபம்போன்றஎதுவுமற்ற அமைதி,அடக்கம்,பரிவுஆகியவைஅடங்கியபுதியதொருர‌ஜினியைராகவேந்திராவில்ர‌சிகர்கள்க‌ண்டனர்.ராகவேந்தரின்தீவிர‌பக்தன்ர‌ஜினிகாந்த்.அவர‌துவர‌லாற்றைதனது100ஆவதுபடமாகதயாரிக்கவேண்டும்எனர‌ஜனிவிரும்பினார்.ர‌ஜினியின்வெற்றிப்படங்கள்பலவற்றைஇயக்கியஎஸ்.பி.முத்துராமன்தான்அப்படத்தைஇயக்கவேண்டும்எனஅவர்விரும்பினார்.தனதுவிருப்பத்தை எஸ்.பி.முத்துராமனிடம் ர‌ஜினி கூறினார்.

        எஸ்.பி. முத்துராமனின்குடும்பம் சுயமரியாதைஇயக்கத்தில் அதி தீவிர‌ பற்றுள்ளது.அவர‌துதகப்பன்சுயமரியாதைஇயக்கத்தின்தீவிர‌மானறுப்பினர்.சுயமரியாதையின்கீழ்வளர்ந்தஎஸ்.பி.முத்துராமன்புராணப்படத்தைஇயக்கத்தயங்கினார்.தனதுநிலையைர‌ஜினியிடம்விரிவாகஎடுத்துக்கூறினார்.எஸ்.பி. முத்துராமனின் விளக்கத்தைர‌ஜினிஏற்றுக்கொண்டதால்அவருடன்அது பற்றிவிவாதிக்கம்பவில்லைராகவேந்தரின்வாழ்க்கையைபடமாக்கதகுதியானவர்தனதுகுருநாதர்எஸ்.பாலசந்தர்தான்எனமுடிவுசெய்தார்ர‌ஜினி.சற்றும்தாமதிக்காமல்தனதுமனதில்இருந்தஎல்லாவற்றையும்குருநாதர்கே.பாலச்சந்தரிடம்கூறினார்.எஸ்.பி.முத்துமராமனின்தயக்கம்பற்றிகுருநாதரிடம் கூறிய ர‌ஜினி இது பற்றிஅவருடன் பேசும்படி அவரிடம் வேண்டுகோள் விடுத்தார். ர‌ஜினியின் மனதில் உள்ள எண்ணங்களை நன்கு புரிந்த எஸ். பாலசந்தர்,ரஜினியின்வேண்டுகோளுக்குஇணங்கஎஸ்.பி.முத்துராமனைததனது வீட்டிற்குஅழைத்தார்.புராணப் படங்களைஇயக்குவதில்தனக்குஉள்ள சிக்கல்களை விலாவாரியாக எடுத்துக் கூறினார் எஸ்.பி. முத்துராமன்.அவர் தர‌ப்புநியாயங்களைஅவதானமாகக்கேட்டஎஸ்.பாலசந்தர்இறுதியில்தனதுதீ ர்ப்பைக் கூறினார்.
          ர‌ஜினியைமாறுபட்டவேடங்களில்இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். புராணப்படமொன்றில்ர‌ஜினியைஇயக்கஅவரால்முடியும்என்றநம்பிக்கையைஎஸ்.பி.முத்துராமனுக்குஏற்படுத்தினார்.ஸ்ரீராகவேந்திராவைகவிதாலயாதயாரிக்கும்.இதற்குரியவசதிகள்எல்லாவற்றையும்கவிதாலயாஏற்படுத்தித்தரும்.ர‌ஜினியின்உணர்வுகளுக்குமதிப்பளித்துஇதைஇயக்கஒப்புக்கொள்ளுங்கள்என்றுகே.பாலசந்தர்கூறினார்.கவிதாலயாபாலசந்தரின்சொந்தநிறுவனம்.வெற்றிப்படங்கள்பலவற்றைதந்தநிறுவனம்.கே.பாலசந்தர்கொடுத்தஊக்கம்எஸ்.பி.முத்துராமனின்மனதைமாற்றியது.ர‌ஜினியின்விருப்பப்ப‌டிஸ்ரீராகவேந்திராதயாரானது.எஸ்.பி.முத்துராமன்இயக்கினார்.குடும்பப்படங்கள், அடிதடிப் படங்கள்மட்டுமல்ல புராணப்படங்களையும்இயக்கமுடியும் என்று எஸ்.பி. முத்துராமன் வெளிப்படுத்தினார்.ஸ்ரீ ராகவேந்திரா தயாரான போதுர‌ஜினிஅசைவத்தைதவிர்த்தார்.அதனைஅறிந்தபடப்பிடிப்புக்குழுவினர் அனைவரும்அசைவத்தை துறந்தனர். ஸ்ரீராகவேந்திராமிகப்பெரியவெற்றி பெறவில்லை என்றாலும்ர‌சிகர்களின் மனதை கவர்ந்த படம்எனப் பெயர் பெற்றது.

ரமணி
மித்திரன் 11/02/07
107

Sunday, July 1, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 37


தம்பிக்கு கௌரவமான உத்தியோகம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கற்பை விலையாகக் கொடுத்த பெண் ஒருத்தி தன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக விலை மாதுவாக மாறிய ஒருத்தியின் கதை தான் 1973 ஆம் ஆண்டு வெளியான அரங்கேற்றம். வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற ஏ முத்திரையுடன் வெளியான இப்படம் சகலரையும் கவர்ந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.
ஆசாரம் மிக்க பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எஸ்.வி.சுப்பையா அவர் மனைவி எம்.என்.ராஜம் அவர்களுடைய மூத்த மகள் பிரமிளா, பிர

மிளாவின் தங்கைகளான ஜெயசித்திராவும், ஜெயசுதாவும் நடித்தனர். தம்பியாக கமலஹாசன் நடித்தõர். எஸ்.வி.சுப்பையா புரோகிதம் செய்ய மறுத்ததனால் அக்குடும்பம் வறுமையில் வாடியது. மூத்தமகள் பிரமிளா குடும்பச்சுமையை öபாறுப்பெடுத்தாள். தம்பி கமலஹாசனுக்கு டாக்டர் சீட்டு@கட்டு சென்னைக்கு செல்கிறாள் பிரமிளா. தம்பியின் படிப்புக்காக அவளது கற்பு விலைப் பேசப்படுகிறது. தம்பிக்கு வேலை கிடைத்தால் தன்குடும்ப வறுமை தீரும் என்பதனால் தன்னை இழக்கிறாள் பிரமிளா.
தம்பிக்காக தன் கற்பை இழந்த பிரமிளா குடும்பத்துக்காக விலை மாதுவாக மாறுகிறாள். கிராமத்தில் அவளது குடும்ப வறுமை படிப் படியாக நீங்குகிறது. பாடகியாக வர வேண்டும் என்ற தங்கையின் ஆசையை நிறைவேற்றுகிறாள் பிரமிளா. வானொலியில் பாடச் சந்தர்ப்பம் கிடைத்த சகோதரிக்கு மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் முன்னேறும் வழியினில் இளையவள் அரங்கேற்றம்... எனப்பாடுகிறாள்.

தங்கையின் திருமணத்துக்காக வீட்டிற்கு வருகிறாள் பிரமிளா. விதியும் அவள் கூடவே வந்தது. பிரமிளாவின் மேலாடை விலகியிருந்ததைக் கண்ட தா# துணியை சரியாப் போடு என்று கூற ஆம்பிளை என்பதே மரத்துப் போச்சு என்கிறாள். இதனைக் கேட்ட தாய் எம்.என்.ராஜம் அதிர்ச்சியடைகிறாள். மறந்து போச்சு எனக் கூறியிருப்பாள். உனக்கு மரத்துப் போச்சு என்று கேட்டிருக்கும் என்று சமாதானம் கூறுகிறார் எஸ்.வி.சுப்பையா.
பிரமிளாவின் தொழில் விபசாரம் தான் என்பதைத் தெரிந்த குடும்பம் அதிர்ச்சியடைகின்றது. வீட்டினுள் எதிர்ப்பு கிளம்புகிறது. பிரமிளா இதனை விரும்பிச் செய்யவில்லை. குடும்பக் கஸ்டத்தால் தான் மாறினாள் என்பதை அனைவரும் உணர்கின்றனர். பிரமிளாவின் கடந்த கால வாழ்க்கையைத் தெரிந்து கொண்ட சிவகுமார் அவளைத் திருமணம் செய்ய முன் வருகிறார். திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. பிரமிளாவின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். புத்தி பேதலித்தநிலையில் மண மேடையை விட்டு இறங்கி விடுகிறாள் பிரமிளா.

பிரமிளா அறிமுகமான படம் இது. குடும்பத்துக்காக பிரமிளா செய்த தியாகத்தை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் சிந்தினர். பெண் ரசிகைகளை அரங்கேற்றம் வெகுவாகப் பாதித்தது. இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான இப்படம் தடை செய்யப்படுமா என்ற அச்சம் எழுந்தது. பாலச்ச‌ந்தர் இயக்கிய முதலாவது பாலியல் படம் இது. பின்னர் இது போன்ற பாலியல் பிரச்சினைகளை மையமாக வைத்து பல படங்களை இயங்கினார் பாலச‌ந்தர்.

ஹிந்தியில் ஆய்னா எனும் பெயரிலும் தெலுங்கில் ஜுவிதரங்கமுரியை பெயரிலும் வெளியாகின. ஆண்டவனின் @தாட்டத்தி@ல அழுகு சிரிக்குது, மூத்தவள் நீ கொடுத்தாய், வாழ்வி@ல முன்@னற்றம், ஆரம்பகாலத்தில் அது இருக்கும். மாப்பிள்ளை இரகசியம் சொல்லவா? ஆகிய கண்ணதாச‌னின் பாடல்களுக்கு சிறப்பாக இசை அமைத்தார் வி.குமார்
ரமணி
மித்திரன்01/07/12

Friday, June 1, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 34



கர்நாடக இசை உலகில் கொடி கட்டிப் பறக்கும் ஜே.கே.பி. என்ற இசை விற்பன்னரிடம் சங்கீதம், பயில வந்த இளம் பெண் அவரின் சாரீரத்தில் மயங்கி தன் சரீரத்தைக் கொடுத்து ஒரு குழந்தைக்குத்தாயாகும்ஒருவரிக்கதையுடன்வெளியானபடம்1985ஆம்ஆண்டுவெளியானசிந்துபைரவி.இசையுடன்சம்பந்தப்பட்டவலுவானகதைஅமைப்பும்இசைஞானியின்இசைவேள்வியும்திருமணமாகாதபெண்ணுக்குப்பிறந்தவள்திருமணமாகமலேஒருகுழந்தைக்குத்தாயானவிபரீதத்தைமறைத்துவிட்டன
    கண்டிப்பு,ஒழுக்கம்,நேர்மைஎன்பனவற்றுக்குமுதலிடமகொடுப்பவர் பிரபல கர்நாடக இசை ஜாம்பவான் சிவகுமார்.மதுஅருந்திவிட்டுமேடையில்இருக்கும்மிருதங்கவித்துவான்டெல்லிகணேஷைமேடையிலிருந்துஇறக்கிவிட்டுஅதற்கானகாரணத்தைசபையிடம்கூறிமன்னிப்புக்கேட்டுவிட்டுமகாகபதியுடன்கச்சேரியைஆரம்பிக்கிறார்சிவகுமார்.மிருதங்கம்இல்லாதஇசைக்கச்சேரிகளைகட்டுகிறது.இயக்குநரின்காட்சிஅமைப்புசிவகுமாரின்நடிப்பு,டாக்டர்கே.ஜே.ஜேசுதாஸின்குரல்அத்தனையும்காட்சியைமெருகூட்டுகின்றன.இளையராஜாவின்இசைஒருபடிமேலேபோய்காதில்ரீங்காரமிடுகிறது.இசைமேதைசிவகுமாரின்இசைக்குஉலகெங்கும்பெருமதிப்பு.அவரதுஇசைக்குமயங்கிரசிகர்களானவர்கள்ப‌லர்.சிவகுமாரின்இசைக்கச்சேரிநடக்கும்மண்டபங்கள்கட்டுக்கடங்காதகூட்டத்தால்நிரம்பிவழியும்.தனதுஇசைஅனுபவங்களைபலருடன்பகிர்ந்துமகிழும்சிவகுமார்வீட்டிலேஇசையைப்பறறி கதைக்க முடியாத நிலை அவரின்மனைவிசுலக்க்ஷனாவுக்குஇசைஞானம்சிறிதளவுகூடஇல்லை.இசைஎன்றால்கிலோஎன்னவிலைஎனக்கேட்கும்அப்பாவிசுலக்க்ஷனாவுக்குகுழந்தைஇல்லை என்ற கவலை உள்ளது. தனது மனைவிக்கு இசைஅறிவுஇல்லைஎன்றகவலையில்தினமும்கூனிக்குறுகுகிறார்சிவகுமார்.
            சிவகுமாரின்கர்நாடகஇசையில்ரசிகர்கள்மயங்கிஇருக்கும்வேளையில்தமிழ்இசைக்குநீங்கள்ஏன்முக்கியத்துவம்கொடுப்பதில்லைஎன்றகுரல்ஒன்றுஆக்ரோஷமாகஎழுகிறது.சிவகுமாரின்இசைக்குஅடிமையானவர்கள் தமிழ் இசை ஏன் பாடுவதில்லை என்று குற்றஞ்சாட்டிய சுஹாஷினியைஅடக்கமுனைகிறார்.சகலரையும்அமைதிப்படுத்தியசிவகுமார்சுஹாசினியைமேடைக்குஅழைத்து தமிழிசையைப்பற்றிகேள்விகேட்டுவிட்டுஅவமானப்படுத்துகிறார்.தமிழிசையின்பெருமையைவிபரிக்கிறார்.சுஹாசினிஅப்போதுதமிழ்பாடல்ஒன்றைப்பாடிரசிகர்களின்ஆதரவைப்பெறும்படிசவாலவிடுக்கிறார்சிவகுமார்.பாடறியேன்படிப்பறியேன்பள்ளிக்கூடம்தான்அறியேன்ஏடறியேன்எழுத்தறியேன்எழுத்துவகைநான்அறியேன்என்றுபாடியவாறுகைவிரலைசுண்டிதாளம்போடுகிறார்சுஹாசினி.சுஹாசினியின்இசையில்இலயித்தசிவகுமாரின்மிருதங்கவித்துவான்டெல்லிகணேஷ்மிருதங்கம்வாசிக்கதயாராகுகிறார்.தன்னைசுதாகரித்தடில்லிகணேஷ்கையைகட்டிககொண்டு இருக்கிறார். சிவகுமாரின்கண்அசைவின்பின்மிருதங்கம்இசைக்கிறார்டெல்லிகணேஷ்.சிவகுமாரின்கையசைவின்பின்னர்வயலின்கலைஞரும்சுஹாசினியின்பாடலுக்குபின்னணிஇசை வழங்குகிறார். தமிழ் பாடலை பாடி விட்டு சிவகுமார் பாடிய கர்நாடக இசைப் பாடலைபாடிமுடிக்கிறார்சுஹாசினி.சுஹாசினியின்தமிழ்இசைபாடலில்மயங்கியரசிகர்கள்கைதட்டிஆரவாரம்செய்கிறார்கள்.சிவகுமார் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி வேண்டா வெறுப்பாகக் கை தட்டுகிறார்.
       சிவகுமாரின்கர்நாடகஇசையில்சுஹாசினியும்சுஹாசினியின்தமிழ்இசையில்சிவகுமாரும்மயங்குகிறார்.சிவகுமாரின்நண்பர்நீதிபதியின்வீட்டில்சுஹாசினியைபாடும்படிகேட்கிறார்கள்.அப்போது நான் ஒரு சிந்து என்ற பாடலை பாடுகின்றார். அப்பாடலின் வரிகள் அனைத்தும் சுஹாசினியின் வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றன. தாயும் மகளும்ஒருவரைஒருவர்உறவுகூறமுடியாத நிலையில் வாழ்வதை வைரமுத்து உணர்ச்சிகரமான வரிகளில் வடித்துள்ளார்.
இசையைப்பற்றி ஆய்வு செய்வதற்காக முனைந்த சிவகுமாரும் சுஹாசினியும் இசை பற்றியே நாள் முழுவதும் கதைக்கிறார்கள். சிவகுமாரின் மனைவி சுஹாசினிக்கு கணவன் மீதும் சுஹாசினி மீதும் சந்தேகம் ஏற்படுகிறது. இருவரும் மறுக்கின்றனர். விதி இருவரையும் சேர்க்கிறது. எதுவெல்லாம் செய்யக் கூடாது என்று சிவகுமார் கூறினாரோ அவையெல்லாவற்றையும் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். சிவகுமாரின் இசையைப் பணத்தால் வாங்க ஒருவர் முயற்சித்த போது இசை மீது கொண்ட விசுவாசத்தால் அவனை விரட்டியடிக்கிறார். மதுவுக்கு அடிமையான சிவகுமார் மது போத்தலுக்கா தன்னால் விரட்டப்பட்டவனிடம் சரணடைந்து தண்ணித்தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி நான் என்று பாடுகின்றார்.

சிவகுமார் மீது மதிப்பு வைத்திருந்தவர்கள் அவரின் கெட்ட நடத்தையால் அவரை விட்டு விலகுகின்றனர். இசை உலகில் அவருக்கிருந்த மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போகிறது. இசை உலகில் அவரது கெõடி மீண்டும் பறக்க வேண்டும் என்று சுஹாசினியும் சுலக்சனாவும் விரும்புகின்றனர். சிவகுமாருடன் ஏற்பட்ட உறவால் தாயாகிய சுஹாசினியும் குழந்தையைப் பெற்று சுலக்சனாவிடம் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார். தன் தவறுகளை உணர்ந்த சிவகுமார் மீண்டும் இசை உலகில் கொடி கட்டிப் பறக்கிறார்.

அன்பு, அடக்கம், பொறுமை நிறைந்த மனைவி வீட்டில் இருக்க இசையைப் பற்றிப் படிக்க வந்த ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் கதாநாயகனை தமிழ் ரசிகர்கள் வெறுக்கவில்லை. வெள்ளி விழாக் கொண்டாடிய இப்படம் பின்னாளில் பாடகி சித்ராவுக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. சிவகுமார் இசைக் கலைஞராக வாழ்ந்தார். இப்படியும் அப்பாவிப் பெண்ணா என்று ஆச்சரியப்பட வைக்கிறார் சுலக்சனா. சுஹாசினியின் சுறுசுறுப்பும் உருக்கமும் மனதில் பதிந்துவிட்டது. டெல்லி கணேஷ், கனகராஜ் ஆகியோரின் நகைச்சுவை படத்துக்கு கலகலப்பூட்டியது. மணிமாலா சிவச்சந்திரன் மீரா ஆகியோர் பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர்.

சுஹாசினியின் பெயர் சிந்து, சுலக்சனாவின் பெயர் பைரவி. இரண்டு கதாநõயகிகளின் பெயரை இணைத்து சிந்து பைரவி என்று பெயரிட்டார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் பத்து வருடங்களுக்கு முன்னர் வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் பெண் பாத்திரங்களுக்கு ராகங்களின் பெயரைச் சூட்டியது போலவே சிந்துபைரவி படத்தின் இரண்டு கதாநாயகிகளுக்கும் ராகங்களின் பெயரைச் சூட்டினார். படத்தின் பெயரும் ராகத்தின் பெயரில் அமைந்துள்ளது.

சிந்துபைரவி படத்தில் சுலக்சனாவைத் தவிர அனைத்துப் பாத்திரங்களும் இசை ஞானம் உள்ளவர்கள் நீதிபதியின் கார்ச்சாரதியே இசையைப் பற்றி விளக்கமளிக்கிறார். வைரமுத்துவின் வரிகள் அனைத்தும் படத்தின் கதைக்கு வலுச் சேர்க்கின்றன. இசைஞானி இளையராஜா இசை வேள்வியை நடத்தியுள்ளார். டாக்டர் கே.@ஜ. ஜேசுதாஸ் சின்னக்குயில் சித்ரா ஆகியோரின் குரல்களின் பாடல்கள் மனதைவிட்டு வெளியேற மறுக்கின்றன.

ரமணி
மித்திரன்03/06/12

Thursday, January 12, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 19

வயதான பெண்ணை ஒரு இளைஞன் காதலிக்கிறான். அந்த இளைஞனின் அப்பாவை அப்பெண்ணின் மகள் காதலிக்கிறாள் என்ற ஒற்றை வரி விபரீதக் காதல் கதை வெளியான திரைப்படம் அபூர்வ ராகங்கள். பிரச்சினைக்குரிய கதைகளைக் கையில் எடுத்து மிக இலாவகமாக முடிக்கும்
கே.பாலச்சந்தரின் மற்றுமொரு அற்புதப் படைப்புதான் அபூர்வ ராகங்கள்.
பிரபல பாடகி ஸ்ரீவித்யாவின் மகள் ஜெயசுதா. தாயுடன் ஏற்பட்ட கருத்துவேவறுபாட்டினால் வீட்டை விட்டு வெளியேயறுகிறார். தொழிலதிபர் சுந்தரராஜனின் மகன் கமல்ஹாசன். தகப்பனுக்கும் மகனுக்கும் இடையேயயான சிறு பிணக்கினால் கமல் வீட்டை விட்டு வெளியேயறுகிறார். ஜெயசுதாவின் வீட்டில் கமலும் சுந்தராஜனின் வீட்டில் ஜெயசுதாவும் தஞ்சமடைகின்றனர். காலப்போக்கில் ஸ்ரீவித்தியாவை கமலும் சுந்தராஜனை ஜெயசுதாவும் காதலிக்கின்றனர்.
கமல், ஜெயசுதா ஆகியோரின் விபரீதக் காதலைத் தெரிந்துகொண்ட ஸ்ரீவித்யாவும் சுந்தராஜனும் முறை தவறிய காதலைத் தொடரக்கூடாது என்று எடுத்துரைத்த@போதும் கமலும் ஜெயசுதாவும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். பொருந்தாத இக்காதலின் முடிவு எப்படி இருக்கும் என்று இரசிகர்கள் குழம்பிப்போபாயிருக்கையில் காணாமல்போன ஸ்ரீவித்யாவின் கணவன் திரும்பிவருகிறான். ஸ்ரீ வித்யாவின் கணவன் திரும்பி வந்ததும் கதையில் திருப்பம் ஏற்படுகின்றது. ஸ்ரீவித்யாவின் கணவன் இறந்ததும் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வருகின்றன. கமலும் ஜெயசுதாவும் தமது தவறான காதல் உணர்விலிருந்து விடுபடுகின்றனர். ஜெயசுதாவின் தாய் ஸ்ரீவித்தியாவுடனும் கமல் தகப்பன் சுந்தராஜனுடனும் இணைகின்றனர்.
1975 ஆம் ஆண்டுகளில் வெளியான இப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காட்சி அமைப்புகளும் , வசனங்களும் இரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. கமல், ஸ்ரீவித்தியா, சுந்தர்ராஜன், ஜெயசுதா ஆகியோர் தமது பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர். டாக்டராக வரும் நாகேஷ் படத்துக்கு கலகலப்பூட்டுகிறார். குடிக்க விரும்பும் நாகேகஷ் தான் டாக்டரின் சகோதரன் என்று கூறி எல்லோரையும் ஏமாற்றுகிறார்.ஸ்ரீவித்யாவின் கணவனாக ரஜினிகாந்த் அறிமுகமான படம் அபூர்வ ராகங்கள். ஒரு சில காட்சிகளில் மின்னி மறைந்த ரஜினிகாந்த் இன்று "சூப்பர்ஸ்டாராகப் பரிணமிக்கின்றார்.எம்.எஸ். விஸ்வநாதனின் இசை அமைப்பில் கண்ணதாசனின் பாடல்கள் இன்றும் மனதை வருடுகின்றன. "ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.. வாணிஜெயராம், "அதிசய இராகம் ஆனந்த ராகம்..கே.ஜே.ஜேசுதாஸ் கைகொட்டிச் சிரிப்பார்கள்.கேள்வியின் நாயகனே.. பி.சுசிலா இப்பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஓங்கி ஒலித்தன. சிறந்த ஒளிப்பதிவுக்கானதேசிய விருதை பி.எஸ்.லோலாகநாதனும் சிறந்த பிண்ணனிப் பாடககிக்கான‌ விருதை வாணிஜெயராமும் பெற்றனர். சிறந்த சிறந்த பிராந்திய விருதை அபூர்வ இராகங்கள் பெற்றது.
பைரவி, ரஞ்சனி, கல்யாணி என்ற இராகங்களின் பெயரிலேயே பெண் பாத்திரங்களைப் படைத்த பாலச்சந்தர் பைரவி என்ற பாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்தார். தன்னிடம் படிக்கும் மாணவிகளில் ஒருவரை கமல் காதலிப்பதாக நினைத்த ஸ்ரீவித்தியா அதுபற்றி கமலிடம்கேட்கிறார். அதிசய ராகம் என்று பாடல் ஆரம்பித்து அவர் ஒரு பைரவி என்று கமல் முடிக்க பைரவியாக நடித்த ஸ்ரீவித்தியா அதிர்ச்சியடைகிறார்.தன் மனைவி ஸ்ரீவித்தியாவைச்சந்திக்க ரஜினி விரும்புகிறார். கமல் அதற்கு தடைபோடுகிறார். என் மனைவிக்கும் எனக்கும் இடையே நீ யார் தம்பி? என்று ரஜினி கேட்கிறார். நிச்சயமாக உன் தம்பி இல்லை என்று கமல் கூறுகிறார்.மதுக்கோப்பையை கையில் ஏந்தி சுவரிலே தெரியும் தான் நிழலைப் பார்த்து சியஸ் சொல்லுடா என்று நாகேஷ் கூறுகிறார். இக்காட்சிகளின்போது தியேட்டர் கரகோகேஷத்தில் அதிர்ந்தது.
இப்படத்தில் கூறப்பட்ட எனது தகப்பனார் யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகனின் அப்பா என் மகனுக்கு மாமனார் என்றால் அவருக்கும் எனக்கும் என்ன உறவு என்ற விடுகதைக்கும்விடைதெரியவில்லை.
ரமணி


சூரன்.ஏ.ரவிவர்மா



மித்திரன் 08/01/12

Thursday, December 15, 2011

திரைக்குவராதசங்கதி 24

தமிழ் இலக்கியத் துறையின் மிகப்பெரிய ஜாம்பவான்கோவி மணிசேகரன்; இலக்கிய சாம்ராட் பட்டம் பெற்ற வித்தகர். கோவி மணிசேகரனின் எழுத்துக்காக தமிழ் இலக்கியஉலகம் காத்துக்கிடந்தது.ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், 200 நாவல்கள்,10 ஆயிரம் கவிதைகள், 10 நாடகங்கள் எழுதி இலக்கியஉலகில் மிளிரும் கோவி மணிசேகரனின் அடிமனதில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் புரையோடிபோயிருந்தது. இலக்கியவாதி ஆவதற்கு முன்னே சினிமாவில்சாதிக்க வேண்டும் என விரும்பினார்.சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் நடத்திய ""சண்டமாருதம்'' என்ற சினி
மா பத்திரிகையில் பணியாற்றிய போது அவரது சினிமாஆர்வம் இன்னும் அதிகரித்தது. சண்டமாருதம் பத்திரிகையின் ஆசிரிய ராகத் திகழ்ந்தவர் கவியரசு கண்ணதாசன்
.அந்தக்கால சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி. ஆர், பி.யு. சின்னப்பா ஆகியோரின் பாடல்களை அப்படியே அழகாக பாடும் திறமை கோவி மணிசேகரனுக்கு இருந்தது. பிற்காலத்தில்முறைப்படி சங்கீதம் பயின்று பட்டம் பெற்றார். மந்திரிகுமாரி படத்தின் வசனங்களைக் கேட்டுவிட்டு இப்படியும்
வசனம் எழுதலாமா என்று வியந்தார் கோவி மணிசேகரன்.எதிர்பார்த்த சினிமா ஆசை அவரைத் தேடிவந்தது. 24 வயதில் "நல்லகாலம்' என்ற படத்துக்கு வசனம் எழுதினார். அப்படத்தின் கதாநாயகனாக எம்.கே. ராதா நடித்தார். அதற்காகஅவருக்கு 101 ரூபா வழங்கப்பட்டது. பூலோகரம்பை படத்துக்காக இரண்டு பாடல்கள் எழுதினார். அப்பாடல்களைஏ.எம். ராஜாவும், ராதாஜெயலக்ஷ்மி பாடினார்கள். ஏ.எம்.ராஜாவும், கோவி மணிசேகரனும் வேலூரில் நரசிம்மனு நாயுடு என்றசங்கீத வித்துவானிடம் ஒன்றாகசங்கீதம் பயின்றவர்கள். பூலோகரம்பையின்பாடல்களுக்காக கோவிமணிசேகரனுக்கு 1000ரூபா வழங்கப்பட்டது.
இது அந்தக்காலத்தில்மிக அதிக தொகை.சினிமாவில் வெற்றிபெற முடியாததனால் மீண்டும் இலக்கியத்தில் முழுமூச்சாக ஈடுபடத்தொடங்கினார்.
கோவி மணிசேகரன்
சினிமா ஆசையை ஒரு புறம் ஒதுக்கிவைத்து விட்டு நாடகங்கள் எழுதி அரங்கேற்றினார். அவருடைய நாடகங்களுக்கு இளையராஜா இசை அமைத்தார்.
கோவி மணிசேகரனின் நாடகங்கள் மக்களைக் கவர்ந்ததனால்அவரிடம் கதை கேட்க பல தயாரிப்பாளர்கள்போட்டியிட்டனர். சினிமாவுக்கு கதை கூறும் திறமை இல்லாததனால் கதையைக் கேட்ட எவரும் படத்தைத் தயாரிக்கமுன்வரவில்லை. திரைப்பட நுணுக்கங்களைப் பற்றி அறியவேண்டுமானால் அனுபவம் உள்ள இயக்குநரிடம் உதவியாளராக இருக்க வேண்டும் என்று முடிவுசெய்தார். யாரிடம் உதவியாள‌ராகச்சேர்ந்தால் முறைப்படி சினிமாவை
ப் பற்றிய சகல நுணுக்கங்களையும் அறிந்துகொள்ளலாம் என்று யோசித்தவரின் மனதில் இயக்குநர் சிகரம்கே.பாலச்சந்தர் மனதில் வந்தார்.பாலச்சந்தரின் ""வெள்ளி விழா'' படம் வெற்றி பெற்றிருந்த வேளை, அடுத்து அரங்கேற்றம் என்ற படத்தை தயாரிப்பதற்கு கே.பாலச்சந்தர் அறிவித்தல் விடுத்திருந்தார்.
அரங்கேற்றவேலையில் பாலச்சந்தர் இருந்த வேளையில்அவரின் முன்னால் போய் நின்றார் கோவி மணிசேகரன்.மிகச் சிறந்த இலக்கியவாதி தனது வீட்டிற்கு வந்ததைப்பார்த்த கே.பாலச்சந்தர் "என்ன இந்தப் பக்கம்' எனஆச்சரியத்தோடு கேட்டார். இமயமலையைத் தேடிபறங்கிமலையான தான் வந்த காரணத்தைக் கூறினார்கோவி மணிசேகரன்.

"நீங்கள் மிகப் பெரிய இலக்கியவாதி. உங்களுக்கு ஆயிரக்கணக்கான வாசகர்கள் இருக்கிறார்கள்' என்று இயக்குநர்சிகரம் கே.பாலச்சந்தர் கூறியபோது, அதனை இடைமறித்தகோவி மணிசேகரன் ""இந்த விசயத்தில் நான் உங்கள் ஏ.பி.சி.டி மாணவன்'' என்றார்.கோவி மணிசேகரனை தனது உதவியாளராகச் சேர்ந்தார்இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். தமிழ்த்திரை உலகில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய படம் ""அரங்கேற்றம்''பிரமீளாவின் நடிப்பில் தமிழ் ரசிகர்கள் கண்ணீர் வடித்தபடம் அரங்கேற்றம். அப்படத்தில் இணை இயக்குனராகதமிழ்த்திரை உலகில் அரங்கேற்றினார் கோவி மணிசேகரன்.உதவி இயக்குநர் கோவி மணிசேகரன் என தனியாக அவரின் பெயர் திரையில் காட்டப்பட்டது. ஏனைய உதவி இயக்குநர்கள் இதனால் மனம் வருந்த தமது கவலையை இயக்குநர் சிகரத்திடம் கூறினார்கள். "அவர் மிகப்பெரிய இலக்கியவாதி. அவருக்கு நான் மதிப்புக் கொடுக்க வேண்டும். அதனால்தான் அவரது பெயரை தனியாக திரையில் போட்டேன்'' என்றார் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்.
ரமணி

மித்திரன்28/10/2007